Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    3126
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88824
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19669
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33809
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/26/24 in Posts

  1. நீதிபதிக்கு வேண்டாத வேலை. கோர்ட்டுக்கு ஆசாமி வந்தால் நீதிபதிக்கு பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
  2. இலங்கையின் நடமாடும் பேக்கரி.
  3. ஏன் அமைதி என்பதுதான்..சந்தேகமாக இருக்கிறது... அண்மையில் ஊர் சென்றபோது தலைவரின் வீட்டிற்கு சென்றேன்.... ஒற்றைச்சுவர் மட்டும் மங்கிய மஞ்சள் கலர் எழுத்துடன் நின்றது..நினவுக்கு படமும் எடுத்துக் கொண்டேன்...அதேநேரம் 2004ல் போனபோதுமுழு வீடாக இருந்தது ..அப்பவும் படம் எடுத்ததேன்...இந்தமுறை போய் வரும்போது வேதனையுடன் வந்தேன்...ஏன் இந்த் ஊர் மக்கள்.. சிறந்த முறையில் பாதுகாக்கவில்லை என்பதே....பின்னர்தான் அறிந்தேன்கடும் பாதுகாப்பு நெருக்கடி..ஆனால் இன்றுபிறந்தநாள் நிகழ்வைப்பர்த்தபோது..மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...ஏனெனில் அவர்களுக்கு மனமுண்டு...மற்றவர்கள் விடுகிறார்கள்இல்லை என்பதே..
  4. தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதில் பெருமைப்படுகிறேன்!!! இருந்தால் நீ தலைவன், இல்லையென்றால் நீ எங்களின் இறைவன்!!!
  5. யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் செத்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடைய எறும்புப்புற்றை விட்டை வெளியே வருகின்றதாக இல்லை..............🤣.
  6. இந்தச் சம்பவத்துக்கு இவர் பேஸ்புக் லைவ் போடேல்லையா?
  7. நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்பட்டிருக்கும். எனினும் முன் எப்போதும் இல்லாத அளவு சிறிது காலமாகச் சில சமூக விரோத அமைப்புகள் தங்கள் சிறுமதியினால் தமிழ் மண்ணில் கூட சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்து தோற்கின்றனர். அவர்களை எப்போதும் தோற்கடிக்க ஆசிரியர் பெருமக்களான நமது பங்களிப்பு இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது. சமய நல்லிணக்கத்தைப் பெருமையுடன் பறைசாற்றும் நாம் வெட்கித் தலைகுனியும் இடமும் உண்டென்றால், அது சாதியம். சாதிய அடையாளம் நமக்கான அவமானம் என்பதை மாணாக்கர் மனதில் இளமையிலேயே பசுமரத்தாணி போல் பதிய வைப்பது நம் முன் இருக்கும் தலையாய கடமை. எங்கள் இளமைக் காலத்திலும் சாதி இல்லாமல் இல்லை. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தம் சீரிய பணியால் சாதியம் சிறிது சிறிதாக மழுங்கி வந்த காலம் அது. எப்படியோ சாதி வெறி மீண்டும் தலை தூக்குவது இன்றைய சமூக அவலம். எங்களுடன் படித்த நண்பர்கள் இன்ன சாதியர் என்று பெரும்பாலும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ மாணவர்கள் தங்களுக்குள் மட்டுமல்லாமல், தங்கள் ஆசிரியர்களும் இன்னின்ன சாதியினர் என்று ஆவலுற்று அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆசிரியர்களாகிய நாம் தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. மீண்டும் பழைய வெற்றியை நிலை நாட்டுவது நம் பொறுப்பாகிறது. சாதி எனும் தளத்தில் அவர்கள் கொண்டாடும் வேற்றுமை சிறிது சிறிதாக மதம் எனும் தளத்திலும் பரவும் அபாயம் உண்டு. பெரியார் சமயத்தைப் புறந்தள்ளியது கூட, அது சாதியத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாலேயே ! எனவே சாதி ஒழிப்புடன் சமய நல்லிணக்கம் பேசுவதும் தவிர்க்க முடியாததே ! ஒன்று, உற்ற பிணிக்கு மருந்து; மற்றொன்று, வருமுன் காப்பது. எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் சொல்வது உண்டு - "மாணாக்கர்க்கு உங்கள் பாடங்களைச் சொல்லித் தருவதுடன் சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் நாம் நல்லொழுக்க வகுப்பு என்று தனியாக நடத்துவதில்லை" என்று. எனவே மாணவர் சமூகத்திற்கு சொல்லித் தருவோம் : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திரத்தை ; அதே பொருளில், "அவரே ஏக இறைவன்" என அறிவிக்கும் அவ்வல் கலிமாவை ; கலிமா என்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் தலையாயது என்பதை. இஸ்லாமியரின் மற்றொரு கடமையான (ரமலான்) நோன்பில், நோன்பு திறக்கும் போது மார்க்க பேதமின்றி, ஏழை-செல்வந்தர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் இஸ்லாத்தை எடுத்துரைப்போம். அதே சமநிலைக் கண்ணோட்டத்தில், "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்" எனப் போதிக்கும் திருமூலரைக் காட்டுவோம். ரோமன் கத்தோலிக்கரின் மானிட சமத்துவத்திற்கு அவர்கள் உருவாக்கிய என்னைப் போன்ற மாணவர்களே சான்று. அங்கு பயிலும் காலத்தில், "நான் இந்து; அவன் கிறித்தவன்" என்று ஒருபோதும் நாங்கள் உணர்ந்ததில்லை. புரொட்டஸ்டன்ட் கிறித்துவரின் சமய ஒற்றுமை உணர்விற்கு அந்த நூற்றாண்டு மண்டபத்தின் எதிரே அமைந்த கல்லறையில் உறங்கும் இரேனியஸ் அடிகளே சாட்சி. தாம் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதமின்றி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணாக்கரும் ஓரிடத்தில் அமர்ந்து பயில வேண்டும், உண்ண வேண்டும் என்பதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உறுதியாக நின்று சமத்துவப் புரட்சி செய்தவர் இரேனியஸ் அடிகள். சமூக நல்லிணக்கத்தை அவரவர் சமயங்களே வலியுறுத்துகின்றன என்பதை ஆசிரியராகிய நாம் மாணவர் சமுதாயம் விளங்கச் செய்வோம். மீண்டும் வெல்வோம். ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும். பின்வரும் முகநூல் இணைப்பில் இக்கட்டுரையோடு நான் பேசிய ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/1AXBekspxj/
  8. மன நோய்வாய்ப்படடவர்கள் ,ஒழுங்காக மருந்து எடுக்காவிட்டால் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.(தினமும் மருந்தா என சலிப்பு நிலை வரும் சில சமயம் அதைக் குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் ) மிகவும் உக்கிரமான நிலைக்கு வரும் .பெண்கள் எனில் அழுகையும் தூய்மை அற்ற்வர்களாயும் இருப்பர். ஆண் களில் எதோ ஒரு திருப்தியின்மையை நினைத்து வஞ்சம் தீர்க்க முற்படுவர். மூளை தாறுமாறாக யோசிக்கும்.வயது வந்தவர்களாய் இருப்பினும் ஒழுங்காக மருந்து எடுத்தாரா எனக் கவனிக்க வேண்டும். யோசிக்க விடாது வேறு திசையில் முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் நித்திரை அவசியம். படுக்கையில் இருந்தாலும் மூளை உறங்காது கிரமமாக குறித்த காலஎல்லையில் வைத்தியரிடம் போக வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரிடமிருந்து அறிந்து கொண்டவை. இவை யாருக்கும் பயன்படக் கூடும் எனும் நல்லெண்ணத்தில் பகிர்கின்றேன். .
  9. முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பங்கு பற்றிய அனைவரும் மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.கந்தையருக்கும் சிறியருக்கும் (சாராயக்கடை சிறி இல்லை எங்கடை தமிழ் சிறி) நன்றி.
  10. உதாவாக்கரை தலைவர், சாராய கடை சிறி, பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதை தவிர எதையும் செய்ய முடியாதவர், கையாலாகாதவர் என்பதை மக்கள் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக - தேர்தலில் தோற்று போன சுமந்திரனை பற்றி தாமாக கற்பனை செய்திகளை வெளியிடுகிறன புலம்பெயர் டாய்லெட் ஊடகங்கள். இதுவரை சுமனை பாவித்து இந்த புலம்பெயர் அடிப்பொடிகள், சாரயக்கடை சிறிக்கு கவர் எடுத்தார்கள், இப்போ சுமன் இல்லை என்றதும் தமது டீலர், மன்னிக்கவும் லீடர்ரை எப்படி கவர் எடுக்கலாம் என வழி தெரியாது, தெற்கில் அதிர்ச்சி, மேற்கில் பேதி எண்டு கதை காவுகிறார்கள்.
  11. பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள். தமிழ் சிறி அண்ணைக்கும் நன்றி. ஊர் அரசியலே நக்கிகிட்டு போய்ட்டாம்…இதுல ஐபில் வேற🤣 இதில மிகவும் கஸ்டமான விசயம் என்னெவெண்டால்…. மார்ச் மாதமே ஊருக்கு போய்ட்டு வந்து யாழ்பாணத்தில் என் பி பி க்கு ஆதரவு பெருகுவதை எழுதினேன். ஜனாதிபதி தேர்தலில் கணிசமாக என் பி பிக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அதில் மக்கள் வாக்களித்த முறை என்னை மாற்றி யோசிக்க வைத்து விட்டது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் கொஞ்சம் புள்ளிகள் கூடி இருக்கும். சனம் இப்படி ரைட் சிக்னல் போட்டு, லெப்ட் கட் பண்ணும் எண்டு யார் கண்டது 🤣.
  12. முதல் மூன்று இடங்களைப் பெற்ற @பிரபா @வாதவூரான் @வாலி ஆகியோருக்கு பாராட்டுக்கள். @கந்தப்பு மிகவும் சிரமமான தேர்தல் ஆணையாளர் பதவியை மனமார ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்ததற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். @புரட்சிகர தமிழ்தேசியன் மிகமிக பெருமையாக இருக்கிறது. @கிருபன் ஆசை தோசை அப்பளம் வடை. போட்டியில் பலரையும் கலந்து கொள்ளவைக்க இரவுபகலாக பாடுபட்ட @தமிழ் சிறி க்கும் பாராட்டுக்கள். இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.
  13. அனுரவை ஆதரிப்பவர்களை ஏன் திட்டிக்கொண்டு. இருக்கிறீர்கள்??? இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு சிங்களத் தலைவர்களுடன். பேசி தான் பெற முடியும் ??? இந்த ஒரு சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவு ஆனால் தாயக மக்களுக்கு அது நன்றாகவே விளங்கியுள்ளது
  14. இரட்சகராக அனுரகுமார திசநாயக்கவை ஏற்று கொண்ட தமிழ் தேசியவாதிகள் என்ன சொல்கின்றார்கள் என்றால் ஜனாதிபதி அய்யா அவருக்கே உரிய இரக்கம் கொண்ட நல்ல மனத்தோடு தமிழர்களுக்கு எவ்வளவே நல்லவற்றை செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில் இந்த அருச்சுனா எல்லாவற்றையும் குழப்பி விடுகின்ற செயல்பாட்டை செய்கின்றாராம்.
  15. ஓம்… அப்போ ஈபி ஆர் எல் எப், டெலோ, புளொட்டின் ஒரு பகுதி இந்தியன் ஆமியோடு சேர்ந்தியங்கினர். இவர்களை திரீ ஸ்டார் என்றோம். இவர்களில் இருந்த உறுப்பினரை கொண்டு அதே சமயத்தில் உருவான அமைப்புத்தான் ஈ என் டி எல் எப். யாழில் பல ஊர்களில் ஈ பி தான் ஆதிக்கம், அராஜகம் கூட. ஆனால் டவுனில் ஈ என் டி எல் எவ் வதை முகாம் ஒன்று இருந்தது. டெலோ மன்னரிலும், வன்னியின் A9 இன் இருமருங்கிலும் ஈ என் டி எல் எவ் ஆதிக்கம். வவுனியாவில் புளொட். 1988 மாகாண சபை தேர்தலுக்கு பின், இவர்கள் மூவரும் இந்தியா உருவாக்கிய TNA எனும் துணை இராணுவத்துக்கு ஆள் பிடிக்க தொடங்கினார்கள். யாழில் ஈபி யிடம் தப்பினால், கிளிநொச்சியில் ஈ என் டி எல் எவ், பஸ்சால் /ரயிலால் இறக்கி கூட்டி போவார்கள், அதிலும் தப்பினால் வவுனியாவில் புளொட் இறக்கும். பணம் இருந்தோர் பலாலி-ரத்மலானை என ஓடி தப்பினார்கள். கிழக்கு மாகாணத்திலும் இதே போல் ஒரு நிலைதான். படுவான்கரை பக்கம் போய் கேட்டு கேள்வி இன்றி அள்ளிப்போனார்கள். ——————— அது புலிகள் திரும்பி வரமாட்டார்களா என மக்கள் தவமிருந்த காலம். இப்படி ஒரு ஆள் பிடிப்பை புலிகளும் செய்வார்கள் என நான் உட்பட பலர் கனவிலும் நினைத்திராத நாட்கள் அவை. நான் ஊரில் இருக்கும் வரை அப்படி ஏதுவும் நடந்ததாக நான் அறியவில்லை. ஆனால் பாஸ் நடைமுறை 1990 இல் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் கருணா மட்டகளப்பில் வலுக்கட்டாயமாக பிடிக்கிறார் என கதை வந்த போது, முதலில் நம்ப கடினமாக இருந்தது. பின்னர் தலைவருக்கு தெரியாமல் பிடிக்கிறார் என நம்மை நாமே தேத்தும் நிலை வந்தது. 2006 இன் பின் - எனது தம்பி முறையானவர்கள், ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிக்க, முல்லைதீவில் இருந்து நாயாற்று, மணலாறு காட்டு வழியாக புல்மோடை போய் அங்கிருந்து திருமலை நகரம் போனபோது, அதில் ஒரு குடும்பத்தில், மகன் திரும்பி வரும் வரை பெற்றாரில் ஒருவரை இயக்கம் கூட்டிப்போன போது - அதற்கு மேலும் நடக்கும் உண்மையை மறுக்கும் நிலை அற்றுப்போனது. இது யார் மீதான குற்றப்பத்திரிக்கையும் அல்ல. ஈபி யின் ஆட்சேர்ப்பு அவர்கள் இருப்பை பேண, புலிகளின் ஆட்சேர்ப்பு இனத்தின் இருப்பை பேண. இது மிக முக்கியமான வேறுபாடு. ஆனால் கட்டாய ஆட்சேர்புக்கு உள்ளானோருக்கு அதன் நோக்கம் இரெண்டாம் பட்சமாகவே இருக்கும். ஒரு மண்மீட்பு யுத்தம் நிகழும் போது - அதன் ஒப்பற்ற தலைமைக்கு ஆள் சேர்ப்பதில் பிரச்சனையே வந்திருக்க கூடாது. அப்படி அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை வரும் அளவுக்கு நிலமை மோசம் அடைய இரெண்டு காரணங்களை நான் காண்கிறேன். 1. ஓடி வந்த, இயக்கத்துக்கு போகாத என் போன்ற( இங்கே எழுதும் அனைவரினதும், அப்போ சிறுவாராக இருந்தோர் தவிர) சுய நலன் 2. கட்டாய ஆட் சேர்பின் மூலம் ஒரு விடுதலை போரை வெல்லலாம் என நினைத்த இயக்கத்தின் நிலைப்பாடு இனி இதை கதைத்து எந்த பலனுமில்லை. ஆனால் இனியும் போத்து மூடுவதிலும் ஒரு பலனுமில்லை என்ற வகையில் - என் வாழ்ந்த அனுபவமாக இதை எழுதுகிறேன். அவ்வளவுதான். இரு பக்க பிரச்சாரங்களுக்கு அப்பால் வரலாறு இந்த உண்மையை எழுதும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஸ்யாவின் ஆட்சேர்புக்கும், உக்ரேனின் ஆட்சேர்புக்கும் உள்ள வித்தியாசம் போன்றது இது.
  16. கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான புலிகளின் தாக்குதல் தமிழர் தாயகத்தின் எல்லைகளில் உருவாக்கப்பட்டு வந்த சிங்கள குடியேற்றக் கிராமங்களினால் பல எதிர்பாராத , விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாயின. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை இக்குடியேற்றங்களை எப்படியாவது தடுத்தே தீருவது என்கிற தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உறுதியான நிலைப்பாடு, போராளிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகள், இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகளினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் பாரிய இடப்பெயர்வுகள், தமிழ் மக்கள் சர்வதேசமெங்கிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தமை, தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டமை, போராளி அமைப்புக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தமை என்பவற்றோடு, சிங்களக் குடியேற்றவாசிகளை எப்பாடுபட்டாவது பாதுகாத்தே தீருவோம் என்று அரசும் இராணுவமும் சிங்கள மக்களுக்கு உறுதிவழங்கியமையினையும் குறிப்பிட முடியும். தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களால் அக்காலத்தில் வெளியிடப்பட்டு வந்த அறிக்கைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்டு வந்த நுட்பங்கள், அவர்களின் போராட்டக் களத்தின் விரிவாக்கம் ஆகியவை சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் அவர்களின் உறுதிப்பாட்டினை எடுத்தியம்பியிருந்தது. 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தி ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பிரபாகரன் வழங்கிய செவ்வியில் குடியேற்றங்களுக்கெதிரான தனது உறுதியான நிலைப்பாடு குறித்து அவர் பேசியிருந்தார். கேள்வி : தமிழர்களின் மாவட்டமான திருகோணமலையிலிருந்து தமிழ மக்களை விரட்டியடித்துவிட்டு அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசாங்கம் முனைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பிரபாகரன் : இதனை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இல்லை. அவர்களின் திட்டங்களைத் தோற்கடிக்க எம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடுவோம். 1984 ஆம் ஆண்டின் மூன்றாம் வாரத்தில் சென்னையில் தங்கியிருந்த தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களை சட்டர்டே ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியரான காமிணி நவரட்ண சந்தித்தபோது, சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் தமது உறுதிப்பாடு குறித்து அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தனர். புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்த காமிணி நவரட்ண, அரசாங்கத்திற்கும் போராளித் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்வதனூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வொன்றை உருவாக்க முனைந்திருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் சந்தித்து விட்டே அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். ஜெயாரின் விருப்பத்தின்பேரிலேயே நவரட்ணவின் பயணம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அரசியல் அவதானிகள் அன்று தெரிவித்திருந்தனர். நவரட்ணவுடன் பேசிய போராளிகளின் தலைவர்கள் அரசியல்த் தீர்வுகுறித்து ஜெயாருடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினர். இதன்பின்னர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காமிணி நவரட்ண, ஜெயவர்த்தனவுடன் அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதற்கு எந்தப் போராளித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர் என்று கூறினார். தமிழர்களுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கவே ஜெயவர்த்தன முழுமூச்சுடன் முயன்றுவருவதாக நவரட்ணவிடம் தெரிவித்த போராளிகள், ஜெயார் விரும்பியபடி தாமும் அதே பாணியிலேயே அவருக்குப் பதிலளிக்கக் காத்திருப்பதாகக் கூறினர். நவரட்ணவுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசிய பாலசிங்கம், "எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது எனும் யதார்த்தத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை அதன் மீதான இராணுவத் தாக்குதல்களை நாம் தீவிரப்படுத்துவோம்" என்று கூறினார். மாசி 13 ஆம் திகதி போராளிகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அன்றிரவு இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்றின்மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது ஆர்.பி.ஜீ க்கள், மோட்டார்கள் மற்றும் கிர்ணேட்டுக்கள் கொண்டு சுமார் 100 போராளிகள் அடங்கிய புலிகளின் அணி தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்த இத்தாக்குதலில் இராணுவத்தினரில் 106 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும், தமது தரப்பில் 16 போராளிகள் வீரமரணம் எய்தியதாகவும் சென்னையில் புலிகள் அறிவித்தனர். இத்தாக்குதலினால் சிங்களவர்கள் அச்சமடையக் கூடும் என்று அஞ்சிய அரசாங்கம் இத்தாக்குதலை மூடி மறைக்க எத்தனித்தது. ஆகவே இத்தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பயங்கரவாதிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் கூறியிருந்தது. ஆனால் கொக்கிளாய்ச் சண்டையின் முக்கியத்துவம் குறித்து இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும் பேசியிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கெதிராகப் போராடுவது எனும் தமிழ்ப் போராளிகளின் உறுதிப்பாட்டை, குறிப்பாக புலிகளியகத்தின் உறுதிப்பாட்டையே கொக்கிளாய் இராணுவ முகாம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலின் வீரியமும், அவர்கள் பயன்படுத்திய உத்திகளும் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கொக்கிளாய்ச் சமரை முழு அலவிலான ஆயுத மோதல் என்றும் அவர்கள் கணித்தனர். மிக அண்மையில் உருவாக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கட்டியமைக்கப்பட்டிருந்த கொக்கிளாய் இராணுவ முகாமையே தமது இலக்காக புலிகள் தேர்ந்தெடுத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கொக்கிளாய்ச் சண்டையில் ஈடுபட்ட புலிகளின் அணி இத்தாக்குதலுக்கென்று பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன், பலவகையான ஆயுதங்களையும் இத்தாக்குதலின்போது பாவித்திருந்தது. முற்றான இராணுவச் சீருடையில் காணப்பட்ட புலிகள், தம்முடன் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், மருந்துப்பொருட்கள் என்பவற்றையும் எடுத்து வந்திருந்தனர். இரவுநேரத்தில் பார்க்கும் வசதி கொண்ட கண்ணாடிகள், நவீன ஏ கே 47 வகை இரக தானியங்கித் துப்பாக்கிகள், எம் 16 ரைபிள்கள், மோட்டார்கள், உந்துகணைச் செலுத்திகள் போன்ற ஆயுதங்கள் புலிகளால் பாவிக்கப்பட்டன. மேலும் சண்டையின்போது எதிரியைத் தேடுவதற்கான தேடும் விளக்குகளையும் அவர்கள் கொண்டுவந்திருந்தனர். சண் பத்திரிக்கை இத்தாக்குதலை பத்தோடு பதினொன்றாவதாக கூறிக் கடந்து செல்லவில்லை. மாறாக பாரிய இராணுவ முகாம் ஒன்றினை நேருக்கு நேர் எதிர்த்து அழிக்க புலிகள் நடத்திய தாக்குதல் என்று வர்ணித்தது. தேசிய பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்த ரவி ஜயவர்த்தன புலிகளின் இத்தாக்குதல் மிகவும் மூர்க்கத்தனமான நேரடிச் சண்டையாக இருந்ததாகவும், இதன்மூலம் அவர்கள் மிகவும் திற‌மையான எதிரியாக வளர்ந்திருப்பது தெளிவாகிறது என்றும் கூறியிருந்தார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார், கொக்கிளாய் தாக்குதலின் மூலம் இலங்கையின் ஆயுதப்போரின் குணாதிசயம் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறினார். அன்றிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிவரும் புலிகள் இயக்கம், 2000 ஆம் ஆண்டில் ஜெயாரினால் 1985 ஆம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தாயகத்தின் குறிப்பிடத்தக்களவு பிரதேசத்தினை விடுவிக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 2002 இல் பிரபாகரனின் தளபதியாகவிருந்த கருணா குறிப்பிடும்போது, பதவியாவரை எம்மால் செல்லக்கூடிய பலம் இருந்தது ஆனால் தலைவர் அதனைச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார் என்று கூறியிருந்தார். தமது போராடும் அணிகளைப் பரவலாக்கி, செறிவைக் குறைப்பதை விரும்பாததானாலேயே தலைவர் அதனைச் செய்யவில்லை என்றும் கருணா ஊடகவியலாளர்களிடம் கூறினார். சில தமிழ் இராணுவ ஆய்வாளர்கள் இன்னும் சில விடயங்களைக் கூறியிருந்தனர். வெலி ஓயவில் இராணுவத்தினரின் ஒரு பகுதியை முடக்கிவைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்கவைப்பதும் பிரபாகரனின் நோக்கமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.
  17. தேசிய தலைவருக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. தேசியத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .........!
  19. வாழ்விலும், இறப்பிலும் தன்னலமற்ற தலைமைக்கு உதாரணமாக திகழ்ந்த தலைவர் பிரபாகரனை அவரின் பிறந்த நாளில் நினைவுகூருகிறேன்.
  20. 👍........... அவர்கள் தான், ஏராளன். என்னுடைய தலைக்குள் பதிந்திருந்த பழைய பிழையான தகவலை அழித்துவிட்டேன்........................🤣.
  21. 🤣.............. அது முன்னர்...........ஆனால் இப்பொழுது ஒரே ஒரு அடையாளம் தான் நாடு முழுவதும்.................🤣. இந்த புதிய மாற்றத்தை ரஷ்யாவிற்கும் யாராவது சொல்லிவிடவேண்டும்.
  22. உங்களின் வழக்கமான புலிக்காய்ச்சல் சந்தடி சாக்கிலை மொட்டை பொய்யையும் சேர்த்து செருகிவிடுவதுதான் உங்கள் திறமை . ரசோ வையும் என்னையும் கோர்த்து விடுவதில் உங்களுக்கு என்ன அலாதி இன்பம் ?
  23. சில மாதங்களின் முன் அப்பொழுது இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த அல் சஃப்ரி ஒரு மாநாட்டிற்காக ரஷ்யா போயிருந்தார். அப்பொழுது அவர் ரஷ்ய அதிகாரிகளை இனிமேல் இலங்கையர்களை ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது ஒரு செய்தியாக பல ஊடகங்களில் வந்தது. ஆனால் பின்னர் இது சம்பந்தமான செய்திகள் எதையும் நான் காணவில்லை....................😌.............. இந்தச் செய்தி வரும்வரை.
  24. 🤣🤣...................... நீங்கள் எழுதியதை வாசித்து சிரித்துவிட்டு, திரும்பவும் வாசித்தேன். 'உயர்தர சைவ உணவு........' என்று எங்கள் ஊர்களில் சில கடைகளில் மதிய நேரத்தில் ஒரு அறிவிப்பு போடுவார்கள், அதே போல இருந்தது நான் எழுதியிருந்தது...............🤣. பிளஸ் - 1, பிளஸ் - 2 வகுப்புகளை இலங்கையில் உயர்தர வகுப்புகள் என்போம். அதற்கு முன்னர் வரும் 10ம் வகுப்பை சாதாரணதர வகுப்பு என்போம். சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். தமிழில் கலைச்சொற்களை உருவாக்குதலும், அதை பயன்பாட்டில் கொண்டு வருதலும் என்ற பொருளில் ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன். இலங்கை ஒரு காலத்தில் இதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இன்று அப்படியில்லை...............
  25. இப்படி பணம் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு போவதை சட்டரீதியாக தப்பென்று சொல்லலாம், ஆனால் இதையே மனிதாபிமானரீதியாக ஒரு தப்பென்று சொல்ல முடியுமா, கொழும்பான்................. எங்களில் கூட பெரும்பாலானோர் இப்படித்தானே புலம் பெயர்ந்தவர்கள். இன்றும் அமெரிக்க தெற்கு எல்லையில் இப்படியானவர்கள் உலகெங்கும் இருந்து வந்து சேருகின்றனர். இந்தியர்கள், சீனர்கள், நேபாள மக்கள்,.................... இவர்கள் ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தான் இங்கு வருகின்றார்கள். அவர்களும் இங்கு வாழட்டும் என்றே நான் நினைக்கின்றேன்................
  26. நாங்கள்... யாழ்ப்பாண மண்ணையே தெரிந்திராத, பியதாசவுக்கு வாக்களிக்கும் போது... அவர்கள் ஹேமசந்திரவுக்கு வாக்களிக்கட்டுமன். 😂 பழிக்குப் பழி... வாங்கிட்டோமில்ல. ஆங்... 🤣
  27. தலைவரின் பிறந்தநாளில் தனது பிறந்தநாளையும் கொண்டாடும் @வீரப் பையன்26 க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  28. எங்கள் தேசியத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  29. பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  30. ஆணவத்தில் ஆடும் மனிதரை " ஆடாதடா ஆடாதடா மனிதா ரெம்ப ஆட்டம் போட்டால் அடங்கிடுவே மனிதா " என்று சொல்லும் கவிதை ......நல்லாயிருக்கு . ........! 👍
  31. இவர்கள் ஒரு தனித்துவமான ஒலியோசை வைத்திருக்கிறார்கள் ........அதனால் தொலைவில் வரும்போதே ஆட்களுக்குத் தெரிந்து விடும் . ........ அதிகமான வயசானவர்களுக்கு ஒரு அட்ஷயபாத்திரம் ........! 😁
  32. உக்கிரைன், ரஸ்சியாவின் நீண்ட கால பாதுகாப்பு (மடி) நலன்களை புறந்தள்ளி நேட்டோ, us, மேற்கு சொல்லபடி முடிவெடுக்கும் போது, கியூபா இப்போதும் அனுபவித்து வருவதை கருத்திலெடுக்கவில்லை. ஆகவே, உகிரியினும், நேட்டோ, us, மேற்கின் திட்டமான ஆகக்குறைந்தது ருசியாவை பலவீனப்படுத்தல் என்ற நீண்டகால திட்டத்துக்கு ஒத்துக்கொண்டே இவளவு எகிறது உள்ளது. இது ஒரு காரணம், Trump ஒன்றும் பெரிதாக எதையும் செய்துவிடமுடியாது என்பதற்கு. இப்பொது நேட்டோ, us, மேற்கு திட்டம்,ரஷ்யாயவை எப்படியவைத்தது வங்குரோத்து அடையச் செய்வது. உக்கிரைன் என்ற அரசு வருங்கால இருப்பை வைத்து சூதாடுகிறது.
  33. 👍.............. இங்கு தென் கலிஃபோர்னியாவில் சில நகரங்களில் வீடுகளில் கறிவேப்பிலை வளர்க்கக்கூடாது என்று ஒரு ஒழுங்குமுறை கொண்டு வந்துவிட்டார்கள். நான் இருக்கும் ஊரில் இந்தச் சட்டம் இன்னும் வரவில்லை, ஆதலால் வீட்டில் சில கறிவேப்பிலை மரங்கள் நிற்கின்றன. கறிவேப்பிலை மரத்தில் ஒரு சிறு பூச்சி வளர்ந்து பெருகுகின்றது என்றும், அவை அப்படியே ஆரஞ்சு மரங்களுக்கு தாவி ஆரஞ்சு மரங்களை நாசப்படுத்துகின்றன என்றும் கண்டிபிடித்து இருக்கின்றார்களாம். இலங்கையில் வீட்டின் முன்பக்கம் கறிவேப்பிலை மரங்களை பொதுவாக வைக்கமாட்டார்கள். வீட்டின் பின்பக்கமே இவை நிற்கும். வேர் ஓடி வீட்டிற்குள் போய் விடும் என்பது போல ஏதோ சொல்வார்கள். அமெரிக்கர்களுக்கு இந்த விசயம் இன்னும் தெரிய வரவில்லை..................🤣.
  34. அப்படி எதுவும் வராது, வில்லவன். உங்களின் அனுபவத்தை, உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுங்கள்................👍. நாங்கள் எழுதுவதை தாராளமாக எவரும் மறுக்கட்டும். போதிய புதிய ஆதாரங்கள் இருந்தால் அதுவே எங்களின் கருத்தை மாற்றவும் கூடும்.
  35. கவிதை அபாரம். 👍🏼
  36. எது இருக்கின்றதோ இல்லையோ😅 அவரிடம் இருக்கும் ஒரு தனித்த தன்மை (கெத்து என்றும் சொல்லலாம் பயம் இன்மை என்றும் சொல்லலாம்) வேறு எந்தத் தமிழ் பா உ க்களிடமும் நான் காணவில்லை தேர்தலில் வென்று பத்து நாட்களில் இலங்கை முழுவதும் அவரது கருத்துக்கள் ஒலிக்கின்றன இது ஒரு வரலாற்றுச் சாதனை 👌
  37. 🤣..................... கமலின் 'குரு' படம் கொன்கோட் தியேட்டரில் ஓடிக் கொண்டேயிருந்தது. நானும் தினமும் அது இன்னமும் ஓடுகின்றதா என்று பத்திரிகையைப் பார்த்து உறுதி செய்து கொண்டேயிருந்தேன். அது போலவே இப்பொழுது இந்தச் சண்டையும் ஆகிவிட்டது. எந்த மூன்றாம் தரப்பையும் ஒரு வேலி அடைப்பதற்குக் கூட நம்பக்கூடாது. நம்பினோர் நட்டாற்றில் நிச்சயம் ஒரு நாள் விடப்படுவார்................... 'கர்மா' என்று ஒன்று இந்த உலகில் உண்மையில் இருக்குதா என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சொல்லை நேற்று என் மகள் ஒரு தடவை சொன்னார். அப்பொழுது நான் 'ஹலோ, ஹலோ...........இது ஒன்றும் ஆங்கிலச் சொல் கிடையாது. இது எங்களின் சொல்............' என்று வம்பிழுத்தேன். 'ஆ.........., தெரியும் தெரியும்.....' என்று அந்தக் கதை தொடர்ந்தது. பின்னர் ஊழ்வினை என்று இப்பொழுது ஜெயமோகன் அடிக்கடி எழுதுவது நினைவில் வந்தது. அவர் இது சம்பந்தமாக எழுதும் பல விடயங்களை என்னால் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. இன்று நீங்கள் கர்மா என்கிறீர்கள்................. 'கர்மா நாட்கள்' என்ற தலைப்பும் நல்லாவே இருக்கின்றது............🤣.
  38. 'உன் இஷ்டத்திற்கு எழுது தம்பி.................' என்று நீங்கள் ஆரம்பத்திலிருந்து கொடுத்த உற்சாகம் தான் இங்கே வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றது...................... என்ன கிடைக்குதோ அதில் அரைவாசி உங்களுக்கு.................🤣.
  39. 60 கேள்விகளுடன்... போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவிற்கும், பல சிக்கலான, கணிக்க சிரமமான.. கேள்விகளாக இருந்தும், துணிவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அந்த 26 உறவுகளுக்கும், மனமார்ந்த நன்றிகள். 🙏 எனக்கு... @goshan_cheஐ @வீரப் பையன்26 வென்ற அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கின்றேன். 😜 🤣
  40. முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்........! 💐 இப் போட்டிக்காக இரவுபகல் பாராது உழைத்த கந்தப்பு, தமிழ்சிறியர் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ........! 👍
  41. முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பங்கு பற்றிய அனைவரும் மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திக்கலாம். போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கும், போட்டியில் பங்கு பற்ற ஊக்குவித்த தமிழ்சிறிக்கும் நன்றிகள்.
  42. 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடத்தை பிடிக்கும் என 4 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) பிரபா - 64 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 53 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிழலி - 51 புள்ளிகள் 11) நிலாமதி - 51 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16) ரசோதரன் - 46 புள்ளிகள் 17)கிருபன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) அகத்தியன் - 40 புள்ளிகள் 21) குமாரசாமி - 40 புள்ளிகள் 22) புலவர் - 39 புள்ளிகள் 23)புத்தன் - 39 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 100) வெற்றி பெற்ற பிரபாவுக்கு வாழ்த்துகள். 2, 3 இடத்தை பிடித்த வாதவூரன், வாலிக்கும் , குறிப்பாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழன்பன் முதல் 26 கேள்விகள் மட்டுமே பதில் அளித்திருக்கிறார். அதில் 23 சரி மிச்ச கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால் ??
  43. சபாஷ் சரியான போட்டி ! - நீயா ! நானா ! ஒரு முறை ஒரு பெண்மணி பொருட்கள் வாங்க சூப்பர் மார்கெட் சென்றார் . பொருட்கள் வாங்கிய பின் பணத்தை கொடுக்க பர்ஸை திறக்க அதில் டீவி ரிமோட் ஒன்று இருக்க, அதை பார்த்த கேஷியர் அவரிடம் ! " என்னம்மா ! எப்பவும் டீவி ரிமோட் வைத்து இருப்பீர்களா " என்று கேட்க அதற்கு அவர் ! " இல்லை ! நான் கடைக்கு போக வேண்டும் கொஞ்சம் வாங்க என்று என் கணவனை கூப்பிட்டேன் ! அவர் இன்று கிரிக்கெட் மேட்ச் இருக்கு நான் வரலை என்று சொல்லிவிட்டார் ! அதான் அவரை பழி வாங்க டீவியை ஆஃப் செய்துவிட்டு ரிமோட்டை எடுத்து வந்து விட்டேன் ! இப்ப அவர் எப்படி படம் பார்ப்பார் " என்றார் ! நீதி - எப்பொழுதும் மனைவி வெளியே செல்ல கூப்பிட்டால் மறுக்காமல் செல்லவும் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பொருட்களுக்கு கொடுக்க பணம் குறைவாக இருந்ததால், பெண்மணி அவரின் க்ரெடிட் கார்டை கொடுக்க ! அதை வாங்கி SWIPE செய்த கேஷியர் சிறிது கொண்டே ! " அம்மா ! உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டார் ! என்று சொன்னார் ! நீதி - கணவனின் கருத்திற்கு மதிப்பு கொடுங்கள் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பெண்மணி ! தன் பர்ஸில் இருந்த கணவனின் க்ரெடிட் கார்டை எடுத்து, கொடுக்க !கணவன் தன் கார்டை பிளாக் செய்யவில்லை ! நீதி - மனைவியின் புத்திசாலித்தனத்தையும் அறிவையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! கேஷியர் கார்டை swipe செய்ய அது பின் நம்பர் கேட்க ! கேஷியர் பெண்மணியை பார்த்து உங்க கணவரின் மொபைலுக்கு பின் நம்பர் வந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்று சொல்ல ! நீதி - சில நேரம் ஆண் தோற்றாலும் ! அவன் சார்ந்த தொழில் நுட்பம் அவனை காப்பாற்றும் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பெண்மணி ! இருங்க சொல்றேன் என்று பர்ஸை திறந்து அதில் இருந்த கணவனின் போனை எடுத்து பின் நம்பரை கேசியார் கிட்ட சொன்னார் ! ரிமோட் எடுக்கும்போதே எதற்கும் இருக்கட்டும் என்று, கணவனின் க்ரெடிட் கார்டையும் மொபைலையும் எடுத்து வந்தார் ! நீதி - மனைவியின் அபார புத்திசாலித்தனம் சாதாரணமானது இல்லை ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பொருட்களை வாங்கி கொண்டு ! டாக்சி பிடித்து வீடு வந்த சேர்ந்த பெண்மணி , கணவனின் வண்டி இல்லாதது கண்டு ஆச்சரியம் அடைய ! வீட்டிற்குள் சென்று பார்த்தல் , மேசையில் ஒரு பேப்பர் எழுதி இருந்தது! அதி " எல்லா இடங்களிலும் டீவி ரிமோட் தேடி பார்த்தேன் ! கிடைக்கவில்லை அதனால் என் நண்பர்களுடன் மேட்ச் பார்க்க போகிறேன் ! உனக்கு எதாவது வேண்டும் என்றால் என் போனுக்கு கூப்பிடு என்று எழுதி இருந்தது ! நீதி - கணவனை கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள் ! நீங்கள் தோற்று போவீர்கள் !
  44. ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்! Nov 24, 2024 14:54PM IST ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார். உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்! அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்! கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்! என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார். https://minnambalam.com/cinema/why-did-she-break-up-with-a-r-rahman-saira-banu-explains/
  45. அவர்கள் public figures எல்லோ,.. தங்கள் privacy ஐ மதிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.