Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நொண்டிச் சிந்து வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நொண்டிச் சிந்து

வ.ஐ.ச.ஜெயபாலன்

ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல

என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல்

பாணனாய்த் திரிகிறபோதெல்லாம்

என் பாதங்களின் அசைவுக்குச்

சுழல்கிறதே உலகம் என்னதாய்.

கிடைத்த கள்ளும் கூழும்

சந்தித்த தோழ தோழியருமாய்

குந்திய மர நிழல்களில் எல்லாம்

சூழுதே சுவர்க்கம்

காதலும் வீரமுமாய்.

வாழ்வு தருணங்களின் விலையல்ல

தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்

புயலில் அறுந்த பட்டமாகிறேன்.

காலமும் இடமும் மயங்க.

தருணங்களின் சந்தையான உலகிலோ

தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு

இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு

கட்டைவிரல் இல்லை.

எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட

இந்த சென்னைச் சுவர்க்காட்டில்

சுருதி கூடிய வீணையாய்

காத்திருக்கிறேன்

வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

Quote:" வாழ்வு தருணங்களின் விலையல்ல

தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்

புயலில் அறுந்த பட்டமாகிறேன்.

காலமும் இடமும் மயங்க

தருணங்களின் சந்தையான உலகிலோ

தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு

இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு

கட்டைவிரல் இல்லை.

எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட

இந்த சென்னைச் சுவர்க்காட்டில்

சுருதி கூடிய வீணையாய்

காத்திருக்கிறேன்

வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக."

நன்றி போயட் மீண்டும் நல்லதொரு கவிதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு, அருமையான வசனங்கள், தருணங்கள தொலைத்துவிட்டு தேடுகிறோம் பல நேரங்களில்,

என்ன ஒரு உவமை கட்டை விரல் இல்லாத மர வில் வித்தைக்காரர்கள்,

வன்னிக் காட்டு குயில்களின் பாட்டுக்காகதான் எல்லோரும் ஏங்கி நிற்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல

என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல்

கவிஜரே!

முடிவே பண்ணி விட்டீர்களா, எங்கள் பொழுது இனி விடியாது, என்று!

இரணைமடுக் குயிலும், ஒரு நாள் கூவும்!

< தருணங்களின் சந்தையான உலகிலோ

தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு

இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு

கட்டைவிரல் இல்லை.

எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட

இந்த சென்னைச் சுவர்க்காட்டில்

சுருதி கூடிய வீணையாய்

காத்திருக்கிறேன்

வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக." >

உங்களைப் போன்றவர்கள் கட்டைவிரல் இல்லாத மரவில்வித்தைகாரர் போல இல்லாது , கட்டை விரல் உள்ள சொல் வித்தைக்காறராகப் பல வீணைகளை முறுக்கேற்ரவேண்டும் வ செ ஐ

:) :)

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

தருணங்களின் சந்தையான உலகிலோ

தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு

இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு

கட்டைவிரல் இல்லை.

எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட

இந்த சென்னைச் சுவர்க்காட்டில்

சுருதி கூடிய வீணையாய்

காத்திருக்கிறேன்

வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக.

கவிதைக்கு நன்றி. ஏன் இந்த அவநம்பிக்கை,கவிஞரே??

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .......... மீண்டும் நல்லதொரு கவிதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு,

அருமையான வசனங்கள், தருணங்கள தொலைத்துவிட்டு

தேடுகிறோம் பல நேரங்களில்,

வாழ்வு தருணங்களின் விலையல்ல

தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்

புயலில் அறுந்த பட்டமாகிறேன்.

காலமும் இடமும் மயங்க...

தருணங்களின் சந்தையான உலகிலோ

தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு

இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு

கட்டைவிரல் இல்லை.!

என்னதொரு அருமையான, அர்த்தமுள்ள வரிகள் !!!

கவிதைகளை ரசிக்க.... உங்களின் கவி அகரங்களையும் தேடுகின்றேன் இப்போது....!

தொடருங்கள்! :)

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொண்டிச் சிந்து

வ.ஐ.ச.ஜெயபாலன்

வாழ்வு தருணங்களின் விலையல்ல

தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்

புயலில் அறுந்த பட்டமாகிறேன்.

காலமும் இடமும் மயங்க.

தருணங்களின் சந்தையான உலகிலோ

தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு

இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு

கட்டைவிரல் இல்லை.

கவிதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை கவிஞரே.

ஆனால் என்னை கவர்ந்த வரிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார். உங்களைப்போன்றவர்கள் காட்டும் ஆர்வம் நஈழ தமிழ் இலக்கிய வளற்ச்சிக்கு அவசியம். புங்கையூரானுக்கு நன்றி. திருநங்கையி காதல் என்பது டி என் ஏ programe போன்ற என்கிற அர்தமல்லவா? மோகன் கவிதையின் தொனி அவநம்பிக்கையல்ல தோழ. நன்றி நிலாமதி கிருபன் ஜீவா நன்றி. நான் தொடர்ந்து யாழிணையத்தில்

உங்கள் ஆதரவு உள்ளவரைக்கும் என் ஆக்கங்களை இணப்பேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன்.

என்ன சொல்ல....

வேதனையை நினைவுபடுத்திவிட்டீர்கள்

எழுத வார்த்தை வருகுதில்லை.

வரும் வரணும் என்று மட்டும் சொல்ல முடிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார். உங்களைப்போன்றவர்கள் காட்டும் ஆர்வம் நஈழ தமிழ் இலக்கிய வளற்ச்சிக்கு அவசியம். புங்கையூரானுக்கு நன்றி. திருநங்கையி காதல் என்பது டி என் ஏ programe போன்ற என்கிற அர்தமல்லவா? மோகன் கவிதையின் தொனி அவநம்பிக்கையல்ல தோழ. நன்றி நிலாமதி கிருபன் ஜீவா நன்றி. நான் தொடர்ந்து யாழிணையத்தில்

உங்கள் ஆதரவு உள்ளவரைக்கும் என் ஆக்கங்களை இணப்பேன்

உங்கள் கவிதைகள் நன்றாக இல்லையென்று யான் கூறியது.தொடருங்கள் உங்கள் கவிதை இணைப்புக்களை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.