Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20014
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3054
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/26/24 in Posts

  1. தனி நபர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் ஒரு அரசின், அரச இயந்திரத்தின் தன்மையை ஒரு போதும் மாற்றிவிட முடியாது. சந்திரிகா வர முதல், அவரை சமாதான தேவதை என்று போற்றினர். தனிப்பட்ட ரீதியில் அவர் இனவாதி அல்ல என்றனர். வன்செயல்களால் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி என்பதால் அவர் தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பார் என்றனர். அவரும் அவ்வாறு தான் தன்னை வெளிக்காட்டி இருந்தார். ஆனால் இலங்கை அரசும், அரச இயந்திரமும் முற்றிலும் பெளத்த பேரினவாதமயப்படுத்தப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் ஏற்படாமல், தனி நபர்களின் குணாதிசயங்களால் மாற்றங்கள் ஏற்பட மாட்டாது. அதனால் தான் இனவாதி அல்ல என்று அறியப்பட்ட சந்திரிக்கா ஈற்றில் போரில் கடும் உயிர்பலிகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்த குமார் பொன்னம்மபலத்தைக் கூட பாலபெட்டபெந்தியி மூலம் படுகொலை செய்தார். அனுர மட்டும் இதில் விதிவிலக்காக அமைவார் என நான் நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஒரு துரும்பும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரம், தமிழ் மக்களிற்கு இன்று இருக்க கூடிய சில நெருக்கடிகள் மேலும் குறையும்.
  2. இல்லை, நுணா..! வரதராஜப் பெருமாள் தான் அங்கு படித்தவர்…!
  3. துட்டகைமுனு குறுகிப் படுத்த கதையில் இருந்தும், மகாவம்ச மனநிலையில் இருந்தும் பெரும்பான்மையான சிங்களவர்கள் விலகவில்லை. தொடர்ந்து ஆட்சியில் இருந்த மகிந்த குடும்பத்தினர் மீது, ரணில் ஜனாதிபதியாக இருக்கவும் மொட்டுக்கட்சிதான் முட்டுக்கொடுத்தது, உள்ள வெறுப்பாலும், சஜித் பிரேமதாஸவின் ஆளுமையற்ற தலைமையாலும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமாரவுக்கு சிங்களவர்கள் வாக்குகளை அள்ளிப்போட்டனர். ஆனால் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை (113 ஆசனங்களை) தேசிய மக்கள் சக்தி அடைவது கூட சவாலான விடயம். எனவே சிங்களவர்கள் மாறிவிட்டார்கள் புளகாங்கிதம் அடைந்து மனப்பால் குடிக்காமல் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சரியானவர்களை வரும் தேர்தலில் தெரிவுசெய்யவேண்டும். ஆனால் தேர்தலில் கிடைக்கக்கூடிய 10-15 ஆசனங்களுக்குப் போட்டியிடவே பழசுகள் 20-25 பேர் நந்திகளாக இருக்கின்றார்கள். எனவே, தமிழர்களுக்கு சில சலுகைகளுக்கு மேல் ஒன்றும் கிடைக்காது என்பது உண்மைதான்!
  4. தலைவரின் 2005 மாவீரர் நாள் உரையிலிருந்து.. சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது. சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது அநுரகுமார சந்திரிக்கா அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர். இந்த 19-20 வருடங்களில் அவர் எவ்வளவு தூரம் இனவாதத்தை விட்டார் என்று தெரியவில்லை.
  5. உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்தால் உன்னை அம்மணமானவன் என்றழையார் என்று என் அம்மா சொன்னது நினைவிலே வந்து போனது! என் சக்தி முழுவதையும் திரட்டி சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன் சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில் ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு யாரோ ஒரு போராளியினுடையதாக இருக்க வேண்டும் மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து நூலைப் பிரித்தெடுத்து என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன் இப்போது எனக்கொரு திருப்தி! தொலைவில் ஒற்றை வெடியோசைகள் வெடிப்புகள் எனக் கேட்டன... மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன் எதுவுமே தெரியவில்லை கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் நான் ஒரு அரச ஊழியன் ஆனாலும் நான் தமிழன் அல்லவா இடுப்பு நூலுக்கும் விசாரணை விளத்தங்கள் அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன அரைநாண் கயிறை இப்போதுவரை அணிந்திருக்கிறேன்! அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் அள்ளிச் சென்றுவிட்டது உறவுகளில் ஏறக்குறையத் தொண்ணூறுவீதம் பேரையும் இழந்துவிட்டேன் நண்பர்கள் ஒரு சிலரோ வாடா வெளிநாடென்கிறார்கள் அரைநாண் கயிற்றையும் இழக்க முடியுமா அம்மா சொன்னதை மறக்க முடியுமா இழப்பதற்கு நான் தயாரில்லை எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு பொருண்மியத் திரட்சி இல்லையென்றாலும் மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது! என்னைப் பார்க்க வந்த வெளிநாட்டு உறவொன்று மரவள்ளிக் கிழங்கும் கட்டைச் சம்பலும் அற்புதமென்றான் அற்புதங்கள் நிகழ்துவதாய் பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும் ஆபத்து வருமா(?) என்ற வினா என்னைத் தொடர்கிறது! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. ராஜகுமார் ரஜீவ்காந்த் சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் செய்வதன் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையுடன் சிங்கள இளைஞர்களுடன் இணைந்து வேலை செய்பவர். சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கமும் இவருடன் இணைந்தே பணியாற்றுகின்றார்.
  7. ஒருக்கா சொல்லிப் பாருங்க அப்புறமா பாருங்க. நல்ல செய்தி என்றால் எங்களுக்கும் சொல்லுங்க. பறவாயில்லையே. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பார்கள். நீங்க 3 வருடத்துக்கு இழுத்திருக்கிறீர்களே. பலே கில்லாடி தான்.
  8. அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!
  9. நீங்கள் முதலில் எங்கள் கமிஷனை வெட்டுங்கள், அது வந்தால் பிறகு, உங்களுக்கு பார் லைசென்ஸ் எடுத்துத்தரலாம்
  10. 🙃......... அங்கே நாட்டில் ஒரு நீண்ட வரிசையே நிற்குது...... ஒரு நண்பன் வாக்கு போட்டு விட்டு, ஒரு விரலை படமும் எடுத்து போட்டு விட்டு, சிஸ்டம் மாறவேண்டும் என்ற செய்தியும் போட்டிருந்தான் என்று முன்னர் இங்கு எழுதியிருந்தேன். அவன் இப்ப அங்கே ஒரு கோயில் கட்ட தயாராகி விட்ட மாதிரி தெரிகின்றது....... அநுரவிற்குத்தான்......படித்தவன், பதவியிலும் இருக்கின்றான்................ அவனுக்கு இப்ப எல்லாம் ஒரு நேர்கோட்டில் வருகிறது போல...😀. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி சார்பாக கிழக்கு மாவட்டம் ஒன்றில் நின்று படுதோல்வியடைந்தவர்களில் ஒருவனும் இதே வகுப்பு தான்........... இந்த தடவையும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பான்...... எனக்குத் தெரிந்த அளவில் அவன் செய்யும் ஒரே வேலை தேர்தலில் நிற்பது மட்டுமே.............😜. இப்படி இன்னும் சில உதாரணங்கள் உண்டு. இதில் எவரையும் அநுர கண்டுகொள்ளவில்லை என்றால், அநுர சரியான வழியில் போக முயற்சி செய்கின்றார் என்று சொல்லலாம்..........
  11. கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான். நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும். இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர். தக்கண பிழைக்கும்.
  12. "இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான். அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா? அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும். இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை. இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில் IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது. அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது. இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை.
  13. தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி. எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? இது தான் பலரதும் கேள்வி. கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்?
  14. இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தமிழர்கள், நீதி மற்றும் இனவாதம் 24 செப்டம்பர் 2024 இலங்கையின் புதிய ஜனாதிபதி, தனது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹரிணி அமரசூரியவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற தகவல்களுக்கு மத்தியில் அனுர திஸாநாயக்க அமரசூரியவை நியமித்துள்ளார். ஈழத் தமிழர்கள், இலங்கையில் இனவாதம் மற்றும் 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு பற்றி அமரசூரிய முன்னர் கூறிய கருத்துக்களை நாம் திரும்பிப் பார்க்கிறோம். கருப்பு ஜூலை கொழும்பில் தமிழ்த் துறைகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதை நிறுத்திய சிங்களக் கலவரக்காரர்கள் கொண்டாடுகிறார்கள் 2020 ஆம் ஆண்டு பெண்கள் அரசியலுக்கு அளித்த நேர்காணலில் , அமரசூரிய 1983 கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் , அப்போது அரசாங்க ஆதரவு சிங்கள கும்பல் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றது. அவளிடம் கேட்கப்பட்டது: இலங்கையில் மோதல்களுக்கு மத்தியில் எப்படி வளர்ந்து கொண்டிருந்தது? குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கடினமான காலகட்டம் இருந்ததா? தமிழ் பெண்கள் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபெடரலிடம் பேசிய அமரசூரியவிடம் கேட்கப்பட்டது: இலங்கையில் நடந்த நீண்ட உள்நாட்டுப் போரில் பெண்களும் குழந்தைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைத் தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறீர்கள். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் அவர்களின் குரல்களை உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட வடக்கு-கிழக்கு முழுவதிலும் உள்ள தமிழர்கள் உள்நாட்டு உண்மையைத் தேடும் பொறிமுறையை மீண்டும் மீண்டும் நிராகரித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மூலம் சர்வதேச பொறுப்புக்கூறலை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் குடும்பங்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொரு 2020 நேர்காணலில், அமரசூரிய கூறினார், சிங்கள இனவாதம் பற்றி மே 2020 இல் தி வயர் இதழில் அமரசூரிய எழுதுகையில் , 13 வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான NPP நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டபோது, அமரசூரிய கூறினார் : அவள் மேலும் தெரிவித்தாள், அமரசூரியவின் உறுதிமொழி இருந்தபோதிலும், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக அவரது கட்சியில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசினர் . 1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி அரசுக்கு எதிராக இரண்டு கிளர்ச்சிகளை நடத்தியது. இவற்றில் பிந்தையது முக்கியமாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முயன்ற 13வது திருத்தத்தின் பிரதிபலிப்பாகும். பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாயின் ஜே.வி.பி எதிர்ப்பதாக 2010 இல் திஸாநாயக்கவே கூறினார் . தொடர்புடைய கட்டுரைகள்: 22 செப்டம்பர் 2024 : அனுரகுமார திஸாநாயக்க இலங்கை அதிபராகப் பிரகடனம் செய்தார் 20 செப்டம்பர் 2024 : அனுரகுமார திஸாநாயக்க யார்? நிழழி இணைத்த இணைப்பை கூகிள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  15. விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை. ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.
  16. // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை. விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.// இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்
  17. 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச் சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும். தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ" என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
  18. இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில், VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும். மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/srilanka-new-passport-system-president-order-1727363241
  19. Tiran Alles தான் இதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் மற்றும் இறுதிவரை அந்த குளோபல் நிறுவனத்திற்காகப் போராடியவர். 10 மில்லியன் டாலர்கள் லஞ்சம் என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, வாங்கியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகின்றேன் என்றார். எல்லா நாடுகளிலும் இப்படியான அரசியல்வாதிகள் இந்த ஒரு வசனத்தை மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்......... பின்னர் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட பின்னும், பழைய நடமுறைக்கு போகாமல், ஆறு மாதங்கள் வேண்டும் என்று இவரே இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இவரின் கீழ் இருந்த ஆணையாளர் முந்தாநாள் சிறைக்கு போனார். பழைய நடைமுறையில் விசா வழங்கும் முறை உடனேயே மீண்டும் வந்துவிட்டது........ ரஜனியின் 'சிவாஜி' படத்தில் 'ஆபீஸுக்கு வாருங்கள்.........' என்று ஒரு காமடி இருக்கிறது தானே........ Tiran Alles அவுஸ்திரேலியா குடியுரிமை உள்ளவர் என்று எங்கோ வாசித்த ஞாபகம். ஓடி விட்டாரா என்று தெரியவில்லை. இவர் முன்னொரு காலத்தில் ஜேவிபி ஆதரவாளராக இருந்தவர். விமல் வீரவன்ச போல அவர்களில் ஒருவராக இருக்கவில்லை, ஆனால் அவர் போன்றவரே இவரும் போல.........
  20. உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை நீங்கள் தான் புலம்பெயர் சம்பந்தன். 🙏🤣😂🤪
  21. இந்திய நிறுவனங்களுக்கு மக்களை வரிசையில் விடுவது கை வந்த கலை ...இப்படி வரிசையில் நின்றால் தான் லஞ்சம் வாங்கலாம்.. கோவிலில்சாமி தரிசனத்திற்கே லஞ்சம் வாங்கி முன்னுக்கு அழைத்து சென்று பழக்கப்பட்ட வல்லாத்திக்க நாயகர்கள்... இ..ருக்கும் இருக்கும்
  22. உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்). என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.
  23. அவர் மாறிக்கீறி, ஓமெண்டு தந்தாலும் நீங்கள் விடமாட்டியல் போல இருக்கு
  24. நிச்சயமாக பகிரலாம் ஏராளன். யாழ் இணையத்தில் நான் எழுதும் எந்த கருத்துக்கும் நான் காப்புரிமை பெறவில்லை. (பகிடி) 😂 கருத்துக்கள் சுதந்திரமானவை.
  25. @ரசோதரன், @நீர்வேலியான் புதிய அரசாங்கத்தில் உள்ள மேல் மட்ட செல்வாக்கை பயன்படுத்தி… எனக்கு ஒரு Bar Licence எடுத்துத் தர முடியுமா. 😂 🤣 பிற்குறிப்பு: ஒரு Bar Licence மூன்று தொடக்கம் நான்கு கோடி ரூபாய் வரை விலை போகின்றதாம். 😁
  26. கேள்வி உங்களுக்கு ஆனாது பதிலும் உங்களிடமிருந்து தான் வரவேண்டும் குறிப்பு,. .விசுகர். சொல்வதை நீங்கள் எற்றுக்கொள்வீர்களா.??
  27. எல்லோரும் தமிழராக இருந்து கொண்டு.... தமது தாய் மொழியில் "சயிஸ" வை சொல்லாமல், வேற்று மொழிகளில் சொல்லிக் கொண்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. 😂 @ஏராளன் மனிதன் போடும் சாணத்தைத்தான்... சயிஸ Scheiße என்றும், Shit என்றும் சொல்வார்கள். @Kandiah57 அதை "சனியன்" என்று சொல்வது கொடுமை. 🤣
  28. தெரிகிறது அல்லவா?? வீட்டில் போய் இருக்க வேண்டியது தானே?? 😂🤪🤪. எவருமே சுமத்திரன் அரசியலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கோரவில்லை இந்த புத்திசாலியை வீட்டிலேயே இருங்கள் என்பவர்கள் அதி புத்திசாலியாகத் தான் இருக்க முடியும் 🙏
  29. ரெளடிசம் அவ* க்குக் கைவந்தகலையல்லவா? இல்லாவிடில் போலிப் பந்தாவுக்காகக் போராளிகளைப் போடுக்கொடுத்தாளல்லோ.ஆட்கள் படித்தைவை அதாவது சட்டம் படித்தவை. மக்களின் வரிப்பணத்தில் படித்து மக்களிடம் வாக்குப்பெற்று வயிறு வளரப்பதோடு, தமது சொந்ததிகளுக்கும் சொத்துகளைச் சேர்க்கும் அரசியல் வியாபாரக்கூட்டம். இந்தப் போலியானது தனக்காகப் பலரை ஆள் நல்லதொகைகொடுத்துப் புலத்திலும் களமிறக்கிவிட்டுள்ளது போலுள்ளது.
  30. அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂
  31. சுமந்திரனை கொஞ்சநாளைக்கு வாய் திறக்க வேண்டாம் எண்டு ஆராவது சொல்லித்தொலையுங்கப்பா 😁
  32. எங்களுக்கு ஆசிரியராகவும் டீன் ஆகவும் இருந்தவர். சிறந்தநிர்வாகியும் கூட
  33. சரி, எனக்கும் உங்களுக்குத்தான் வாக்கு என்னும் நிலையம் பற்றி தெரியாது.அங்கு நின்றோருக்கும், சண்டே டைம்ஸ் இல் எழுதியவருக்குமா தெரியாது. எதோ வாக்கு என்னும் நிலையத்தில் நீங்களும் நின்றமாதிரியல்லவா கதையளக்கிறீர்கள். முன்பு சொன்னதே, கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ... கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் நக்கல். எனக்கும் பதில் எழுதமுடியும். மட்டுறுத்தினர்களுக்கு வேலைவைக்க வேண்டாமென்று விலகிச்செல்கிறேன்.
  34. ஒமோம், வலு கவனமாக, பூனைப்பாதங்களால் சத்தமின்றிக் கடந்து செல்வோம்😂!
  35. எந்தவித ஆதாரமும் இல்லாமல் tamilwin சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டுள்ளது. அதாவது, கைது செய்யப்பட வேண்டியவர்களைக் கைதுசெய்யாமல் தடுத்துள்ளது என்பது வேண்டுமென்றே சீனாவின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காக கூறப்பட்டுள்ளது என்று யூகிக்கிறேன். கைது செய்ய விரும்பாவிட்டால்/முடியாவிட்டால் விமான நிலையம் ஊடாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்திருப்பார்கள் அல்லவா? குறிப்பு; புதிய அரசு தன்னைப் பலப்படுத்துவரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளாது. அது நீதி மன்றம் ஊடாகவே நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகம்.
  36. விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை............
  37. இது பொய் சுமத்திரனும். ரணில் மாதிரி பாராளுமன்றம் இனிமேல் வரப்போவதில்லை என்று அறிவித்தல் எப்படி இருக்கும் ?? சஜித் கட்சியின் முல்லைத்தீவு அமைப்பளார். கைதடியை சேர்ந்த இளைஞர் பல்கலைக்கழகம். வரை படித்தவர். கட்சிக்காக நன்றாக வேலை செய்துள்ளார் அவருடைய பிரச்சாரகர்கள் பற்றி முகநூலில். பதிவார். 200 கிராமங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தி உள்ளார் இதனால் தான் சஜித் கட்சி அங்கே வென்றது முதல் முதலாக கைதடி மகன் ஒருவர் பாராளுமன்றம் போகும் வாய்ப்புகள் உண்டு. மகிழ்ச்சியே 🙏🙏🥰.இவரின் பெயர் லக்சயன். தகப்பன். முத்துகுமாரசாமி கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சுமத்திரன். தான் சொல்லி தான் மக்கள் வாக்கு போட்டார்கள் என்பது சிரிப்புக்குரியது 🤣
  38. 🤣..... ரசோதர என்று என் பெயரை மாற்றிவிடப் போகின்றார்கள்....
  39. பேராசிரியர் அபயக்கோன் ஒரு நல்ல தெரிவு. உங்கள் காலத்துக்கு பிறகு இவர் கனடா சென்று, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துவிட்டு, நாங்கள் படித்து முடிக்கும் காலத்தில் மீண்டும் பேராதனை பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளராக வந்தார். எல்லோருடனும் நன்றாக பழகுவார், எனது ஊர் நண்பன் இவர் கனடா Vancouver நகரில் இருக்கும் பொது இவருடன் நல்ல பழக்கம், அதன் காரணமாக அப்பொழுது இவருடன் சில தடவைகள் தனிப்பட்டும் உரையாட முடிந்தது. எல்லோராலும் விரும்பப்படும் ஒருவர், முக்கியமாக தமிழ் மாணவர்களால் விரும்பப்பட்ட ஒருவர்
  40. இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள். கள நிலைமை தெரியாமல்... ஏவல் பேய்களாக.. வேறு ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்காக. இனத்தை விற்று காசு பார்க்கும் கோஸ்டிகள். பலாலி இராணுவ படைத்தளத்தில்... நடந்த விருது வழங்கும் நிகழ்வின் போது, பிக்குகள் அமரும் கதிரைக்கு வெள்ளைத்துணி போர்க்கப்படவில்லை என்பதற்காக... மறவன்புலவு சச்சி, தனது வேட்டியை அவிட்டு போர்க்கக் கொடுத்துவிட்டு, உள்ளாடையுடன் பல்லைக் காட்டிக் கொண்டிருக்குது, வெட்கம் கெட்டது.
  41. அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.
  42. இந்தம்மா மட்டுமல்ல இன்னும் சிலர் இதே மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். எதிர்க் கட்சியில் இருக்கும் போது குய்யோ முறையோ என்று கத்துகிறவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் எல்லாவற்றையும் மறந்து ஆட்சியில் இருந்தவர்கள் எதைச் செய்தார்களோ அதையே இவர்களும் செய்வார்கள். ஆனாலும் ஜேவிபியை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு எல்லோரும் பார்க்கிறார்கள்.நாங்களும் பார்ப்போம்.
  43. இவர் பற்றி Tamilguardian இல் விரிவாக வந்த கட்டுரை இது. ஆங்கிலத்தில் உள்ளது. சாராம்சம்: இவர் மனித உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், காணாமல் போனோர் தொடர்பாகவும் நியாயமான கொள்கைகளை எண்ணங்களை கொண்டு இருந்தவராகவும், அதை வெளிப்படுத்தக் கூடிய இடங்களில் வெளிப்படையாக வெளிப்படுத்தியவராகவும் உள்ளார். அடடா சிங்கள பிரதமருக்கு வக்காளத்து வாங்குகின்றார் நிழலி என்று ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத அதி தீவிர தமிழ் தேசியவாதம் கதைப்பவர்கள் இதை நான் இங்கு இணைத்தமைக்காகவும் தாரளமாக ஆத்திரப்படலாம். Sri Lanka’s new Prime Minister Harini Amarasuriya on Tamils, justice and racism 24 September 2024 Sri Lanka's new president has appointed Dr Harini Amarasuriya, a parliamentarian with his National People’s Power (NPP) coalition, as the new prime minister. Anura Dissanayake’s appointment of Amarasuriya, comes amidst reports that Sri Lanka’s parliament will shortly be dissolved. We look back on Amarasuriya’s previous remarks on Eelam Tamils, racism in Sri Lanka and on devolution of powers through the 13th Amendment. Black July Sinhala rioters celebrate as they pause in the destruction of homes and businesses in Tamil sectors of Colombo In a 2020 interview with Women For Politics, Amarasuriya recalled the 1983 Black July pogrom, when government-backed Sinhala mobs killed thousands of Tamils. She was asked: What was growing up like amidst the conflict in Sri Lanka? Especially for women to have lived through a difficult period such as this? On Tamil women Speaking to The Federal earlier this year, Amarasuriya was asked: You have written and spoken decisively about women and children being the worst victims of the long civil war in Sri Lanka. How would you bring their voices to the truth and reconciliation process in a post-civil war era? To note, Tamils across the North-East, including the women who make up families of the disappeared have repeatedly rejected any domestic truth seeking mechanism and repeatedly demanded international accountability through the International Criminal Court (ICC). Tamil families of the disappeared protesting and demanding Sri Lanka be referred to the International Criminal Court. In another 2020 interview, Amarasuriya said, On Sinhala racism Writing in The Wire in May 2020, Amarasuriya said, On the 13th Amendment and devolution of powers Asked to explain the NPP stand on the implementation of the 13th Amendment earlier this year, Amarasuriya said: She also stated, Despite Amarasuriya’s pledge, other senior officials within her party have openly spoken out against implementing the 13th Amendment, which was established through the 1987 Indo-Lanka Accord. The JVP staged two insurrections against the state in the early 1970s and the late 1980s. The latter of these was chiefly in response to the Indo-Lanka accord and the 13th Amendment which sought to devolve powers to Tamils in the North-East. Tens of thousands were killed. In 2010, Dissanayake himself said the JVP will oppose if a new political constitution devolving powers to the Northern and Eastern provinces was to be created. Related Articles: 22 September 2024 : Anura Kumara Dissanayake declared Sri Lankan president 20 September 2024 : Who is Anura Kumara Dissanayake?
  44. கொஞ்ச வாகனங்களைக் காணலை என்றார்களே? கழட்டி விற்றும் இருப்பார்கள்.
  45. இவரை இதில் சேர்க்கப்பட்டது பிழை ஏனென்றால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களவர்கள் தீர்வு தரமாட்டார்கள். என்று உறுதியாக சொன்னவர் உயிர் இருக்கும் வரை. சிங்களவர்களை நம்பவில்லை அவர் எமாந்தது இல்லை அவர் செய்த பிழை உங்கள் போன்றோருக்குக்காக. போராடியது தான் 🙏
  46. Editorial / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 01:29 - 0 - 103 செ.தி.பெருமாள் எல்லோராலும் அதை செய்ய முடியாது. அதற்கென ஒரு மனது வேண்டும் என்பார்கள். அதை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா செய்துகாட்டி ஏனைய சகல மாணவர் சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியான மாணவியாக எடுத்துக்காட்டியுள்ளார். நெடுஞ்சாலையில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி , 3,000 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா மஸ்கெலியா- சாமிமலை வீதியில் உள்ள அம்மன் ஆலய பகுதியில் உள்ள பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை (24) காலை கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவை அந்த மாணவி கண்டெடுத்துள்ளார். அவற்றை அப்பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர் ஜீ.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துவிட்டு, இது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்துள்ளார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ். புஸ்பகுமாரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடத்திய விசாரணையின் போது, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவனலோஜினி ( வயது 46) என்பவரே அந்த பொருட்களின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டார். அந்த பொருட்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டது. மஸ்கெலியா ராணி பிரிவில் இருந்து கொழும்புக்கு முச்சக்கர வண்டியில் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பொருட்கள் அடங்கிய பொதி தவறவிடப்பட்டுள்ளது. அவற்றை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவியை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பொருட்களுக்கான உரிமையாளரும் நன்றி தெரிவித்துள்ளார். Tamilmirror Online || மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.