Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னை மறப்பதற்கு என் இதயத்தில் வலுமை இல்லை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை விட்டு நீங்கிய என் சுவாசமே ..

உன்னை விட்டு நான் நீங்க வில்லை..

உன்னைவிட்டு நான் நீங்கினால் ..

என்னை விட்டு நீங்கிவிடும் எந்தன் உயிர்

தென்றலுக்கு தெரியும்

வாசனை மீது மலர் கொண்ட நேசம்

கடல் நுரைக்கு தெரியும்

கடல் மீது அலை கொண்ட நேசம்

முகிலுக்கு தெரியும்

மேகம் மீது வானவில் கொண்ட நேசம்

என் கவிதைக்கு தெரியும்

நான் உன் மீது கொண்ட நேசம் - அனால்

உனக்கு மட்டும் என் நேசம் புரியாமல் போனதேன்

என் விழியன் பார்வையில் கலந்தவள் நீ

என் இதயத்தின் துடிப்பில் உறைந்தவள் நீ

என் உடலின் உயிரோடு சேர்ந்தவள் நீ

என் நாடி நரம்புகளில் உணர்ச்சியாய் வந்தவள் நீ

என் சுவாசமாக என்னுள் நுளைபவள் நீ

என் பாதங்கள் செல்லும் பாதையாய் தொடர்பவள் நீ

என் நிழலாக என்னோடு வருபவள் நீ

என் கனவுகளில் காட்சியாக தோன்றுபவள் நீ

என் காலையின் சூரிய உதயமாக உதிப்பவள் நீ

என் உடல் வாழும் உலகமாக சுழல்பவள் நீ

என் வாழ்வில் நீ இல்லாமல் காதலியே நான் இங்கு ஏது

காதலோடு நான் கரை சேரவில்லை

காதலி அவளுடன் சேரவும் இல்லை

காதல் நினைவுகளை நான் பிரிந்ததும் இல்லை

காதல் நினைவின் உறவோடு நான் வாழ்வதும் உண்மை

என்னைவிட்டு சென்றுவிட்டாய் பெண்ணே நீ

என் நெஞ்சை விட்டு செல்லவில்லை காதல்

காதல் என் நெஞ்சை விட்டு செல்லும் நாள்

நான் உன்னை விட்டு செல்லும் நாள் இல்லை

நான் இந்த மண்ணை விட்டு செல்லும் நாள்

பெண்ணே நான் இந்த மண்ணை விட்டு செல்லும் நாள்

உன் இதயத்துக்கு புரியவில்லை

உன் விழிகளில் மலரவில்லை

உன் நினைவுகளுக்கு தெரியவில்லை

உன் உணர்வுகளுக்கு விளக்கவில்லை

உன் நிழல்கள் கூட அறியவில்லை

உன்மேல் இருக்கும் என் காதலை

வானில் இருப்பது வான்மதி

என் இதயத்தில் இருப்பது காதலி

வானைவிட்டு வான்மதி மறைவதில்லை ...

என் இதயத்தை விட்டு காதலி நீ மறைவதும் இல்லை..

வானம் இருக்கும் வரை அந்த வான்மதி வாழ்ந்திடும்

என் காதலி நீ இருக்கும் வரைதான் இந்த இதயமும் வாழ்ந்திடும்

காலம் எத்தனையோ கடந்தாலும்

காதல் தந்த காயம் ஆறுவதில்லை

காயத்தோடு நான் கண்ணீர் வடித்தாலும்

என் காதல் மாறுவதும் இல்லை

நீ என்னை காதல் செய்த வேளை

என் அருகில் நீ இருந்தாய்

நீ பிரிந்து போன பின்பு

என் இதயத்தில் நினைவாக வாழ்கிறாய்

உன்னை மறப்பதற்கு

என் இதயத்தில் வலுமை இல்லை

உன்னை நினைத்து வாழ

என் இதயம் மறுப்பதுமில்லை...

39216119063571102446018.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காதலோடு நான் கரை சேரவில்லை

காதலி அவளுடன் சேரவும் இல்லை

காதல் நினைவுகளை நான் பிரிந்ததும் இல்லைகாதல்

நினைவின் உறவோடு நான் வாழ்வதும் உண்மை...........

........வாழ்க்கை இன்னும் வாழ இருக்கிறது அதையும் வாழ்ந்து தான் பாருங்களேன்

காதல் என்றும் மாறுவதில்லை... ! - மாறினால்,

அது காதலுமில்லை!

காதல் தந்த காயங்கள் அவை...

என்றைக்கும் மாறுவதில்லை!

வீணாக வேண்டாமே வீண்கவலை தோழா!

பட்டவன் கற்ற பாடமிது தோழா!

அறிவுரை சொல்வது உனக்கு பிடிக்குதோ என்னவோ!?

உன் மதியுரைக்கும் வார்த்தைக்கு மதிப்பளி நண்பா!

மீறிப்போய் வீழ்ந்திடாதே வீணாய்!

வாழ்க வளமுடன்!

காதல் என்றும் மாறுவதில்லை... ! - மாறினால்,

அது காதலுமில்லை!

காதல் தந்த காயங்கள் அவை...

என்றைக்கும் மாறுவதில்லை!

வீணாக வேண்டாமே வீண்கவலை தோழா!

பட்டவன் கற்ற பாடமிது தோழா!

அறிவுரை சொல்வது உனக்கு பிடிக்குதோ என்னவோ!?

உன் மதியுரைக்கும் வார்த்தைக்கு மதிப்பளி நண்பா!

மீறிப்போய் வீழ்ந்திடாதே வீணாய்!

வாழ்க வளமுடன்!

:) :) :)1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலோடு நான் கரை சேரவில்லை

காதலி அவளுடன் சேரவும் இல்லை

காதல் நினைவுகளை நான் பிரிந்ததும் இல்லைகாதல்

நினைவின் உறவோடு நான் வாழ்வதும் உண்மை...........

........வாழ்க்கை இன்னும் வாழ இருக்கிறது அதையும் வாழ்ந்து தான் பாருங்களேன்

மிகவும் நன்றி acca

காதல் என்றும் மாறுவதில்லை... ! - மாறினால்,

அது காதலுமில்லை!

காதல் தந்த காயங்கள் அவை...

என்றைக்கும் மாறுவதில்லை!

வீணாக வேண்டாமே வீண்கவலை தோழா!

பட்டவன் கற்ற பாடமிது தோழா!

அறிவுரை சொல்வது உனக்கு பிடிக்குதோ என்னவோ!?

உன் மதியுரைக்கும் வார்த்தைக்கு மதிப்பளி நண்பா!

மீறிப்போய் வீழ்ந்திடாதே வீணாய்!

வாழ்க வளமுடன்!

மிகவும் நன்றி Friend

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சொல்லக் கூடிய ஒரே ஒரு நட்புப் பகிர்வு.... பெண் மீது வைத்துள்ள.. உன் காதலை நேசி.. பெண்ணை நேசிக்காதே.. என்பது தான். இதை ஏத்துக்க மனசு சிரமப்பட்டாலும்.. சிரசு மேல ஏத்திக்க வேண்டிய உண்மை. :)

காதலென்னு.. பொண்ணுங்கள நம்பின பலரும்.. இப்படித்தாப்பா புலம்பிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பெண்களுக்கு மட்டும் ஏன் ஒருத்தனின் ஆழமான காதல் புரிவதில்லை. புரிஞ்சிட்டாலும்.. என்னவாம் செய்திடுவாங்க.. அதிலும் புரியாமலே போகட்டும்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எத்தனையோ கடந்தாலும்

காதல் தந்த காயம் ஆறுவதில்லை

காயத்தோடு நான் கண்ணீர் வடித்தாலும்

என் காதல் மாறுவதும் இல்லை

காதல் தந்த காயம் மாறுவதுஇல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே சொல்லி வைச்சிருக்காங்க.. எவன் கேட்டான். விழுந்து எழும்பித் தான் திருந்துவன் என்றால்.. யாரால தடுக்க முடியும்..! இந்த விசயத்தில அனுபவசாலிகளின் புத்திமதியை அல்லது சுற்றுச் சூழலை அவதானிப்பது.. சேதாரங்களை தவிர்க்கும்.. என்பது நான் கண்ட உண்மை..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்லி என்னத்த செய்து.........

ஒன்று இப்படி அழுகுது :wub:

இன்னொன்று அப்படி அழுகுது........... :(

என்னத்த சொல்லி என்னத்த செய்து......... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு சொல்லக் கூடிய ஒரே ஒரு நட்புப் பகிர்வு.... பெண் மீது வைத்துள்ள.. உன் காதலை நேசி.. பெண்ணை நேசிக்காதே.. என்பது தான். இதை ஏத்துக்க மனசு சிரமப்பட்டாலும்.. சிரசு மேல ஏத்திக்க வேண்டிய உண்மை. :)

காதலென்னு.. பொண்ணுங்கள நம்பின பலரும்.. இப்படித்தாப்பா புலம்பிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பெண்களுக்கு மட்டும் ஏன் ஒருத்தனின் ஆழமான காதல் புரிவதில்லை. புரிஞ்சிட்டாலும்.. என்னவாம் செய்திடுவாங்க.. அதிலும் புரியாமலே போகட்டும்..! :lol::D

நன்றி nedukkalapoovan

காதல் தந்த காயம் மாறுவதுஇல்லை.

நன்றி கறுப்பி

என்னத்த சொல்லி என்னத்த செய்து.........

ஒன்று இப்படி அழுகுது :wub:

இன்னொன்று அப்படி அழுகுது........... :(

என்னத்த சொல்லி என்னத்த செய்து......... :lol:

நன்றி விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கல்கி

  • கருத்துக்கள உறவுகள்

பகீ உங்கள் கவிதையை வாசிக்கும்போது காதல் கவிதை எழுதலாமா என்று தோன்றுகிறது... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்குது அண்ணா :) ஆனால் இதுவும் கடந்துபோகும்.

என்றாவது ஒரு நாள் இந்தகவிதையை மீளப்படித்தால் நீங்களே உங்களை நினைத்துச் சிரிப்பீர்கள். :)

பகீ உங்கள் கவிதையை வாசிக்கும்போது காதல் கவிதை எழுதலாமா என்று தோன்றுகிறது... :)

ஏற்கனவே இயங்கு,முயங்கு,தயங்கு என்று ஒன்றை எழுதிப்போட்டிங்கள்

படிச்ச நாங்கள் படுற அவஸ்தை இருக்கே?????? :lol: :lol: :icon_mrgreen:

மறுபடியுமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?????????????????? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இயங்கு,முயங்கு,தயங்கு என்று ஒன்றை எழுதிப்போட்டிங்கள்

படிச்ச நாங்கள் படுற அவஸ்தை இருக்கே?????? :lol: :lol: :icon_mrgreen:

மறுபடியுமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?????????????????? :lol: :lol:

மக்களே இப்படி எழுதி எழுதியே அருமையான காதல் கவிதைகளின் பிறப்பை முளையிலேயே கிள்ளி எறிகிறீர்கள் நல்லா இல்லே சொல்லிட்டன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னை காதல் செய்த வேளை

என் அருகில் நீ இருந்தாய்

நீ பிரிந்து போன பின்பு

என் இதயத்தில் நினைவாக வாழ்கிறாய்

சட்டென்று அடுத்த கவிதைக்குச் செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே இப்படி எழுதி எழுதியே அருமையான காதல் கவிதைகளின் பிறப்பை முளையிலேயே கிள்ளி எறிகிறீர்கள் நல்லா இல்லே சொல்லிட்டன். :icon_mrgreen:

என்ன அக்கா இப்படி சொல்லிபிட்டீக??????? :rolleyes:

பாருங்க எத்தனை வருசமாச்சு அந்த தலைப்பை மறக்க முடியலையே !

எழுதுங்கோ அக்கா அழுதுங்கோ :D

(கடவுளே என்னை ஏன் இப்ப்டி தமிழ்தெரிஞ்சவனா படைச்சாய்? இதை எல்லாம் வாசிச்சு தொலைக்க வேண்டி இருக்கே?) :lol: :lol: :icon_mrgreen:

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.