Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19638
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3115
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20336
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/29/25 in all areas

  1. யாழ் களத்திற்கு இது தேவையில்லாத ஆணி. திரும்பத் திரும்ப பெரியார், சீமான், திமுக என்று யாழ் களம் திட்டமிட்டே அதகளப்படுத்தப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடிபடுவார்கள். நாளை சேர்ந்து கொள்வார்கள். அவர்களது அரசியலில் இலங்கைத் தமிழர் கொஞ்சம் தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது.
  2. கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே? அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.
  3. போரின் முடிவில் தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்… நோபல் பரிசும் கிடைத்திருக்கலாம். நாடும் வளம் பெற்றிருக்கும்.
  4. யாழ் களம் போன்ற தமிழ் தேசியத்தை வளர்க்கும் நோக்குடன் இருக்கும் களத்தில் எதைப் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்? தமிழ் தேசியத்தை, இனத்தூய்மை வாதம், அதற்குள் உருமறைத்த சாதிவாதம் என நச்சாக மாற்றும் ஒரு அரசியல் கட்சியின் உண்மை நிலையைச் சுட்டிக் காட்டும் செய்திகள், உண்மை வரலாறு என்பன பகிரப் பட வேண்டும். இதைச் செய்யா விட்டால் ஒரு தமிழக அரசியல் கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் பொய்யான தகவல்கள் ஈழ மக்களிடையே பரப்பப் படும். இத்தகைய பொய்ச் செய்திகளை நம்பி ஈழத் தமிழர்கள் பின் தொடர்ந்தால் எமக்கு நஷ்டம் இருக்கிறது என்பது தெரியாமல் சிலர் "போக்குவரத்துப் பொலிஸ்" வேலை செய்யப் பார்க்கிறார்களா? அல்லது யாழ் களமும் முகநூல் போல "ஹாய், ஹலோ" என்று முகமன் காட்டி விட்டுப் போகும் இடமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
  5. அதே…. ஆனால் இதில் நாம் சங்கடபட எதுவும் இல்லை என்பது என் பார்வை. கேவலமாக நடப்பவர்கள் சீமான் போன்றவர்கள், ஆனால் அந்த கேவலத்தை சுட்டி காட்டுபவர்கள் நாம். நாம் ஏன் சங்கடபட வேண்டும். இமானுவேல் சேகரன் தனக்கு சரி சமானமாக அமர்ந்து பேசி விட்டார் என்பதால்…. 80 களின் சினிமா வில்லன் போல், தன் கூலிப்படையிடம் “ஒரு ப***** பயல் எனக்கு சமனாக இருக்கும் படி செஞ்சுட்டீங்களேடா” என கொலைக்கு ஜாகை காட்டி விட்டு போனவர்தான் முத்துராமலிங்கம். இங்கே கொல்லபட்டவரும், கொலையை தூண்டியவரும் தமிழ் வம்சாவழி சாதியினர். நடவடிக்கை எடுத்தவர், தன் சாதி காரன் என்பதால் சீமான் தலையில் வைத்து ஆடும் காமராசர் (காமராசர் தமிழ் இந்து நாடார், சீமான் மலையாள கிறீஸ்தவ நாடார்) . இன்றைக்கும் இதே முத்துராமலிங்கத்தைதான் தேவர் திருமகனார் என போற்றுகிறார் சீமான். இப்படி தவறு முழுக்க எங்கோ இருக்க, பெரியாரை கொண்டு வந்து இதில் முடிகிறார். இதுகூட, ஈரோடு கிழக்கை அதன் வாக்காளரின் சாதியை மனதில் வைத்தே. தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளும் சாதியை பாவிப்பது உண்மை. ஆனால் இவ்வளவு அப்பட்டமாக, கேவலமாக, சாதி முறுகலை தூண்டும் வகையில் பாவிப்பவர் சீமான் ஒருவரே. இராமதாஸ் கூட எவ்வளவோ மாறி விட்டார். ———-/ இப்படி பட்ட ஜந்துவுக்கு எந்த சாதியினரின் பெரும்பான்மை வாக்கும் கிடைக்காது. ஆனால் இவரை நம்பி மிகுதி எல்லோரிடமும் பகையை வளர்கிறோம் நாம்.
  6. @Justin ஒரு சின்ன அல்ல பெரிய உதவி🙏. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைபெரியாரை எதிர்க்கும்/சீமானை ஆதரிக்கும் படி மாற்றிகொள்ள முடியுமா? பணய கைதிகள் பரிமாற்றம் போல - உங்களை கொடுத்து, யாழில் ஒரு 3/4 பேரை ஒவர் நைட் எனது நிலைப்பாட்டுக்கு மாற்றிகொள்ள விரும்புகிறேன் 🤣.
  7. Downlod பண்ணி பார்த்தேன், இது உண்மையிலேயே சிறப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது, இனி அமெரிக்க கம்பனிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது, செலவைகுறைத்து, இன்னும் சிறப்பான ஒன்றை தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சீனர்கள் தடை வரமுன்னரே நிறைய ஹார்ட்வேர்களை வாங்கி வைத்துள்ளார்கள், அவர்களுடைய ஆராய்ச்சிக்கு ஒருவித தேக்கமும் வரப்போவதில்லை
  8. என்னுடைய சங்கடம் எல்லாம் சாதிப் பெயர்களை சொல்வதிலும், அவற்றை எழுதுவதிலுமே, கோஷான். இந்தப் பிரிவுகள் எங்களையே அழிக்க வந்த கொடும் நோய்கள் மற்றும் அசிங்கங்கள் போல. இவர்களின் நடவடிக்கைகளை தொடராக வரிசைப்படுத்தி, இவர்கள் யார் என்ற உண்மையை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு சங்கடமே இல்லை. அதை நான் என் வழியில் செய்துகொண்டே இருக்கின்றேன். இதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது, ஜஸ்டின். இப்படியான ஒரு களத்தில் இவை நிச்சயம் பகிரப்பட வேண்டியவையே. இவை தொடர்ச்சியாக தெளிவுபடுத்தப்பட வேண்டியவையே. சைனாவின் டீப்சீக்கைவிட, அமெரிக்க - ரஷ்ய சார்பு வாதங்களை விட, இன்னும் பல இன்னோரன்ன உலக விடயங்களை விட இது மிகவும் கட்டாயமானது.
  9. லிங் தரமுடியாது.. உங்கட அவசரம் விளங்குது ஏனென்டு🤣.. நிழலிக்கு இணையவனுக்கு மோகனுக்கு தெரியும் நான் இனைச்சனா இல்லையா எண்டு.. லிங் எடுத்தாலும் போடவேண்டாம் என்டு கேட்டுக்கொள்கிறேன் நிர்வாகத்தை.. அது எனது மற்ரைய ஜடியில் இருப்பதால் நான் விரும்பவில்லை.. அவ்வளவுதான்.. வேறு காரணங்கள் இல்லை.. மற்ரது அமரதாஸ் விரும்பினால் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் அப்போ அவருக்கு தெரியும்..
  10. கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி... திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார். பிறகு நடந்தவை... “குட் ஈவினிங் குமார் சார்” - இது கேட்கீப்பர். உள்ளே வந்த மனைவி “அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?” குமார் “சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.” பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர் “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?”... குமார் சார் மனைவியிடம்.. “வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….” அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி “என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?” . ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது “என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?... 😳😳😳😳 பின்குறிப்பு: குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு.... 😂 🤣 Paranji Sankar
  11. நீங்கள் இருவர் மாத்திரமல்ல. பலருக்கும் வீட்டில் நிலமை இதுதான். யாழை பூட் மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
  12. நம்பி டவுன் லோடு பண்ணலாமா? சீன தயாரிப்பு… பொறகு கோஷான் குளியல் வீடியோ வந்தால்?🤣
  13. இன்று உண்மையாகவே $200 டொலர்ஸ் தபாலில் வந்திருக்கிறது.
  14. நன்றி கோஷான். நீங்களும், இன்னும் சிலரும் இது சம்பந்தமாக முன்னரும் எழுதியிருப்பீர்கள் என்று தான் நினைத்தேன். முன்னரே நான் சொன்னது போல, யாழை விட்டுப் போகமாட்டேன், ஆனால் இக்கட்டான சமயங்களில் தேவை என்றால் நாளுக்கு நான்கு கவிதைகள் என்ற கணக்கில் எழுதிப் போடுவதாக உள்ளேன்............🤣. முன்னோர்களும் தமிழர்களாகவே இருந்து, இன்றும் அவர்களின் தாய்மொழி தமிழாகவும் இருக்கும் எம் மக்களில் ஒரு பிரிவினரையே தள்ளி வைப்பதை பற்றித் தான் நான் குறிப்பிட்டிருந்தேன், ஓணாண்டியார். கோஷான் மேலே எழுதியிருப்பதும் இதையொட்டியே. தாய்மொழியை வைத்து ஒரு அடையாளம் கொள்வதில் உயர்வு தாழ்வு கிடையவே கிடையாது. பிறப்பால் வரும் எந்த அடையாளத்தாலும் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது.
  15. முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி. இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன். மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன. சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன். ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள். நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே. தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு. அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே. பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன். சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்.
  16. ஒருவரை திட்டமிட்டு இழிவுபடுத்துவது தற்காலிக பின்னடைவை தரலாம் ஆனால் வரலாற்றை திருத்தி விட முடியாது. ஆனால் நாம் யாரை எதிர்த்து பேச வேண்டுமோ, எவரிடமிருந்து நம் உரிமையை பெறவேண்டுமோ அதை செய்யாமல், தவறான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். திராவிடம் தோற்றாலும் தமிழ் தேசியம் தோற்றாலும் அவதிப்படப்போவது தமிழர்கள் தான். காரணம் தமிழ்நாட்டில் திராவிடம் தோற்றால் தமிழ் தேசியம் ஏற்படப்போவதில்லை, இந்திய தேசியமே மேழெம். அதே போல் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
  17. 29 Jan, 2025 | 10:48 AM இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள். இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இந்தியா மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுக்குள் கடற்படையினர் ஏறியுள்ளனர். இவ்வாறு ஏறிய மீனவர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய மீனவர்கள் தயாரானபோது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம் இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள் எமது மீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று. அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர். நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள். எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக் காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது. எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு. கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன இவை கடந்த காலங்களிலும் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது ; அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk
  18. இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்! Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST] ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார். இமானுவேல் சேகரன் படுகொலை- முத்துராமலிங்க தேவர்- பெரியார் இதனால் நம்முடைய அய்யா முத்துராமலிங்க தேவரை கேள்வி கேட்டுவிட்டார்களே என்ற கோபத்தில் இமானுவேல் சேகரனை பக்கத்தில் இருந்த இளைஞர்கள் வெட்டி கொலை செய்துவிடுகின்றனர். முத்துராமலிங்க தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அது தெரியாமல் நடந்துவிடுகிறது. ஆனால் பெரியார்தான் திரும்ப திரும்ப சொல்லி காமராஜரை வலியுறுத்தி முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வைத்தார். இவ்வாறு சீமான் பேசினார். 1957-ல் முதுகுளத்தூரில் நடந்தது என்ன? சீமானுக்கு வன்னி அரசு கண்டனம் சீமான் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது: கடந்த 1957 ல் முதுகுளத்தூரில் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.இரண்டாவது பொதுத்தேர்தலை ஒட்டி எழுந்த பதற்றம் அது. முகவை தலித்மக்கள் அப்போது காங்கிரசை ஆதரித்தனர். திரு.உ.முத்துராமலிங்கம் அவர்கள் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) பார்வர்ட் பிளாக் சார்பாக தேர்தலில் நின்றார். தேர்தலில் பள்ளர்கள் ( தேவேந்திர குல வேளாளர்கள்) உ.முத்துராமலிங்கத்திற்கு வாக்களிக்காததால் அவர்களது உடமைகளை தேவர் சாதியினர் சூறையாடினர். உச்ச பட்சமாக கடம்பாங்குளத்தில் 9 பள்ளர்களை தேவர்சாதியினர் தூக்கி பத்ரகாளிக்கு பலியிடப்போவதாக அறிவித்தனர்; சட்டசபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு தமிழகம் முழுவதும் பதற்றமானது. முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்-தேவர் உரசல் மோதல் வெடித்தது.இதனை தடுக்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் சி.வி.ஆர் பணிக்கர் சமாதனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 1957 செப்டம்பர் 10 ம் தேதி முதுகுளத்தூரில் சமாதானக்கூட்டம் கூட்டப்பட்டது. ( இந்தக்கூட்டத்தை தான் பஞ்சாயத்து என சொல்கிறார் சீமான்) இக்கூட்டத்தில் திரு.பெருமாள் பீட்டர், திரு.இம்மானுவேல் சேகரன் திரு.உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உ.முத்துராமலிங்கம் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர்) சமாதானக்கூட்டத்திற்கு காலதாமதத்துடன் வந்தார். பெருமாள் பீட்டரும்,இம்மானுவேலும் உ.முத்துராமலிங்கம் வந்தபோது எழுந்து வணக்கமிடமில்லை.மற்றவர்கள் எழுந்து வணக்கமிட்டனர். உ.முத்துராமலிங்கம் பள்ளர் சாதி பிரதிநிதியாக இம்மானுவேலை ஏற்க மறுத்தார்.பரமக்குடி தொகுதியின் பார்வர்ட் பிளாக் எம் எல் ஏ வான பெருமாள் குடும்பனை பள்ளர் பிரதிநிதியாக ஏற்பதாக சொன்னார். இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.கலெக்டர் தலையீட்டினால் தனித்தனி சமாதானத் தாள்களில் இருவரும் கையொப்பமிட்டனர் சமாதானக்கூட்டம் முடிந்து கோபத்தோடு வெளியேறிய உ.முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களைப்பார்த்து " ஒரு பள்ளப்பயலை எனக்கு சமமா வளர்த்துவிட்டீங்களே" என் கோபத்துடன் பேசினார்.இதன் விளைவாக அடுத்தநாள் செப்டர்பர் 11 ம் தேதியே இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உ. முத்துராமலிங்கமும் கைது செய்யப்பட்டார். உண்மை இப்படி இருக்க, ஏதோ பஞ்சாயத்துக்கு அழைத்து, தெரியாமல் கொலை நடந்ததாக திசை திருப்புகிறார் சாதி வெறியர் சீமான். முழுக்க முழுக்க சாதி வெறியால் திட்டமிட்டு நடைப்பெற்ற படுகொலை என அன்றைக்கே ஊடகவியலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார். சாதி வெறியர்களை விட ஆபத்தான பேர்வழி தான் சீமான் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seemans-new-controversy-on-immanuel-sekaran-murder-muthuramalinga-thevar-arrested-and-periyar-675441.html?ref_medium=Mobile&ref_source=OI-EN&ref_campaign=Topic-Article ——————— @ரசோதரன் நேற்று நான் சீமாம் சாதியத்தை விலகி நடப்பவர் அல்ல, அதை தூண்டி விட்டு குளிர்காயும் ஓநாய் என எழுதியதை 24 மணிக்குள் அண்ணன் நிரூபித்துள்ளார்.
  19. தலையிடாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் சீமான் வந்து…. தன் சுய நலனுக்காக எம்மை தலையிட வைத்து விட்டார். இனி தலையிடாமல் இருந்தால் … நாம் எல்லோரும் நா த க சார்பானவர்கள் என ஏனையோர் கருதுவர். இப்போதே கருதுகிறார்கள். தமிழ் நாட்டில் இப்போ தலைவரும், புலிகளும், ஈழத்தமிழரும் வெறுக்கப்படுவதுபோல், 2009 க்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை, 91 இல் கூட. ஆகவே இனி தலையிடாமை என்பது எமக்கு ஒரு தெரிவல்ல. கறந்தபால் மடி ஏறாது.
  20. பிரபலங்களின் இயற்பெயர் தெரியுமா?
  21. இது நிரூபிக்கப்பட முடியாத அமரதாஸை களங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய்ப் பதிவு! நாங்களோ எங்கட ஆக்களோ அப்பிடியில்லை நீங்கள் பழகுகின்ற சமுகம் அப்பிடியாக்கும்!😂 ஒரு பொய்யச் சொன்னா அத மூடிமறைக்கப்படுற பாடுகள் இருக்கே அது இயாசு நாதர் கூடப் படாத பாடு!😂 நன்றி வணக்கம்!
  22. இல்லை.தாமாதமாக பெய்த மழையால் அறுவடை பிந்துகிறது.இதே காரனத்தால் பலரது வெள்ளாண்மை முற்றிலும் நாசம்.😑
  23. மிகச் சிறப்பான பதிவு. முடிந்தளவு பதிலலிக்கிறேன். உங்கள் முன்னைய பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பு. தொடர்ந்து இணைந்திருங்கள். @நிழலி இப்படி ஆரோக்கியமான விவாதங்களை நிர்வாகம் ஊக்கிவிக்க வேண்டும். அடுத்தவர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க விடாமல், புகுந்து அடாவடி பண்ணுவது மிகவும் தவறு. வெறித்தனமாக அவமதிப்பான சொற்களை, எந்த அரசியல்வாதி மீதும் பாவிப்பதை கட்டாயமாக தடுக்க வேண்டும். விடயம் இல்லா, அரைக் குடங்கள் தளும்பும் என இங்கே நீருபணமாகியுள்ளது. எம்மை அழித்த மகிந்தவை கூட இப்படி யாருமே திட்டவில்லை. தேவையற்ற வசைபாடல்கள், தளத்தின் நன்மதிப்பை கெடுக்கும. நன்றி.
  24. புலம் பெயர்ந்து வாழும் புலிப் போராளிகள் சேர்ந்து சீமானின் வன்னி வருகை குறித்து கொடுத்த பேட்டி. இது சீமான் மீதான அவர்களின் நம்பிக்கையினை தெரியப்படுத்துவது மட்டுமல்ல இங்கே, ஆச்சோ, போச்சோ என்று வானத்துக்கும், பூமிக்கும் குதித்தவர்கள் முகத்திலும் கரியை பூசி விட்டனர். பஞ்சாயத்தை கலைச்சுப்போட்டு கிளம்புக்கப்பா.... எல்லாம் வேஸ்டு.....
  25. ஒன்பதைச் சேர்த்தா 900 தானே வரும். புச்சியம் என்றால் இரண்டு 00 தானே போடுவார்கள்? கதையை இணைத்த தமிழ் சிறிக்கு 0. முன்னுக்கு எதை வேணுமானாலும் போட்டுக்க.
  26. மேலுள்ளது வசதி உள்ளவர்களது உற்சாக பானம் .கீழுள்ளது வறியவர்கள்/நடுத்தரவர்க்கத்தின் உற்சாக பானம்.
  27. சிங்கன்… நான் எம்பி…என் காரில்தான் வருவேன் என ஒரே அடமாம்🤣. # சின்னத்தம்பி ஹைகோர்ட்டை செத்தான்
  28. நான் ரெடி…ஏற்பாடுகளை தொடங்குங்கோ….🤣
  29. என்னது பெரியார் பிராமணர்களை மாத்திரம்தான் திட்டினாரா? பார்ப்பனர்கள், துலுக்கர்கள், கிறீஸ்தவர்கள், எம்மைவிட கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் தமிழ்நாட்டிற்கு எப்போதுமே ஆபத்து. இவர்கள் இந்நாட்டவர்கள் இல்லை. இவர்களை துரத்தவேண்டும் என்று பேசிய ஈவேராவிற்கு இப்படி முட்டுக்கொடுக்கிறீர்கள். ஈவேராவின் பகுத்தறிவு, பெண்ணிய மேம்பாடு, பெண்ணடிமைத்தனத்திற்கெதிரான குரல், தமிழ் மொழியின் தந்தை என்று திராவிட கட்சிகள் கட்டியமைத்த பிம்பமெல்லாம் இப்போ கிழிந்து தொங்கத்தொடங்கியுள்ளது. ஈவேராவின் எல்லா சொத்துக்களையும் தனதாக்கிக்கொண்ட வீரமணி ஐயா மனம்வைத்தால் இன்னும் வரும்..
  30. காலம் இருக்குது தானே நான் சுவிஸ் வந்த பின் மகளுடன் சேர்ந்து எனது பதில்களை தாறன்.
  31. உங்களின் குடும்ப ஆட்சியால் ஏமாற்றமடைந்த மக்களே அனுராவை தேர்ந்தெடுத்தனர். ஆகவே அவர்கள் சார்பாக கோரிக்கை வைப்பதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நாங்கள் ஊழல் செய்திருந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விட்ட இவர், இப்போ தம்பியை கைது செய்தவுடன், எங்களை கைதுசெய்தால் பொருட்கள் விலையேறுமென பயமுறுத்துகிறார். தந்தையாரோ, எப்போ அரசாங்க வாசஸ்தலத்தை விட்டு நான் வெளியேறவேண்டுமென நேரடியாக எனக்கு அறியத்தாருங்கள், நான் வெளியேறி விடுகிறேன் என கோரிக்கை வைக்கிறார். சரியான நகர்வை நோக்கி பயணிக்கிறாரோ அநுர? தேர்ந்தெடுத்த மக்களே விரட்டி விட்டார்கள், தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்குபோடுவதை நிறுத்திவிட்டார்கள், தொடர்ந்து சிங்கள மக்களும் கைவிட்டுவிட்டார்கள். இவர்கள் இப்போதும் புலிகளை மறக்கமுடியாமல் நோபல் பரிசு எதிர்பார்ப்பில். அரசியல் அரை விசர்களுக்கு மக்களின் நிராகரிப்பு, முழு விசராக்கிவிட்டது போலிருக்கிறது.
  32. ஒரு சிறு திருத்தம் அவர் மலையாளிகளை திட்டியது கிடையாது, அவர் தன் இனத்தை காட்டி கொடுக்கும் கோடாரி காம்பு கிடையாது.
  33. பாடல் மூன்று - புத்தம் புது காலை பொன்னிற வேளை ----------------------------------------------------------------------------------- வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும் குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார். ஊரில் ஒரு சின்னப் பாடசாலை அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட வெறும் காணிக்குள் இந்த வீடியோ படக்காட்சி நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு கட்டணம், சின்னவர்களுக்கு ஒரு சின்னக் கட்டணம் என்று அனுமதியின் விலை இருக்கும். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கேள்விப்பட்ட 'தரை டிக்கெட்' தான் இது. தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள கொட்டைகைகள் எனப்படும் தியேட்டர்களில் மண்ணைக் சின்னதாக குவித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து திரையில் ஓடும் படங்களை ஒரு காலத்தில் பார்த்திருக்கின்றார்கள். இங்கும் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு அமர வேண்டியதுதான். பல வீடுகளில் படிக்கும் பிள்ளைகளை இந்த மாதிரியான வீடியோ படங்கள் ஓடும் இடங்களுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். என் வீட்டில் அனுமதி இலவசம் தான், ஆனால் காசு கொடுக்கமாட்டார்கள். என்ன படம் என்றாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா இருந்த நாட்கள் அவை. ஒரு சினிமாப் பைத்தியம் போல. அந்த வயதில் என்னவென்றே விளங்கியிருக்காத 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற படத்தை கூட முதலில் இருந்து முடிவு மட்டும் பார்த்திருக்கின்றேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்த இடங்களில் ஒன்று இந்த வீடியோ காட்சிகள் நடைபெற்ற இடங்கள். அங்கே வாசலில் போய் அங்கேயே நிற்கவேண்டும். காசு கொடுத்துப் படம் பார்க்க வருபவர்களை எல்லாம் உள்ளே விடுவார்கள். பின்னர் அன்றைய முதலாவது படம் ஆரம்பிக்கும். படம் சிறிது ஓடிய பின், அங்கு இன்னமும் காத்துக்கொண்டு நிற்கும் என் போன்றோரை, இலவசமாக, உள்ளே விடுவார்கள். முதல் படத்தில் தான் ஒரு ஆரம்பப் பகுதியை பார்க்க முடியாது. ஆனால் மற்றைய படங்களை முழுவதும் பார்த்துவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குப் போய் வசதியான ஒரு இடத்தை கூட பிடித்தும் விடலாம். ஒரு படம் முடியும் முன்னமே நித்திரையாகிப் போகின்றவர்களும் பலர் உண்டு. 'இது என்ன கண்றாவி...............' என்று எழும்பிப் போகின்றவர்களும் உண்டு. கடைசி வணக்கம் காணாமல் கண் மூடாத கூட்டங்களாக சிலர் உடன் இருப்பார்கள். ஒரு நாள் நாங்கள் வேதப் பள்ளிக்கூடம் என்று சொல்லும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வீடியோ காட்சி போட்டார்கள். வழமையான அதே நடவடிக்கைகள் தான். முதல் படத்தின் இடையில் உள்ளே விட்டார்கள். 'அலைகள் ஓய்வதில்லை' என்று கார்த்திக்கும் ராதாவும் ஊரை விட்டு அந்தப் படத்தின் முடிவில் ஓடினார்கள். 'ஓடிப் போன பின் தானே இருக்கின்றது வாழ்க்கை..........' என்று பெரியவர்கள் சொல்லிச் சிரித்தனர். வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் சின்னவர்களுக்கே, பெரியவர்கள் அவர்களின் இஷ்டப்படி வாழலாம், இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்து விடும், இவர்கள் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்று அப்போது பொதுவான ஒரு எண்ணம் மனதில் இருந்தது. அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள். ஆனால், நான் இந்தப் பாடலை அந்தப் படத்தில் பார்க்கவில்லை. நான் உள்ளே போகும் முன்னர் இந்தப் பாடல் முடிந்திருக்க வேண்டும் என்று தான் பல வருடங்கள் நினைத்து இருந்தேன். ஆனால் இளையராஜா இந்தப் பாடலை அந்தப் படத்திற்காக பதிவு செய்திருந்தார் என்றாலும், இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவே இல்லை என்ற தகவல் மிகவும் பிந்தியே எனக்கு தெரியவந்தது. காசு கொடுக்காமல் இலவசமாக ஒன்றை நுகர்ந்ததால் வந்த விளைவு இது என்றும் சொல்லலாம். கதை இத்துடன் முடியவில்லை. பின்னர் ஒரு புதுப்படம் ஒன்றில் ஒரு நடிகை, ராதா அல்ல வேறொரு நடிகை, ஒரு வீட்டுக்குள் இருந்து இந்தப் பாடலை பாடும் காட்சி இருந்தது. அதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன எனக்கு. ஒன்று, இந்தப் பாடல் எப்படி இந்தப் படத்தில் வந்தது என்று. இரண்டாவது, இந்தப் பாடலுக்கான என் மனதில் இருந்த காட்சியை இந்தப் புது இயக்குனர் சுக்குநூறாக உடைத்துப் போட்டாரே என்ற ஏக்கம். ஒரு பெண் 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை..........' என்று வீட்டுக்குள் இருந்து நடனமாடுவதை ஏற்றுக் கொள்வது இன்றுவரை சிரமமாகவே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, வீட்டுக்கு வெளியே நின்றாவது அந்த நடிகை இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
  34. வான் கோ சாகும் வரை அவனால் அங்கீகாரம் அடைய முடியவில்லை. அதே போலத் தான் அனேக படைப்பாளிகளும்.. தமது காலத்தைக் கடந்து அவர்கள் படைப்புகள் இருந்த படியால் அவை மனிதக் கூர்ப்புக்காகக் காத்திருந்தன போலும். செவ்விலக்கியங்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கணிதச் சமன்பாடுகள் போல காலம் மாறினாலும் கோலம் மாறாமல் இருக்கின்றன.
  35. படைப்பாளியையும் நுகர்வோனையும் நூலிழையால் கோர்க்கும் படைப்பு எதுவும் இலக்கியமே என்பது என் தாழ்வான கருத்து. இதில் அழகியல், கருத்தியல் ஒத்துப் போகும் போது ஒரு ஒத்திசைவு வரலாம். ஆனால் படைப்பாளிகள் எல்லாம் இலட்சிய வாயுக்கள் போல இருப்பார்கள் என்று எதிர்பார்க்க ஏலாது. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சார்பு இருக்கும். ஜனரஞ்சகமாக எழுதப் போனால் அந்த இலக்கியம் நீர்த்துப் போனதாகத் தான் இருக்க முடியும். சம்பந்தமில்லாமல் ஏதோ எழுதி இருந்தால் மன்னியுங்கள் - எனது மனைவி சொல்லுறவநெடுக, நான் கதைக்கிற ஒண்டும் விளங்கல்லை எண்டு.
  36. @alvayan யாயினிக்கு பணம் கிடைத்திருக்காம். விழுந்தடித்து தபால்பெட்டிக்கு ஓடாமல் ஆறுதலாகவே போய்ப் பாருங்கள்.
  37. @பாலபத்ர ஓணாண்டிஓணாண்டி, ஆதாரம் எங்கே? நீங்கள் இணைத்த படங்கள் உள்ள திரி எங்கே? அல்லது உங்கள் தலீவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே உழலும் சீமான் போல் ஆதாரம் கேட்டால் எஸ்கேப்பா?
  38. ஐரோப்பாவில் யூதர்கள் உட்பட்ட மக்களை வதை/கொலை செய்த முகாம்கள் (concentration camps) விடுவிக்கப் பட்ட நினைவு நாளுக்கு அண்மையாக பொருத்தமான கட்டுரை. இதை வாசிக்க வேண்டிய புலம் பெயர் தமிழர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். இன்றும் ஜேர்மனியின் AfD போன்ற கட்சிகளை, ஏனைய குடியேறிகளுக்கெதிரான துவேசம் காரணமாக ஆதரிக்கும் புலத் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!
  39. 😂 ஓணாண்டியார், என்ன முதல் சதுரத்திலேயே வந்து நிண்டு அக்ரிங் குடுக்கிறீங்கள்? பெரியார் பிராமணரை மட்டும் தான் தீவிரமாக திட்டினார். சீமான் வளர்க்கும் தமிழ் தேசியம் திராவிட அடையாளத்தினுள் மலையாளி, தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றையும் திட்டி, "வாழ வரலாம் ஆள வரக் கூடாது" என்றெல்லாம் துவேஷம் பேசுவது தெரியாத மாதிரி என்ன நடிப்பையா இது? உங்களுக்கு "பச்சைத் தமிழன்" அடையாளம் வேணுமெண்டால் அணிந்து கொள்ளலாம், அதை விட்டு விட்டு வேறு மொழிவழி மூதாதையர் கொண்ட தமிழக மக்களை மஞ்சள் தமிழன் என்று முட்டாள் தனமாக வகைப் படுத்தல் யார் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?
  40. உலகில் தடை செய்யப்பட ரோலர் மீன் பிடியை கொண்டு வடகிழக்கு கடலில் அடாத்தாக மீன் பிடிப்பவர்களை தமிழக மீனவர்கள் என்று அழைப்பதே பிழையானது. அவர்களை ரோலர் மீன் வள கொள்ளைகாரர்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட வேணும் . ஏனென்றால் பலருக்கும் புரிவதில்லை தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை கொண்டு அவர்களின் சொந்த கடல் பகுதியையும் நாசம் பண்ணி கடைசியில் வடகிழக்கு மீன்கள் உருவாகும் கருவறை கண்ட மேடைகள் மீது ரோலிங் அடிப்பதால் வடகிழக்கு தமிழர்களின் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் இப்படி சொத்தை நாசம் பண்ணுபவர்களை எப்படி அழைக்கவேணும் ?
  41. அவர் இனி இந்தத் திரியில் எழுதமாட்டார் என்று சபதம் எடுத்துவிட்டார் எனவே இனி எதுவும் எழுதமாட்டார்!😂
  42. சீமானின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. அன்றிலிருந்து அவர் தலைவர் பிபாகரனுடனும், விடுதலைப் புலி வீரர்களுடனும் இணைந்த படங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்போதெல்லாம் மௌனமாக இருந்த அமரதாஸ் இப்போது ஆரவாரப்படுவதன் நோக்கம் என்ன? சந்தேகமாக இருக்கிறது.🤔
  43. பையன் சார், என்னுடைய நேரம் நேற்றிரவு நியூஸ் 18 செய்திகளில் விவாதத்திற்கு சந்தோஷ் தயாரக இருப்பதாகச் சொன்னார்கள். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரும் நேரடி விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். நியூஸ் 18 இவர்கள் எல்லோரையும் இணைத்து, ஜனநாயக வழியில் ஒரு நேரடி விவாதத்தை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள். சந்தோஷ் இதற்குள் எப்படி உள்ளே வந்தார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தகவல் இருந்தது. நியூஸ் 18 கார்த்திக்குடனேயே முதல் சந்திப்பை நடத்தியுள்ளனர். கார்த்திக்கே சந்தோஷிற்கு கூடுதலான விடயங்கள் தெரியும் என்று கார்த்திகைச்செல்வன் மற்றும் நியூஸ் 18 ஆசிரியர் குழுமத்திற்கு சொல்லியுள்ளார். இவ்வாறே சந்தோஷ் இப்பொழுது இந்த விடயத்தில் முக்கியமான ஒருவர் ஆகியுள்ளார். ஈரோடு கிழக்கில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பதால், இந்த விவாதம் இப்போதைக்கு நடக்குமா என்றுமா தெரியவில்லை. அத்துடன் இன்னொருவரும் நேரடி விவாதத்தில் பங்குபற்றப் போவதாக அதே செய்திகளில் ஒரு குறிப்பும் இருந்தது.
  44. வெளிநாடு வருவது, எப்படியாவது அரச உத்தியோகம் பெற்றே தீருவது, ஊருக்கு படம் காட்டி கலியாணம் செய்வது, குனிந்து நிமிர்ந்து ஒரு பேப்பர் எடுக்கக் கூடாது, வேர்க்கக் கூடாது, காலில் மண் படக்கூடாது, கமக்கட்டு மணக்கக் கூடாது, என்று வாழ்வின் குறிக்கோள்கள் இப்படிப் போகும் இவர்களை நம்பி எந்த தொழிலிலும் இறங்கக் கூடாது.
  45. *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..* அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர். *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..* *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..* *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..* *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..* முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின.. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்.. *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..* *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..* *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..* *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..* *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..* *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..* *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..* *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..* அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..? * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை. மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..* *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..* *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..* அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.. *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..* *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..* இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.