Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -எஸ்.நயனகணேசன்- நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான `ஜனபதி ஹமுவ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ `புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை' என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும்…

    • 5 replies
    • 2.1k views
  2. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் EPDPயின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினத்தின் சகோதரர்:- ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் கடந்த 18ம் திகதி விஷம் கலக்கப்பட்டது. விஷம் கலக்கப்பட்ட குடிநீரை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விஷம் கலந்தமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விசேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் துரித கெதியில் மேற்கொள்ளபட்டு வந்தன. அந்த விசாரணைகளில் பிரகாரம் அப் பாடசாலையின் இரவு நேர காவலாளிகள் இருவரை கடந்த திங்கள் கிழமை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விசாரணைகளுக்கு அழைக்கும் போதெல்லாம் பொலிஸ் நிலையம் வர வேண்டும்…

    • 5 replies
    • 703 views
  3. புதிய அரசு எத்தகையதென்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக நீதிமன்ற தடைகளை பெற்றிருப்பதை கொண்டு புரிந்துகொள்ளமுடியுமென தெரிவித்துள்ளார் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன். முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் , வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடமும் தடை உத்தரவு கடிதத்தை அவர்களது வீடுகளினில் வைத்து இலங்கைப்பொலிஸார் கையளித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த அவர் கடந்த 12ம் திகதி நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நாங்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையினில் விளக்கேற்றியிருந்தோம். ஆனால் எதிர்வரும் 18 ம் திகதி நின…

  4. வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (4) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…. 4ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலை…

  5. பசில் கைது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172053/%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.UHLn6Sce.dpuf

  6. <p>Your browser does not support iframes.</p> தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்! பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வௌியிடுகையில், பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை நாம் பாராட்டுகின்றோம். ஒரு கருத்து இருக்கின்றது இன்றைக்கு தமிழ் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள் என்று ஒரு…

  7. சம்பந்தன் கோரும் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களை ஏற்க முடியாது! – கூட்டமைப்பு பாதை மாறுவதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு. [Tuesday, 2014-02-11 07:18:36] இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வை இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்- இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பத…

  8. தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என கூறி ஒரு கோடி பெறுமதியான வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்துள்ளனர். இலங்கையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 150 அங்கத்தவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திற்கு வருகை தந்ததுடன் இன்றில் இருந்து தங்கூசி வலைகளைப் பயன்படுத்த மாட்டோம் என கையெழுத்து இடப்பட்ட கடிதம் ஒன்றினை கையளித்தனர். இதன்படி யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் …

    • 5 replies
    • 1.1k views
  9. திலீபன் நினைவேந்தலை தடுக்கும் சிறிலங்காவின் முயற்சி – நீதிமன்றில் இன்று முக்கிய விசாரணை தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், நாளை நடத்த ஏற்பாடாகியுள்ள 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறும், திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி உள்ளிட்டவற்றை அகற்ற யாழ். மாநகர சபைக்கு உத்தரவிடுமாறும் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட யாழ்.நீதிவான்…

  10. இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டபூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லையென சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவரை இலங்கை அரசு கொலை செய்ததா என்பதில் அவர்களிடமே குழப்பம் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இன்று புலனாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இன்று மக்கள் குழம்பவில்லை. மாறாக அரசியல் தலைவர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyBRbKchvy.html

  11. அரச நியமனங்கள் வழங்குவதில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன் ஊடாக அவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக் கொடுத்தமைக்கு, நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எங்கள் பக்கமுள்ள சரியான ஆதாரங்களை முன்வைத்து நியமனங்களை பெற்றுக்கொண்டோம். நியமனங்கள் பெற்ற சகலரும் தமது செயற்றிறன்களைக் காட்டி மற்றவர்களுக்கு ஒரு சவாலாக விளங்கவேண்டும். குறித்த வழக்கானது 278 பேர் கொண்ட…

    • 5 replies
    • 511 views
  12. சிறிலங்கா உச்ச நீதிமன்றினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக வழங்கிய இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக மைத்ரி – மஹிந்த அணியினர் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரச தலைவரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக வாணிப்பத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தத் தகவலை மைத்ரி – மஹிந்த அணியினரின் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக முன்னிலையாகிய சடடத்தரணி பிறேம்நாத் சீ தொலவத்தவும் உறுதிப்படுத்தினார். https://w…

  13. November 19, 2018 பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆவர். இவர்களின் முழு நேர தொழில் இன்று பாராளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவுவதும், நமது ஆட்சி ஆரம்பித்து வைத்த “கம்பெரலிய” என்ற ஊரெழுச்சி வேலைத்திட்டங்களை இடை நிறுத்தி வைப்பதும் ஆகும். எனவே இந்த மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …

  14. புகையிரதப் பாதையில் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தபாய படைகள் அறிவிப்பு. இதனால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, காலிவீதியில் சனநெரிசல் அதிகரித்துள்ளது.

  15. கர்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னர் இன்று (08.09.2011) நாடு திரும்புகின்றார்.. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளிநாடு சென்ற சோனியா, 4ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சோனியா வெளிநாடு சென்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது படேல், ஜனார்த்தன் திவேதி மற்றும் ராகுல் ஆகியோர் கவனிப்பர் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட சோனியாவுக்கு சில நாட்கள் உதவியாக இருந்த ராகுல், சமீபத்தில்தான் டில்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்த சோனியா, இன்று இரவு நாடு திரும்புகிற…

  16. கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்ப…

  17. யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா திடீர் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஆலய சூழலில் ஜனாதிபதிக்கு அருகில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் யாழில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன் அருகில் உள்ள வாறான சுவரொட்டிகள் பெருமளவில் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டிகளை ஜனாதிபதி ஆலயத்திற்கு வருவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னராக சிவில் உடை தரித்த ஒருவர் கிழித்து அகற்றினார்கள். அதில் ஜனாதிபதியின் படம் இருக்க கூடியவாறு தனியே அங்கஜனின் படங்களை மட்டுமே கிழித்து அகற்றினார்கள். என்பது குறிப்பிடத…

    • 5 replies
    • 625 views
  18. 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட…

  19. இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களின் 90 விழுக்காட்டினர் மத்தியில் புதிய வகை சுவாச நோயின் பாதிப்பு! வைத்தியர்கள் எச்சரிக்கை வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90 விழுக்காட்டினர் வரை புதிய வகை சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகியிருப்பதாக யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்சரித்துள்ளார். இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களிடையே மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள நாழிதழ் ஒன்றிற்கு அவர…

  20. நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு! நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையானது ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் சீரற்ற வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குறித்த கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்ப …

  21. தொற்று நோயின் பின்னணியில், சிறுபான்மையின முஸ்லிம் சமூகம் குறித்து, வெறுக்கத்தக்கப் பேச்சுகள் நாடளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு வருவதாகவும் பகிரங்கமாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நேற்று (13) தெரிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தாலேயே, வேண்டுமென்றே இந்தத் தொற்று நோய் பரப்பப்படுவதாகவும் இதனால், முஸ்லிம்களின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் பல கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட குழுவொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் பகிரங்கக் கருத்துகள் குறித்து, இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று, ஏப்ரல் 12ஆம் திகதியன்று, முஸ்லிம் சமூகத…

    • 5 replies
    • 787 views
  22. வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்.! வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது. வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி கோட்ட…

    • 5 replies
    • 704 views
  23. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல்கள…

    • 5 replies
    • 1k views
  24. யாழ்.போதனாவைத்திய சாலையில் இராணுவத்தினர் இரத்த தானம் 512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில்23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர். இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிக்ழவ ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல்,அஜித் பல்லாவல தெரிவித்திருந்தார். http://onlineuthayan.com/News_More.php?id=419062201327515285

    • 5 replies
    • 409 views
  25. நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, முழுநிலவு நாளான நாளை மறுநாள் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் முழுநிலவு நாள் சிறிலங்காவில் விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த நாளில் எந்த அரச பணிகளும் ஆற்றப்படுவதில்லை. இந்தநிலையில், நாளை மறுநாள்- முழுநிலவு நாளில் அமைச்சரவையை அவசரமாக கூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நாளை மறுநாள் காலை 7 மணியளவில் சிறிலங்கா அமைச்சரவைக் கூடம்டம் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.