Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19122
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20012
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/29/25 in all areas

  1. யாழ் களத்திற்கு இது தேவையில்லாத ஆணி. திரும்பத் திரும்ப பெரியார், சீமான், திமுக என்று யாழ் களம் திட்டமிட்டே அதகளப்படுத்தப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடிபடுவார்கள். நாளை சேர்ந்து கொள்வார்கள். அவர்களது அரசியலில் இலங்கைத் தமிழர் கொஞ்சம் தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது.
  2. கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே? அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.
  3. போரின் முடிவில் தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்… நோபல் பரிசும் கிடைத்திருக்கலாம். நாடும் வளம் பெற்றிருக்கும்.
  4. யாழ் களம் போன்ற தமிழ் தேசியத்தை வளர்க்கும் நோக்குடன் இருக்கும் களத்தில் எதைப் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்? தமிழ் தேசியத்தை, இனத்தூய்மை வாதம், அதற்குள் உருமறைத்த சாதிவாதம் என நச்சாக மாற்றும் ஒரு அரசியல் கட்சியின் உண்மை நிலையைச் சுட்டிக் காட்டும் செய்திகள், உண்மை வரலாறு என்பன பகிரப் பட வேண்டும். இதைச் செய்யா விட்டால் ஒரு தமிழக அரசியல் கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் பொய்யான தகவல்கள் ஈழ மக்களிடையே பரப்பப் படும். இத்தகைய பொய்ச் செய்திகளை நம்பி ஈழத் தமிழர்கள் பின் தொடர்ந்தால் எமக்கு நஷ்டம் இருக்கிறது என்பது தெரியாமல் சிலர் "போக்குவரத்துப் பொலிஸ்" வேலை செய்யப் பார்க்கிறார்களா? அல்லது யாழ் களமும் முகநூல் போல "ஹாய், ஹலோ" என்று முகமன் காட்டி விட்டுப் போகும் இடமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
  5. அதே…. ஆனால் இதில் நாம் சங்கடபட எதுவும் இல்லை என்பது என் பார்வை. கேவலமாக நடப்பவர்கள் சீமான் போன்றவர்கள், ஆனால் அந்த கேவலத்தை சுட்டி காட்டுபவர்கள் நாம். நாம் ஏன் சங்கடபட வேண்டும். இமானுவேல் சேகரன் தனக்கு சரி சமானமாக அமர்ந்து பேசி விட்டார் என்பதால்…. 80 களின் சினிமா வில்லன் போல், தன் கூலிப்படையிடம் “ஒரு ப***** பயல் எனக்கு சமனாக இருக்கும் படி செஞ்சுட்டீங்களேடா” என கொலைக்கு ஜாகை காட்டி விட்டு போனவர்தான் முத்துராமலிங்கம். இங்கே கொல்லபட்டவரும், கொலையை தூண்டியவரும் தமிழ் வம்சாவழி சாதியினர். நடவடிக்கை எடுத்தவர், தன் சாதி காரன் என்பதால் சீமான் தலையில் வைத்து ஆடும் காமராசர் (காமராசர் தமிழ் இந்து நாடார், சீமான் மலையாள கிறீஸ்தவ நாடார்) . இன்றைக்கும் இதே முத்துராமலிங்கத்தைதான் தேவர் திருமகனார் என போற்றுகிறார் சீமான். இப்படி தவறு முழுக்க எங்கோ இருக்க, பெரியாரை கொண்டு வந்து இதில் முடிகிறார். இதுகூட, ஈரோடு கிழக்கை அதன் வாக்காளரின் சாதியை மனதில் வைத்தே. தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளும் சாதியை பாவிப்பது உண்மை. ஆனால் இவ்வளவு அப்பட்டமாக, கேவலமாக, சாதி முறுகலை தூண்டும் வகையில் பாவிப்பவர் சீமான் ஒருவரே. இராமதாஸ் கூட எவ்வளவோ மாறி விட்டார். ———-/ இப்படி பட்ட ஜந்துவுக்கு எந்த சாதியினரின் பெரும்பான்மை வாக்கும் கிடைக்காது. ஆனால் இவரை நம்பி மிகுதி எல்லோரிடமும் பகையை வளர்கிறோம் நாம்.
  6. @Justin ஒரு சின்ன அல்ல பெரிய உதவி🙏. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைபெரியாரை எதிர்க்கும்/சீமானை ஆதரிக்கும் படி மாற்றிகொள்ள முடியுமா? பணய கைதிகள் பரிமாற்றம் போல - உங்களை கொடுத்து, யாழில் ஒரு 3/4 பேரை ஒவர் நைட் எனது நிலைப்பாட்டுக்கு மாற்றிகொள்ள விரும்புகிறேன் 🤣.
  7. Downlod பண்ணி பார்த்தேன், இது உண்மையிலேயே சிறப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது, இனி அமெரிக்க கம்பனிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது, செலவைகுறைத்து, இன்னும் சிறப்பான ஒன்றை தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சீனர்கள் தடை வரமுன்னரே நிறைய ஹார்ட்வேர்களை வாங்கி வைத்துள்ளார்கள், அவர்களுடைய ஆராய்ச்சிக்கு ஒருவித தேக்கமும் வரப்போவதில்லை
  8. என்னுடைய சங்கடம் எல்லாம் சாதிப் பெயர்களை சொல்வதிலும், அவற்றை எழுதுவதிலுமே, கோஷான். இந்தப் பிரிவுகள் எங்களையே அழிக்க வந்த கொடும் நோய்கள் மற்றும் அசிங்கங்கள் போல. இவர்களின் நடவடிக்கைகளை தொடராக வரிசைப்படுத்தி, இவர்கள் யார் என்ற உண்மையை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு சங்கடமே இல்லை. அதை நான் என் வழியில் செய்துகொண்டே இருக்கின்றேன். இதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது, ஜஸ்டின். இப்படியான ஒரு களத்தில் இவை நிச்சயம் பகிரப்பட வேண்டியவையே. இவை தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்பட வேண்டியவையே. சைனாவின் டீப்சீக்கைவிட, அமெரிக்க - ரஷ்ய சார்பு வாதங்களை விட, இன்னும் பல இன்னோரன்ன உலக விடயங்களை விட இது மிகவும் கட்டாயமானது.
  9. லிங் தரமுடியாது.. உங்கட அவசரம் விளங்குது ஏனென்டு🤣.. நிழலிக்கு இணையவனுக்கு மோகனுக்கு தெரியும் நான் இனைச்சனா இல்லையா எண்டு.. லிங் எடுத்தாலும் போடவேண்டாம் என்டு கேட்டுக்கொள்கிறேன் நிர்வாகத்தை.. அது எனது மற்ரைய ஜடியில் இருப்பதால் நான் விரும்பவில்லை.. அவ்வளவுதான்.. வேறு காரணங்கள் இல்லை.. மற்ரது அமரதாஸ் விரும்பினால் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் அப்போ அவருக்கு தெரியும்..
  10. கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி... திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார். பிறகு நடந்தவை... “குட் ஈவினிங் குமார் சார்” - இது கேட்கீப்பர். உள்ளே வந்த மனைவி “அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?” குமார் “சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.” பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர் “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?”... குமார் சார் மனைவியிடம்.. “வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….” அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி “என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?” . ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது “என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?... 😳😳😳😳 பின்குறிப்பு: குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு.... 😂 🤣 Paranji Sankar
  11. நீங்கள் இருவர் மாத்திரமல்ல. பலருக்கும் வீட்டில் நிலமை இதுதான். யாழை பூட் மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
  12. நம்பி டவுன் லோடு பண்ணலாமா? சீன தயாரிப்பு… பொறகு கோஷான் குளியல் வீடியோ வந்தால்?🤣
  13. இன்று உண்மையாகவே $200 டொலர்ஸ் தபாலில் வந்திருக்கிறது.
  14. நன்றி கோஷான். நீங்களும், இன்னும் சிலரும் இது சம்பந்தமாக முன்னரும் எழுதியிருப்பீர்கள் என்று தான் நினைத்தேன். முன்னரே நான் சொன்னது போல, யாழை விட்டுப் போகமாட்டேன், ஆனால் இக்கட்டான சமயங்களில் தேவை என்றால் நாளுக்கு நான்கு கவிதைகள் என்ற கணக்கில் எழுதிப் போடுவதாக உள்ளேன்............🤣. முன்னோர்களும் தமிழர்களாகவே இருந்து, இன்றும் அவர்களின் தாய்மொழி தமிழாகவும் இருக்கும் எம் மக்களில் ஒரு பிரிவினரையே தள்ளி வைப்பதை பற்றித் தான் நான் குறிப்பிட்டிருந்தேன், ஓணாண்டியார். கோஷான் மேலே எழுதியிருப்பதும் இதையொட்டியே. தாய்மொழியை வைத்து ஒரு அடையாளம் கொள்வதில் உயர்வு தாழ்வு கிடையவே கிடையாது. பிறப்பால் வரும் எந்த அடையாளத்தாலும் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது.
  15. முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி. இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன். மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன. சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன். ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள். நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே. தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு. அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே. பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன். சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்.
  16. ஒருவரை திட்டமிட்டு இழிவுபடுத்துவது தற்காலிக பின்னடைவை தரலாம் ஆனால் வரலாற்றை திருத்தி விட முடியாது. ஆனால் நாம் யாரை எதிர்த்து பேச வேண்டுமோ, எவரிடமிருந்து நம் உரிமையை பெறவேண்டுமோ அதை செய்யாமல், தவறான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். திராவிடம் தோற்றாலும் தமிழ் தேசியம் தோற்றாலும் அவதிப்படப்போவது தமிழர்கள் தான். காரணம் தமிழ்நாட்டில் திராவிடம் தோற்றால் தமிழ் தேசியம் ஏற்படப்போவதில்லை, இந்திய தேசியமே மேழெம். அதே போல் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
  17. 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா? Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார். Yves Bachmann (Fotos) 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை. பாலமுரளியும் (9) பாலமுருகனும் (10) சகோதரர்கள். சுவிஸ் நாட்டவருக்கு உச்சரிப்பதற்கு இலகுவாக இருப்பதற்காகவே முரளி மற்றும் முகுந்தன் என்று பெயரை சுருக்கிக்கொண்டார்கள். இருவரில் மூத்தவர் முரளி. சிறுவயதிலேயே வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தார். ஒரு முறை அருகிலுள்ள தோட்டவேலை செய்யும் நிறுவனத்திடம் வேலைகேட்டிருக்கிறார், தன்னுடைய சம்பளம் பெற்றோர்களிற்கு உதவியாக இருக்கும் என்றெண்ணி!. இளையவன் முகுந்தன் தன்னைவிட தன்னுடைய அக்காவை தான் பெற்றோர்களிற்கு பிடிக்கும் என்ற தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தான். ஆனால் பெற்றோர்கள் மூன்று பிள்ளைகளையும் உளமார நேசித்தார்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. இந்த இரண்டு சிறுவர்களின் வாழ்வும் சிறுபராயத்துடனே ஒரு சோகமான இரவில் முடிவிற்கு வரப்போவதை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. 02.07.1989ஆம் திகதி கூர் நகரத்தில் ஒரு தீ விபத்தில் -பெரியவர்களாக முன்னரே- அவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த ஓர் இரவு அவர்களை வாழ்விலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. இவர்களுடன் இந்த நாட்டிற்கு பாதுகாப்புத் தேடி வந்த 18 வயதான சக்திவேல் தம்பிராஜா என்ற இளைஞனும், 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி என்பவரும் அன்றைய இரவு கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள். மிரட்டப்பட்ட ஊடகவியலாளர் முரளியினதும் முகுந்தனினதும் கொடூர கொலை மீதான கவனம் எங்களுக்கு தற்செயலாக கிடைத்த தகவல் தான். இந்த கொலைச் சம்பவம் 35 வருடங்களிற்கு முன்னர் நடந்தேறியது. எனவே தான் சுவிஸ் மக்களின் நினைவிலிருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை நினைவூட்டும் எந்த நினைவுச்சின்னமும் அவ்விடத்தில் இல்லை. வரலாற்று ஆசிரியர் Damir Skenderovic உடனான நேர்காணலில் போது அவர் இந்த வழக்கு பற்றி ஒரு சிறிய தகவலை தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் பற்றி நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஊடக செய்திகளின் ஆவணக் காப்பகத்தில் இதுபற்றி தேடிப் பார்த்தோம். குறைந்த எண்ணிக்கையிலான செய்திகளே கிடைத்தன. ஒரு சில பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இது ஒரு நியோ-நாசிகளின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். உண்மையிலேயே இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம் எமக்குள் எழுந்தது. இது ஏன் ஒரு பேசுபொருளாகவில்லை? கொலைகாரர்களை ஏன் கைதுசெய்யவில்லை? எனவே இது பற்றி ஆழமான ஒரு ஆராய்ச்சியினை மேற்கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். நியோ-நாசிகளின் தாக்குதல்கள் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பெரும்பாலும் ஜேர்மன் நாட்டில் “சோளிங்கன்” என்ற இடத்தில் 1993ம் ஆண்டு இரண்டு முதியவர்களும், மூன்று சிறுவர்களும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தான். இந்த சம்பவத்தை நினைவு கூரும் வண்ணம் அங்கே ஒரு நினைவுத்தூபி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தத் தெருவுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மன் ஜனாதிபதி இந்த சம்பவத்தின் 30வது நினைவையொட்டி உரையாற்றியிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி புத்தகங்கள், பாடசாலை நூல்கள், பாடல்கள், காட்சிப் படங்கள் என்று நிறையவே இருக்கிறது. ஆனால் கூரில் நடந்த சம்பவம் பற்றி ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஆராய்ச்சியின் பின்னர் இது ஏதோ தற்செயலாக மறைக்கப்பட்ட ஒன்று இல்லை என்பதை உறுதியாக கூறமுடிகிறது இந்த ஆராய்ச்சியின் ஆரம்பம் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். அவர்களின் இருப்பை அப்பொழுது கண்டுபிடிக்கவும் முடியவில்லை. எனவே இதன் தொடக்கம், இப்பொழுது 78 வயதான Reto Padrutt என்ற பத்திரிகையாளரிடமிருந்து ஆரம்பித்தது. Padrutt இப்பொழுது சூரிச்சில் வசித்துவருகிறார். அவருடைய இருப்பிடம் பற்றி மேலதிகமாக எழுதுவது அவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கிறோம். அதுபற்றி எழுதவேண்டாம் என்பது அவரின் கோரிக்கையும் கூட. Padrutt 15.01.1992 அன்று சுவிஸ் தொலைக்காட்சியின் Rundschau என்ற நிகழ்ச்சிக்கு இந்த சம்பவம் பற்றிய ஒரு சிறிய ஆவணப்படத்தினை Andreas Hoessli என்பவருடன் சேர்ந்து இயக்கியிருந்தார். (காணொளி-1) அதுமட்டுமின்றி Padrutt நியோ-நாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் செலவிட்ட ஒருவர். அன்றைய காலகட்டத்தில் அவர் வசித்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கதவு பழுதடைந்திருந்ததால் யாரும் உள்ளே வரலாம் போகலாம் என்ற நிலை இருந்தது. அவருக்கு நியோ-நாசிகளிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பட்டிருந்தது. அதில் நுழைவாயில் எப்பொழுதுமே திறந்திருப்பது தங்களுக்கு தெரியும் என்றும், எந்நேரமும் அவரின் வீட்டிற்கு தீ வைக்க முடியும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது Padrutt தன்னுடைய குடோனிலிருந்து தூசிதட்டி எடுத்துகொண்டுவந்த ஆவணங்களை மேசையின் மேல் பரப்பி வைத்திருந்தார். கூரில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய அவரின் குறிப்புகள் அடங்கிய ஆவணங்கள் அவை. கூர் சம்பவத்திற்கும் நியோநாசிகளிற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவை. இடைப்பட்ட இந்த காலத்தில் கூர் நகரசபைக்கு இந்த சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் அடங்கிய தொகுப்புக்களை பார்வையிடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். அன்று சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று விசாரணையை விரிவுபடுத்தினோம். இறுதியாக கொல்லப்பட்ட சிறுவர்களின் அக்காவையும் பெற்றோரையும் St.Gallen இல் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களை கண்டுபிடிப்பதற்கு சிக்கலாக அமைந்தது, அரசதரப்பின் மெத்தனப்போக்கு!. Kandiah என்ற பெயரை ஆவணங்களில் Kandian என்று பிழையாக அச்சிட்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட சிறுவர்களின் பெயரை எழுத்துப் பிழைகளுடன் எழுதியிருந்தார்கள். இந்த விசாரணை எப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். Yves Bachmann (Fotos) மரண இரவு 01.07.1989 ஒரு மழைக்கால சனிக்கிழமை. St.Gallen மாநிலத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் வசந்திக்கும், சிவா கந்தையாவிற்கும் வழமைபோல வேலை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் அனைவரும் செய்த உணவத்தின் துப்பரவு பணியே அவர்கள் இருவரும் செய்தார்கள். இருவரின் பிள்ளைகளான இரண்டு ஆண்களும், ஆறு வயதான மேனாவிற்கும், வீட்டில் தனியாக இருப்பது சலிப்பாக இருந்தது. எனவே ஒரு குடும்ப விழாவிற்கு கூர் நகரத்திற்கு போவதற்கு பெற்றோர்கள் அனுமதித்தார்கள். இதற்குள் மூன்று பிள்ளைகளிற்குள்ளும் சண்டை வந்துவிடவே, மூவருக்கும் கொண்டாட்டத்திற்கு போவதற்கு தடைவிதித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் எரிச்சலைடைந்தவர்களாக வேலைக்குச் சென்றுவிட்டார்கள். இதுவே அவர்கள் தங்களின் இரண்டு மகன்களையும் பார்த்த இறுதித் தருணம். அன்றிரவே பெற்றோர்களின் அனுமதியின்றி மூன்று பிள்ளைகளும் தங்களின் மாமாவுடன் கூர் நோக்கிய பயணத்தை தொடங்கியிருந்தார்கள். அன்று இரவு கொண்டாட்ட இடத்திலிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்தார்கள். நாளை மூவரையும் வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார். அந்த இரவு கொண்டாட்டம் நிறைந்த ஒரு அமைதியான இரவாக இருக்கவேண்டியது. வேறு வேறு மாநிலங்களிலிருந்து வந்த 15 தமிழர்கள் அந்த நான்கரை அறைகொண்ட மேல்மாடி வீட்டிற்குள் இருந்தார்கள். இலங்கையில் எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். வீட்டின் ஏனைய பகுதிகள் யாருமற்று இருந்தது. இரவுச் சாப்பாடு இரவு ஒன்பதரை மணிக்கு பரிமாறப்பட்டது. மூன்று சிறுவர்களின் தாத்தாவின் நினைவாக காலியான நாற்காலியில் ஒரு கோப்பையில் படையல் வைத்தார்கள். மதுவோ, சிகிரெட்டோ யாரும் பாவிக்கவில்லை. இரவு பன்னிரெண்டே கால் மணிக்கு முழித்திருந்த கடைசியானவரும் தூங்கப் போய்விட்டார். இரண்டு மணிநேரத்தின் பின்னர், 2:14 மணிக்கு, கூர் காவல்துறைக்கு தொலைபேசியில் Alexanderstrasse 38 இல் அமைந்துள்ள வீட்டில் தீப்பிடித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. திசைதெரியாத அளவிற்கு புகை அறைகளை நிரப்பியது. அதுவரை அந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த விளக்குகள் அணைந்துபோயின. மாடிப்படியில் தீப்பிடித்ததால் யாராலும் கீழே இறங்கி வர முடியவில்லை. யன்னல் வழியாக 5 மீட்டர் கீழே குதிக்கமுடிந்தவர்கள் குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டார்கள். பெரும்பாலானவர்கள் இதன் போது காயமுற்றார்கள். சுயநினைவுற்றிருந்த மேனாவை யாரோ ஒருவர் யன்னலுக்கே வெளியே வீசினார். கீழேயிருந்த இன்னொருவர் அவரை ஏந்திக்கொண்டார். இரு ஆண்கள் இறுதிவரை கீழே குதிக்க மறுத்துவிட்டார்கள். 18 வயதான சக்திவேல் தம்பிராஜா மற்றும் 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி. அவர்களின் உடல் அடையாளம் காணமுடியதளவிற்கு தீயில் கருகிப்போனது. சிறுவர்கள் முரளியும் முகுந்தனும் தூக்கத்தில் இருக்கும் போதே மூச்சுத்திணறி இறந்துபோயிருக்க வேண்டும். Yves Bachmann (Fotos) வாழ்த்திய அயலவர்கள் Margarethe Sauter இரண்டு சிறுவர்களின் எரிந்துபோன உடல்களின் மிச்சத்தினை காவலர்கள் வெளியில் கொண்டு வரும் போது நேரில் பார்த்தவர். எரியூட்டப்பட்ட வீட்டின் முன் தான் அவரின் வீடும் உள்ளது. Alexanderstrasse 38 இல் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த தடயமும் இப்பொழுது அங்கே இல்லை. ஆப்பிள் மரங்கள் சூழ ஒரு அடுக்குமாடி கட்டிடம் அதே இடத்தில் எழுந்துநிற்கிறது. Margareth Sauter இன் வீட்டிற்கு முன்னால் காத்திருந்த வேளையில் அவர் சைக்கிளில் வந்தார். அவரிடம் இங்கே நடந்தது பற்றி தெரியுமா என்று கேட்டோம். அப்பொழுது இருபது வயதின் ஆரம்பத்திலிருந்த Margarethe படப்பிடிப்பாளராக Bündner Tagblatt என்ற பத்திரிகையில் பணியிலிருந்தார். அலறல் சத்தம் தூக்கத்திலிருந்த அவரை எழுப்பியது. யன்னலை திறந்து பார்த்தவர் உடனே காவல்துறைக்கு தொலைபேசி எடுத்து தகவல் சொல்லிவிட்டு, தன்னுடைய போர்வையை எடுத்துக்கொண்டு கீழே ஓடினார். சிறிய தீக் காயங்களுடன் தப்பி வந்த ஒருவர் மீது போர்த்திவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்த ஒருவரிடமும் முதலாவது மாடிக்கு எட்டும் அளவிற்கு ஏணி இருக்கவில்லை. சில நிமிடங்களின் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்துவிட்டன. அதன் பின்னர் தான் புகைப்படக் கருவியை எடுத்து தன்னுடைய கடமையை செய்தார். சம்பவத்தை ஆவணமாக்கினார். யாருமற்ற கீழ்த்தளத்தில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வெளிநாட்டவர்கள் மீது சமூகத்தில் வெறுப்புணர்வு நிலவியது. இந்த சம்பவத்திற்கு மூன்று வாரங்கள் முன்னர் காவல்துறைக்கு “சுத்தமான சுவிஸ் நோக்கி” என்ற வாசகத்துடன் ATO (Anti Tamil Organisation) என்ற அமைப்பின் துண்டுப்பிரசுரம் கிடைத்திருந்தது. இந்த காரணங்களை வைத்தே Margareth Sauter இது ஒரு கொலை என்று அக்கணமே முடிவுசெய்துவிட்டார். நாம் முன்னர் சந்தித்த பத்திரிகையாளர் Reto Padrutt இடம் அந்த துண்டுப்பிரசுரத்தின் நகல் ஒன்று இருந்தது. இதை யார் அச்சிட்டு பொதுவெளிக்கு கொண்டுவந்தார்கள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் கூர் நகரத்தில் நாஜி ஸ்வஸ்திகா குறியீடு ஒரு வீட்டில் பதியப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்கிறார். அந்த வீடு நாஜிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கவேண்டும். கூர் நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களில் ஒரு அதிர்ச்சியளிக்கும் கடிதம் கிடைத்தது. அந்த தீ வைத்ததற்கு உரிமைகொண்டாடி, நகரசபை உறுப்பினரான Luzi Bärtsch என்பவருக்கு முகவரியிட்டு ஒரு அநாமதேய கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில்: தீ வைக்கப்பட்டதா? ஆம்! மூன்றாவதும் இறுதியுமான எச்சரிக்கை. அகதிகளை எங்களுடைய கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் ஒருவர்கூட மிச்சமிருக்காதபடி அனைத்து முகாம்களிற்கும் தீ வைக்கப்படும். -“Rütlischwur ஒப்பந்தம் 1291” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. தமிழ் நாணயக் குற்றி போர் மற்றும் உள்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் சுவிஸ் நாட்டிற்கு நியாமான காரணத்துடன் தமிழர்கள் வந்திருந்தபோதும், சுவிஸ் நாட்டவர்களிற்கு அவர்களின் வருகை அச்சத்தையும் அதேநேரம் வெறுப்பையும் உண்டுபண்ணியது. அவர்களின் புலம்பெயர் உண்மைத்தன்மையை ஏற்க மறுத்தனர். தமிழர்கள் ஒருபோதும் இந் நாட்டின் குடிமக்கள் ஆகமாட்டார்கள் என்ற கருத்து பாராளுமன்றம் வரை நிலவியது. தமிழர்கள் மீதான பாகுபாட்டினை Thun நகரத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. ஏனைய அகதிகளிற்கு வழங்கப்பட்ட சுவிஸ் பிராங் உதவித்தொகை போன்று தமிழர்களிற்கு வழங்கப்படவில்லை. தமிழர்களிற்கென்று “தமிழ் நாணய குற்றி” ஒன்றை வழங்கினார்கள். இது ஒரு விளையாட்டுப்பொருள் போன்ற நாணய வடிவம் கொண்டது. இதனை தமிழர்கள் உள்ளூர் கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். (காணொளி-2) 1995ஆம் ஆண்டு இனவாதத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் வரை தேசிய கட்சிகள் வெளிப்படையாகவே தமிழர்களிற்கு எதிரான இனவெறியினை அவர்களின் கட்சி நிகழ்ச்சி நிரலிலேயே ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஊடகங்களும் தம் பங்கிற்கு அறமற்று செயற்பட்டன. Blick பத்திரிகை தமிழர்களை “லெதர் ஜாக்கெட் ஆண்கள்” என்று வகைப்படுத்தி, சுவிஸ் நாட்டில் போதைப்பொருள் ‘ஹெராயின் தமிழர்களின்’ கட்டுப்பாட்டில் என்று எழுதியது. ஆனாலும் புள்ளிவிபரங்கள் இதற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தின. தமிழர்களின் குற்றச்செயலும் சுவிஸ் நாட்டவர்களின் குற்றச்செயலும் ஒரே அளவில் இருந்தது. Tagesanzeiger பத்திரிகை தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று தவறான கருத்தை எழுதித்தள்ளியது. Margarethe Sauter ற்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருந்த பிரச்சாரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால் தமிழர்களை வேண்டா விருந்தாளிகளாக சுவிஸ் மாக்கள் ஒரு பொதுப்பார்வையில் பார்த்தார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தீ வைக்கப்பட்ட அந்த இரவில் இதனை நேரிலும் கண்டார். அயலவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நீர், போர்வை என்று தந்து உதவினார்கள். ஏனையவர்கள் அவர்களின் வீட்டு வேலியை தாண்டி வர மறுத்துவிட்டார்கள். “இவர்களிற்கு இப்படி நடப்பது சரி தான். இவர்கள் இங்கே வந்திருக்கக்கூடாது” என்று முரளியினதும் முகுந்தனினதும் எரிந்த உடல்களை தீ அணைப்புத்துறை வெளியில் கொண்டுவரும் போது காதுபட பேசிக்கொண்டார்கள். Margarethe Sauter எடுத்த புகைப்படங்கள் அடுத்த நாள் காலையில் Bündner Tagblatt என்ற உள்ளூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை தன்னுடன் சுமந்துகொண்டிருப்பது அவருக்கு மனபாரமாக இருந்ததால் புகைப்படங்களின் நகலை சிலவடங்களிற்கு முன்னர் துண்டுதுண்டாக வெட்டி எறிந்திருக்கிறார். இன்று வரை அவருக்கு புரியாத புதிராக ஒரு விடயம் இருக்கிறது. எத்தனையோ விபத்துக்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அடுத்த நாள் வழக்கறிஞர்கள் இவரிடம் அந்த புகைப்படங்களை விசாரணைக்காக எடுத்துச்சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை தான் புகைப்படம் எடுத்தது தெரிந்தும் இதுவரை தன்னிடம் இருந்து எந்த புகைப்படமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எல்லா புகைப்படங்களுமே ஆதாரங்கள். அதற்காக அவர்கள் ஒரு முறைகூட தன்னை தொடர்புகொள்ளவில்லை என்று முடித்தார். அக்கா தீயிடப்பட்ட அந்த இரவில் மழைபெய்யத்தொடங்கியதும் மேனாவிற்கு நினைவு வந்தது. ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் வந்து அவரின் சகோதரர்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள் என்று விசாரித்தார். “முரளி ஒரு பச்சை-நீல காற்சட்டையும், முகுந்தன் சிகப்பு நிற காற்சட்டையும்” என்றார். இப்பொழுது மேனா 41 வயது பெண். St Gallen மாநிலத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளிற்கு அம்மா. திருமணத்தின் பின்னர் அவரின் பெயர் மேனா கந்தையா அல்ல, மேனா நிரோசன். அவர் ஏன் எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை என்றும், என்னுடைய பெற்றோர்களுடன் கூட நான் இந்தச் சம்பவம் பற்றி பேசுவதிலை என்றும் சொன்னார். இறுதியாக அவர் எங்களை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார். St.Gallen இல் உள்ள ஒரு கஃபேயில் சந்தித்தோம். மேனா மனிதவளத் துறையில் பணிபுரிகிறார். பணியிடத்திலிருந்து நேரடியாக எங்களை சந்திப்பதற்கு வந்திருந்தார். அந்தச் சம்பவம் பற்றி பேசாமல் மௌனமாகவே இதுவரை காலமும் கடந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய சகோதரர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிவித்திருக்காத போதும், காலப்போக்கில் அவரே அதனை புரிந்துகொண்டார். அந்த சம்பவத்தின் பின்னர் நேரடியாக மருத்துவமனையிலிருந்து மூவரும் St.Gallen இல் உள்ள அவர்களின் வீட்டிற்கே சென்றுவிட்டார்கள். வீட்டிற்குள் வந்ததும் பெற்றோர்கள் வீட்டில் தொங்கிய எல்லா கடவுள் படங்களையும் கிழித்தெறிந்தார்கள். மேனா பெற்றோர்களுடனே அவர்களின் அறையில் தூங்கி எழுந்தார். பயம். இது இன்றுவரை அவரை பின்தொடர்கிறது. தான் ஒரு தங்கக் கூண்டிற்குள் வளர்ந்தவர் என்றார். இவரையும் இழந்துவிடக்கூடாது என்ற பயத்தினால் பெற்றோர்கள் இவரை மிகவும் கவனமாக வளர்த்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் மேனா பெற்றோர்களை விட்டு பிரிய விரும்பவில்லை. அவரின் கணவர் அவர்களுடன் சேர்ந்து இங்கேயே இருக்கிறார். இருவருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவன் முரளி போல் மெலிந்தும் கருப்பாகவும், இளையவன் முகுந்தன் போல பருத்த உடலுடன் இருப்பது தன்னுடைய சகோதரர்கள் தன்னுடனே இருப்பது போன்ற ஆறுதலை தனக்கு தருகிறது என்றார். இடைப்பட்ட இந்தக் காலத்தில் இதுபற்றி அவர் பெரிதாக யாருடனும் பேசியதில்லை. ஆனால் ஆழ்மனதில் வடு அப்படியே தான் புதைந்திருக்கிறது. 6 வருடங்களிற்கு முன்னர் ஜேர்மன் வேகவிதியில் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்திருக்கிறார். அந்தக் கணமே அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டார். அதிஷ்டவசமாக விபரிதம் எதுவும் நடக்கவில்லை. வேக வீதியின் நடுவில் நின்ற காரை கணவர் ஓரத்தில் நிறுத்தினர். எங்களிடம் இருக்கும் ஆவணங்கள் பற்றியும் நாங்கள் கண்டுபிடித்தவை பற்றியும் அவரிடம் கூறினோம். சிறிது மௌனமாக இருந்துவிட்டு இது தனக்கு வேதனையளிக்கிறது என்றார். கேள்விகள் எதுவும் கேட்காமலே தொடர்ந்து “இதுவரை சுவிஸ் நாட்டை ஒரு இனவெறி பிடித்த நாடாக தான் உணரவில்லை. ஒருமுறை கூட தன்னை யாரும் பாகுபாட்டுடன் நடத்தவில்லை. ஆனால் இப்பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை என்னவென்று சொல்வது” என்றார். இறுதியாக இதுவரை அது ஒரு விபத்து என்று நம்பியிருந்ததாகவும், இந்த நாட்டில் தானும் தன்னுடைய குடும்பமும் சம அந்தஸ்து பெற்றிருக்கிறோம் என்ற நம்பிக்கையை கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்றும் தெரிவித்தார். Yves Bachmann (Fotos) நாஜிக்கள் ஏற்கனவே கூறியது போல் இந்த தீ வைத்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. 80களின் ஆரம்பமும் 90களின் தொடக்கமும் பாசிச சக்திகளிற்கு பொற்காலமாக விளங்கியது. இந்த காலகட்டத்தை வரலாற்றாசிரியர்கள் பாசிசவாதிகளின் “வசந்தகாலம்” என்கின்றனர். 1930களில் துளிர்விட்டிருந்த பாசிசம் பின்னர் படிப்படியாக இனவாதிகளின் கட்டுக்குள் வெவ்வேறு பெயர்களில் வந்தது. இங்கிலாந்திலிருந்து இங்கே வந்த இந்த இனவாதம் இளைய தலைமுறையினரின் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளியிலும் ஒருவரையாவது நியோ நாஜிகளின் அடையாளமான மொட்டைத் தலையுடனும், லெதர் ஜாக்கெட்ருடனும் காணக்கூடியதாக இருந்தது. சுவிஸ் பொதுச்சமூகத்திற்கு இவர்கள் புதிதாக இருந்தார்கள். குறும்புக்கார இளைஞர்களாக பார்த்தார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உட்கார வைக்கப்பட்டார்கள். சுவிஸ் ஜனாதிபதிக்கு ஈடான புகழினை சில நாஜிகள் அடையமுடிந்தது. குறிப்பிட்டு கூறுவதென்றால் Marcel Strebel என்பவரை கூறலாம். “Zischtigslub” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் அங்கே வேலை செய்த ஒருகறுப்பு நிறப் பெண்ணை “கறுப்புப் பரத்தை” என்று பேசி, அந்த பெண்ணின் மீது துப்பியும் இருக்கிறார். இதெல்லாம் நடந்த பின்னரும் அவரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரவேற்று நிகழ்ச்சியினை நடத்தியிருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் பற்றி அந்தக் காலத்தில் பத்திரிகையாளராக இருந்த Jürg Frischknecht உடன் பேச முயற்சித்தோம். இனவாதிகள் பற்றி இவரை தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. துரதிஷ்டவசமாக அவர் சிலவருடங்களிற்கு முன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே எங்களிற்காக காத்திருந்தது. ஆனால் அவர் எழுதிய இனவாதிகள் பற்றிய “Die neuen Fröntler und Rassisten” என்ற புத்தகத்தை அனைவருக்கும் விட்டுச்சென்றுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூர் நகரில் நடந்த சம்பவம் பற்றி இப்படி எழுதியுள்ளார்: முரளியும் முகுந்தனும் இறந்துபோன அதே ஆண்டு, பிரிபெர்க் நகரில் Mustafa Yildirim என்ற 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு இனவாத மாணவனால் கொல்லப்பட்டார். Regensdorf நகரில் முன்னாள் சுவிஸ் பாக்ஸிங் சம்பியனான Walter E. தமிழரான சாந்தகுமார் சிவகுரு என்பவரை முகத்தில் ஒரே ஒரு குத்தின் மூலம் கொன்றார். சாந்தகுமார் வேலை செய்த உணவகத்தின் முதலாளி அவரை நினைவுகூரும் போது “ஒவ்வொரு முறையும் சாந்தகுமார் சமையல் கூடத்திற்குள் வரும் பொழுதும் சூரிய ஒளி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அவன் முகம்” என்றார். 1988 தொடக்கம் 1993 வரை இனவாதிகளால் சுவிசில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளை விடவும், ஏன் ஜெர்மனை விடவும் அதிகம். கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக அவர்களின் பெயர்கள் எந்த தெருவுக்கும் வைக்கப்படவில்லை. எந்த ஜனாதிபதியும், வரலாற்றாசிரியரும் இவர்களை நினைவுகூர்ந்து பேசவில்லை. Frischknecht தனது புத்தகத்தில் இன்னொன்றையும் பதிவுசெய்திருந்தார். இனவாதிகள் முக்கியமாக தமிழர்களை தங்களுடைய எதிரிகளாக பார்த்தார்கள். உதாரணமாக ‘சுக்’ (Zug) நகரில் நடந்த தமிழர்கள் மீதான வேட்டை. 25 ஆண்களும் பெண்களும் 20.05 .1989 அன்று நகரின் முக்கிய பகுதியில் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களின் நோக்கம் -இரும்பு கம்பிகளாலும் சைக்கிள் சங்கிலியாலும்- தமிழர்களை தாக்குவதாகும். வேலைவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவர்களை தாக்கினார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். அந்த ஆண்டு மட்டும் சுவிசில் எத்தனை அகதிகள் தங்குமுகாம் தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தோம். மொத்தம் 13 ஆகும். கூர் நகரை ஒட்டிய பகுதிகளில் மட்டும் நான்கு முறை. எனவே தான் Alexanderstrasse இல் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வர வேண்டியுள்ளது. தடயம் கூர் சம்பவத்தின் விசாரணை ஆவணங்களை பார்வையிடுவதற்காக அரச அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆண்டு நடந்த நான்கு தீ வைப்பு சம்பவங்களையும் ஆராய்ந்தோம். 29.11.1988 ‘க்ளோஸ்ட்டர்’ இல் நடந்தது ஆறு நபர்கள் தங்கியிருந்த முகாமிற்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை. காவல்துறையினருக்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில் “நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று கூறியிருக்கிறார்கள். “அடுத்தது உங்களுடைய வீடாக கூட இருக்கலாம்” என்று அகதிகளிற்கு உதவியவர்களின் வீடுகளிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. 02.07.1989 முரளி, முகுந்தன் மற்றும் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் 02.08.1989 கூரில் Loestrasse என்ற இடத்தில 100 பேர் வசித்து வந்த முகாமிற்கு இரவு தீ வைக்கபட்டது. விழித்திருந்த ஒருவர் தீ பிடித்ததை கண்டு அணைத்துள்ளார். 07.08.1989 அதே Loestrasseஇல் மீண்டும் தீ வைக்கப்பட்டது. சுற்றியிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டது. மேலே கூறிய சம்பவங்களில் தீ வைக்கப்பட்ட முறை நான்கு சம்பவத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. இரவு நேரம், தீ வேகமாக பருவுவதற்காக கையாண்ட யுக்தி, நித்திரையில் இருப்பவர்கள் தப்பித்து போக முடியாத படி வாசலில் தீ வைத்தது என்று எல்லா சம்பவத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமைகளை அன்று காவல்துறை கவனத்திற் கொள்ள முயற்சி செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றிருக்கிறது. சம்பவத்தில் உயிர்பிழைத்த பத்து தமிழர்கள், காவல்துறைக்கு தீ பிடித்ததை அறிவித்த இருவர், வீட்டு மின்சார வேலைக்கு பொறுப்பான ஒருவர், வீட்டின் அடித்தளத்தில் கார் திருத்தும் நிறுவனர் மற்றும் ஒரு சந்தேகப்படும்படியான நபர் என்று அவர்களின் விசாரணையை முடித்துக்கொண்டார்கள். சுருக்கமாக சொல்வதானால், காவல்துறை விசாரணைக்காக தொடர்பு கொண்ட நபர்களை விட, இந்த செய்திக்காக நாங்கள் தொடர்புகொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகம். விசாரணைக்குழுவின் போக்கு இந்த சம்பவம் விபத்தா அல்லது அகதிகளே தீ வைத்தார்களா என்ற கோணத்தில் இருந்தது. இரண்டிற்குமான ஒரு ஆதாரம்கூட இருக்கவில்லை. காவல்துறையினரின் விசாரணைக் கேள்விகள் சில தமிழர்களிற்குள் குழு மோதல்கள் சம்பந்தமாகவும், லிபிய அல்லது சிரியா நாட்டு அகதிகளுடன் தமிழர்களுக்கு முரண் இருக்கிறதா என்ற திசையில் இருந்தது. துண்டுப் பிரசுரங்கள், மொட்டைக் கடிதங்கள், ஏற்கனவே நடைபெற்ற தீ வைப்பு சம்பவங்கள் என்று ஆதாரங்கள் போதிய அளவு இருந்தும் எந்த கேள்வியும் “இனவாதிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம்” என்ற கோணத்தில் கேட்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த விசாரணையில் அரச தரப்பு இனவாத கோணத்தில் விசாரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்தற்கான ஆர்வமே அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை. அல்லது எங்களுடைய கண்களிற்கு புலப்படாமல் ஏதாவதை தவறவிட்டுவிட்டோமா? ஓய்வுபெற்ற காவலதிகாரி ஓய்வுபெற்ற காவலதிகாரியான Hannes Tarnutzer (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வருடங்களிற்கு முன்னர் இந்த சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர். Landquart இல் அமைந்துள்ள ஒரு கஃபேயில் அவரை சந்தித்தோம். விசாரணை சம்மந்தமான ஆவணங்களை அவரிடம் காட்டினோம். முழுமையான விசாரணை ஆவணங்களை அவரும் இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கின்றார். 35 வருடங்கள் சென்றிருந்தாலும் அவர் இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரின் பணிக்காலத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்தில் இந்த கூர் சம்பவத்தில் மட்டுமே உயிர்கள் பலியாகியிருந்தன. எரிந்த உடல்களின் நாற்றம் இப்பொழுதும் அவருக்கு நினைவிலிருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற வசதிகள் அப்பொழுது இருந்திருந்தால் கண்டிப்பாக கொலைகாரர்களை பிடித்திருக்கமுடியும் என்றார். எங்களிடமிருந்த அரச ஆவண கோப்புகளை கொடுத்ததும் “இவ்வளவு தானா” என்று வியந்தார். ஒரு திருட்டு சம்பவத்திற்கே 15 கிலோ ஆவணக் கோப்புகள் சேர்ந்த சம்பவம் ஒன்று தனக்கு தெரியும் என்றார். இது வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கோப்புகள். சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் சம்பவ இடத்தின் அருகிலிருப்பவர் தன்னுடைய காரில் இருந்து யாரோ பெட்ரோல் திருடிவிட்டார்கள் என்ற தகவலை ஆவணத்தில் வாசித்தார். திருடியவர்கள் ஒரு துணியை வைத்து மீண்டும் அடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் டேங்கின் மூடி கண்டுபிடிக்கப்படவில்லை. கைரேகை ஏன் எடுக்கப்படவில்லை என்று Tarnutzer கேட்டார். துண்டுப்பிரசுரம், மொட்டைக் கடதாசி, கைரேகை என்று எதுபற்றியும் விசாரிக்கப்படவில்லை என்று வியந்து போனார். அயலவர்களிடம்கூட விசாரணை நடைபெறவில்லை என்பது அவருக்கு இன்னும் வியப்பை கொடுத்தது. சம்பவம் நடைபெற்ற மாநிலத்தில் இப்படியான சம்பவங்களை விசாரணை செய்வதற்கு வல்லுநர்கள் பற்றாக்குறை இருந்ததனால், சூரிச் மாநிலத்திலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். சூரிச் தடயவியலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் நுழைவாயில் காவல்துறையினர் வரும் போது திறந்திருந்ததாகவும், ஆனால் உள்ளே இருந்தவர்கள் தங்கள் கதவினை பூட்டியதாகவும் உறுதியாக சொன்னதை கவனித்தார். ஆனால் அவர்களும் விசாரணை கோணத்தை வேறுதிசையிலையே கொண்டு சென்றார்கள். மாடிப்படியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மெழுகு டப்பா மீதே அவர்களின் விசாரணை தொடர்ந்தது. அந்த டப்பாவை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் அதனுள் இருந்த மெழுகு தான் தீப்பிடிக்க காரணமாக இருந்தது என்ற முடிவுக்கு அந்த வல்லுநர்கள் வந்திருந்தார்கள். இது கூர் காவல்துறையினரின் முடிவுடன் முரண்பட்டிருந்தது. கூர் காவல்துறையினர் மின்சாரத்தினால் தான் தீப்பிடித்திருந்தது என்ற முடிவில் இருந்தார்கள். ஆனால் சூரிச் வல்லுநர்கள் அதற்கு சந்தர்ப்பம் இல்லை, ஏனென்றால் தீ பிடித்த நேரத்தில் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன என்றும், மின்சார பெட்டி வேறொரு மாடியிலும், தீ வேறொரு மாடியிலும் பற்றிக்கொண்டதால் இரண்டிற்கும் சம்மந்தம் இருக்க வாய்ப்பில்லை என்றும் மறுத்தனர். உயிர்களை பலிவாங்கும் நோக்கில் தீ வைக்கப்பட்டிருக்கிறது என்பது தனக்கு இதை வாசிக்கும்போது தெளிவாக தெரிகிறது என்றார் Tarnutzer. என்னமோ ஒரு மெழுவர்த்தி எரிந்துவிட்டது போல் உதாசீனமான விசாரணை நடந்திருக்கிறது. அவர் இன்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறார். மெழுகு டப்பாவில் மெழுகு தான் இருந்ததா அல்லது பெட்ரோல் போன்ற வேறேதாவது இருந்ததா என்ற கோணத்திலும் அவர்கள் விசாரித்திருக்க வேண்டும். எல்லா தாள்களையும் மீண்டும் மீண்டும் முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்துவிட்டு “கொப்பர்தாமி” என்று ஜேர்மன் மொழியில் மெதுவாக திட்டினார். இரண்டு முக்கியமான விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். 10.10.1989 அன்று சூரிச் தடயவியலாளர்கள் அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஐந்து நாட்கள் முன்னர் 05.10.1989 அன்று அதாவது தீ வைக்கப்பட்டு மூன்று மதங்களின் பின்னர், இந்த சம்பவத்தை விசாரித்த விசேட குழு விசாரணை முடிவை கோரியிருந்தது. அதாவது சூரிச் தடயவியலாளர்களின் அறிக்கை வர முன்னரே இந்த விசாரணையை முடித்துக்கொள்ள கூர் காவல்துறை விரும்பியிருக்கிறது. தரமற்ற காவல் மற்றும் வழக்கு விசாரணை Alexanderstrasse இல் நடந்த சம்பவத்தின் விசாரணை மிக தரமற்ற ஒன்று என்பது தெளிவாகிறது. மாநில நீதிமன்றம் இதில் நடந்துகொண்ட விதம் கூட கேள்விக்குரியதாக இருக்கிறது. அரச தரப்பு இந்த விசாரணையை போதுமற்ற சாட்சியங்கள் இல்லாததனால் முடிவுக்கு கொண்டுவருகிறது என்று எழுதியிருக்கிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரும், பாதிக்கப்பட்ட குடும்பமும் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. விசித்திரமாக இம்முறை அதற்காக வேறொரு காரணத்தை நீதிமன்றம் முன்வைத்தது. தீ யாரோ ஒருவரால் வைக்கப்பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லை என்றும், இறுதிவரை துண்டுப்பிரசுரங்கள் யாரால் விநியோகிக்கபட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாத காரணத்தாலும் மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெற்றிருந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு!. ஆனால் ஏன் இந்த கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்கவில்லை. சுவிஸ் நாட்டு சட்டத்தை பொறுத்தவரையில் ஒரு விசாரணையின் இறுதி எல்லைவரை சென்று கிடைக்கக்கூடிய அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப் படவில்லை. இந்த சம்பவத்தை விசாரித்த நீதிபதிகளை பேட்டியெடுக்க விரும்பினோம். ஒருவர் இறந்துவிட்டார். ஏனைய உயிருடன் இருபவர்களிற்கு இந்த சம்பவம் நினைவிலில்லை. இது பற்றி மாநில அரசின் விளக்கத்தை கேட்டு எழுதினோம். இந்த சம்பவம் முழுமையாக விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதென்பதால் அது பற்றி அவர்கள் விளக்கம் தரமுடியாது என்றார்கள். இங்கே ஒன்றை தெளிவிவுபடுத்த வேண்டும். பொதுவாக மாநில காவலதிகாரிகள் இப்படி அக்கறையின்மை காட்டுவதில்லை. இந்த மாநிலத்தில் நடந்த வேறு சம்பவங்களில் திறம்பட விசாரித்து சிறப்பாக செயல்பட்டவர்கள் தான். உதாரணமாக க்ளோஸ்ட்டரில் நடந்த தீ சம்பவத்தை கூறலாம். வெறுமனே பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்த போதும், கவனத்துடனும் அக்கைறையுடனும் விசாரணையை மேற்கொண்டிருந்தார்கள். இந்த க்ளோஸ்ட்டர் சம்பவத்தில் கார் டயர் தடயம் தொடங்கி அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வரை தீவிரமான விசாரணை மேற்கொண்டார்கள். மொட்டைக் கடதாசிகள் எந்த வகையான தட்டச்சுஇயந்திரத்தில் எழுதப்பட்டது என கண்டறிந்தார்கள். இந்த சம்பவத்தின் விசாரணை முற்றுப் பெறாவிட்டாலும், முழுமையான விசாரணையை நடத்தி போதிய அளவு முயற்சி செய்திருப்பது தெளிவாகிறது. ஆனால் கூர் சம்பவத்தில் மட்டும் ஏன் இந்த முரண்? இத்தனைக்கும் க்ளோஸ்ட்டர் சம்பவத்தை விசாரித்த அதே நீதிபதிகள் தான் கூர் சம்பவத்திலும் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். நான்கு தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுடைய ஆராய்ச்சியில் தெளிவாக தெரிகிறது. இதில் சம்மந்தப்பட்ட அரசு தரப்பு சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதுடன் சட்டப்படியும் விசாரிக்காமல் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். ஏன் இந்த மெத்தனப் போக்கை கடைப்பிடித்தார்கள் என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பு கூட சரியான முறையில் செயல்படவில்லை. இது தற்செயலாக நடந்த ஒன்றா அல்லது கவனக்குறைவால் நடந்த ஒன்றா என்று தெரியவில்லை. Frischknecht தன்னுடைய புத்தகத்தில் அன்றைய நிலவரத்தை இப்படி சித்தரித்திருந்தார், “இனவாதத்தை மென்மையான கோணத்தில் பார்ப்பது காவல்துறையினரிடம் மட்டுமல்ல, சட்டத்துறையிலும் காணப்படுகின்றது”. துக்கம் ஓய்வு பெற்ற காவலதிகாரி Tarnutzer எங்களை அடிக்கடி தொடர்புகொண்டு அந்த சிறுவர்களின் குடும்பம் பற்றியும், எங்களுடைய ஆராய்ச்சி பற்றியும் கேட்டறிந்துகொண்டார். இறுதியாக அந்த சிறுவர்களின் ஆசிரியராக இருந்த Helena Graf என்பவரின் உதவியுடன் அவர்களின் பெற்றோரை கண்டுபிடித்தோம். இவர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுத்தவர், சிறுவர்களின் கல்லறைக்காக நிதி சேகரித்துக் கொடுத்தவர், பெண்கள் தினத்தில் சிறுவர்களின் அம்மா ஓய்வெடுக்கவேண்டும் என்றெண்ணி அவருக்காக அவரின் துப்பரவு பணியை அன்றைய நாள் பொறுப்பெடுத்து செய்து வருபவர். Helena அந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். குடும்ப நிகழ்வுகளில் பங்குபற்றுவார். மிரட்டல் கடிதங்கள் இவருக்கும் வந்தது. ஒரு ஞாயிறு மதியம் ஓய்வுபெற்ற Helenaவை St.Gallen புகையிரதநிலையத்தில் சந்தித்தோம். அவருடைய காரில் எங்களை கந்தையா குடும்பத்தினரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். வசந்தியும் அவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்றுக்கொண்டார்கள். மேனா வேலைக்குச்சென்றிருந்தார். பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். எங்களிற்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு முரளி மற்றும் முருகன் பற்றி வசந்தி பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இருந்த சிகப்பு நிற சைக்கிள், நேரத்துக்கு வீட்டிற்கு வராத பிள்ளைகளை தேடி விளையாட்டு திடலிற்கு போன சம்பவம் என்று அவர் சொல்லிக்கொண்டே போனார். சிலநேரங்களில் அழுதார். சிலநேரங்களில் சிரித்தார். அவரின் கணவர் அருகில் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். அந்த சம்பவம் நடைபெற்று ஒரு தடவை கூட காவல்துறையினர் தங்களை கூப்பிட்டு விசாரிக்கவில்லை என்றார் வசந்தி. மாரடைப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய், மனஅழுத்தம் என்று மருந்துகளுடன் நாட்களை கழித்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் வசந்தியும் கணவரும் எப்பொழுதுமே வேலைசெய்து கொண்டே இருந்தார்கள். சிலவேளைகளில் இரண்டு வேலைகளை செய்தார்கள். ஒரு பிள்ளையின் இழப்பை தவிர துக்கமான ஒன்று பெற்றோர்களிற்கு இருக்கமுடியாது. அது ஒரு கொலையென்றால் துக்கத்துடன் சேர்ந்து இன்னும் மேலதிகமான உணர்வுகள் தோன்றும். ஆனால் கந்தையா குடும்பத்திற்கு பழிவாங்கும் எண்ணம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவர்களிற்கு இருப்பதெல்லாம் தங்களிற்கோ அல்லது தங்களின் மகளிற்கோ, பேரப்பிள்ளைகளிற்கோ எதுவும் நடந்துவிடும் என்ற அச்ச உணர்வு மட்டுமே. நமக்கெல்லாம் பாதுகாப்பான சுவிஸ் நாடு, அவர்களிற்கு ஆபத்தான நாடாக இருக்கிறது. முரளியும் முகுந்தனும் கொலைசெய்யப் பட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். இனி கொலைகாரர்களை கண்டு பிடித்தாலும் தங்களுடைய பிள்ளைகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் குறைந்த பட்சம் அவர்களை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கான விடை என்றாலும் கிடைக்கும் என்கிறார்கள். கொலைகாரர்கள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு வசந்தி “தமிழர்களும் மனிதர்கள்தான், ஏதாவது பிரச்சனையென்றால் எங்களுடன் பேசுங்கள். எங்களை கொலை செய்யாதீர்கள்” என்று சொல்வேன் என்றார். Helena வசந்தியின் கையை பிடித்து ஆறுதல்படுத்தினர். Helena இறுதிவரை இந்த விசாரணை தொடர்வதற்கான முயற்சியை செய்துகொண்டே இருந்தார். ஒரு நண்பியாக மட்டுமல்லாமல், இந்நாட்டு மக்கள் சார்பாகவும் அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்க விரும்பினார். நாங்கள் விடைபெறுவதற்கு முன்னர் வசந்தி எங்களிற்கு இரண்டு விடயங்களை காட்ட விரும்பினார். கையை மடித்துவிட்டு “இங்கே பாருங்கள்” என்று முரளி மற்றும் முகுந்தன் என்று தன்னுடைய கையில் பச்சைகுத்தியிருப்பதை காட்டினார். “என்னுடைய இதயப் பக்கமா குத்தியிருக்கிறேன்” என்றார். தொடர்ச்சியாக பலவருடங்களாக கல்லறைக்கு சென்றுவந்திருக்கிறார். சிலநாட்களில் இரண்டுமுறையும் சென்றிருக்கிறார். ஆனால் இருபது வருடங்களின் பின்னர் அந்த கல்லறை விலக்கப்பட்டுவிட்டது. வசந்திக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தான் இனி எங்கே எப்படி துக்கத்தை அனுஷ்டிப்பது என்று தெரிந்திருக்கவில்லை? எனவேதான் தன்னுடைய கையில் அவர்களின் பெயர்களை பச்சைகுத்தியிருக்கிறார். சாம்பிராணி வாசம் வீசுகின்ற மேல் மாடிக்கு எங்களை அழைத்துச்சென்றார். சிறிய சிலைகள், கடவுள் படங்கள் என்று அறை நிரம்பியிருந்தது. முரளி மற்றும் முகுந்தன் இருவரின் புகைப்படமும் அங்கே இருந்தது. இந்த St.Gallen மாநிலத்தில் இந்த சிறிய அறை மட்டும் தான் அவர்களின் நினைவிடமாக இருக்கிறது. ஒடுக்கல் சென்ற ஆண்டு இந்த சம்பவத்தில் ஒரு திருப்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றின. சோஷலிச கட்சியின் கிராமசபை உறுப்பினரான Jean-Pierre Menge இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து கொல்லப்பட்ட நால்வருக்கும் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை மாநில அரசு மறுத்துவிட்டது. அதை ஒரு இனவாத கொலைச் சம்பவமாக அவர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டாலும், 35 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவுச்சின்னம் வைப்பது ஏனைய இனவாத சம்பவங்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துவிடும் என்று அஞ்சினர். அனைவருக்கும் நினைவுச்சின்னம் வைக்கவேண்டிய கோரிக்கைகள் வலுத்துவிடும் என்ற காரணத்தை கூறி மறுத்துவிட்டார்கள். இதை வரலாற்றாசிரியர் Damir Skenderovic இடம் கூறினோம். அவர் நம்பமறுத்தவராக தலையாட்டினார். சுவிசில் இனவாதம் இல்லையென்பதை வெளியுலகிற்கு காட்ட விரும்பியே இப்படியானவற்றை நிராகரிக்கிறார்கள் என்றார். Damir Skenderovic பிரிபேர்க் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக பணிபுரிகிறார். சுவிஸ் நாட்டில் இனவாதத்தை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரே ஒரு வரலாற்றாசிரியர் இவர் மட்டுமே. சுற்றியுள்ள அண்டை நாடுகளில் இந் நிலை இல்லை என்கிறார். ஏனைய நாடுகளில் அரசாங்கமும் விழிப்புணர்வளித்து வருகிறது. உதாரணமாக ஸ்வீடன், ஜேர்மன் போன்ற நாடுகளில் காவல்துறையினருக்கு இனவாதத்தை கையாளும் விதம் பற்றிய படிப்பு வழங்கப்படுகிறது. ஏனைய நாடுகளை விட இங்கே இனவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றபோதும், எதுவுமே நடக்காதது போல காட்டிக் கொள்கிறார்கள். இப்படியான விடயங்களில் மறதி என்பது வசதியான ஒன்றாக அவர்களுக்கு இருக்கிறது. இனவாதம் ஐரோப்பா முழுவதும் தற்பொழுது தலைதூக்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதனை எதிர்த்து போரிடுவதற்கு அரசு முன்வர வேண்டும். கூர் சம்பவம் பற்றிய எங்களுடைய முடிவுகளை அவரிடம் தெரிவித்த போது, அவர் மாநில அரசின் தோல்வி என்றார். இதற்கு ஒரு குழு அமைத்து விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த ஏதாவது புதிய சாட்சியோ, ஏன் கொலைகாரர்களே முன்வந்தால் கூட, இனி இந்த சம்பவத்தில் யாரையும் தண்டிக்க முடியாது. சுவிஸ் நாட்டு சட்டத்தின் படி கொலைக்கான தண்டனை 30 வருடங்களின் பின்னர் காலாவதியாகிவிடும். அப்படியென்றால் இந்த ஆராய்ச்சி எதற்கு? செய்தி எதற்கு? என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிடப் போகிறது? இந்தச் செய்திகூட ஒரு நினைவுச் சின்னமாக இருக்கலாம். இதன் பின்னராவது சிலரிற்கு அந்த சிறுவர்களின் பெயர் நினைவில் வந்து போகட்டும். “”முரளி & முகுந்தன்”” கபிலன் (சுவிஸ்) 23.01.2025 மூலம் : https://www.tagesanzeiger.ch/brandanschlag-chur-1989-starben-vier-menschen-aus-sri-lanka-211092696091 காணொளி-1: https://www.srf.ch/play/tv/rundschau/video/brand-in-chur?urn=urn:srf:video:2879bfcd-a6f5-4874-85a8-ebbfb709f27b காணொளி-2: https://www.srf.ch/play/tv/drs-aktuell/video/asylanten-batzen-thun?urn=urn:srf:video:b406228c-659b-445a-86e9-a7e23b5ee83d https://sudumanal.com/2025/01/23/முரளி-மற்றும்-முகுந்தனை/
  18. 29 Jan, 2025 | 10:48 AM இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள். இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இந்தியா மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுக்குள் கடற்படையினர் ஏறியுள்ளனர். இவ்வாறு ஏறிய மீனவர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய மீனவர்கள் தயாரானபோது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம் இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள் எமது மீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று. அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர். நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள். எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக் காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது. எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு. கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன இவை கடந்த காலங்களிலும் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது ; அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk
  19. "பாசம்" "பாசம் ஒரு மென்மையான நீரோடையோ காற்றை சூடாக்கும் ஒரு புன்னகையோ இனிய வார்த்தைகளின் குளிர்ந்த தொடுதலோ உள்ளம் வெளிப்படுத்தும் அன்பின் கனிவோ இருண்ட இதயத்துக்கு கலங்கரை விளக்கமோ ஆன்மாவைப் பார்க்கும் பார்வையின் ஒளியோ?" "பாசம் என்றும் கருணையின் வடிவோ காதல் என்பதும் ஆசையின் ஈர்ப்போ பழகபழக முளை விடுவது நேசமோ உள்ளங்கள் கூடி சேருவது நட்போ அனைவர் மேலும் தோன்றுவது அன்போ பலபல வடிவில் எல்லாம் ஒன்றோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்! Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST] ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார். இமானுவேல் சேகரன் படுகொலை- முத்துராமலிங்க தேவர்- பெரியார் இதனால் நம்முடைய அய்யா முத்துராமலிங்க தேவரை கேள்வி கேட்டுவிட்டார்களே என்ற கோபத்தில் இமானுவேல் சேகரனை பக்கத்தில் இருந்த இளைஞர்கள் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர். முத்துராமலிங்க தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது தெரியாமல் நடந்துவிடுகிறது. ஆனால் பெரியார்தான் திரும்ப திரும்ப சொல்லி காமராஜரை வலியுறுத்தி முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வைத்தார். இவ்வாறு சீமான் பேசினார். 1957-ல் முதுகுளத்தூரில் நடந்தது என்ன? சீமானுக்கு வன்னி அரசு கண்டனம் சீமான் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது: கடந்த 1957 ல் முதுகுளத்தூரில் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.இரண்டாவது பொதுத்தேர்தலை ஒட்டி எழுந்த பதற்றம் அது. முகவை தலித்மக்கள் அப்போது காங்கிரசை ஆதரித்தனர். திரு.உ.முத்துராமலிங்கம் அவர்கள் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) பார்வர்ட் பிளாக் சார்பாக தேர்தலில் நின்றார். தேர்தலில் பள்ளர்கள் ( தேவேந்திர குல வேளாளர்கள்) உ.முத்துராமலிங்கத்திற்கு வாக்களிக்காததால் அவர்களது உடமைகளை தேவர் சாதியினர் சூறையாடினர். உச்ச பட்சமாக கடம்பாங்குளத்தில் 9 பள்ளர்களை தேவர்சாதியினர் தூக்கி பத்ரகாளிக்கு பலியிடப்போவதாக அறிவித்தனர்; சட்டசபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு தமிழகம் முழுவதும் பதற்றமானது. முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்-தேவர் உரசல் மோதல் வெடித்தது.இதனை தடுக்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் சி.வி.ஆர் பணிக்கர் சமாதனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 1957 செப்டம்பர் 10 ம் தேதி முதுகுளத்தூரில் சமாதானக்கூட்டம் கூட்டப்பட்டது. ( இந்தக்கூட்டத்தை தான் பஞ்சாயத்து என சொல்கிறார் சீமான்) இக்கூட்டத்தில் திரு.பெருமாள் பீட்டர், திரு.இம்மானுவேல் சேகரன் திரு.உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) சமாதானக்கூட்டத்திற்கு காலதாமதத்துடன் வந்தார். பெருமாள் பீட்டரும்,இம்மானுவேலும் உ.முத்துராமலிங்கம் வந்தபோது எழுந்து வணக்கமிடமில்லை.மற்றவர்கள் எழுந்து வணக்கமிட்டனர். உ.முத்துராமலிங்கம் பள்ளர் சாதி பிரதிநிதியாக இம்மானுவேலை ஏற்க மறுத்தார்.பரமக்குடி தொகுதியின் பார்வர்ட் பிளாக் எம் எல் ஏ வான பெருமாள் குடும்பனை பள்ளர் பிரதிநிதியாக ஏற்பதாக சொன்னார். இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.கலெக்டர் தலையீட்டினால் தனித்தனி சமாதானத் தாள்களில் இருவரும் கையொப்பமிட்டனர் சமாதானக்கூட்டம் முடிந்து கோபத்தோடு வெளியேறிய உ.முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களைப்பார்த்து " ஒரு பள்ளப்பயலை எனக்கு சமமா வளர்த்துவிட்டீங்களே" என் கோபத்துடன் பேசினார்.இதன் விளைவாக அடுத்தநாள் செப்டர்பர் 11 ம் தேதியே இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உ. முத்துராமலிங்கமும் கைது செய்யப்பட்டார். உண்மை இப்படி இருக்க, ஏதோ பஞ்சாயத்துக்கு அழைத்து, தெரியாமல் கொலை நடந்ததாக திசை திருப்புகிறார் சாதி வெறியர் சீமான். முழுக்க முழுக்க சாதி வெறியால் திட்டமிட்டு நடைப்பெற்ற படுகொலை என அன்றைக்கே ஊடகவியலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார். சாதி வெறியர்களை விட ஆபத்தான பேர்வழி தான் சீமான் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seemans-new-controversy-on-immanuel-sekaran-murder-muthuramalinga-thevar-arrested-and-periyar-675441.html?ref_medium=Mobile&ref_source=OI-EN&ref_campaign=Topic-Article ——————— @ரசோதரன் நேற்று நான் சீமாம் சாதியத்தை விலகி நடப்பவர் அல்ல, அதை தூண்டி விட்டு குளிர்காயும் ஓநாய் என எழுதியதை 24 மணிக்குள் அண்ணன் நிரூபித்துள்ளார்.
  21. @பாலபத்ர ஓணாண்டி, நிச்சயமாக உங்களுக்கும், வாலிக்கும் இடையான தர்கத்தில் தலையிடும் எண்ணம் இல்லை. ஆனால் சில விளக்கம் எனக்கு தரமுடியுமா? 1. இந்த ஓணாண்டி பெயரில் முதலில் உள்ளே வரும் போது, நான் இலண்டனில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன், போராட்டம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாது, சைக்கிளில்தான் சுத்துகிறேன், அதிகம் தகமைகள் இல்லாதவன், பல கால யாழ் வாசகன், கோஷானை எனக்கு நல்லா பிடிக்கும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பதே உங்கள் சுய அறிமுகமாக இருந்தது. காலப்போக்கில் நீங்கள் ஐடி துறையில் வல்லுனர் என்பதும், இலண்டனில் இருந்து மீண்டும் நாட்டுக்கு குழந்தை குட்டிகளோடு திரும்பும் அளவு வசதியானவர் என்பதையும் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். இது நீங்கள் இணையும் போது உங்களை பற்றி சொல்லியதற்கு (கட்டிய விம்பத்துக்கு?) மாறாக இருந்த போதும், மனதில் குறித்து கொண்டேன், கேட்கவில்லை. இப்போ நீங்களே முன்பு வேறு ஒரு ஐடியில் வந்து, மிகவும் வினைதிறனாகவும் செயல்பட்டவர் என்கிறீர்கள். தனிப்பட்டு உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை இது பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முடிந்தால் விளக்கம் தரவும். இல்லை கோஷான் எல்லாம் என்ன ஹைகோர்ட்டா - என கடந்து போனாலும், காரியமில்லை. 2. அமரதாஸ் பற்றி நீங்கள் சொல்லியது பாரிய குற்றசாட்டு. அதை நீங்கள் செய்த போது வேறு ஐடியில் இருந்தீர்கள் - இப்போ ஊரில் வசிக்கிறீர்கள். அந்த ஐடி வெளியில் வந்தால் ஆபத்து நேரலாம். இதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் நீங்களும் அந்த குற்றசாட்டை வீச முன்னர் இதை யோசித்து இருக்க வேண்டும். ஒருவரை குற்றம் சாட்டும் போது நம்மிடம் உள்ள ஆதாரத்தை நாம் வெளியிட தயாராக இருக்க வேண்டும். இல்லை எண்டால் குற்றசாட்ட கூடாது. இப்போதும் சொல்கிறேன்…உங்கள் பழைய ஐடி விபரம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியேனும் அதை காணும் ஆவல் எனக்கு அறவே இல்லை. ஆனால் - நீங்கள் ஆதாரம் தரும் வரை அமரதாஸ் மீதான உங்கள் குற்றச்சாட்டை ஆதாரம் அற்ற பதிவு என்றே கருத முடியும். யாழ்களத்திலேயே எழுதாத அமரதாசை “வேணும் எண்டால் என்னுடன் கதைக்க சொல்லுங்கள்” என்பது “அண்ணை வந்ததும் காசை தாறோம்” டைப் லொஜிக்.
  22. பிரபலங்களின் இயற்பெயர் தெரியுமா?
  23. இது நிரூபிக்கப்பட முடியாத அமரதாஸை களங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய்ப் பதிவு! நாங்களோ எங்கட ஆக்களோ அப்பிடியில்லை நீங்கள் பழகுகின்ற சமுகம் அப்பிடியாக்கும்!😂 ஒரு பொய்யச் சொன்னா அத மூடிமறைக்கப்படுற பாடுகள் இருக்கே அது இயாசு நாதர் கூடப் படாத பாடு!😂 நன்றி வணக்கம்!
  24. இரங்கல் தெரிவிக்கிற அளவுக்கு கூட மனம் இரங்க வில்லை
  25. கருத்தாடல்கள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். எம்மை பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது. உண்மையை அறிய வேண்டும் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் யார் கூறுவது உண்மை யார் கூறுவது பொய் என்று அறிய முடியாத சூழலில் மெளனம் காப்பதே மேல். அது தவிர தமிழக சாக்கடை அரசியலில் நாங்கள் முக்குளித்து எழுந்தவர்கள் போன்று சவடால் அடித்து நான் சொல்வதெல்லாம் உண்மை என்கிற போக்கு ஈழத் தமிழருக்கு நன்மை பயக்காது. கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத தமிழர் நாம், உண்மையைக் கூறி தமிழக அரசியலின் போக்கை மாற்றப்போவதாக கூறுவது இரசிக்கத் தக்கதாக இல்லை.
  26. செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான் 👇 காணொளி
  27. "கொம்பு " அழகன் போட்டி ...வின்னர் இவர் தான். 2 வதுபடம் ஆபத்தில் உள்ளார். கவனிப்பு தேவை.
  28. பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒரு புழுகு விட்டால் மூடிமறைக்கலாம். அண்ணா விட்டது அண்டப் புழுகு ஆகாசப் புழுகு. அண்ணா அம்மணமா நிக்கிறார். அது தெரியாமல் சிலருக்கு மெய்சிலிர்க்குது!😂 ரீல் அந்து போச்சி! 😂
  29. புலம் பெயர்ந்து வாழும் புலிப் போராளிகள் சேர்ந்து சீமானின் வன்னி வருகை குறித்து கொடுத்த பேட்டி. இது சீமான் மீதான அவர்களின் நம்பிக்கையினை தெரியப்படுத்துவது மட்டுமல்ல இங்கே, ஆச்சோ, போச்சோ என்று வானத்துக்கும், பூமிக்கும் குதித்தவர்கள் முகத்திலும் கரியை பூசி விட்டனர். பஞ்சாயத்தை கலைச்சுப்போட்டு கிளம்புக்கப்பா.... எல்லாம் வேஸ்டு.....
  30. இவர்கள் சொல்லுவது தான் உண்மையான செலவு என்றால், இங்கு ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்களே தங்களுக்கென்று தனிப்பட்ட ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவையான inputs மிகச் சொற்பமே. அதனால் மிகவும் திறன் கூடியதை அவரவர் தேவைக்கேற்ப உருவாக்குவது எளிதாகிவிடுகின்றது. இவர்களின் source code கிடைக்கின்றது என்கின்றார்கள். அதை எடுத்து பார்க்க வேண்டும் என்றால், நேரமும் பொறுமையும் வேண்டும். நேரத்தை விட பொறுமை தான் வேண்டும் போல...................😜. முன்னர் நடந்த ஒரு பகிடி: ஒரு நிறுவனத்தில் மிகத் திறமையான ஒருவன் வேலை செய்தான். அந்த நேரத்தில் நானும் அங்கே இருந்தேன். நல்ல நண்பனும் ஆனான், ஆனால் வேலையில் ஒரே அணியில் இல்லை. ஒரு நாளும் நேரத்திற்கு வரவேமாட்டான். அவனால் அவனின் மேற்பார்வையாளருக்கு மாரடைப்பு வராதது ஒன்று தான் குறை. ஆனால் மிகக்கடினமான பிரச்சனைகளையும் மிக எளிதாக செய்து முடிப்பான். ஒரு வருட மதிப்பீட்டில் அவனுக்கு மிகக் குறைவான புள்ளிகளே போடப்பட்டது. அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ஆளே கிடையாது. அப்பொழுது ஐஃபோன் மிகப் பிரபலமாக இருந்த காலம். அவனின் மேற்பார்வையளர் அவனைக் கூப்பிட்டு, நீ நிறுவனத்திற்கு புதிதாக எதுவும் செய்வதே இல்லை, அதனால் தான் உனக்கு மிகக்குறைவான மதிப்பீடு போடப்பட்டிருக்கின்றது என்றார். 'அப்ப நான் அடுத்த ஐஃபோனை ரிலீஸ் செய்யவா.................' என்று அவன் மேற்பார்வையாளரை பார்த்துக் கேட்டான்...................... இப்பொழுது வேறு ஒரு இடத்தில் வேலை செய்கின்றான். ஆனால் அவனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடம் அவனின் மேற்பார்வையாளரை கேட்க வேண்டி இருந்தால், இப்படித்தான் கேட்பான் என்று நினைக்கின்றேன்: 'அப்ப நான் அடுத்த ஏஐயை ரிலீஸ் செய்யவா....................' ஆள் தமிழ் தான்............... சொந்த ஊர் தேனி மாவட்டம்................
  31. இதையே தான் சீமான் - சசிகலா - ஓபிஎஸ் என்று முடியுமானவரை சில அடையாளங்களை தவிர்த்து நேற்று எழுதியிருந்தேன். இவற்றை பெயர் சொல்லி பொதுவெளியில் எழுதுவதே எங்களுக்கு பெரும் சங்கடமாக இருக்கின்றது, ஆனால் இதற்குள்ளேயே வாழ்கின்றனர் இவர்கள்..................😌.
  32. நான் ரெடி…ஏற்பாடுகளை தொடங்குங்கோ….🤣
  33. காலம் இருக்குது தானே நான் சுவிஸ் வந்த பின் மகளுடன் சேர்ந்து எனது பதில்களை தாறன்.
  34. உங்களின் குடும்ப ஆட்சியால் ஏமாற்றமடைந்த மக்களே அனுராவை தேர்ந்தெடுத்தனர். ஆகவே அவர்கள் சார்பாக கோரிக்கை வைப்பதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நாங்கள் ஊழல் செய்திருந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விட்ட இவர், இப்போ தம்பியை கைது செய்தவுடன், எங்களை கைதுசெய்தால் பொருட்கள் விலையேறுமென பயமுறுத்துகிறார். தந்தையாரோ, எப்போ அரசாங்க வாசஸ்தலத்தை விட்டு நான் வெளியேறவேண்டுமென நேரடியாக எனக்கு அறியத்தாருங்கள், நான் வெளியேறி விடுகிறேன் என கோரிக்கை வைக்கிறார். சரியான நகர்வை நோக்கி பயணிக்கிறாரோ அநுர? தேர்ந்தெடுத்த மக்களே விரட்டி விட்டார்கள், தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்குபோடுவதை நிறுத்திவிட்டார்கள், தொடர்ந்து சிங்கள மக்களும் கைவிட்டுவிட்டார்கள். இவர்கள் இப்போதும் புலிகளை மறக்கமுடியாமல் நோபல் பரிசு எதிர்பார்ப்பில். அரசியல் அரை விசர்களுக்கு மக்களின் நிராகரிப்பு, முழு விசராக்கிவிட்டது போலிருக்கிறது.
  35. வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இங்கிலாந்து அணி. ராஜ்கோட் மைதானத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தோற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் தொடர்ந்து 10 டி20 போட்டிகளாக வெற்றி நடை போட்டுவந்த இந்திய அணி, 446 நாட்களுக்குப் பின் தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து திக்குமுக்காட வைத்து 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருதுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வருண் பெற்றுள்ளார். வருண் சக்ரவர்த்தியின் கணிக்க முடியாத பந்துவீச்சில் சிக்கி இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. 140 ரன்களுக்குள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் லியாம் லிவிங்ஸ்டோனின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி கூடுதல் ரன்களை சேர்த்தது. ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்' கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் - யார் இவர்? இந்தியா ஹாட்ரிக் வெற்றியை தவற விட்டது ஏன்? ராஜ்கோட் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து வர்ணனையாளர் முரளிகார்திக் கூறும் போதுகூட " என் தலை எவ்வாறு வழுக்கையாக இருக்கிறதோ அதுபோன்று இந்த ஆடுகளம்" என்றார். பேட்டர்கள் முதலில் நிதானமாக ஆடி, களத்தில் நிலைத்துவிட்ட பிறகு பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும். இங்கிலாந்து அணி இங்கு சேர்த்த 171 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட சராசரி ஸ்கோரைவிட குறைவுதான். அப்படி இருக்கையில் இந்திய அணியின் பேட்டர்கள் எளிய ஸ்கோரை கூட சேஸ் செய்யாமல் தோற்றதற்கு பேட்டர்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். சாம்ஸன்(3), அபிஷேக் சர்மா(24), கேப்டன் சூர்யகுமார்(14), திலக் வர்மா(18), துருவ் ஜூரெல்(2), பாண்டியா(40) அக்ஸர் படேல்(15), வாஷிங்டன் சுந்தர்(6) என 8 பேட்டர்கள் வைத்திருந்தும் 171 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை. ஹர்திக் பாண்டியா(40), தவிர மற்ற எந்த பேட்டரும் 25 ரன்களைக் கடக்கவில்லை, ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த டி20 தொடரிலேயே இந்திய அணி சார்பில் இருவர் மட்டும்தான் அரைசதம் இதுவரை அடித்துள்ளனர். சாம்ஸன் தொடர்ந்து 3 டி20 போட்டிகளிலும் ஆர்ச்சர் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார். சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார். ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?28 ஜனவரி 2025 இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' கேப்டன் சூர்யகுமார் ஃபார்மின்றி தவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் ஸ்கே ஒற்றை இலக்க ரன்னில்தான் ஆட்டமிழந்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே அவரது பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கும், ஸ்கோரும் பெரிதாக எடுக்கவில்லை. கேப்டன் பொறுப்பு அவரின் இயல்பான பேட்டிங்கிற்கு சுமையாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தத் தொடரிலும் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டுதான் சூர்யகுமார் விக்கெட்டை இழந்துள்ளார். ஓரளவு நிலைத்து பேட் செய்திருந்தால் நடுவரிசை ஸ்திரப்பட்டு ரன்கள் வந்திருக்கும். பவர்ப்ளே முடிவதற்குள்ளே இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பேட்டர்களும் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருக்கலாம். திலக் வர்மா கடந்த 5 இன்னிங்ஸ்களாக நாட்அவுட் முறையில் இருந்தே அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற நிலையில், அடில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2024, நவம்பர் 10ம் தேதியிலிருந்து திலக் வர்மா பங்கேற்ற போட்டிகளில் நாட்அவுட் முறையில்தான் ஆடி வருகிறார், இந்த இடைப்பட்ட காலத்தில் 336 ரன்கள் சேர்த்துள்ளார், ஒரு சதம் மற்றும் அரைசதமும் அடித்த நிலையில் நடுவரிசையில் அவரின் மீது சுமையை ஏற்றுவது தவறாகும். அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தரைவிட சிறந்த பேட்டரான துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். இடது, வலது பேட்டர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையை குழப்பி, முறையான பேட்டரை நடுவரிசையில் களமிறக்காமல் 8-வது வரிசையில் களமிறக்கி அவரை வீணடித்தனர். உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?27 ஜனவரி 2025 சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு சுமை, அழுத்தம் குறையும். ஆனால், கடந்த 3 போட்டிகளிலும பவர்ப்ளே ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களில் யாரேனும் ஒருவர் ஆட்டமிழந்துவிடும் போது, பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தும் வகையில் அடுத்துவரும் பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை இழக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கடந்த 3 போட்டிகளிலும் இல்லை. யாரேனும் ஒரு வீரர்தான் வெற்றியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் அபிஷேக் சர்மா, திலக்வர்மா தோளில் சுமந்தநிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றியை சுமக்க யாரும் முன்வராத நிலையில் தோல்வி அடைந்துள்ளது. அதுமட்டுமல்ல இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கூட ஆட்டம் இந்திய அணியின் கைவசம்தான் இருந்தது. ரவி பிஸ்னாய் வீசிய 16வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இங்கிலாந்தின் கை ஓங்கச் செய்தது. பிஸ்னாய் ஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த 3 சிக்ஸர் ஸ்கோரை உயர்த்தியது. 2023ம் ஆண்டுக்குப்பின் முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?13 ஜனவரி 2025 நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்?12 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை டி20 தொடர் தொடங்கியதிலிருந்து வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டருக்கு புரியாத புதிர் போன்று இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆர்ச்சர் போல்டான போது, பந்து எப்படி தனது கட்டுப்பாட்டை மீறி போல்டாகியது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டே ஆட்டமிழந்து சென்றார். புதிராகப் பந்துவீசும் வருணின் உழைப்பை இந்திய அணி இந்த ஆட்டத்தில் பயன்படுத்தவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் இங்கிலாந்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளத்தை வருண் அமைத்துக்கொடுத்தார். இந்திய அணிக்குள் மீண்டும் வந்ததில் இருந்து வருணின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தையும் சேர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் எடுப்பது இது 2-வது (ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) முறையாகும். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்த போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வித்தியாசமான சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். "வெற்றியைத் தவறவிட்டோம்" தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் " பனியின் தாக்கம் லேசாக இருந்ததாக நினைக்கிறேன். அக்ஸர்-ஹர்திக் களத்தில் இருந்தபோது 24 பந்துகளில் 55 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது என நினைத்தோம். அதில் ரஷித் எங்ளை ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டார். ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்கிறோம். 127 ரன்களி்ல் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்த நிலையில் 170 ரன்களை அடிக்க வைத்தது தவறுதான். பேட்டிங்கிலும் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, வருண் கடினமாக உழைக்கிறார், அதற்கான பலன் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார். தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை. இந்திய பேட்டர்களை திணறவிட்ட ரஷித் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நடுப்பகுதியில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இந்திய அணியை தோல்வியில் தள்ளினார். 4 ஓவர்கள் வீசி ரஷித் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், தனது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட அடிக்க ரஷித் அனுமதிக்கவில்லை. அதிலும் திலக் வர்மாவை போல்டாக்கிய ரஷித்தின் பந்துவீச்சு, மறைந்த ஷேன் வார்ன் பந்துவீச்சுக்கு ஓப்பாக அமைந்தது. மிகக் குறைந்த 75 கி.மீ வேகத்தில் பந்தை டாஸ் செய்யும் விதம், அதை அடிக்க முடியாமல் பேட்டர்கள் திணறுவது என ரஷித்தின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு நேற்று சிம்மசொப்பனமாகவே இருந்தது. நடுப்பகுதியில் 7 முதல் 15 ஓவர்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்தது. இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல்25 ஜனவரி 2025 ஒரே ஆண்டில் 8 மடங்கு அதிகம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு அரசு தடுப்பூசி வழங்காதது ஏன்?19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 4 பேர் 8 விக்கெட்டுகள் ராஜ்கோட் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில்கூட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தை நன்கு புரிந்து அதற்கு ஏற்றபடி பந்துவீசினர். அதுமட்டுமல்லாமல் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்துடன் களமிறங்கி கட்டம்கட்டி தூக்கினர். குறிப்பாக சாம்ஸனுக்கு பவுன்ஸர் பந்துவீச்சு எரிச்சலைத் தரும் என்பதைத் தெரிந்து ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்ஸராக வீசி விக்கெட்டை வீழ்த்தினார். மார்க் உட்டின் 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துவீச்சு, சூர்யகுமார் விக்கெட்டை பதம் பார்த்தது. இந்தத் தொடரில் அறிமுகமாகிய பிரென்டன் கார்ஸ், ஓவர்டன் என இருவரும் இந்திய பேட்டர்களுக்கு சரியான லைன் லென்த்தில் வீசி திணறவிட்டனர். ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணியில் டக்கெட் அரைசதம் அடித்திருந்தார். இங்கிலாந்து வெற்றிக்கு காரணம் என்ன? இங்கிலாந்து அணியினர் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருக்கும் ஒரு திட்டத்துடன் வந்து அதை களத்தில் சரியாகப் பயன்படுத்தினர். கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை. எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்யலாம், எந்த பேட்டருக்கு எவ்வாறு பீல்டிங் அமைக்கலாம் எனத் தெரிந்து அதை சரியாக அமைத்தார். சூர்யகுமார் யாதவுக்கு அதிவேகமாக பந்துவீசினால் சிக்ஸர் அல்லது விக்கெட் இழப்பார் எனத் தெரிந்து மார்க் உட்டை பந்துவீசச் செய்தார். சாம்ஸனுக்கு விரித்த வலையில் அவரி எளிதாக வீழ்ந்தார். இதுபோல் ஒவ்வொரு வீரரையும் கட்டம்கட்டி இங்கிலாந்து அணி தூக்கியது. இங்கிலாந்து அணியிலும் எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. டக்கெட் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். பட்லர் 24 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் லிவிங்ஸ்டோன் பிஞ்ச் ஹிட்டராக ஆடியவிதம் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. இந்த மைதானத்தில் 171 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் அதை சேஸ் செய்யவிடாமல் இங்கிலாந்து அணியினர் தங்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் டிபெண்ட் செய்துள்ளார்கள் என்பதில்தான் அவர்களது வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpdx2xzyypeo
  36. பாடல் மூன்று - புத்தம் புது காலை பொன்னிற வேளை ----------------------------------------------------------------------------------- வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும் குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார். ஊரில் ஒரு சின்னப் பாடசாலை அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட வெறும் காணிக்குள் இந்த வீடியோ படக்காட்சி நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு கட்டணம், சின்னவர்களுக்கு ஒரு சின்னக் கட்டணம் என்று அனுமதியின் விலை இருக்கும். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கேள்விப்பட்ட 'தரை டிக்கெட்' தான் இது. தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள கொட்டைகைகள் எனப்படும் தியேட்டர்களில் மண்ணைக் சின்னதாக குவித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து திரையில் ஓடும் படங்களை ஒரு காலத்தில் பார்த்திருக்கின்றார்கள். இங்கும் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு அமர வேண்டியதுதான். பல வீடுகளில் படிக்கும் பிள்ளைகளை இந்த மாதிரியான வீடியோ படங்கள் ஓடும் இடங்களுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். என் வீட்டில் அனுமதி இலவசம் தான், ஆனால் காசு கொடுக்கமாட்டார்கள். என்ன படம் என்றாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா இருந்த நாட்கள் அவை. ஒரு சினிமாப் பைத்தியம் போல. அந்த வயதில் என்னவென்றே விளங்கியிருக்காத 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற படத்தை கூட முதலில் இருந்து முடிவு மட்டும் பார்த்திருக்கின்றேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்த இடங்களில் ஒன்று இந்த வீடியோ காட்சிகள் நடைபெற்ற இடங்கள். அங்கே வாசலில் போய் அங்கேயே நிற்கவேண்டும். காசு கொடுத்துப் படம் பார்க்க வருபவர்களை எல்லாம் உள்ளே விடுவார்கள். பின்னர் அன்றைய முதலாவது படம் ஆரம்பிக்கும். படம் சிறிது ஓடிய பின், அங்கு இன்னமும் காத்துக்கொண்டு நிற்கும் என் போன்றோரை, இலவசமாக, உள்ளே விடுவார்கள். முதல் படத்தில் தான் ஒரு ஆரம்பப் பகுதியை பார்க்க முடியாது. ஆனால் மற்றைய படங்களை முழுவதும் பார்த்துவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குப் போய் வசதியான ஒரு இடத்தை கூட பிடித்தும் விடலாம். ஒரு படம் முடியும் முன்னமே நித்திரையாகிப் போகின்றவர்களும் பலர் உண்டு. 'இது என்ன கண்றாவி...............' என்று எழும்பிப் போகின்றவர்களும் உண்டு. கடைசி வணக்கம் காணாமல் கண் மூடாத கூட்டங்களாக சிலர் உடன் இருப்பார்கள். ஒரு நாள் நாங்கள் வேதப் பள்ளிக்கூடம் என்று சொல்லும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வீடியோ காட்சி போட்டார்கள். வழமையான அதே நடவடிக்கைகள் தான். முதல் படத்தின் இடையில் உள்ளே விட்டார்கள். 'அலைகள் ஓய்வதில்லை' என்று கார்த்திக்கும் ராதாவும் ஊரை விட்டு அந்தப் படத்தின் முடிவில் ஓடினார்கள். 'ஓடிப் போன பின் தானே இருக்கின்றது வாழ்க்கை..........' என்று பெரியவர்கள் சொல்லிச் சிரித்தனர். வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் சின்னவர்களுக்கே, பெரியவர்கள் அவர்களின் இஷ்டப்படி வாழலாம், இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்து விடும், இவர்கள் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்று அப்போது பொதுவான ஒரு எண்ணம் மனதில் இருந்தது. அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள். ஆனால், நான் இந்தப் பாடலை அந்தப் படத்தில் பார்க்கவில்லை. நான் உள்ளே போகும் முன்னர் இந்தப் பாடல் முடிந்திருக்க வேண்டும் என்று தான் பல வருடங்கள் நினைத்து இருந்தேன். ஆனால் இளையராஜா இந்தப் பாடலை அந்தப் படத்திற்காக பதிவு செய்திருந்தார் என்றாலும், இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவே இல்லை என்ற தகவல் மிகவும் பிந்தியே எனக்கு தெரியவந்தது. காசு கொடுக்காமல் இலவசமாக ஒன்றை நுகர்ந்ததால் வந்த விளைவு இது என்றும் சொல்லலாம். கதை இத்துடன் முடியவில்லை. பின்னர் ஒரு புதுப்படம் ஒன்றில் ஒரு நடிகை, ராதா அல்ல வேறொரு நடிகை, ஒரு வீட்டுக்குள் இருந்து இந்தப் பாடலை பாடும் காட்சி இருந்தது. அதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன எனக்கு. ஒன்று, இந்தப் பாடல் எப்படி இந்தப் படத்தில் வந்தது என்று. இரண்டாவது, இந்தப் பாடலுக்கான என் மனதில் இருந்த காட்சியை இந்தப் புது இயக்குனர் சுக்குநூறாக உடைத்துப் போட்டாரே என்ற ஏக்கம். ஒரு பெண் 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை..........' என்று வீட்டுக்குள் இருந்து நடனமாடுவதை ஏற்றுக் கொள்வது இன்றுவரை சிரமமாகவே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, வீட்டுக்கு வெளியே நின்றாவது அந்த நடிகை இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
  37. வான் கோ சாகும் வரை அவனால் அங்கீகாரம் அடைய முடியவில்லை. அதே போலத் தான் அனேக படைப்பாளிகளும்.. தமது காலத்தைக் கடந்து அவர்கள் படைப்புகள் இருந்த படியால் அவை மனிதக் கூர்ப்புக்காகக் காத்திருந்தன போலும். செவ்விலக்கியங்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கணிதச் சமன்பாடுகள் போல காலம் மாறினாலும் கோலம் மாறாமல் இருக்கின்றன.
  38. @alvayan யாயினிக்கு பணம் கிடைத்திருக்காம். விழுந்தடித்து தபால்பெட்டிக்கு ஓடாமல் ஆறுதலாகவே போய்ப் பாருங்கள்.
  39. 😂 ஓணாண்டியார், என்ன முதல் சதுரத்திலேயே வந்து நிண்டு அக்ரிங் குடுக்கிறீங்கள்? பெரியார் பிராமணரை மட்டும் தான் தீவிரமாக திட்டினார். சீமான் வளர்க்கும் தமிழ் தேசியம் திராவிட அடையாளத்தினுள் மலையாளி, தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றையும் திட்டி, "வாழ வரலாம் ஆள வரக் கூடாது" என்றெல்லாம் துவேஷம் பேசுவது தெரியாத மாதிரி என்ன நடிப்பையா இது? உங்களுக்கு "பச்சைத் தமிழன்" அடையாளம் வேணுமெண்டால் அணிந்து கொள்ளலாம், அதை விட்டு விட்டு வேறு மொழிவழி மூதாதையர் கொண்ட தமிழக மக்களை மஞ்சள் தமிழன் என்று முட்டாள் தனமாக வகைப் படுத்தல் யார் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?
  40. அருமை அண்ணா, அருமை. சில அவதானிப்புகள். 1. சீமான் சாதி அரசியலை வெறுமனே கடந்து போவவர் மட்டும் அல்ல, அருந்ததியர் மீது நேரடியாக துவேசத்தை கக்கியவர், ஆணவகொலைகளை நியாப்படுத்தியவர், சாதி தலைவர்களான முத்துராமலிங்கம் போன்றோரை தேசிய தலைவர்கள் என போற்றுபவர், தான் உட்பட சாதி எண்ணிக்கை பார்த்துத்தான் தேர்தல் சீட் கொடுப்பவர் (ஏனைய கட்சிகளை போலவே). சாதிகளை குடிகள் என சொல்லி. குடிகள்தான் இனத்தேசியத்தின் அடிப்படை என உளறியவர். 2. நீங்கள் கூறியமாதிரி தெரிந்த நீரோடை போல இல்லை, ஆனால் இந்த விடயம் பற்றி யாழில் முன்பே பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. 3. தமிழ்நாட்டு அரசியலின் உண்மை முகம் தெரிந்த உங்களை போன்ற ஒருவர் யாழுக்கு வந்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. யார் எப்படி குடைந்தாலும், யாழை விட்டு போய்விடாதீர்கள் 🙏.
  41. அவர் இனி இந்தத் திரியில் எழுதமாட்டார் என்று சபதம் எடுத்துவிட்டார் எனவே இனி எதுவும் எழுதமாட்டார்!😂
  42. சீமானின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. அன்றிலிருந்து அவர் தலைவர் பிபாகரனுடனும், விடுதலைப் புலி வீரர்களுடனும் இணைந்த படங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்போதெல்லாம் மௌனமாக இருந்த அமரதாஸ் இப்போது ஆரவாரப்படுவதன் நோக்கம் என்ன? சந்தேகமாக இருக்கிறது.🤔
  43. இவர் செய்தியை காவி வரும் messenger இல்லை அண்ணா - அவரே மெசேஜ் சொல்லுகிறார். உதாரணமாக மகிந்த சீமானை ஆதரித்தால்- மகிந்தவின் ரெக்கோர்ட்டையும் பற்றி கதைப்பது போலவே இது. ஆகவே அவரை சூட் பண்ணலாம். ———- அண்மையில் சந்தோஷ், அமரதாஸ், ராஜ்குமார், கார்திக், வேல்முருகன் சொல்வது இதைத்தான்👇 1. சீமான் தலைவர் போட்டோ என நாம் காண்பவை - போலியானவை 2. ஆனால் தலைவரை சீமான் சில நிமிடங்கள் சந்தித்தார் 3. இது வெறும் ஹாய், ஹவ் ஆர் யூ சந்திப்பு. இதன் போட்டோவும், வீடியோவும் சந்தோஷ் வசம் உள்ளது. 5. துப்பாக்கி பயிற்சி ஏதும் கொடுக்கபடவில்லை. அது எல்லாளன் படபிடிப்பு தளத்தில் சீமான் ஆசை பட்டு துவக்குடன் போஸ் கொடுத்து எடுத்த படம். இதன் ஜியோ லொக்கேசன் உள்ள மூலப்பிரதியிம் சந்தோசிடம் உண்டு. 4. பாலாமை கறி, கடலுணவு சாப்பிடாத சந்தோசுக்கு, சந்தோசை ஏமாற்றி ஆட்டுக்கறி என புலிகள் கொடுத்தது. அதை தன் கதை என சீமான் சொல்கிறார். இதை போல தடா சந்திரசேகரனனுக்கு நடந்ததையும் தனது என்கிறார். 5. தலைவரோ மதிவதனியோ சீமானை வீட்டுக்கு கூப்பிட்டு கையால் சாப்பாடு போட்டு, மணிக்கணக்கில் அரசியல் பேசவில்லை. (இது ஈழ போராட்டத்தை அனுபவித்தோருக்கு எப்போதோ தெரிந்த விடயம்). 6. புலிகள் சீமானை அதிகம் நம்பவில்லை( இதுவும் புலிகளை பற்றி அறிந்தோருக்கு புதிய செய்தி அல்ல). 7. விஜி அண்ணியை அருகில் வைத்து கொண்டு சாவுகளத்தில் இருந்து பேசிய சேரலாதனுடன் ஸ்கைப் பேசியதால், சேரலாதன் சீமான் தொடர்பை முறித்து கொண்டார். 7. சூசை போன் எடுத்தது சந்தோசுக்கு. அந்த முழு உரையாடல் சந்தோஷ் வசம் உள்ளது. அதில் சீமானை போலவே ஏனையோர், வைகோ, மணி யையும் சூசை குறிப்பிட்டார். 👆 இவை இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்வில்லை. ஆனால் சீமான் கதைகள் போல அல்லாமல் இந்த கதையாடலில் (narrative) அதிக உள்முரண்கள் இல்லை. அத்தோடு புலிகளின் சந்தேககுணம், இயங்கும் விதத்துடனும் இது ஒத்து போகிறது.
  44. டிசே இளங்கோவின் முகநூலில் இருந்து.. இரவி (கனடா) இலங்கைக்குச் சென்றபோது காலமாகிவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியாது இருக்கின்றது. ஒரு காலத்தில் நான், இரவி, போல் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம். அந்தக்காலங்களில் நாம் அடிக்கடி கோப்பிக்கடைகளில் சந்திப்பதோடு, பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்தும் கொண்டிருந்தோம். இவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதால் எப்போதும் என்னில் தனிப்பட்ட கவனமெடுத்து என்னைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலங்களில் என் தனிப்பட்ட வாழ்வின் தளம்பல்கள் பற்றிப் பகிரும் நண்பர்களாக இவர்களே இருந்தார்கள். பின்னர், காலத்தின் நீட்சியில் சில காரணங்களால் எமக்குள் இடைவெளிகள் ஏற்பட்டபோது, அதையும் வாழ்வின் இயல்பென எடுத்து நகரவும் செய்திருந்தோம். இதையெழுதும் இந்தக் கணத்திலும் இரவி நம்மிடையே இல்லையென்பதை மனம் மறுதலிக்கவே செய்கிறது. கீழே வருவது இரவியின் பிறந்தநாள் ஒன்றின்போது எழுதியது. ------------------------------------------------------------------ இரவியை அவரது பெயரால் தனிததுச் சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியாது. செல்வத்தை 'காலம்' செல்வம் என்று அழைப்பது போல, இரவியை 'வைகறை' இரவியெனச் சொன்னால்தான் அவர் யாரென்று பலருக்கு விளங்கும். 'வைகறை' கனடாவிலிருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகை. எனக்கு 'வைகறை'யுடனும், இரவியுடனும் உறவு எப்படி மலர்ந்தென்பதே சற்றுச் சுவாரசியமானது. நமது சினிமாக் காதல்களில் முதலில் சண்டைபிடித்து பிறகு காதல் வருவதுபோல, எனக்கும் இலக்கியம்/அரசியல் சார்ந்து வந்த அநேக நட்புக்கள் முரணிலிருந்து தொடங்கி பிறகுதான் நட்பாக முகிழ்ந்திருக்கின்றன. அப்படித்தான் எனக்கும் 'வைகறை'யோடான உறவும் தொடங்கியது. எனது கதையொன்றை ('கதைசொல்லியும், Gang Fights'ம்?) 'வைகறை' தாமாகவே தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தபோதும், கதையின் தொடர்ச்சி இன்னொரு பக்கத்தில் தொடர்வதைச் சரியாகக் குறிப்பிடாததில் சற்றுக் கோபம் வந்து (பத்திரிகையில் இருந்த தொடர்பிலக்கத்திற்கு) அழைத்தேன். கவனயீனம் காரணமாக பிழையாகிவிட்டது என மன்னிப்பைக் கோரியபடிதான் இரவி முதன்முதலாகப் பேசியது ஞாபகம். பிறகு, வைகறையில் தொடர்ந்து எழுதும்படியும், காரியாலயத்திற்கு வந்து சந்திக்கும்படியும் அவர் அழைப்பு விடுத்ததும் கடந்த காலம். கனடாவில் பத்திரிகை நடாத்தி இலாபமீட்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் 'வைகறை' நின்றபோது இரவிக்கு நிறையக் கடன்கள் இருந்தது என்பது தெரியும். அதுவல்ல முக்கியம், வைகறை வந்துகொண்டிருந்த காலத்தில் அரசியல் காரணங்களால் வைகறை மிரட்டப்பட்டிருந்ததும், சிலர் தம்மை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததும், காரின் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டதுமென பல்வேறு அழுத்தங்களினூடாகவே பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. ஒருமுறை இங்கிருக்கும் ஒரு தமிழ் வைத்தியர் மீது வேற்றின நோயாளியினால் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு செய்யப்பட்டபோது, மற்றப் பத்திரிகைகள் எல்லாம் அதைப் பிரசுரிக்கத் தயங்கி பின்வாங்கியபோது, எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சம்பவத்தை 'வைகறை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தச் செயதி பிரசுரிக்கப்பட்ட காரணத்தாலேயே பல்வேறு இடங்களில் 'வைகறை' கடைகளிலிருந்து பலவந்தமாக தூக்கியெறியப்பட்டுமிட்டிருக்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல, வேறு சில சந்தர்ப்பங்களிலும் பிரதிகள் கடைகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் இரவி தனிப்பட்ட பேச்சிலே எம்மோடு உரையாடியிருக்கின்றாரேயன்றி 'வைகறை'யில் பொதுப்படையாக இந்தச் சம்பவங்கள் எதையும் எழுதியதுமில்லை. உண்மையில், இந்த நிதானமே வைகறையை அதை நடத்தியவர்களின் அரசியல் பிடிக்காதபோதும், பல்வேறு மாற்றுக் கருத்துடையவர்களையும் வாசிக்க வைத்திருக்கின்றது. அதை நேரடியாக நானும் நண்பர்களும் பல்வேறிடங்களில் கேட்டிருக்கின்றோம்/ கேள்விப்பட்டுமிருக்கின்றோம். ஒரு பத்திரிகையை நடத்துவது மட்டுமில்லை, அதில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் அறம் சார்ந்த விடயங்களிலும் 'வைகறை' மிகுந்த கவனம் காட்டியிருக்கின்றது. எத்தனையோ நல்ல கட்டுரைகளை பிரசுரிக்க விரும்பியும், எமது போராட்டம் சார்ந்து 'பாஸிசம்' போன்ற (அதன் அர்த்தத்தை எவ்வகையில் பாவிப்பதென்ற கிஞ்சித்தும் அக்கறையில்லாத பலரே நம் அரசியல் கருத்தாளர்கள் என்பது வேறுவிடயம்) சொற்கள் பாவிக்கப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரிக்காமலே தவிர்த்துமிருக்கின்றார். இயன்றளவு நமது கருத்துக்களை, நம்மோடு முரண்படுபவர்களையும் பொறுமையாக வாசிக்க வைக்கவேண்டுமென வைகறை நிறைய பாடுபட்டிருக்கின்றது. 'வைகறை'யின் இந்த நிதானமான அணுகுமுறையை நானிங்கே வந்த வேறெந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை. ஆகவேதான் பல்வேறுபட்ட அரசியல்/இலக்கிய கருத்துக்களையுடைய எல்லோராலும் தயக்கமின்றி வைகறையில் எழுத முடிந்திருக்கின்றது. எழுதப்பட்ட ஆசிரியத்துவம் (editorial) எல்லாம் மிகவும் கவனம் எடுத்தே எழுதப்பட்டிருக்கினறன. அவ்வாறிருந்தும் சிலவேளைகளில் ஆசிரியத்துவம் தவறாக விளங்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் இன்னும் கவனமாக நாம் அதை எழுதியிருக்கலாமென இரவி சொல்லிக் கவலைப்பட்டதும் எனக்கு நினைவிலுண்டு. வைகறை சார்ந்து இரண்டு தனிப்பட்ட என் அனுபவங்களை நான் சொல்லியாக வேண்டும். வைகறையில் கட்டுரைகள், பத்திகள் போல சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்குமென தனிப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருமுறையும் யாரேனும் கவிஞரொருவரின் நான்கைந்து கவிதைகளோடு அவர்களைப் பற்றிய அறிமுகம் வந்துகொண்டிருக்கும். அவ்வாறு என் கவிதைகள் வெளிவநத்போது, அதற்குப் பொறுப்பாயிருந்தவர் - என் வலைப்பதிவிலிருந்து- வெட்டி ஒட்டியபோது சில கவிதைகள் மாறி வெட்டி ஒட்டப்பட்டு பிரசுரமாயிருந்தன. பத்திரிகையைக் கடையில் எடுத்தவுடனேயே இவ்வாறு வந்திருப்பதைக் கண்டு - வழமை போல இரவிக்கு தொலைபேசியில் அழைத்து- இப்படி கவனமில்லாது பிரசுரிப்பதென்றால் அதைவிடப் பிரசுரிக்காமலே இருந்தாலே நல்லது, அதுவே கவிதைக்கு தரும் மரியாதையாக இருக்குமென தாறுமாறாய்ப் பேசியதும் நினைவிலிருக்கிறது. அடுத்த வாரம் கவிதைகள் உரிய முறையில் -தவறுக்கு மன்னிப்புக் கேட்டு - பிரசுரமாயிருந்தன. அது போல பாலஸ்தீனம் பற்றிய என் கட்டுரையில் இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டும் தொனியிருப்பது அவ்வளவு சரியில்லை, இஸ்ரேலிய அரசு என மாற்றட்டுமா என - ஒரு வார்த்தையாயினும்- என்னிடம் அனுமதி கேட்டு மாற்றியிருந்த பத்திரிகைப் பண்பு அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. இவ்வாறான காரணங்களே இது எங்கள் 'வைகறை' என உணரச் செய்திருக்கின்றது போலும். ஒருகட்டத்தில் 'வைகறை' நின்றபோது, உடனே எதற்காகவது எதிர்வினை எழுதிப் பிரசுரிப்பதற்கு எங்களுக்கென ஒரு பத்திரிகை இல்லையேயென பல தடவைகள் கவலைப்பட்டதுண்டு. அதேபோல 'வைகறை' நின்றபின், வேறு சில பத்திரிகைகளிலிருந்து எழுத அழைப்பு வந்தபோதும், அவை சார்ந்த கருத்துநிலைக்காக மட்டுமின்றி, வைகறை போல எதையும் எழுதுவதற்கு பூரண சுதந்திரம் தரப்படுமா என்கின்ற தயக்கங்களினாலும் பிற பத்திரிகைகளில் எழுத அவ்வளவாய் விரும்பியதுமில்லை. இரவியைப் பற்றியெழுத வந்து இறுதியில் 'வைகறை'யைப் பற்றியே நிறைய எழுதவேண்டியதாகிவிட்டது. இரவி ஏதோ ஒரு இயக்கத்தில் சேரப்போய் பிறகு வேறு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பதும், நாமெல்லாம் நீங்கள் அப்படிச் சொன்னாலும், அந்த இயக்கத்திற்காய் உளவு பார்க்கத்தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீர்கள் என அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. இரவி இயக்கத்திலிருந்த நண்பர்களோடு முல்லைத்தீவுக் காட்டிற்குள் புகையில்லாது சமைத்த கதை எங்களிடையே பிரசித்தமானது. சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் ஏற்கனவே முடிந்தவற்றை மீளக் கொண்டுவருதல் என்பது கடினமானது. எனினும் 'வைகறை' ஏதேனும் ஒருவடிவத்தில் மீள வந்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். 'வைகறை'யில் எழுதியவன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு. *************
  45. 2016 தேர்தல் காலகட்டம். “நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்” - இது கோரிக்கை “கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன் இதுதான் காலச் சுழற்சி 😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.