செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள் சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாத்து வந்த பெண் நாய் கருவுற்றதை தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்தி நெகிழச் செய்து உள்ளனர் மதுப்பிரியர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசல…
-
- 8 replies
- 893 views
-
-
இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இவ் விமானம் நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் பிரேக் பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர். இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது. காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ…
-
- 8 replies
- 563 views
-
-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் வி…
-
-
- 8 replies
- 623 views
-
-
கொழும்பு சிங்கள பத்திரிகையில் வந்த செய்தி ... .... சிங்கள மகிந்த ராஜபகச, இதுவரை காலமும் சிங்களத்தின் ஏவலில் இனவழிப்புக்கு துணை போன அத்தியடிக்குத்தி டக்லஸை கழட்டி விட்டு, வித்தியாதரன்(உதயன் முன்னால் ஆசிரியர்) வடமாகாண முதல்வராக்க முனைவதாக ...!!!!!!!!?????????
-
- 8 replies
- 1.7k views
-
-
சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை! புதன்கிழமை, நவம்பர் 14, 2007 தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர். இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி …
-
- 8 replies
- 1.9k views
-
-
கணவர் உடல் மீது... விழுந்து, மனைவி உயிர் விட்டார். பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார். 70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சர…
-
- 8 replies
- 1.1k views
-
-
மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்! கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் எந்தவித அறிவிப்பும் இன்றி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2023/1323548
-
- 8 replies
- 888 views
-
-
சாவகச்சேரியில் வீடொன்றினை தரைமட்டமாக்க முயன்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது! யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது, காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் வீட்டினை இடித்தழிக்க பயன்படுத்திய JCB வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் உள்ள ஆட்கள் அற்ற வீட்டினை சுற்றி கம்பி தூண்கள் நடப்பட்டு முட்கம்பி வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. அந்த காணிக்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை JCB இயந்திரம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதனுடன் சென்ற பெண்ணொருவர் , வேலிகளை JCB இயந்திரத்த…
-
- 8 replies
- 918 views
-
-
4-12-05 12:47:51 அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 12 இறாத்தல் (5.44 கிலோகிராம்) எடையுள்ள சிங்கி இறால் ஒன்றை பிடித்துள்ளார். பொரெஸ்ட் கலண்ட்டே எனும் இந்த இளைஞர் கலிபோர்னியா மாநில கரையோரத்தில் இந்த சிங்கி இறாலை பிடித்தாக தெரிவித்துள்ளார். இந்த சிங்கி இறால் சுமார் 70 வருட வயதுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உயிரியலாளரான பொரெஸ்ட் கலண்டே இது குறித்து கூறுகையில், கடந்த பல 10 வருடங்களாக இத்தகைய சிங்கி இறால்களை பிடித்துள்ளேன். ஆனால் இந்தளவு பெரிய சிங்கி இறாலை ஒருபோதும் கண்டதில்லை" எனத் தெரிவித்துள்ளார். இப் பாரிய சிங்கி இறாலை பிடித்தவுடன் அதை சமைத்து உண்பதா வேண்டாமா என யோசனை ஏற்பட்டது. இது குறித்து த…
-
- 8 replies
- 1.1k views
-
-
பாடசாலைக்கு செல்ல மறுத்த தனது 7 வயது மகளை மரத்தில் கட்டி வைத்து முசுறுகளை அவர் மீது கொட்டிய 29 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சிறுமியை தடியொன்றினால் அடித்த அடையாளங்களும் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108594-2014-04-29-07-56-22.html
-
- 8 replies
- 726 views
-
-
40 அடி சுவரின் மேல் செக்ஸ்: தவறி விழுந்த ஜோடி பலி. லண்டன்: பிரான்ஸை சேர்ந்த ஜோடி ஒன்று வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை ஒன்றின் சுற்றுச்சுவரில் உறவு வைக்கையில் தவறி விழுந்து பலியாகியுள்ளது. பிரான்ஸில் உள்ள நார்மன்டி பகுதியைச் சேர்ந்த 30களில் இருக்கும் ஆண் மற்றும் பெண் சேர்ந்து இங்கிலீஷ் சானலில் உள்ள சாசி தீவில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வாபான் போர்ட்ஸ் அரண்மனைக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அரண்மனையின் சுற்றுச்சுவரில் ஏறி அமர்ந்துள்ளனர். சுவரின் மீது அவர்கள் உறவு வைத்துள்ளனர். அப்போது அங்கிருந்து தவறி விழுந்துள்ளனர். 40 அடி உயர சுவரில் இருந்து தவறி அகழியில் விழுந்தனர். இதில் அந்த ஆண் மற்றும் பெண் பலியாகினர். வியாழக்கிழமை காலை அகழியில் ஒரு ஆணும்…
-
- 8 replies
- 2.5k views
- 1 follower
-
-
விமானப் பயணத்தின் நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத…
-
- 8 replies
- 1.1k views
-
-
வேலன்டைன்ஸ் டே ... உங்களுக்கு ஒன்று தெரியுமா? "வேலன்டைன்ஸ் டே" Valentines Day உலகில் பெப்ரவரி மாதம் வரும் காதலர் தினமானது ஒரு பண்டிகை போன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளில் காதலர்கள் தங்களது அன்பு, பரிசுகள், இனிப்புகள் மற்றும் இது போன்று இன்னும் பலவற்றை பகிர்ந்து கொள்வார்கள். இப்படி காதலர் தினம் சிறப்பதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறே உண்டு.. தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடிக்க ஆடிய கூத்துக்கள் பற்றி படித்திருப்பீர்கள்தானே..? வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் உலகத்திற்கு காட்டினான். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது சற்…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்! சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார். ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார். ஐஸ்கிறீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் பருமன் குறித்து கேலி செய்ததால் அந்த பெண் ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னோக்…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
பெங்களுரை சேர்த்த தமிழ் பெண் சிந்துஜா தனது பெற்றோருக்கு போட்டியாக மாப்பிள்ளை தேடி விளம்பரம் போட்டுள்ளார். சிந்துஜா: நான் ஒரு முட்டைபிரியர் ஆனல் சாப்பாட்டு ராமன் கிடையாது. பிடிச்ச விளையாட்டு பேட்மிண்டன் பொழுதுபோக்கு: பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது. கண்ணாடி போடுவேன். அதில் பார்த்தால் சுத்த கர்நாடகமாக தெரிவேன். காசு செலவழிக்கிற விஷயத்தில் ஊதாரியும் கிடையாது, கசவஞ்சியும் கிடையாது. மசாலா, நாடகம் சுத்தமா பிடிக்காது. வாசிப்பு பழக்கம் கிடையாது. நட்புடன் பழகுவேன் ஆனால் நண்பர்கள் இரண்டாம் பட்சம்தான். மென்மையான பெண் எல்லாம் கிடையாது. தலை முடி நீளமாக வளர்க்க மாட்டேன். மொத்தத்தில் கல்யாண வாழ்க்கைக்கு உகந்த சமாச்சாரம் இல்ல. அர்ப்பணிப்பான நீண்டகால வாழ்வுக்கு என் முழு உத்தரவாதம். எப்பட…
-
- 8 replies
- 871 views
-
-
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்தால், 10 ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன்,'' என, அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்திருந்த சர்ச்சையில் சிக்கியுள்ள, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த, உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அமெரிக்க கருவூல கடன் பத்திரங்கள் குறித்து, சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நேற்று முன்தினம், 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னிடமிருந்த தங்க கடன் பத்திரங்களை, பிரேசிலில் உள்ள, நண்பர் டேனியலிடம் …
-
- 8 replies
- 1.3k views
-
-
சங்காவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை - யாழ். பல்கலைக்கழகம் 19 Sep, 2022 | 04:32 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்படுவதற்காக துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் திங்கட்கிழமை சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப…
-
- 8 replies
- 853 views
-
-
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த தாயாரை கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன…
-
- 8 replies
- 852 views
-
-
ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள் பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர். இருவரும் 1940ன் கடைசிகளிலும் 1950ன் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். காதலர்களாக இருந்த போது தங்கள் திருமணம், எதிர்காலம், தங்களிற்கு பிறக்கும் குழந்தைகளிற்கு என்ன பெயர்கள் வைப்பது என்பனவற்றை எல்லாம் குறித்து கலந்துரையாடினர். இருவரதும் சொந்த ஊர் ஒட்டாவா. ஆனால் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோர்ஜ் கிரான்டிற்கு ஓக்வில், ஒன்ராறியோவில் வேலை கிடைக்க ஒர் ஒட்டாவாவில் தங்கிவிட்டார். இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்று திருமணமும் செய்து குடும்பஸ்தர்களாகினர். …
-
- 8 replies
- 725 views
-
-
-
- 8 replies
- 872 views
- 2 followers
-
-
படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவ…
-
-
- 8 replies
- 769 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு(Prabhakaran) பலமாக இருந்த கருணாவை உடைத்ததற்கு ரணில்(ranil) தான் காரணம் என்பதை அறிந்த பிரபாகரன் 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு முடிவு செய்தார் என தென்னிலங்கை கட்டுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளமை வருமாறு, 2002ஆம் ஆண்டு கருணாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பியது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு. கருணா தாய்லாந்துக்கு(thailand) சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற போது இரண்டு பேரை வைத்து அவரை சிக்க வைத்தார் ரணில். கருணாவை பிரித்த ரணில் ஒருவர் அப்போதைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிப்பாளராக இருந்த காமினி அபேரத்ன(Gamini Abeyratn…
-
-
- 8 replies
- 496 views
- 2 followers
-
-
2ஆம் இணைப்பு:- கெஹலியவின் இருகால்கள் முறிந்து தலையில் பலத்த காயம்:- அவுஸ்ரேலியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து வீழ்ந்து கடுமையான காயங்களுக்கு உள்ளாகழியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் கடுமையான மது போதையில் இருந்ததாகவும் ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் கால்கள் இரண்டும் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கால்களில் சத்திரசிகி;ச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவரது தலையிலும் பலத்த அட…
-
- 8 replies
- 1.1k views
-
-
70 வயது தென் ஆப்பிரிக்க அதிபருக்கு அடுத்த வாரம் 6வது கல்யாணம்..! ஜோஹன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகி விட்டார். இது அவருக்கு 6வது கல்யாணம். போன வாரம்தான் தனது 70வது பிறந்த நாளை தனது மனைவிகள் புடை சூழ கொண்டாடினார் ஜூமா. அவருக்கு ஏற்கனவே நடந்துள்ள 5 கல்யாணங்கள் மூலம் 21 குழந்தைகள் உள்ளன. தற்போது 6வது முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் ஜூமா. அவரது மனைவியாகப் போகிறவர் போங்கி நெகமா. இருவரும் ஏற்கனவே சேர்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமாக போங்கியை மணக்கப் போகிறார் ஜூமா. தென் ஆப்பிரிக்காவின் ஜூலு கலாச்சாரப்படி ஒருவர் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கலக்கியுள்ளார். ஆணைப் பெண் கல்யாணம் செய்வது, பெண்ணை ஆண் கல்யாணம் செய்வது, பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் கல்யாணம் செய்வது எல்லாம் பழைய பேஷன். அதை முறியடித்து தன்னைத் தானே திருமணம் செய்து அசத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். தான் 40 வயதைத் தொடுவதற்குள் தனக்கேற்ற ஜோடியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், தன்னைத் தானே மணந்து கொள்வதாக இவர் ஏற்கனவே சவால் விட்டிருந்தார். அதன்படி இவரது 40வது பிறந்த நாள் வந்தபோது தன்னைத் தானே மணந்து கொண்டுள்ளார். Read more at: http://tamil.oneindia.com/news/international/houston-woman-marries-herself-elaborate-ceremony-220363.html
-
- 8 replies
- 862 views
-