Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    88816
    Posts
  2. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    5418
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46977
    Posts
  4. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12788
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/16/24 in Posts

  1. உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.
  2. உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣
  3. அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.
  4. என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!! என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு.
  5. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று.
  6. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan, @kayshan அன்பான யாழ்.கள உறவுகளே... மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு... ஆம் அல்லது இல்லை என வாக்களித்தால் போதுமானது. வழமை போல் இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.
  7. தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.... மக்களால் தோல்வி அடையச் செய்த ஒருவரை, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கான சதி வேலை என்றே கருத வேண்டி உள்ளது. சுமந்திரனை மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால்…. 75 வருட கால தமிழரசு கட்சியே காணாமல் போய் விடும் என்பதை மறவாதீர்கள். மக்கள் தீர்ப்பை மதியுங்கள். அவர்கள் மேல், உங்களின் தனிப்பட்ட சுயநல ஆசைகளை திணிக்காதீர்கள். இனி…. உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் வர இருக்கின்றன. தமிழரசு கட்சிக்கு… ஒரு புதிய ஊடகப் பேச்சாளாரை நியமித்து, சுமந்திரனை அப்புறப் படுத்துங்கள். சுமந்திரனின் மூஞ்சையை பார்த்தாலே மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டு போய் விடுவார்கள். அந்தளவு கோபத்தை சுமந்திரன், தனது தான் தோன்றித்தனமான செயல்களால் தமிழ் மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ளார்.
  8. வினா இலக்கங்கள் 11,17,22 11 ) 24 போட்டியாளர்கள் காண்டீபன் வெற்றி பெறமாட்டார் என்று சரியாக கணித்திருக்கிறார்கள் 17) 23 போட்டியாளர்கள் சிவாஜிலிங்கம். அவர்கள் வெற்றி பெறமாட்டார் என்று கணித்திருக்கிறார்கள் 22) 25 போட்டியாளர்கள் கருணா வெற்றி பெறமாட்டார் என கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 29 புள்ளிகள் 2)கந்தையா 57 - 24 புள்ளிகள் 3)தமிழ்சிறி -24 புள்ளிகள் 4)வீரப்பையன் - 24புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 24 புள்ளிகள் 6)நிலாமதி - 24 புள்ளிகள் 7)Alvayan - 23 புள்ளிகள் 😎 வாதவூரான் - 23 புள்ளிகள் 9) வாலி - 23 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 21 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் 12)வில்லவன் - 21 புள்ளிகள் 13)நிழலி - 21 புள்ளிகள் 14)ரசோதரன் - 21 புள்ளிகள் 15)கிருபன் - 19 புள்ளிகள் 16)goshan_che - 19 புள்ளிகள் 17)நுணாவிலான் - 19 புள்ளிகள் 18)வாத்தியார் - 18 புள்ளிகள் 19)சசிவர்ணம் - 18 புள்ளிகள் 20)புலவர் - 17 புள்ளிகள் 21)சுவி - 16 புள்ளிகள் 22) புத்தன் - 15 புள்ளிகள் 23) அகத்தியன் - 13 புள்ளிகள் 24) குமாரசாமி - 13 புள்ளிகள் 25) வசி - 8 புள்ளிகள் 26) தமிழன்பன் - 5 புள்ளிகள் இதுவரை 4, 7, 11, 17, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 48)
  9. மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  10. பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் , எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது " பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் " எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!
  11. தமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 4 தமிழ் பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள். முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில் தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  12. இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன் எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா.................. அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம் வ‌ராம‌லே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான் இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள் இதோ துவார‌கா வ‌ருகிறா அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ன் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள் 2009க‌ளில் எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................
  13. இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும் நன்றிகள்.
  14. இது தவறான கட்டுரை. எமக்கு எது தேவையோ அத்துடன் நிறுத்த தெரிந்தால் முடிந்தால் அனைத்தும் நன்மைக்கே. உலகம் சுருங்கி நம் கைகளுக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் அதை குறை கூற முயல்கிறோம்.
  15. இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑
  16. புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா.. புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும் அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்.. அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்.. அவரின் பவுத்த மேலாதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள் முடிவில் வெட்ட வெளிச்சமாகும் யாழில் வரும் கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..
  17. சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள். தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
  18. சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும் இருத்தி / அடிமையாக்கி உள்ளார். விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும். அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச் சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது. இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது. கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா? இங்கு நவம்பர் 11 just a Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது. மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.
  19. யாரவது கப்பிதனின் பீத்தல் கோவணத்தை கண்டால் எடுத்துக் கொடுங்கள். தன்னுடைய பீத்தல் கோவணம் யாழ் தமிழ் மக்களால் உருவப்பட்டுள்ளது என்று கூட புரியாமல் உளறுகிறார்.
  20. இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎 இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️ எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂
  21. இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான் மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.
  22. 13 ஆம் திருத்தச் சட்டம் குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்பொன்றில் பேசும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தனது ஆதரவு இருக்கும் என்று அநுர‌ கூறியிருந்தார். ஆனால், அநுரவின் இந்தக் கூற்றினை அவரே மறுதலிக்குமாற்போல் அவரது யாழ்ப்பாணக் கூட்டத்தின் உரை அமைந்திருந்தது. "13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று பொய்கூறிக்கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்டு நான் வரவில்லை" என்று அவர் யாழ்ப்பாணத்தில் கூறினார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாணசபை அடிப்படையிலான தீர்விற்கான ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போதுமான‌து அல்ல என்று நிராகரித்திருந்த அதேவேளை, சிங்களவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக நாடு பிளவுபடும் என்று அதனை எதிர்த்து வந்தார்கள். 1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை எதிர்த்தே பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பலியிடப்பட்ட கிளர்ச்சியை அது நடத்தியிருந்தது. "ஒரு அரசியட் கட்சியாக, சில தசாப்த்தங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம், அது அமுல்ப்படுத்தப்படுவதைக் கடுமையாக‌ எதிர்க்கிறோம். இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாப்பதே எமது மிக முக்கிய கரிசணை என்பதோடு, அதனை அடைந்துகொள்வதற்காக எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம்" என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். "இதுதொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல்ச் சரித்திரத்தில் எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் எமது இலட்சியத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு எப்போதும் ஒரேமாதிரியாகவே இருந்து வருகிறது, இனிமேலும் அது அப்படியே இருக்கும் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுதொடர்பாக எமது கட்சியின் உறுதிப்பாடு எப்போதுமே மாறதென்பதை எமது நாட்டு மக்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று அவர் மேலும் கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு தி ஐலண்ட் எனும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், சமஷ்ட்டி அடிப்படையிலான எந்தத் தீர்வையும் தமது கட்சி எதிர்க்கும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார். "இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக எழுந்தமானமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்துப்போட்டதே எமது கட்சிதான். வடக்குக் கிழக்கு மாகாணஙகளைப் பிரிப்பதற்கு எமது கட்சி மூன்று வழக்குகளைப் பதிவுசெய்து போராடியது" என்றும் அவர் நினவுகூர்ந்தார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனித்தனியே வட மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் நிரந்தரமாகவே பிரித்துப் போட்டது. இத்தீர்ப்பு வெளியானபோது நீதிமன்ற முன்றலில் கூடியிருந்த மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பெருத்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 2010 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்க பேசும்போது, "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியலமைப்பினூடாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை" என்று மீளவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
  23. கிழக்கு மீண்டும் தன்னை யார் என நிரூபித்து காட்டி இருக்கின்றது. மீண்டுமொரு தோல்வி யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. தமிழர்களுக்கு அல்ல.
  24. ஒரு விடயம் சொல்ல வேண்டும். இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும் @கிருபன்@நிழலி க்கு தெரியுமோ தெரியாது….. அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை). இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.
  25. கட்டாயம் அவர் தான் தேசியப்பட்டியல் மூலம் செல்வார் அவருடைய கட்சி தான் இந்த முடிவை எடுக்கும். ஆனாலும் அந்தக் கட்சிக்காரர்கள் அல்லது முடிவை எடுத்தவர்கள் யார் என்று மட்டும் கேட்கக்கூடாது அப்படிக் கேட்டால் சுமிக்கு கேட்ட கோபம் வரும்
  26. @satan நீங்கள் ஏன் அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள் என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது. நீங்கள் எப்போதும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பார்வையோடு பல விடயங்களை அணுகியதை பல தடவை யாழில் கண்டுள்ளேன். இப்போ உங்கள் உழைப்பாளிகள் கட்சி, நாயகன் ஆட்சியில். ஆகவே தமிழ் தேசியத்தை பிடரியை சுத்தி எறிந்து விட்டு, முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடியுங்கள் என மகிந்தவை அளுத்திய அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள். பச்சோந்திதனத்தில் நீங்கள் சுமன் படித்த பள்ளியில் ஹெட்மாஸ்டர். அது கூட அவர்கள் நல்லதை அடைய முயல்வோம் என கூறியதை நம்பித்தான் கூவினேன். அவர்கள் புரள ஆரம்பித்ததும், அப்படி என் மனதுக்கு பட்டதும், என் முந்தைய நிலைக்கு மன்னிப்பு கேட்டு அவர்களை விமர்சிக்க ஆரம்பித்தேன். ஆனால் காணியை கூட விடவில்லை, 50 நாளில், 600 மீட்டர் பலாலி ரோட்டை மட்டும் விட்ட அனுரவுக்கு இவர்கள் கூவும் கூவல் இருக்கிறதே…. லிபிங்ஸ்டன் பாசையில்…. கொடுத்த காசுக்கு மேலாலயே கூவுறாண்டா கொய்யால🤣
  27. இவர் முன்னர் இனவாதம் பேசியிருந்தாலும் இந்த தேர்தல் களத்தில் எந்தவொரு இனவாத கருத்துக்களையும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கவில்லை என நினைக்கின்றேன்.இலங்கை அபிவிருத்தியை மட்டும் முன்னணியாக வைத்து வாக்கு சேகரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற அர்த்தத்திலும் வடகிழக்கு பிரதேசங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். இதே மாதிரி சிங்கள பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரா என எனக்கு தெரியாது. இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன் இலங்கை நிம்மதியாக இருந்தால் பக்கத்து நாட்டுக்காரனுக்கு துண்டற பிடிக்காது எண்டுது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். சீரழிக்க என்னவும் செய்வான். சொந்த மக்களுக்கே கெட்டவன் பக்கத்து நாட்டுக்கு எப்பிடி நல்லவனாய் இருப்பான்?
  28. சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
  29. தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச் சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு. (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை, கிரகிக்கும் குறைபாடுதான் காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
  30. உண்மை....அதே சமயம் Anuraa கட்சியில் தெரிவான தமிழ் எம் பி க்கள் டக்கிளஸ்,அங்கயன்,பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் போல தேசியகட்சிகளின் காலில் விழுந்து அரசியல் செய்யாமல் தமிழருக்கு விரோதமான கருத்துக்களை பரப்பாமல் தமிழர்களின் த்னித்துவத்தை பாதுகாத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் ...அனுரா அரசு அதற்கு தடை போடாது என நினக்கிறேன்...எனவே அனுராவின் தமிழ் எம் பி க்கள் (வடக்கு கிழக்கு)சிந்தித்து செயல்பட வேண்டும் ..மாகாணசபை சகல அதிகாரங்களுடனும் இயங்க ஆக்க பூர்வமான் செயல்களை செய்ய வேண்டும்..
  31. மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள், அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேற கதை).. 🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பல சதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன், தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்.. 🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்புக்காக பலதையும் சொல்லக்கேட்டு கட்சியை சீரழித்த கஜேந்திரகுமார்; சுமந்திரன் புராணம் பாடுவதை தவிர தமிழரசின் விரக்தி வாக்குகளை தனதாக்கி 2020 வளர ஆரம்பித்த மக்கள் அலையை மேலும் வளர்த்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது அவர் விரும்பியவாறே ஒரு ஆசனத்தை மட்டும் தக்க வைத்துள்ளார். 🐚 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து உருப்படியாக பாராளுமன்றத்தில் கதைக்க கூட தெரியாத பழைய அயுதக்குழுக்கள் எல்லாம் சேர்ந்து தாம் அறமற்றவர்கள் எனகாட்ட அடிப்படை அறமின்றி சங்கை திருடி பின்கதவால் பாராளுமன்றம் வரப்பார்தார்கள் கிடைக்கவில்லை 🦌 கிடைத்த குறுகிய காலத்தில் பல உள்ளக வெளியக நெருக்கடிகளுக்கு மத்தியில் நல்லூர் பிரதேச்சபை மற்றும் மாநரசபையை சிறப்பாக நடத்தினாலும், அடப்படை கட்டமைப்பு ஏதுமற்ற மிகப்புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தம்மை இணைத்த மணி அணி, சைக்கிளில் இருந்து பிரிந்தாலும் அவர்களை குறை சொல்வதையும் அவர்களது துரோகப்பட்டங்களுக்கு பதில் சொல்வதிலும் குறியாக இருந்தார்களே தவிர அவர்களை விட மேம்பட்டவர்களாக தம்மை நிறுவாது மக்களிடம் வாக்கு கேட்டார்கள்.. கிடைக்கவில்லை. 🥭 சுமந்திரனின் திமிர்த்தனத்தாலும் தனக்கு கட்சிக்குள் எடுபிடிகளாகவும் இல்லை என்பதற்காக தமது விலக்கப்பட்ட தனது வியாபாரத்திலேயே குறியாக இருக்குமர சரவணபவன், தவராசா போன்றோர் தமது ஈகோவுக்காக்கவும் அரசியல் இருப்புக்காகவும் மாம்பழத்தில் நின்றார்கள். கிடைக்கவில்லை இதில் மக்களை பொறுத்தவரை ஒருகட்சிக்கு மட்டும் வாக்கினை அள்ளி வளங்குவதற்கு யாருமே ஒருவரை விட ஒருவர் திறமாக இருக்கவில்லை .. ஆனால் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் ஆணையை கோரி நின்றார்கள் மக்கள் குளத்தோடு கோவித்துகொண்டு கழுவாமல் இருக்கமுடியாதென அனைவருக்கும் தமது வாக்குகளை பகிரந்தளித்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்த 5 கட்சிகளுக்கும் இம்முறை யாழில் விழுந்த தமிழ்த்தேசிய வாக்குகள் -140,000. 2020 இல் கிடைத்தது 200,000 வாக்குகள். ஊசிக்கும், பல சுயேட்சைகளுக்கும், போக மிக சொற்ப வாக்குகளே அநுரபக்கம் போயிருக்கிறது. அத்தோடு தமிழ்த்தேசியத்தின் பக்கம் திருப்பமுடியத சலுகைகளை நோக்கிய வாக்குதான் NPP பக்கம் சென்றிருக்கிறது. 2020 தேர்தலில் யாழில் டக்கிளஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் பெற்ற வாக்குகள் 115,000 2024 இல் JVP+ டக்கிளஸ் மற்றய தேசியக்கட்சிகள் = 114,000 எங்கடசனம் தமிழ்த்தேசியத்தில் நின்று மாறாது தமிழ் அரசியல் வாதிகளுக்கும், அநுரவுக்கும் சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். Copied from Para https://www.facebook.com/share/1JW4gY83aL/பரன்
  32. மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை
  33. சுமந்திரன் பாராளுமன்றம் போறாரோ இல்லையோ சிறியருக்கு யாழ் கருத்து களத்தில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. 😁
  34. அட நம்ம சுடலை வைரவர் ...அனுரவிடவும் கொமிசனுக்கு தெரிவாகிவிட்டரோ...இன்னுமொரு 5 வருசத்துக்கு உங்க காட்டிலை மழைசார்...உங்களுக்கு வெட்கம் மானம் ரோசமே கிடையாதா சார்..அடிக்கடி மடைமாற்றிக்கொண்டே இருக்கிறியள்...அட உங்க உடம்பிலும் சும்மோட ரத்தம்தானே ஓடுது...
  35. நெல் முளைத்த... வயலை உழுத கையுடன், பசளையும் தூவிய அதி நவீன விவசாயி. இந்த ரெக்னிக்கை... நாங்கள் ஜேர்மனியிலும் அறிமுகப் படுத்த வேணும். 😂 இவர் எத்தனையோ... குறளி வித்தை காட்டியும், மக்கள் அதனை கோமாளிக் கூத்தாக எடுத்து, தேர்தலில் நல்ல பாடம் புகட்டி, வீட்டிற்கு அனுப்பி உள்ளார்கள். 🤣
  36. சுமந்திரன் வாக்காளரிடம் தோற்றாலும், பாராளுமன்றம் போக வாய்ப்பு உள்ளது போல நான் யாழ்களப் போட்டியில் வெல்ல இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது😬
  37. 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) வெற்றிபெறுவார் என 11 பேர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)பிரபா - 33 புள்ளிகள் 2)கந்தையா 57 - 28 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 28 புள்ளிகள் 4)வீரப்பையன் - 28 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 28 புள்ளிகள் 6)வாதவூரான் - 28 புள்ளிகள் 7) வாலி - 28 புள்ளிகள் 😎 Alvayan - 27 புள்ளிகள் 9) நிலாமதி - 27 புள்ளிகள் 10) நிழலி - 26 புள்ளிகள் 11)சுவைபிரியன் - 25 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 13) வில்லவன் - 25 புள்ளிகள் 14)ரசோதரன் - 25 புள்ளிகள் 15)நூணாவிலான் - 24 புள்ளிகள் 16)கிருபன் - 23 புள்ளிகள் 17)goshan_che - 23 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 23 புள்ளிகள் 19)வாத்தியார் - 21 புள்ளிகள் 20)புலவர் - 21 புள்ளிகள் 21)புத்தன் - 20 புள்ளிகள் 22)சுவி - 19 புள்ளிகள் 23) அகத்தியன் - 17 புள்ளிகள் 24) குமாரசாமி - 17 புள்ளிகள் 25) வசி - 11 புள்ளிகள் 26) தமிழன்பன் - 10 புள்ளிகள் இதுவரை 1, 4, 7, 10, 11, 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 53)
  38. சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨 சுமந்திரனின் மீள்வரவு எதிர்ப்புக்களையும் மீறி நடப்பது அவர் கையில்தான் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அவர் தேசியப்பட்டியல் ஊடாகப் போகமாட்டேன் என்று உறுதியான சமிக்ஞை எதனையும் காட்டாதது அவர் போகவிரும்புகின்றார் என்றுதான் உணர்த்துகின்றது. சிறிதரன் உறுதியைக் காட்ட சந்தர்ப்பம் இது. ஆனால் கட்சிமேலான வழக்கு தலைக்கு மேல் கத்தியாக இருக்கு நிலையில் சுமந்திரனின் தந்திரங்களுக்கு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத நிலையில்தான் உள்ளார்!
  39. சுமந்திரன் 2009 இல் நடந்தது இனப்படுகொலை என்று நிரூபிக்கமுடியாது என்பதில் அவரின் சட்ட அறிவைக்கொண்டு, எதுவித சமரசங்களுமின்றி உறுதியாக இருப்பவர்! அதுபோல சிங்கள அரச அதிகாரத்தில் உள்ளவர்களுடன் பேசி ஒரு நியாயமான தீர்வை தமிழருக்குப் பெற்றுத்தரலாம் என்பதிலும் நம்பிக்கை தளராதவர்! ஒன்றுமே இல்லாத தமிழர்களுக்கு நியாயமான நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை சுமந்திரன் தனது சட்ட நிபுணங்களைப் பாவித்து பெற்றுக்கொடுத்தால் நல்லதுதானே! குறிப்பு: பல சுத்துமாத்துகளையும், குழிபறிப்புக்களையும், தகிடுதித்தங்களையும் பாவித்தும் சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்டதில் சந்தோஷமே.😃 ஆனால், தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு எப்படி முடிவு எடுக்கவேண்டும் என்பதை சுமந்திரனே முடிவெடுப்பார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்! எனவே, சுமந்திரனின் முடிவுக்கு இணங்க, பொதுக்குழுவின் தீர்மானத்துடன் அவர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக அதிக வாய்ப்பு இருக்கின்றது!
  40. இன்னும் இரண்டு இளம் பெண்கள் அதில் ஒன்று சாவகச்சேரி அனுர கட்சியின் அமைப்பாளரார் பெயர் வென்னிலா இராலிங்கம். தேசிய பட்டியலாக இருக்கலாம் மற்றது கொழும்பு பக்கம் தான் நம்ம ஏரியாவிலிருந்து ஒரு பெண். பாராளுமன்றம் போவாது மகிழ்ச்சியாகவும். பெருமையாகவுமிருக்கிறது 🙏😁
  41. இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல் முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்போது சிறிலங்கா இராணுவம் 167,676 தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. உணவும், மருந்துப்பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், காயப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வைத்தியசாலைகளும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தன. தமிழ்ப்பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் சிங்கள இராணுவத்தினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்காணோர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்காணோர் காணாமலாக்கப்பட்டதோடு இன்றுவரை அவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் வடக்குக் கிழக்கில் நீதிகோரிப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் இன்றுவரை உதாசீனம் செய்யப்பட்டே வருகின்றன. இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக பல ஐ.நா அறிக்கைகள் வெளிவந்திருப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்களும் காலத்திற்குக் காலம் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு இனமாகவும், ஐ. நா மனிதவுரிமைச் சபையினூடாகவும் இறுதி யுத்தத்தில் தம்மீது நடத்தப்பட்ட பாரிய போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சர்வதேச மயப்படுத்தப்பட்ட யுத்தக் குற்ற விசாரணைகளுக்கெதிராக அநுர குமார திசாநாயக்கவும் அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருக்கின்றனர். இவ்வருட ஆரம்பத்தில் பேசிய அநுர குமார திசாநாயக்க, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களையோ, மனிதவுரிமை மீறல்களையோ செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோரை தமது அரசு ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லை" என்று உறுதிபடக் கூறியிருந்தார். "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமக்கான நீதியினைக் கோரவோ, யுத்தக் குற்றங்களை விசாரிக்கும்படியோ என்னிடம் கோரவில்லையே" என்றுகூட அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால், தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணை ஒன்றினூடாக விசாரித்து நீதி வழங்குங்கள், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் என்கிற ஒட்டுமொத்தக் கோரிக்கையினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற பின்புலத்தில் அநுரவினால் இவ்வாறான கூற்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதேவேளை இறுதி யுத்த காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று நன்கு அறியப்பட்ட பல முன்னாள்த் தளபதிகளை அநுரவின் கட்சி அரவணைத்து வருகிறது. ஹெயிட்டியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு பல சிறுமிகளை பாலியல் தொழிலுக்காகக் கடத்தியவர்கள் என்று கண்டறியப்பட்ட இலங்கையின் மூன்றாவது பட்டாலியன் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் அனுர ஜயசேகரவை அநுர தனது அரசின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்திருக்கிறார். மேலும் இலங்கை விமானப்படை தாக்குதல்ப் பிரிவின் தளபதியாக இருந்து இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளில் நேரடியாகப் பங்காற்றிய ஒருவனை ப‌டைகளின் பிரதானியாக அநுர நியமித்து கெளரவித்திருக்கிறார். அநுர ஜனாதிபதியாகப் பதிவியேற்று சில தினங்களுக்குள் மேற்கொண்ட முக்கியமான இராஜதந்திர நகர்வாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை தனது அரசு முற்றாக நிராகரிக்கிறது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததைக் காணலாம். சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளைப் பாவித்து இறுதி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடும் காலத்தை நீடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதனை நிராகரித்தே அநுர குமார இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். சென்றமாதம் பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை மீள உறுதிப்படுத்தியதோடு, தமிழ் மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக குற்றச்சாட்டுக்களை தமது அரசு விசாரிக்க முன்வரும் என்று கூறியிருந்தார்.
  42. அப்ப இனி டிக்கக் டிக்கக் புளுவாங் இல்லாட்டி கோவிந்தா தான்..... எண்டாலும் எங்கட இண்டிஷ் கோவிந்தன் கைவிட மாட்டான்
  43. யாழில் 1, வன்னியில் 1, மட்டு 1 இதுதான் ஆக கூடியது என நினைத்தேன். யாழில் 3, அதுவும் தேர்தல் மாவட்டமே போச்சு எண்டதும்…. “தலை சுத்திடிச்சு”….. பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣
  44. என்ன புத்தா ஏதோ பெரிய திட்டத்துடன் தான் களமிறங்கியுள்ளீர்களோ?
  45. சுமந்திரனை நம்பி ஆஸ்பத்திரி வேலையை கொடுக்கவும் முடியாதுதானே. தனியே அரசியலமைப்பு நிபுணர்கள் மட்டும்தான் பாராளுமன்றம் போகலாம் என்றில்லை.
  46. ஹிருணியின் சாதனையையும் ஒருவர் வாக்குகளால் தாண்டிச்சென்றுள்ளார் " விஜித ஹேரத்" --> 716,715
  47. வினா 29 தமிழரசு கட்சி மட்டுநகர் தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 20 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் 6 போட்டியாளர்கள் இக்கட்சி 3 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 18 புள்ளிகள் 2) கந்தையா 57 - 14 புள்ளிகள் 3) தமிழ்சிறி - 14 புள்ளிகள் 4)வீரப்பையன் - 14 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 14 புள்ளிகள் 6)வாலி - 14 புள்ளிகள் 7)நிலாமதி - 14 புள்ளிகள் 8)சுவைபிரியன் -12 புள்ளிகள் 9) Alvayan - 12 புள்ளிகள் 10)வில்லவன் - 12 புள்ளிகள் 11)வாதவூரான் - 12 புள்ளிகள் 12)நிழலி - 12 புள்ளிகள் 13) கிருபன் - 10 புள்ளிகள் 14) புலவர் - 10 புள்ளிகள் 15) ஈழப்பிரியன் - 10 புள்ளிகள் 16)goshan_che - 10 புள்ளிகள் 17) நுணாவிலான் - 10 புள்ளிகள் 18)புத்தன் - 10 புள்ளிகள் 19)ரசோதரன் - 10 புள்ளிகள் 20)வாத்தியார் - 8 புள்ளிகள் 21) சுவி - 8 புள்ளிகள் 22) சசிவர்ணம் - 8 புள்ளிகள் 23) வசி - 6 புள்ளிகள் 24)அகத்தியன் - 6 புள்ளிகள் 25)குமாரசாமி - 4புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27 - 30, 33, 38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 30)
  48. வினா 28 தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 4 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் பிரபா தேசிய மக்கள் கட்சி 2 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார். 1)சுவைபிரியன் - 10 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ் தேசியன் - 10 புள்ளிகள் 3) வில்லவன் - 10 புள்ளிகள் 4) பிரபா - 10 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 8 புள்ளிகள் 6) வீரப்பையன் - 8 புள்ளிகள் 7) goshan_che - 8 புள்ளிகள் 8 )நுணாவிலான் - 8 புள்ளிகள் 9) வாலி - 8 புள்ளிகள் 10)நிலாமதி - 8 புள்ளிகள் 11) கந்தையா 57 - 6 புள்ளிகள் 12)Alvayan - 6 புள்ளிகள் 13)புலவர் - 6 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 15)புத்தன் - 6 புள்ளிகள் 16)வாதவூரான் - 6 புள்ளிகள் 17)நிழலி - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 28,33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 18 )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.