Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    88794
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14704
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20342
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    4055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/15/24 in all areas

  1. இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை? நாடுகளுக்கு பிரச்சனை என பத்திரிகை எழுதலாம் ....ஆனால் இது காளிஸ்தான் தேசியத்தின் பயம் காரணமாக இந்தியா வின் எல்லை தாண்டிய அரச பயங்கர்வாதம்....இந்த விடயத்தில் சிறிலன்கா அரசும் ஐந்தியா அரசும் நண்பேன்கடா... தமிழ் தேசியத்துக்கு சிறிலங்கா பயப்படுவது போல இந்தியா காளீஸ்தான் தேசியத்துக்கு பயப்ப்படுகிறது
  2. மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்! Vhg அக்டோபர் 14, 2024 சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது. ஆனால் அதுதான் உண்மை. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர். ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படி என்று பார்ப்போம். 'யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரனை தோற்கடித்தே தீருவது' என்று கங்கணம் கட்டி நின்றுகொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். வாக்குகளின் அடிப்படையில் இம்முறை சுமந்திரன் வெல்லுவது என்பது மிக மிகக் கடினம் என்றுதான் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் அவர் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் சுமந்திரனின் என்கின்ற தமிழ் மக்கள் பெரிதாக விரும்பாத ஒரு நபரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பி விடக்கூடிய அபாயத்துக்கு வித்திட்டுவிடும். ஒரு கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் என்பது, ஒரு கட்சிக்கு இலங்கை முழுவதும் விழக்கூடிய ஒட்டுமொத்த வாக்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஆசனம். அதனால் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் சுமந்திரன் தெரிவாகுவதற்கு சாத்தியம் இருக்கின்றது. உதாரணத்திற்கு, வீட்டுச் சின்னத்தில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நீங்கள் அம்பாறையில் வாக்களித்தாலும் சரி, மட்டக்களப்பில் வாக்களித்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் வாக்களித்தாலும் சரி, சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு மறைமுகமாக நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் என்பது தான் உண்மை. எனவே சுமந்திரன் இம்முறை தமிழ் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுகின்ற எந்த ஒரு வேட்பாளரையும் நீங்கள் ஆதரிக்க முடியாது என்பதுதான் சமன்பாடு. https://www.battinatham.com/2024/10/blog-post_873.html
  3. "கார் கூந்தல் சரிந்து விழ" "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காகொடி தரும் நஞ்சை விடவும் காமப் பால் நெஞ்சில் வடிய காசனம் செய்யும் விழிகள் திறந்து காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !" "காசினி மேலே அன்னநடை போட்டு கால் கொலுசு தாளம் போட காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி காருண்யம் காட்ட என்னை அழைத்து காதல் தெளித்து ஈரம் ஆக்கி கானல் உள்ளத்தை சோலை ஆக்கி கார் மேகமாய் அன்பு பொழிந்து காலம் அறிந்து காரிகை வந்தாள் !" "காதோரம் மெதுவாய் செய்தி கூறி காங்கேயம் காளையாக வலு ஏற்றி காட்டுத் தீயாக ஆசை பரப்பி காவல் உடைத்து என்னைத் தழுவி காவணம் முழுதும் மலரால் அலங்கரித்த காமன் விழாவிற்கு என்னை அழைத்து காலை மாலை முழுவதும் கொஞ்சி காவற் கடவுளாய் நம்பி வந்தாள் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] காகொடி - A thorny poisonous tree [Strychnine tree], எட்டிமரம் [காஞ்சிகை], ஒரு விஷ மரமாகும். காசனம் - Killing,slaying; கொலை காகோதரம் - snake, பாம்பு காசினி - world, Earth, உலகம், பூமி காஞ்சனி - colour of gold, பொன்னிறம் தொய்யில் - மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு காருண்யம் - mercy, compassion, கருணை காரிகை - woman, பெண் காவணம் - open hall, pandal, மண்டபம், பந்தல்
  4. சும் இன் செம்புகள் மேடைக்கு வரவும்…. தேர்தல் வந்தவுடன் தமிழ் தேசியம் வந்துவிட்டது சும் இற்கு….
  5. இவர்களே… ஆறு இடத்தையும் எடுத்தால், தமிழரசு கட்சியை எரிக்கிறதா, புதைக்கிறதா… என்ற நிலைமை நெருங்கி விட்டது போலுள்ளது. 😂 இப்போது களத்தில் இறங்கியுள்ள அர்ச்சுனா போன்ற புதிய முகங்களும், தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களும்…. தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் இருந்தே தமது வாக்கை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, தமிழரசு கட்சி மரண அடி வாங்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அதில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்பிலை. அத்துடன் அனுர அலையும்… வடக்கு, கிழக்கில்… புதிதாக கிளம்பியுள்ளதால், தமிழரசுக் கட்சி தூக்கி வீசப்படும். எல்லாவற்றுக்கும் அந்த உளறுவாயன் சுமந்திரனும், கொம்பு சீவி விட்ட அல்லக்கைகளும் தான் காரணம். 🤣
  6. சுமத்திரனை தமிழ்தேசிய அரசியலில் இருந்து அகற்ற வேண்டுமெனறால் சிறிதரனுக்கும் வாக்குப் போடக் கூடாது. 2020 இல் கை;கிய தேசியக்கட்சியை முற்றாகத் தோற்கடித்தது போல் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் தோற்கடிக்க வேண்டும்.
  7. தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் இருந்து மாவையுடன் சேர்ந்து முடிவெடுப்பவராக இருந்திருந்தால், நிலாந்தன் இத்யாதிகளுடன் சங்கு ஊதப் போய் ஓட்டு மொத்த கட்சியையும் போட்டுடைத்திருப்பார் என்பதை நடக்கும் சம்பவங்களால் இப்பொழுது அறிய முடிகிறது. ஒரு கட்சியை நடத்துவதற்கான வல்லமை சிறீதரனிடம் இல்லை. ‘பார் லைசனஸ்’ விபரங்களை வெளியிடுங்கள் என சுமந்திரனும் கேட்கிறார். டக்ளஸும் கேட்கிறார். சிறீதரன் photoவுக்குக் கூட சிரிக்க மாட்டேன் என்கிறார். கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம் கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம். ஒருவர் மீது கொண்ட வெறுப்புக் கண்கள் யதார்த்தத்தை பார்க்க மறுக்கிறது.
  8. https://www.facebook.com/kunalan.karunagaran/posts/pfbid02dkgEHxtnJo8x5z4VBR1xUtsk627AAhLNFvssGSWoieEufS5K6EksxKwSZobf537sl இன்று மீண்டும் பரபரப்பாக பேசப்படும் பெயர் ஷானி அபேசேகர கொழும்பில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்களை கப்பம் கோரி கடத்தி கொடூரமாக கொன்ற சிறீலங்கா கடற்படையினரின் கொடூரங்களை ( திருகோணமலை கன்சைட் சித்திரவதை முகாம் ) ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசாவுடன் இணைந்து வெளியுலகிற்கு கொண்டு வந்தவரே இந்த ஷானி. கோத்தபாய ராஜபக்ச அரசு அவரை சிறையில் தள்ளி அணு அணுவாக கொல்லமுயன்ற போது அவரை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் ஆளுமை நிறைந்த சனங்களின் சட்டத்தரணி & சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் K.v. Thavarasha கே வி தவராசா
  9. வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
  10. அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை இடம் பிடித்துள்ளார்.
  11. பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "இளமைக் கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் ஒளிர்ந்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
  12. கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே. வேறு எவருக்கும் எங்களுடைய மக்கள் ஜனநாயக ஆணையைக் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கப் போவதுமில்லை. தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்று அறிவித்து இதுவரை காலமும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சி தான் பலமான அணியாக பாராளுமன்றத்திற்குள் செல்லவேண்டும். மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஒரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றி இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலோடு ஒரு ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாய சங்கை ஊதினோம் அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள். ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம்பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. கட்சிப் பெயரை திருடினார்கள். மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்த சின்னத்தையும் திருடி விட்டார்கள். 23ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சின்னத்தை நாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை. சின்னத்தை திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கை கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழ திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசாங்கம் இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களை தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் என கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது இன்னும் வெளிப்படுத்தவில்லை. நான் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் மதுபான அனுமதிப் பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும். தமிழரசு கட்சியின் உடைய வேட்பாளர் தெரிவிலே நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இளையவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். மக்கள் கேட்கின்ற மாற்றத்திற்கு நாங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கு ஈடுகொடுக்கமுடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தல் காலங்களில் வெளியேறியிருக்கிறார்கள். கொள்கைப்பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களை குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்கு சொல்லத் தேவையில்லை. அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருத தேவையில்லை என தெரிவித்தார். https://www.battinews.com/2024/10/blog-post_756.html
  13. தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை! ********************************************* அன்று.. பசியில் பாண் திருடி தம்பி தங்கைக்கும் பசியாற்றிய பாலகிக்கு திருடியெனும் பட்டம் கொடுத்து மரத்தில் கட்டிவைத்த செய்தி…. இலங்கையின் இரக்கமற்ற நீதி இன்றோ.. மக்கள் பணத்தை கோடி கோடியாக திருடி கொள்ளையடித்த வெள்ளை வேட்டி கள்ளர்களை விட்டுவைத்த-பழய அரசர்களையும் திருடர்களையும் அதியுச்சத் தண்டனை கொடுப்பதே! நாட்டு மக்களுக்கான இன்றைய மனுநீதியாகும். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  14. கார்ட்டூனின் ஆழமான அரசியல் சிந்தனை மற்றும் தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கும்போது, நாம் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொருத்தி, இங்குள்ள பல குறியீடுகளை நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டும். இக்கார்ட்டூன் சிங்கள தேசியவாதம், சிங்கள சovinism, தமிழ் சமூகத்தின் பாதிப்பு, மற்றும் இந்தக் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகிறது. ### 1. **சிங்கள தேசியவாதம் மற்றும் சிங்கள சovinism:** முதன்மையாக, இந்த இரண்டு கருத்துக்களை வேறுபடுத்த வேண்டும். "சிங்கள தேசியவாதம்" என்பது பொதுவாக ஒரு இனத்துக்கு சொந்தமான கலாச்சார, மொழி மற்றும் பாரம்பரிய அடையாளங்களை உயர்த்திப் பேசும் ஒரு கலாச்சார இயக்கமாக இருக்கலாம். இது பெரும்பான்மை சிங்கள இனத்தின் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் அடிப்படையில் இயங்குகிறது. இது இலங்கையின் வரலாற்று பின்னணியில், குறிப்பாக 1948 சுதந்திரத்திற்கு பின்னர், பெரும்பான்மையாக உருவாகியபோது சிங்கள இனத்தின் அடையாளத்தை பாதுகாக்க ஒரு வழியாகத் தோன்றியது. ஆனால், "சிங்கள சovinism" என்பது இதைவிட மிகக் கடுமையானது. சovinism என்றால், இது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வன்மையான மேலாதிக்க எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள சovinism என்பது, சிங்கள இனத்தின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற இனங்கள், குறிப்பாக தமிழர்கள், இரண்டாம் வகுப்பினராக பார்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை. கார்ட்டூனில், சிந்தனை மற்றும் பாவனையின் அளவில் சிங்கள தேசியவாதத்தின் பின்னாலேயே இந்த சovinism வேலை செய்கிறது என்பதை இச்சித்திரம் காட்டுகிறது. தர்க்கரீதியாக, இது ஒரு அடிப்படையான அரசியல் இயக்கத்தின் மாற்றி நிற்கும் ஆழமான சிந்தனைகளைக் காட்டுகிறது. சிங்கள தேசியவாதம், உண்மையில், பெரும்பான்மை சிங்கள இனத்தை மற்ற இனங்களின் மீது மேலடிக்கச் செய்வதற்கு ஒரு மூலமாக மாறிவிட்டது. இந்த சovinism-இன் உருவம் தன்னார்வம் போன்றதாகவும், தீய நோக்கங்களுடன் நடக்கின்றதாகவும் வெளிப்படுகிறது. ### 2. **அரசியல் சார்ந்த சித்திரவாதம்**: கார்ட்டூனில் உணவைச் சமர்ப்பிக்கும் சபையாளர் (waiter) பங்கும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டும். சபையாளர், சிங்கள இனத்தின் அரசியல் சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போல சிங்கள தேசியவாதத்தைத் தட்டில் வைத்து சமர்ப்பிக்கிறார். இது அரசியல் நிலவரத்தை எளிதாக்கி தருகிறது – அரசாங்கம், தனது அதிகாரத்தின் மூலம், சிங்கள இன மேலாதிக்கத்தை விதிக்கின்றது. ஆனால் சிங்கள சovinism, சிங்கள தேசியவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிர மற்றும் ஆபத்தான விசயம் என்பதை இதன் உருவத்தில் வெளிப்படுத்துகிறது. தர்க்கரீதியாக, சபையாளர் அரசியல் அதிகாரத்தின் சித்திரவாதியாகவும் (symbol) பார்க்கப்படலாம். அவர் ஒரு நடுநிலை முறைமை போன்றவராக இருப்பினும், அவர் சிங்கள இனத்தின் தேவைகளையே முக்கியமாகக் கவனிக்கிறார். இது அரசியல் மற்றும் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் எதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது. ### 3. **தமிழரின் நிலை மற்றும் அடிமைப்படுத்தல்:** வலதுபுறத்தில் இருக்கும் பெண் (தமிழ் பெண்) ஒரு வாதவாதம் செய்யும் உருவாக்கமாக இருக்கிறார். அவர் சிங்கள சovinism மற்றும் தேசியவாதம் இரண்டு சந்தர்ப்பங்களாலும் கொடுக்கப்படும் கொடுமையால் அச்சமடைந்தவர். சிங்கள இனத்தின் தேசியவாதத்தை அவர் ஒரு நியாயமான கலாச்சார தேசியவாதமாக ஏற்கவேண்டிய சூழ்நிலையில், அதன் பின்னால் இருக்கும் சovinism அவரைக் கொடுமைப்படுத்துகின்றது. இது அவரின் மவுனத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தின் அரசியல், சமுக, கலாச்சார உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளன, இப்பெணின் நிமிர்ந்திருக்கும் (அச்சமடைந்த) தோற்றம் அதை காட்டுகிறது. ### 4. **தற்கால அரசியல் விளைவுகள்:** தற்போது இலங்கை அரசியலில், சிங்கள தேசியவாதத்தின் அரசியல் விளைவுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் அடக்குகின்றன. அரசின் மதவாத மற்றும் இனவாத செயல்பாடுகள், தமிழ் மக்களின் அரசியல் நிலையை பலவீனமாக்குகின்றன. இது தமிழக மக்களைப் பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளிலும், இந்த சிங்கள தேசியவாதம் ஒரு முக்கியமான தடையாக அமைகிறது. தர்க்கரீதியாக, இது இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளின் ஆதரவுகளுக்கும் மாற்றான பலரின் சிந்தனைக்கும் இணையாக இருக்கிறது. தமிழரின் அடிப்படை உரிமைகளை ஒழிக்கவும், இன அடிப்படையில் கொடுமையை வளர்க்கவும் சிங்கள சovinism பயன்படுத்தப்படுகிறது. ### 5. **முடிவுரை:** இந்த கார்ட்டூன் இலங்கையின் தற்கால அரசியல் நிலைமைகளின் ஒரு தர்க்கரீதியான பிரதிபலிப்பாக இருக்கிறது. சிங்கள தேசியவாதம், இப்போது தமிழ் சமூகத்திற்கு ஒரு சான்றான துரோகமாக இருப்பது மட்டுமின்றி, அதன் பின்னால் உள்ள சிங்கள சovinism, பெரும்பான்மையினரின் அடக்குமுறைகளை உணர்த்துகின்றது. See lesshttps://www.facebook.com/photo/?fbid=122120845610460178&set=a.122099946026460178
  15. 2009ம் ஆண்டு இல‌ங்கை வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தானில் வைச்சு சுட்ட‌து இந்தியா றோ அதுக்கு பிற‌க்கு தான் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் விளையாட‌ கூடாது என்று த‌டை போட்ட‌வை ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும் இல‌ங்கை அணி பாக்கிஸ்தானில் போய் விளையாடி பாக்கிஸ்தானில் பாதுகாப்பு எல்லாம் ப‌ல‌மாய் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ பாதுகாப்பை பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரிய‌ம் கொடுக்குது என்று சொன்ன‌ பிற‌க்கும் இந்தியா ச‌தி செய்து ம‌ற்ற‌ நாடுக‌ளை பாக்கிஸ்தானில் விளையாட‌ விடாம‌ ப‌ண்ணிவை கிட்ட‌ த‌ட்ட‌ 10 வ‌ருட‌த்துக்கு மேல் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌க்க‌ வில்லை ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான் ப‌ழைய‌ நிலைக்கு பாக்கிஸ்தான் திரும்பி இருக்கு.................இப்ப‌ எல்லா நாடுக‌ளும் பாக்கிஸ்தான் போய் விளையாடுகின‌ம்................. இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் நாடு அது அர‌சிய‌ல் என்றாலும் ச‌ரி விளையாட்டு என்றாலும் ச‌ரி😡 2009 இந்தியாவுக்கு மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ ஆண்டு எம் உற‌வுக‌ளை ப‌டுகொலை செய்து எம் போராட்ட‌த்தையும் அழித்த‌து பாக்கிஸ்தானில் துப்பாக்கி சூடு ந‌ட‌த்தி பாக்கிஸ்தான் பாதுகாப்பில்லாத‌ நாடு போல் சித்த‌ரித்த‌தில் இந்தியாவின் ப‌ங்கு பெரிது 2009க‌ளில் இவ‌ர்க‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் கொடுமைக‌ளுக்கு இவ‌ர்க‌ளின் நாடு உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போகும்...............................
  16. காலிஸ்தான் தேசியவாதிகளுக்கு ஜெய் ஹிந்😅 அந்த துப்பலில் தெறித்து உருவானது தான் சிறிலங்கா தேசியமும் ...அதை சிங்கள தேசியமாயக்க 72 வருடமாக் சிங்கள அரசியல்வாதிகள் போராடுகிறார்கள் பார்ப்போம்.புது தலமை என்ன செய்கின்றது செய்யப் போகின்றது எண்டு
  17. உண்மை... அதுவும் அவர்களை பிடித்தது கிழக்கு ஐரோப்பாவில் வைத்து என நினைக்கிறேன்....அமெரிகன் இந்தியாவை கையாள்வது கனடாவின் ஊடாக ... அமெரிக்காவின்ட சின்ன தம்பி கன்டா இதை தானேயடா நீங்கள் உலகம் பூரா செய்யிறீயல் ...கண்ணை மூடி தியானம் பண்ணுங்கோ பிரபஞ்சம் தெரியும் என சொல்லி கொண்டு ....நீங்கள் வெற்றியடைய ஆயுதம் தூக்கிற ஆட்கள் தானே ...
  18. வைத்தியர் அர்ச்சுனாவின் செல்வாக்கு அவரது மாறுபட்ட செயல்பாடு மற்றும் கருத்துக்களால் சிதைந்து விட்டது. இந்த நிலையில் இந்த வேளையில் இது தேவையற்றது. இருக்கும் கொஞ்ச வாக்குகளையும் பிரித்து பிரித்து.....,???
  19. மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம் adminOctober 15, 2024 கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207538/
  20. கூட்டுக்கு உப்பு, புளி, மிளகாய் வேண்டுமே! இல்லையானல் ருசிக்காது க தி வி னா அவர்களே!
  21. இவரது கணவர் ஒரு மருத்துவர், பரியோவான் கல்லூரியில் படித்தவர். கிருஷ்ணவேணி என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவியின் சகோதரி. அரசியலுக்கு வரக் கூடியளவுக்கு எந்த திறமையும் அற்றவர் இவர்.
  22. வெளிநாடு போன முக்கிய சாட்சிகள் பலர் நாடு திரும்புகிறார்கள்.
  23. ஓம் அண்ணை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வந்த அமைச்சரவைத் தீர்மானம் இது. ஆட்சி மாற்றத்தோட செப்ரம்பர் தருவதாகக் கூறிய 3000 ரூபா வராது போல!
  24. தவளையும் தன் வாயால் கெடும். அதுகும் மூன்று நாட்களுக்குள் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் படி குறுகிய கால கெடுவை… அரசாங்கம் விதித்துள்ளது. மாட்டிக் கிட்டாரு மைனரு… 😂 🤣
  25. ஆனால் என்ன செய்வது…. வெட்கம், சூடு, சுரணை, மானம், மரியாதை இல்லாததுகள்… பின் கதவாலைதான் பாராளுமன்றத்துக்குள்ளை போகப் பார்க்கும். இந்த முறையாவது திருந்தி இருக்கின்றார்களா என பார்ப்போம்.
  26. தமிழ் இளைஞர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி இராணுவ பாதுகாப்பு பெற்று வடக்கிற்கு வலம் வந்தவர், சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஸ்ரம் என்று பேட்டி கொடுத்தவர், இன்று எப்படி இளைஞர்களை கட்சியில் சேர்க்கிறாராம், வெட்கமில்லாமல் வடக்கு மக்களிடம் வாக்கு கேட்க்கிறார்? பேச்சாளர் பதவிகாலம் முடிந்துவிட்டது, அதிலிருந்து விலகவில்லை, தலைவர் பதவியை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியும் இவைகளை விட்டால் தன்னை ஒரு தூசாக கூட யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது. தட்டித்தவறி வருங்காலத்தில், யாரும் தங்கள் கட்சியிலோ, வேறு எந்த குழுவிலோ இவரை சேர்த்து விடாதீர்கள், எல்லோரையும் இரண்டுபடுத்தி, விரட்டி விட்டு அமர்ந்துவிடுவார். பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.
  27. நீங்கள் எல்லாரும்... உங்கடை ஊரிலை இருக்கிற வாக்குகளை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு தருவீங்களாம், நான் அதை எடுத்துக் கொண்டு "பின் கதவாலை பாராளுமன்ற கன்ரீனுக்குப் போய்"... "கொத்து ரொட்டி" சாப்பிடுவனாம். உங்களுக்கு நான் "அல்வா" வாங்கிக் கொண்டு வந்து தருவனாம். எப்பிடி டீல்... ஓகே தானே... - ஆபிரகாம் சுமந்திரன்.-
  28. உங்கள் பேரன் நிலனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். "நிலன்" சுருக்கமான நல்ல தமிழ்ப் பெயராக உள்ளது. நீங்களா... அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுத்தீர்கள்.
  29. இந்தியா வந்து கிட்டத்தடட, சுமந்திரன் மாதிரி.... 😂 🤣 ஒருவரையும் அனுசரித்து போகத் தெரியாது. சொல்லும், செயலும், சிந்தனையும்.... மற்றவர்களுக்கு குழி பறிப்பதிலேயே இருக்கும். 😎
  30. இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது
  31. அது எனது திறமை கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள். யோசுவின். புத்திரர்கள். அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை. குறிப்பாக சுமத்திரனுக்கும். பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம் இந்த கருத்துகள் திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது தேவையெனின் கிறித்தவ கட்சி என்று ஒன்றை தொங்குவது தான் அதற்கு தும்பு. இல்லை தைரியம் இல்லை தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு உறிஞ்ச மட்டும் முடியும் மக்களின் முடிவை 15.11.24.இல் பார்ப்போம் 🙏
  32. அதென்ன வடக்கு மக்கள்? அதாவது வடக்கு மக்கள் சிங்கள தேசத்திலிருந்து விசேடமான பிரிவை சேர்ந்தவர்கள் என்று அநுர சொல்ல வருகிறாரா? ஒருவகையில் அதுவும் உண்மைதான், இங்கே சந்திக்கும் பல சிங்களவர்கள் யாழ்ப்பாணம் தாங்கள் போய் வந்தோம் யாழ்மக்கள் நல்லவர்கள் என்று என்னமோ ஐரோப்பா அமெரிக்கா போய் வந்தோம் என்பதைபோல பெருமையாகவும் வியப்பாகவும் சொல்வார்கள். சொல்லிவிட்டு எமது கண்களை கூர்ந்து பார்ப்பார்கள். அத்தனை லட்சம் அவர்களின் படைகள் இன்றும் வடக்கில் குவிந்திருந்தாலும் அவர்களுக்கு அது அவர்களின் லங்கா என்பதில் திருப்தியில்லை அந்த பயமும் கெளரவமும் தனித்துவமும் கரிகாலன் தந்தது. கிழக்கு ஏற்கனவே பறிபோய்விட்டது இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் கிழக்கின் விடிவெள்ளிகள் சிங்களவனுடன் பார்ட்டி வைத்து பகிர்ந்தளிக்கிறார்கள் சிங்களவன் எமக்கான தீர்வொன்றை தானாக ஒருபோதும் தரபோவதில்லை, அப்படி ஒரு காலம் ஏதோ ஒரு முனையிலிருந்து எம் கதவை தட்டும்வரை.... வடக்கையாவது முழுமையான தமிழர் பிரதேசமாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க முடிந்தவரை தமிழர்களின் நிலங்களை பிறர் இனங்களுக்கு விற்காமல், எமது மதங்கள், கலாச்சாரங்கள்,வியாபார நடவடிக்கைகள் மொழியின் ஆளூமை அனைத்தையும் முழுமையாக முழு வீச்சாக கடைப்பிடித்தால், சிங்களவர்கள் காலபோக்கில் எம் நிலத்தை தின்னமுன்னர் வன்னி முல்லை கிளிநொச்சியில் மக்கள் இல்லாத நிலபரப்புகளை நிலபுலனற்ற மலையக தமிழர்கள், வடகிழக்கின் தமிழ்மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை குடியேற்றி பெருமெடுப்பில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து முழுமையாக எம் மக்களால் சூழப்பட்ட மாகாணமாக உருவாக்கி நேர்மையானதும் ஒழுக்கமானதுமான புதிய அரசியலை பிரசவித்தால் எம் மண் சிங்கள தேசத்துக்குள்ளேயே தனித்துவமாக இயங்கும், சிங்களவர்கள் விருந்தாளிகள்போல் வந்து போகட்டும், இதுநாள்வரை எம்மிடையே இருந்த கட்சிகள் இல்லாமல் நேர்மையும் இளமையும் ஒழுக்கமும் கலந்த தமிழர் பிரதிநிதிகள் உருவாகி காலத்திற்கேற்ப சிங்கள அரசியலுடன் முட்டி மோதாமல் எமது சக்தியை வைத்து எம் மக்களின் நலன்களுக்கான ஒரு பேரம் பேசும் அரசியல் செய்து எம் மக்களை தனித்துவமானவர்களாக்கலாம். அதிலாவது சிறு நிம்மதி.
  33. நல்ல விடயம். புதுமுகங்கள் தமிழ் மக்களிற்கு புதிய பல நல்ல விடயங்களை கொண்டு வரவேண்டும். இந்த தடவை ஒரு வேளை வெற்றி பெற முடியாவிட்டாலும் நல்லதொரு அடித்தளமாக, ஆரம்பமாக இந்த சுயேட்சை குழு அமைய வேண்டும். வேட்பாளார்களின் கல்வி/தொழில்/சமூக தொடர்புகள்/பின்னணி/ஆர்வம்/முயற்சி/கண்ணோட்டம் இவை பற்றி அறியத்தாருங்கள் பார்ப்போம்.
  34. நிலனுக்கு 4ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
  35. கொஞ்சம் பொறுங்கோ மக்கள் உங்கள் எல்லாருக்கும் சங்கு ஊதுவார்கள்.
  36. இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.
  37. வெய்ட்பண்ணுங்க சார் இப்ப என்ன அவசரம் கிடக்கு! எலக்சனுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள வெளியிடுவம் தானே!
  38. இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும் இவரும் இவரது ஆதரவளார்களும். 10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள் அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது விடில். வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂
  39. வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு செய்கிறார்கள். அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்.
  40. குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். உங்களுக்கும் இப்ப திருப்தி தானே... கபிதன். 😂
  41. “I am hereby calling for the death penalty for any migrant that kills any American citizen or a law enforcement officer,” He announced plans to “expedite the removals of these savage gangs” by invoking the Illegal Aliens Act, a law from 1798 that allows the president to declare an “invasion” and deport non-citizens. https://www.telegraph.co.uk/us/politics/2024/10/11/trump-aurora-speech-live-colorado/ 👆ட்ரம்பின் கூற்றின் சாரம் இதுதான். அமெரிக்கர்களைக் கொல்லும் பிற நாட்டவர்களை அமெரிக்கா தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதுதான் வரலாறு. ட்ரம்ப் அதை வெளிப்படையாகச் சொல்கிறார். பைடன் சொல்லவில்லை. செய்கிறார். அதுதான் வேறுபாடு.
  42. அதில் ஒரு கல்லை சிவராம் கொலை வழக்கை வைத்து விடுங்க 😁 கடைசியில் நடக்கபோவதை dailymirror.lk காரன் இன்றே சொல்லி விட்டான் நாங்கதான் .......................... இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் .
  43. சலிப்பின் விளைவாகவே சனாதிபதித் தேர்தலில் ஒரு கூட்டுணர்வை தமிழர் தாயகத்தில் கட்டமைக்க முடியவில்லை. மக்களுக்கான அரசியலைவிட்டு வணிக அரசியல், அதாவது தமது தேவைகளுக்காக மக்களது வாக்குளை அடகு வைக்கும் அரசியலைக் கடந்த பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ததன் விளைவுக்கு சூழல் பொருந்திவரச் சிங்களம் தமிழர் தாயகத்தில் வாக்கு அறுவடைக்குத் துணிந்துள்ளது. நாசபக்ஸர்களின் காலத்தில் தமிழர் தாயகத்தை நோக்கி வாக்குவேட்டையில் நேரடியாக ஈடுபடாது பினாமிகளூடாகவே நகர்ந்தனர். ஆனால் இன்று 1977இற்கு முற்பட்ட நிலைபோன்றதொரு நிலையில் சிங்களக் கட்சிகளின் நிலை உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.