Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

தமிழ்சிறீ புல்லரிக்கிறது :lol:

இதுவரை கொள்கை கோட்பாடு எதுவுமே தெரியாமல் கட்சி தொடங்க ஆள் வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க காமதேனுபோல முதலாவதாக இணைந்தது மட்டுமில்லாமல் சாம, பேத, தான, தண்ட..(ஓய் சிறியர் இது சனநாயகம் இங்கே இதெல்லாம் அடக்கி வாசிக்கோணும்) வேலைகளைச்செய்தாகிலும் என்பதைப்பார்க்கும்போது நம்பி கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது...

எங்களுடைய கட்சியின் பெயர் "படிக்காத மேதைகள்"

எங்கள் கட்சியின் கொள்கையாவன

இடக்கு மடக்காக கேள்வி கேட்பது :icon_mrgreen:

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கணக்காக சில நேரங்களில் சரியாகச் சுட்டிக்காட்டுவது கவனிக்கவும் சிலநேரங்களில் மட்டுமே.. :icon_mrgreen:

இன்னும் சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

இப்போது படிக்காத மேதைகள் கட்சியைப்பதிவு செய்கிறேன்

இத்தோடு படிக்காத மேதைகள் கட்சியில் இணைய விரும்பும் மகா சனங்களை இங்கு பதிவிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்...எங்களிடம் தலைவர் பதவியிலிருந்து அனைத்தும் வெற்றிடமாக இருக்கிறது முந்துபவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இத்தால் அறியத் தருகிறோம் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இத்திட்ட முன்மொழிவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவிற்கும்.. பிற ஆலோசனைகள்.. கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

திட்டம் முன்மொழியப்பட்டு 24 மணி நேரத்துக்குள் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தில் ஒன்றை கள உறவுகள் தந்திருப்பதில் இருந்து.. இதில் அவர்களின் ஈடுபாட்டை உணர முடிவதோடு.. அவற்றிற்கு மதிப்பளித்து வரவேற்கின்றோம்.

கட்சிப் பதிவுகள் மட்டும் கொஞ்சம் தாமதமாகியுள்ளன:

இதுவரை பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம்: (கட்சிப் பெயரும்.. பிரேரித்தவர்களும்.)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா)

இக்கட்சிகளில் இணைந்து கொண்டு பணி செய்ய விரும்புறவங்க.. கட்சிப் பெயர்களை குறிப்பிட்டு.. அங்கு.. உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல்.. இன்னும் 3 கட்சிகளை பிரேரித்து.. அதற்கும்.. அங்கத்தவர்களைத் திரட்டிக் கொண்டு விட்டால்.. களமாளுமன்றதுக்கான.. பொதுவிதிகளை சமர்ப்பித்து உங்கள் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு.. அவற்றின் அடிப்படையில் இறுதி வடிவம் செய்யப்பட்டு.. அதன் பின்.. தேர்தல் நடத்தலாம். தேர்தல் பிரச்சாரங்களுக்கும் வாய்ப்புண்டு.

மேலும்.. சொந்தக் கட்சி விதிகளுக்கு மேலாக.. களமாளுமன்ற விதிகளை.. சமர்ப்பிக்க விரும்பிறவங்க.. அதனை தாராளமாக முன் வையுங்கள். உங்கள் விதிமுறைகள் அதிக கள உறவுகளால் வரவேற்கப்பட்டால்.. அவை களமாளுமன்ற யாப்பில் இடம்பெறும். அந்த வகையில்... ஒரு யாப்பை வகுத்த பெருமையை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் "யாழ் கள மன்னர்கள் சபை" என்ற கட்சியைப் பதிவு செய்கின்றேன்.

கொள்கை:

களம் வாழ நாம் உழைப்போம்

கள மக்கள் நலன் காப்போம்

கள மக்கள் மொழியைக் காப்போம்

கள மக்கள் பிழைகள் விட்டால் தட்டிக் கேட்போம்

மொத்தத்தில் களத்திற்காகவும்

கள மக்களுக்காகவுமே இக்கட்சி.

:wub:

அங்கத்தவர்கள் அனைவரும் உடனடியாக இணைந்து கொள்ளவும் :rolleyes:

அங்கத்தவர்கள் மேற்குறிய கொள்கையை ஏற்றுக்கொண்டவராக

இருப்பது அவசியம்.

கொள்கைகள் அங்கத்தவர்களின் ஆலோசனைப்படி மெருகூட்டப்படும்

எந்தக் காரணத்திற்காகவும் கொள்கைகள் கைவிடப்பட மாட்டாது.

அப்படியொரு நிலை வந்தால் யா க ம ச கலைக்கப்படும். :wub:

அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி

அறியத்தரப்படும்

யா க ம ச யின் 5 பேர் கொண்ட மன்னாதி மன்னர் சபை

ஒன்றை இப்போதே நான் பிரேரிக்கின்றேன்.

குறிப்பு: என்னை மட்டும் விட்டு விடுங்கள்

நான் எப்போதும் தொண்டனாகவே இருக்க விரும்புகின்றேன் :lol:

வாருங்கள்

களம் காப்போம்

கள மக்கள் நலன் காப்போம் :rolleyes:

Link to comment
Share on other sites

ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஜனநாயகத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படும் அமைப்புக்கள்/அரசாங்கங்கள் எல்லாம் சரியான கொள்கைகளைக் கடைப்பிடித்து சாதாரண மக்களில் நல்வாழ்வுக்கு உதவுவதில்லை. உதாரணமாக கிரேக்க, இத்தாலி அரசாங்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தவறான கொள்கைகளால் நாட்டையும் மக்களையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். அழிவுப்பாதையில் இருந்து மீட்க அந்நாடுகள் தற்போது technocrat களைத்தான் நாடியுள்ளது. இவ்வாறான technocrat கள் elite சமூகத்தில் இருந்து வருகின்றார்கள்.

எனவே யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்கள் அவசியம். இத்தகைய நிபுணர்கள் கொண்ட உயர் குழாம் ஒன்றே போதும் என மிகவும் திடமாக நம்புவதால் "யாழ்கள உயர் குழாம்" என்ற பெயரில் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய விழைகின்றேன்.

கொள்கைகள்:

1) தேர்தலில் வென்றால் முதல் வேலையாக தேர்தல்முறையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் முறையை இரத்துச் செய்தல்

2) சுழற்சி முறையில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து தேக்கம், ஊழல் இல்லாத யாழ் களத்தைக் கொண்டு நடாத்துதல்

3) பிரதிநிதிகள் மாறினாலும், அவர்களைத் தெரிவு செய்யும் உரிமையை யாருடைய ஒப்புதலும் இன்றித் தலைவரே கொண்டிருத்தல்.

4) ஆயுட்காலத் தலைவராக நானே தொடர்ந்தும் இருக்கத் தேவையான வழிவகைகளைச் செய்துகொள்ளுதல்

5) தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள்.

மேற்குறித்த கொள்கைகளுடன் ஒத்துப் போவதில் யாழ்களத்தில் உள்ள தொழில்சார் நிபுணர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லையென்பதால் அவர்கள் உடனடியாகவே "யாழ்கள உயர் குழாம்" அமைப்பின் ஆயுட்கால அங்கத்தினராக ஆகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

மனுசன் ரொம்ப தெளிவா தான் அக்கா இருக்கார்.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை 4 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஒரு கட்சி பதியப்பட இன்னும் வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர்.

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இறுதி கட்சிக்கான பதிவையும்.. கட்சிகளில் உங்கள் அங்கத்துவங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்திட்டம் கோரி நின்ற.. தேவையான அடிப்படை அங்கீகாரம் பெறப்பட்டதும் களமாளுமன்ற விதிமுறைகள் உங்கள் முன் வைக்கப்படும். அதற்கும்.. உங்களின் பங்களிப்பு எதிர்பார்க்கபடுகிறது. விதிமுறைகளில் அடக்க வேண்டிய விடயங்களை விரும்பமுள்ள கள உறவுகள் முன் வைக்கலாம். அவை சரியான வகையில் உள்வாங்கப்படவும்.. சம மதிப்பளிக்கவும் செய்யப்படும்.

கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது.

சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D :D :lol::icon_mrgreen:^_^

சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம்

இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! :icon_mrgreen:

எலோரும் இன் நாட்டு மன்னர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட எங்கள் கட்சியில் அங்கத்தவராவதற்கு ஏன் தயக்கம் .மாய வார்த்தைகளையும் உறுதி மொழிகளையும் நம்பி ஏமாறாமல் உடனே எங்கள் கட்சியில் உறுப்பினராகுங்கள் .முதலில் உறுப்பினராகும் 5  பேரைக் கொண்டு எங்கள் மன்னாதி மன்னர்கள்  சபை அமைக்கப்படும்.அதன் பின்னர் சேரும் உறுப்பினர்களின் வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு தேவையேற்படின் மன்னாதி மன்னர்கள் சபை மீளமைக்கப்படும்   யா க ம ச வில் உறுப்பினர்களே இன்னும் சேரவில்லை அதற்குள் இக்கட்சியின் மீது சிலர் கல்லேறிகின்றனர்.அதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை :lol:சீனாவிலிருந்து  ய்ங் மங் சிங் ,சிங் மங் ய்ங் :lol:என்பவர்கள் இக்கட்சியில் சேர விண்ணப்பித்து உள்ளார்கள் அவர்களுக்கு யா க ம ச வில் என்ன வேலை இது எதிரிகளின் சதித் திட்டம். :lol:இவையெல்லாவற்றையும் முறியடிப்போம் . வாருங்கள் களம் காப்போம் கள மக்கள் நலன் காப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! :lol::D:icon_idea:

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி

கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே

கொள்கை:

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி

"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?"

"நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை என்றோ தெரிவதில்லை

இன்று மட்டும் உங்களின்

கையில் வந்து உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை

வாழ்ந்து பார்க்கச் சொல்லுது"

இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சி

கொள்கைகள்:‍ யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல்

(சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்)

பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல்

(அப்படி நடித்தல்)

மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்..

திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல்.

காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. :rolleyes:

வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்...

காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் <_<

முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது..

பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. :icon_mrgreen:

இறுதியாக உங்களின் கட்சியினையும் பதிவுச் செய்து கொள்கின்றோம்.

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு எட்டிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர்.

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (1)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்!

நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. :lol::):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0)

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0)

கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. :lol::):icon_idea:

யாழ்கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பார்க்க விதி 5:

தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2 - சிறி அண்ணர், நீலப் பறவை)

வல்லை அக்காவின் கட்சி வேண்டப்பட்ட ஆகக்குறைந்த தகுதிகளைப் பெற்று முதல் நிரந்தரப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனி அவர்கள் களமாளுமன்றிற்கான அவர்களின் கொள்கைகள்.. தேர்தல்களை சந்தித்ததல் குறித்தும்.. தமது கட்சி அமைப்பு.. விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வாழ்த்துக்கள் சகாரா அக்கா. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பார்க்க விதி 5:

இதென்ன அடாத்தான முறையா இருக்குது கிருபண்ணா. நாங்கள் கட்சி சாராமல் இருக்க விரும்பிற மக்களுக்கு சுயேட்சை அமைப்பு என்ற நிலை வழங்கி இருக்கிறம். சுயேட்சை அமைப்புக்குள் இருந்தாலும்.. தேர்தலுக்கு முந்திய கட்சிகளின் நிலைப்பாடுகள்.. விஞ்ஞாபனங்கள் குறித்து கூட்டணி பற்றி சிந்திப்போம். :lol::D:icon_idea:

கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது.

சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது.

red_and_yellow_flag.jpg

எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்...

கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்.

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். :rolleyes:

காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை

(கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) :icon_mrgreen:

அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா)

ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும்

எமது கட்சியில் இணைந்து கொண்ட நீலப்பறவையை ஆரத்தழுவி வரவேற்கின்றேன்.smiley_dance04.gif

நீலப்பறவை இணைந்ததன் மூலம், எமது கட்சி பதிவு செய்யப் பட்டு விட்டது.fireworks.gif

வேறு கட்சியில் இருந்து தாவி... ப.மே.க. வுக்கு வருபவர்களுக்கு, ஐந்துநட்சத்திர ஓட்டலில் விசேட விருந்து அளிக்க கட்சி தீர்மானிதுள்ளது.

Link to comment
Share on other sites

உறுப்பினராக விரும்புகிறவர்கள்,

தயவு செய்து

தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும்.

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
    • ம‌கிழ்ச்சி ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்  வி பிர‌பாக‌ர‌ன்  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰......................................
    • விருதுநகர் தொகுதியில்  8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர்  மீண்டும் முன்னணியில் 
    • டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு! டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அத்துடன், பா.ஜ.க பல சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்று நிலையில், பா.ஜ.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385894
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.