Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி தடிவி ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்ட…

  2. Started by arjun,

    சனிக்கிழமை காலை பத்துமணிஇருக்கும் தொலைபேசி அடிக்கின்றது. வேலை இடத்து தொலைபேசி இலக்கம் தொலைபேசியில் மின்னுகின்றது.வேலை சற்று பிசி எனவே வாரவிடுமுறைக்கு ஓவர்டைம் செய்ய வருவதாக மனேஜரிடம் சொல்லிஇருந்தேன் .சனி காலை நித்திரையால் எழும்ப கொஞ்சம் பஞ்சியாக இருந்தது, மனைவி தானும் சனிகாலை சொப்பிங் செல்ல வருவதாக நண்பிக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டதாக சொன்னார் .இனியென்ன மெல்ல கட் அடிப்பம் என்று சின்ன மகனுடன் கட்டிபிடித்துக்கொண்டு தூங்கிவிட்டேன். இப்ப மனேஜர் போன் அடிக்கின்றான் என்ன பொய்யை சொல்வம் என்று நினைத்தபடியே ரிசீவரை எடுக்கின்றேன் “Hi Perry, Darrell here . ஏன் இன்று வேலைக்கு வரவில்லை ,செய்தி கேள்விப்பட்டாயா” என்கின்றான் . “நான் மனேஜர் பிரையன் என்று நினைத்து பயந்துவி…

  3. கனடாக் கனகத்துக்கு கந்தர்மடக் கனகம் எழுதின கடிதம். பட்சமுள்ள கனகத்திற்கு! பாசத்துடன் கனகமக்கா எழுதிக் கொள்வது. நான் நலம் அதுபோல் நீயும் குடும்பமும் நல்லாயிருக்க நல்லூர்க் கந்தன் துணையிருப்பார். உன்ரை கடிதம் கிடைச்சது. என்னடா இவள் மறந்து போனாளோ எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். அட அப்படியே சீமைக்குப் போனதும் மறக்கிற மாதிரியே நாங்கள் பழகினனாங்கள். என்ரை கலியாண வீட்டுக்கு ஒரு கிழமைக்கு முதலே நீ சுன்னாகத்திலை இருந்து வந்து நிண்டு ஒவ்வொரு பலகாரமாச் சுட்டு வன்னமா அடிக்கி வைச்சது இண்டைக்கு மாதிரி கண்ணுக்குள்ளை நிக்குது. என்ன செய்யீறது ஒண்டுக்குள்ளை ஒண்டாப் பழகின எங்களைக் காலம் இப்படித் திக்குக்கு ஒராளா பிரிச்சுப் போட்டிட்டது, என்ன செய்யிறது எல்லாம் அவன் விட்ட வழி எண்ட…

    • 13 replies
    • 1.4k views
  4. புலம்பெயர்ந்த சொந்தங்கள் எல்லாருக்கும் வணக்கம்… இப்ப இந்தக் கண்டறியாத கொம்பியுட்டர் வந்த பீறகு எல்லாரும் பேஸ்புக், ருவிற்றர், ஈமெயில் எண்டு அலையிறதிலை ஆற அமர இருந்து ஒரு கடிதத்தை எழுதி எவ்வளவு காலமாப் போச்சுது. பிள்ளையளின்ரை கொப்பீயிலை நடுத்தாளைக் கிழிச்சு ஒரு மூலையிலை குந்தியிருந்து யோசிச்சு யோசிச்சு எழுதி என்வலப்பக்குள்ளை வைச்சு என்னதான் கம் பூசியிருந்தாலும் ஆவெண்டு அண்டா வாயைத் திறந்து நாக்காலை ஈரமாக்கி ஒட்டி பிறகு முத்திரையிலையும் இன்னொருக்கா நாக்கை நீட்டித் துப்பலைப் பூசி ஒட்டி தவால் பெட்டிக்குள்ளை போட்டிட்டு வாற சந்தோசமிருக்கே.! அது ஒரு தனிச் சந்தோசம் தான். அதே மாதிரித் தான் தவால்காரன் வந்து பெல்லடிச்ச உடனை ஓடிப் போய் காயிதத்தை வாங்கிக் கொண்டு வந்து ஒரு …

  5. Started by arjun,

    ஏதேதோ நினைவுகள் வந்து மனதை தொடர்ந்தும் குழப்ப நித்திரை கொள்ளமுடியாமல் படுக்கையை விட்டு எழும்பி படிகளில் இறங்கி வீட்டின் சிற்றிங் ரூமிற்கு வருகின்றேன் .அக்காவின் மகன் எனக்கு முதலே எழும்பிவந்து தொலைகாட்சியில் சத்தத்தை குறைத்து வைத்து Sesame Street பார்த்துக்கொண்டு இருந்தவன் என்னை கண்டதும் சத்தம் போடவேண்டாம் என்று வாயில் விரலை வைத்து சிக்னல் போடுகின்றான் .அப்படியே அவனை தூக்கி மடியில் வைத்தபடி நானும் Elmo ,Cookie Monster களின் விளையாட்டுகளை ரசித்தபடி அவனுடன் சேர்ந்து Sesame Street பார்க்க தொடங்குகின்றேன் . இந்தியாவால் லண்டன் வந்து சேர்ந்து இருமாதங்கள் ஆகின்றது .அக்கா வீடுதான் வாசம் .அத்தானும் அக்காவும் வாரநாட்களில் வேலை என்று அலைவதால் வாரவிடுமுறையில் பிந்தித்தான் எழு…

    • 24 replies
    • 2.5k views
  6. 2012 இல் எழுதப்பட்ட பயணக்கட்டுரைத் தொடர் 12 பகுதிகள் சிதறிய முத்துக்களாக இருந்த தொடரை ஒன்றாக இணைத்து இலகுவாக வாசிக்கவும் எழுதப்பட்ட கட்டுரை வடிவத்தை பாதுகாக்கவும் மீள்பதிவாக்கியுள்ளேன். வாசித்துப்பார்க்காத நண்பர்கள் இலகுவாக முழுவதையும் வாசிக்கக்கூடியவகையில்.......இந்த மீள்பதிவு...... பயணங்கள் முடிவதில்லை - 1 (Punta cana) காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்…

  7. தாயகத்தின் மீது பெரிதாக பற்றில்லை சாதாரண தமிழருக்கள்ள விருப்பம் மட்டுமே. ஊருக்கு போகணும் வன்னியில் தங்கணும் என்றதமே எச்சரித்தேன். ஏன் இந்த விபரீத விளையாட்டு அங்கு நடப்பவைகளை கேள்விப்படவில்லையா? என்னவும் நடக்கலாம் எதையும் செய்யக்கூடிய நிலை. அப்படியெல்லாம் கிடையாது இது உங்களைப்போன்றவர்கள் பரப்பும் கதை. நான் போய் ஒரு மாதம் நின்று வந்து சொல்கின்றேனே..... நேற்று வந்து சேர்ந்தார் எப்படி இருக்கு வன்னி? இது நான். நீங்கள் சொன்னதைவிட பயங்கரம் மாலை 5 மணிக்கே கதவைப்பூட்டிவிட்டு படுத்து விடுகிறார்கள் நன்றாக விடிந்து குரல்கள் கேட்கும்வரை வெளியில் வருவதில்லை....... அவசர தேவைகளுக்குமா??? ஒரு சட்டியை வீட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள் அவசரமா…

  8. பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன…

  9. கணிதப்பாடத்தில் ஒரு சந்தேகம் தீர்க்கக் கேட்டுவந்தாள் சங்கீதா, யாரையுமே ஏறிட்டுப் பார்க்காத அழகுத் திமிரோடு, அவள் அறிவுத் திமிரும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஆனாலும் கணிதத்தில் வேங்கைப் புலியான சங்கரனிடம் சந்தேகம் கேட்கும்போது மட்டும், கிளிபோலக் கொஞ்சுவாள். சங்கரனுக்கும் தான் அழகன் என்ற திமிர் உண்டு. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்காத திமிர். ஆனாலும்! சங்கீதாவிடம் மட்டும் அந்தத் திமிர் மோதமுடியாது வழிந்து நிற்கும். அதற்குக் காரணம் என்னவோ..? இருவருக்கும் ஒன்றாக அமைந்த அந்தக் குணாதிசயம்தான் காரணமோ..? ஆமாம்! எதிலும் அவசரமின்றி ஆறுதலாகக் கணக்கிட்டுக், காலையில் நித்திரையால் எழும் நேரம், படிக்கும் நேரம், குளிக்கும் நேரம். உணவு உட்கொள்ளும் நேரம். இன்ன உடைதான் இன்று என்று நேற்…

  10. பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார். சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்... அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண…

    • 15 replies
    • 1.5k views
  11. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்…

      • Haha
      • Thanks
      • Like
    • 6 replies
    • 414 views
  12. எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை வீதி செல்கிறது. அப்பாதையில் தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை. இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு. எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தான…

  13. என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ...... என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்ட…

  14. சாதாரண தரவகுப்பு நான் ஒரு பிரிவு (வகுப்பு) அவனும் அவளும் இன்னொரு பிரிவு(வகுப்பு).... மூவரும் முதல்வரிசை மாணவர்கள் படிப்பு பற்றியே அதிகம் பேசினாலும் வயதுக்குணங்களும் இடைக்கிடை வந்து போகும்.... பாடசாலைக்காலங்களில் அதிகம் நான் பகிர்ந்து கொண்டது அவனிடம் தான்... அவனும் அப்படித்தான்... இவன் எனக்கு உறவு என்றாலும் நட்பும் இவன் தான் அவளும் அப்படித்தான் உரிமையோடு பழகுவாள்.... இருவரும் என்னிடம் கொட்டியதில் இருவருக்கும் ஒரு காதல் இளையோடி இருப்பதை அறிந்தாலும் இருவரும் தேவையென்பதாலும் இதை வெளியிடப்போய் விரிசல் வந்துவிடுவோ என்ற பயத்திலும் தவிர்த்து வந்தேன்... அவளிடமும் இவன் மீது நாட்டமிருப்பது தெரிந்தாலும் பெண் என்பதால் சிலசங்கடங்களும் கணிப்பு சரியா என்ற தயக…

  15. மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. ******************************************************************…

  16. Started by வல்வை சகாறா,

    குறிப்பு. பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன. பாம்பு “க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது. அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் த…

  17. பார்த்திபனின் வரவு - பாகம் 2 16. 07. 1996 காலை..., எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை. ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். வலிக்கிறதா? வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். இல்லை..., ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன். துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில் இரு…

    • 0 replies
    • 2.4k views
  18. எங்கள் ஊரில் மிக அதிக மக்கள் தெரிந்து இருக்க கூடிய ஆள் நம்ம பார்வதி அக்கா எவர் என்ன உதவி கேட்டலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பா சிலர் அதை அவர் கஸ்ரம் என்பதால் செய்கிறார் என்றும் சொல்லுவினம் ஆனால் அவா அப்படி இல்லை அருமையான ஆள் வீடுக்கு தன் மகனுடன் வரும் நண்பர்களை வாங்கோ தம்பி இருக்கு என்ன சாப்பிடிறியல் என தனது கஸ்ரம் காட்டாது உபசரிப்பு செய்வதில் எங்கள் மனம் நெகிழ்த்து போகும் இப்படி இருத்த பார்வதி அக்காக்கு சமாதான காலம் வர போக்குவரத்து சுகம் ஆக பிரிந்து இருத்த உறவுகள் எல்லாம் தேடிவந்து உதவி செய்ய கொஞ்சம் வசதியா வர தொடங்கினா அவாவின் செயல்பாடுகளும் ஓவரா போக ஒரு மாமன் முறையான ஒருவரின் உதவியுடன் மகன் வெளிநாடு வந்தான் பின்னர் அவன் உழைத்து யுரோ ரூபாவா மாற பார்வதி அக்காவு…

  19. பால்யத்து நாட்களில் இருந்து இன்றுவரை காலம் எனக்கு பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலரின் நினைவுகள் என்னுக்குள் பசுமையாய் படிந்துபோயிருக்கிறது. அவற்றில் சில நினைவுகளுக்குள் சில இரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. 48 வருடங்கள் வாழ்ந்து கழித்தபின், எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காட்சியில் அவர்கள் பற்றிய நினைவுகள், நீரின் அடியில் இருந்து மேல்நோக்கி எழும் நீர்க்குமிழிகள் போன்று எனது நினைவுகளின் மேற்பகுதிக்கு வருகின்றன. இன்றைய கதையும் அப்படித்தான். Trivandrum Lodge என்னும் மலையாளப் படத்தை இன்று பார்க்கக்கிடைத்தது. எனது தம்பியைப்போன்று, நான் மலையாளப்படங்களை தேடித் தேடி பார்ப்பவன் அல்லன். மோகன்லாலின் நண்பனும் அன்று. அவ்வப்போது காலம் என்க்கு மிகவும் சிறப்பான மலையாளப்ப…

  20. Started by Innumoruvan,

    பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி நடக்கவிருக்கிறது. தயார்ப்படுத்தல்கள் களேபரப்படுகின்றன. அனைத்து மாணவர்களிற்கும் ஏதேனும் ஒரு விஞ்ஞான விளக்கம் தரும் காட்ச்சிப்பொருளினை எடுத்துவரச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு வகுப்பிலிருந்தும் எப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமென்பதை விஞ்ஞான ஆசிரியர் தெரிவுசெய்கிறார். இரண்டு லீற்றர் கொக்கோகோலாப் போத்தலின் விஞ்ஞான அவசியம் தாயாரிற்கு எடுத்தியம்பப்பட்டு அவன் வீட்டில் அது வாங்கப்படுகிறது. தங்கைகளிற்கும் தாயாரிற்கும் பகிர்ந்து பானம் அருந்தப்பட்டு முடிந்ததும், வேலை ஆரம்பிக்கிறது. போத்தலின் கீழ்ப்பகுதி சீராக அரிந்து நீக்கப்படுகிறது. ஒரு குமிழ்முனைப் பேனாவின் உடலும் இரண்டு றீபிள்களும் எடுக்கப்படுகின்றன. குளாயாக்கப்பட்ட முமிழ்முனைப் பேனாவின் உடலில் இரண்ட…

  21. என்ன நடந்ததென்றால்.. நான் சங்கக்கடைக்கு போனேனா .. ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்.. ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்.. சாமானை அங்காலை எடுத்து வையுங்கோ என்று சொல்லிபோட்டு ... வீட்டை ஓடிவந்து கேற்றுக்கு வெளியிலே சைக்கிளை விட்டிட்டு ... இப்ப வாறது தானே என்று பூட்டாமல் வீட்டுக்குள்ளே போய் ... தேங்காயெண்ணெய் போத்திலை எடுத்து கொண்டுவந்து சைக்கிளை பார்த்தால்.. காணவில்லை.. "நடுவிலே கொஞ்ச பக்கத்தை காணோம்" படத்திலே வாற விஜய் சேதுபதி மாதிரி, எங்கட அம்மா ஐந்தாவது தடவையாக பரமேஸ்வரா சந்தி இந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி சர்மாவுக்கு சொல்லிகொண்டிருந்தா. சர்மாவுக்கு தலை எல்லாம் சுத்தியது. பலாலி வீதியில் இருந்த அந்த அடுக்குமாடி…

  22. நாகரிகத்தின் அனைத்து விழுமியங்களையும் கூவிக்காட்டும் கனவான்களும் சீமாட்டிகளும் நடந்துகொண்டிருந்த ஒரு மதியப்பொழுது. ரொறன்ரோவின் டவுன்ரவுன் தனக்கேயான சுறுசுறுப்புடன் துடித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக கற்பனைகளில் நடந்து சென்ற எனக்குப் பாதையோரம் ஒரு புதினம் காத்திருந்தது. சாக்கு விரித்து அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரன். அழுக்கு உடுப்பு, பாசிபடர்ந்த பல்லு, ஒரு சாதாரண ரொறன்ரோ நகரப் பிச்சைக்காரன். ஆனால் அவனருகில் இரு நூல்கள் இருந்ததே புதினம். ஓன்று ஹேர்மன் ஹெஸ்ஸியின் 'சித்தார்த்தா', மற்றையது றே பிறாட்பறியின் 'பரனைற் 451'. பிச்சைக்காரனோடு நூல்களைச் சமூகம் சம்பந்தப்படுத்திப் பழக்கியிராததால் அக்காட்சி எனக்குப் புதினமாக இருந்தது. புதினத்தைக் கண்டால் நின்று பார்க்கும்…

    • 13 replies
    • 1.4k views
  23. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது. நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள். ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது. டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு மட்ட…

  24. Started by theeya,

    நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப் போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல், மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. அந்த…

    • 15 replies
    • 3.9k views
  25. பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்ல…

    • 12 replies
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.