Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெ

Featured Replies

பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா

தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

கோபிநாத் (காங்கிரஸ்) (தெலுங்கிலும், கன்னடத்திலும் அவர் பேசியதாவது): தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்: சிறுபான்மை மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்துதான் தமிழ் படிக்க வேண்டும். தமிழ் மொழியை படிப்பவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தாலும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் தான் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் கண்டிப்பாக தெலுங்கு படித்து ஆக வேண்டும். கர்நாடகாவில் கண்டிப்பாக கன்னடம் படித்தாக வேண்டும், கேரளாவில் மலையாளம் படித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் படிப்பதில் எந்த தவறும் இல்லை.

கோபிநாத்: தமிழ் படிக்க மாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை. பல பள்ளிகளில் தமிழை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை.

அமைச்சர் சண்முகம்: கடந்த திமுக ஆட்சியில் அனைவரும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்கான தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவில்லை. அதை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோபிநாத்: தமிழ் மொழியை கட்டாயம் படிக்க செய்வதால் சிறுபான்மை மாணவ- மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனையை தெரிவித்தேன். நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரி அல்ல. எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா: தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் தாய்மொழி எதுவாக இருந்தாலும் கட்டாயம் தமிழ் மொழி படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கர்நாடகத்தில் கன்னடம் படித்தாக வேண்டும், ஆந்திராவில் தெலுங்கு படித்தாக வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டில் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்பதில் எந்த தவறும் அல்ல. இதில் மாற்றமும் இல்லை.

உறுப்பினர் பேசும்போது, தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விவாதத்தின்போது எம்எல்ஏ கோபிநாத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலும், கன்னடத்திலும் பதில் தந்தார்.

http://www.alaikal.com/news/?p=95759

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்குத்துக்கள் என்னெண்டு தெரியேல்லை......ஆனால் மொழி கட்டாயம் படிக்கோணுமெண்டது நல்லவிசயம்.

  • தொடங்கியவர்

விவாதத்தின்போது எம்எல்ஏ கோபிநாத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலும், கன்னடத்திலும் பதில் தந்தார்.

சட்டசபையிலும் கட்டாயம் தமிழில் மட்டுமே இல்லை ஆங்கிலத்தில் கதைக்கவேண்டும் என சட்டம் கொண்டுவரவேண்டும்.

முதலில் தமிழ் நாட்டு எல்லா பாடசாலைகளிலும்(தனியார் உள்ளடங்கலாக) கட்டயாமாக தமிழ் படிப்பிக்க வேண்டும். தமிழ் பாடநேரம் ஆங்கிலச் சொற்களைப்பாவிக்கும் மாணவர்களுக்கு தடவைக்கு 5சதம் அபராதம் விதிக்கலாம்.

ஆங்கிலத்தை கொச்சையாக வலிந்து செருகும் திரைத் தாயாரிப்புகளுக்கு மேலதிக வரி அறவிடவேண்டும். (முறையான ஆங்கிலத்தாயாரிப்புகளுக்கு அப்படி இருக்க கூடாது).

தனி ஆங்கில விளம்பரப்பலகைகளுக்கு தண்ட பணம் அறவிட வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழுணர்வு மீண்டும் துளிர்ப்பதை உணரக் கூடியதாக உள்ளது.

இது புரட்சிகரத் தமிழர்களுக்கும், தமிழ் பைத்தியங்களுக்கும் கசப்பாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.

நம் யாழ் களத்திலும் பிற மொழி பாவனைக்கு ஒரு '144 - தடை' போடுங்கப்பு... :D

ரூ மச் ரென்சன்!..ரென்சன்..!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி, ஹிந்தி மூலம் தமிழ் படித்ததால்.... தமிழ்நாட்டுக்கு வந்த வினை.

ஜெயலலிதா அம்மையாரின், இந்தச் சட்டத்தை வரவேற்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

உள்குத்துக்கள் என்னெண்டு தெரியேல்லை......ஆனால் மொழி கட்டாயம் படிக்கோணுமெண்டது நல்லவிசயம்.

உங்களை மீண்டும் பார்த்தது சந்தோசம்.

வைத்தியசாலை செல்வதால் காணாமல் போகிறேன் என்று ஒரு தலைப்பை போட்டுவிட்டு போய் இருந்தீர்கள். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே உங்களை இன்னும் காணவில்லை என்று முன்பொருநாள் எண்ணியிருந்தேன். எல்லாம் நன்றாக முடிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.

நம் யாழ் களத்திலும் பிற மொழி பாவனைக்கு ஒரு '144 - தடை' போடுங்கப்பு... :D

ரூ மச் ரென்சன்!..ரென்சன்..!! :icon_idea:

10 சிவப்பு உங்களுக்கு குத்தப்படுகிறது. :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது புரட்சிகரத் தமிழர்களுக்கும், தமிழ் பைத்தியங்களுக்கும் கசப்பாக இருக்கலாம்!

இனிமே எக்கலாஸ் தேவையில்லை... அப்படியே அந்த கசப்பை திரவபடுத்தி வயலுக்கு தெளித்து விடுவேன் நான் .. அனைத்து வயலில் அனைத்து கிருமிகளும் செத்து போகும் ... போக பூச்சி மருந்து (கிருமி நாசினி ) வாங்குற செலவு மிச்சம்..

laughing-smiley.gif?w=490laughing-smiley.gif?w=490

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

தமிழ் நாட்டிலை தமிழை கட்டாயப் படுத்த சட்டம் வேண்டியுள்ளது....

அப்பிடிக் கிடக்குது நிலைமை.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலை தமிழை கட்டாயப் படுத்த சட்டம் வேண்டியுள்ளது....

அப்பிடிக் கிடக்குது நிலைமை.

வந்தாரை... வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லியே... தமிழன்னை தனது தலையில்... மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாள்.

அரசியலுக்கும், சினிமாவுக்கும் அயல் மாநிலத்தவர் தான்... தேவை என்றால், இதுதான் நிலை.

Edited by தமிழ் சிறி

எந்த மொழி காரன் என்றாலும் எந்தா நாட்டு காரன் என்றாலும் அந்த மாநிலங்களில் அந்த நாடுகளில் அந்தஅந்த மொழிய படிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழி காரன் என்றாலும் எந்தா நாட்டு காரன் என்றாலும் அந்த மாநிலங்களில் அந்த நாடுகளில் அந்தஅந்த மொழிய படிக்க வேண்டும்

இது தமிழ் நாட்டில், விதி விலக்கு.

இதனை யாராவது உணர்வுள்ள தமிழன் தட்டிக் கேட்டால்.... நீதிமன்றப் படியேறி, ஒரு பரதேசி வழக்கு தொடரும்.

பின்பு... இந்திய சனநாயகம் தமிழனுக்கே... ஆப்பு வைக்கும்.

இவ்வளவுக்கும்.. தமிழனை அழிக்க கொடுத்த முக்கிய இடம்... கருணாநிதிக்கே சாரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழை வெறுக்கும் அல்லது ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைப்போரை கனடாவின் கியூபெக் மாநிலத்தை பார்த்து விட்டு வரச் சொல்ல வேண்டும். கியூபெக் காரர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள். தங்கள் மொழி மேல் கடும் பற்று கொண்டவர்கள். மருந்துக்கு கூட ஆங்கிலத்தை கலக்க மாட்டார்கள். ரோட் சைன் பலகைகளிலிருந்து அத்தனையும் பிரெஞ்சில் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.