Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்16Points3054Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19122Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்6Points1487Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/25/25 in all areas
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
6 points"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]6 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
6 pointsஈழத்தை வைத்து தமிழகத்தில் என்ன அரசியல் எப்படிப் பண்ணலாம்?? சும்மா வாயில் வந்தததை எல்லாம் பிதற்றக் கூடாது. அதையும் மீறிச் சீமான் செய்கின்றார் என்றால் வாழ்த்தப்பட வேண்டியவர் தான். ஈழத்தில் போர் உச்சத்தை அடையும்போது தமிழகத்தில் போராட்டங்கள் செய்து தமிழர் அழிப்பை நிறுத்தப் புலிகள் முயன்றார்கள். அதற்காகத் தான் தமிழகத்தில் இருந்து பிரபல்யமான இயக்குனர்கள், அரசியல்வாதிகளை வன்னிக்கு அழைத்தனர். வந்தவர்களில் சீமான் மட்டுமே உண்மையாகவும், நேர்மையாகவும் இன்று வரை நிற்கின்றார். ஒரு வேளை தமிழக மக்கள் அன்று ஆதரவுப் போராட்டங்களை விரிவுபடுத்தியிருந்தால் இந்தளவு ழப்பு நடந்திருக்காது. காசா மக்களுக்கு இஸ்லாமிய மக்கள் செய்த போராட்டங்களால் எப்படி அழிவு குறைக்கப்பட்டபோதோ அது போல எமக்கும் நடந்திருக்கும்.6 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
5 pointsஒரு கை தட்டி ஓசை வராது. சீமான் வரும் வரை ஈழத்தமிழர் நாம் தமிழக அரசியலில் தலையிடாமல்தான் இருந்தோம். சீமான் வந்து பெரியார் vs பிரபாகரன் என ஒரு பொய்சமன்பாட்டை நிறுவும் போது… திமுக, அதிமுக, திக, இன்னும் பல கோடி அனுதாபிகள் கொண்ட அமைபுக்களை எமக்கு எதிராக நிறுத்தும் போது… 600 வருடமாக தமிழக்கதில் இருப்பவனை பார்த்து நீ அயலான், ஆனால் ஈழத்தமிழன் என் உறவு என சிண்டு முடியும் போது… நாம் சும்மா இருக்க முடியாது. கூடாது. அப்படி இருப்பின்… தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் நிரந்தர பகைவராக்கும் றோ/ஆர் எஸ் எஸ் சதிக்கு நாமும் துணைபோகிறோம் என்பதே அர்த்தம்.5 points
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
@வீரப் பையன்26 பையன் சார், முதலில், தமிழில் விடாமல் எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍. இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதேயில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இப்படியான களங்கள் அப்படித்தான் இருக்கும். இங்கு வந்து சில பந்திகளை தொடர்ச்சியாக எழுதுவது அல்லது வாசிப்பது ஒரு இலகுவான செயல் அல்ல. பரவலான வாசிப்பும், பல்வேறு அனுபவங்களும், கிரகிக்கும் தன்மையும், முயற்சியும் இருந்தால் மட்டுமே அது முடியும். இன்று உலகில் தமிழ் சமூகம் வாசிப்பதில் மிகவும் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம். தமிழில் வரும் உலகத்தரமான புத்தகங்கள், கட்டுரைகளைக் கூட ஒரு 200 பேர்கள் வாசித்தாலே, இருக்கும் ஒன்பது கோடித் தமிழர்களில், அது ஒரு பெரிய விடயம். இங்கு களத்தில் 200 பேர்கள் ஒன்றைப் பார்வையிடுகின்றார்கள் என்றால் அதையிட்டு அதிகம் கவலையில்லாமல் நாங்கள் முன்னே சென்று கொண்டிருக்கலாம். எங்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் ஒரு விதிவிலக்கு. பொதுவான சமூக விதிகள் அந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது. கேளிக்கைகள் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவில் வந்து கொண்டேயிருக்கும். ஆனால் அவற்றின் இறுதி முடிவு பெரும் சலிப்பாகவே முடியும். இந்தப் பொருளற்ற கேளிக்கைகளால் வாழ்வே ஒரு நாள் சலிப்பாக மாறும். ஒவ்வொரு தனிமனிதனும் இதிலிருந்து வெளியே வருவது அவரவர் பொறுப்பே. புதைமணலில் சிக்கி போய்க் கொண்டிருப்பது போல போய்க் கொண்டிருக்கும் சமூகம். இப்படியான களங்கள், உரையாடல்கள் சில மனிதர்களையாவது மீட்டெடுக்கும் ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். ஒருவர் தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சி இது என்றும் சொல்லலாம். அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று சொல்லப்படுவதில் வீடு என்பது விடுதலை. அறிவதால் வரும் விடுதலை அது. ஒன்றை தெளிவாக அறிந்தவுடன் அதிலிருந்து விடுதலை கிடைத்துவிடுகின்றது. கேளிக்கைகளால் விடுதலை வருவதில்லை. வாசிப்பதாலும், உரையாடல்களாலும் அது கிடைக்கக்கூடும். அடுத்த தலைமுறையின் இன்றைய உலகம் வேறு. எனக்கு இரு பிள்ளைகள் - மகன் 28 வயது, மகள் 25 வயது (எனது வயது 56). அவர்களின் உலகமும், என்னுடைய உலகமும் வேறுவேறானவை. ஆனால், 'எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தார்......................' என்பது போல, பின்னொரு காலத்தில் என் பிள்ளைகளின் தேடுதல்களும், உங்கள் பிள்ளைகளின் தேடுதல்களும் எங்களுடயது போன்றே வரப் போகின்றது. இவர்கள் இன்று யாழ் களங்கள் போன்றவற்றுக்கு வரமாட்டார்கள். ஆனால், பின்னர் ஒன்றைத் தேடுவார்கள். நானே அப்படித் தானே யாழ் களத்திற்கு வந்தேன்..............🤣. நிர்வாகம் அதன் பொறுப்பில் இருக்கட்டும், நாங்கள் எங்களின் பொறுப்பில் இருப்போம். சில சொற்கள், தனிமனித தாக்குதல்கள், சீண்டல்களைத் தவிர்த்து விட்டால், இங்கே நிர்வாகம் ஒருவரையும் ஒன்றும் சொல்வதில்லையே. போராளிகளையும், போரட்டத்தையும் இழிவு செய்யும் கருத்துகளை தவிர்த்து, வேறு எந்தக் கருத்தையும் நாங்கள் முன்வைக்க இங்கு தடை ஏதும் இல்லையே. எதையும் இழிவு செய்யாமல், நாகரிகமாக உரையாடுவதும் ஒரு விடுதலையே.........................🙏.4 points
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன். மிக இலகுவாக பல்வேறு காணொளிகளையும் வேறு இடங்களில், தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மிக இலகுவாக பார்த்துக் கொள்ளலாம் அல்லவா, அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஒருவர் ஓயாமல் தன்னுடைய கருத்துகளாக வேறு மனிதர்களின் காணொளிகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் ஒரு கருத்தாளர் என்றில்லாமல் ஒரு பிரச்சாரகர் அல்லது கழகப் பேச்சாளர் போன்று ஆகின்றார். ஒரு பிரச்சாரத்தையோ அல்லது கொள்கை பரப்பையோ ஒரு தடவைக்கு மேல் அந்தக் கட்சியைச் சாராதவர்கள் கேட்கத் தேவையில்லை. அவர் சொல்ல வருவதில் எதுவும் புதுமையாகவோ அல்லது சிந்தனையை வளர்ப்பதாக தொடர்ந்தும் இருக்கமாட்டாது. இது ஒரு ரசிகனின் மனநிலை. தேசியம், திராவிடம் என்று மட்டும் இல்லை, இதே போக்கு அமெரிக்கா, ரஷ்யா, விளையாட்டுகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள், ஆளுமைகள் போன்ற பல விடயங்களிலும் பலரால் பொதுவெளிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிறிய காலப்போக்கிலேயே அவர்களுடன் விவாதிப்பதிற்கு எதுவும் கிடையாது என்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு ரசிகனின் முன்னாலும் ஒரு இரும்புத்திரை உள்ளது. அதைத் தாண்டி எதுவும் அந்த ரசிகனை அடைவதேயில்லை. அவர்கள் சார்ந்த காணொளிகள் மட்டுமே அவர்களின் ஊடகம் என்றாகிவிடுகின்றது. உதாரணமாக, திமுக கழக பேச்சாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களை எத்தனை தடவைகள் கேட்க வேண்டும்.......... ஒரு தடவை மட்டும் போதுமல்லவா. அதையே தான் இந்த காணொளிகளைப் பற்றியும் நான் சொல்லுகின்றேன். காணொளிகளுக்கும், வாசிப்புக்கும் இருக்கும் இடைவெளி மலையும், மடுவும் போன்றது என்று கூட சொல்லமுடியாது. இரண்டும் தொடர்பு அற்றவை. காணொளிகள் அவற்றைப் பார்ப்பவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே சுய சிந்தனை எதுவுமின்றி இழுத்துச் செல்லும். ஒரு சினிமா போல. வாசிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வாசிப்பவரும், வாசிக்கப்படுவதும் சேர்ந்தே பொருளை உண்டாக்குகின்றன. வரிகளுக்கிடையில் அனுபவங்கள் வந்து போகும். சிந்தனைகள் சிதறும். காட்சி ஊடகம் என்பது ஓடும் ஆறு போல, அதன் திசையில் நிற்காமல் ஓடி அது முடிந்துவிடும். வாசிப்பவற்றை தொகுத்து சுருக்கமாக எழுதுவதோ அல்லது சொல்லுவதோ இன்னும் ஒரு படி. புரிதல் இல்லாமல் தொகுத்து எழுதவே முடியாது. இவை தான் ஒரு கருத்துக்களத்தின் அடிப்படைகளாக இருக்கவேண்டும். காணொளிகளும் ரசிக மனநிலையும் நல்ல காத்திரமான கருத்தாடலுக்கு ஏற்றவை அல்ல, அவை நல்ல கருத்தாடலுக்கு துணை புரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, இன்றைய பெரும்பான்மையினர் என்ன செய்கின்றனர் என்பது நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இன்றைய பெரும்பான்மையினர் நுகர்வோர் போன்றோர். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் உலகம் இருக்கின்றது. நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். டிக்டாக் அதிகம் பார்க்காத, ஃபேஸ்புக் அவ்வளவாக உபயோகிக்காத சிலரும் இளைய தலைமுறையில் இருப்பார்கள். அடுத்து வரும் உலகத்தை அவர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் தியாகம் தான். ஆனால் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். டிக்டாக் வீடியோ ஒன்றைத் தன்னும் பார்க்க வேண்டிய தேவையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இதுவரை வரவில்லை. அதனால் தானோ என்னவோ, எழுத ஆரம்பித்தால் அது நீளம் நீளமாகவே வருகின்றது...................🤣.4 points
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
3 pointsகாலமாற்றம் கடுகளவும் மாறுவதில்லை அது தடம்மாறாது ஓடுகிறது. மனிதன் மாறுகிறான் அதனால் மனிதமும் மாறுகிறது. அளவற்ற ஆசையும், அகங்காரமும் இதயத்தை நஞ்சாக்குகிறது. அதன் புதிய கண்டுபிடிப்புகள் இயற்கையைச் சீண்டுகிறது. இதற்கு இறப்புத்தான் முடிவல்ல, இயற்கையோடு இணைந்து இதயத்தில் அன்பை மலரவைக்க முனைவதும் முடிவாகும்.3 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
3 pointsநெடுமாறன் ஐயாவுக்கு வயது நன்றாக முதிர்ந்துவிட்டது. நான் சிறுவனாக இருந்தபோதே விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் அல்லது புளட், ஈரோஸின் பிரசுரங்கள் மூலம் கொலம்பிய FARC கெரில்லாப் போராட்டத்தில் பெண்போராளிகள் இருந்ததை முதன்முதலாக அறிந்துகொண்டேன். இது முற்றிலும் தவறு. அப்படி ஒரு ஆணையும் இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். ஒரு போராளி இன்னோர் போராளியை அல்லது பொதுமக்களில் ஒருவரை திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தால் திருமணத்திற்கான குழு இரு பக்கமும் பேசி திருமணத்தை நடாத்திவைக்கும். கட்டாயப்படுத்துவதும், அழுத்தம் கொடுப்பதும் கிடையாது என்பதுதான் எனது அறிதல்.3 points
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
ஈழத்தமிழர்கள் பற்றிய தமிழநாட்டுத் தமிழரின் பார்வையை சீமானுக்கு முன், பின் என்று பிரிக்கலாம். இலங்கைத் தமிழரின் படிப்பறிவு, தமிழ் உச்சரிப்பு, தமிழ் பண்பாட்டியலில் எங்களவரின் பங்களிப்பு, வயது குறைந்தவர்களையும் பண்புடன் அழைக்கும் பண்பு, போராட்டம், தியாகம், எமது உணவு முறை என்று தமிழ் நாட்டு மக்களின், அரசியல் தலைவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வர்கள் நாம். பிரபாகரனின் அரசியலை நிராகரித்தவர்கள் கூட அவரை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தனர். ஆனால் இன்று நிலைமை அதோகதி! கேவலமான எங்கள் தலைமுறையில் ஒரு பகுதி வக்கிர மனமும், வெறியும், தீவிர வலது சாரி நிலைப்பாட்டையும் கொண்ட சீமான் என்னும் மனிதனை எப்பொழுது தன் மீட்பனாக கொண்டதோ அன்றே எம் மீதான படித்த பண்பட்ட தமிழ் நாட்டு மக்களின் பார்வை மாறி விட்டது. நாங்கள் சிங்கள அரசால் போரில் தோற்கடிக்கப்பட்டோம் தான், ஆனால் மானத்தை இழக்கவில்லை. அதை சொந்த தொப்புள்க் கொடி உறவுகளிடமே இழக்கவைத்த பெருமை சீமானையும் அவரின் ஈழத்தமிழ் விசிறிகளையே சாரும். ஈழத்தமிழராக நாம் செய்த தவறு வீட்டில் பெற்ற தாயையே கெட்ட வார்த்தையில் ஏசும் கூட்டத்தை, நன்னெறி அற்ற கூட்டத்தை, ஊரில் சந்தியில் ரவுடித்தனம் செய்த கூட்டத்தை வெளிநாட்டுக்கு எடுத்து அனுப்பி அவர்களைப் பெரிய ஆள் ஆக்கி விட்டது தான்.3 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
3 pointsஇது எம்மவர்களுக்கும் சேர்த்துத்தான் கூறப்பட்டிருக்கிறது. தமிழக அரசியலில் தலையிடாதிருப்பதே எமக்குக் கெளரவமானதும் பயன் தரக்கூடியதுமாகும்.3 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
3 pointsஉண்மை தான் .......தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இந்தியா மத்திய அரசின் அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக சட்டசபையில் அமைச்சர் வெளிநாடுகளில் இந்தியா அரசின். தூதுவர் இப்படி பல பதவிகள் வகித்து. மிகப்பெரும் பணக்காரராக வந்து இருக்க முடியும் தேவையில்லாமல் பிரபாகரனை பலதடவைகள் காப்பற்றி உதவிகளை செய்து புலிகளை வளர்த்து விட்டதில். மிக முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவர் பிரபாகரனை பிடித்து கொடுத்து இருக்கலாம் இந்தியா படைகளிடம். அல்லது ரொவிடம். இன்று சீமான் ஒவ்வொரு கூட்டங்களுக்கும். பிரபாகரன் படத்துடன். திரியும். வாய்ப்புகள் இருந்து இருக்காது..... சீமான் வன்னிக்கு. போய் படமெடுத்து இருக்க முடியாது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று இருந்து இருக்காது சீமான் தலைவர் ஆக. முடிந்து இருக்காது இலங்கை தமிழர்கள் சீமானை தலைவர் என்று அழைத்து இருக்க முடியாது கயல்விழி மனைவி ஆகி இருக்க மாட்டார் தொடரும் 🙏🙏🙏. வணக்கம்…3 points
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
இது சரியான தகவல் தான்! குப்பனும் சுப்பனும் (மேலே ஏகலைவன் வந்த வாக்கில் அமரர் ஒரிசா பாலுவின் கண்டு பிடிப்புகள் பற்றி வீடியோ போட்டிருப்பது போல😎) யூரியூபில் கொட்டுவது தான் இனி நூல்களுக்கு இணையான ஊடகம்! இது போன்ற மாற்றங்களால் எதையும் சொந்தமாகத் தேடிப் பார்க்க வேண்டுமென நினைக்காத ஒரு சோம்பேறி, முட்டாள் தலைமுறையொன்று உருவாகிறது. இந்த மாற்றம் தான் தமிழ் நாட்டில் சீமான் போன்றோரையும், மேற்கில் ட்ரம்ப் தரவழிகளையும் பிரபல தலைவர்களாக வர வைக்கிறது!3 points
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா ஒரு விசித்திர நாடு.ஒரே நேரத்தில் ஒரு பக்கம் புயல் அழிவு. இன்னொரு பக்கம் காட்டுத்தீ அழிவு. அடுத்த பக்கம் பனிப்புயல் அழிவு. விசித்திர நாடல்ல.அதிசய நாடு. 😂3 points
-
பாட்டுக் கதைகள்
2 pointsபாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும். பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம். கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை. அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன். அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை. ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.2 points
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳2 points
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
டிசே இளங்கோவின் முகநூலில் இருந்து.. இரவி (கனடா) இலங்கைக்குச் சென்றபோது காலமாகிவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியாது இருக்கின்றது. ஒரு காலத்தில் நான், இரவி, போல் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம். அந்தக்காலங்களில் நாம் அடிக்கடி கோப்பிக்கடைகளில் சந்திப்பதோடு, பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்தும் கொண்டிருந்தோம். இவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதால் எப்போதும் என்னில் தனிப்பட்ட கவனமெடுத்து என்னைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலங்களில் என் தனிப்பட்ட வாழ்வின் தளம்பல்கள் பற்றிப் பகிரும் நண்பர்களாக இவர்களே இருந்தார்கள். பின்னர், காலத்தின் நீட்சியில் சில காரணங்களால் எமக்குள் இடைவெளிகள் ஏற்பட்டபோது, அதையும் வாழ்வின் இயல்பென எடுத்து நகரவும் செய்திருந்தோம். இதையெழுதும் இந்தக் கணத்திலும் இரவி நம்மிடையே இல்லையென்பதை மனம் மறுதலிக்கவே செய்கிறது. கீழே வருவது இரவியின் பிறந்தநாள் ஒன்றின்போது எழுதியது. ------------------------------------------------------------------ இரவியை அவரது பெயரால் தனிததுச் சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியாது. செல்வத்தை 'காலம்' செல்வம் என்று அழைப்பது போல, இரவியை 'வைகறை' இரவியெனச் சொன்னால்தான் அவர் யாரென்று பலருக்கு விளங்கும். 'வைகறை' கனடாவிலிருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகை. எனக்கு 'வைகறை'யுடனும், இரவியுடனும் உறவு எப்படி மலர்ந்தென்பதே சற்றுச் சுவாரசியமானது. நமது சினிமாக் காதல்களில் முதலில் சண்டைபிடித்து பிறகு காதல் வருவதுபோல, எனக்கும் இலக்கியம்/அரசியல் சார்ந்து வந்த அநேக நட்புக்கள் முரணிலிருந்து தொடங்கி பிறகுதான் நட்பாக முகிழ்ந்திருக்கின்றன. அப்படித்தான் எனக்கும் 'வைகறை'யோடான உறவும் தொடங்கியது. எனது கதையொன்றை ('கதைசொல்லியும், Gang Fights'ம்?) 'வைகறை' தாமாகவே தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தபோதும், கதையின் தொடர்ச்சி இன்னொரு பக்கத்தில் தொடர்வதைச் சரியாகக் குறிப்பிடாததில் சற்றுக் கோபம் வந்து (பத்திரிகையில் இருந்த தொடர்பிலக்கத்திற்கு) அழைத்தேன். கவனயீனம் காரணமாக பிழையாகிவிட்டது என மன்னிப்பைக் கோரியபடிதான் இரவி முதன்முதலாகப் பேசியது ஞாபகம். பிறகு, வைகறையில் தொடர்ந்து எழுதும்படியும், காரியாலயத்திற்கு வந்து சந்திக்கும்படியும் அவர் அழைப்பு விடுத்ததும் கடந்த காலம். கனடாவில் பத்திரிகை நடாத்தி இலாபமீட்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் 'வைகறை' நின்றபோது இரவிக்கு நிறையக் கடன்கள் இருந்தது என்பது தெரியும். அதுவல்ல முக்கியம், வைகறை வந்துகொண்டிருந்த காலத்தில் அரசியல் காரணங்களால் வைகறை மிரட்டப்பட்டிருந்ததும், சிலர் தம்மை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததும், காரின் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டதுமென பல்வேறு அழுத்தங்களினூடாகவே பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. ஒருமுறை இங்கிருக்கும் ஒரு தமிழ் வைத்தியர் மீது வேற்றின நோயாளியினால் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு செய்யப்பட்டபோது, மற்றப் பத்திரிகைகள் எல்லாம் அதைப் பிரசுரிக்கத் தயங்கி பின்வாங்கியபோது, எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சம்பவத்தை 'வைகறை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தச் செயதி பிரசுரிக்கப்பட்ட காரணத்தாலேயே பல்வேறு இடங்களில் 'வைகறை' கடைகளிலிருந்து பலவந்தமாக தூக்கியெறியப்பட்டுமிட்டிருக்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல, வேறு சில சந்தர்ப்பங்களிலும் பிரதிகள் கடைகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் இரவி தனிப்பட்ட பேச்சிலே எம்மோடு உரையாடியிருக்கின்றாரேயன்றி 'வைகறை'யில் பொதுப்படையாக இந்தச் சம்பவங்கள் எதையும் எழுதியதுமில்லை. உண்மையில், இந்த நிதானமே வைகறையை அதை நடத்தியவர்களின் அரசியல் பிடிக்காதபோதும், பல்வேறு மாற்றுக் கருத்துடையவர்களையும் வாசிக்க வைத்திருக்கின்றது. அதை நேரடியாக நானும் நண்பர்களும் பல்வேறிடங்களில் கேட்டிருக்கின்றோம்/ கேள்விப்பட்டுமிருக்கின்றோம். ஒரு பத்திரிகையை நடத்துவது மட்டுமில்லை, அதில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் அறம் சார்ந்த விடயங்களிலும் 'வைகறை' மிகுந்த கவனம் காட்டியிருக்கின்றது. எத்தனையோ நல்ல கட்டுரைகளை பிரசுரிக்க விரும்பியும், எமது போராட்டம் சார்ந்து 'பாஸிசம்' போன்ற (அதன் அர்த்தத்தை எவ்வகையில் பாவிப்பதென்ற கிஞ்சித்தும் அக்கறையில்லாத பலரே நம் அரசியல் கருத்தாளர்கள் என்பது வேறுவிடயம்) சொற்கள் பாவிக்கப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரிக்காமலே தவிர்த்துமிருக்கின்றார். இயன்றளவு நமது கருத்துக்களை, நம்மோடு முரண்படுபவர்களையும் பொறுமையாக வாசிக்க வைக்கவேண்டுமென வைகறை நிறைய பாடுபட்டிருக்கின்றது. 'வைகறை'யின் இந்த நிதானமான அணுகுமுறையை நானிங்கே வந்த வேறெந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை. ஆகவேதான் பல்வேறுபட்ட அரசியல்/இலக்கிய கருத்துக்களையுடைய எல்லோராலும் தயக்கமின்றி வைகறையில் எழுத முடிந்திருக்கின்றது. எழுதப்பட்ட ஆசிரியத்துவம் (editorial) எல்லாம் மிகவும் கவனம் எடுத்தே எழுதப்பட்டிருக்கினறன. அவ்வாறிருந்தும் சிலவேளைகளில் ஆசிரியத்துவம் தவறாக விளங்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் இன்னும் கவனமாக நாம் அதை எழுதியிருக்கலாமென இரவி சொல்லிக் கவலைப்பட்டதும் எனக்கு நினைவிலுண்டு. வைகறை சார்ந்து இரண்டு தனிப்பட்ட என் அனுபவங்களை நான் சொல்லியாக வேண்டும். வைகறையில் கட்டுரைகள், பத்திகள் போல சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்குமென தனிப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருமுறையும் யாரேனும் கவிஞரொருவரின் நான்கைந்து கவிதைகளோடு அவர்களைப் பற்றிய அறிமுகம் வந்துகொண்டிருக்கும். அவ்வாறு என் கவிதைகள் வெளிவநத்போது, அதற்குப் பொறுப்பாயிருந்தவர் - என் வலைப்பதிவிலிருந்து- வெட்டி ஒட்டியபோது சில கவிதைகள் மாறி வெட்டி ஒட்டப்பட்டு பிரசுரமாயிருந்தன. பத்திரிகையைக் கடையில் எடுத்தவுடனேயே இவ்வாறு வந்திருப்பதைக் கண்டு - வழமை போல இரவிக்கு தொலைபேசியில் அழைத்து- இப்படி கவனமில்லாது பிரசுரிப்பதென்றால் அதைவிடப் பிரசுரிக்காமலே இருந்தாலே நல்லது, அதுவே கவிதைக்கு தரும் மரியாதையாக இருக்குமென தாறுமாறாய்ப் பேசியதும் நினைவிலிருக்கிறது. அடுத்த வாரம் கவிதைகள் உரிய முறையில் -தவறுக்கு மன்னிப்புக் கேட்டு - பிரசுரமாயிருந்தன. அது போல பாலஸ்தீனம் பற்றிய என் கட்டுரையில் இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டும் தொனியிருப்பது அவ்வளவு சரியில்லை, இஸ்ரேலிய அரசு என மாற்றட்டுமா என - ஒரு வார்த்தையாயினும்- என்னிடம் அனுமதி கேட்டு மாற்றியிருந்த பத்திரிகைப் பண்பு அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. இவ்வாறான காரணங்களே இது எங்கள் 'வைகறை' என உணரச் செய்திருக்கின்றது போலும். ஒருகட்டத்தில் 'வைகறை' நின்றபோது, உடனே எதற்காகவது எதிர்வினை எழுதிப் பிரசுரிப்பதற்கு எங்களுக்கென ஒரு பத்திரிகை இல்லையேயென பல தடவைகள் கவலைப்பட்டதுண்டு. அதேபோல 'வைகறை' நின்றபின், வேறு சில பத்திரிகைகளிலிருந்து எழுத அழைப்பு வந்தபோதும், அவை சார்ந்த கருத்துநிலைக்காக மட்டுமின்றி, வைகறை போல எதையும் எழுதுவதற்கு பூரண சுதந்திரம் தரப்படுமா என்கின்ற தயக்கங்களினாலும் பிற பத்திரிகைகளில் எழுத அவ்வளவாய் விரும்பியதுமில்லை. இரவியைப் பற்றியெழுத வந்து இறுதியில் 'வைகறை'யைப் பற்றியே நிறைய எழுதவேண்டியதாகிவிட்டது. இரவி ஏதோ ஒரு இயக்கத்தில் சேரப்போய் பிறகு வேறு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பதும், நாமெல்லாம் நீங்கள் அப்படிச் சொன்னாலும், அந்த இயக்கத்திற்காய் உளவு பார்க்கத்தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீர்கள் என அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. இரவி இயக்கத்திலிருந்த நண்பர்களோடு முல்லைத்தீவுக் காட்டிற்குள் புகையில்லாது சமைத்த கதை எங்களிடையே பிரசித்தமானது. சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் ஏற்கனவே முடிந்தவற்றை மீளக் கொண்டுவருதல் என்பது கடினமானது. எனினும் 'வைகறை' ஏதேனும் ஒருவடிவத்தில் மீள வந்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். 'வைகறை'யில் எழுதியவன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு. *************2 points
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
இன்னுமொரு திருவள்ளுவர் மண்டபம் மாவிட்ட புரத்தில் அடுத்த மாதம் திறக்கின்றனர் அதற்கு பிரதம விருந்தினர் டெல்லி உச்சநீதிமன்ற நீதியரசர் ....என்ன தான் நடக்கின்றது வட மாகாணத்தில் கடைசியில பதில் தலிவர் சொல்லி இந்தியா பெயர் மாற்றிவிட்டினம் என புரூடா விடுயினம் ...இவையின்ட அறிக்கைதான் கடைசியில் வந்தது ..இன்னும் 13 திருத்தத்தை அமுல் படுத்த முடியவில்லை அதில வேற பெயரை மாற்றி போட்டினமாம் என்று கொக்கரிப்பு ..2 points
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது போல் உக்ரேன் யுத்தம் நிறுத்தப்படணும். மத்திய கிழக்கில் அமைதி நிலவணும். அதுதான் உலக பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கும் 🙏2 points
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
2 points
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துகள் உடையவர்களிடம் இருந்து வந்தாலும் கூட, மிகவும் மதிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கருத்துகள். அதே வேளையில், காணொளிகள் தான் கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படைகளும், ஊடகங்களும் என்றால், அதை இலகுவாகக் கடந்து போய்விடலாம். பாரிசாலனும், ஒரிசா பாலுவும், மன்னர் மன்னனும் தான் தமிழ் ஆய்வாளர்கள் என்றால், அது நாங்கள் ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னோடிகளுக்கு மட்டும் இல்லை, தமிழ் இனத்திற்கே செய்யும் நிந்தனை.2 points
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சரி…சரி… பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி, சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣. எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
👍............... இப்படித்தான் சொல்லுகின்றார்கள், கிருபன். ஆனால், ஏதோ பிரச்சனையாகி விட்டதே என்று எல்லா வாடிக்கையாளர்களும் கதறிக் கொண்டிருக்கும் போது, என்னவென்று விழுந்தடித்து போய் பார்த்தால், சில சர்வர்களில் சிபியு 90 வீதத்திற்கும் மேலே போய் கடைசி மூச்சை அவை விட்டுக் கொண்டிருக்கும். இது என்ன கோலம் என்று உள்ளே தோண்டிக் கொண்டு போனல், மூல காரணம் அநேகமாக ஒரு long running SQL/Database query ஆக இருக்கும். 28 வருடங்களாக இங்கு வேலை செய்கின்றேன், எந்த தொழில்நுட்பம் வந்தும் இது மட்டும் மாறவே இல்லை...............1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் படித்த Basic AI (இலவசமாகக் கிடையாது) இல் இருந்து: with the rate of technology evolution increasing, we are entering an era where you will want to acquire new skills every few years, and eventually every year, to remain relevant.1 point
-
யோஷித ராஜபக்ஷ கைது
1 point
-
யோஷித ராஜபக்ஷ கைது
1 pointஎதுவுமே நடக்காது புத்தரே...நாங்கள் ஊரிலை ஒரு விளையாட்டு விளையாடுவம்..ஒரு ஆளுக்கு கண்ணைக்கட்டிபோட்டு..மற்ற்வை சுத்த நிக்க..கண்கட்டினவர் ..ஆச்சிப் பூச்சி..தண்ணிதா என்று சத்தம் ம்போட்டபடி மற்றவரைத் தொடவருவது...அந்த விளையாட்டுத்தான் நடக்குது...தெற்கிலை உப்பு தேங்காய் ,அரிசி இல்லை ...உதயசூரியன் கடற்கரைக்கு பட்டன் ஏற்ற மாசக்கடைசியிலை வாறாராம்..☺️1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மோகனே திண்ணை மூடியதற்கான காரணத்தை தெளிவாக கூறிய பின்னும் சிலர் கடுப்பில் இருக்கின்றார்கள் எனில், அப்படியே இருக்கச் சொல்லுங்கள். 😁1 point
-
காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து - அமைச்சரவை தீர்மானம்
அவசரப்பட்டு தலைவருக்கு நன்றி சொல்லி போட்டேனோ🤔? நன்றி வாபஸ்🤣1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அட, சரியா சொன்னியள். திண்ணை மூடீன கடுப்பீல தான், ஒருவருசமா வரேல்ல!! 🤗1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- யோஷித ராஜபக்ஷ கைது
1 point1.ஆதாரம் இருந்தாலும் ஜே வி.பி ஆட்சி முடிந்து மகிந்த குடும்பம் திரும்ப ஆட்சிக்கு வந்தால் .... 2. ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை காட்டிக்கொடுப்பானா? 3. அரசியல் என்றால் ஒரு கண் துடைப்பு (மக்களுக்கு)இருக்கத்தானே வேண்டும்.1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
உங்களின் அருமையான விளக்கத்துக்கு நன்றி குருநாதா🙏👍............. யாழில் எங்களை எல்லாம் இணைத்தது எங்கட போராட்டம் அதற்க்கு அடுத்து எங்கட மொழி பற்றின் மூலம் யாழில் இணைந்தோம் எம்மவர்கள் வெற்றிக்கு மேல் அடையும் போது சந்தோஷத்தில் துள்ளி குதிச்சோம் 2009ம் ஆண்டு எங்களை கண்ணீரின் ஆழ்த்தி விட்டு அவர்கள் இறைவன் அடி சென்று விட்டினம்.............. போர் சூழல் காரனமாக தமிழீழத்தில் படிச்ச நாட்கள் மிக மிக குறைவு...............2008களில் நான் யாழில் இணைந்த போது அப்ப இருந்த உறவுகளோடு என்னால் சிறு விவாதம் கூட செய்ய முடியாது காரனம் எழுத்து பிழை விடுவேன் என்பதால்..............சகோதரர் நெடுங்காலபோவான் , புத்தன் மாமா , இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசிப்பேன்...............இப்ப தொழிநுட்பம் வளந்து விட்டது ஆனால் நான் கூக்கில் மொழி பெயர்ப்பை பயன் படுத்துவது கிடையாது என்ர மூளைய கசக்கி தான் தமிழில் எழுதுவது...............நான் இருக்கும் இடத்தில் தமிழர்கள் யாரும் இல்லை 24மணித்தியாலமும் டெனிஸ் மொழி தான்................... நான் நினைத்தேன் உங்களுக்கு 52வயது என்று...............இங்கை பிறந்த பிள்ளைகள் சிலர் நல்லா தமிழில் எழுதுகினம் என்ர ஒன்ட விட்ட அக்காட மகன்கள் மகள் , தலைவரின் அண்ணாவின் மகன் கார்த்திக்கிட்ட தான் தமிழ் படிச்சவை மருமோள் என்னை விட நல்லா தமிழில் எழுதுவா , ஆனால் ஊரில் பிறந்து வளந்த எனது நண்பர்களுக்கு சுத்தமாய் தமிழ் எழுதத் தெரியாது👎😞 நானும் யாழ்களம் வராட்டி என்ர நண்பர்கள் லிஸ்ரில் நானும் இருந்து இருப்பேன்😁...................நிர்வாகத்தை குறை சொல்லுவது எனது நோக்கம் கிடையாது நான் மோகன் அண்ணாவுக்கு வெளிப்படையாய் எழுதி நான் மோகன் அண்ணா நான் தொட்டு மற்ற உறவுகள் யாழில் இணைந்த போது உந்த எச்சரிக்கை புள்ளி இல்லை அப்ப எல்லாம் சிரிச்ச படி எழுதினவர்கள் இப்போது உந்த எச்சரிக்கை புள்ளி சில உறவுகளுக்கு மன உளைச்சல கொடுக்கும் நீக்கி விடச் சொல்லி............. இப்ப யாழில் எழுதும் உறவுகளில் ஆக வயது குறைந்த உறவுகள் யார் என்று பார்த்தால் ஏராளன் அண்ணா வாதவூரன் அண்ணா எரிமலை கோஷான் மற்றும் நான் எங்களை விட வயது குறைந்த உறவுகளும் இருக்க கூடும்...............ஆனால் யாழில் அதிகம் 50வயதில் இருந்து 75வயதுக்குள் எழுதும் உறவுகள் தான் அதிகம்.................... நேரங்கள் இருக்கும் போது பழைய உறவுகள் எழுதின நல்ல ஆக்கங்களை தேடி வாசிப்பேன் 2009க்கு முதல் நல்ல நல்ல எழுத்தாளர்கள் இருந்தவை பின்னைய காலங்களில் அவர்களை காண வில்லை.............இப்ப தொழில்நுட்பம் வளந்து விட்டது தானே சிலது அவர்களுக்கு பிடிச்சதுக்கை எழுவினம் என நினைக்கிறேன்👍..................1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
1 point- 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
வாசிக்கும் பொழுது நாம் எல்லாம் இங்கு எந்த விதத்திலும் பாதுகாப்பாக இல்லை என்றே உண்மை கண் முன் வந்து போகின்றது1 point- "கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
விஜி அண்ணின்னு யாரோ பெரியவாள் வீடியோ ரிலீசாம் கூட்டம் அங்க அலைமோதுது. நீங்க புள்ளினம், வல்லினம், வண்ணத்து பூச்சி பத்தி பேசுறீங்க... தொடரட்டும் இந்த மென்மை ✍️1 point- "கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
எல்லாரும் டிக்கொக்கில் மினெக்கெடுகின்றார்கள்! @Danklas வன்னிமைந்தன் என்ற ஒரு டிக்டொக் பிரகிரதியின் லைவ் சனலில் போய் விடுப்புப் பார்ப்பதாகச் சொன்னார்😜 இன்னும் பலர் பல விடுப்புராணிகள் தூஷணத்தில் அரசியல் தொடக்கம், தொடைகளின் தடிப்பும், மாரின் அளவும், தமிழ் ஆண்களின் ஆண்மையின் எழுச்சியும் பற்றி அலம்புவதை, அவர்களைத் திட்டித் திட்டியே, பொழுதுபோக்காகக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 😜இப்படி அழுகல் மூளையோடு🧠 பலர் இருப்பதால்தான் யாழுக்கு வியூஸ் குறைவு. அவர்களை உள்ளே இழுப்பதற்கு விடுப்புராணிகளையும், இரவுராணிகளையும் கொண்டுவரவேண்டும்! அப்படி ஒரு நிலை தேவையா!🤮1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சரி குருநாதா யாழ்களத்தின் பார்வையாளர்கள் இப்போது உள்ள சூழலில் எத்தனை பேர் ஒரு செய்தியை ஏராளன் அண்ணாவோ அல்லது மற்ற உறவுகளோ இணைத்தால் வியூஸ் அதிகம் வருதில்லையே குறைந்தது 200 வியூஸ் கூட தாண்ட மாட்டுது....................இதை நிர்வாகமெ சில வருடத்துக்கு முதல் ஒத்து கொண்டார்கள் பார்வையாளர்கள் யாழில் குறைந்து விட்டினம் என எழுதி இருந்தவை யாழில் எழுதும் பலர் 50 வயதில் இருந்து 75வயதுக்கு உள் பட்டவை தான் அதிகம்...............இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் யாழில் இனி வரும் காலங்களில் எழுதுவினமா என எனக்கு தெரியாது..............நான் 2008களில் யாழில் இணைந்த போது எனது அண்ணாக்கு எனது நண்பனுக்கு யாழை அறிமுகம் செய்து வைச்சுஇருந்தேன் அவர்கள் வந்தார்கள் ஒன்று இரண்டு கருத்தை எழுதி போட்டு அப்படியே விட்டு விட்டார்கள் எங்கட மொழி அழியாம இருந்தால் மகிழ்ச்சி ஊரில் பிறந்து வெளி நாட்டில் வாழும் பலருக்கு தமிழில் எழுதத் தெரியாது................கூட டெனிஸ் மொழியில் தான் எழுதுவினம்................. நான் எழுதும் தமிழை பார்த்து பலர் என்னை கேலியும் கிண்டலும் செய்தார்கள் யாழில் பல அவமானங்ள் பட்டு எப்வும் சரியோ பிழையோ தமிழில் தான் எழுதனும் என எனக்கு நான் எடுத்த முடிவு.................நான் டென்மார்க் வந்த காலம் தொட்டு இங்கத்தை வெள்ளை இனத்தவர்களுடன் இருந்து தான் வளந்தேன் தமிழே இல்லாத உலகில் வாழ்ந்து கொண்டு யாழில் வந்து தான் தமிழே எழுத பழகினேன்........நன்றி யாழ்🙏👍.........................1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
மிகவும் சரியாகச் சுட்டியுள்ளமைக்கு நன்றி. இதுகூட ஒருவகைக் கருத்தியல் மடைமாற்றமாகவே நோக்க வேண்டியுள்ளது. நீங்கள் சுட்டியுள்ள விடயங்களை விட கடந்த காலத்தில் சீமான் மற்றும் ரஸ்யா - உக்ரேன் விடயஙகள் யாழ்க்களத்திலே முதன்மை விடயங்களாகி தமிழீழத்தவரது விடயங்கள் விவாதங்களில் இருந்து மறைந்துவிட்டநிலை தெரிகிறது. நாமே நகர முடியாது நிற்கையில் தமிழக அரசியல் எம்மை நோக்கி வரரதென்பதைப் பட்டுறிவாகக்கொண்ட தமிழீழத்தவர்கள் தமது பொன்னான நேரத்தை செலவழித்துப் பயனேதும் வருமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- யோஷித ராஜபக்ஷ கைது
1 pointஇந்த பையனுக்கு 2006 இல் 17 அல்லது 18 வயதுதான் இருந்திருக்கும். ராஜபக்ச பிள்ளைகள் இந்த இளம் வயதிலேயே பணமோசடி, நில கொள்ளை செய்வதில் ஜாம்பவான்களாக இருந்திருக்கிறார்கள். இந்த சில்லறைகளில் காலத்தை கடத்தி மக்களை ஏமாற்றாமல் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த குடும்பத்தினர் செய்த பாரிய குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் சட்டமா அதிபரிடம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா_1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
இங்கு அதிகம் பேசப்பட வேண்டியதாக கருதுவது போர் குற்றங்கள், அதற்கு முதன்மையாக இருந்த ராஜபக்சே சகாக்கள் மற்றும் ராணுவம் பற்றி, மற்றும் இன்றைய மக்கள் நிலை , எதிர்கால திட்டம் பற்றி. ஆனால் மற்றவற்றை பேசி இவைகள் மறைக்கப்படுகிறது இல்லை மறக்கடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை மற்ற தலைவர்களை கொச்சையாக பேசும் போது எதிர் தரப்பில் தலைவர்களை கொச்சையாக பேசுகிறார்கள். இது எல்லா பக்கத்திலும் நடக்கிறு ஆனால் இது சிறு கூட்டம் தான். ஆனால் இது தொடர்ந்து கொண்டேயிருந்தால் இரு தரப்புக்கும் நன்மை பயக்காது. இன்றைய மக்களின் தேவைகளை பேசாவிட்டால் வடகிழக்கில் சமீபத்திய தேர்தல் முடிவுகளே தொடரும்1 point- பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
1 pointமுதலில் இங்கு என்ன கருத்து சொல்ல வந்தேன் என்பதை கூட புரிந்து கொள்ள திரணி அற்ற ஆள் அந்தளவுக்கு உங்களுக்கு புலிகள் மீதும் தமிழ் தேசியம் மீதும் அவ்வளவு வெறுப்பு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் காக்கா எச்சம் போடுவது போல் புலிகளை வசை பாடுவதுதான் உங்களின் முழு நேர தொழில் யாழில் கொஞ்சமாவது மற்றவர் எழுதும் கருத்துக்களை கிரகித்து அதற்க்கு தகுந்த பதில் கருத்து எழுத திரும்பவும் பள்ளி சென்று படித்து அதன்பின் யாழில் கருத்து எழுதுங்க .1 point- அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
மேலும் பல செயலதிசயங்களும் வரவிருப்பதாக புதிய அரசினது விசிறிகள் காத்திருக்கிறார்கள்.1 point- ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
காரியம் கைகூடும் நாள் செல்லும். தபால்பெட்டியை பார்த்துக் கொண்டே இருங்கள்.1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நெருப்பு துண்டு. இந்த நிலை வரப்போகிறது என யாழில் எத்தனையோ முறை தொண்டைதண்ணி வத்த கத்தி இருக்கிறேன். கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின் மீதுள்ள நியாயமான கோவத்தால், நாதக ஆதரவு 8% தவிர மிகுதி அனைவர்ரையும் பகையாளிகள் ஆக்கி உள்ளோம்.1 point- ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
carbon tax,” said Ford.மாத முடிவாகிற படியால் இந்த மாதம் $200 இப்படி ஒரு தொகை வர வாய்ப்பில்லை.அடுத்த மாத நடுப் பகுதிக்குள் அனுப்பி வைக்கிறார்களோ தெரியவில்லை.1 point- வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
1 pointஇதற்குப் பின்னர் மின்னம்பலம் இன்னொரு செய்தியை மேலதிக விபரங்களுடன் வெளியிட்டிருக்கின்றனர்: https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/ கீழடியும், வேங்கைவயலும் அருகருகே இருக்கும் இடங்கள்............... இந்த சம்பவத்தால், இந்தப் பிரதேசம் எங்களின் தொன்மை என்று பெருமைப்படுவதா அல்லது இது என்ன கொடுமை என்று கூனிக்குறுகுவதா என்ற வினா கேட்கப்பட்டிருந்தது. இது பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட சாதியக் கொடுமை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. ஆனால் இறுதியில் பட்டியலினத்தவர்களே இதைச் செய்தார்கள் என்று முடிவு விசாரணையில் வந்திருக்கின்றது................😌.1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சிறப்பான ஆரோக்கியமான வீட்டு சமையல் இருக்க Junk food ஐ சாப்பிடுவது போன்றது இது. நீங்கள் தனி ஒருவனாக நின்று இலங்கை படைகளையே கதறவிடும் வல்லமை உடையவர். எங்கள் கெட்டகாலம் சின்ன பிள்ளையாகவே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்🤣1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சில வரலாற்று ஆசிரியர்களுக்கு தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்று குறிப்பிட்டதனால் விருது கொடுக்கப்பட்டது. மன்னர் மன்னன் தமிழ் வரலாறு என்று சொன்னதனால் விருது பறிக்கப்பட்டது.1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையன் நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. பல திரிகளில் மற்றும் திண்ணையில் உங்களுடனான பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சீமான் போன்று கருத்து அதன் சாரம் எங்கோ இருக்க உப்புச் சப்பில்லாமல் எதையோ புலம்பிக்கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். முட்டாள்த்தனமான அல்லது லூசுத்தனமான கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் பையனாக இருக்காமல் கொஞ்சம் வளர்ந்து இளந்தாரியாக முயற்சியுங்கள். அதற்கான முற்கூட்டிய வாழ்த்துக்கள்!1 point- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
தமிழ்நாட்டில் இப்ப உருவாகவில்லை.. அப்பவே உருவாக்கி கற்காலத்திலேயே அவர்களை வைத்திருக்கிறார்கள் திராவிடக்கட்சிகள்.. திமுகாவும் அதைத்தான் செய்கிறது.. அதிமுகாவும் அதைத்தான் செய்கிறது.. சீமான் றம்ப் செய்வதாவது கொஞ்சம் வசதியான மொபைல் யூஸ்பண்ண தெரிந்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்ட மக்களிடம்.. ஆனால் திமுக அதிமுக போன்றவை குக்கிராமங்களில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை மக்களையும் சேர்த்து தோளில் ஏறி காதில் செய்கிறார்கள்.. அவர்கள் கற்காலத்தில் இருக்கிறமக்கள்.. அதனால் நீங்கள் சீமானை மட்டும் நினைத்து கண்ணீர் வடிப்பது போலி ஆகிவிடும் பார்ப்பவர்களுக்கு.. பொதுவாக கவலைப்படுங்கள்.. அப்படியே சீமானையும் அடித்து உங்கள் கோபத்தையும் தீர்த்துகொள்ளுங்கள்..😂1 point- நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி
1 pointசுகம் பெறட்டும். இந்த நெஞ்சுவலியுடன் பிரிந்திரந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.1 point - யோஷித ராஜபக்ஷ கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.