Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: பிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது. அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது. விதியின் விளையாட்டு 1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார். நிறைவு மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. அதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச…

    • 9 replies
    • 781 views
  2. * வைகைப்புயல் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்த இம்சை அரசன் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அபார வெற்றி பெற்று நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இதற்கான விழாவை தயாரிப்பாளர் ஷங்கரும், இயக்குனர் சிம்புதேவனும் "சந்தோஷப் பகிர்வு விழா" என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் அழைத்துக் கொண்டாடினார்கள். * 6 மணிக்கு விழா ஆரம்பிக்கும் என்று அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கே விழா தொடங்கியது. * இயக்குனர் சிம்புதேவன் அநியாயத்துக்கு சிம்பிளாக இருக்கிறார். …

  3. #LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்! சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை 'Moonlight' திரைப்படம் வென்றது. சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன. ’லா லா லேண்ட்’ மற்றும் ’மூன் லைட்’ படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. இந்நிலையில் விருதை மூன்லைட் தட்டி சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'Manchester by the Sea' படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை La La Land படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார். …

  4. BLOOD DIAMOND இயக்கம்: Edward Zwick தயாரிப்பு: Gillian Gorfil, Marshall Herskovitz, Graham King, Paula Weinstein, Edward Zwick எழுத்து: Charles Leavitt நடிப்பு: Leonardo DiCaprio, Jennifer Connelly, Djimon Hounsou, Michael Sheen, Arnold Vosloo இசை: James Newton Howard ஒளிப்பதிவு: Eduardo Serra படத்தொகுப்பு: Steven Rosenblum விநியோகம்: Warner Bros. Pictures வெளியீடு: United States December 8, 2006 நாடு: USA மொழி: English, Mende, Krio அடுத்த நாம் பார்க்க இருக்கிற படம் BLOOD DIAMOND. 1990களில் ஆபிரிக்காவில் உள்ள SIERRA LEONE என்ற இடத்தில் நடக்கிற போர்ச்சூழலை பின்னணியாக வைத்து இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. சிம்பாவே முன்னாள் இராணுவ வ…

  5. இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல. ******************************** 🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின! 🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது. 🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின்…

  6. திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள் கோவையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும் பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க விரும்புகிறார் விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துவருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும் திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ் குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில் சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உ…

  7. இந்த ஆண்டின இறுதியில் பார்த்த படம் சாம்பியன்.. 1) சாம்பியன் - வட சென்னையிலிருந்து இந்திய உதைப்பந்தாட்ட அணியில் விளையாடிய ஒருவரின் கதை பெரிய பட்ஜெட் படம் இல்லை போல ஆனாலும் நல்ல ஒரு படமாக இருந்தது 2)கென்னடி கிளப்- சசிக்குமாரின் படம் என தெரிந்தும் விளையாட்டு பற்றிய படம் என்பதால் துணிந்து பார்க்க தொடங்கினேன்..ஏமாற்றவில்லை.. 3)அக்சன்..(விசால் + சுந்தர்சி), ஆம்பள.. மற்றும் விசாலின் வேறு சில படங்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்ல ரகம் 4) பிகில்- அட்லீ+ விஜய் படம் எனக்கு பிடித்திருந்தது 5)அழியாத கோலங்கள் -2.. 6) கைதி- 7) நம்மவீட்டு பிள்ளை - சிவகார்த்திகேயனின் சில சொதப்பல்களுக்கு பிறகு வந்த குடும்ப படம் பிடித்திருந்தது.. 😎 ஹீரோ - …

  8. பிரான்ஸ் பாரிஸில் இடம்பெறும் Auber International Film Festival இல் Best Original Screenplay பிரிவில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விருதைப் பெற்றிருக்கின்றது . நீண்டகால கடின உழைப்பு ,தயாரிப்பிற்கான குழு முயற்சி ,தலைப்பு பிரச்சினை ,அதன் பின்னரான சுமூக தீர்வு என பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குறித்த திரைப்படம் எங்கள் கதைகளுக்கான ஒரு அங்கீகாரமாக விருதை பெற்றிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சிகரமான விடயமே . படக்குழுவிற்கும் இயக்குனரிற்கும் எமது வாழ்த்துக்கள் . ஆதி விருதை பெற்றது மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் - My Blog (ceylontamilnews.com)

  9. பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி அகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார். தமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலி…

    • 9 replies
    • 3.4k views
  10. நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso). முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html

  11. நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது 2/3/2012 3:46:40 PM நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் ந…

    • 9 replies
    • 1.8k views
  12. பாடகி ஜென்சியுடனான வானொலிப் பேட்டி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்க…

  13. தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்! சென்னை: அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார். இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: …

  14. மேலும் புதிய படங்கள்கோலிவுட்டின் 'கிளாமர் சைக்லோன்' நமீதாவுக்கு திருமணமாகிவிட்டதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. நமீதாவிவின் கவர்ச்சியை விட இந்த மேட்டர்தான் இப்போது படு ஹாட் ஆக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நமீதாவே தனது வாயால் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: எப்போதும் பரபரப்பான செய்தி வளையத்துக்குள்ளேயே இருக்கும் முயற்சிதான் உங்களை இப்படியெல்லாம் குறைந்தபட்ச உடையில் வலம் வர வைக்கிறதா? என்ன உடை போட்டுக் கொள்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு இம்மாதிரி குறைந்த உடையில் வருவதுதான் பிடிச்சிருக்கு. வசதியாவும் இருக்கு. புடவை கட்டினால் கசகசவென்று என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது. ஆனால் இதுக்காக நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்…

    • 9 replies
    • 2k views
  15. தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..!’ வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர். மிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி... வயசுக்கும் மனசுக்கும்தானே தொடர்பு உண்டு. இந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவர…

  16. ஜெனிஃபர்.ம.ஆ Follow இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களாகத் தொடர்ந்து வரும் #metoo புகார்கள், தமிழில் பல பிரபலங்களை குறிவைத்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்த சுசி கணேசன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை …

    • 9 replies
    • 1.5k views
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2023 கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம். அப்பா என்பவர் என்றைக்கும் சுவாரசியமான புத்தகம் தானே. சிலர் படித்து பாடம் பெறுகிறார்கள். இன்னும் சிலரோ படிக்கத் தவறி அவரை இழந்த பின்பு இன்னும் படித்திருக்கலாம், வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்க்க இன்னும் சில படிப்பினைகளை அப்புத்தகத்திலிருந்து கற்றுத் தெரிந்திருக்கலாம் என வ…

  18. தொடர்ந்து பெருத்துக் கோண்டே போகும் உடம்பால் அப்செட்டாகியிருக்கும் ஹன்ஷிகா மோத்வானி தற்போது தீவிர எடைக்குறைப்பில் இருக்கிறாராம். எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் படங்களில் நடித்தபோது அநியாயத்துக்கு பெருத்துப் போயிருந்தார் நடிகை ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கூட அவரைப் பார்த்த எல்லோரும் ‘குட்டி குஷ்பு’ போல இருக்கிறார் என்று சொல்ல ரொம்பவே குஷியான ஹன்ஷிகா அந்த சந்தோஷத்திலேயே உடம்பை இன்னும் கொஞ்சம் பெருக்க வைத்தார். ஆனால் அதைப்பார்த்த சில டைரக்டர்கள் இப்போ உங்களைப் பார்த்தா ‘குட்டி குஷ்பு’ மாதிரி இல்ல.., ‘குண்டு ஆன்ட்டி’ மாதிரி இருக்கீங்க என்று அவரிடம் …

    • 9 replies
    • 5.4k views
  19. நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன் வசனம்: ஜெயமோகன் இசை: விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ் பின்னணி இசை: விஜய் ஆன்டனி மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு எழுத்து - இயக்கம்: ஜி வசந்தபாலன் தயாரிப்பு: கே கருணாமூர்த்தி - சி அருண்பாண்டியன் தமிழ் சினிமாவில் அபூர்வமாக சில குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வசந்த பாலனின் அங்காடித் தெரு அப்படியொரு குறிஞ்சி!. இது பண்ணப்பட்ட கதையல்ல... விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம். அத்தனையும் நிஜம்!. பத்து மாடி, பதினைந்து மாடி என உயரமான கட்டடங்களில் பரபரப்பாக நடக்கும் பளபள வர்த்தகங்களுக்குப் பின்னே அதன் முதலாளிகள் செய்யும் சில்லறைத்தனங்களும், மனிதன…

    • 9 replies
    • 1.8k views
  20. ஷில்பாவைக் கடித்த நாய்! மேலும் புதிய படங்கள்திருப்பதியில் தோழி வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியை தோழி வீட்டு நாய் கடித்து விட்டதாம். கடந்த சில நாட்களாகவே தொடர் துன்பத்தில் உழன்று வருகிறார் ஷில்பா. சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் ஷில்பா. அங்கு அவருக்கு கடும் சளி, இருமல், நெஞ்செரிச்சல் வந்து படாதபாடுபட்டுள்ளார். அது போதாதென்று அதற்கு முன்பு ஒரு நாயிடம் சிக்கி மீண்டுள்ளாராம் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், துபாயில் நான் இருந்தபோது கடும் சளி, நெஞ்செரிச்சல், இருமலால் பெரும் அவதிப்பட்டேன். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பெரும்பாடு பட்டு விட்டேன். அதற்கு முன்பு திருப்பதியில் உள்ள எனது தோழி வீட்டில் தங்கியிருந்த போது அவரது வீட்டு நாய் என்ன…

  21. [size=2] [/size] [size=4]ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து இயக்குனர் சீமான் அரசியல் பொதுக்கூட்டங்களில் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். மத்திய அரசை விமர்சித்ததற்காக இயக்குனர்கள் அமீரும், சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதன் பிறகு இயக்குனர் சீமான் அரசியல் கட்சி துவங்கினார். அந்த நேரத்தில் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதென்னவோ உண்மைதான். அந்த நேரம், நடிகர் விஜய்யும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக-வை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. விஜய்யின் இந்த முடிவும் அரசிய…

    • 9 replies
    • 1.9k views
  22. இதுக்கு மேல தமிழ்நாடு பக்கம் வந்திடாதீங்க.. சமந்தாவுக்கு எதிராக நெட்டிசன்ஸ்.! சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாவதை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு எதிராக #ShameonYouSamantha ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. அந்த தொடரில் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. வில்லி கதாபாத்திரத்தில் சியான் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பிறகு மீண்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார் என படக்க…

    • 9 replies
    • 673 views
  23. . சினேகா இடுப்பைக் கிள்ளிய..... 'அண்ணன்'! கோழிப் பண்ணையைப் பார்வையிட வந்த போது, தனது இடுப்பை தொடர்ந்து கிள்ளியபடியும், இடித்தபடியும் இருந்த இளைஞரை, சற்றுகோபத்துடன், தயவு செய்து இப்படி செய்யாதீங்கண்ணே என்று கூறி கண்டித்தார் நடிகை சினேகா. இதையடுத்து அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். நடிப்பு தவிர விளம்பரப் படங்கள், கடை திறப்பு உள்ளிட்டவற்றிலும் பிசியாக இருக்கிறார் சினேகா. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஹோட்டல் திறப்பு விழாவில் சினேகா கலந்து கொண்டார். அழகான சேலையில், கழுத்து நிறைய நகையைப் பூட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக அதே சமயம் படு க்யூட்டாக வந்த சினேகாவைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது. ஹோட்டல் திறப்பை மு…

  24. சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி! -இராமானுஜம் தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. 1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழ…

    • 9 replies
    • 2.3k views
  25. அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-) வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.