யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
50 topics in this forum
-
வந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது. முகத்திலே இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும். அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை) நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன, இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399 வெள்ளி பெறுமதியான Lap Top எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் க…
-
- 15 replies
- 3.1k views
-
-
கணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்.. அது யாழ் களம் தான். குறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்... ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்.. கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக. இந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வே…
-
- 14 replies
- 2.7k views
-
-
இந்த பாழாய் போன போரிலே எந்த சண்டையும் நடைபெறாமல் 29 வருடமாக (அதிகமான வருடங்கள்) இடம்பெயர்ந்தது காங்கேசன்துறை மக்களே. இங்கு பல்லின, பல்மத பலசாதி மக்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமும் ஒன்றிருந்தது. அன்று யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையாகவும் பருத்தித்துறை, காங்கேசன்துறை நகர சபையாவும் கொடிகட்டிப்பறந்தன. எனது வீட்டை சுற்றி இருந்தவர்கள் வேறு ஜாதியினர், வேறு மதத்தவர், வேறு இனத்தவர் +வேறு மொழி பேசுபவர்கள் - ஆனால் எங்களுக்குள் வேறுபாடு இருந்ததில்லை. இது காங்கேசன்துறை பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே. ஆனால் முப்பது வருடங்களின் பின்னான மாற்றம் - தொடரும்.
-
- 14 replies
- 3.9k views
- 1 follower
-
-
மனிதாபிமானம் (சிறு கதை) அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன். அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம். அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன். சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார். குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார். …
-
- 14 replies
- 3.2k views
-
-
கடவுள் படைக்காத மனிதர்கள்! அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலா…
-
- 14 replies
- 3.2k views
-
-
1988 ஆடி மாதம் சனிக்கிழமை. வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்? ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான். சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் . நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்…
-
- 13 replies
- 3.9k views
- 1 follower
-
-
மன்னித்துப் பார் வளங்கள் பலவும் பெருகும் வாழ்வின் அர்த்தங்கள் புரியும் மன்னித்துப் பார் இறுகிக் கிடக்கும் பாறையென இதயம் கனத்துக் கிடக்கிறதா? பனியாய் உருகி பாசத்ததைப் பகிர்ந்திட மன்னித்துப் பார் ஏழு தரமல்ல எத்தனை தரம் வேணுமென்றாலும் மன்னித்துப் பார் மனிதம் புனிதமடையும் மரணம் கூட மகத்தானதாய் அமையும் மலரைப்போல மனம் மென்மையடையும் மன்னித்துப் பார் இறுக்கங்கள் தளரும் இதழ்களில் புன்னகை அரும்பும் பேச்சினில் இனிமை கூடும் அணைப்பினில் அன்பு பெருகும் மன்னித்துப் பார் மகிழ்வான தருணங்கள் மனதை வருடும் புலரும் பொழுதுகள் கூட புன்னகை பூக்கும் மன்னித்துப் பார் மன அழுக்குகள் அனைத்தும் அகன்றே ப…
-
- 13 replies
- 1.8k views
-
-
எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும் காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது. எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது. எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர் என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. வைத்தியர் வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண…
-
- 13 replies
- 2.4k views
-
-
விடயம் பெரிதாக ஒன்றுமில்லை , வீட்டில் சில திருத்தவேலைகள் தற்சமயம் மேற்கொண்டு வருகிறோம் , நிலத்துக்கு tile மாற்றும் tradie ஒரு வியட்னாமியன். சுட்டுப்போட்டாலும் ஒரு ஆங்கில வார்த்தை வராது. சொல்லக் சொல்ல ஓமெண்டு தலையாட்டிப் போட்டு, முழு இடத்துக்கும் primer பூசி விட்டுப் போய் விட்டான் , ஒரு இடமும் கால் வைக்க ஏலாது . அளவாகப் புளித்தப் போயிருந்த தோசையையுடன் நல்ல சாம்பலும் குழம்பும் சேர்த்துச் சாப்பிடலாம் என்றிருந்த எனக்கு மனைவியின் “ இன்றைக்கு நோ சமையல் விரும்பினால் pizza எடுங்கோ இல்லாட்டி சும்மா படுக்கப் போனாலும் ஓகே தான்” என்ற வார்த்தைகள் விசரைத் தான் கொடுத்தது. இண்டைக்கு இடைக்கிடையே என்ன வேலை செய்யுறாங்கள் என்று supervise பண்ணி களைச்சுப் போச்சு எண்ட …
-
- 13 replies
- 2.4k views
- 1 follower
-
-
பாசமலர்ச் சோலை கை நிறைய மலர்கள் புன்னகையின் இதழ்கள் கண்களிலோ மொழிகள் கலகலக்கும் ஒலிகள் பாசமலர்ச் சோலை பால் மணக்கும் மழலை நேசமுடன் வருடும் மயிலிறகாய் விரல்கள் சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள் பஞ்செனவே கால்கள் பழங்களென விழிகள் பிஞ்செனவே விரல்கள் கொஞ்சுகின்ற பார்வை கண்சிமிட்டும் அழகு கை அசைப்பில் அழைப்பு சிந்துகின்ற சிரிப்பு சேய் அவனின் துடிப்பு அபிநயமோ வேதம் அணைப்பினிலோ மோகம் என்னவென்று வியக்கும் எடுத்தணைத்தால் மயக்கம்
-
- 12 replies
- 2.1k views
-
-
பிடரிப்பகுதியிலே -எனக்குப் பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு. ஆட்டிச் சொல்ல முடியுதில்லை- தலையை ஆம் என்றும், இல்லை என்றும். பின்னாலே பார்ப்பதற்கு நான் பிரள வேண்டும் பாதி வட்டம். முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும் முன்னேற்றம் மட்டும் பூச்சியமே. வாட்டி இழு எருக்கிலையை வலி மறையும் என்றார் பாட்டி. வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி மயிரெல்லாம் எரிந்து போச்சு. வா வீ கியூ மணம் வருதே நானும் வரட்டா ஒரு பிடிபிடிக்க என மயிரெரியும் வாசனையை என் மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான். டைகிளோ பீனைல் போடு என ரை கட்டிய நண்பன் சொன்னான். போட்டுத்தான் பார்த்தேன் நானும் ம்கும் போகவில்லை தசைப…
-
- 12 replies
- 3k views
-
-
Brexit நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே Dances with wolves. பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் . 50 ஆண்டு வரை ஐ .யூ உடன் சேர்ந…
-
- 12 replies
- 2.7k views
-
-
இயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. அன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்…
-
- 9 replies
- 1.6k views
-
-
கவிதையோ கவிதை கதையோ கவிதையோ எதுவோ ஒன்று இணையம் 21 க்கு இயற்றிடலாம் என்று தண்டோரா போட்டு விட்டனர் இன்று பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் மரத்தின் கிளையில் கவிதை பறிக்கலாமோ மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி காலம் கடந்த பட்டுக்கோட்டை பாடல்களை பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ …
-
- 8 replies
- 1.7k views
-
-
“டேய் ஓடுறான் அவன் , விடாதீங்கோடா , அவனை.. சுடுங்கோடா சுடுங்கோடா …….” எனக்கு எல்லாமே ஒரு முடிவிற்கு வரப் போகின்றது என தோன்றிற்று. இதிலிருந்து மீள சான்ஸே இல்லை. ஒடுபவன்( நானில்லை) ஒரு தனி ஆள், துரத்திக்கொண்டு போகின்றவர்கள் ஒரு 10 பேராவது இருக்கும் , அதுவும் வகை வகையான சுடுகலங்களுடன். எப்படியும் அவன் தப்பப் போவதில்லை. எங்களுக்கு ( எனக்கு) இரு ‘கேட்ச் 22’ தெரிவுகளே இருந்தன , ஒன்று எப்படியாவது டிவிஷன் ஆஃபீஸுக்கு திரும்பிப் போய் கருணாரத்னவை அவர்கள் கொன்றது எங்களை மீறிய ஓர் சம்பவம் என்று சொல்லி விளங்கப்படுத்தி , தப்பினால் வீடு போய் சேர்வது. (அநேகம் எங்களை அதிலேயே வைத்து வெட்டிப் போடுவாங்கள் , கூட்டிக்கொண்டு போய் குடுத்திட்டோம் என்று) இரண்டாவது…
-
- 7 replies
- 3.2k views
- 1 follower
-
-
இன்று இங்கே சனி காலை நேரம். வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30 ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று. அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று । காலையில் துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்। தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னப்பா என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால் கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப் போச்சுது ,…
-
- 7 replies
- 1.6k views
-
-
கொல்வது கொலை விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி …
-
- 7 replies
- 2.5k views
-
-
மலேரியா போய் கஞ்சா வந்தது! உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்தால் வளர்ந்த மேற்கு நாடுகளிலும் அபிவிருத்தியடையாத ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் வெவ்வேறு விதமான காரணிகள் பிரதானம் வகிப்பதைக் காணலாம். மேற்கு நாடுகளில், மூன்றில் ஒரு பங்கினர் உடல் எடை அதிகரித்தவர்களாகவும் அதனால் வரும் உடல் நோய்களால் அவதியுறுவோராகவும் உள்ளனர்: இதய நோயும், புற்று நோய்களும் முதன்மையான மரண காரணிகளாக அமெரிக்காவில் இருக்கின்றன. ஆபிரிக்காவிலும் அபிவிருத்தியடையாத தெற்கு-தென்கிழக்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் முதன்மையான சவால்களாக இருக்கின்றன. நீர்மூலம் பரவும் வயிற்றோட்ட வகை நோய்கள் ஒரு புறமும், பூச்சிகளால் பரவும் மலேரியா போன்ற இரத்தத் தொற…
-
- 6 replies
- 1.6k views
-
-
உயிர்த்து எழுவேன் உனக்காகவே _the Resurrection of Jesus __________________________________________________________________________________________ மரித்தேன் என்று எண்ணிவிடாதீர்கள் மறுபடியும் உயிர்த்து எழுவேன் நான் உயிர்த்து எழுவது உனக்காகவே உன் கதவுகளை திறந்து வை உன்னிடம் வருகிறேன் உன் அருகோடு இருப்பேன் அமைதியாயிரு என் இரத்தத்தை கழுவிவிட்டு உன் பாவங்களை கழுவ வருகிறேன் . பா .உதயகுமார் /ஒஸ்லோ
-
- 5 replies
- 2.2k views
-
-
Dr Abdul Kalam அவர்கள் மறைந்த நேரம் வாய் விட்டு அழுதேன். அந்த நேரம் கிறுக்கியது … நானும் இட்ட தீ மூள்க மூள்கவே.... இன்றைய காலை குளியலின் வெந்நீர் சூடு காலில் அறைகின்றது வழமையை விட வேகமான வெப்பத்துடன் வெந்நீர் தூவலுடன் எந்தன் கண்ணீரும் கலந்து அங்கே யார் ஐயா நீங்கள் மனதில் ஏன் ஐயா எங்களுக்கு இந்தப் பாரம் … நாள் ஒன்றுக்கு மேல் நான் கண்ணீர் சிந்தியது இதுவரை நான்கு தடவைகள் தான் – நேசத்துக்குரியோரை இழந்த நேரங்கள் இப்போது மீண்டும் ஒரு தடவை அந்த சோகம் யார் ஐயா நீங்கள் மனதில் ஏன் ஐயா எங்களுக்கு இந்தப் பாரம் … குழந்தைகள் இல்லை யே…
-
- 5 replies
- 1.1k views
-
-
நேற்று SICK அடிச்சுப் போட்டு வீட்டில Gardening செய்தது தான் நினைவுக்கு வருகுது , பின்னால் இணைத்திருக்கும் விடயத்தை இன்றையை லஞ்ச் பிரேக் இல் வாசித்த போது. PRINCIPLE 5: The Eagle tests before it trusts. When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursuing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her. Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases it. He has to catch it before it falls to the ground. He then brings it back to the female eagle…
-
- 4 replies
- 828 views
-
-
கற்பனை என்று ஒன்றில்லை…. அண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3 விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8 அல்லது 9 வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15 நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம், பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை . அவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த …
-
- 4 replies
- 1.8k views
- 1 follower
-
-
உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தெய்வீக இசை என உனை உணர்ந்தோர் போற்றுவார்; 'சலிப்பான சங்கீதம்' எனப் புரியாதோர் தூற்றுவார். மும்மூர்த்திகள் பரப்பிய கர்நாடக சங்கீதம் - இது நூற்றாண்டுகள் தாண்டி நாம் பெற்ற பொக்கிஷம்! "ராகத்தில் சிறந்த ராகம் எது?" என நானறியேன்; "அடியார் எப்படிப் பாடினாரோ!" என வியந்தேன். இசைப்பாமரன் எனை உன் சுரங்கள் எனும் கரங்களால் ரகசியமாய் வருடி உன்னுள் ஈர்த்த அன்பை என் சொல்ல?! ஆண்டவன் படைத்த பொம்மை தான் நான்; புலம்பெயர் தேசத்து யந்திர வாழ்வில் - எந்தன் மனிதம் கெடாமல் காத்தது உன் இனிய அதிர்வலைகள்; என் ஆவி குளிர மண்ணுலகிலும் சொர்கம் தந்தாய்! மனப்பசியால் நலிந்திருக்க பெருவிருந்து தந்தாய், தனித்துத் திக்கற்று நிற்க புகலிடமாய் நீ ஆனாய். சங்கீதமே! நீ ஆனந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நான் வீழ்வேன் என்று நினைத்தாயா பாரதியின் தோளில் ஏறி நின்று வான் முழுக்க வரைந்து வைப்பேன் என் வர்ணக் கனவுகளை பித்தனை போல் வாழ்ந்து எத்தனை முறை வீழ்ந்தாலும் இன்னுமோர் யுகதிட்காய் எழுந்து வர வரம் தாடி சுவரோடு உதைத்தபடி என் ஜீவன் போகுமட்டும் வாடா பாரதி வா வந்து பலம் தாடா என் சிந்தை தெளிவாக்கி
-
- 0 replies
- 1.3k views
-