Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  2. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1569
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7048
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/01/24 in all areas

  1. எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும். அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது. எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர். NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம். பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது. மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை. கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன். காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள். விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
  2. அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ், இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது, வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு 50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர் ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார். வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும் மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார். இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் : பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே. அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது? அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம். நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல் விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.
  3. நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு நாடகம் ஆடினார், ஆளுனர் தன் எசமானுக்காக, யுடியூப்பர் தன் வருவாய்க்கான நாடகம் ஆடினர். நாடகமோ, நாட்டியமோ, வீதி திறப்புக்கு சிறிதோ, பெரிதோ ஆவன செய்த அனைவருக்கும் பாராட்டுகள். புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  4. "என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024] "நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் நவீன உலகில் புத்தன் அழுகிறான் நலிந்த மக்கள் விடிவை நோக்கினம் நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!" "வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" "அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் [அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] அன்பு கொண்ட உலகம் கண்டேன் அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!" "அயராது உழைக்கும் தந்தை உடன் அனைவரையும் அணைக்கும் தாய் உடன் அண்ணன் அக்கா துணை உடன் அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!" "விளையாட ஒரு துணை வந்தது விழுந்தால் கைகொடுக்க கை வந்தது விவேகம் படைத்த தம்பி பிறந்தான் விழிப்பு அடைந்து பொய்களை எறிந்தேன்!" "யாழ்மத்திய கல்லூரி என்னை வரவேற்றது யானை முகத்தானின் உண்மை அறிந்தேன் யாகத்தீயில் சமயம்சாதி போட்டு எரித்தேன் யார் என்பதின் விளக்கம் அறிந்தேன்!" "அறிவிற்கு பத்தொன்பதில் பேராதனை சென்றேன் அயராது படித்து பொறியியல் கற்றேன் அறுபது ஆயிரம் கனவு கண்டேன் அடையாளம் மறுக்கும் அரசை வெறுத்தேன்!" "ஆக்கம் கொண்ட சமூகம் வேண்டும் ஆசை அடக்கம் இரண்டும் வேண்டும் ஆதிரனாக என்றும் வாழ வேண்டும் ஆராய்ந்து எடுக்கும் திறன் வேண்டும்!" "இறுமாப்பு என்னுடன் பிறந்த ஒன்று இதயங்கள் என்றும் உண்மை ஒளி இகழ்ச்சி புகழ்ச்சி கடந்து வாழபவன் இன்பம் துன்பம் சமமாக மதிப்பவன்!" "ஈரம் இல்லா உலகமும் பார்த்தேன் ஈவிரக்கம் அற்ற அரசையும் கண்டேன் ஈன்றவளும் இல்லை இணைந்தவளும் இல்லை ஈசனைக் கேள்விகேட்க நெஞ்சம் துடிக்குதே!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தேன் உண்மையைக் காண பகுத்தறிவு கொண்டேன் உண்பது நாழி உடுப்பவை இரண்டே உணர்ந்து நடந்தால் மனிதம் வாழுமே!" "ஊரை விட்டு ஊரு போனேன் ஊசி முனையில் உயிரைப் பிடித்தேன் ஊதிக் கெடுக்கும் கொடியவர் முன்னே ஊமையாய் இருந்து கடந்து சென்றேன்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினேன் எண்ணங்கள் வளர்த்து அறிவைக் கூட்டினேன் எச்சில் இலை நக்குவான் அல்ல எரிவனம் கண்டு அஞ்சுபவனும் அல்ல!" "ஏற்றம் இறக்கம் என்னை வாட்டவில்லை, ஏழை பணக்காரன் என்னிடம் இல்லை ஏசி எவரையும் திட்டுவதும் இல்லை ஏமாற்று பேர்வழியை நம்புவதும் இல்லை!" "ஐயம் அற்ற வாலிப பருவத்தில் ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தேன் ஐதிகம் மதம் சடங்குகள் அறியேன் ஐயன் என்னை வாழ விடுங்கள்!" "ஒருவராய் இருவராய் பலராய் திரிந்தேன் ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தேன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒதுங்கிப் போனால் இருப்பதும் போகும்!" "ஓடும் உலகில் நானும் ஓடினேன் ஓதி எவரையும் கெடுக்க மாட்டேன் ஓசைநயம் கொண்ட வாழ்க்கை வாழு ஓரமாய் பதுங்கும் வாழ்வைத் துற!" "ஒளவையார் உரைத்த அறிவுரை ஆகினும் ஒளதடமாய் ஏற்றத்தை மட்டும் எடுப்பேன் ஔவியம் என்னும் அழுக்காறு இல்லை ஔரப்பிரகம் என்னும் ஆட்டுமந்தை நானல்ல!" "எளிமை வாழ்வு தூய்மை தர எதிலும் பற்றற்ற தனிமை வர எனக்குள் நானே எதையும் அலச என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "பச்சிளம் குழந்தையாய் தவழ்ந்து வளர பருவ வாலிபனாய் முரடாய் நடக்க படிப்பு கொஞ்சம் திமிராய் மாற பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "நானாய் வாழ அமைதி தேடினேன் நாலும் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் நாயாய் அலைகிறான் என்று கூறினர்!” "உறங்கி கிடைக்கா நெஞ்சு ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் உருவம் மாற்றும் வயது ஒருபக்கம் உறவை நினைக்கும் மனது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது என்னவளை நினைக்க அழுகை வருகுது எழுதுகோல் எடுத்து ஆத்திரம் தீர்க்கிறேன் எழுச்சி கொண்ட தேசம் தேடுகிறேன்!" "பேச்சு மூச்சு நிற்க முன்பு பேயென என்னை விரட்ட முன்பு பேரப் பிள்ளைகள் சூழ்ந்து நிற்க பேரானந்தம் தரும் மரணம் தழுவட்டும்!” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. தான் கேட்டு வீதி திறக்கப் பட்டதாக சுமந்திரனே உரிமை கோரவில்லை இன்னும். ஆனாலும், "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 இப்பவே உறுத்தலில் கதையெழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த வீதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் கஜேந்திரன் பற்றைக்குள் பாய் போட்டு படுத்து போராடியிருந்தால், இப்போது வீதி திறக்கப் படும் போது அந்தப் படங்களையெல்லாம் போட்டு புலவர் போன்றோர் இங்கே பிரச்சாரம் தொடங்கியிருப்பர் இப்போது! இப்பவோ #தொண்டையில முள்ளு😂
  6. " ஆடு தானாக வந்து மாலைக்குள் தலையைக் குடுக்குது " ........! 😂
  7. கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் சேரின் கடுமையான முயற்சியின் பின்னர் திறக்கப்பட்ட வீதியை மெச்சுவதை விடுத்துக் கொச்சைப்படுத்தலாமா? சுமந்திரன் சேர் அநுர ஆட்சியில் அமைச்சரானால் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவார்!
  8. 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள் 2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல, இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.
  9. ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி. ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன். சரியா நான் சொல்வது?
  10. உங்களுக்கு என்னப்பா காசை உழைச்சு செயார் மார்க்கெற்றில போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருந்து பந்தி பந்தியா எழுதிவியள்.. 😂நமக்கு உழைக்கபோனாதான் சோறு.. எப்படியாவது நேரம் ஒதுக்கி பதில் எழுதுறன்..
  11. இனி நான் கந்தையரை றோட்டில தெருவில கண்டால் இப்பிடித்தான் கண்டும் காணாத மாதிரி.....
  12. ம் ..... எப்படி பெருமையாய் இருந்த பெயரை இப்படி நாறடிச்சிட்டாங்களே, இனி கந்தையா என்ற பெயர் உள்ளவர்கள் வெளியில் சொல்லவே பயப்படுவார்கள். சும்மா பகிடிக்கு.
  13. புத்தன் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி.🙂
  14. கந்தையா57 க்கு பதிலாக சனம் கந்தப்பு என்று நினைக்கப்போகுது 😳
  15. மெய்யழகன்: வெப்பம் மிகுந்த நாளில் குளிரோடையில் கால்களை நனைத்த மாதிரி ஒரு அனுபவம். கோடை காலத்தில் தாகத்துடன் இருக்கும் போது எவராவது சில்லென குளிரும் lemon juice தரும் போது கிடைக்கும் அந்த பேரானந்தம். மனசையும் இடைக்கிடை கண்களையும் பனிக்க வைத்த படம். ஊருக்கு கன நாட்களின் பின் போன, பழகிய நண்பர்களை, உறவுகளை மீண்டும் கண்டு மெய்சிலிர்த்த அனுபவங்களை எமக்கு இப் படம் மீண்டும் அருட்டுகின்றது.. அதுவும் அந்த சைக்கிள்! அருமையான படம்!
  16. இறந்தவர்கள் எவரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை. ஆனபடியால் தரக்குறைவாக இருந்தாலும் நீங்கள் இன்றே வாங்கிப் பாவியுங்கள்.
  17. செய்தி வடிவாக. வாசித்தீர்களா.?? அரசாங்கம் இலவசமாக வீடு கொடுக்கமாட்டாது கொழும்பில் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை வாடகைக்கு வீடு எடுத்து கொழும்பில் இருக்க கூடாதா?? அரச தனியார் உத்தியோகத்தர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் இல்லையா?? இவர்களுக்கு மட்டும் ஒசி வீடு தேவையா?? இது வரவேற்கப்படுகின்றன… நல்ல முடிவு
  18. பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.
  19. 🙄........... நேற்று நியூஸ் 18 தொல்.திருமாவை ஒரு பேட்டி எடுத்திருந்தனர். மிகவும் கண்ணியமாக, நிதானமாக அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார், உரையாடியிருந்தார். விஜய்யின் பல பாசாங்குகளை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லியிருந்தார். சீமான் வழமை போலவே கூடி இருப்போர் கைதட்ட வேண்டும் என்று பொரிந்து தள்ளியிருக்கின்றார். சீமானின் ரசிகர்கள் தவிர்த்து, பொதுவானவர்கள் இதைக் கேட்டு முகச்சுழிப்பு ஒன்றையே காட்டுவார்கள். இதையே தான் விஜய்யும் செய்தார். ஒரு சினிமா போல 'ப்ரோ, பாயாசாம் - பாசிசம், ............' என்று கைதட்டல்களுக்காக சாரம், பொருள் எதுவுமின்றி வெறுமனே ஒரு ஃபர்பாமன்ஸ் காட்டி விட்டு போய்விட்டார்............ இப்படியே போனால் இந்த இருவரும் - சீமான மற்றும் விஜய் - தேறப் போவதில்லை.
  20. ஆம் கோசான் ஏறக்குறைய ஒரு மாதம் முன்னாடி இது சம்பந்தமாக பலதடவை எழுதிவிட்டேன், அதிலொன்று காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை. உங்கள் பயண கட்டுரையை படிக்க வேண்டும் ஊர் புதினம் பக்கமே அதிகமாக குப்பை கொட்டிவிட்டு போவதால் அதை படிக்க தவறிவிட்டேன்.
  21. நீங்கள் அவரை நோக்கி "தொப்பி பிரட்டி" என்று இஸ்லாமியரைக் குறிக்கும் வசைச் சொல் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். "இங்கே நிற்கும் மூவரையும் உற்றுக் கவனித்தால் ஒரு ஒற்றுமை தெரியும் பாருங்கள்" என்று ஒரு இடத்தில் dog whistle விட்டிருந்ததையும் கவனித்திருந்தேன்😂! உங்கள் அளவுக்கு ஏழாம் அறிவு எனக்கு இல்லை! ஆனால், எப்படி அறிந்தீர்கள், எப்படி உறுதிப் படுத்திக் கொண்டீர்கள்? ஒரு பேச்சுக்கு உங்கள் ஊகம் உண்மையாக இருந்தால் கூட, கருத்துகளுக்குப் பதில் எழுதாமல் அவர் சார்ந்த மதக் குழுவைக் குறி வைத்து வசவுகளை எறிவதும் விதி மீறல் அல்லவா?
  22. இது நிகழ சாத்தியமில்லை என நினைக்கிறேன். நாசா ரொக்கற் விட்ட விபரத்தையே "யூ ரியூபர் வந்து சொன்னால் தான் நம்புவேன்" என்று இருக்கும் தமிழ் புலம்பெயர் விசிறிகள் இருக்கும் போது எப்படி இந்த வியாபாரம் படுக்கும்? (நாசா உதாரணம், ஏனெனில் நாசா பல ஆண்டுகளாகவே தன் செயல்பாடுகளை தனியாக இணையத் தளம் வைத்து பொது மக்களுக்கு மிகவும் சிறப்பாக பிரபலப் படுத்தி வருகிறது. அதை அறியாமல் யூ ரீயுபர்களின் பொய்களை நம்பி "அமெரிக்கா சந்திரனில் இறங்கவில்லை" என்று நம்புவோர் எம்மிடையே இருக்கிறார்கள்)
  23. நல்ல விடயம். இதே போன்று முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராகத் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டு செய்யப்பட்ட காட்டிகொடுப்புக்கள், துரோகங்கள், அநீதிகள், படுகொலைகள் என்பனவும் கதைவடிவில் இந்த இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுக்கப்படல் வேண்டும்!
  24. நீங்கள் காணாத மாதிரிப் போகலாம் ஆனால் கவனம் கந்தையர் உங்களின் வீட்டுக்குள் வந்து நிக்கப் போகிறார் . ......! 😂
  25. அவர்களுக்கு( இலங்கை முஸ்லீம்கள்) பிரச்சனையே இல்லை. அதுதான் அவர்களுக்கு பிரச்சனை.
  26. இது ஜனாதிபதித்தேர்தலுக்கு முதலே தீர்மானிக்கப்பட்டது. எங்கடை சுமந்து இது தெரிந்து தான் அறிக்கை விட்டவர் அலுப்புக் குடுத்தது அங்கயனும் டக்கியும்
  27. நாக்கும், வாக்கும் சுத்தம் இல்லாத... ஏமாற்று கலப்பட வியாபாரி தான், சுத்துமாத்து சுமந்திரன். 😎
  28. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்!
  29. நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂
  30. ஜெயிலில் இருந்து வெளியே வரும் கந்தையர்
  31. தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ்தேசியம் போல. நாங்களும் இதை விடமாட்டோம்.
  32. தான் சமையற் கட்டுக்கு போகவேண்டி வரும் என நினைத்து குமுறுகிறார் போலுள்ளது. இவரது கணித அறிவை சஜித் ஒருதடவை பாராட்டியிருந்தார். ஜெனிவா கூட்டத்தொடரில், பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றிருந்தன, ஒரு சில நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நாடுகள் தங்களை ஆதரித்தன என்று கூறி தம்மை சாதனையாளராக காட்டியபோது, சஜித் இவர்களின் கணிதவியல் அறிவை வியந்து புள்ளிவிபரத்தோடு உரையாற்றியிருந்தார்.
  33. சீ சீ அவருடன் படித்தனான் என சொல்லி மாட்டுப்பட விருப்பமில்லை 😅ஆனால் ஒன்றாக அனுராபுரத்தில் பிரச்சாரம் செய்தனாங்கள்...அவரின்ட வீட்டில கிளிதட்டு விளையாடின ஞாபகம் இருக்கு 😅
  34. அண்ணை அடிக்கடி கனடாவுக்கு போய் ஓட்டலில் சாப்பிட்டனான் என்று சொல்லியபோதே சந்தேகப்பட்டேன். 🤪
  35. குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு ரணில் ஒப்புக் கொண்டிருந்தால் பல நூறு கோடி ரூபாய்க்கள் இலங்கைக்குக் கிடைத்திருக்கலாம். ஒரு பேட்டியில் துக்ளக் சோ இப்படிச் சொல்லியிருந்தார்,”இலங்கை ஒரு தீவு. அது மீன்(ரின்) இறக்குமதி செய்கிறது” என்று. என்ன செய்ய எங்கள் அறிவு அவ்வளவுதான்.
  36. தோல்வி வலியாக இருப்பதற்கு சந்தர்ப்பம் மிகக்குறைவு, ஏராளன். புதிய பிரதமர் ஹரிணி சரியாக எண்ணி ரணில் மாஸ்டர் இதுவரை 17 தடவைகள் தோற்றிருக்கின்றார் என்று சொல்லியிருக்கின்றார். தோல்வி ஒன்றும் புதிதல்ல நம்ம மாஸ்டருக்கு. பதவி போனதும் கூட பரவாயில்லை............. 16 சமையல்காரர்களும் கூடப் போய் விட்டார்களே........ அது தான் தீராவலி.......😜.
  37. @colomban இலங்கை மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மிகவும் மோசமான இனவாதிகள் மட்டுமல்ல பிற்போக்குவாதிகள் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அதிலும் சுனி முஸ்லிம்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். உ+ம்: கனடாவில் வந்து குடியேறி, அங்குள்ள சகல வசதிகளையும் அனுபவித்துவிட்டு கனடா அழிய வேண்டும் என்று விரும்பும் இவர்களுக்கு இஸ்ரேல் பாடமெடுப்பதில் பிழையேதும் இல்லை. சிங்களமும் முஸ்லிம்களுக்கு பாடமெடுக்கும். 😏
  38. அதாவது தமிழர்களுக்கு நடுவிலே வாழ்ந்து வியாபாரம் கல்வி வேலை வாய்ப்பு என்று மீண்டும் தமது இருத்தலை உறுதிபடுத்திக்கொண்டாலும் போர்க்கால நிலைகளில் அனைத்து இனத்திற்கும் கசப்பான அனுபவங்கள் தவிர்க்க முடியாமலே உண்டு, ஆனால் முஸ்லீம்கள் மட்டும் பழசை கிளறி கிளறி தமிழர்களுடன் வன்மம் வளர்க்க சொல்லி தமது அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களாம். நாலாயிரம் ராஜநாகங்களுக்கு இடையிலும் மனிதன் வாழ்க்கை நடத்திட்டு போகலாம் நானூறு இஸ்லாமியர்களுடன் ஒன்று சேர்ந்து பிற இனம் வாழ்வதென்பது கையால விசுக்கி காட்டு தீயை அணைப்பதுபோலத்தான் சாத்தியமே இல்லாதது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் வெளியேற்றம்பற்றி புத்தளம் மட்டக்களப்பில்தான் கிளறி கிளறி வன்மம் வளர்த்தார்கள், இப்போ அவர்களுக்கு எல்லாமே சுமுகத்திற்கு வந்த பின்னரும், 90%க்கு மேற்பட்ட தமிழர்களுடன் அனைத்துவழியிலும் படிப்படியாக வளர்ச்சியின் உச்சம் தொடும் யாழைப்பார்த்து வயித்தெரிச்சலில் யாழ்ப்பாணத்திலும் வன்மம் ஆரம்பிக்கிறார்கள். வன்மம் வளர்க்க தமது தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறார்கள். இதே கூட்டத்தில் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து தமிழர்களுடன் எப்படி சகோதரத்துவத்துடன் வாழவேண்டுமென்று தமது இந்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்திருந்தால் நாமும் சேர்ந்து இவர்களுக்கு தலை தடவிவிட தயங்கவே போவதில்லை. என்னமோ தமிழர்பகுதிக்குள் இவர்கள் இனி ஒருகாலமும் உள் நுழையமுடியாதபடி நிலமை இப்போதும் இருக்கு என்பதுபோல் இவர்களுக்காக அனுதாபப்பட்டு அச்சச்சோ முஸ்லிம்களை வெளியேற்றினது தவறு என்று பூனைக்கு தலையை தடவிவிடுவதுபோல் தடவிவிட்டு பரிதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில தமிழ் தலை தடவிவிடல் திலகங்களுக்காக ஆவது சரி சரி பழசை மறந்து சுமுகமா வாழ்வோம் என்று இஸ்லாமியர்கள் நினைக்கலாம் . ஒருபோது அதை செய்ய மாட்டார்கள். கிழக்கில் காத்தான்குடி உட்பட்ட சில பிரதேசங்களில் ஏறக்குறைய தனி இஸ்லாமியநாடுபோல் ஆக்கி வைத்திருப்பதையும் கல்முனை பிரதேசசபை விவகாரத்தில் இவர்கள் வளர்க்கும் தமிழர்களுக்கெதிரான விசமத்துக்கும் காரணம் இவர்கள்மீது தமிழர்கள் மேற்கொண்ட இன சுத்திகரிப்பா? 70% வீத தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் 30% வீத இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழலாம் , 70% இஸ்லாமியர்களுக்கு நடுவில் 30% தமிழர்கள் சுதந்திரமா செயற்பட முடியுமா? முடிந்தவரை 100% முஸ்லிம் பிரதேசமாக்கவே துடிப்பார்கள். இன சுத்திகரிப்பில் முன்னணியில் நிற்பவர்கள் யாரென்ற கேள்வியை இவர்களுக்காக பரிதாப படுகிறவர்களிடமே விட்டுவிடலாம்.
  39. விஜைக்கும் ஸ்டாலின், சீமான் போன்றோருக்கும் உள்ள இன்னொரு வரவேற்க வேண்டிய வேறுபாடு. அரசியல் வாழ்க்கைக்காக குடும்ப உறுப்பினர்களை வைத்து பேஷன் ஷோ நடத்துவதில்லை. அதே போல் பலமாதங்களாக விஜை-சங்கீதா உறவு பற்றி ஊகம் பலவாறு பறந்த போதும் விஜை அலட்டி கொள்ளவில்லை. ஆனால் முரசொலி செல்வம் மரணத்துக்கு தன் சார்பில் அவரை அனுப்பி இருந்தார் என அறிகிறேன். சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் இப்போ திமுக எதையாவது கிண்டிவிட தலையால் மண் எடுப்பார்கள்🤣.
  40. ஏற்கனவே சொன்னதுதான், சிங்களப் பேரினவாதத்தின் முகங்கள் மாறலாம் அதன் இதயம் ஒருபோதும் மாறப்போவதில்லை. அதற்கு வலதுசாரி, இடதுசாரி, பௌத்தம், கிறீஸ்தவம், அரசுசார்பு, அரசுசார்பற்ற என்ற பேதமில்லை எல்லாம் ஒன்றுதான். சிங்களம் ராஜபக்‌ஷ குடும்பத்தை ஒருபோதும் மறந்துவிடாது! அடுத்த சனாதிபதித் தேர்தலில் நாமல் 70% வாக்குகளை பெற்றாற்கூட வியக்க ஏதுமில்லை. அநுர ஆட்சியில் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்காலிகமாகத்தன்னும் ஏதும் நன்மைகள் கிடைத்தால் சரி. மற்றும்படி ஒற்றையாட்சியை கடந்து எதுவும் வரப்போவதில்லை. சிங்களம் திணிக்கும் எதனையும் தமிழர் தரப்பு ஏற்று நிரந்தரமான ஒரு தீர்வு வந்தாலொழிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை. அதுவே தமிழருக்கெதிரான சிங்களத்தின் பிரதான ஆயுதம். அதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டது வேறு வரலாறு!
  41. கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந்தேன்… நீங்கள் ஏதோ சீமானின் செயல்பாடு மட்டும்தான் தமிழ்தேசியம் என்பதுபோலும் சீமான் மட்டுந்தான் தமிழ் நாட்டீல் இருக்கும் ஒரேஒரு தமிழ்தேசியவாதி என்பது போலும் எழுதிதள்ளி இருக்கிறீர்கள்… சீமான் வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளீல வாங்க.. தமிழ்தேசியம் பரந்தது பெரியது… சீமானுக்கு முன்னம் இருந்தே தமிழ் தேசியத்தை பேசும்பல அமைப்புகள் இயக்கங்கள் தமிழ் நாட்டில் உண்டு.. சீமான் சிலதவறுகள் தமிழ்தேசியத்தை பின்பற்றுவதில் செய்திருந்தால் விஜைபோல் இன்னொருவர் அவற்றை திருத்தி நவீன காலத்துக்கு ஏற்றமாதிரி தன்வழியில் கொண்டுபோவார்.. திராவிட சித்தாந்தம் பேசும் கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் எத்தனை இருக்கின்றன.. தமிழ்தேசியத்துக்கு மட்டும் சீமான் குத்தகையா..? எத்தனையோ பேர் இனி வருவார்கள்.. இனறு விஜய் ஆரம்பித்து இருக்கிறார்.. உங்களுக்கு தமிழ்தேசியம் மேல் வெயித்தெரிச்சல் … சீமான் மேல் அல்ல போல இருக்கிறது..
  42. குரந்தன் ஐய்யனார் ஆலயத்தை சிங்கள பெளத்த விகாரையாக்க ஒன்றுசேர்ந்த சிறில் மத்தியூ, முல்லைத்தீவு இராணுவம் மற்றும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை நிர்வாகம் - சட்டர்டே ரிவியூ கட்டுரை சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டத்தினை தமிழர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். சிங்கள அரசுகளால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சிங்கள பெளத்த மயமாக்கலினை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இயலாமையும், ஆத்திரமும் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ வில் வெளிவந்த கட்டுரை ஒன்றினை இங்கு பதிகிறேன். சைவத் தமிழர்களின் கவலைகள் இக்கட்டுரையில் பரவிக் கிடந்தது. பிரபாகரன் சிங்கள பெளத்த மயமாக்கலினை எதிர்க்கத் துணிந்தபோது தமிழர்கள் அவரின் பின்னால் நின்று ஆதரவளிக்கத் தொடங்கினர். "தமிழர்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குரந்தன் மலைப் பகுதி மிகவும் அமைதியான ஒரு பிரதேசம். இங்கே சைவ மற்றும் பெளத்த மதத்தின் புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன‌. ஆனால் வெகுவிரைவில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சினால் இப்பகுதி தனியே சிங்க‌ள பெளத்தர்களுக்கான ஏக வணக்கஸ்த்தலமாகவும், ஒரு சிங்களக் குடியேற்றமாகவும் மாற்றப்படப் போகின்றது". "இவ்வமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் முன்னாள் பொதுக் கூட்டுத்தாபன நிர்வாக அதிகாரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்பொருந்திய தொழிற்சங்கத்தின் தலைவருமான முக்கியஸ்த்தர் ஒருவர், இச்சிங்கள மயமாக்கல்த் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறார். அவருக்குத் துணையாக பெருமளவு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு வருகின்றனர்". "இப்பகுதியில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் ஓட்டுத் தொழிற்சாலையில் பணிபுரியும் பல பணியாளர்கள் இப்புதிய விகாரை நிர்மானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வமைச்சின் கீழ் வழங்கப்படுள்ள பல வாகனங்களும், ஏனைய வளங்களும் விகாரை நிர்மாணத்திற்கு அமைச்சால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன". "கடந்த கார்த்திகை மாதத்திலிருந்து இப்பகுதியில் காணப்பட்டு வந்த பல சைவ ஆலயங்களின் எச்சங்களை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றி தமது வாகனங்களில் ஏற்றிச் செல்வதை இப்பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். வன்னிப்பகுதித் தமிழர்களால் தமது குலதெய்வம் என்று வணங்கப்பட்டு வரும் குரந்தூர் ஐய்யனார் ஆலயம் அமைந்திருக்கும் குரந்தன் மலைப்பகுதி, நாகஞ்சோலை எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் விகாரைக் கட்டுமான‌ப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அருகிலிருக்கும் ஓட்டுத்தொழிற்சாலையில் பணிபுரியும் பல ஊழியர்கள் இக்கட்டுமானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விகாரை அமைக்கும் பணிகளை மிகவும் இரகசியமாகப் பேணிவரும் அரசு, இதுகுறித்து தகவல்கள் வெளியே கசிவதையும் தடுத்து வருகிறது". "இதனையடுத்து இப்பகுதியில் வாழும் தமிழர்கள் சிலர் விகாரை கட்டுமானம் நடக்கும் பகுதியில் சைவர்களின் சூலம் ஒன்றினை நாட்டி, அதனைச் சூழ குடில் ஒன்றினையும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றிக்கொண்டு, விகாரை கட்டுமானத்திலும் பங்கெடுக்கும் இராணுவத்தினர், அச்சூல‌த்தை பிடுங்கி எறிந்துள்ளதுடன், குடிலையும் அழித்திருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்களை இராணுவம் அடித்து விரட்டியுள்ளதுடன், பல தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்து இழுத்துச் சென்றிருக்கின்றது. அத்துடன், வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இவ்விகாரைக்கான கட்டுமானப் பொருட்களை இலகுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் ஒட்டுசுட்டானிலிருந்து விகாரை அமைக்கப்பட்டு வரும் நாகஞ்சோலை வனப்பகுதி வரைக்கும் புதிய தார் வீதியொன்றும் அரசால் இடப்பட்டு வருகிறது". “தமிழரின் தாயகமான இப்பகுதியில் சிங்கள பெளத்தர்களுக்கென்று ஏகமாகக் கட்டப்பட்டு வரும் விகாரையின் மூலம் மூன்று முக்கிய‌ விடயங்களை கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு செய்துவருகிறது. 1. இப்பகுதியில் காணப்பட்டு வந்த வரலாற்றுச் சான்றுகளை முழுமையாக அழித்தன் ஊடாக வரலாற்றினைக் கண்டறிய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து முகாந்திரங்களையும் அடியோடு இல்லாதொழித்திருக்கிறது. 2. இப்பகுதியில் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் புதிய சிங்களக் குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. 3. இங்கு காணப்பட்ட சைவ ஆலயங்களின் எச்சங்கள் முற்றிலுமாக பிடுங்கி எடுக்கப்பட்டு, பத்திரமாக அகற்றப்பட்டு, இப்பகுதியில் சைவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் அடியோடு இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவை எல்லாவற்றினைக் காட்டிலும் மிகுந்த அச்சந்தரும் செயற்பாடொன்று நடப்பில் இருக்கும் அரசின் கீழ் மிக மூர்க்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதுதான் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரின் இருப்பிற்கான தொடர்ச்சி பாரிய திட்டமொன்றின் ஊடாக சிதைக்கப்பட்டு வருகின்றமை". "வவுனியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா சிங்கள் குடியேற்றம் கிழக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு கொக்கிளாய்க் குளம் நோக்கி விரிவடைந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து வட கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு இராணுவ முகாம் மற்றும் வட மேற்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஒட்டுசுட்டான் தொழிற்சாலை ஆகிய இரு பிரதான அரச அமைப்புக்களின் அழுத்த‌ங்களினால், அண்மைய காலங்களில் தமிழர் தாயகத்தின் ஏனைய இடங்களில் நடைபெற்றதைப் போன்று, பதவியாவில் பொங்கிவழியும் சிங்களவர்களின் எண்ணிக்கை இப்பகுதிவரை நீட்டிப் பரவப்படப்போகின்றது என்பது நிதர்சனமாகிறது". "இது நடக்கும் பட்சத்தில் இம்மூன்று மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களுக்கிடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்படப் போகின்றது. இது தனியே தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டுவிடும் என்பதற்கு அப்பால், இப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் திராணியும் இப்பகுதிவாழ் தமிழர்களிடத்தில் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது". என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.
  43. தமிழ் பெளத்தர்களின் எச்சங்களைத் தமதென்று உரிமைகோரி, தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த குடியேற்றங்களை முடுக்கிவிட்ட இனவாதிகள் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் அமைக்கப்பட்டுவரும் சிங்கள பெளத்த விகாரை ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை, அதன் அடிப்படையினைச் சிதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவரது அரசின் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவிருந்தவரும் ஜெயாரினால் இனவாதம் கக்குவதற்காக களமிறக்கப்பட்டவருமான சிறில் மத்தியு, வடக்குக் கிழக்கை சிங்கள - பெளத்த தாயகமாக மாற்றும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தார். சிங்கள பெளத்த வெறி தலைக்கேறிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த, சிங்கள சாதிய அமைப்பில் இடைநிலை மற்றும் சிறில் மத்தியூவின் சாதியான கரவா வகுப்பிலிருந்து வரும் பல கல்விமான்கள் வடக்குக் கிழக்கில் பெளத்த எச்சங்கள் என்று தாம் கருதுபவற்றை மீள உருவாக்கி அவற்றைச் சுற்றி சிங்கள மக்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரலாயினர். இவ்வாறு அவர்களால் அடையாளம் காணப்பட்ட பலவிடங்களில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றைச் சூழவும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். ஆனால் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பெளத்த எச்சங்கள் தமிழ் பெளத்தர்களுக்குச் சொந்தமானவை என்றும், ஒருகாலத்தில் தமிழர்களில் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தனர் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட சரித்திரத் தகவல்கள் இருந்தபோதிலும், இந்தச் சிங்களக் கல்விமான்களால் இந்த உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வந்தது. வவுனியா வடக்கில் தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னமொன்றும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் காட்சி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் சோழர் காலம் வரைக்கும் தமிழ் பெளத்தர்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. இதனால் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெளத்த தமிழர்கள் உருவாக இது காரணமாக அமைந்திருந்தது. தமிழ் பெளத்தர்களின் பிரசன்னமும், ஆதிக்கமும் அநுராதபுர காலத்து மன்னராட்சியின் அவைகளிலும் கணிசனமான அளவு காணப்பட்டு வந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சோழ பெளத்தர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழ் பெளத்தர்களுக்கும் சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே பல மோதல்கள் இடம்பெற்று வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் இருக்கும் இராஜராஜ நூதணசாலையில் வைக்கப்பட்டிருக்கும் 14 ‍ 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை பெளத்த நூல்களும், ஓலைகளும் பாளி மொழியிலேயே எழுதப்பட்டு வந்தமையினால், தமிழ் பெளத்தர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை சிங்கள‌ பெளத்தர்களின் நூல்கள் என்று உரிமை கோருவது பெளத்த இனவாதிகளுக்கு வசதியாகிப் போயிற்று. தமிழ் பெளத்தர்களால் சிங்கள மொழிக்கும் அதன் இலக்கணத் திருத்தத்திற்கும் ஆற்றப்பட்ட பணி மகத்தானது என்பதைப் பறைசாற்றச் சான்றுகளும் இருக்கின்றன.தமிழ் பெளத்தர்களால் எழுதப்பட்ட வீரசோலியம் எனும் நூலில் காணப்படும் பல இலக்கணத் திருத்தங்கள் சிங்கள இலக்கணப் பயன்படுத்தலில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. சோழர் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர் தாயகத்தில் வளர்ந்துவந்த சைவ மதத்தின் தாக்கத்தால் அக்காலத்தில் காணப்பட்ட தமிழ் பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு சைவர்களின் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வரலாயின. இதனையே மத்தியூவும் அவரது இனவாத நண்பர்களும் சிங்கள பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு, சைவ ஆலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சாதாரணச் சிங்கள மக்களிடையே பெரியளவில் பிரச்சாரம் செய்து வந்தனர். பெளத்த மதத்தினை விரும்பாத தமிழர்கள் புராதண பெளத்த விகாரைகளை அழித்து சைவக் கோயில்களை நிர்மாணித்து வருவதால், அக்கோயில்களை இடித்து, அங்கே மீளவும் பெளத்த விகாரைகளை அரச செலவில் நிர்மாணிப்பது என்பது அவசியமாகிறது என்று தமது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்து வந்தனர் மத்தியுவும் அவரது சகபாடிகளும். இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட புதிய விகாரைகளைச் சுற்றித் தவறாது சிங்கள மக்களை அவர்கள் குடியேற்றி வந்தனர். ரணிலின் நல்லிணக்க அரசாங்கத்தால் 500 மில்லியன் செலவில் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட‌ 1000 விகாரைகள் திட்டம் ‍ இன்றும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. சிறில் மத்தியூவின் பெளத்த சிங்களக் குடியேற்றங்களுக்கு சிங்கள ஊடகங்கள் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து வந்ததுடன் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையிலான பிணக்கிற்கு மத ரீதியிலான இன்னொரு களம் ஒன்றினையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனூடாக பெளத்த சைவ மோதல் ஒன்றிற்கான களமுனை திறக்கப்பட்டலாயிற்று. அரச மரத்தின் கிளை ஒன்றினை தமிழர் ஒருவர் தறிப்பதாகப் பிரச்சாரப்படுத்தப்பட்ட நிகழ்வொன்று, பெளத்த மதச் சின்னங்களை தமிழ்ப் பயங்கரவாதிகள் அவமதித்து வருகிறார்கள் என்கிற தொனியில் சிங்கள ஊடகங்களால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தது. தமிழர் தாயகத்தில் பெளத்த எச்சங்களைத் தேடும் சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகள் அரசியல் புதையல்களைத் தேடும் முயற்சியாக அன்று காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சிங்கள இனவாதிகள், தமிழர்களின் தாயகத்தின் ஒரு அங்கமான கிழக்கு மாகாணத்தில் புராதண சிங்கள பெளத்த நாகரீகம் காணப்பட்டதகாக் கூறி, அதனைத் தமது தாயகம் என்று உரிமை கோரி, அங்கு மீண்டும் பெளத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு செய்வதனால் சைவத் தமிழர்கள் மீது அது செலுத்தப்போகும் தாக்கத்தினை சிங்கள அரசியல்வாதிகளோ, கல்விமான்களோ சற்றேனும் உணரமறுத்துவந்தமை பெரு வருத்தத்தினை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.