Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழிப்புக்கை

Featured Replies

.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் ....

... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!!

... அது என்ன கோழிப்புக்கை?????

.... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ... அப்ப தோட்ட குடிலுகளுக்குள் ஏதாவது செய்து சாப்பிட வேண்டும்!! அதுவும் வாயுக்கு சுவையாக ... சூடாக ... காரமாக ... உதற்கான கண்டு பிடிப்புத்தான் கோழிப்புக்கை!!!!!!!!!!!!

கள்ளுக்கு போகும் முன் ஊரில் ஒரு தெரிந்த வீட்டில் உள்ள கோழியை அமுக்கியாச்சு .... உரபாக்கில் போட்டுக் கொண்டு .... கொஞ்ச அரிசி, வெங்காயம், மிளகாய், தூள், ... ஒரு பெரிய பாத்திரத்துடன் குடிலுக்குள் ஒதுங்கினால் ..... கோழிப்புக்கை!!!!!

இங்கு ... புலத்தில் ... கொஞ்சம் மொடேனாக ... மெருகூட்டி ... கொஞ்ச ஸ்டைலாக செய்வதானால் ...

தேவையான சாமான்கள்: (ஒரு ஆறு பேருக்கு)

பச்சை குத்தரிசி - 2 1/2 சுண்டு (அண்ணளவாக, கூட போட்டால் அடுத்த நாளுக்கும் மனுசிமார் வைச்சிடுவாளல்)

சிறிய துண்டுகளாக வெட்டிய கோழி - ஒன்று (மேய்ந்து திரிந்த கோழி என்றால் நல்லது (Free Range Chicken). அடைத்து வைத்ததென்றால் சிலவேளை கரையப் பார்க்கும். கோழியில் தோலைத் தவிர வேறொன்றையும் கழிக்கத் தேவையில்லை, எலும்பு, கிலும்பு எல்லாம் போடலாம்)

சின்ன வெங்காயம் - உரிந்துப் போட்டு வெட்டாமலும் வைத்திருக்கலாம்

பச்சை மிளகாய் - நாலு, ஐந்து கூறாக பிளந்தது

மிளகாய்த்தூள் - தேவையான அளவு தூள் ( உறைப்பு கூட வேண்டின் நாலு, ஐந்து கரண்டி போடலாம்)

சிறிய காளான்கள் - வெட்டாமல் போடலாம்

மல்லி இலை அல்லது கருவேற்பிலை - சிறிய அளவு

வாசனை தூள் - பெரும் சீரகம், கறுவா, ஏலக்காய், கராம்பு, சாதிக்காய் எல்லாவற்றையும் போட்டு வறுத்து, பொடியாக்கி வைக்க வேண்டும்.

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய் - பாதி

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில்(பானையில்) போதிய அளவு நீரை எடுத்து, கொதிக்க வைத்து, அதனுள் பச்சை அரிசியை போட்டு அவியவைக்கவும்(ஏறக்குறை புக்கை செய்வது மாதிரி). ... அரிசி அரை பதத்தில் அவிந்து வந்தவுடன் ... அதனுள் வெட்டிய கோழியையும் போட்டு .. மிளகாய் தூளையும் போட்டு ... தேவையான அளவு உப்பையும் சேர்த்து அவிய விட வேண்டும்!! அத்துடன் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.

மு.கு: பச்சை அரிசி அவிய ஆரம்பித்தவுடம் தொடர்ச்சியாக கிண்டிக்(கிளறிக்) கொண்டிருக்க வேண்டும், அத்துடன் மிளகாய் தூளையும் போட்டால் சிலவேளை அடிப்பிடிக்க(பாத்திர அடி எரிய) ஆரம்பிக்கப் பார்க்கும். அதனை தவிர்க்க தொடர்ந்து துலாவிக் கொண்டிக்க வேண்டும். அடிப்பிடித்தால் கோழிப்புக்கை வாயில் வைக்க இயலாது, சக்கரைப் புக்கை அடிப்பிடித்தால் எப்படியோ, அதேபோல்!!!

அவிந்து வரும் போது தண்ணீர் தேவைப்படின் சேர்க்கவும்.

பின் கழுவி வைத்திருந்த சிறிய காளான்களையும் போட்டு கிளறி அவிய விடவும். தூளும் (தூள் மணம் போக வேண்டும்), பச்சை அரிசியும் முற்றாக அவிந்த நிலையில், சின்ன வெங்காயங்களையும் சேர்க்கவும் ............. அதன் பின் உப்பையும் சரி பார்த்து விட்டு ... வாசனை தூள் ஒன்றோ இரண்டு கரண்டி போட்டு கலக்கவும்/சேர்க்கவும். ... தொடர்ச்சியாக கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கும் தறுவாயில் மல்லி இலையை போட்டு விடலாம்!! பின் விரும்பின் சிறிதளவு தேசிக்காய்புளியையும் விட்டு சேர்க்கலாம்!!! ... கோழிப்புக்கை!!!

சாப்பிடுவது சுடச்சுடவாக இருப்பின் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அத்துடன் சிறிதளவு மகிழ்வூட்டும் பாணம்... சொல்லி வேலையில்லை!!!

.... யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக ......

Edited by Nellaiyan

அண்மையில்தான் கோழிப்புக்கை உண்ணும் சநு்தர்ப்பம் முதல்தடவையாகக் கிட்டியது. (கோழிப்புக்கை என்றொரு உணவு இருப்பதென்ற விசயமே அப்போதுதான் தெரிந்தது)

வடமாராட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமைத்திருந்தார்..

பாவி ஒரு போத்தல் மிளகாய்த் தூளை கவிட்டுக் கொட்டீட்டுதூ தெரியேலை.. உறைப்பென்றால் அப்படி ஒரு உறைப்பு.. எனினும் அதன் சுவைக்காக அழுதழுது சாப்பிட்டுவிட்டு.. மறுநாள் அவதிப்பட்டதுதான் தாங்க முடியலை.

பிரியாணி கிரியாணி எண்டுறாங்க.. எண்டாலும் கோழிப்புக்கையை அடிக்கேலாது.. :icon_mrgreen:

சமையல் குறிப்புக்கு நன்றி.

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்தான் கோழிப்புக்கை உண்ணும் சநு்தர்ப்பம் முதல்தடவையாகக் கிட்டியது. (கோழிப்புக்கை என்றொரு உணவு இருப்பதென்ற விசயமே அப்போதுதான் தெரிந்தது)

வடமாராட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமைத்திருந்தார்..

பாவி ஒரு போத்தல் மிளகாய்த் தூளை கவிட்டுக் கொட்டீட்டுதூ தெரியேலை.. உறைப்பென்றால் அப்படி ஒரு உறைப்பு.. எனினும் அதன் சுவைக்காக அழுதழுது சாப்பிட்டுவிட்டு.. மறுநாள் அவதிப்பட்டதுதான் தாங்க முடியலை.

பிரியாணி கிரியாணி எண்டுறாங்க.. எண்டாலும் கோழிப்புக்கையை அடிக்கேலாது.. :icon_idea:

சமையல் குறிப்புக்கு நன்றி.

உண்மைதான், வடமராட்சியைச் சேரந்தவர்கள் தான் கோழிப்புக்கை செய்வார்கள். கனடா வந்த காலத்தில் வல்வெட்டிதுறையை சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தாதால் நானும் சாப்பிட்டு இருக்கிறேன். இப்ப கனகாலம் சாப்பிட்டு... :rolleyes:

செய்முறை உள்ளதால் ஒருக்கா செய்து பாக்கவேணும். முழுக்கோழியை வாங்கி எலும்புகளோட போட்டால் தான் சுவையாக இருக்குமெண்டு நினைக்கிறேன் (அப்படித்தான் ஞாபகம் இருக்கு). அப்பிடியோ நெல்லையான்?

இல்லையெண்டால் அடுத்த நண்பர்வட்ட சந்திப்பில் சகாரா அக்காவும் செய்து தரலாம். :icon_mrgreen:

Edited by Sabesh

  • தொடங்கியவர்

.... அப்போது சிங்களவன் படித்த பள்ளிக்கூடத்தையும் கொழுத்திப் போட்டான் .... அப்பர் பார்த்தார் இது றோட்டில் தான் நிற்கப்பாக்குது ... ஊரில் உழாதது வன்னியில் ஆவது உழும் என்ற நப்பாசையில் .... கொழும்பு கொண்டு சென்று விட ...

.... அப்போது ஒருநாள் ..... ஊரில் ....என்னோடு ஊரில் உழுது திரிந்ததுகளின் கைகளில் பத்தோ, இருபது கையில் கிடைத்தவுடன் ... போய் நாலு போத்தல் கள்ளையும் வாங்கி வந்து ... அரிசி, தூள், பாணை, ... என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு திரிந்தால் கோழி அம்பிடவில்லையாம்!! . இறுதியாக அவர்களுக்கு கண்ணில் பட்டது என் வீட்டு கோழியே!! பின் பக்கத்தினால் என் வீட்டுக் காணிக்குள் உள்ளட்டு விட்டு, கூட்டினுள் அடைத்து வைத்திருந்ததுகளில் ஒன்றை அமுக்கி கொண்டு பின் பக்கத்தால் ஓடி .... தோட்ட குடிலில் கோழிப்புக்கையையும் செய்து, கள்ளையும் முடித்து ... சிறிய ஓய்வின் பின் ...மீண்டும் ஊர் உழ வெளிக்கிட்டு என் வீட்டருகே வந்தால் ....

... என் மம்மி ஒரு கம்போடு நிற்கிறாவாம்!! ..... கேட்டிருக்கிறார்கள்

... "என்ன நடந்தது, கம்புடன் நிற்கிறீர்கள்" ...

..."யாரோவடா, இன்று எங்கடை கோழி ஒன்றை களவெடுத்துக் கொண்டு பின் பக்கத்தாலை ஓடீட்டாங்கள், சத்தம் கேட்டு போறதற்கிடையில் போட்டாங்களடா" ...

மம்மின் முகத்தில் கோபம் நெருப்பு பிளம்பாகவாம்!!

..."அப்ப கோழியை பிடித்தவங்களை நீங்கள் காணேலையோ??"..

... "இல்லையடா" ..

..."ஆ... ஒரு கோழிதானே போனது விடுங்கள்், ..." ... என்று சொல்லி விட்டு மீண்டும் ஊர் உழ .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் அண்ணா நீங்க வடமராட்சிதானே? நெல்லியடியா?

ஏனென்றால் எனக்கு தெரிய வடமராட்சி பொடியள் தான் இது செய்யுறதா சொல்லுவங்கள். வீட்டிலை செய்யிறதா சொல்லலை நீங்கள் சொன்ன மாதிரி கள்ள கோழி தான்.

ஒருதடவை இங்கை சாப்பிட்டு இருக்கன். என்னொடை இருக்கிற ஒரு பொடியன் செய்து தந்தான். நல்லா இருந்திச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னால் நம்பமாட்டியள் நான் இப்பவும் மாதத்திலை ஒருநாளாவது கோழிப்புக்கை சாப்பிடாமல் இருந்ததில்லை.

சாப்பிட்டவனுக்குத்தான் தெரியும் அதின்ரை அருமை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

  • தொடங்கியவர்

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

:icon_mrgreen:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

”வேதம்:ஸ்மிருதி:சதாச்சார்: ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன:!”

”யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!

ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

”ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள!”

”யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ யாஸ்ச காஸ்ச குத்ருஷ்:!

ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா ஹித்: ஸ்ம்ருதா:!!”

”வேதாயத்வோபநிபந்திருதத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்ம்ருத்

மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந சஸ்யதே!!”

”புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!

ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!”

  • 1 year later...

இந்த வார விடுமுறையில் ஒருக்கால் செய்து சாப்பிட வேண்டும் கோழிப் புக்கையை

  • கருத்துக்கள உறவுகள்

கரவெட்டியில் அடிக்கடி சாப்பிட்டது இப்போதும் வாயூறியபடி உள்ளது.

நன்றி நெல்லையன்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை முதல் தாக்குதலை தொடங்கணும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரைக்கும் கோழிப்புக்கை சாப்பிட்டதே இல்லை ...... செய்து சாப்பிட்டு பார்க்கவேண்டும். :)

பகிர்விற்கு நன்றி நெல்லையன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.