கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று.. ------------------------------------------ இப்போதெல்லாம் நாம் சந்தித்த இடங்களில் யாருமே இருப்பதில்லை... சிந்திக்கிடக்கின்றன காய்ந்துபோன சில மஞ்சள் பூக்களும் நம் நினைவுகளும்.... காதலும் கவிதைகளுமாய் மாறி மாறி துலங்கிய அந்நாட்கள் தொலைந்துவிட்டன.. மாலை வெய்யில் தன் மஞ்சள் நிறமிழந்த ஒரு கோடையில்தான் நேசிப்பை விற்று காய்ந்துபோனது உன் இதயம்... நினைத்துப்பார்க்கையில் நெஞ்சத்தின் ஆழத்துள் மெல்ல இறங்குமொரு முள்.. அந்தரவெளியும் கலவர நிழலுமாய் நூறாயிரம் கதைகளை சுமந்தலையும் இதயத்தை உடைத்துவிடுகிறது ஒற்றைக்கண்ணீர்த்துளி.. பொழுதில்லை அழுவதற்கும்.. நினைத்துக் கவலையுற்று துன்புற்றுவிட்டு பனிக்குளிரில் வேலைக்கு இறங்கிச்செல்ல…
-
- 10 replies
- 1.5k views
-
-
பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …
-
- 7 replies
- 1.5k views
-
-
-
பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை -கவிஞர் காசி ஆனந்தன்
-
- 5 replies
- 3.4k views
-
-
சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆட…
-
-
- 11 replies
- 611 views
- 1 follower
-
-
பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் o தீபச்செல்வன் ------------------------------------------------------------------ (இன்னுமின்னும் அறியாத சேதிகள் அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே! உன்னை உரித்து சிதைத்தவர்களின் கைளிலிருந்து எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு என்ன நேர்ந்திருக்குமென்று தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம் எண்ணிக்கையற்ற முனைகளில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. …
-
- 12 replies
- 3.2k views
-
-
[size=4]திசைகள் மூடி இருள் கவிழும் [/size] [size=4]இந்த பனிப்பொழுதின் [/size] [size=4]ஈரமெல்லாம் உலர்ந்து [/size] [size=4]மோதிக்கடக்கிறது காற்று,[/size] [size=4]இனி[/size] [size=4]பெரு வீதிகளிலும் ஓரங்களிலும்[/size] [size=4]படரும் பின்உருகி கசியும் பனித்திரள்.[/size] [size=4]இந்த மனங்களைப்போல,[/size] [size=4]இலைகளை உதிர்த்திவிட்டு[/size] [size=4]வேர்களில் உயிர்ப்பை[/size] [size=4]ஒளித்துக்கொண்ட மரங்களாய்[/size] [size=4]உள்ளெரியும் பெருந்தீயை மறைத்து[/size] [size=4]பொறுத்திருக்கிறோம் இந்த கார்த்திகையிலும்,[/size] [size=4]கொழுந்துவிட்டெரியும்[/size] [size=4]பெருந்தீயில் கொதித்து [/size] [size=4]உருகி வடிந்து கண்ணீராய் வெளிவருகிறது[/s…
-
- 9 replies
- 794 views
-
-
பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…
-
- 8 replies
- 867 views
-
-
பெருமூச்சு வலிபடைத்து முறமெடுத்துப் புலியடித்த தமிழகம் கிலிபிடித்த நிலைபடைத்து வெலவெலத்து வாழ்வதோ? பகையொதுங்கப் பறைமுழங்கிப் புகழடைந்த தமிழகம் கதிகலங்கி விழிபிதுங்கி நடுநடுங்கி வாழ்வதோ? படைநடத்தி மலைமுகத்தில் கொடிபொறித்த தமிழகம் துடிதுடித்து அடிபிடித்துத் குடிகெடுத்து வாழ்வதோ? கடல் கடந்த நிலமடைந்து கதையளந்த தமிழகம் உடல் வளைந்து நிலை தளர்ந்து ஒளியிழந்து வாழ்வதோ? மகனிறக்க முலையறுக்க முடிவெடுத்த தமிழகம் புகழிறக்க மொழியிறக்க வெளிநகைக்க வாழ்வதோ? கவிஞர் காசியானந்தனின் கவிதை தொகுப்பிலிருந்து
-
- 3 replies
- 1.6k views
-
-
பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான் இன்பசோதி' பெயரோடு இணைந்த சோதிபோல் நீயும் ஒளிபொருந்தியவன். காற்றிலேறிக் கைவீசிச் செல்லும் வண்ணத்துப் பூச்சியாய் உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில் நீயொரு ராசகுமாரன். காலம் உனக்காய் கட்டியெழுப்பிய கோட்டையில் நீயே கடவுளாய் காலவிதியின் கதையாய்....! நிலவாய் நீல வானமாய் நீயுருவாக்கிய காலத்தின் கோலம் உனது எண்ணங்கள் போல வர்ணங்களாய்.....! காலச்சக்கரம் மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி உனது வர்ணங்களாலான உலகை இரத்தச் சிவப்பாக்கிய போது நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....! ஊரான் உனது பெயர் போலவே ஊரைக்கவர்ந்த புலிவீரன் நீ. உன் போல உருவாக உன்போல உடையுடுக்க உன்போல …
-
- 0 replies
- 812 views
-
-
பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை. தேவர்கள் அமுது கடைந்தது போல் தேசியத் தலைவரை மலையாக்கி எம் நிதியை வலுவாக்கி போராட்டத்தை கயிறாக்கி எழுச்சியுடன் நாம் கடைந்தோம் காணவில்லையே விடுதலை எனும் அமுதை, சீக்கிரம் பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை போர் நிறுத்தம் வந்ததடா போனதடா எம் வலிமை கபடமாகப் பிரித்தனர் கருணாவை கண்ணி வைத்தனர் சூழ்ச்சி வலை பின்னி சிக்கிவிட்டோம் நாம் அதிலே தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கின்றோம் நாமின்று எப்பாடு பட்டேனும் காண வேண்டும் எழுச்சியுடன் தமிழீழம் பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை பாராண்ட தமிழினம் இன்று பாழ்பட்டுப் போகின்றோம் கலை பண்பாடு காத்து தலை நிமிந்து வாழ்ந்த இனம் இடம் பெயர்ந்து புலம் பெயர்ந்து வளம் இழ…
-
- 6 replies
- 979 views
-
-
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நான் பிறந்த நாடு ,......இன்று நாதியற்ற நிலையில் பாலும் தேனும் பொழிந்து பார் புகழ்ந்த நாடு ஆண் பெண் பேதமின்றி குஞ்சு என்றும் குழந்தை என்றும் முதியவர் ,உடல் வலு இழந்தோர் என்றும் கிஞ்சித்தும் பாராமல் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கையில் தாய்க்கு நிகராம் என் தாய் நாடு தமிழ் ஈழத்திரு நாடு சிக்கி சின்னா பின்ன பட்டு கொடியவன் கோத்தபாயா கூட்டத்துடன் ராஜ பட்சே கூடுச்சேர்ந்து ,பிச்சையெடுத்த உதவிபணம் பீரங்கியாய் மாற , ஆட்லரியாய் மாற எக்காளமிட்டு ,தன் இளைய,சந்ததியை பலி கொடுத்து பலிகடாவாக்கி சீரழியும் தேசம் என்று தான் மாறும் ஆறாது மாறாது அழுதாலும் தீராது ஓயாத துயர் படும் என இனம் …
-
- 0 replies
- 1.8k views
-
-
அம்மாவுக்கு வயசாகிவிட்டது மறதியும் வந்துவிட்டது ஆனால் அவள் நான் எப்ப போனாலும் சாப்பிட்டியா என்று கேட்கவும் பின் போகும் போது பத்திரம் பார்த்து போ என்று சொல்வதையும் ஏன் இன்னும் மறக்காமல் இருக்கிறாள் என்பது மட்டும் தெரியவில்லை. பா.உதயன்
-
- 5 replies
- 722 views
-
-
யுத்தம் தந்த பட்டம் - விதவை! சொந்தம் தந்த பட்டம் - தனிமை! கணவர் தந்த பட்டம் - கௌரவம்! குழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்! சமூகம் தந்த பட்டம் - சகுனம்! இனம் தந்த பட்டம் - பரிதாபம்! வரலாறு தந்த பட்டம் - அவலம்! வாழ்க்கை தந்த பட்டம் - வறுமை! தனிமை தந்தது - தயக்கம்! ஏக்கம் தந்தது - தாயகம்! நான் பெறாத பட்டம் - களங்கம்!
-
- 15 replies
- 797 views
-
-
1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன். புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில் ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது ஆண்டு பல கண்டோம் - அதில் என்ன சுகம் கொண்டோம் வேண்டும் வரம் வேண்டி நின்றோம் '97 இன் உதயத்தையே தொழுது நின்றோம் தையே நீ கிழிந்த மனங்களை தையேன் வெய்யோன் கண்டு அஞ்சாதே அவனுன்னை வையான் பையவே வருவாய் நல்லதே தருவாய் மின்னலே உன்னைத் தொழுதேன் என்னுள்ளே புகுவாய் கோடிப் பிரகாசம் கூட்டுவாய் 'தை' என்ற தையலுக்கு தாலி கட்டவென்றே 'வெய்' என்ன வெய்யோனும் வேளை பார்த்து நின்றான் மை பூசும் தையலவள் சு…
-
- 1 reply
- 1.7k views
-
-
பொங்குவோம் பகிர்ந்துண்டு வாழ்வோம் விடுதலைக்காய்ப் பசித்திருப்போம் புறம் சொல்லோம் போகியில் மனத்தீமையெல்லாம் விட்டொழித்து புதிதாய்ப்பிறப்பெடுப்போம் எமக்கிது விதியே என ஏங்காது எதிரிக்காய் விழித்திருப்போம் இனி ஒரு விதிசெய்வோம் வரும் கணங்கள் எல்லாம் மீண்டும் வாராக்கணங்களே அதனால் ஆயிரம் கதைகள் பேசி அடுக்குத் தமிழ்பேசி பெருவாழ்வு வருகுதென பொய்சொல்லி ஏய்ப்போரைப் புறமொதுக்கி ஒட விரட்டி முட்டிமோத வரும்போது எதிர்நின்று மோதிடும் கட்டுக்காளையை அடக்கும் காளையாய் சேர் இடம்போகுமட்டும் பொருதுவாய் புலியாய் தமிழ…
-
- 0 replies
- 909 views
-
-
பொதுநூலகப் புதுநூலகம் (அன்றொருநாள் ஐபிசித் தமிழுக்காய் எழுதியது) நல்லளவையூரான் நானுரைக்கும் கவிபார்த்து சொல்லிற்படு குறை களைந்தே ஆய்ந்து நறும் வித்தகரே வியம்பிடுவீர் வாஞ்சையுடன் ஏற்றிடுவேன் இத்தினம் சித்தமாய் இயம்புகின்ற அடியேனும் துன்பமாய்க் கலந்தழியும் நெஞ்சகன் ஆகி மின்தளம் வழியே விரும்பிடு யாழ்நகர் நூலகக் கருவினைச் சார்ந்தே பொதுநூலகத்தில் புதுநூலகமாம் என்ற கருக் கொண்டே மதிதனில் இருத்தி மாண்புறு தமிழால் பெருமை கொண்டு சோர்வகற்றி வரைக்கின்றேனீங்கு!! தங்கு யாழ்நகர் தருநல் வரமென யாங்கொரு காலத் தோங்கிய தாகி மேருவில் மேலுறு பயனதாய் மிளிர்ந்து பெருமைசேர் அறிவுநூல் பலவுடன் வெண்மையாய் பாவலர் முதலாய் பைந்தமி ழறிவோர் த…
-
- 3 replies
- 1.2k views
-
-
எழுதவேண்டும் என்பதற்காக எழுதி 2 ஆயிரம் கருத்துக்களை எட்டிவிட்டேன். அதன் சந்தோசத்தில் ஒரு காதல் விதையோடு. . . . மௌனம் கலைந்து விழியுடன் மோதி விடைகள் தேடும் இமைகள் பைங்கிளி பறந்து பருகிடுமோவென பயந்து ஒன்றுடன் ஓன்று உரசி மறையும் கனியிதழ்கள் சலனமற்ற நீர்தடாகததில் வீழ்ந்த துளியாய் அலைவீசிச்செல்லும் கன்னக்குழி வதனம் கூந்தல் மருவி காயமாகிவிடுமோவென கலைத்திட விரையும் கரங்கள் அடடா அழகிய சொர்ப்பனம் அர்ப்புத தரிசனம் விடியலின் எழுச்சியில் வீணாக கலைந்தது
-
- 8 replies
- 1.3k views
-
-
யாழ்கள உறவுகளுக்காக மீண்டும் காதல் மொழி இசைத்தொகுப்பில் இருந்து ஓர் புதிய பாடல் உங்களுக்காக... http://vaseeharan.blogspot.com/ இங்கே அழுத்துங்கள் பாடலைக் கேட்கலாம் பல்லவி பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு காலையிலும் தினம் மாலையிலும் நீ காதல் மொழியைப் பேசு (2) மலர்களின் மேலே மனம் மோதும் மௌனம் கூட கவிபாடும் பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு இதயக் காதல் மொழியில் கொஞ்சம் கொஞ்சும் இசை கலந்தால் நெஞ்சம் குளிருமடி உலகம் இனிக்குமடி சரணம் 1 காதல் மொழியைப் பேசும் இதயம் கோடி முறை பிறக்கும் உள்ளத்தின் கூட்டில் உலகத்தை சேர்த்து புத்தம் புது உயிர் வளர்க்கும்(2) எழுத்தின் வடிவம் உணரும் முன்பே எழுந்தது காதல் மொழி …
-
- 22 replies
- 2.8k views
-
-
வித்தியாசமாக இந்தத் திரி சின்னச்சின்னதாக கவிதைகளும் காட்சிகளும் பேசும் தொடர்
-
- 44 replies
- 5.3k views
-
-
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு -…
-
- 0 replies
- 707 views
-
-
பெண்ணின் பெருமை பேசி பெண்ணை அடிமை கொள்வார் பெண்ணைப் புகழ்ந்து பாடி பேதைமை கொள்ள வைப்பார் பொன்னே மணியே என்றும் பூவின் வாசமென்றும் பேசிப் பேசிப் பெண்ணைப் பேச்சிழக்க வைத்திடுவார் பூரணை நிலவுபோல் புகுந்தவீடு வருபவள் பத்தும் தேய்த்து தான் தேய்ந்து பழையதாய் ஆகியபின் பெண்ணா நீ என்று பேசியே கொன்றிடுவர் பாலைவனத்தின் பசுந்தளிரே போதை கொள்ள வைக்கும் பணக்கள்ளே பவளமே பென்னரங்கே பொன்மணியே போற்றி உனைத் தொழுவேன் பவளமே எனக் கூறிப் பத்திரமாய்ப் பூட்டிவைப்பார் பாவையரை வீட்டினுள்ளே பாழாய்ப் போன பெண்கள் பூட்டியது தெரியாது பெண்ணென்றால் இதுவென்று பெருமை மிகக் கொண்டிடுவார் பண்பாடு இதுவென்று பட்டிகள் போல் நடத்துவதை பெருமிதமாய் எண்ணி பொங்கும் மனதடங்க புத்தகமாய் ஆகிடுவார் பேதைப் பெண்ணே …
-
- 2 replies
- 765 views
-
-
பேரன்னை பார்வதி அம்மாவிற்கு வீரவணக்கம்! வீரப்படுக்கையில் துயிலுறங்கும் அன்னையே ! நாம் அடையாமல் விடமாட்டோம் தமிழீழ மண்ணையே ! எம் தலைவரை பெற்றெடுத்தீர் தாயகம் வெல்லவே ! வீரதமிழனாய் வளர்த்தெடுத்தீர் தமிழீழ மண்ணையே ஈழத்தமிழினம் இருட்டிலே உலன்றபொழுது! கேட்க நாதியின்றி வீதியிலே கிடந்தபொழுது! உரிமையின்றி அடிமைகளாய் தாய்மண்ணில் திரிந்தபொழுது ! உன் சிங்கக் குகைதனிலே எம் புலித்தலைவன் பிறந்துவந்தான்! புதியதோர் வரலாற்றை பெற்றெடுத்த எம்தாயே ! புயல் வரினும் மலைவரினும், அவைகளே குண்டுகளாய் மாறிவிழினும் ! மக்களோடு மக்களாய் மனம் தளராது வாழ்ந்தீரே ! மரணம் நெருங்கிடினும் வீரமாய் சாய்ந்தீரே ! எம்மை நிமிரவைத்த புதல்வனை உலகிற்கு தந்தவரே ! எம் சிரம் குனிந்து வணங்குகிறோம் உம் ப…
-
- 0 replies
- 481 views
-
-
பேராற்றல் மிகு தீரங்கள் - தே. பிரியன் கவிதை வாழ்தலில் உயர்ந்து நிற்கின்றது பேராற்றல் மிகு தீரங்கள், வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்க காலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன, ” யார் நாங்கள் “ ஏன்? எங்களை வேறாக்கிப்பார்க்கின்றீர்கள்…? அப்போது தான் மேலும் வலிக்கின்றது, உடைந்த மனச்சுவர்களை ஒருங்கிணைத்து எழும் போது உக்கிய வார்த்தைகளை எம்மீது தெளிக்காதீர்கள், உங்கள் இயலாமைகளை எம்மீது திணிக்காதீர்கள் உயிர் சிதைந்து வெளிப்புறப்பட்டு வாழ்வின் ஒவ்வோரு நிமிடங்களையும் வலிமையாக்கி உலகத்தை நேசிக்கின்றோம். “சற்று நிதானியுங்கள்” நாங்கள் சளைத்தவர்கள் அல்ல சாகா வரம் பெற்ற புனிதமும் விவேகமும் கொண்டவ…
-
- 0 replies
- 674 views
-
-
பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின் புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு! பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்! அவனது முகத்தைப் போலவே எல்லாமே மாறிவிட்டது! மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல, எனக்குள்ளுந்தான்! இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட, கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்... நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது! நெருங்கிய நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை! காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!! மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்... பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது! இது புதிதா...? அல்லது புதிரா...? விடைதெர…
-
- 4 replies
- 661 views
-