Jump to content

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்


Recommended Posts

ஆனால் டன் வந்து எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அன்றி வேறு வழியில என்னால் உங்களுக்கு பணம் தர வாய்ப்பில்லை. டன்னின் கணக்கிற்கு அனுப்புவதற்கு அவரின் உத்தரவாதம் அவசியம்.

மனிதாபிமானத்தின் முன் மற்றவை உடனடியாக மறக்கப்பட வேண்டும்.

நன்றி.. அக்கா. :):icon_idea:

டண் நேசக்கரத்துடன் இல்லை. வெள்ள அனர்த்த நேரம் வந்தார் பின்னர் பலதரம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்பில்லை.

நீங்கள் நேரடியாகவே ஒரு குடும்பத்திற்கு உதவக்கூடிய விபரங்களை தனிமடலில போட்டுவிடுகிறேன். நேரடியாக உரியவர்களுடன் கதைத்து உறுதிப்படுத்திக் கொண்டு உதவியை வழங்குங்கோ.

உங்களை எனது கருத்துகள் காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கோ தம்பி. கருத்துகளால் முரண்படுவோம் ஆனால் தமிழராக ஒன்றுபடுவோம். எல்லோரையும் விட எனது சிரமங்களைப் புரிந்த நீங்கள் எனது பகையில்லை. நீங்கள் தம்பிதான்.

மனிதாபிமானத்தின் முன் எல்லாவற்றையும் 2நாளாக நாங்கள் மோதுப்பட்ட முரண்களையெல்லாம் மறப்போம்.

நன்றிகள் தம்பி. நாளைய நத்தாரை இனிதாக கொண்டாட இனிய வாழ்த்துக்கள்.Christmas-Tree-Lights-4.jpg

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா.

அன்புடன்

****

இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது.

இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒரு காலத்தில ஒரு போராளி. பிறகு எழுத்தாளன். இப்பவும் எழுத்தாளன் தான். ஆனால் எழுதிற எழுத்துக்கெல்லாம் வேண்டுறது திட்டுத்தான். எல்லாரும் திட்டத்திட்ட எழுதிக் கொண்டு தன்னோடை வாழ்ந்த தனக்குத் தெரிஞ்ச முன்னாள் போராளியளுக்கு தன்னாலை முடிஞ்ச உதவியளைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.

வெளிநாடுகளில தனக்குத் தெரிஞ்சவையளிட்டை கேட்டு உதவிகளை ஒழுங்கு செய்து குடுக்கிறான். இடைக்கிடை இப்படியான கலியாணத்தரகர் வேலையும் (இலவசதரகர்) செய்யிறான்.

அவன் தந்த அந்த நாலுவரி விளக்கத்திற்கு பிறகு மேலும் பெரிய பந்திக்கடிதப் பரிமாற்றம் ஈமெயிலில் நடத்தி அந்தப் பெண்போராளியின்ரை படம் சாதகம் எல்லாம் வந்து சேர்ந்தது ஈமெயில. அந்தப்படம் வந்தாப்பிறகு சரியான கவலையாயிருந்திச்சு.

ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.

சரணடைஞ்சு அனுபவிச்ச நரகங்களையும் துயரங்களையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட கோடிமுறை அழுதிருப்பாள். ஆனால் அதையும் தாண்டி விடுதலையாகி வெளியல வந்தாப்பிறகுதான் அவளுக்கு தான் தனிச்சுப்போனாளெண்டு உணர்வு உறைச்சது.

பெண்போராளிகள் பற்றி உலகத் தமிழினம் கட்டி வைச்சிருந்த கோட்டையில இசைபாடிக்கொண்டிருந்த பெண்போராளிகளின் வாழ்க்கை ஒரு நேரச்சோற்றுக்கே இறைஞ்சுகிற நிலமையில இருக்கிற துயரத்தை அவளும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறாள். இப்ப அவளுக்கு அம்மா அப்பா தங்கைச்சிமாரின் கண்ணீரும் வலியும் வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

போற்றிப்பாடப்பட்ட பெண்போராளிகள் ஒவ்வொருவரும் படுகிற அவலங்களையெல்லாம் சோற்றோடும் சுதந்திரத்தோடு முடிச்சுப் போட்டு கவுரவச்சாவு சாக நிர்ப்பந்திக்கிற அனைவர் மீதும் அவளுக்கு கோபமாய் வந்தது.

அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!

அவன் தந்த அவளது விபரங்களை பரிசிலிருக்கிற ஒரு இலவச புறோக்கரிடம் ஈமெயிலில அனுப்பி 3வாரத்தில் அந்த புறோக்கர் தொடர்பு கொண்டார்.

தங்கைச்சி நீங்கள் தந்த பிள்ளையின்ரை குறிப்புக்கு நல்லதொரு பொருத்தமான பொடியன் கிடைச்சிருக்கிறான். பொடியனுக்கு படமும் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விசயங்களை கதைக்க வேணும் என்றார்.

அவளுக்கு வெள்ளி திசையடிச்சுவிட்டது போலத்தானிருந்தது. இலவச புறோக்கர் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் அணுகுண்டைப் போட்டார்.

பொடியன் ஏற்கனவே கலியாணம் முடிச்சு 4பிள்ளையள். ஆனா டிவோஸ். வயது 48. ஆனால் வயது தெரியாத தோற்றம். கொஞ்சம் தண்ணிச்சாமி. மற்றது தெரியும்தான இயக்கத்தில இருந்த பெட்டையளெண்டா கனக்க கேள்வியள் கேப்பினம். ஆனால் இவன் அப்பிடியெல்லாம் கேக்கேல்ல. மற்றது பொடியன் வேதம். அதுமட்டும் தான் குறை. ஆனால் பிள்ளை மதம்மாறாமல் கலியாணம் கட்ட அவை தடையில்லையாம்.

அண்ணை அவளைவிட 11வயது ஆளுக்குகூடிப்போச்சு உது சரிவராது நீங்கள் வேறையாரும் சரிவந்தா சொல்லுங்கோ….இந்தப்பதிலை அவர் எதிர்பார்க்கேல்ல போல…..திருப்பிச் சொன்னார்…..தங்கைச்சி வயதென்ன பெரிய பிரச்சனை மனம்தானே முக்கியம்.

வயது போகட்டும் ஏற்கனவே மணமுறிவு மாப்பிளை தண்ணிச்சாமிதான் இடியெண்டதை அம்மாளறிய நான் சொல்லேல்ல. அவர் அந்த மாப்பிளை பற்றி அதிகமாக பில்டப் போட்டுக் கொண்டு போனார். உது சரிவராதண்ணை விடுங்கோ. அவை வேதக்காறரெண்டா சம்மதிக்காயினம்…..கடைசிக் கடத்தலாக மதத்தை காரணம் சொல்லி அவரைத் துண்டித்துக் கொள்கிறேன்.

4கிழமை முடிஞ்ச பிறகு அவளது போராளி நண்பன் முகப்புத்தகத்தில் வந்திருந்தான்.

அக்கா **** விசயம் ஏதும் சரிவந்ததோ ?

தம்பி ஒண்டும் சரிவரேல்ல. ஆனா ஒண்டு வந்தது. ஏற்கனவே கலியாணம் கட்டி பிரிஞ்சிருக்கிறார். வயது11 கூட.

ரெண்டாந்தாரமெண்டாலும் பறவாயில்லையக்கா பாருங்கோ. அவள் எதெண்டாலும் வாழ ஒரு வழி கிடைச்சாப் போதுமெண்ட நிலமையில இருக்கிறாள். வயது வித்தியாசம் , ரண்டாந்தாரம் பெரிய பிரச்சனையில்லையெண்டு நினைக்கிறேன்…..என்றான் அவன்.

அவனுக்கு பதில் எழுதாமல் முகப்புத்தகத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு உச்சந்தலையில உளியாலை குத்தினமாதிரியிருந்திச்சு. பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

இதைவிடவும் இவையள் தங்களை முன்னாள் போராளியளெண்டு சொல்லாமலிருக்கலாம்….யாருக்கோ விலபோட்டா….அத்தியடிக் குத்தியரின்ரை ஆளாயிருக்கலாம்…..அல்லது அரச புலனாய்வா இருக்கலாம்…..உவையெல்லாம் பெண்போராளியள்…சீ….தூ….

அவள் பற்றிய கதையைச் சொல்ல நினைக்கிற என்னை நோக்கி….,

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

01.11.2011

000 000 000

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

மற்றவர்களை மாட்டிவிட்டிட்டு.. தாங்கள் தூர விலகி நிற்க விரும்பும் எம்மவர்கள் மத்தியில் இந்த மாப்பிள்ளை எவ்வளவோ திறம்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான திருமணங்கள் மிகச் சாதாரணம். டேற்றிங் என்று எம்மவர்களின் வாரிசுகளும் இப்படி செய்யினம். அப்போ எல்லாம் யாரும் வாய் திறக்க மாட்டினம். அதுவே தாயகம் நோக்கிப் போனால்.. ஐயோ.. அது புள்ள மாதிரி.. வயசு வித்தியாசம்.. மண்ணாங்கட்டின்னு ஆயிரம் நொட்டை பிடிப்பினம். அப்புறம்.. முதிர் கன்னிகள்.. காளைகள் பெருக்கம் என்றும் நீலிக்கண்ணீர் வடிப்பினம்.

இப்படியான ஒரு இரண்டும் கெட்டான்.. கேடு கெட்ட சமூகத்தில் இருந்து இந்த மாப்பிள்ளை போன்ற ஒரு சில செயல்வீரர்கள் சமூகத்தின் அடிப்படைகளில் படிந்து போயுள்ள படைக்கணக்கான போலித் தன்மைகளை மாற்றி சமகாலத் தேவைக்கு ஏற்ப செயற்படுவது.. பாராட்டத் தக்கது.

கட்டினவர் அவாவோட நீண்ட காலம் வாழனும் எண்டால்.. புறணி பாடும்... சொந்த இனத்தவரில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதும் நன்று. அப்புறம்.. குடும்பத்துக்க கலகம் பண்ணி.. அதில மகிழ்ச்சி அடையும் எம் இன ஜென்மங்களுக்கு இவர்களும் இரையாகிடுவார்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை மாட்டிவிட்டிட்டு.. தாங்கள் தூர விலகி நிற்க விரும்பும் எம்மவர்கள் மத்தியில் இந்த மாப்பிள்ளை எவ்வளவோ திறம்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான திருமணங்கள் மிகச் சாதாரணம். டேற்றிங் என்று எம்மவர்களின் வாரிசுகளும் இப்படி செய்யினம். அப்போ எல்லாம் யாரும் வாய் திறக்க மாட்டினம். அதுவே தாயகம் நோக்கிப் போனால்.. ஐயோ.. அது புள்ள மாதிரி.. வயசு வித்தியாசம்.. மண்ணாங்கட்டின்னு ஆயிரம் நொட்டை பிடிப்பினம். அப்புறம்.. முதிர் கன்னிகள்.. காளைகள் பெருக்கம் என்றும் நீலிக்கண்ணீர் வடிப்பினம்.

இப்படியான ஒரு இரண்டும் கெட்டான்.. கேடு கெட்ட சமூகத்தில் இருந்து இந்த மாப்பிள்ளை போன்ற ஒரு சில செயல்வீரர்கள் சமூகத்தின் அடிப்படைகளில் படிந்து போயுள்ள படைக்கணக்கான போலித் தன்மைகளை மாற்றி சமகாலத் தேவைக்கு ஏற்ப செயற்படுவது.. பாராட்டத் தக்கது.

கட்டினவர் அவாவோட நீண்ட காலம் வாழனும் எண்டால்.. புறணி பாடும்... சொந்த இனத்தவரில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதும் நன்று. அப்புறம்.. குடும்பத்துக்க கலகம் பண்ணி.. அதில மகிழ்ச்சி அடையும் எம் இன ஜென்மங்களுக்கு இவர்களும் இரையாகிடுவார்கள். :):icon_idea:

தங்கட சொந்த வாழ்க்கை சம்பந்தமா எதைச் செய்யோணும் எப்படிச் செய்யோணும் எண்டு தீர்மானிப்பது அவன் அல்லது அவளா இருக்கவேணும்...எங்கட அரை அவியல் சமூகமா இருக்கக்கூடாது..நெடுக்ஸ் சொன்னமாதிரி தனி மனித சுதந்திரத்தை விரும்புவர்கள் இன்னும் பல விடயங்களில் வடிவா நாகரீகமடையாத எங்கடை சமூகத்திட்ட இருந்து விலத்தி இருக்கிறது நல்லது...பலவிடயங்களில் எங்கட சொந்த வழ்க்கையை நாங்கள் தீர்மானிக்கிற நிலமை எங்கட சமூகத்தில உருவாகவில்லை..பல விடயங்களை சமூகமே எங்கள் மீது திணித்து அடக்கி வைத்திருக்கிறது.. :(

தம்பி இதைத்தான் சொல்றது நம்ம சண்டையில மற்றவை தலை நீட்டக்கூடாதெண்டு. பாத்தீங்களோ நாங்கள் கருத்தாடினம் அக்கா தம்பி ஒற்றுமையாகீட்டம். :lol:

:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தம்பி. நாளைய நத்தாரை இனிதாக கொண்டாட இனிய வாழ்த்துக்கள்.

Christmas-Tree-Lights-4.jpg

நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதும் நத்தார் புதுவருட வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா...ரண்டு பேரும் மாத்திமாத்தி வாழ்த்தை சொல்லிக்கிறாங்க....பாசத்தைக் கொட்டிக்கிறாங்க...பாத்துக்கொண்டிருந்த நம்பழுக்கு நேராச் சொல்லவேண்டாம் சைட்டாயாவது ஒரு வாழ்த்துச்சொன்னாங்களா..??? :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உண்மையில் நெடுக்ஸ்சை நான் சீண்ட வேண்டுமென்று சீண்டவில்லை. கட்டாயம் அதை இதை செய்யச்சொல்லியும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஒரு விடயத்தை பதிவு செய்துள்ளேன். அதற்கான கருத்தைத்தானே தரவேணும். ஆனால் இங்கு நடந்தது நீங்கள் முழுவதும் வாசிச்சிருக்கிறீங்கள். எல்லாரும் உதவ வேணும் ஒற்றுமையாக எங்கள் பலத்தையும் அந்த மக்களுக்கு குடுக்க வேணும் அதுக்கான ஒரு சிறுதுளிதான் எனது பங்கு. ஆனால் அதனை எத்தனை முறை ஏளனம் தனிப்பட்ட காழ்ப்பு என தலைப்புகள் நீங்கள் அறியாததல்ல. மன்னித்துக் கொள்ளுங்கள் எனது கருத்துகள் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால்.

சந்தி அக்கா என்ன சின்னப்பிள்ளைத்தனமா??? இதுக்கு எல்லாமா நாங்க கோவிப்பம்??? :D

we are friends akka :)

எப்பவும் நேசக்கரத்துடன் இணைந்திருப்போம். முடியும் போதெல்லாம் என்னாலான உதவிகளைச் செய்வேன் அக்கா.

Link to comment
Share on other sites

தம்பி இதைத்தான் சொல்றது நம்ம சண்டையில மற்றவை தலை நீட்டக்கூடாதெண்டு. பாத்தீங்களோ நாங்கள் கருத்தாடினம் அக்கா தம்பி ஒற்றுமையாகீட்டம். :lol:

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்;வ்வ்..........................................

Link to comment
Share on other sites

அடப்பாவிங்களா...ரண்டு பேரும் மாத்திமாத்தி வாழ்த்தை சொல்லிக்கிறாங்க....பாசத்தைக் கொட்டிக்கிறாங்க...பாத்துக்கொண்டிருந்த நம்பழுக்கு நேராச் சொல்லவேண்டாம் சைட்டாயாவது ஒரு வாழ்த்துச்சொன்னாங்களா..??? :o:lol:

இதுக்குத்தான் நாங்கள் ஓரமா நிண்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது..! :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிங்களா...ரண்டு பேரும் மாத்திமாத்தி வாழ்த்தை சொல்லிக்கிறாங்க....பாசத்தைக் கொட்டிக்கிறாங்க...பாத்துக்கொண்டிருந்த நம்பழுக்கு நேராச் சொல்லவேண்டாம் சைட்டாயாவது ஒரு வாழ்த்துச்சொன்னாங்களா..??? :o:lol:

சுபேஸ் தம்பிக்கு ஸ்பெஸல் வாழ்த்து ஸ்கைப்பில எல்லாத்தம்பிகளுக்கும் முன்னம் சொல்லீட்டேன் மறந்திட்டீங்களோ ? கருத்துக்களத்தில் தம்பிகளுடன் அக்காச்சி முரண்படுவேன் ஆனால் நாங்கெல்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவனென்ற கொள்ளையைப் பின்பற்றுவமெல்லோ. :lol:

Link to comment
Share on other sites

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

சுகன், நீங்கள் குறித்தது போல ஒரு முன்னாள் பெண்போராளி 20வயது வித்தியாசத்தில் திருமணமாகியுள்ளாள். அவள் தற்போது அனுபவிக்கிற வேதனையை இங்கே எழுத முடியாது.

ஒரு இனத்தின் அடையாளமாகவும் குறியீடாகவும் இருந்தவர்கள் பெண்போராளிகள். ஆனால் 2009 யுத்த முடிவு அவர்களை சாமான்ய சமூகத்தின் அடிநிலைப் பெண்களாகத் தற்போது கொண்டு வந்திருக்கிறது. ஆண்துணை திருமணம் இல்லையென்றால் வாழ முடியாதென்ற வளக்கத்தை அவர்களும் ஏற்பவர்களாக காலம் மாற்றியிருக்கிறது. இந்த மாற்றத்தைத்தான் மேல் கதையில் எழுதினேன். கதை ரணகளமாய் இப்பதான் ஒய்ந்திருக்கு.

வயது வித்தியாசம் மதமெல்லாம் எனது பிரச்சனையல்ல மேலுள்ள கதைக்கு உரியவள் ஒருகாலம் நாங்கள் அடையாளப்படுத்திய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் மாற்றங்களினை விரும்பிய எழுத்துகளையும் எழுதியவள். திருமணம் இல்லாமல் போராளியாய் வாழ்ந்து சமூகத்தை முன்னேற்றுவதைத்தவிர வேறு கனவில்லையென்று வாழ்ந்தவள். இன்று அவளது நிலமை ஆயிரமாயிரம் பேரின் நிலமைக்கு காரணமான காரணி பற்றி இங்கு கதைக்க முடியாது. ****சுயதணிக்கை***

பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

எப்படி இந்த நிலைமை இன்று அவர்களிற்கு ஆனது? நியாயமான கேள்விதான். ஆனால் பதிலை நமக்கு கொடுக்க ஒரு தகுதியில்லை என்றே எனக்குத தோன்றுகிறது.

மண், மக்கள், என்று அவர்கள் வாழ்த்த காலத்தில் " எங்கடை பிள்ளைகள் " என்று கொண்டாடிய அனைத்து மனிதரும் தற்சமயம் சுயநலமாய் மாறிவிட்டார்கள். மனிதரின் உண்மை முகமூடிகளை அறியமுடியாதபடி அவர்கள் தங்களைத் தாங்களே பணிகளில் மூழ்கியிருந்திருக்கலாம். போரின் கொடூரத்தின் பின் தாம் போன பாதையில் நின்றபடி திரும்பிப் பார்த்த வேளையில் அவர்கள் பின்னல் வெறுமை மட்டும் தானே இருந்திருக்கும். இந்நிலையில் அவர்களிற்கு என்றொரு ஆறுதலான தோள் தேவைப்படும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்ட நிலைக்கு எலோரும் ஒரு காரணம் தானே. அவர்களும் ஒரு சாதாரண மனிதர்

கல்கி உங்களுக்கான முதல் +1 நான் தான் போட்டுள்ளேன். பணிகளில் மூழ்கியிருந்தவர்கள் எங்களை தமிழரை நம்பியிருந்துவிட்டார்கள். இப்போது எல்லாம் முடிந்த பின்னர் திரும்பிப்பார்க்கிறார்கள். தங்களை உச்சத்தில் வைத்தவர்கள் பின்னே நிற்கிறார்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் இன்று அவர்கள் அனாதைகளாகி நிற்கிறார்கள். துயரம்தான் மிஞ்சுகிறது.

இதுக்குத்தான் நாங்கள் ஓரமா நிண்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது..! :lol:

:oஇசை இதில உள்குத்தொண்டும் இல்லைத்தானே. இசைத்தம்பிக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

களத் தம்பிகள் , தங்கைள் , தாத்தாக்கள் , பாட்டிகள் எல்லோருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

இந்த விசயத்தில கதைக்கிறதுக்கு எனக்கு அருகதையும் விருப்பமும் இல்லாவிட்டாலும்... ஒரு விடயம் என் மனதினை உறுத்தும் காரணத்தால் சொல்கின்றேன். தயவுசெய்து, தப்பாக யாரும் எடுக்க வேண்டாம்!

அவருக்கு 52வயது. அந்தப் பிள்ளைக்கு 24வயது. இன்னும் 8 அல்லது 10 வருசத்தில அவருக்கு முதுமை முத்திவிடும். அவருடைய ஆயுள் கூட நிச்சயம் அற்ற ஒன்று. அப்போது அந்தப் பெண்ணுக்கு 32 அல்லது 34 வயதுதான் இருக்கும். அதற்குப்பின் அந்த பெண்ணின் வாழ்க்கை..... ???????? மீண்டும்....... ஒரு கிழவன் கூட கிடைக்க மாட்டான்..... வாழ்க்கை கொடுக்க!

இப்படியான விடயங்கள் தற்காலிக கரையேற்றங்கள் என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தற்போதையதைவிட பாதகமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பது எனது எண்ணம். மனதுகள் ஒன்றுசேர்தல் என்பதுதான் திருமணம் என்றாலும் வாழ்க்கை என்று வரும்போது அது அயிரத்தெட்டு விடயங்களை கவனித்து இறுதிவரை ஒன்றாக வாழவேண்டும் என்ற ஒன்றிலேயே முக்கியமாகின்றது.

இப்படியான திருமணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

சமுதாயம் ஆயிரம் சொல்லும்! அதையெல்லாம் காதிற் போட்டால் அந்த சமுதாயத்துக்குள்ளேயே வாழமுடியாதவர்கள் ஆகிவிடுவோம்.

தற்பொழுது எங்கள் சமுதாயத்துக்குள் 25 முதல் 40 வயது வரையுள்ள மனைவியற்ற புருசர்கள் எத்தனைபேர் இருக்கின்றார்கள்?அவர்கள் எல்லாருக்கும் .......................... ..........(தங்கள் எண்ணத்துக்கு விடப்படுகின்றது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில கதைக்கிறதுக்கு எனக்கு அருகதையும் விருப்பமும் இல்லாவிட்டாலும்... ஒரு விடயம் என் மனதினை உறுத்தும் காரணத்தால் சொல்கின்றேன். தயவுசெய்து, தப்பாக யாரும் எடுக்க வேண்டாம்!

அவருக்கு 52வயது. அந்தப் பிள்ளைக்கு 24வயது. இன்னும் 8 அல்லது 10 வருசத்தில அவருக்கு முதுமை முத்திவிடும். அவருடைய ஆயுள் கூட நிச்சயம் அற்ற ஒன்று. அப்போது அந்தப் பெண்ணுக்கு 32 அல்லது 34 வயதுதான் இருக்கும். அதற்குப்பின் அந்த பெண்ணின் வாழ்க்கை..... ???????? மீண்டும்....... ஒரு கிழவன் கூட கிடைக்க மாட்டான்..... வாழ்க்கை கொடுக்க!

இப்படியான விடயங்கள் தற்காலிக கரையேற்றங்கள் என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தற்போதையதைவிட பாதகமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பது எனது எண்ணம். மனதுகள் ஒன்றுசேர்தல் என்பதுதான் திருமணம் என்றாலும் வாழ்க்கை என்று வரும்போது அது அயிரத்தெட்டு விடயங்களை கவனித்து இறுதிவரை ஒன்றாக வாழவேண்டும் என்ற ஒன்றிலேயே முக்கியமாகின்றது.

இப்படியான திருமணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

சமுதாயம் ஆயிரம் சொல்லும்! அதையெல்லாம் காதிற் போட்டால் அந்த சமுதாயத்துக்குள்ளேயே வாழமுடியாதவர்கள் ஆகிவிடுவோம்.

தற்பொழுது எங்கள் சமுதாயத்துக்குள் 25 முதல் 40 வயது வரையுள்ள மனைவியற்ற புருசர்கள் எத்தனைபேர் இருக்கின்றார்கள்?அவர்கள் எல்லாருக்கும் .......................... ..........(தங்கள் எண்ணத்துக்கு விடப்படுகின்றது)

உங்கள் கருத்து ஒரு பெண்ணை.. ஒரு விதமான போகிப்பவள் என்ற பார்வையூடு எடுத்துக் கொள்கிறது. அப்படி இருந்தாலும் கூட இன்றைய நவீன அறிவியல் உலகில்.. இருந்து கொண்டும்... இப்படி பழைய 17ம் நூற்றாண்டுச் சிந்தனையில்.. ஆண் - பெண் உறவை கட்டிக் கொண்டு அழுவதில் எந்தப் பயனும் இல்லை. இது அதிநவீன காலம். நிறைய மாற்றங்கள் உண்டு. இன்றைக்கு ஓய்வூதிய வயதெல்லையே 67 என்றாகிவிட்டது. பல இளம் பெண்கள் வயதான ஆண்களையும்.. இளம் ஆண்கள் வயதான பெண்களையும் குடும்ப அங்கத்தவர்களாக தேர்வு செய்வது சாதாரணமாகியுள்ளது.

ஒரே வயதில் திருமணமான ஆக்கள் எத்தனையோ பேர் விவாகரத்தில போய் நிற்கினம். எத்தனையோ பேர் வாழ்விழந்து நிற்கினம்.

இது அடுத்தவர் சொல்லி செய்யும் காரியமல்ல. அந்தத் தனிமனிதர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்களுக்கு அறிவுரை வழிகாட்டல் செய்யக் கூடிய தகுதி இந்தச் சமூகத்திற்கு இருப்பதாக கருதவே முடியாது. அந்தளவிற்கு அறிவியல் தனமற்ற.. மனிதத்துவமற்ற.. சிந்தனைகளோடு எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிந்தனைகளைக் கட்டிக் கொண்டு மடமையில் ஊறிக் கிடக்கிறது. காலம்.. அறிவியல் கலந்து மாறி உள்ள போதும் எம்மவர்கள் மனங்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு தங்கள் பதிவு நல்ல உதாரணம்.

84 வயது தாத்தாவுக்கு 54 வயது பெண் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் இன்றைய அறிவியல் உலகில் நடக்க அங்கீகரிப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு மருத்துவ உலகமோ.. அறிவியலோ தடைவிதிக்கவில்லை. ஆனால் இவை எதுவுமே அற்று ஆராய்தல் அற்று வெறும் சமூகக் கூப்பாடுகள்.. அதற்கு தடை போடுவது தான் வேடிக்கையாக உள்ளது. இதனை அறிவுள்ள மனிதர்கள் புறந்தள்ளி தங்கள் தங்கள் சுய ஆளுமை.. இயலுமைக்கு ஏற்ப.. முடிவுகளை எடுப்பதையே அறிவியலும்.. மனிதமும் வரவேற்கிறது. அதுவே தனிமனித சுதந்திரத்தை தக்க வைக்கவும் உதவும்..!

உங்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிவியல் ரீதியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து அறிவியல் ரீதியாக விடயங்களை அணுகுங்கள். சமூகம் விதைத்துள்ள மடமைகள் சார்ந்து இவற்றை நோக்குவது சரியல்ல..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை மாட்டிவிட்டிட்டு.. தாங்கள் தூர விலகி நிற்க விரும்பும் எம்மவர்கள் மத்தியில் இந்த மாப்பிள்ளை எவ்வளவோ திறம்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான திருமணங்கள் மிகச் சாதாரணம். டேற்றிங் என்று எம்மவர்களின் வாரிசுகளும் இப்படி செய்யினம். அப்போ எல்லாம் யாரும் வாய் திறக்க மாட்டினம். அதுவே தாயகம் நோக்கிப் போனால்.. ஐயோ.. அது புள்ள மாதிரி.. வயசு வித்தியாசம்.. மண்ணாங்கட்டின்னு ஆயிரம் நொட்டை பிடிப்பினம். அப்புறம்.. முதிர் கன்னிகள்.. காளைகள் பெருக்கம் என்றும் நீலிக்கண்ணீர் வடிப்பினம்.

இப்படியான ஒரு இரண்டும் கெட்டான்.. கேடு கெட்ட சமூகத்தில் இருந்து இந்த மாப்பிள்ளை போன்ற ஒரு சில செயல்வீரர்கள் சமூகத்தின் அடிப்படைகளில் படிந்து போயுள்ள படைக்கணக்கான போலித் தன்மைகளை மாற்றி சமகாலத் தேவைக்கு ஏற்ப செயற்படுவது.. பாராட்டத் தக்கது.

கட்டினவர் அவாவோட நீண்ட காலம் வாழனும் எண்டால்.. புறணி பாடும்... சொந்த இனத்தவரில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதும் நன்று. அப்புறம்.. குடும்பத்துக்க கலகம் பண்ணி.. அதில மகிழ்ச்சி அடையும் எம் இன ஜென்மங்களுக்கு இவர்களும் இரையாகிடுவார்கள். :):icon_idea:

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

திருமணம் என்பது அவர‌வர் விருப்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் தற்போது அந்தப் பெண் ஒரு பிடியும் இல்லாமல் தத்தளிக்கிறார் இவரை கட்டியாவது வெளிநாடு வந்தால் போதும் என்ட‌ நிலையில் இருக்கிறார்.வெளி நாட்டிக்கு வந்து கொஞ்ச‌ நாளில் வாழ்க்கை புரிய தொட‌ங்கின பின்னர் தான் தான் அவச‌ர‌ப்பட்டு விட்டோம் என்பது அவருக்கு புரியும்

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து ஒரு பெண்ணை.. ஒரு விதமான போகிப்பவள் என்ற பார்வையூடு எடுத்துக் கொள்கிறது. அப்படி இருந்தாலும் கூட இன்றைய நவீன அறிவியல் உலகில்.. இருந்து கொண்டும்... இப்படி பழைய 17ம் நூற்றாண்டுச் சிந்தனையில்.. ஆண் - பெண் உறவை கட்டிக் கொண்டு அழுவதில் எந்தப் பயனும் இல்லை. இது அதிநவீன காலம். நிறைய மாற்றங்கள் உண்டு. இன்றைக்கு ஓய்வூதிய வயதெல்லையே 67 என்றாகிவிட்டது. பல இளம் பெண்கள் வயதான ஆண்களையும்.. இளம் ஆண்கள் வயதான பெண்களையும் குடும்ப அங்கத்தவர்களாக தேர்வு செய்வது சாதாரணமாகியுள்ளது.

ஒரே வயதில் திருமணமான ஆக்கள் எத்தனை பேர் விவாகரத்தில போய் நிற்கினம். எத்தனை பேர் வாழ்விழந்து நிற்கினம்.

இது அடுத்தவர் சொல்லி செய்யும் காரியமல்ல. அந்தத் தனிமனிதர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்களுக்கு அறிவுரை வழிகாட்டல் செய்யக் கூடிய தகுதி இந்தச் சமூகத்திற்கு இருப்பதாக கருதவே முடியாது. அந்தளவிற்கு அறிவியல் தனமற்ற.. மனிதத்துவமற்ற.. சிந்தனைகளோடு எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிந்தனைகளைக் கட்டிக் கொண்டு மடமையில் ஊறிக் கிடக்கிறது. காலம்.. அறிவியல் கலந்து மாறி உள்ள போதும் எம்மவர்கள் மனங்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு தங்கள் பதிவு நல்ல உதாரணம்.

84 வயது தாத்தாவுக்கு 54 வயது பெண் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் இன்றைய அறிவியல் உலகில் நடக்க அங்கீகரிப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு மருத்துவ உலகமோ.. அறிவியலோ தடைவிதிக்கவில்லை. ஆனால் இவை எதுவுமே அற்று ஆராய்தல் அற்று வெறும் சமூகக் கூப்பாடுகள்.. அதற்கு தடை போடுவது தான் வேடிக்கையாக உள்ளது. இதனை அறிவுள்ள மனிதர்கள் புறந்தள்ளி தங்கள் தங்கள் சுய ஆளுமை.. இயலுமைக்கு ஏற்ப.. முடிவுகளை எடுப்பதையே அறிவியலும்.. மனிதமும் வரவேற்கிறது. அதுவே தனிமனித சுதந்திரத்தை தக்க வைக்கவும் உதவும்..!

உங்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிவியல் ரீதியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து அறிவியல் ரீதியாக விடயங்களை அணுகுங்கள். சமூகம் விதைத்துள்ள மடமைகள் சார்ந்து இவற்றை நோக்குவது சரியல்ல..! :):icon_idea:

நான் என்னுடைய கருத்தினை மட்டும் சொன்னேன். அது என் மனதுக்குள் உறுத்திய விடயம். அதைத்தான் சொல்லியிருந்தேன். அதில் தவறுகள் இருக்கலாம்.... இல்லாமல் விடலாம். அது வேறு விடயம்! ஆனால், இதைப்பற்றி தங்களுடன் "வீண்விவாதம்" பண்ண நான் தயாராக இல்லை.

நன்றி வணக்கம் (.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

நாங்கள் ஏற்கிறமோ இல்லையோ.. அறிவியல் ரீதியாக சட்ட ரீதியாக.. மருத்துவ ரீதியாக இதற்குத் தடை இல்லை.

நாங்கள் தனிமனிதர்கள் எங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப முடிவுகளை எடுத்தாலும்.. அறிவியல் சார்ந்து.. சட்டம் சார்ந்து.. மருத்துவம் சார்ந்து முடிவெடுக்குமிடத்தில்.. 45 வயசுப் பெண்ணை 25 வயசு ஆண் திருமணம் செய்வதில் எந்தத் தடையும் கிடையாது. அப்படி பல இடங்களில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் தெரிவு செய்துள்ளதைக் காண முடிகிறது. பல உலகப் பிரபல்யங்கள் கூட அப்படி செய்திருக்கிறார்கள். :):icon_idea:

நான் என்னுடைய கருத்தினை மட்டும் சொன்னேன். அது என் மனதுக்குள் உறுத்திய விடயம். அதைத்தான் சொல்லியிருந்தேன். அதில் தவறுகள் இருக்கலாம்.... இல்லாமல் விடலாம். அது வேறு விடயம்! ஆனால், இதைப்பற்றி தங்களுடன் "வீண்விவாதம்" பண்ண நான் தயாராக இல்லை.

நன்றி வணக்கம் (.)

அறிவியல் விவாதத்தை வீண்விவாதம் என்று சொல்லக் கூடிய நிலையில் உள்ள ஒரு சமூக அங்கத்தவரை உருவாக்கியுள்ள இந்தச் சமூகம் பற்றி தான் நான் இப்போ கவலைப்படுகிறேன். உங்கள் முடிவுக்கு அல்ல..!

தங்கள் விருப்பை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

யாரைப் பாத்துக் கேக்கிறியள் றதி அக்கா..நெடுக்கைப் பாத்தா..?இல்லை இந்த அரை அவியல் சமூகத்தையா..., அரை அவியல் சமூகம் எண்டால் நிச்சயமா இல்லை எண்டுதான் பதில் சொல்லும்... :D இந்த அரைஅவியல் சமூகத்தின்ர வறட்டு நியாயங்களை விட்டிட்டுப் பாத்தா அதில எந்த தப்புமே இல்லை..உங்கட உங்கட மனசுக்குப் புடிச்சிருந்த கட்டிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்..அப்பிடிக்கட்டுறதிலை எந்தத் தப்புமே இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய கருத்தினை மட்டும் சொன்னேன். அது என் மனதுக்குள் உறுத்திய விடயம். அதைத்தான் சொல்லியிருந்தேன். அதில் தவறுகள் இருக்கலாம்.... இல்லாமல் விடலாம். அது வேறு விடயம்! ஆனால், இதைப்பற்றி தங்களுடன் "வீண்விவாதம்" பண்ண நான் தயாராக இல்லை.

நன்றி வணக்கம் (.)

என்ன கவிதை இதுக்கெல்லாம் மாட்டன் எண்டு சொல்லிட்டுப் போறதா..,இது நல்ல ஒரு விடயம்தான..இப்பிடியான விவாதங்கள்தான் யாழில இடம்பெறவேண்டும்..சமூகப் பிரச்சினையள்,தேசியப் பிரச்சினையள் போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் யாழிழ இடம்பெறவேண்டும்..அதை விட்டிட்டு நெடுக்கைப்பற்றியோ இல்லை கவிதையைப் பற்றியோ இல்லை..அப்பிடியான தனிமனித விசயங்கள் யாழிழ இடம்பெறத்தேவை இல்லை..யாழ் அதுக்கான இடமும் இல்லை..ஏன் ஒருவரின் மேல்க் கோவித்துக் கொண்டு எழுதாமல் விடுகிறீர்கள் நல்ல விடயங்களுக்கு..இது தெருக்கோடி அல்ல அடுத்தவன் வீட்டுக் கோடியைப் பற்றி அலச..என்னைப் பொறுத்தளவில் யார் எழுதியிருக்கிறார்கள் என்று ஒருபோதும் பார்த்ததே இல்லை..என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு தேவையானது...நெடுக்கு யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும் இல்லைக் கவிதை யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும்..நான் எழுதியது ஆரோக்கியமான விவாதமா என்பதுதான் மேற்றர்..இதை எல்லாம் வீண்விவாதம் எண்டு சொல்லாதீர்கள்..வீண்வீவாதங்கள் பல இங்கு நடந்திருக்கின்றன்..நடக்கின்றன..நல்ல ஒரு விவாதம் இது..எமது பிற்போக்குச் சமூகத்தின் அடிமடியில் கைவைத்து உலுப்பிப் பார்ப்பது..தொடர்ந்து உங்கள் கருத்தை வையுங்கள்..நானும் ரெடி இந்த விவாதத்த்தில் கலந்து கொள்ள..

Link to comment
Share on other sites

என்ன கவிதை இதுக்கெல்லாம் மாட்டன் எண்டு சொல்லிட்டுப் போறதா..,இது நல்ல ஒரு விடயம்தான..இப்பிடியான விவாதங்கள்தான் யாழில இடம்பெறவேண்டும்..சமூகப் பிரச்சினையள்,தேசியப் பிரச்சினையள் போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் யாழிழ இடம்பெறவேண்டும்..அதை விட்டிட்டு நெடுக்கைப்பற்றியோ இல்லை கவிதையைப் பற்றியோ இல்லை..அப்பிடியான தனிமனித விசயங்கள் யாழிழ இடம்பெறத்தேவை இல்லை..யாழ் அதுக்கான இடமும் இல்லை..ஏன் ஒருவரின் மேல்க் கோவித்துக் கொண்டு எழுதாமல் விடுகிறீர்கள் நல்ல விடயங்களுக்கு..இது தெருக்கோடி அல்ல அடுத்தவன் வீட்டுக் கோடியைப் பற்றி அலச..என்னைப் பொறுத்தளவில் யார் எழுதியிருக்கிறார்கள் என்று ஒருபோதும் பார்த்ததே இல்லை..என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு தேவையானது...நெடுக்கு யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும் இல்லைக் கவிதை யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும்..நான் எழுதியது ஆரோக்கியமான விவாதமா என்பதுதான் மேற்றர்..இதை எல்லாம் வீண்விவாதம் எண்டு சொல்லாதீர்கள்..வீண்வீவாதங்கள் பல இங்கு நடந்திருக்கின்றன்..நடக்கின்றன..நல்ல ஒரு விவாதம் இது..எமது பிற்போக்குச் சமூகத்தின் அடிமடியில் கைவைத்து உலுப்பிப் பார்ப்பது..தொடர்ந்து உங்கள் கருத்தை வையுங்கள்..நானும் ரெடி இந்த விவாதத்த்தில் கலந்து கொள்ள..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவிதை இதுக்கெல்லாம் மாட்டன் எண்டு சொல்லிட்டுப் போறதா..,இது நல்ல ஒரு விடயம்தான..இப்பிடியான விவாதங்கள்தான் யாழில இடம்பெறவேண்டும்..சமூகப் பிரச்சினையள்,தேசியப் பிரச்சினையள் போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் யாழிழ இடம்பெறவேண்டும்..அதை விட்டிட்டு நெடுக்கைப்பற்றியோ இல்லை கவிதையைப் பற்றியோ இல்லை..அப்பிடியான தனிமனித விசயங்கள் யாழிழ இடம்பெறத்தேவை இல்லை..யாழ் அதுக்கான இடமும் இல்லை..ஏன் ஒருவரின் மேல்க் கோவித்துக் கொண்டு எழுதாமல் விடுகிறீர்கள் நல்ல விடயங்களுக்கு..இது தெருக்கோடி அல்ல அடுத்தவன் வீட்டுக் கோடியைப் பற்றி அலச..என்னைப் பொறுத்தளவில் யார் எழுதியிருக்கிறார்கள் என்று ஒருபோதும் பார்த்ததே இல்லை..என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு தேவையானது...நெடுக்கு யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும் இல்லைக் கவிதை யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும்..நான் எழுதியது ஆரோக்கியமான விவாதமா என்பதுதான் மேற்றர்..இதை எல்லாம் வீண்விவாதம் எண்டு சொல்லாதீர்கள்..வீண்வீவாதங்கள் பல இங்கு நடந்திருக்கின்றன்..நடக்கின்றன..நல்ல ஒரு விவாதம் இது..எமது பிற்போக்குச் சமூகத்தின் அடிமடியில் கைவைத்து உலுப்பிப் பார்ப்பது..தொடர்ந்து உங்கள் கருத்தை வையுங்கள்..நானும் ரெடி இந்த விவாதத்த்தில் கலந்து கொள்ள..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96006&view=getnewpost&hl=&fromsearch=1

Link to comment
Share on other sites

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

திருமணம் என்பது அவர‌வர் விருப்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் தற்போது அந்தப் பெண் ஒரு பிடியும் இல்லாமல் தத்தளிக்கிறார் இவரை கட்டியாவது வெளிநாடு வந்தால் போதும் என்ட‌ நிலையில் இருக்கிறார்.வெளி நாட்டிக்கு வந்து கொஞ்ச‌ நாளில் வாழ்க்கை புரிய தொட‌ங்கின பின்னர் தான் தான் அவச‌ர‌ப்பட்டு விட்டோம் என்பது அவருக்கு புரியும்

தனுசும் ரஜனியின் மகளை அப்படித்தான் மணம் முடித்தவர்.பணம் பத்தும் செய்யும்.வண்டியும் மாடும் ஒத்துழைத்தால் எல்லாம் சாத்தியம்.மாட்டைவிட வண்டி கெதியாக பழுதடைவதால் மாட்டை வேறு வண்டியில் பூட்டும் அபாயமும் உண்டு.எப்போதும் ஏட்டு சுரக்காய் கறிக்குதவாது.

Link to comment
Share on other sites

திருமணம் முடித்தால் அவருடன் தான் வாழ வேண்டுமா? அவர் புலம் வரலாம் வந்து அவருக்கு பிடிக்காவிட்டால் அல்லது ஒருவர் எழுதியதைப் போல் கூப்பிட்டவர் இறந்தால் அவர் ஏன் மறுமணம் செய்ய முடியாது? எதோ திருமணம் என்பது புனிதமானது அது ஒருவருடம் மட்டுமே என்பதெல்லாம் காலவதியான கருத்து.

இந்தச் சமூகம் அதற்காகப் போராடியவர்களைப் பாதுகாக்க வலு வற்ற நிலையில் அவர்கள் தங்களுக்குக்குக் கிடைக்கும் ஒரு சிறு சந்தர்ப்பத்தையும் பயன் படுத்துவது சரியானதே

Link to comment
Share on other sites

அக்கா.. தம்பின்னு வந்தாப் பிறகு எனி அடிபட்டு பிரயோசனம் இல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டமில்ல. அதுதான் இந்தக் கருத்துச் சண்டையின் நோக்கம். வேற ஒன்றும் இல்ல. அக்கா கேட்டு நடப்பீங்க அல்லது நடக்கக் கூடிய சூழல் வந்தா மாற்றி யோசிப்பிங்க என்று நம்புறம்.

உங்களுக்கு என் நத்தார் பரிசில 30% தாறன். இதுவரைக்கும் 100 பவுன் வரை தான் நத்தார் பரிசா வந்திருக்குது. அதில் 30 % தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் அதிகம் பங்களிப்பு வந்தா.. பங்களிப்பு தொகை கூடும். ஆனால் டன் வந்து எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அன்றி வேறு வழியில என்னால் உங்களுக்கு பணம் தர வாய்ப்பில்லை. டன்னின் கணக்கிற்கு அனுப்புவதற்கு அவரின் உத்தரவாதம் அவசியம்.

மனிதாபிமானத்தின் முன் மற்றவை உடனடியாக மறக்கப்பட வேண்டும்.

நன்றி.. அக்கா. :):icon_idea:

யோவ் நெடுக்கு குறுக்கால யோசிக்கிறியள் நல்லா எண்டு மட்டும் புரியுது. உங்கட ரெண்டு நேசக்கரத்தாலயும் கொடுத்தாலும் அது டன்னின்ர கிளாசுக்குள்ள வாங்க மாட்டார் என நல்லாத் தெரிந்த உஷார் பார்ட்டி நீதானப்பா. :lol:

நான் உண்மைக்குந்தான் கேக்குறன் யாரோ ஒரு நாட்டுக்காரன் நீங்கள் கூட்டினீங்கள் பெருக்கினீங்கள் எண்டதுக்காக 100 பவுண்ட்ஸ் பரிசாக் குடுக்குறானே, உங்களுக்காக கஷ்டப்பட்ட அந்த பாவப்பட்ட மக்களுக்காக போராளிகளுக்காக அதிலயும் 30% மட்டுந்தானா முடியுது உங்களால? :rolleyes::icon_idea:

அறிவுள்ள உயிரினம்தான் நீர். முடியல சாமி :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நெடுக்கு குறுக்கால யோசிக்கிறியள் நல்லா எண்டு மட்டும் புரியுது. உங்கட ரெண்டு நேசக்கரத்தாலயும் கொடுத்தாலும் அது டன்னின்ர கிளாசுக்குள்ள வாங்க மாட்டார் என நல்லாத் தெரிந்த உஷார் பார்ட்டி நீதானப்பா. :lol:

நான் உண்மைக்குந்தான் கேக்குறன் யாரோ ஒரு நாட்டுக்காரன் நீங்கள் கூட்டினீங்கள் பெருக்கினீங்கள் எண்டதுக்காக 100 பவுண்ட்ஸ் பரிசாக் குடுக்குறானே, உங்களுக்காக கஷ்டப்பட்ட அந்த பாவப்பட்ட மக்களுக்காக போராளிகளுக்காக அதிலயும் 30% மட்டுந்தானா முடியுது உங்களால? :rolleyes::icon_idea:

அறிவுள்ள உயிரினம்தான் நீர். முடியல சாமி :lol: :lol:

சும்மா உட்காந்துகிட்டு கருத்தெழுதும் நீங்கள்.. உங்கள் வருவாயின் 100% கொடுத்திட்டு இதைச் சொல்லனும். சும்மா நீட்டி முழக்கினால் போல.. உலகம் என்னால தான் உருளுது என்னு நீங்களை உங்களைப் பற்றி கற்பனை பண்ணிக்கப்படாது.. அது உடம்புக்கு ஆகாது சாமி..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்கு உங்களோட கருத்தில என்ன நியாயம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு பிதற்றுகின்றீர்கள்? உங்களுக்கு பரிசா வந்த 100 பவுண்ட்ஸ் விஷயத்தைச் சொன்னா நீங்கள் என்னோட மாத வருவாய்க் கணக்குக்கு வாறீங்கள். நாங்கள் எல்லாம் உங்களை மாதிரி பப்புளிக்கில விளம்பர நோட்டீஸ் ஒட்டுற ஆட்கள் கிடையாது. என் மனச்சாட்சிக்கு தெரியும் , நான் என்ன செய்தனான். என்ன செய்யுறன். என்ன செய்வன் என்று.

உங்களால முடிந்தால் பண்ணும். ஆனா, இப்புடி டன்னிட்டத்தான் கொடுப்பன் பாதி பண்னுதான் கொடுப்பன் என அறிக்கை மட்டும் விடாதீர்கள். ^_^

ஒரு கை செய்யுறத மற்றக் கை அறியாமல் செய்யுறதுதான் உண்மையான உதவி.

உங்கட தையல் மெஷின் கவிதையில சொல்லுறது ஒண்ணு செய்யுறது ஒண்ணா? ஊருக்கு உபதேசம் தனக்கில்லையடி என்ற மாதியல்லோ கிடக்கு. :lol:

எதுவும் உங்கட கப்பாசிட்டிக்கு ஆகாதுன்னா உதவி செய்யுறவனக் குழப்பாமல் அமைதியா இருக்குறது உடம்புக்கு நல்லது. :lol::lol::icon_idea::lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.