Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை.

மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது.

ஒன்றாய்

உலா வருகிறார்கள்..

பச்சை எரிச்சலாய் இருக்கிறது.

உடுப்புக் கடை,

சப்பாத்துக்கடை,

கோப்பி சொப்,

சினிமா

என்று

சுற்றித் திரிகிறாகள்...

என்னோடு

கார் ஓடியதையும்,

மலை ஏறியதையும்,

பந்தடித்ததையும்,

எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும்,

யானை மேல் என்னுடன் இருந்து

இளவரசி போல் உலா வந்ததையும்

மறந்து விட்டாள் போல இருக்கிறது அவளது நடவடிக்கை.

இருப்பினும் அவளுக்கு தெரியாமல் ரசிக்கிறேன் அவளின் அலட்சிய பார்வையையும், பேச்சையும். பேரானந்தம் அது..

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள். இன்று நான் என்று ஓருவன் இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் இல்லை. முன்பெல்லாம் கேட்காமல் கிடைக்கும் அவளின் முத்த மழையில் சளிப்பிடித்து கிடந்திருக்கிறேன். இப்ப வரண்ட புமியாய் எனது முகம்..... நானே கேட்டுப்போனாலும் யானைப்பசிக்கு சோளம் பொரி போல சின்னதாய் ஒன்று பட்டும் படாமலும் தருகிறாள்.

எனது உலகம் இப்படியாய் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எனது பிறந்த நாள் வந்தது. பரிசாய் ஒரு புத்தகம் தந்தாள்..

முத்தை (முகத்தை) தொலைத்து விட்டேனோ

என்று

நடுங்கியிருந்த போது

முத்தமிட்டு

மெதுவாய்த் தந்தாள்

நோர்வேஜிய மொழியில்

”என் தந்தை”

எனறொரு தலைப்பிட்ட

ஒரு பொக்கிஷத்தை

அதிலிருந்து

மொழிபெயர்த்த சில வரிகள்

முதல் பக்கம்

30. புரட்டாதி. 2009...

என் அப்பாவுக்கு!

அன்பிலும் அன்பு

கொண்டுள்ளேன் உன்னில்.

தந்துள்ள

பொக்கிஷத்தை பாதுகாப்பாய்

என்னும் நம்பிக்கையில்

காவியா......

பொக்கிஷத்தில் இருந்து சில வரிகள்

நான்

என்றென்றும்

நன்றியுடையவள்

உனது

சிரிப்பு

பொறுமை

அன்பு

நட்புக்கு

.........................

நீ

வீராதி வீரன்

கடமையிலும்

அன்பிலும்

........................

எனது

தந்தை

நீ

இருப்பினும்

குழந்தைப் பருவத்தில்

நீ

பரிமாறிய சிரிப்புக்கும்,பொறுமைக்கும்

நாம்

ஒன்றாய் செய்த செயல்களுக்கும்

தந்த ஆறுதலுக்கும்

ஆயிரம் ஆயிரம்

நன்றிகள்

........................

என்னுடன்

நடையபின்று

உலகத்தை

காண்பித்தாய்

அதன் மீதான

பார்வைவை

பெருப்பித்தாய்

.........................

தந்தையே

நீ

பலமானவன்

புத்தி உடையவன்

ஆனால்

நினைக்காதே

உன்

வாழ்வு

சாமான்யமானதென்று

........................

காலச்சக்கரம் ஓடுகிறது

ஆனால்

ஏமாற்றமலும்

வற்றாமலும்

இருக்கிறது

உனதன்பு.

மாறாத

உன் வாஞ்சை

மூச்சைப்

போன்றதெனக்கு

..........................

நன்றி.

நீ

எனதுறுதியில்

கொண்ட

நம்பிக்கைக்கு

...........................

வேதனை

வலித்தது

நீ

தவறிழைத்த போது.

அதன்

தாக்கம் மரித்த போது

உண்மை தெளிந்து,

புரிந்தது

நீ

சாதாரணமானவன்

அல்லவென்று

...........................

கற்பித்தாய்

தவழ

எழும்ப

நடக்க

ஓட

விடா முயற்சி

சுயகட்டுப்பாடு

பாராட்டு

ஊக்கம்

ஆர்வம்

மேலும்

கற்கவும்

மெதுமையும்

பொறுமையும்

மரியாதையும்

நட்பும்

அன்பும்

கற்பித்தாய்

.........................

வாழ்வும்

வாழ்க்கையும்

மாறலாம்.

கனவுகள்

கானலாகலாம்

அவை பெரிதல்ல

என் மீது நீ கொண்ட அன்பும்

உன் மீது நான் கொண்ட அன்பும்

வாழ்ந்திருக்கும் வரை.

..........................

முதன் முதலில்

உலகம் கண்ட போது

உயரத்தில்

உன்

தோள் மேலிருந்தேன்

நீ

மெதுவாய் ஆடி

நடக்கையில்

வாழ்க்கை

பெருத்தது

அரைத் தூக்கத்தில்

நீ என்னைத்

தோளில் சுமந்தது

போல்

சுமந்து

மறவேன்

உன்னையும்

நீ

தந்த

குழந்தைப் பிராயத்தையும்

............................

எனதன்புத் தந்தையே

என்றென்றும்

நான் உன்னுடையவள்

............................

பொக்கிஷத்தை

பார்த்தபின்

ஈன்ற பொழுதினும், பெரிதுவந்த

தந்தையாய்

கண் கலங்கி

நெஞ்சு விம்மி

நின்றிருந்தேன்

திருப்தியான நாள்

.................

பின் பொருநாள் மெதுவாய் கேட்டேன் ”அய்யா அந்த புத்தகத்தை வாசித்து விட்டா வாங்கித் தந்தாய் என்று ”அதிலென்ன சந்தேகம்” என்றால் அலட்சியமாய்...

மீண்டும் உயிர்த்திருந்தேன்....அவளின் பதிலால்

30.09.2009

இன்றைய நாளும் நல்ல‌தே.

http://visaran.blogspot.com/

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உணர்வுபூர்வ பந்தம் , நூலிளை இடைவெளியில் உணரப்படும் . மிக அழகாக சொல்லியிருக்கிறியள் விசரன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தையின் உணர்வுகளை அப்படியே கொண்டு வந்திரக்கிறீர்கள் சஞ்சய். :wub: உங்களைப்பற்றி சின்னகுட்டியர் யாழில் ஒழுதியபொழுது சே இத்தனை நாள் வலைப்பதிவில் குப்பை கொட்டியிருக்கிறேன் உங்கள் பதிவுகளை பார்தததேயில்லையே என நினைத்து எங்கள் வலைப்பக்கத்தை ஒரு முறை மேய்ந்துவிட்டு சின்னகுட்டியர் இப்பதான் ஒரு உருப்படியான வேலை செய்திருக்கி றார் என நினைத்தேன் :lol: :lol: . இப்பொழுது யாழில் கண்டதும் மகிழ்ச்சி :)

தந்தைக்கும் மகளுக்குமான உறவை அழகாக சொல்லியிருக்கும் ஒரு அழகான பதிவு. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சயன் நன்றி பகிர்வுக்கு, நீங்கள் சொல்வது மிகச் சரி, என் மகளுக்கும் 9 வயதுதான் ஆகப் போகுது, ஆனா வீட்டில் கட்டுப்பாடுகள் அவாவின் கைக்குள், தம்பிமாரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எல்லா வேலைகளும், பார்த்து ரசிக்க மனதுக்கு இன்பமா இருக்கும், அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாசப் பிணைப்பை. நீங்க சொன்ன விதம் தனி அழகு & அதைவிட தெரிவு செய்த தலைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாக்களுக்கு பெண் மகவுகளுடனான பிணைப்பு ஒரு படி மேல் :D

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள்.

எனது அனுபவமும் இப்படித்தான்.

நல்ல பதிவு சஞ்சயன். உங்கள் வரவு யாழுக்கு மெருகூட்டுகின்றது.

அபியும் நானும் மற்றும் தெய்வத் திருமகள் ஆகிய திரைப்படங்களை நான் பார்த்தபொழுது நானும் ஒரு அப்பா ஸ்தானத்திற்கு போய் அனுபவித்து பார்த்து நெகிழ்ந்திருந்தேன். இந்தப் படைப்பினைப் படிக்கும் போது கூட அப்படியானதொரு மனநிலையை நான் உணர்ந்தேன்.

உணர்வுகளும் வார்த்தைகளும் உயிர்ப்புடன் என் மனதினை நெகிழ வைத்திருந்தது!

வாழ்த்துக்கள் ..... தங்கள் எழுத்துக்கு மட்டுமல்ல... தங்களுக்கும் தங்களின் அன்புறவுகளுக்கும் சேர்த்து. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் என் அப்பாவைத் தான் மிகவும் பிடிக்கும்...நன்றாக எழுதுகிறீர்கள் தொட‌ர்ந்து உங்கள் கதைகளை இணையுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.