Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88835
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10307
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33825
    Posts
  4. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1594
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/29/24 in Posts

  1. அப்படியென்றால் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதியில் எப்படி ரிஷாத் பதியுதீனும், மஸ்தானும் வெற்றி பெற்றனர்? எது தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்களா? அப்போ முஸ்லீம்களால்தான் தற்போதைய அரசு ஆட்சியை கைப்பற்றியதா? 76 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள ஆளும் கட்சியொன்று வடபகுதியில் பெரும்பான்மையாக வென்றதாக சரித்திரமேயில்லை, ஆனால் எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் எமது பகுதியில் இருந்து ஏன் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று கொந்தளிக்கவில்லை பக்கம் பக்கமாக கட்டுரையெழுதவில்லை. முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்கினால் அவர் முஸ்லீம்களுக்காக மட்டும் செயல்பட முடியாது, முஸ்லீம்கள் சொல்வதை மட்டுமே நடைமுறைபடுத்த முடியாது. எந்த அமைச்சரும் அரச தலைவரின் கட்டுப்பாட்டிலிருப்பவர், அரச தலைவர் சொல்வதையே நடைமுறைப்படுத்தும் ஒரு பதவியே அமைச்சு என்று இருக்கும்போது அவர் தமிழராகவோ சிங்களவராகவோ முஸ்லீமாகவோ இருப்பதில் என்ன பெரும் பாதிப்பு வந்துவிட போகிறது? உங்கள் அடி மனதில் இருப்பதெல்லாம் முஸ்லீம்களுக்கும் அரசாங்கத்தில் அதிகாரம் இருந்தால் தமிழர் நில ஆக்கிரமிப்பு , பொருளாதார சுரண்டலில் ஈடுபடலாம் என்பதே. ஏற்கனவே அரச செல்வாக்கு பெற்ற ஹிஸ்புல்லா,நசீர், பதியுதீன் துணையுடன் அதை செய்திருக்கிறீர்கள் கொரோனா காலத்தில் முஸ்லீம் உடல்களை எரித்துவிட்டார்கள், இலங்கையில் இனவாதம் மதவாதம் என்று முழங்கிய நீங்கள் தற்போது முஸ்லீம் முஸ்லீம் என்று முழங்குவதற்கு என்ன பெயர்? முன்பும் ஒருதடவை எழுதியிருக்கிறேன், முஸ்லீம் எனும் இனம் எக்காலமும் எவருடனும் ஒற்றுமையாகவோ உளப்பூர்வமாகவோ சேர்ந்து வாழாது, அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தாலும் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள். ஒருவன் எதற்கெடுத்தாலும் தகராறு பண்ணிக்கொண்டிருந்தால் அவனை தங்க தாம்பாளத்தில் இந்த உலகம் தாங்காது, மாறாக அவனை தள்ளி வைக்கும். அதுதான் உள்ளூரிலும் உலக அளவிலும் முஸ்லீம்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
  2. நான் இங்கே புதிதாக உறுப்பினராக இணைந்து இருக்கிறேன். ஆனாலும் யாழ் இணையத்துக்கு நான் பழையவன். இவள்ளவு நாளும் வெறும் ஒரு பார்வையாளனாக ஊர்புதினம் மற்றும் பல குழுக்களில் செய்திகளை வாசிப்பேன் நன்றி
  3. "கடவுளைக் கண்டுபிடித்தது யார்?" கடவுளைக் கண்டுபிடித்தது யார்? தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா? தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.? "பயம்தான் கடவுளைக் கற்பித்தது." பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான். ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள். மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது. எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.அப்படி ஆகிவிடும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பை ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனவே நமது பயம்,கிலி,சாவு இவைதான் கடவுளைக் கற்பித்து விட்டன. எல்லோரும் பயந்திருப்பதையும் ஏதாவது பாதுகாப்பையும் எதிர் நோக்கியிருப்பதையும் பூசாரி பார்த்தான். மக்களை ஏய்க்க பூசாரிகளுக்கு வழிகிடைத்து விட்டது.அவர்கள் தரகர்களாகி விட்டார்கள். உன்னாலோ கடவுளைப் பார்க்க முடியாது.அதனால் கடவுள் இருக்கிறார்தான் என்று சொல்லி தத்துவங்களையும் சாத்திரங்களையும் கோவில்களையும் விக்கிரகங்களையும் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் உருவாக்கி நாடகமாட பூசாரி வந்து சேர்ந்தான். கடவுளுக்கும் உனக்கும் இடையே நின்றுகொண்டு "நான் கடவுளோடு நேராகப் பேசுவேன் என்னிடம் என்னவென்று சொல் உன்னுடைய பாவங்களெல்லாம் சொல்லிவிடு கடவுளிடம் சொல்லி உன்னை மன்னித்து விடச் சொல்கிறேன்."என்கிறான். கடவுளை உன்னால் பார்க்க முடியாது.யாரோ ஒருவருக்குத் தெரியும் என்பதும் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதும் உனக்கு ஒரு பெரிய ஆறுதலாகிப் போகிறது. "உன்னைவிட நன்றாகவே இந்தப் பூசாரிகளுக்குக் கடவுள் இல்லையென்பது தெரியும்." ஆனால் பூசாரிகளின் தொழில்தான் உலகத்தின் மிக மோசமான தொழிலாயிற்றே.விபச்சாரத்தைவிட அசிங்கமான தொழில். "விபச்சாரமே பூசாரிகள் ஆரம்பித்து வைத்த தொழில்தான்." அது இரண்டாவது தொழில்.முதல் தொழில் பூசாரியுடையது.பூசாரிக்கு அப்புறம் விபச்சாரியும் அதற்கு அப்புறம்தான் பிற நோய்களும் இருக்கின்றன. பல மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூசாரிகள் இருக்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட பூசாரிகள் இருக்கிறார்கள்.ஆனால் எல்லோருமே ஆறுதல் வார்த்தை சொல்லி மக்களை ஏய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லையென்பது பூசாரிக்கு நன்றாகவே தெரியும்.அவருக்குத்தான் மிக நன்றாகத் தெரியும். கடவுள் அவருடைய வியாபரம்.வியாபாரம் என்கிற போதே பிழைப்புஎன்றாகிப் போகிறது. நன்றி
  4. கனகபுரம் துயிலும் இல்லத்தில் சிறிதரனையே ஓரம் கட்டிவிட்டார்கள். இதில் எப்படி அந்த தாயாரை விளக்கேற்ற கோரமுடியும் இவரால்?
  5. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799
  6. இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளை கொடுத்து இருந்தால் இந்தப்பெரிய கட்டுரை வந்திருக்காது. ஏன் கடந்த அரசுகளில் இப்படியான கட்டுரைகள் வரவில்லை?
  7. சுனாமி நேரத்தில் முதலில் பேரலை வந்தது, பின் புலிகள் வந்தனர் மக்களுக்கு உதவ. அவர்கள் தோற்றபின், வியாபாரிகள் எம் பிரதிநிதிகள் என்ற வேடம் போட்டு வந்தனர். மக்களின் எந்த இடரையும் களைய விருப்பின்றி காலம் கடத்தினர். மக்கள் இம் முறை அவர்களுக்கு பாடம் படிப்பித்தனர். இன்று தேசியப்பட்டியல் மூலம் தெரிவான, கடல் சூழா ஒரு இடத்தில் பிறந்து கடல் அலைகளில் கால்கள் நனைக்காது உப்புக் காற்றை கொஞ்சம் தானும் சுவாசிக்காது மலையகத்தில் வாழ்ந்த ஒருவர் கடல் வள , மீன் பிடித்துறை அமைச்சராகியவுடன் மீனவர்களை நோக்கி ஓடோடி வருகின்றார் துயர் துடைக்க! இது தான் மக்கள் சேவை. தமிழ் தேசியம் வாழ, முதலில் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அதற்காகத்தான் தமிழ் மக்கள மாற்றத்தை கோரினர். இப்போதைக்காவது அது நிகழ்கின்றது. தமிழ் கட்சிகளின் கடைசிக் கோவணமும் உருவப்பட்டுக் கொண்டு இருக்கு இப்போது.
  8. இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம் இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே. முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.
  9. இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024 சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர். கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  10. முதலில் பொதுவாழ்வு எனப்படும் அரசியலில் ரஜனி செல்வாக்குள்ளவரா? அவரே தேர்தலில் குதிக்கபோகிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் தொடை நடுங்கியதால் உடல்நிலை சரியில்லை அதனால் அரசியலில் இறங்கும் முடிவிலிருந்து விலகுகிறேன் என்று ஓடி போனவர் அவரை சந்தித்தால் எப்படி மற்றையவர்கள் செல்வாக்கு பெற முடியும்? அதற்குபின் வருடம் இரண்டுபடம் பறந்து பறந்து நடிக்கிறார் அதற்கு மட்டும் அவருக்கு உடல்நலம் சிறப்பாக ஒத்துழைக்கிறது. ஒரேயொருதடவை அக்கால கட்டத்தில் ஜெ’வும் சசியும் சேர்ந்து தமிழ்நாட்டையே மொட்டையடித்து ஆட்சி செய்த காலத்தில், பாட்ஷா பட விழாவில் பம்பாய் பட விஷயத்தில் மணிரத்னம் வீட்டுக்கு முஸ்லீம்கள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ரஜனி பேசபோக அது ஆளும் கட்சிக்கும் ரஜனிக்கும் மோதலாகி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜனி குரல்கொடுத்து காகம் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக திமுக ஆட்சியை பிடித்தது. பின்பு அதே வாயால் கோயம்புதூர் குண்டுவெடிப்புகளை முஸ்லீம்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று ரஜனி சொல்லபோக 15 ஆயிரம் அவரோட ரசிகர் மன்றங்களே ரசிகர்களே கலைத்ததாக கதையுண்டு. ஜெயலலிதாவுக்கெதிராய் குட்டிகதை வேறு சொன்னார் ரஜனி, ’’ஒரு கம்பம் இருக்கிறது அதை நட முயற்சிக்கிறோம், அது ஆடிக்கொண்டிருந்தால் மறுபடியும் கல்லு மண்ணுபோட்டு அடிச்சு இறுக்கிகிட்டே இருப்போம், அதேபோல ஓவரா ஆடினா அடி விழுந்துகொண்டே இருக்கும்’’ என்றார் ரஜனி பின்பு அதேவாயால் ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று வானளாவ புகழ்ந்தார். பின்பு நடந்த தேர்தல்களிலும் திமுக அனுதாபியாக ரஜனி இருந்தார் ஆனால் ரஜனி செல்வாக்கினால் எந்த தேர்தலிலும் திமுக வென்றதாக பதிவுகள் இல்லை. ரஜனி ஒரு சேற்றில் விழுந்த பன்றி என்று நேரடியாகவே மருத்துவர் ராமதாஸ் விமர்சித்து பாபா படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதில் முனைப்பு காட்டியபோது ரஜனிக்காக எந்த பிரமாண்ட கட்சிகளும் களமிறங்கவில்லை. அந்த கோபத்தில் அடுத்த தேர்தலில் நாம் யாரென்று காட்டுவோம் என்று முழங்கினார் ரஜனி , ஆனால் ரஜனியின் செல்வாக்கினால் அடுத்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக ஒரு துரும்புகூட நகரவில்லையென்பதே வரலாறு. சீமானும் அப்படித்தான் எவரையாவது திட்டிக்கொண்டே இருந்தால் அதுதான் அரசியல் என்று நினைக்கிறார், செயல்வடிவில் மக்கள் பணியாற்றி அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறாரா என்று பார்த்தால் செயல் என்று எதுவுமேயில்லை. எல்லோரிலும் குற்றம் கண்டுபிடிப்பார் பின்னர் அவர்களையே புகழ்ந்து தள்ளுவார், வாரிசு அரசியலை கடுமையாக கண்டிப்பார் பின்னர் என் அன்புதம்பி உதயநிதி என்பார். ஜாதி அரசியல் என்று சொல்லி அன்புமணி ராமதாசை திட்டி தீர்ப்பார் பின்பு என் அருமை அண்ணன் அன்புமணி என்பார். அதிமுகவை கண்டிப்பார், பின்பு ஐயா எடப்பாடி பழனிசாமி என்பார். ரஜனியை சத்ராஜுக்கு அடுத்ததா கிழித்து தொங்கபோட்டது சீமான் தான், இப்போ ரஜனி வீட்டில் போய் நிற்கிறார். இதுநாள்வரை விஜய்யை தன் கடைசிபிள்ளைபோல தூக்கி கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சியவர் இப்போது விஜய் கொள்கை எதிர்ப்பில் ஆவேசமாக இருக்கிறார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே விஜய் வீட்டில் ஒரு சில மாதங்களிலோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்திலோ ஒரு பூங்கொத்து பொன்னாடையுடன் மின்னலடிக்கும் வெண்மையான பற்களை விரிசலாய் காட்டியபடி கூட்டணிக்காக போய் நிற்பார் சீமான். தமிழர் தமிழ்தேசியம் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது எந்தகாலமும் வெற்றிபெறாது, ஏனென்றால் தமிழகம் மேற்குலக நாகரிகத்துக்கும், மொழி கலப்புக்கும், சினிமா, தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு என்பதற்கும், மறுபக்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்கள், வியாபாரம், உயர்பதவிகள், மத்தியபாதுகாப்பு படைகள், ஆட்சிக்கூட்டணி, கல்வி திட்டங்கள் மொழி கலவை, புராணகதைகள், வழிபாட்டு முறைகள் என்று வடநாட்டவர்களின் முழுகட்டுப்பாட்டில் என்றோ கையைமீறி போய்விட்ட தமிழகம் இனிஒருபோதும் மீண்டு வராது. சும்மா கூட்டங்களில் மட்டும் தமிழ் தமிழர் என்று முழங்கும்போது கைதட்டல்கள் வரும் விசில்கள் பறக்கும் ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக ஒருபோதும் மாறாது, அது சாத்தியமாக இருந்தால் கருணாநிதி நிரந்தர முதல்வராக இருந்திருப்பார், சீமானும் எப்போதோ முதல்வராகியிருப்பார்.
  11. ஒழுங்குபடுத்துதலில் ஏதேனும் குழறுபடி ஏற்பட்டிருக்கலாம்.
  12. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  13. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  14. அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. #avustreliya# #social media# https://thinakkural.lk/article/312800
  15. எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர். கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்­துள்­ளனர். குறிப்­பாக குரு­நாகல் யுகத்­தின்­போது அர­ச­னா­கவும் குராசான் மன்­னரின் கதையும் இருக்­கி­றது. இருப்­பினும் பிரித்­தா­னியர் 1833 இல் அறி­மு­கப்­ப­டுத்­திய கோல்­புறூக் அர­சியல் யாப்பின் படி ஆறு நிர்­வாக உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். இதில் இலங்கை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர். இலங்கை முஸ்­லிம்­களின் மறு­ம­லர்ச்­சியின் தந்­தை­யான எம்.சி.சித்­தி­லெப்பை போன்­றோரின் போராட்­டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்­புறூக் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு பிர­தி­நி­தித்­துவம் எட்­டப்பட்டது. இதன்­போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூ­பன சபையின் உத்­தி­யோகப்பற்­றற்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார். 1910 ஆம் ஆண்டு குரு­மக்­கலம் யாப்­பிலும் 1921 தற்­கா­லிக மெனிங் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்­டது. எனினும், 1924 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மனிங் டெவொன்­சயர் அர­சியல் சீர்­தி­ருத்தம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை மூன்­றாக உறுதி செய்­தது. இவ்­வாறே 1931 இல் டொனமூர் சீர்­தி­ருத்தம் முன்­வைத்த நிர்­வாக முறையில் மந்­திரி சபையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இருந்­தது. இத­னி­டையே, 1947 சோல்­பரி யாப்பு, சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான அமைச்­ச­ர­வையில் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­து­வந்­துள்­ளனர். எந்­த­வித அழுத்­தங்­களும் இன்றி நாட்டின் இன பல்­வ­கை­மையை கருத்­திற்­கொண்டு ஒவ்­வொரு அர­சாங்­கமும் நாட்டின் நிர்­வா­கத்­து­றையின் பங்­கு­தா­ரர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­யொன்றை உள்­ளீர்க்கும் நடை­முறை இருந்து வந்­துள்­ளது. எனினும், முதன் முறை­யாக இலங்கை சோச­லிச ஜன­நா­யக குடி­ய­ரசின் பத்­தா­வது பொதுத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்டின் ஒன்­ப­தா­வது ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட 22 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், தேசிய மக்கள் சக்­தியை 61 வீதத்­திற்கும் அதி­க­மான வாக்குப் பலத்­துடன் மூன்றில் இரண்டு பாரா­ளு­மன்ற ஆச­னத்தைப் பெற்று வலு­வான ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்கு பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை பல்­வேறு வகை­யிலும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. வாக்­க­ளித்த, வாக்­க­ளிக்­காத, ஆத­ர­வ­ளித்த, ஆத­ர­வ­ளிக்­காத மக்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்கும் நிலையில் அர­சாங்கம் இதற்கு பதி­ல­ளிக்கும் விதம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சிம்­மா­சன உரை­யின்­போது தனது உரையின் ஆரம்­பத்­தி­லேயே இன­வாதம், மத­வாதம் பற்­றி­யெல்லாம் பேசி­யி­ருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்­கிய அமைச்­ச­ரவை நிய­மனம் குறித்து முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கத்தான் இந்த பதிலை குறிப்­பிட்­டாரா என்ற கேள்­வியும் எழுந்­தது. இதை­விட கடந்த வார இறு­தியில் அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு சென்ற வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­திடம் இது விட­ய­மாக முஸ்­லிம்கள் நேர­டி­யாக கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்­டு­மென கேட்­கா­தீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்­ச­ராக இருந்­த­போது, முஸ்லிம் பாட­சாலை மாண­வி­க­ளுக்கு ஹிஜாப் அணி­வ­தற்­கான துணியை வழங்க வேண்­டு­மென அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்தேன். நான் சிங்­கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்­லவே?அம்­பா­றையில் எங்­க­ளுக்கு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­க­வில்லை. ஆனால் நாங்கள் ஆதம்­பா­வாவை தேசி­யப்­பட்­டி­யலில் நிய­மித்தோம்.மேல்­மா­காண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்­ச­ர­வையில் இலை­யென்று, அந்த விட­யத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்டாம்” என குறிப்­பிட்­டி­ருந்தார். இது இப்­ப­டி­யி­ருக்க கடந்த திங்­க­ளன்று சபா­நா­யகர் அசோக்க ரன்­வல அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்­வாக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­தி­ருந்தார். இதன்­போது, நாட்டில் சகல இன மக்­களும் தங்கள் மத, கலா­சார அடை­யா­ளங்­களை பேணி வாழும் உரிமை பெற்­றுள்­ளனர். ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் பாரா­ளு­மன்ற அக்­கி­ரா­சன உரையை மேற்­கோ­ளிட்டு, நாட்டில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும். இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை தூண்டி மக்­களை பிரிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தினார். எனினும், அவர் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­ப­டுத்­தப்­ப­டாமை குறித்து எந்த கருத்­தையும் நேர­டி­யாக குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை. இத­னி­டையே, இது­வி­ட­ய­மாக நேற்­றுமுன் தினம் செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் நலிந்த ஜய­திஸ்­ஸ­வினால் சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டது. ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி­யினால் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நிதி இல்­லாமை தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரிடம் நேர­டி­யாக கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்­லது சாதி அடிப்­ப­டையில் அமைச்­ச­ர­வையை அமைக்­க­வில்லை. அமைச்சு அதி­கா­ரங்­களை கையாள்­வதில் மிகவும் திற­மை­யான நபர்­களை நாங்கள் தேர்ந்­தெ­டுத்தோம். மேல் மாகாண ஆளு­ந­ராக முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பிரதி சபா­நா­யகர், பிரதி அமைச்சர் போன்ற பத­வி­களை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் வகிக்­கின்­றனர். மேலும், முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் ஒருவர் தேசியப்பட்­டியல் மூலம் நிய­மிக்­கப்­பட்டார். குறிப்­பிட்ட இனங்கள், மதங்கள் அல்­லது சாதிகள் அன்றி ஒட்­டு­மொத்த இலங்கை தேசத்­துக்கும் சேவை செய்­வ­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்” என்றார். அத்­துடன், தற்­போ­தைய நிலை­மையை இனம் அல்­லது மதத்தின் கண்­ணோட்­டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்­றி­ணைந்த இலங்கை தேசம் என்ற தொலை­நோக்கு பார்­வை­யுடன் புதிய அர­சாங்­கத்­தையும் அமைச்­ச­ர­வை­யையும் நாங்கள் நிறு­வி­யுள்ளோம். இந்த அணு­கு­மு­றை­யா­னது பிரச்­சி­னை­களை மிகவும் திறம்­பட கையாள்­வ­தற்கு எமக்கு இட­ம­ளிக்கும்” என்றும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தாரம் மற்றும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ கூறினார். இங்கு அமைச்­சர்­க­ளான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜய­திஸ்ஸ ஆகியோர் ஒரே மாதி­ரி­யான பதில்­க­ளையே குறிப்­பிட்­டுள்­ளனர். எனவே, இந்த விவ­கா­ரத்­திற்கு இப்­ப­டித்தான் பதி­ல­ளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்­தி­யினால் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்ற வினா எழு­கி­றது. இத­னி­டையே, மிகவும் தகு­தி­யு­டைய அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்­குத்தான் அமைச்சுப் பத­வி­களும் பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் அமைச்­சு­களின் செய­லாளர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­கினர். இவர்­களில் ஒருவர் மாத்­திரம் பிர­தி­ய­மைச்சுப் பத­விக்கு தகு­தி­யா­ன­வ­ராக இருந்­துள்ளார். அத்­தோடு, பிரதி சபா­நா­யகர் பத­வியே இன்­னொரு முஸ்லிம் பிர­தி­நி­தியின் தகு­திக்கு பொருத்­த­மா­ன­தாக இருந்­துள்­ளது. எனினும், இலங்கை நிர்­வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதி­கா­ரிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இம்­முறை பொதுத் தேர்தல் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முற்­றிலும் மாறு­பட்­ட­தாக அமைந்­தது. இந்த மாற்­றத்தை விரும்­பியே பெரும்­பா­லான முஸ்லிம் மக்­களும் தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். இந்­நி­லையில், அவர்கள் பாராம்­ப­ரி­ய­மாக ஆத­ரித்து வந்த ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது அந்த கட்­சி­யி­லி­ருந்து பிரிந்த ஐக்­கிய மக்கள் சக்­தி­யையும் முஸ்­லிம்­ கட்­சி­க­ளையும் விட்டு வெளி­யேறி புதிய அர­சியல் பாதையை தேர்ந்­தெ­டுத்து தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். ஜனா­தி­பதி அநுர மீதான நம்­பிக்கை மற்றும் முஸ்லிம் கட்­சிகள் மீதான அதி­ருப்­தி­யினால் மக்கள் இந்த தீர்­மா­னத்­திற்கு தள்­ளப்­பட்­டனர். மோச­மான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டு­களை பிழை என்று கருதி தமது பாதையை மாற்­றிக்­கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது. முஸ்­லிம்கள் மத்­தியில் நன்­ம­திப்பை பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொட­ர்ந்தும் தக்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர முஸ்லிம் சமூ­கத்தை அதி­ருப்­திக்­குள்­ளாக்கும் தீர்­மா­னங்­களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18149
  16. அடிச்சவுடன் அரைமணித்தியாலத்திலை நிற்கிற அமைச்சர் அந்த இடத்தில் நின்றிருக்க வேணுமே.. அதை படமெடுத்து விற்றுப்பிழைக்கும் கூட்டம் பத்து நிமிசத்தில் நின்றிருக்குமே..
  17. அஞ்சு தரம் கேட்டாலும் என்ன பெயராக மாற்றவேண்டும் என்று சொல்லுமட்டும் மாற்றமாட்டார்கள். ஒரு பெயரை நீங்கள்தான் முன்மொழியவேண்டும்😀
  18. அநுர அலையில் சேரமான், பாலசிங்கம் பிரபாகரன், போலித் துவாரகா அடிபட்டுப் போனார்கள். காணொளியை வெளியிடுவார் என்று சொல்லியுள்ளார். ஆனால் யூடியுப்பர்கள் காலத்தில் இவர்களின் சலசலப்பு எவருக்கும் கேட்கவில்லை. 11:50 இல் தோன்றுகின்றார். சண்டையா நடக்கின்றது, சமாதானச் செய்தி அனுப்ப? யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரவின் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சாதாரணமாக உலவுகின்றார். மக்கள் குறைகளைக் கேட்கின்றார். சேரமானின் துவாரகா புரஜெக்ட் பல்லிளித்து நிற்கின்றது.
  19. சட்டம் நீதி எல்லோருக்கும் சமன் என்கிறார்கள். பார்க்கலாம்.
  20. அப்பிடி என்றால்... சுத்துமாத்து சுமந்திரனை, எட்டு நாளைக்கு... மூத்திர சந்துக்குள் கொண்டு போய் வைத்து அடிப்போம்.
  21. ஒரு ஷாட் அடிச்சா தெரியும் உறுதியோ ? தடுமாறுதோ? என்று சும்மா பகிடிக்கு 😄😄
  22. நன்று,நன்றி... இதுதான் மேற்குநாடுகள், புலம்பெயர் அமைப்புகளைப்பார்த்து யோசிக்க வைக்கிறது.பிரபாகரக் கோட்டுபாடு இளையோரிடையே ஆழப்பதிந்து ஆக்ரோசமாக எழுந்துவிடுமோ என்ற ஆய்வுகளைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். யேர்மனியத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்கள் உரியவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிந்துகொண்டேன். யேர்மனியிலும் சில இளையோரது பற்றை அவதானிக்கும்போது, அதிசயமாக இருக்கிறது. காணவில்லை.பேசவில்லை.பழகவில்லை.ஆனால் தலைவர்மீது அளவிடமுடியாத பற்று. பிரபாகரம் அழிவற்றது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. அனுரவோடு சேர்ந்து அமுக்காவிட்டால்…வெகுவிரைவில் வெளியே வரும். அவர் இந்த விடயத்தில் கொடுத்த விளக்கத்தை நீங்கள் நம்புகிறீர்களா? தலைவர் வந்ததும் சேர்த காசை தருவோம் என புலம்பெயர் கள்ளர் சொன்னது போன்றதே அவரின் விளக்கம். கிளிநொச்சியில் குறித்த நபருக்கு பார் லைசன்ஸ் கொடுக்கும் படி சிறி அரசுக்கு அளுத்தம் கொடுத்தார். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். ———- ஒரு மாவீரரின் தாயை அவமதிக்கவில்லை… ஒழுங்குபடுத்தியதில் தவறு… சரி விசயம் வெளி வந்ததும் அவர் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்க வேண்டாமா? ஒரு விளக்கேத்துவதில் செயல்திறனை காட்ட முடியவில்லை…. இவர் எல்லாம் சமஸ்டி வாங்கி….🤣
  24. அரசினது பிரதிப்பேச்சாளரது குத்துக்கறணத்தை எமது மாக்கள் பார்க்க வேண்டும். இன்னும் வரும். ஏதோ இடதுசாரிகள், எமது துன்பங்களைப் புரிந்துகொண்டவர்கள்...... என்று சொன்னார்கள். ஆனால், நடப்பது நம்பமுடியாததாக இருக்கப்போகிறது என்பதை இவரது கூற்று உறுதிசெய்கிறது.
  25. வணக்கம் சகோ சிறியரில் எனக்கு பொதுவேலைகள் மற்றும் தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் இந்த சாராயக்கடை விடயத்தை தொடர்ந்து நீங்கள் இங்கே சிறியருக்கு எதிராக பலமாக தொடர்ந்து பாவிக்கிறீர்கள். உங்களிடம் அந்த அளவுக்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை என்ன என்று எங்களுக்கும் தெரியத் தரலாமே.
  26. தோல்வியை அரசியல் ஓய்வாக கருதவில்லை
  27. சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.
  28. அகவை வணக்கத்தை அழகாக கொண்டாடியிருக்கின்றார்கள் . .........! நன்றி நொச்சி ........!
  29. திருகோணமலை மூத்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர் 12/04/2003 இ-வ: இராசையா தம்பிராஜா, ராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி, சாரதா ஸ்ரீஸ்கந்தராஜா, வி.சங்கரலிங்கம், சித்தி அமரசிங்கம் மற்றும் த.பத்மநாதன்
  30. இந்த போதை பொருள் கடத்தல்காரருக்கு ஈரானில் பொது இடத்தில் வைத்து மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும். அது சரியென நான் நினைக்கின்றேன். 😎
  31. சும்மா அறிக்கைகளை விடக்கூடாது. அண்மைக்கால உலக காலநிலை சீரழிவுகள் மிக மோசமாகவே உள்ளது. சகல வசதிகளிலும் உள்ள நாடுகளிலும் மோசமான அழிவுகளே உள்ளது. அந்த நாடுகளும் அழிவுகளை தாங்க முடியாமல் தவிக்கின்றன.
  32. இவை வந்து என்.பி.பி ..எம்பிமாரையும்,அமைச்சரையும் அடிக்கடி பெயர் சொல்லி,அவையட முகத்தையும் காட்டினால்..ஊரிலை வெள்ளம் நிற்குதோ இல்லையோ...இவைவீட்டிலை வெள்ளம் நிறைந்து ..வழியும் ..என்ன விசயம் கதைக்கிறன் என்றே விளங்காத ஆட்களுக்கு...ஊடக வெளிச்சம்...தேவையா
  33. அறிக்கை விட்டால் மட்டும் போதது களத்தில் இறங்கி வேலை செய்து படம் போட வேண்டும்....பாதிக்கப்பட்ட மக்களின் தோளில் கை போட்டு அரவணத்து பேச வேண்டும் அவர்களிடம் தேனீர் பருக வேண்டும் ...ஜெ.வி.பியினர் இப்படி செயல் படுகின்றனர்...முக்கியமாக அமைச்சர் சந்திரசேகரம்... வல்வெட்டித்துறை மக்கள் சொல்கின்றனர் ...நீங்கள் தான் எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக வந்து தோளில் கை போட்டு கதைத்த முதலாவது அமைச்சர் என்று...
  34. வாழ்க்கையில் யார் முன்னேறிய வர்கள் ! ஒரு பெரிய கம்பெனி முன் ஒருவர் டீ கடை வைத்திருந்தார். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து டீ சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து டீ கேனில் டீ விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் குடித்த டீ'க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... ஆகவே "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது" THANKS - kongu guru prakash
  35. குடிகாரர், சைக்கிள் ஓடுவதற்கான வீதி. 😂
  36. அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும். சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.
  37. எம். கே. சிவாஜிலிங்கம், அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல. நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார். ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார். இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார். இதுதான் அவரது அடையாளம். ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!! சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்! Mathusuthan Kumarasamy
  38. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 03 ["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"] வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப் பட்ட , சங்க கால தமிழ் பெண்களின் / தாயின் வீரம் செறிந்த பண்பினை முன்பு பார்த்தோம். மானமா? உயிரா? என்று கேட்டால், மானமே பெரிது என்று வாழ்ந்த வாழ்க்கை தான் புறநானூறு வாழ்க்கை. "மயிர் நீப்பின் உயர் வாழாக் கவரி மான்" தான் அந்த வீரர்கள். இதைத் தான் வள்ளுவரும் தனது குறள் 969 இல் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்." என்று கூறுகிறார். அதாவது நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம் நம்முடைய செயல்கள் ,குணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். அப்படித்தான் அன்று வீர மரணம் அடையும் போக்கு சங்க கால வீரனிடம் இருந்தது. இந்த வலிமையை வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா என்கிறார் பாரதியார். "கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.. களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள்பிள்ளை! " ["அச்சம் என்பது மடமையடா" / மன்னாதி மன்னன் (1960)] என்கிறான் கண்ணதாசன். தாயின் கருவில் உண்டாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள் உருவாகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த வீரத் தமிழ் தாய் அத்துடன் நிற்கவில்லை. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிவித்து இன்புற்றனர் என்கிறது சங்க பாடல்கள். அதுமட்டும் அல்ல, கம்பராமாயணம் / பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட : "தாலி ஐம்படை தழுவு மார்பிடை மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப் பாலின் ஊட்டுவார் செங் கை ... " என்று கூறுகிறது. அதாவது ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva - உமிழ்நீர்; எச்சில்] தம் குழந்தைகளுக்குத் பாலமுதைப் புகட்டும் தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது. அது என்ன ஐம்படைத் தாலி? வேல் [அல்லது சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து மகிழ்கிறார்கள். அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற வற்றை ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள். இப்படி வீரத்தை ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த பண்பினை காண்கிறோம். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார் “ இப்படி கண்ணதாசன், அதே பாடலின் இறுதியில் கூறுகிறான். அப்படி மக்கள் மனதிலும் சரித்திரத்திலும் நிற்கின்ற, அவர்கள் வளர்த்த சில மாவீரர்களை இனி பார்ப்போம். மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற சங்ககாலப் பாண்டிய நாட்டினை கி.பி. 205 முதல் 215 வரை ஆட்சி செய்த ஒரு மன்னன். இவரின் தந்தை இளமையிலேயே இறந்ததும், இவனது தாயும் அந்த கால மரபுப்படி உடன்கட்டை ஏறியதாலும் [கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது], சிறு வயதிலேயே முடிசூட்டப் பட்டவன் இவன். புறநானூறு 77 இவனை, இந்த பாலகனை, "கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, ...................................................................... ......................................... தார் பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே; " என்று பாடுகிறது. அதாவது சலங்கை கழற்றப் பட்ட கால்களில் ஒளி பொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான் [கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக் கழலைத் தான்.] ......... ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) ஐம்படைத் தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்று தான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! என்று கூறுகிறது. நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். இதை அறிந்த இவன்: “இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப் படைகளையும் குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப் பேசியவர்கள் ஆவார்கள். அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும் படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப் பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்த வில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப் படுவேனாக! மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடா தொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, ‘இல்லை யென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...” எனக் தனது புறநானூறு பாடல் 72 மூலம் வஞ்சினம் கொட்டி, உடனே படைகளோடு போருக்குப் புறப் பட்டான். அத்தனை அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட இந்த, நெடுஞ்செழியன் அனைவரையும் தோற் கடித்தான் என்பது வரலாறு. இவனது இந்த பெருமையை புலவர் மாங்குடி கிழாராகிய மருதனார் இப்படி கூறுகிறார்: மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு / தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக் கொண்டு செல்வது போல, உன் யானைகள் சென்று போர்க் களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்து ஊடுருவ, அவ்வாறு களம் அகலச் செய்த பரந்த இடத்தில், அதாவது அந்த யானை சென்ற அகன்ற பாதையில், ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க் களத்தைக் கலக்கி, அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடி [கிரீடம்] யணிந்த தலைகளை அடுப்பாகவும்,அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலை பெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ் வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு, ஆகியவற்றையுடைய அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள். உன்னோடு மாறு பட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள் தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால், அவர்களும் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி சொர்க்கம் போவார்கள் என்று உரைக்கப்படுகிறது. இனி அந்த பாடலை பார்ப்போம். "நளிகட லிருங்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறுசென்று களனகற்றவும் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய வெஃகேந்தி அரைசுபட வமருழக்கி உரைசெல முரசுவௌவி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே." [புறநானூறு பாடல் 26] மேலும், புறநானூறு 19, & 25, அகநானூறு 36, 175 & 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்படி பெருமை பெற்ற, சிறப்பு பெற்ற இவனின் தந்தை, வெற்றிவேற் செழியன் ஆகும். இவன், கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்த, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனின் தம்பி ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 04 - "மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்" தொடரும்.
  39. நாங்கள்... யாழ்ப்பாண மண்ணையே தெரிந்திராத, பியதாசவுக்கு வாக்களிக்கும் போது... அவர்கள் ஹேமசந்திரவுக்கு வாக்களிக்கட்டுமன். 😂 பழிக்குப் பழி... வாங்கிட்டோமில்ல. ஆங்... 🤣
  40. டக்ளசுக்கு உள்ள கெட்டித்தனம்…. பிள்ளையானிடம் இல்லை. 😂 இப்ப நாங்கள், பிரதேசவாதம் கதைக்கின்றோம் என்று ஒரு குரூப் வரும். எஸ்கேப்பு. 🤣
  41. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 02 [வீரத் தாய்] சங்க காலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப் படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிறுவியுள்ளன. உதாரணமாக புறநானூறு 76 "ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; .............................................. பசும்பூட் செழியன் 10 பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!" என்று அடித்து சொல்கிறது. அதாவது 'ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டு போவதும் இயல்பு தான். .... என்றாலும் பசும் பொன்னாலான அணி கலன்களை அணிந்த நெடுஞ் செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க் களத்தில் அவர்களை அழித்ததை முன்பு கண்டதில்லை' என்று தலையாலங்கானப் போரில் பாண்டியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் பாடுகிறார். இப்படி பல சான்றுகள் புறக் கவிதைகளில் மேலே கூறியவாறு ஏராளமாக உள்ளன, என்றாலும் கவி பொன்முடியின் ஒரு கவிதை முதன்மையான ஆதாரம் எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது. "வாளைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றியுடன் மீள்வது ஆண்மகனின் கடமை" என்கிறது! சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 பேர். அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். 16 புறநூனூற்றுப் புலவர்கள். அவர்கள் 59 பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் ஒரு புலவர் தான் இந்த பொன்முடியார். இவர் ஒரு தாய். "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என முடியும் (புறநானூறு 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை ஆகும். ஆண் மகனைப் பெறுவதில் சங்க காலச் சமூகத்துக் கிருந்த மகிழ்ச்சியையும் அதை விட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம். சங்க காலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன் என்ற பொருளே பொதுவாக இருந்தது. ஒரு நாள், மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு “உன் மகன் எங்கே உள்ளான்” என்று நீ என்னை கேட்கிறாய். இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது. என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன், அந்த புலி, இப்ப குகையை விட்டு வெளியே போய் விட்டது. அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க் களத்தில் இருப்பான். அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார். இதோ அந்த வீரத் தாயின் பாடல்: "சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல்அளை போல, ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே" [புறநானூறு 86] பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க் களத்திற்கு அனுப்பினாள். அவன் வீரச் சாவடைந்தான். நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள். அவனும் களம் பட்டான். ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப் [சிறப்பை, பெருமையை] படம் பிடித்துக் காட்டுகிறார். "கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்க என விடுமே." [புறநானூறு 279] களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந் தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள். “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள். கையில் வாளெடுத்தாள். களம் நோக்கிக் கடுகினாள். வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்: மகனைப் பிணமாகக் கண்டாள்: அழுகை பொங்கியது. ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு [போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை [மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும் [நாள்] பெரிது உவந்தனள். இப்படிப் பழந் தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக் [வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார். "நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர் கூற மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக் கொண்ட வாள் அடு படு பிணம் பெயராச் செங்களம் துழவு வோள் சிதைந்து வேறாகிய படு மகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே." [புறநானூறு 278] ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய மகாகவி காளிதாசன், தனது குமார சம்பவத்தில் (7-87) " நீ வீரர்களின் தாயாக விளங்க வேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி)" என்று வாழ்த்துவதாகக் கூறுவதையும், தனது மற்றும் ஒரு நாட்டிய நாடகமான சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் - வீரர்களின் தாயாக [வீரப்ரசவினீ பவ] விளங்குவாயாக என்று சகுந்தலையை வாழ்த்துவதையும் கவனிக்க. அப்படிபட்ட வீரர்களின் நடு கல்லை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். பொதுவாக இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப் படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெரு மதிப்புக் கொடுக்கப் பட்டு வந்தது. சங்க இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப் பற்றிய தாகவே உள்ளதும் குறிப்பிடத் தக்கது. நெடுங்காலம் பிள்ளையில்லா ஒரு குடும்ப பெண், தனது முதுமை பருவத்தில் ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளை பருவம் அடைந்த பொழுது நாட்டில் போர் மூண்டது. தன் முதுமையையும் கருதாது, அந்த தாய், தன் ஒரே மகனை, வாழ்த்து கூறி போருக்கு அனுப்பி வைத்தாள். போரில் அவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். இதை கேள்வியுற்ற அந்த தாய், பிறவி பயனைப் பெற்றவள் போல், பேரின்பம் உற்றாளாம் என்கிறது இன்னும் ஒரு பாடல். "மீன்உண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர், நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே" [புறநானூறு 277] மீன் உண்ணும் கொக்கின் இறகு போன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை என்று அந்த வீரத் தாயை பூங்கண் உத்திரையார் என்ற பெண்பாற் புலவர், அவளின் இந்த வியக்கத்தகு செயல்களைக் கண்டு பாடுகிறார். “ஈன்ற பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டத்தாய்” (குறள்:69) என்கிற திருக்குறளை மேலே நாம் சுட்டிக் காட்டிய புறநானூற்றுப் பாடல்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு தாய் தன் மகன் இறந்தாலும் அவன் சான்றோனாகவும், வீரனாகவும் தான் இறக்க வேண்டும் என்றும், இது அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட உண்மையில் பெரியதாகும் என திருவள்ளுவர், சங்கத் தமிழரின் வாழ்க்கை நெறி முறையை உணர்ந்தே இங்கு வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக் காட்டுகிறார் என்று நம்புகிறேன். மேலும் சங்க காலத்தில் பெண்கள் வீரமானவர்களாகவும் , வீர மகன்களை பெற்ற வீர அன்னையாகவும் இருந்துள்ளனர் என்பதையும் ஆண் குழந்தைகள் வீரத்தின் அடையாளமாக, குறிப்பாக எண்ணப்பட்டது போல, அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் முக்கியமெனவும் பதிவு செய்யப் பட்டுள்ளதையும் காண்கிறோம். புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிக மிகத் தெளிவாக, சில பாடல்களில் தரப் பட்டுள்ளதும் எம் கவனத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் தன்பால் ஈர்ப்பதும் அதன் பெருமையே ஆகும் !. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 - "மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்" தொடரும்.
  42. நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம். இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது. 'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே ! இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம். அறம் சொல்ல வந்தவர், "தூவுவது அன்பாக இருப்பின் விலகுவது வம்பாக இருக்கும்" என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது. "எவரும் புத்தன் இல்லை ஏனெனில் புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது. "பிறந்தது ஆண் குழந்தை எனில் அன்று மட்டும் மகிழ்ச்சி பிறந்தது பெண் குழந்தை எனில் வாழும் வரை மகிழ்ச்சி" என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு. இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக, "எத்தனை எத்தனை முறை படித்தாலும் புதுப்புது சிந்தனை தோன்றும்" என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே ! "என்னைத் தேடினால் நான் இல்லை ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்" என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார். "என்னைத் தேடாதே உன்னுள் நான் வாழ்கிறேன்" என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும், "வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்" "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே" எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று. பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள் "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" (குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்). அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில், "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்) எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை. பக்கம் 52 ல் "பற்றியது பற்றிய பின் பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை .................................................... ..................................................... ஈவது தாளாண்மை என்று பின் சென்றாள் அப்பேதை" எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350; அதிகாரம்: துறவு) என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது. இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு. மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார். பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு. இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது. நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் : https://www.facebook.com/share/p/17dPe1MQr4/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.