Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19-norway1-300.jpeg

டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார்.

அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.

ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது பெருந்தவறு. அதனால் அந்த 2 குழந்தைகளையும் பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு நபர்களிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். குழந்தைகளைப் பிரிந்து அனுருப் தம்பதியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எனது மகன் தனது தந்தையுடன் தூங்குவான். நார்வேயில் அப்படி செய்யக் கூடாதாம். எனது கணவர் தனியாகத் தான் தூங்க வேண்டுமாம் என்று சகாரிகா தெரிவித்தார்.

இந்திய கலாச்சாரப்படி குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுவது வழக்கம். ஆனால் இங்கு கையால் உணவூட்டினால் அது குழந்தையைக் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பதாம் என்று அனுருப் தெரிவி்த்தார்.

அனுருப் தம்பதியினரை அவர்கள் குழந்தைகளைக் கூட பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்லோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த குழந்தைகளை சந்தித்தார்.

இதற்கிடையே வரும் மார்ச் மாதத்துடன் அனுருப்பின் விசா காலம் முடிகிறது. அதற்குள் குழந்தைகள் கிடைக்கவிட்டால் அவர்கள் விசாவை புதுப்பிக்கத் தான் வேண்டும்.

இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க...!

நன்றி வெப் துனியா

Edited by நிலாமதி

இங்கே கனடாவில் சில வெள்ளைகளே கையால் வெழுத்து வாங்குகிறார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது 'domestic case' ஆக இருக்கும்!

சும்மா கையால் குழந்தைக்குச் சாப்பாடு தீத்தினால் கொண்டு போய் விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.

நோர்வே அதிகாரிகளுக்கு, "ஒய் திஸ், கொலை வெறி?" :icon_mrgreen:

020106TA28_prv.gif

  • கருத்துக்கள உறவுகள்

இது மிக மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்

இது மிக மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்

இந்த செய்தி எவ்ளோ தூரம் உண்மையா இருக்கும்?

சரியா தெரியல!

வெள்ளைக்காரனா இருந்தாலும், என்னதான் நோர்வே சட்டத்தை கடைபிடிச்சாலும்.......

அவங்க குழந்தைகளுக்கு ,, பாண்...ப்ரெஞ்ச் ப்ரைஸ் ,,

எல்லாம் கரண்டியாலயா ஊட்ட முடியும்?

பட் கை சுத்தம் பேணப்படுவது நல்லதுதான்! :rolleyes:

Lifebuoy%20pic%202.jpg

http://clovetwo.com/articles/story.asp?file=/2009/5/4/healthnfitness/20090504091601&sec=healthnfitness

கையால உணவூட்டுவதற்கே இந்த தண்டனை என்றால் இரண்டு தடிவைத்து உணவூட்டும் சீனாக்காரனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லா சப்பலில் சாப்பாட்டுக்கடைகளுக்கு வந்தால்

பல வெள்ளைகளை குடும்பம் குடும்பமா தூக்கலாம்..

நாங்கள்தான் அவங்களுக்கு காட்டக்கூடாது என்பதற்காக கத்தி கரண்டியோட சண்டை பிடிக்கிறம்

they received criticism from child welfare authorities that they slept in a bed with the kids

and they fed the kids with their hands. !

இப்போ புரிஞ்சுடுச்சா?

கையால உணவு ஊட்டினதில்ல மேட்டர்!

பிளஸ்..ம்ம்...இந்த சட்ட சிக்கலை விளங்கப்படுத்த& தெளிவா சொல்லணும்னா,, நம்ம நெடுக்கு தான் வரணும் .....

நெடுக்கு ப்ளீஸ் come up on stage!! :)

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட அளவிலான படுக்கையறை

அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இல்லாமல் இருப்பது .

குழந்தைகளுக்கு கால நிலைக்கேற்ற உடைகள் அணிவிக்கத் தவறல்

குழந்தைகளின் பொழுதுபோக்கு , விளையாட்டுப் பொருட்கள் இல்லாமை

குழந்தை தங்கியிருக்கும் வீட்டை சுகாதார முறையில் சுத்தமாக வைத்திருக்காமை

குழந்தைக்கு உணவை அதன் விருப்பமின்றித் திணித்தல்

இன்னும் பல விடயங்கள் மேற்குலகில் பெற்றோர்களின்

முன் இருக்கும் சட்டப்பிரச்சனைகள்

குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட அளவிலான படுக்கையறை

அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இல்லாமல் இருப்பது .

குழந்தைகளுக்கு கால நிலைக்கேற்ற உடைகள் அணிவிக்கத் தவறல்

குழந்தைகளின் பொழுதுபோக்கு , விளையாட்டுப் பொருட்கள் இல்லாமை

குழந்தை தங்கியிருக்கும் வீட்டை சுகாதார முறையில் சுத்தமாக வைத்திருக்காமை

குழந்தைக்கு உணவை அதன் விருப்பமின்றித் திணித்தல்

இன்னும் பல விடயங்கள் மேற்குலகில் பெற்றோர்களின்

முன் இருக்கும் சட்டப்பிரச்சனைகள்

பிள்ளைக்கு வாற சோசல் காசை எடுத்து சீட்டுக்கட்டினால் இந்த வில்லங்கமும் வரும் வாத்தியார் ^_^^_^^_^:icon_idea: .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவீங்களா குழந்தைங் கூட அவங்க அம்மா அப்பா படுத்ததா குற்றம் என்ன கொடுமை இது அறிவிலி சார்..........

அட பாவீங்களா குழந்தைங் கூட அவங்க அம்மா அப்பா படுத்ததா குற்றம் என்ன கொடுமை இது அறிவிலி சார்..........

ஏன் அது குத்தமில்லியா....... படுபாவி சுண்டல்?

அம்மா அப்பா கூட தூங்ககூடாது..............

அப்புடிதானே சொல்லுது சட்டம்!

http://www.familyrelationships.gov.au/BrochuresandPublications/Pages/CIF_brochure_2007.aspx

ஏன் அது குத்தமில்லியா....... படுபாவி சுண்டல்?

அம்மா அப்பா கூட தூங்ககூடாது..............

அப்புடிதானே சொல்லுது சட்டம்!

http://www.familyrel...chure_2007.aspx

அப்புறம் ,,, இந்த திரி இங்கயா சுட்டாங்க.....?

...................> http://boards.straightdope.com/sdmb/showthread.php?p=14691781

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.