Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தின் நீடித்த நன்மைக்காக..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் கடந்த சில வாரங்களாக கருத்துக் கொதிநிலையில் இருப்பதோடு.. அதன் மீதும் அதன் நிர்வாக அலகு மீதும் நிர்வாகத்தின் அறிவிப்புக்களின் படி.. சீர்குலைவு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சிலர் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர்.

அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்புக்களில் இருந்தும்.. அத் தலைப்புக்களுக்குரியவர்களிடம் இருந்தும்.. அநாகரிக கருத்துப் பகிர்வாளர்களிடம் இருந்தும் முற்றாக விலகி இருக்க முடிவு செய்துள்ளோம்.

கடந்த காலங்களில் இவர்களின் தலைப்புக்களுக்கும் கருத்துக்களுக்கும் பதில் அளிக்கப் போய் அதன் மூலம் களத்துக்கு... கள நிர்வாகத்திற்கும்.. கள உறவுகளுக்கு இடைஞ்சல் அல்லது மனக் கஸ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு எமது வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம்.

யாழை தொடர்ந்து சீராகவும் அதன் இலட்சிய இருப்போடும் இயங்க வைக்க எம்மாலான எமக்கு சக்தி உட்பட்ட உதவிகளை தொடர்ந்து நல்குவோம்..!

அதுமட்டுமன்றி எம்மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்க விரும்புவர்கள்.. அதனை யாழ் களத்தில் செய்ய எனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் எமது குற்றச்சாட்டுக்களை எமது வலைப்பூக்களில் தெரிவித்தால்.. அவர்களுக்கே உரிய வகையில் அவர்கள் பாணியில்.. பதில் அளிக்கப்படும். அந்த வகையில் எதிர்காலத்தில் எம்மீதான அவதூறுகள்.. சேறடிப்புக்கள் யாழில் நிகழாதிருப்பதை..கள நிர்வாகம் உறுதி செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இதனை எழுதக் காரணம்.. சிலர் எந்தப் பிரச்சனைக்கும் எம்மீது குற்றம் காணும் ஒரு வகை மனப் பேதலிப்போடு இங்கு இருப்பதனாலும் அதற்கு ஏற்ப கருத்துப் பகிர்ந்து கொள்வதனாலும்.. நாமும் அவற்றிற்கு பதில் அளிக்கத் தூண்டப்பட்டு.. அது பிரச்சனைகளாக உருவெடுப்பதனால் தான். இதனை நாம் யாழ் களத்துக்கான, எமக்கான ஆரோக்கியமான நிலைப்பாடாக, உபயோகமான நிலையாக உணர முடியவில்லை. இந்த நிலையைப் போக்கவே இந்த கருத்தைப் பகிரங்கமாக எல்லோரோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.

எம்மோடு என்றும் கருத்துக்கள உறவுகளாக புரிந்துணர்வோடு நல்லுறவு பேணி வரும் கள உறவுகளோடு.. எம் உறவாடல் தொடரும். நிர்வாகத்திற்கும் இடைஞ்சல் தராத கருத்துப் பகிர்வை மட்டுமே எதிர்காலத்தில் மேற்கொள்வோம். எமது கருத்துக்கள் எவையும் மேற்படி.. அறிவிப்பை மீறிய நிலையில் காணப்படின் நிர்வாகம் அவற்றை தன் சொந்த விருப்பப்படி அகற்றலாம். எமக்கு எச்சரிக்கையும் ஏன் தடையும் விதிக்கலாம்.

நன்றி.

(இறுதித் திருத்தம் GMT 09:25 27ம் நாள் பங்குனித் திங்கள் 2012)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முடிவு நெடுக்கு, எமக்கு யாழ் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் செய்ய வேண்டிய எத்தனையோ...... வேலைதிட்டங்கள் இருக்க, கடந்த இரு கிழமையாய், அக்கப் போர் செய்யவே... வீண் பொழுது போய் விட்டது.

நெடுக்சின் முடிவை வர வேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பார்த்தப்பா

வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு கை கட்டி நிற்கவேண்டி வரலாம். இதை வைத்தே தாக்குதல் அதிகரிக்கலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

உள் வீட்டுச் சண்டைகள், வாசற்படி தாண்டக்கூடாது என்பதற்காக, ஏக்கத்தில் பிறந்த எனது, கவிதைக் கிறுக்கலை இங்கே இணைக்கிறேன், நெடுக்கர்!

களம் வாழட்டும்!

தாங்க முடியாத இழப்புக்கள்,

தொடர்கதையாய் நீள்கையில்,

இதயங்கள் மரத்துப் போகின்றன!

அபலைகளின் அழுகுரலும்,

அநாதைகளின் ஆகாயம் வெறித்த,

அர்த்தமிழந்த பார்வைகளும்,

அவர்களின் விதியாகி விடுகின்றது!

விதவைகளின் பெருமூச்சுக்கள்,

வெறும் மூச்சுக் காற்றாகி.

வெம்மையிழந்து போய் விட்டது!

எங்கள் கரங்கள் இரண்டையும்,

இறுகக் கட்டிக் கொண்டிருக்கிறோம்!

கங்கை கொண்டு சோழனின் வரலாறில்,

பொங்கிப் பூரித்துப் போகின்றோம்!

எங்கோ தொலைந்து போயின,

எங்கள் உயர்ந்த இலட்சியங்கள்!

புலம் பெயர்ந்த தேசமெல்லாம்,

புதிது, புதிதாகக் கோவில்கள்!

பேரரசன் ராசராசன் கூடத் தான்,

ஊரெல்லாம் கோவில் கட்டினான்!

சிந்திப்போம் உறவுகளே!

சந்தி சிரிக்க நிற்கின்றோம்!

சிறகுகள் வெட்டப் பட்ட,

பறவைகளின் நிர்வாணமாய்,

வெறுமை மட்டும் மிஞ்சுகிறது!

ஆணவம் தலைக்கேறுகிறது,

அறிவு விடை பெறுகின்றது!

ஆண்டாண்டு காலங்களாய்,

அரும்பாட்டுடன் வளர்த்த களம்,

குறையுயிரில் துடிக்கின்றது!

கொஞ்சமாவது சிந்திப்போம்!

கெஞ்சுகிறேன் என் சொந்தங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முடிவு வரவேற்கிறேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பார்த்தப்பா

வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு கை கட்டி நிற்கவேண்டி வரலாம். இதை வைத்தே தாக்குதல் அதிகரிக்கலாம். :(

இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர்.

அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்புக்களில் இருந்தும்.. அத் தலைப்புக்களுக்குரியவர்களிடம் இருந்தும்.. அநாகரிக கருத்துப் பகிர்வாளர்களிடம் இருந்தும் முற்றாக விலகி இருக்க முடிவு செய்துள்ளோம்.

விசுகு அண்ணா.. மேலே ஓரளவு தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். எவ்வெவ் தலைப்புகளில் கருத்துக்களில் இருந்து விலகி இருப்போம் என்று.

எமது இனத்தின் மொழி.. வரலாறு... போராட்டம்.. தாயகம்..தேசியம் சார்ந்து வரும் விசமங்களை இட்டுக்கட்டுகைகளை ஆதாரங்களோடு.. கேள்விகளோடு.. எதிர்கொள்வதில் இருந்து இத்தலைப்பு தடுக்காது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் முடிவை வரவேற்கிறேன்..! :rolleyes: வெறும் அலம்பல் (மொக்கை) கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லது.. :D

இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர்.

நெடுக்ஸ், உங்கள் கருத்து வரவேற்கப் படவேண்டியதே.

யாழ் களம் மட்டுமல்ல, எம்மினத்தின் விடிவுக்காகவும் நாங்கள் கடமைகள் செய்யவேண்டி உள்ளது.

என்றாலும், மேலே குறிப்பிட்ட சாடுதல், சற்று அதிகம் என்பதே என் கருத்து.

யாரை குறிப்பிட்டு கூறுகிறீர்கள் என்று தெரியாது, தெரியவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

ஒரு நாள் தனியார் நிறுவனத்தில் நிறுவனத்தில் வெளிசெய்து கொண்டிருந்தேன். பத்து மணிக்கு கீழே, முதலாவது மாடிக்கு, வரச்சொன்னது நிர்வாகம். உங்கள் வேலை இந்த நிமிடத்துடன் நிறுத்தப்பட்டது, உங்கள் உடமைகளை இந்த காவலாளியுடன் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.

அவசரமாக நூறில் போகவேண்டிய பெருந்தெருவில் நூற்றி ஐம்பதில் போனபொழுது காவல்துறை நிறுத்தி அபராதமும் விதித்து புள்ளிகளையும் பறித்துவிட்டது. கதைக்க வாயே திறக்க விடவில்லை.

இங்குள்ள மிகப்பெரிய பத்திரிகையான 'குளோப் அண்ட் மெயிலில்' ஒரு சிங்களம் சார்ந்தவுடன் ஏற்பட்ட சூடான வாதத்தில் மட்டுறத்தினர் தூக்கிவிட்டார். அப்பீல் பண்ணவோ நியாயத்தை கேட்கவோ வழியில்லை, நானில்லை ஆனால் 'குளோப் அண்ட் மெயில்' உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கவலையெல்லாம் யாழ்கள மட்டுறுத்துனர்கள் எங்கே பயந்துகொண்டு உறுதியான முடிவுகளை எடுக்கமுடியாத தன்மைக்குப் போய்விடுவார்களோ என்பதுதான்..! :D

அதேபோல மட்டுறுத்திய பின்னால் வரும் மிரட்டல் கோரிக்கைகளுக்குப் பயந்து விளக்கங்கள் கொடுப்பதையும் தவிர்த்தல் வேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் முடிவு நல்லது என நினைக்கிறேன். பொது இடத்தில் நாகரீகமாக உரையாடக் கூடத் தெரியாமல் தங்களை "படைப்பாளிகள்" என்று அழைத்துக் கொள்வோரின் "படையல்" களின் பக்கம் இனி என்னையும் காணமாட்டீர்கள். இப்படியான போலிகளை எங்கள் கருத்துகளால் நாம் ஊக்குவிக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம்.

ஒரு சமூகக் கருத்துக்களத்தில் நாகரீகம் தெரியாமல் இடப்படும் சில்லறைத்தனமான பதிவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது, உங்கள் முடிவை வரவேற்கிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.