Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1487
    Posts
  4. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1866
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/01/24 in all areas

  1. எனக்கென்னவோ நாங்கள் தேவையில்லாமல் விளம்பரப்படுத்துக்கிறோமோ என்ற எண்ணமே வருகிறது. Dr அர்ச்சுனாவின் போதும் இப்படித்தான் இளையோர்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் போனார்கள். பிறகு அடங்கிவிட்டது. இப்பொழுதும் இப்படித்தான். அநுரவின் திட்டங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்று சிந்திக்கவிடாமல் இருப்பதற்குத்தான் இந்தளவு வீடியோக்களும். அவருடைய வீட்டுக்கு கூட போகுமளவுக்கு வைத்துள்ளது. எங்களுடைய இளையோருக்கு கடந்த கால வரலாறுகளையும் நாங்கள் ஒழுங்காகத் தரவில்லை. பாடப்புத்தகங்களில் தவறான தகவல்களை கொடுத்தாலும் கூட அதனை திருப்பிக் கேட்காமல் அதனைத்தான் படிப்பிக்கிறோம். ஆகையால் இனிவரும் இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
  2. நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும் போட்டியை நடாத்துகிறேன்.
  3. 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇
  4. கண்ட கண்ட இடங்களிலும் தாய் மொழியையே... "டமில்" என்று கொச்சைப் படுத்தி, கதைக்கும் உங்களிடம் நான் அதிகம் எதிர் பார்த்து விட்டேன் போலுள்ளது. மற்ற இனத்தவன்... தனது தாய் மொழியை இப்படி இழிவு படுத்த மாட்டான். நீங்கள், உங்கள் கச்சேரியை... நடத்துங்கள். நன்றி. 🙏
  5. எண்ணைச் சட்டியில் வறுக்கிறமாதிரி தண்டனை உண்டு ரசோதரன் . ..........! 😂
  6. ஏன் என்னுடைய பெயரை இணைத்து உள்ளீர்கள்??? நான் பைபிள் ஐத்து தடவைக்கு மேல் வாசித்து உள்ளேன். சமய நூல்களில் எனக்கு பிடித்தது பைபிள் தான் அதில் உள்ள வசனங்கள். ஒருவர் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 🙏 குர் ஆன் னும் வாசித்து உள்ளேன் இடையில் விட்டுவிட்டேன் ஒரு பகுதியில் கழுதையில். பலவனத்தில். போகும் போது கூட ஆண் விரும்பினால் பெண் உடலுறவுக்கு உடன்பட வேண்டும் என்று இருந்தது அனேகமாக இடங்களில் இப்படி பொருள்படும் வசனமிருக்கும். அவர்களின் சமய நூல்கள் இப்படி என்றால் வாழ்க்கையும். அப்படி தான் இருக்க முடியும் 🙏🙏🙏
  7. அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் நண்பர் குலாமில் உள்ள ஒருவரின் நெருங்கிய உறவு. அவர் கூறியது இது: ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதியை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் ஒரு தொகை பணம் திறைசேரியில் இருந்து (பாராளுமன்றத்தினூடாக) ஒதுக்கப்படும். டக்கியை தவிர வேறு எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை செலவழிப்பது இல்லை என்று. ஏனெனில் அவ்வாறு செலவழித்தால், சிங்கள அரசிடம் இருந்து பணத்தை பெற்றார்கள் என்று சொல்லி, துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயத்தினாலாம். எனவே ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி, மீண்டும் திறைசேரிக்கே சென்று விடுமாம். அவர் சொன்னதில் எத்தனை வீதம் உண்மை என்று தெரியாது.
  8. யாழ் களத்தில் ஒரு தேர்தல் வைத்தாலே, அனுர தான் வெற்றி பெறுவார் போல இருக்கு...😀 (மிச்ச ஆட்களுக்கு கட்டுப்பணமும் காலியாகும்)
  9. சுமந்திரன்.... இதனை "இதய சுத்தியுடன்" சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன் வெளியேறி போட்டியிடாமல் விட்டால், மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள். அவர் கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... இவரின் நேர்மையை, கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  10. தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://seithy.com/breifNews.php?newsID=323490&category=TamilNews&language=tamil சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ? அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ? அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?
  11. மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது!
  12. தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. விதி இருந்தாலும் சொல்ல மாட்டமே....எங்கள் பணி அவாளுக்கு சேவை செய்து கிடப்பதெயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே
  14. எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....
  15. ஞாயிறு அன்று போயிருந்தேன், அண்ணை. 3.83 என்று இருந்தது. நம்ப முடியவில்லை. 'கனவா.......... இல்லை காற்றா..........' என்று தான் இந்த ஒரு மாதமும் இருந்தது. எங்களின் கனவுகளுக்குள்ளும் ஏவுகணைகளை விட்டிட்டார்களே............🤣.
  16. அண்ணை எந்த நாடு? இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்? 😒
  17. 12 நிமிடம் எடுக்கிறதென்றால் 515 மைல்/மணி வேகம். இது போயிங் 747 இன் உச்ச வேகமான 600 மைல்/மணியை விடக் குறைவாக இருக்கே? முறிகண்டியில் நிண்டு ரீ யெல்லாம் குடிச்சு விட்டு வந்திருப்பாங்களோ😂?
  18. அட்ரா ..அட்ரா😂! அருமையான வசனங்கள், சொற்கள் - ஆனால் இந்த சொற்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தமென்று ஒரு சொற்களஞ்சியமும் - Glossary சேர்த்து வெளியிட்டால் மக்களுக்கு வசதியாக இருக்கும்! பொதுக்கட்டமைப்பு என்று ஆரம்பித்த போதே backroom players ஆக இருக்கும் பலருக்கு "பாராளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டு ஆசை" வந்து விட்டது என்ற சந்தேகம் இருந்தது, இப்ப உறுதியாகி விட்டது!
  19. நிலாந்தன் மாஸ்டர் நல்ல வடிவா எழுதியிருக்கிறார்😂 போத்தில் சின்னம் கிடைத்தால் வெல்லலாம்!😂
  20. ஓம்... பையன், அநேகமாக இந்தக் கிழமைக்குள் வந்து விடும் என எதிர் பார்க்கின்றார்கள். இல்லையேல்... மது அனுமதி பாத்திரம் பெற்றவர்கள், பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபின்.... அவர்களின் வாக்கு வீதத்தில் சரிவை ஏற்படுத்தி அந்த வாக்குகளை தமக்கு அறுவடை செய்ய NPP காத்திருக்கலாம். தமிழரசு கட்சி இதோடை... நடையை கட்ட வேண்டியதுதான். தேர்தலுக்குப் பின்... அவர்கள் வேறு தொழில் தேட வேண்டி வரும். 😂
  21. தமிழரசுக் கட்சிக்கு இந்தமுறை தான் கடைசித்தேர்தல். இத்துடன் இந்த கபடி விளையாட்டுகள் முடிவுக்கு வரும். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டது போல ...
  22. நீங்கள் சொல்வது சரியே........ அவர் இங்கு ஏதாவது சிகிச்சை முடித்து அதன் பின்னரே சைக்கிள் ஓடினாரா அல்லது அந்த சைக்கிள் ஓட்டமே சிகிச்சையின் ஒரு பகுதியா என்று தான் சொல்ல வந்தேன். அந்தச் சைக்கிள் கூட கொஞ்சம் புதுமையாக ஓடியது. அதுவாக ஓடியது போலவே இருந்தது........... ஒரு EV போல ஓடியது....😀.
  23. சுமந்திரன் தேசியம் கதைத்தவரா? 🤣 அடுத்த மாவீரர் தினத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவில் யார் விளக்கேற்றுவது என்பதில் அனுரவுக்கும் சிறீதனுக்கும் இடையில்தான் போட்டியாம்,.. 🤣
  24. Bar Licence டீலில் ஈடுபட்ட எம்.பி.க்களின் பெயர்கள் நாளை மறு தினம் 03.10.24 அன்று, வெளியிடப் படும் என NPP யின் பிரதான செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த முடியவில்லை.
  25. ரணிலின் BAR LICENCE " சற்றுமுன் உண்மையை போட்டுடைத்த விக்ணேஸ்வரன்
  26. பையா.... அந்தப் பெயரை வைத்தால்தான், சந்தேகப் பட மாட்டார்கள். "படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில்" என்ற மாதிரி இருக்கு இவர்களின் செயல்கள். 😂
  27. அனுராவுக்கு இலவசமாய் பிரச்சாரம் நடக்கின்றது. இவைகளை பார்க்கும் நம் தலைவர்களுக்கு வயிறு கலங்கப்போகுது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சந்திரிகாவும் களத்தில் குதித்திருக்கிறா. காரணம்; அரசியல் வாதிகளின் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாகும், இவரது ஆட்சி நிலைத்தால். எல்லோரும் கூட்டுச்சேருகிறார்கள். நம்மவர்களுக்கும் இப்போதான் ஒற்றுமையின் அவசியம் புரிகிறது. காரணம், மக்களுக்காகவல்ல தாம் சேர்த்ததை கட்டிக்காக்க. பாதையின் ஆரம்பத்தை பார்த்து முழுப்பயணமும் இப்படியேதான் இருக்கும் என மனக்கணக்கு போடக்கூடாது. சந்திரிகா வந்தபோதும் இப்படித்தான் மனக்கணக்கு போட்டோம், பெண்ணென்றால்; பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இந்தப்பெண் பேயாக எங்கள்மேல் குண்டுகளை பொழிந்ததே! நினையாத நல்லதும் நடக்கலாம், கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து விட்டோமே எனவும் வருந்தலாம்.
  28. அண்ணை இந்த நிதி பெரும்பாலும் பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபை ஊடாகத் தான் செலவழிக்கப்படுகிறது. அவர்களுடைய உத்தியோகத்தர்கள் நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்திய பின்னரே நிதி விடுவிக்கப்படும். இதில் பா.உ கள் கையாடல் செய்வது கடினம்.
  29. இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதா?? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் எங்களது வாக்கு உரிமையை தமிழ் தலைவர்களுக்கு அளிப்பாதால். ஏதாகினும் நன்மைகளை அடைந்து உள்ளோமா ?? இல்லை தமிழ் தலைவர்களால். தமிழருக்கு எதுவும் தந்து விட முடியாது அவர்கள் சிங்களத் தலைவர்களிடம். தான் போய் பேசுவார்கள். தமிழ் மக்களுக்கு சொல்லாமல் முறைப்படி அறிவிக்காமல் பார். அனுமதி பத்திரங்களை இரகசியமாக பெறும் அளவிற்கு நிலமை. வந்துவிட்டது இந்த செயல் எமது வருங்காலச் சந்ததிகளை அழிக்கும் இல்லையா?? இப்படியானவர்களை எப்படி தலைவர்கள் என்பது?? ஆகவே நேரடியாக அனுரவுக்கு வாக்கு போட வேண்டியது தான் 🙏👍
  30. விக்கியின் நிலைமை பரிதாபமாக உள்ளது, பெயரை நல்லா டேமேஜ் பண்ணீட்டாங்கள். சந்தானத்தின் நகைசுவை மாதிரி போய்விட்டது " அவனவன் பத்து பதினைந்து பார்களை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறாங்கள், ஒரேயொரு பார் லைசென்ஸ் ஐ கொடுத்துவிட்டு நான் படுகிற பாடு இருக்கே" என்பதுபோல அவரின் நிலைமை .
  31. மறந்திடாமல் கையில் ஒரு பியரும் எடுத்துப் போகவும். பாராளுமன்றில் அனுரவை ஆட்டங்காண வேண்டியே சந்திரிக்காவை ஏற்கனவே களமிறக்கிவிட்டார்கள். தமிழ்குழுக்களையும் இந்தியா கூப்பிட்டுள்ளது. அனேகமாக எல்லா குழுக்கழும் ஒன்று சேரலாம்.
  32. மிக்க நன்றி கந்தப்பு. 🙂 இம்முறை தேர்தல் யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் இருக்கும் என நினைக்கின்றேன். போட்டியை நடத்த சம்மதித்தமைக்கு மீண்டும் நன்றிகள். 🙏
  33. அவரும் பார் bar(கள்) வைத்து நடாத்துகிறார் என்றால் வருமானம் வரும் தானே?
  34. அதுமட்டுமே இந்த யூருப் பிறதேர்ஸ் அனுர மாகாத்தையா விட்ட போனம். நினைக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை..... என்று ஒரே அளப்பறையாமே. எனது நண்பர் பார்க்கச்சொன்னார். ஒரு இனத்தை கூட்டுச் சேர்ந்து அழக்கத் துணைபோனதோடு, படையினர்கான ஆளணி வலுவாக்கற் செய்பாடுகளுக்குப் பரப்புரை செய்த மாகாத்தையாவைத் தேர்தல் முடிய 113சீற் கிடைத்தபின் நன்றாகப் புரியவைப்பார். எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  35. பாராளுமன்றம் சென்று கதிரையில் நித்திரை கொள்வது இலகுவான காரியமல்ல ..நாடியில் கை வைத்து பேச்சுக்களை அவதானிப்பது போல் நடித்து நித்திரை கொள்வ‌து மிக மிக கடினம்...அதற்கு 1 லட்சம் அல்ல அதைவிட அதிகம் கொடுக்க வேணும்... சும்மா இருந்து சுகம் காண்பது மிகவும் கடினமான விடயம்
  36. ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி
  37. இனி பாராளுமன்றம் போகிறவர்கள் பாடு ரசியாவுக்கு வேலைக்க போனமாதிரி தான். போட்ட முதலும் காலியாகும்.
  38. இது தான் வரலாற்று திணிப்பு. திரிப்பு. அடிமையாக வாழ முடிவெடுத்து விட்டால் இப்படித் தான் முடிக்கணும். 1958, 1977, 1983 என்று அனைத்து சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அராஜகங்களுக்கும் தமிழரே காரணம். முற்றும்.
  39. போன 2024 ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட்டவர் அண்ணை.
  40. என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.
  41. உலகத்தில் நான் போக விரும்பாத விமான நிலையம் - மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம். (அதற்காக மற்றய இந்திய விமான நிலையங்கள் திறமோ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் வேறெந்த இந்திய விமான நிலையத்திற்கும் நான் செல்லவில்லை. ) இந்தியர்களின் உண்மையான முகத்தை அங்கே பார்க்கலாம். 🤮
  42. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது. இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த நியாயமில்லை. அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே! குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝ ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....? இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.