Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    31968
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2951
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/06/24 in all areas

  1. இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ரஞ்சித் அந்த வேலையில் முனைப்பாக இருக்கிறார். வரலாறுகளை மீட்டிப் பார்க்கிறோம். அடுத்து என்ன என்பதை மதிப்புக்குரிய பொதுமகன் தேர்தலில் சொல்வார்
  2. யூ டியுப் போராளிகளே உடனே கிளிப் தாயரித்து அணுராவுக்கு அனுப்புங்கோ,,,,இது தான் தேங்காய் தமிழ்தேசியவாதிகள் தான் காரணம் இந்த தேங்காய் விலை உயர்வுக்கு
  3. தேங்காயில பயங்கர கொலஸ்ரோல் எண்டு டாக்குத்தர்மார் வெருட்டியும் சனம் மசுங்கிற பிளான் இல்லை....😁
  4. வழமையான கஜே கோஷ்டியின் ஆதரவாளர்கள் கூட இந்த திரிப்பக்கமே வரவில்லை. அவ்வளவுக்கு அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர் கஜே கோஷ்டி. எல்லா கஜே கோஷ்டி ஆதரவாளர்களும் ( அவர்கள் மொழியில் சொம்புகளும்) சுமந்திரனுக்கு பின்னால் பிஸி.
  5. இளைஞர்களுக்கு வழி விடாமல், தேர்தல் என்றவுடன் முன்னுக்கு வந்து நிற்கும் கிழட்டு தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருக்கும், இந்த முறை பென்சன் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பப் போகின்றார்கள். வீட்டில்…. சாய்மனைக் கதிரையில் அமர்து நிரந்தரமாக ஓய்வு எடுக்கலாம்.
  6. தினமும்…. லூசுத்தனமான அறிக்கை விடுபவர்களில் சுமந்திரன் உங்கள் கண்ணில் படவில்லையா. அல்லது உங்கள் ஆளுக்கு வெள்ளை அடிக்க நினைத்து அவரை கருத்தோவியமாக வரைய மனம் இடம் கொடுக்கவில்லையா. சுமந்திரன் தானே…. ஶ்ரீதரனை தேர்தலில் போட்டியிடாமல் செய்ய, பல திருகுதாளங்கள் செய்து கொண்டு இருந்தவர். பிறகு ஏன்… அவரை இணைத்தவர்? துணிவு இருந்திருந்தால் ஶ்ரீதரனை நீக்கி இருக்கலாமே. ஶ்ரீதரன் இல்லாமல்… தேர்தலில் தமிழரசு கட்சி போட்டியிட்டால், தோல்வி வரும் என்ற பயம் சுமந்திரனுக்கு வந்து விட்டது என்பதே யதார்த்தம். இப்போ…. ஶ்ரீதரனின் செல்வாக்கில்…. சுமன் குளிர்காய நினைக்கின்றார் என்பதே உண்மை. நிஜம் கசக்கும்தான்… அதுக்காக உண்மைக்கு புறம்பானவற்றை எழுதியோ, வரைந்தோ கொண்டு இருந்தால்… உங்கள் மேல் மற்றவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விட சந்தர்ப்பங்கள் அதிகம்.
  7. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளும் கட்சியினால் தீர்வினை வழங்கிட முடியும், அதனால் அதில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் பேரம் என்பன இருக்கும், அத்துடன் இங்கு அனுரவிற்கு வாக்கு போட வேண்டாம் என்பதற்காக இந்த கட்டுரையினை ரஞ்சித் எழுதவில்லை என கருதுகிறேன், சிறுபான்மையினருக்கு பிரச்சினையே இல்லை எனும் கட்சியினால் சிறுபான்மையினர் தமக்கு இருக்கும் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும், அத்துடன் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தடையாக உள்ள கட்சி அதே செயலை செய்யவிரும்புமா? அனுரவும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளை போலவே இனவாதத்தினை கருவியாக பயன்படுத்தி ஆட்சி கட்டிலேறி உள்ளார், அவருக்கு அரசியல் இலாபமே முக்கியம் அதற்காக அவர் இனவாதம் பேசுபவர், இந்தியா அவரது ஆட்சிக்குநெருக்கடி கொடுத்தால் அந்த இனவாதத்தினையும் கைவிடும் சாதாரண சுயநல அரசியல்வாதிதான் ( இது எனது கருத்து). அனுரவுக்கும் மற்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் சிறுபான்மையினருக்கு பிரச்சினை உள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வு பேச்சு என கூறி ஏமாற்றுவார்கள், அனுரா பிரச்சினை இல்லை, அப்படி இல்லாத பிரச்சினை என கூறும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தரமாட்டேன் (ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா, அவர்களே பிரச்சினை என்பதே இல்லை என்பார்கள் பின்னர் பிரச்சினை தீர்வு தரமாட்டேன் என்பார்கள்) என ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
  8. ரஞ்சித் அவர்களே வணக்கம், நீங்கள் தேடியெடுத்துப் பதிவிடும் இந்தத் தொடர் ஊடகத் தரவுகளை சேமித்து வைப்பீர்கள் என நம்புகிறேன். இவை தமிழர்கள் அறியவேண்டிய விடயங்கள். திரிக்குத் தடையேதும் ஏற்பட்டாலும் உங்களிடம் இருந்தால் சிங்கள இனவாதக்கட்சிகளின் சுய முகம் என்று ஒரு தொகுப்பாகவேணும் வைத்திருப்பது பிற்காலத்திலும் தேவையானது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. தமிழர்களை மண்டையில் போட்ட குழு தலைவரை அவர் தமிழ் தேசியம் என்று சொன்னதால் அவரை அனுசரித்து செல்வார்கள்- ஆயுதம் தூக்கி மக்கள் மண்டையில் போடத சுமந்திரன் போன்றோர் தான் அவர்களுக்கு பிரச்சனை.
  10. நான் கேட்க இருந்த கேள்வி இது, நீங்கள் முந்தி விட்டீர்கள்.
  11. இலங்கையில் தேங்காய் விலை கூடியதற்கு ஒரு காரணம் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவது ஆகும், அதிலும் coconut oil supplements இன் விலை மேற்கு நாடுகளில் மிகவும் அதிகம். எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்த வியாபாரிகள் இலங்கை மருத்துவர்களை ஏமாற்றி( தேங்காயில பயங்கர கொலஸ்ரோல் எண்டு) அவர்கள் மூலம் மக்களை ஏமாற்றி இலங்கையில் இருந்து குறைந்த விலையில் தேங்காய் வாங்கி விற்க முயன்று இருப்பார்களோ என்பது தான் இலங்கையில் இலவசமாக கிடைக்கும் ஆனால் இங்கே விலை அதிகம் விற்கப்படும் இன்னொரு பொருள் முருங்கை இலை பவுடர்.
  12. அண்மையில் ஒர் வீடியோ பார்த்தேன் ....மதவாதி ஒருவர் நாட்டில் தனது கொள்கைகளை எப்படி பரப்பி இன்று அது உலகத்துக்கே சவாலாக உள்ளது...இதை பார்க்கும் பொழுது சித்தாந்தவாதிகளும் ஒர் நீண்ட திட்டத்துடன் தான் உள்ளே வருவார்கள் பறகு ....அவர்களின் சித்தாந்தத்தை பரப்ப இப்படி செயல் படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.... அணுராவின் தூர நோக்கு.....சிங்கள மக்களுக்கு நன்மை பயக்குமா
  13. நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும் இருவருமே ஆண்டவனால் அனுப்பிவைக்கபட்வர்கள் எல்லோ. அநுரகுமார திசாநாயகவை இலங்கை தமிழர்களுக்காக அனுப்பினார் கொமேனியை ஈரானிய மக்களுக்காக அனுப்பிவைத்தார்
  14. 06 OCT, 2024 | 01:17 PM (ஆர்.ராம்) பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், சுமந்திரன், சிறிதரன், குகதாசன் ஆகியோர் நேற்று மாலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில் சந்தித்து உரையாடி இருந்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே தக்க வைத்துக்கொள்ளும் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற அடிப்படையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை முயற்சிகளை எடுத்திருந்தார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியையும் ஒன்றிணைத்து போட்டியிடச் செய்வதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை மாவட்டத்தில் தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் 5 ஆசனங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. எனினும், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையுடனான உரையாடல்களை அடுத்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 4 ஆசனங்களை தம் வசம் வைத்துக்கொண்டு மூன்று ஆசனங்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனது. அதன் அடிப்படையில் திருகோணமலையில் இரு தரப்புக்களும் இணைந்து போட்டியிடுவதில் எவ்விதமான பிரச்சினைகளும் காணப்படவில்லை. ஆனால் அம்பாறையில் தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வலியுறுத்துகிறது. இந்த விடயம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உரையாடல்கள் ஊடாக அந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் அம்பாறை ஆசனப்பகிர்வு மற்றும் சிறு விடயம் சம்பந்தமாக தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என்று ஏகமனதாக தீர்மானம் எடுத்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195609
  15. பதுக்கல் முதலாளிகள் பொருட்களின் விலைகளை உயர்த்தி, வரும் தேர்தலில் அனுரவின் கட்சிக்கு ஆப்படிக்கப் போகிறார்கள் போலுள்ளது.
  16. இலங்கையின்வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ✅ ஆனால் இந்தியாவின் கைத்தடிகளாகச் செயற்பட்டால் ஒன்றுமே நடக்காது. 🥺
  17. இதுவும் இட்லி சாப்பிட்ட கதைமாதிரியோ. அங்காலை சத்தமில்லாமல் உதயநிதியை துணைமுதல்வராக்கியதற்கு எழுத்து எதிர்ப்பு சலசலப்புகளை மடைமாற்றவும் ரஜனியின் வேட்டையன் நன்றாக ஓடவும் பிளான் பண்ணி ஊடகங்கள் செயற்படுகின்றன.
  18. நான் அறிந்தவரையில் சிறிதரன் , சும் போய் அனுரவைச் சந்திச்சதே பெயர் பட்டியல் வெளிவராமல் தடுக்கத்தான். அது தான் சும் தைரியமாக பெயர் விபரத்தை வெளியிடச்சொல்லி அறிக்கை விட்டவர் (சும்முக்கு கொழும்பில் இருப்பதாக கேள்வி)
  19. அந்த இரண்டு ஆசனங்களும் இருவரும் தற்போது இருந்து பேட்டியளிக்கும் அந்த இரு ஆசனங்களாகும். 😂
  20. தமிழர்களை மண்டையில் போட்டதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழு என்றால் ஜேவிபி முதலை. எனவே அநுராவை மன்னிப்போம் மறப்போம் என்று இங்கே கூவும் அதே நபர்கள் தான் சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏற்கக்கூடாது என்றும் கூவுகின்றனர். இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் என்பது மட்டுமே. அப்படியானால் இதன் நோக்கம் தமிழர்களை தொடர்ந்து பிரித்தல் சிதைத்தல் மட்டுமே. நான் இந்த பிரித்தாளும் நபர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவே செய்கிறேன்.
  21. தான் பதவியில் இருக்கும்பொழுதே நாமலை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்து, இலங்கையை தமது குடும்ப சொத்தாக்க வேண்டும் என கனவு கண்டு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் வீணாகி, குடும்பத்தையே திருடர் பட்டதோடு அரசியலில் இருந்து துரத்தும் காலம் வருமென கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று காலம் நிரூபித்து சென்றுள்ளது. துக்கத்துடனும், அவமானத்துடனும் அரசியலில் இருந்து விடைபெறுங்கள். நீங்கள் இன்னும் நிலைத்திருந்திருப்பீர்கள், எந்த அரசியலை ஒழிக்கிறோம் எனக்கூச்சல் போட்டு பதவியேறினீர்களோ அதே அரசியலை நீங்கள் கையிலெடுத்ததே உங்கள் அரசியல் அஸ்தமனத்திற்கு காரணம். மக்களே, எங்களிடம் பதவியை தந்தார்கள், நாங்கள் வேண்டாம் என்றால், அவர்களே நம்மை துரத்துவார்கள் என்று அன்றொருநாள் உங்களையுமறியாமல் இப்படியாகுமென்றும் தெரியாமல் சொன்னீர்கள். உங்கள் வாய்வார்த்தை பலித்துவிட்டது. யாருக்கும் குறிப்பிட்ட காலமே வழங்கப்படும், அதை சரியாக, நிஞாயமாக பயன்படுத்தாவிட்டால் அது உங்களை விட்டு தூர விலகி விடும். இதை தெரிந்தவன் அதை பயன்படுத்திக்கொள்வான்.
  22. இது ஒரு நல்ல கேள்வி அதுவும் 21 ம் திகதி அவர் வெற்றி பெற்ற பின்பு எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது? சிங்கள மக்கள் தான் வழிகாட்டிகள் தமிழர்கள் அவர்களை பின்பற்றுவார்களா ஒரு தமிழ் வீடியோ வட்சப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஒரு தமிழர் சொல்கிறார் எங்களுக்கு ஐயர்மார்கள் வேண்டாம் அந்த ஆண்டவனே நேரடியாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக அந்த பிள்ளையை ஆதரிப்போம் 😭 ------------------------------------------ 1982 ஜனாதிபதி தேர்தலிலேயே அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை ஆரம்பித்த அவர் தலைவர் போட்டியிட்டுள்ளார் ஜே.ஆர்.ஜெயவர்தன -ஐக்கிய தேசிய கட்சி 52.91 வீதம் ஹெக்டர் கொப்பேகடுவ - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 39.07 வீதம் ரோஹன விஜேவீர - ஜேவிபி 4.19 வீதம் https://en.wikipedia.org/wiki/1982_Sri_Lankan_presidential_election
  23. நீங்கள் நல்ல வேடிக்கையாளராக இருக்கிறீர்கள்😁, நகரத்திலிருந்து படித்து விட்டு வந்த ஒரு தொடர்பற்ற சிறிய செவ்விந்திய இனக்குழுமத்தின் தலைவனாக பதவியேற்ற இளைஞனிடம் அந்த குழுமத்தினர் இந்த குளிர்காலம் அதிக குளிராக இருக்குமா என கேட்டனர், முன்னனுபவமில்லா அந்த இளைஞன் எதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த முறை வழமையாக சேகரிக்கும் விறகுகளை விட கொஞ்சம் அதிகமாக சேகரிக்க கூறினான். நகர்த்திற்கு சென்று வானிலை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்த முறை குளிர்காலம் எப்படி என கேட்டான் அதற்Kஉ இந்த முறை குளிர்காலம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என கூறினார்கள், உடனே தனது கிராமத்திற்கு விரைந்த இளைஞன் மேலும் கொஞ்சம் விறகுகளை சேகரிக்க கூறினான். மறுவாரம் நகரத்திற்கு சென்றாந்த இளைஞன் மீண்டும் அதே கேள்வியினை வானிலை ஆராய்ச்சி மையத்திடம் கெட்டான், அதற்கு அவர்கள் இந்த முறை குளிர் மிக மோசமாக இருக்கும் எனகூறினார்கள், அதற்கு அவன் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என கேட்டான் அதற்கு அவர்கள் செவ்விந்தியர்கள் விறகுகளை கண்மூடித்தனமாக சேகரிக்கிறார்கள் என கூறினர். தமிழ் நெற், தமிழ் கார்டியன் என்பன சிங்கள, ஆங்கில ஊடகங்களிலிருந்து தென்னிலங்கை செய்திகளை பெறுகின்றன, இந்த சின்ன இலங்கை செய்திகளை சி என் என் வெளியிடாது.
  24. சுமந்திரனும், சிறீதரனும் இப்ப சினேகிதமாம். இருக்கின்ற பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்று சினேகிதம் ஆகியுள்ளார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் என்ன கூத்துகள் எல்லாம் பார்க்கப் போகின்றோமோ. வெட்கம் கெட்டவர்கள். படு பயங்கர சுயநலவாத கும்பல்கள். மக்களை பைத்தியக்காரர் என நினைத்துக் கொண்டு, தினமும் லூசுத்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். இவர்களை நம்பி பின்னால் போனவர்கள் பாடுதான், திண்டாட்டம். 😂 🤣
  25. Dead cat bounce ஆக இருக்கலாம்😁. இலங்கை நாணயம் கனடா நாணயத்திற்கெதிராக் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டு போவதால், விலை வீழ்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் (Down trend). ஆனால் எதனையும் உறுதியாக கூற முடியாது.
  26. ஈராக்,லிபியாவை அடிச்ச நினைப்பில இப்பவும் கொஞ்சப்பேர் திரியினம்.... என்னத்த சொல்ல? சிரியாவில நேட்டோவும் அதில தொங்கின கொஞ்ச நாடுகள் வாயை மூடிக்கொண்டு வெளிய வந்தது பிபிசி சிஎன்என் கொம்பனியள் தெரிஞ்சும் தெரியாமலும் இருப்பினம் 😄
  27. பாவ மன்னிப்பு பெற்ற சிறீதரன்.. சுமந்திரனின் திடீர் மாற்றம் | இரா மயூதரன்
  28. சமாதானப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பில் மற்றுமொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையும் ஊர்வலத்தையும் நடத்திய தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி 23 சித்திரை 2002 அதி தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கம் புலிகளுடன் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலம் ஒன்றினையும் நடத்தியிருக்கிறது. சுமார் 5,000 தீவிரவாத சிங்களவர்களை ஒன்றுசேர்த்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். லிப்ட்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம் கொழும்பு ஹயிட் பார்க் இல் முடிவிற்கு வந்தது. சமாதான முயற்சிகளை எப்படியாவது தடம்புரளச் செய்வதன் மூலம் தமிழர்க்கு கொடுக்கவிருப்பதாகக் கூறப்படும் அதிகாரப் பகிர்வினை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னண்னியினர் இன்னொரு அணியினர் மேற்கு மாகாண சபையில் சமாதானப் பேச்சுக்களை நிறுத்தக் கோரும் விவாதம் ஒன்றினை இருநாட்களாக நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அமைப்பான கிழக்கு மாகாண மக்கள் அமைப்பு எனும் அதி தீவிர சிங்கள இனவாதிகளின் உறுப்பினர்கள் சித்திரை 24 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தவிருப்பதாக பொலீஸார் அறிவித்திருக்கின்றனர். புலிகள் மேல் நடைமுறையில் இருக்கும் தடையினை நீக்குவதற்கெதிராகவும், வட கிழக்கு மாகாண‌ங்களின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் ஒப்படைப்பதற்கு எதிராகவும் இந்த பேரணியை மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அணி நடத்துகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6874 உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் நொச்சி, இந்தத் தொடரின் ஆங்கில மூலம் தமிழ்நெட் மற்றும் தமிழ் கார்டியன் இணையங்களில் இருக்கிறது. நான் இவற்றைச் சேமித்து வைப்பது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல செய்வது நலம்தான். ஏனென்றால் ஒருமுறை நான் எழுதி, சேமித்துவைக்காத பகுதியொன்று யாழில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக அழிந்துபோனது நினைவில் இருக்கிறது. நட்புடன் ரஞ்சித்
  29. கட்டுங்கோ கட்டுங்கோ வருமானம் வர முதல் உங்களை வெளியேற்றுவார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் ....போர் என்று வந்தால் நீங்கள் கட்டிகொடுத்த துறைமுகத்திலிருந்து உங்கள் நாட்டை தாக்க சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்...
  30. அங்கையிருக்கிறவன்கள் தோட்டம் துரவுகளுக்கு போக மாட்டாங்கள். இதுக்கும் புலம்பெயர் தமிழன்கள் தான் தோழ் குடுக்கவேணும்......? 😂
  31. வானம் பார்த்த பூமி போல் தமிழனின் வாழ்க்கை. கவிதைக்கு நன்றி கோபி.👍🏼
  32. யாரைத்தான் நம்புவதோ ? நம்பி ஏமாந்த இனம் ...இனியாவது விடிவு பிறந்தால் நன்று .சமுக அக்கறையும் , இன விடுதலையும் கொண்ட ஒருவனை எங்கே காணப்போம்? நடைமுறை வாழ்வை எடுத்து சொன்ன கோபி அவர்களுக்கு நன்றி
  33. தமது வான்பரப்புக்களை பாதுகாக்க முடியாத எந்தவொருநாடும் சீண்டல்களுக்கோ போரிற்கோ செல்லக்கூடாது என்பதே தற்போதைய படிப்பினை.
  34. இது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விடயம் அல்ல. இதுவே உலக ஜதார்த்தம் தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார். ஆரம்பத்தில் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்த புலிகள் கூட உலக அரசியல் சற்றே புரிய தொடங்கிய பின்னர் தமது தவறை உணர்ந்து இந்தியாவுடன் அனுசரித்து போக பல தடவைகள் முயன்றனர். துன்பியல் சம்பவம், அன்ரன் பாலசிங்கத்தின் இந்திய ஊடகத்திற்கான பேட்டி 2002 பேச்சுவவர்த்தையை முழுமையாக இந்தியாவில் நடத்த புலிகளின் முன்மொழிவு என்று பல தடவை இந்தியாவை அனுசரித்து போகவே விரும்பினர். ஆனால் புலிகளில் கடும் போபமுற்றிருந்த இந்தியாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து போவதை தவிர்கக முடியாது. ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது.
  35. கண்டிப்பாக நிச்சயம் அமுல் படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை மேலே அவர் சொன்னதை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் அதாவது விரும்பினால் நடைமுறைபடுத்துங்கள். என்பது தான் அதன் கருத்து நீங்கள் நடைமுறை படுத்தவிட்டாலும். எங்கள் உறவு தொடரும் என்ற பொருள்படும்படி சொல்லி உள்ளார் சந்திரிக்கா ரணில் மகிந்த மைத்திரி கோத்தா இவர்களிடம் 13 ஐ ஏன் அமுல் செய்யவில்லை என்று இந்தியா என்றாவது மறந்தும்கூட கேட்டுள்ளாதா ??? இல்லை அவர்கள் கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இது உள்நாட்டு பிரச்சனை 😂😂😂😂😂 தலையீடுவது. அழகுயில்லை 🙏
  36. என்ன நான் சொல்லுறது சரிதானே...? 😂
  37. நொச்சி வரமாட்டார். ஏனெனில் அவர் மதில் மேல் பூனை அல்ல.
  38. கேள்விகளுக்கு பதில் கேள்விகளுக்கு கேள்வி அல்ல பதில்??
  39. சுரேஷ் தமிழர் என்பதால் தான் பேச வேண்டியிருக்கிறது. சிங்களவன் தமிழரைக் கொல்வது புதுமையா? அப்படியிருந்தும் சிங்கள தேசியவாதி அனுரவின் அணி தமிழர்களை நேரடியாகக் கடத்திச் சென்று, சித்திரவதை செய்து, மண்டையில் போட்டு வீதியில் வீசியமை இது வரை நடக்கவில்லை. இனி நடந்தால் அது வேறு கதை. உங்களைப் பொறுத்தவரை, சுரேஷ் என்ற மண்டையன் குழுத் தலைவரின் கதை, அவர் 2002 இல் புலிகளின் தோட்டாக்களின் மீதான பயத்தால் "புலிகளையும் தமிழ் தேசியத்தையும் சிரமேற் சுமக்க ஆரம்பித்த நாள்" முதல் தான் ஆரம்பிக்கிறது. எங்கள் போன்றவர்களுக்கு 89 இல் பள்ளிக்கூடத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் கூட ஒளித்துத் தான் போக வேண்டிய அவல நிலையோடு இவர்களின் கதை ஆரம்பிக்கிறது. என் சமகால பாடசாலை வகுப்பினரிடையே, இந்த ஒட்டுண்ணிகளின் தொல்லையால் படிப்பை விட்டு வெளிநாடு போய் தம் எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப் பல கல்வி ஆர்வத்துடன் இருந்த அப்பாவி இளையோரை ஊரை விட்டுத் துரத்தி விட்டு, பின்னர் தமிழ் தேசியத்தை தலையில் தூக்கிக் கொண்டு பா.உ ஆன சுரேஷ் ஒரு ஒல்லிப் பித்தானாக இருந்த ஆயுததாரி. இப்ப பா.உ பதவியால், எல்லாப் பக்கத்தாலும் ஊதிப் பருத்து சொகுசாக இருக்கிறார். இவர் போன்றவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!
  40. நல்ல ஜோக்கராக மாறி வருகிறார் சுரேஷ்! கூட்டமைப்பின் அடையாளம் இல்லா விட்டால் எப்பவோ இவர்கள் அரசியல் மேடையில் இருந்து மறைந்திருப்பர் என்பது கூட விளங்காமல்😂?
  41. சுமந்திரனின் கோரிக்கை சரியானது. பிரான்சில் ஒருவர் அரசியலில் நுளைவதானால் அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தெரியப்படுத்த வேண்டும். சாராயக்கடை வைத்திருப்பது சட்டவிரோதமானதல்லவே. அரசாங்கம் தான் அனுமதி வழங்குகிறது. இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் பகிரங்கமான உரிமையாளைர்களையே கொண்டுள்ளது. சாரக்கடை உரிமையாளரை மட்டும் ஏன் கிசுகிசு தகவல்கள் மூலம் குறிப்பிட வேண்டும் ?
  42. ******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் ******************************************************************************************************************** 26, பபுரட்டாதி 2024 https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக‌ வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற‌ சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். "ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார். தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிட‌த்தக்கது. சிறு குறிப்பு : நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
  43. இது ஒரளவு உண்மை. சிங்களவர்களுக்கு racism vs patriotisms வித்தியாசம் தெரியாது. சிறுவயதில் இருந்தே இவர்களுக்கு பொளத்த சிங்கள மேலான்மைதனம் விதைக்கப்டுகின்றது. பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலேயே இது இவர்களுக்கு போதிக்கப்ப்டுகின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் குடிமக்க‌ள், இவர்களே பூமி புத்திரர். புத்தர் இந்த நாட்டை சிங்கள பொளத்தர்களுக்கே கையளித்துள்ளார். இவர்களே இந்த நாட்டை அரசாள வேண்டும் என்று பாடசாலை நாட்களெலேயே போதிக்கப்படும். என் பாடசாலை நண்பன் சிங்கள பெண்ணை திருமணம் செய்து கண்டியில் வாழ்கின்றான். இவன் இப்பொழுது சிங்களவன் போல பெயரை மாற்றியுள்ளான். ஒரு மகன் ஆமதுரு, எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். இப்பொழுது பன்சலையில் செயலாலராக இருக்கின்றான். ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, பெண்கள் படாசாலைகளான பொளத்த மகளிர் கல்லூரி, தேவி பாலிக, விசாக போன்ற எல்லாவற்றிலும் இப்படித்தான். படிக்கும் காலத்திலேயே இந்த இனவாதம் விதைக்கப்பாடும். அனனகரிக தர்மபால காலத்திலிருந்தே இது இப்படித்தான். மனிதனுக்கு இயல்பாக இருக்கும் "தான் எலலாவற்றிலும் சிறந்தவன்" என்ற‌ இயல்புதான் பின்பு இனவாதமாக தோற்றமெடுக்கின்றது. முஸ்லீமகளள் மதவாதிகள் இவர்கள் சாதரணா கிறிக்கட் விளையாட்டிலும் கூட பாக்கிஸ்தானையே ஆதரிப்பார்கள்
  44. பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன். மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள். ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு. "எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை.
  45. ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்…. கேரள கஞ்சா, ஆப்கானிஸ்தான் அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣 முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள். மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐 தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣 கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁
  46. ஆம் ஐயா. ஆடி ஆடி வானத்தில் மிதந்து வந்த ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் கல்லெடுத்து கட்டபோலில் வைத்து அடித்து கையால் விழுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பேசி பெருமைப்படுகின்றார்கள்.
  47. வாழ்த்துக்கள் வினோ.... 👍 மாவை சேனாதிராசா, ஆபிரகாம் சுமந்திரன்.. ஆகியோரின் அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். 😁 அவை இரண்டு பேரும் போனவுடன் தமிழரசு கட்சிக்கு... மஞ்சள் தண்ணி தெளித்து புனிதமாக்க வேண்டும். 😂 அதுக்குப் பிறகு தமிழரசு கட்சிக்கு ஏறுமுகம் தான். 📈 ⬆️ ✔️ இல்லையேல்... ஆறடி குழி தோண்டி, புதைத்து விட வேண்டியதுதான். 🤣
  48. இது பெரிய மானம் மரியாதைப் போட்டி, சிறி அண்ணா. இந்த இருவரும், ரஜனியும் விஜய்யும், நானா நீயா 'நம்பர் ஒண்ணு' என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ரசிகர்களும் அப்படியே. இதில் ஈழத்தவர்களும் உண்டு........🫣. விஜய்யின் GOAT நல்லா ஓடியதா, இப்ப 'வேட்டையன்' அதைத் தாண்டிப் போக வேணும் என்று தலைகீழாக நிற்பார்கள் ரஜனியும், அவரது ரசிகர்களும். 120 ரூபாய் டிக்கட்டை 2000 ரூபாய்க்கு விற்பதை, 5 ரூபாய் பாப்கோர்னை 25 ரூபாய்க்கு விற்பதை இருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் ஊழலை அழித்து, ஒரு புதுச் சமூகத்தை இருவரும் உருவாக்குவோம் என்பார்கள்..........🤣. கருட புராணத்தில் பாப்கோர்ன் மெஷினுக்குள் ஆட்கள் போடுவது மாதிரியும் ஏதும் தண்டணை இருக்குதோ என்று தேடிப் பார்க்கவேண்டும்................
  49. அந்த சிறைச்சாலை எங்கு ஐயா இருக்கு . ...........! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.