Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. புல்லாங்குழல் மேதையும் மருத்துவருமாகிய டாக்டர் தியாகராஜா கெங்காதரன் காலமானார் . தியாகராஜா சுகிர்தம் தம்பதியரின் மூத்தமகனாக 1929 ஆம் ஆண்டில் பிறந்த கெங்காதரன் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் ஆவார். பள்ளிப் படிப்பில் தேறி மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி 1953இல் மருத்துவராக அரச சேவையில் இணைந்தார். பத்தாண்டுகள் அரச சேவையில் பணியாற்றி பின்னர் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தொடர்ந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, மானிப்பாய் கீறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் யாழ். மக்களுக்காகத் தனது சேவையை வழங்கினார். வண்ணார்பண்ணையில் தனது வைத்திய நிலையம் ஒன்றை நிறுவியும் சேவை நல்கினார். . 1995 இ…

    • 21 replies
    • 1.7k views
  2. மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவில…

    • 4 replies
    • 679 views
  3. யாழ்க்கள உறவும், NOW-WOW நிர்வாகியும், கடந்த தவணையில் நாடுகடந்த அரசின் மாசாசுசெட் மானிலத்தின் பிரதிநிதியுமான சுபா சுந்தரலிங்கத்தின் தந்தையாராகிய சுந்தரலிங்கம் தம்பிமுத்து 17 பெப்ரவரி 2015திலன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபரங்கள். திரு சுந்தரலிங்கம் தம்பிமுத்து பிறப்பு : 28 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 17 பெப்ரவரி 2015 யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை மூர்த்த நயினார் கோவிலடி, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015,…

  4. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார் FEB 17, 2015 | 18:16by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்றுமாலை அங்கு மரணமானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற கனகசுந்தரசுவாமி, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீ…

  5. ஈழத்தின் கலைப் பெருமையாக கொண்டாடப்பட்ட வில்லுப்பாட்டுக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை (வில்லிசை "சின்னமணி") இயற்கை எய்தினார். சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (பிறப்பு: மார்ச் 30, 1936) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞர். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார்.உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செ…

  6. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் ஊரில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு சிறிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராகவன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். 1954ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த ராகவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்கள் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் இந்தக்கால விமல், விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களுடன் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த ராகவன் உடல்நலம் சரியில்லாமல் சென்னைய…

  7. மொன்றியல் கிய10பெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் களத்தின் தலைமையாளராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேசப்பற்றாளர் முரளி (துரைரத்தினம் முரளிகரன்) அவர்கள் இந்த மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இரவு மொன்றியல் வைத்தியசாலையொன்றில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். தமிழீழத் தாயகத்தில் புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முரளி அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். 1966ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி ‘சான்டோ’ என அழைக்கப்பட்ட துரைரத்தினம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முரளி இளமைக் காலத்திலிருந்தே தேசிய விடுதலை உணர்வின்பால் ஈர்க்கப்பட்டு அப்பாதையில் தடம் பதித்தவர். 1992ம் ஆண்டு கனடாவுக்குப் புலம் பெயர…

  8. வீரத்தின் தந்தையே நீர் வீரமாய் உறங்கும்.....

  9. இயக்குநர் பாலச்சந்தர் காலமானார் டிச 23,2014 19:37 சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார் 1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை ந…

    • 40 replies
    • 3.8k views
  10. முன்னாள் மகாஜானக்கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் இறைபதம் அடைந்தார்

  11. விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) இன்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். 1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார். தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது. 1987-ம் ஆண்டு ஆனந்த விக…

  12. எங்கள் கள உறவு விசுகு வின் அண்ணா சற்று முன்னர் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத் தருகின்றோம். அண்ணனின் பிரிவால் துவண்டு இருக்கும் விசுகுவின் துயரிலும், அவர் குடும்பத்தின் துயரிலும், அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தின் துயரிலும் நாமும் பங்குகொள்கின்றோம். எம் கண்ணீர் அஞ்சலிகள்

  13. பாசமிகு கள உறவு சுவி அண்ணா அவர்களின் தாயார் இறைபதமடைந்தார்.. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக........ சுவியண்ணாவின் தாயாரின் ஆத்ம சாந்தி வேண்டி எனது குடும்பம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.... சாந்தி சாந்தி சாந்தி........

    • 60 replies
    • 6.4k views
  14. இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார். அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொ…

  15. பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார் சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார் https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10470955_819412018096933_500634717372297573_n.jpg?oh=ef7f5904ec30b8a3448fa12aaaf83175&oe=54EB021B

  16. சென்னை: பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இந்த அசோக்குமார், ஊரப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை மரணம் அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜானி, கமல்ஹாசன் நடித்த வெற்றிவிழா, பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக அசோக்குமார் இருந்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருதை அசோக்குமார் பெற்றுள்ளார். மறைந்த அசோக்குமாருக்கு, மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=3381…

  17. எழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் t ராஜம் கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை. 1925இல் முசிறியில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். உயர் கல்வியும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இவருக்கு அக்கால நியதிப்படி இளம் வயதில் திருமணமாயிற்று. மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் அழுத்தத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலத்தில் படைப்பாற்றல் மட்டுமே அவருக்குப் பற்றுக்கோலாக இருந்தது. இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமையலறையைக் கழுவித் தள்ளிவிட்டு அதன் ஈரம் காயாத தரையில் உட்கார்ந்துகொண்டு எழுதுவார். எழுதுவதற்கு காகிதம் வேண்டுமே? கடையில் பெரிய தாள்களில் வழங்கப்பட்ட ரசீதுகளின் மறுபக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.…

  18. இலங்கையின் மூத்த இலக்கியவாதி காவலூர் ராஜதுரை காலமானார் இலங்கையின் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான காவலூர் ராஜதுரை ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் தனது 83வது வயதில் காலமானார். இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இவர் முன்னர் பணியாற்றியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்ட காவலூர் ராஜதுரை அவர்களின், கதை வசனத்தில் வெளியான ''பொன்மணி'' திரைப்படம் இலங்கையில் தயாரான தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்ததாகும். தனது இறுதிக் காலத்தில், காவலூர் ராஜதுரை பல வருடங்களாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பி…

  19. கல்வி கற்ற மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட யாழ் பரியோவான் கல்லூரி (St John's college) ஆசான் திரு. ரோனி கணேசன் அவர்கள் இன்று காலமானார் எனும் துயர் மிக்க செய்தியை பகிர்ந்து கொள்கின்றேன். மாணவர்கள் மீது கண்டிப்பும் கனிவும் கொண்ட ஒரு தோழனாக தன்னை நிலைநிறுத்தி கற்ற அனைவரின் உள்ளங்களிலும் ஒரு சக உறவாக இன்று வரை இருந்த எமதருமை ஆசானுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

    • 13 replies
    • 1.6k views
  20. இன்று மாலை காலமான பிரபல தொழிற்சங்கவாதி பாலா தம்புவுக்கு எம் அஞ்சலிகள். சுரண்டும் வர்க்கத்தால் விலைக்கு வாங்க முடியா சிம்ம சொப்பனமாக ஒரு காலத்தில் திகழ்ந்தார் என்பதும், கடைசிவரை தன் இன அடையாளம் தன்னை துரத்த அவர் இடம் கொடுக்க வில்லை என்பதும் இவரது பல சிறப்புக்களில் சில. fb.

    • 12 replies
    • 1.8k views
  21. திரு மனோ கணேசன் அவர்களின் அம்மா இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    • 19 replies
    • 1.6k views
  22. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் யாழ் எய்ட் ஆலோசகரும்,கலிங்கம் இதழின் செயற்குழு உறுப்பினருமான வரதராஜன் மாஸ்டர் காலமானார்.அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் அவர் ஆத்மா சாந்தி அடையவும்.கடவுளை வேண்டுகிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.