Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    88794
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46969
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14704
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/11/25 in all areas

  1. இந்த திருட்டு யூடியூப் காரருக்கு அறிவே இல்லை…. இதுல இடைக்கிடையே, மானே தேனே, பொன்மானே போல… தலைவர், மாவீரர், தமிழண்டா போன்ற வீராவேசங்களை தூவி விட்டு இருந்தால்.. இப்ப ஏசுற புலன்பெயர் சனம் எல்லாம் மரண முட்டு கொடுத்திருக்கும் 🤣
  2. சரியான கருத்து👍. நன்மையான விடயங்களைப் பகிரும் யூ ரியூபர்களை ஊக்குவிக்கலாம். அவசியமில்லாத அலட்டல்களை வெளியிடுவோர், இப்படி திருட்டு வேலைகள் செய்வோரை முறைப்பாடு செய்து சனலைப் பூட்ட வைக்கலாம். அப்படி செய்ய நேரமில்லா விட்டால் கூட , குறைந்த பட்சம் இப்படி பட்டவர்களது சனல்களைப் பார்க்காமல், பகிராமல் சும்மா இருந்தாலே இவர்களை ஒதுக்கலாம். பி.கு: மேலே 1200 பவுண்ஸ் திறன்பேசியை வாங்கி யூ ரியூபருக்குப் பரிசளித்த வெளிநாட்டுத் தமிழரை நினைத்து வியக்கிறேன்: சிலருக்கு "சந்தனம்" மெத்தித் தான் விட்டது😂!
  3. படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளிப்படுத்தினார். 45 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர். பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார். கேள்வி: இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது? பதில்: இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது. இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது. அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன். அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள். யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது, 'எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,' நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புல்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள். இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். இலங்கை: 2 வயது குழந்தையை தத்தெடுத்து சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன? இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி? கச்சத்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கூறக்கூடிய ஒரு விடயம், கச்சத்தீவு நிலப்பரப்புக்கு அண்மித்த பகுதியில்தான் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதைத் தாண்டி நாங்கள் செல்வதில்லை எனக் கூறுகின்றார்கள். அப்படி கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்கின்ற அந்த மீனவர்களை இலங்கை கடற்படை ஏன் கைது செய்கின்றது? பதில்: இதற்கான பதிலை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில், ஒரு சில இந்திய ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக ஆங்கில பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு செல்கின்ற வலிமையான பத்திரிகைகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கின்றபோது, மிகத் தெளிவாக அவர்கள் சொல்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. நாங்கள் நேரடியாக வந்து பார்த்திருக்கின்றோம். இந்திய ட்ரோலர்கள் வந்து, எங்களுடை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து எங்களுடைய கடல் பரப்பில் இருந்துகொண்டு எங்கள் மீன் வளங்களையும், கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதை நாசமாக்குவதையும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். அதனால், இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக்கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. நாங்கள் ஏதோ இணக்கப்பாட்டிற்கு வந்து கொடுத்தாலே தவிர, அவர்கள் அங்கு வர முடியாது. அவர்களுக்குச் சொந்தமான கடலில் அவர்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் பரவாயில்லை. அதேபோன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடல் பரப்பில் அவர்கள் மீன் பிடிப்பார்களாக இருந்தால், அதற்கு எங்களுடைய கடற்படை எந்தவிதத்திலும் தலையீடு செய்யாது. அவர்கள் எங்களுடைய கடற்பரப்பு அல்ல, எங்களுடைய எல்லையையும் தாண்டி, எங்களுடைய கரையையும்கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். கச்சத்தீவுக்கு அந்தப் பக்கம் அவர்களின் கடலில் இருந்துகொண்டு மீன்பிடிக்கின்றோம் என்பது பொய்யான விடயம். அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம். கேள்வி: இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்னையாகக் காணப்படுவது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம் இலங்கையிடம் மீளக் கோரியிருந்தன. இலங்கை அரசாங்கத்திற்குக் கச்சத்தீவை கொடுப்பதற்கான எண்ணம் எதுவும் இருக்கின்றதா? பதில்: கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது ஐக்கிய நாடுகள் சபையில் கடல் எல்லை தொடர்பான விடயத்தில் எங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், கச்சத்தீவை என்றைக்குக் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்பது வரலாற்று ரீதியில் வேறு விடயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது எங்களுக்குச் சொந்தமானது. ஆனால், எங்கள் எல்லோருக்குமே தெரியும். நேற்று இன்று அல்ல. இந்தியா, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்கள் வருகின்றபோது காளான் பூத்ததைப் போன்று தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையை இவர்கள் கையில் எடுப்பது வழமை. ஆனால், கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. இதை யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை. புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்3 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் யோசனைகள் உள்ளதா? படக்குறிப்பு,"அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்" என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகரன். கேள்வி: கடந்த காலங்களில் நாங்கள் கண்ட ஒரு விடயம். அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வரக்கூடிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. சில வேளையில் அவர்களை விரட்டுவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா தரப்பினர், தங்களை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொல்கின்றார்கள். உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் அவர்கள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றார்கள். இது உங்களின் அரசாங்கம் அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளின் காலப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்தன. உங்களின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றதா? பதில்: இல்லை. எங்களுடைய அரசாங்கத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதோ, அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. ஆனால் உங்களுக்கு தெரியும். ஒரு நாட்டின் கடல் எல்லையை மீறுகின்றபோது அந்தக் கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உண்டு. யுத்த காலத்தில் அது வேறு கதை. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் சம்பங்கள் இடம்பெற்று இருக்கின்றது. ஆனால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு வந்ததற்குப் பிறகு நாங்கள் இந்திய படகுகளைக் கைது செய்வது உண்மை. ஆனால் கடற்படை அவர்களைத் துப்பாக்கி பிரயோகம் செய்து, தடுக்க வேண்டும் என கோரிக்கையோ கட்டளையோ யாரும் விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவமொன்று இருக்கின்றது. அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எங்களுடைய கடற்படையினர் கைது செய்வது வழமை. பலவந்தமாக அவர்களுடைய படகுகளில் ஏறிக் கைது செய்கின்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கின்றபோது அவர்கள் படகுகளில் ஏற முடியாதவாறு சுற்றி வர ஓயில் போட்டிருப்பார்கள். அதையும் மீறி ஏறினால் சுடுநீரைக் குழாய் மூலம் பாய்ச்சுவார்களாம். கடற்படைக்குத் தீங்கு செய்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்கின்றார்கள். அதையும் மீறி அன்றைய தினம் எங்களுடைய ஒரு சிப்பாய் படகிற்குள் ஏறிவிட்டார். ஏறிய பிறகு அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் தலையில் சுட்டிருக்கலாம் அல்லது ஏனைய பாகங்களில் சுட்டிருக்கலாம். ஆனால், முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டது. மீன்பிடிப் படகுகளில் வருகின்றவர்கள் கூலித் தொழிலாளர்கள் அப்பாவிகள். அங்குள்ள ஒரு சில பெண்கள் கதறி அழுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். நான் இந்திய மீனவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஒரு மீனவர் என்னிடம் சொன்னார், "ஐயா நான் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். இது எங்களுடைய வாழ்க்கைப் பிரச்னை. இந்த வாழ்க்கைப் பிரச்னைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாக இருந்தால், இந்திய கடற்பரப்பில் மீன்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது இந்திய கடற்பரப்பின் ஏனைய பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்குமானால், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான சலுகைகளைச் செய்து கொடுத்து இருக்குமானால், நிச்சயமாக நாங்கள் இவ்வாறானதொரு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க மாட்டோம்" என்றார். தங்களுக்கு முடியாத பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை எடுப்பதாக அவர்கள் தரப்பில் கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அந்த மீனவர்களை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அவர்களைத் துன்புறுத்துவதோ அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. அவர்களைச் சிறையில் அடைக்கின்றபோது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். "நாங்கள் சட்டவிரோதம் எனத் தெரிந்து கொண்டுதான் இலங்கை கடல் எல்லையை மீறி இருக்கின்றோம். அதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் அல்ல. நீதிமன்றத்தால். அந்த நிலைமையின் கீழ் நாங்கள் சொல்கின்றோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல. இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பதுதான். இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 இலங்கை: 2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய 10 விடயங்கள்17 பிப்ரவரி 2025 இந்திய பிரதமர் மோதியுடன் மீனவர் பிரச்னை குறித்து பேசப்பட்டதா? படக்குறிப்பு,"இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல, இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பது தான்." கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றார். நரேந்திர மோதியை சந்தித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்தார். இப்படியான சந்திப்புகளில் இந்த மீனவப் பிரச்னை தொடர்பாக எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? பதில்: ஒரு விடயம் இருக்கின்றது. இந்திய விஜயத்தின்போது தோழர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மோதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்னை முதன்மையான பிரச்னையாகப் பேசப்படவில்லை. அதைவிட வேறு விதமான தேவைகள் இந்தியாவிற்கு இருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இந்தியாவுக்கும் தெரியும் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் அண்மையில் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இந்திய அரசாங்கம் 42 லட்சம் ரூபா நட்ட ஈடாக அல்லது மானியமாக வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கின்ற மீனவர்கள் தொடர்பான புத்திஜீவிகள் சிலர் என்னிடம் கூறினார்கள். இது ட்ரோல் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை. அப்படி இருந்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தப் பொடம் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக எங்களுடைய கடல் பரப்பை நாசமாக்குகின்றார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். அதனால், இது சம்பந்தமாக தோழர் அநுர குமாரவோடு வேறு விதமான ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இது பேசப்பட்டது. எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் ஒரு தீவு. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தத் தீவு அழகாக இருக்கின்றது. அது தீவாக இருப்பதன் காரணமாக நாங்கள் இறைமையுள்ள நாடு, தன்னாதிக்கம் உள்ள நாடு. மோதியுடனான சந்திப்பின்போது நாங்கள் கூறியுள்ளோம். இது, இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்புகளிலும் நானும்கூட அடித்துக் கூறுகின்ற ஒரு விடயம்தான். இந்திய படகுகள் எங்களுடைய கடல் எல்லையை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 தமிழ்நாடு, இலங்கை மீனவப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: இந்திய மீனவர்களைக் கைது செய்யும்போது, அவர்களின் உடைமைகள், சொத்துகள் இலங்கையில் அரசு உடையாக்கப் படுகின்றன. அந்த நடவடிக்கை இனி வரும் காலங்களில் எப்படியான விதத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்த அரசாங்கம் எப்படிப் பார்க்கின்றது? பதில்: இந்த நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும். இப்போதும்கூட 124 படகுகள் அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. 24 படகுகள் தொடர்பில் வழக்கு நடக்கின்றது. சுமார் 20 படகுகளை அவர்கள் கொண்டு செல்ல முடியும். அவர்கள் வருவதில்லை. 124 படகுகள் என்பது விளையாட்டு இல்லை. பெரிய படகுகள். லட்சக்கணக்கான பெறுமதிமிக்க படகுகள். இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் இன்றைக்கு அவை அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய படகுகளால் எங்களுடைய கடல்வளம் அழிக்கப்படுகின்றது. அந்தக் கடல் வளத்தை மீள உருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இதை இந்தியாவுக்கும் நாங்கள் அறிவித்து இருக்கின்றோம். இந்திய தூதுவர்களுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்னவென்றால்,வேறு எதுவும் அல்ல. இது எங்களுடைய வீடு.எங்கள் வீட்டில் வேறு ஒருவர் வந்து புகுந்து விளையாடுவாராக இருந்தால், அவருக்குத் தேவையான வகையில் வளங்களை நாசம் செய்வாராக இருந்தால், அதை நாங்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருப்போமாக இருந்தால், நாங்கள் ஒன்று குருடர்களாக அல்லது செவிடர்களாக அல்லது மூடர்களாக, ஊமைகளாகவே இருக்க வேண்டும். அல்லது இதைக் கண்டு அஞ்சும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படியல்ல. இந்திய அரசாங்கத்தை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். இந்திய மீனவர்களை நாங்கள் நேசிக்கின்றோம். மீன்பிடி அமைச்சர் என்ற வகையில் இந்திய மீனவர்கள் மீதான பாசம் நேசம் அதிகரித்திருக்கின்றது. அந்த நேசம் பாசம் எல்லாமே இருக்கின்றது. அதனால், நேசம் பாசம் தொடர வேண்டும் என்றால், அல்லது நீங்கள் சொல்கின்ற அந்தத் தொப்புள் கொடி உறவு உண்மை என்றால் அந்தத் தொப்புள் கொடி உறவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களாகும். கடலையே நம்பி வாழ்கின்றார்கள். கடந்த 30 வருடத்திற்கு மேல் யுத்தம். பாதிக்கப்பட்டது வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக இன்னமும் தங்களால் எழ முடியவில்லை. தங்களின் வாழ்க்கையில் மேல் எழ முயன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கட்டி எழுப்புகின்ற அந்த வாழ்க்கையில், மண்ணை வாரிப் போடுவது, தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொள்ளும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே. எங்களுடைய மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே நாசமாக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளத்தை நாசமாக்கின்றார்கள். இவ்வாறு கடல் வளம் நாசமாக்கப்படுவது தொடருமாக இருந்தால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களுடைய கடல் பரப்பு பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பாலைவனத்தில் நாளை இந்தியாவுக்கும் இடம் கிடையாது. எங்களுக்கும் இடம் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் அன்றைக்கு எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. அதனால், நாங்கள் நீங்கள் எல்லோருமே சேர்ந்து இந்தக் கடலைப் பாதுகாக்க வேண்டும். கடல் எங்களுக்குச் சொந்தமானது அல்ல. உங்களுக்கும் சொந்தமானது அல்ல. நாளைய தலைமுறைக்குச் சொந்தமானது. அந்த வகையில்தான் இதற்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வு, இந்திய படகுகள், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில படகு உரிமையாளர்கள் எங்களுடைய கடல் எல்லையை மீறாதிருப்பதே இதற்கான நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு என்று நான் நினைக்கின்றேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8ydyeqkdyo
  4. சீ சீ ...அதெல்லாம் ஒரு காலம் ...இப்ப வல்வையில் வராமல் வந்த அதிரடி நாயகன் அண்ணன் அனுரா வன்னியில் வந்து உதித்த அக்கா ஹாரனி சந்தியில் முடங்கி கிடக்கும் சஙக தமிழன் சரித்திர‌ நாயகன் சந்திர சேகரம் மாவீரன்(ர்) யார் என்றால் ரோகணா ..இடதுசாரி கொள்கைக்காக உயிர்நீத்த ஏனைய சிஙகள இளைஞர்கள் தலீவன் என்றால் அனுரா (இவரின்ட தம்பி தான் அந்த தமிழ் மல்லி பயங்கரவாதி) தமிழன்டா என்றால் சிறிலங்கன் 😆
  5. மற்ற ஆட்கள் எண்ணை கேட்டு விடுவார்களோ என்று, பிரான்ஸ் அடக்கி வாசிக்குது போலை உள்ளது. ஜேர்மனியை மறக்காமல்.... எங்களுக்கு ஒரு எண்ணைக் குழாயை போட்டு விடுங்கள். இனி என்ன... @இணையவன், @விசுகு, @suvy எல்லாரும் "ஷேக்" உடுப்பு போட வேண்டியதுதான். 😂
  6. அண்ணனின் கையைபிடிச்சுக்கொண்டுதான்....உந்த இடமெல்லாம் போனனான்...அண்ணனுக்கு சிவாசியில் அலாதி பிரியம்...அதாலை சேர்ந்துபோன எனக்கும் மாலினி கவர்ச்சியாகத் தெரிந்தா ...நம்பினால் நம்புங்கோ
  7. செய்தி உண்மை, ஆனால் வாசி சுட்டிக் காட்டியாது போல மிகவும் பழசு: 2023 இல் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. https://www.cnn.com/2023/10/29/climate/white-hydrogen-fossil-fuels-climate/index.html இந்த பழைய செய்தியை இந்தியாவின் இன்னுமொரு காப்பியடி இணையத் தளம் பிரசுரிக்க, ஆதவனும் காப்பியடித்து அதிரடியாக வெளியிட்டிருக்கிறது! அதி வேகமாக செய்தி கொப்பியடிக்கும் ஆதவன் ரீமுக்கு இப்ப தான் "அதிரடியாக" தெரிய வந்திருக்கிறது! "கற்பூர ரீம்" தான் வைத்திருக்கிறார்கள்😂! Times NowIndia's Ally In Europe Hits Jackpot Worth $92 Trillion, U...France has discovered a massive 46-million-ton white hydrogen reserve in the Moselle region, valued at $92 trillion. Unlike gray and green hydrogen, white hydrogen requires no industrial production...
  8. அண்ணை ஏற்கெனவே இந்தச் செய்தியை பார்த்து விட்டு, மாலினியை பார்க்க... சிலோனுக்கு போக முடியாமல் இருக்கே.. என்ற கவலையில், பிரஷர் குளிசையை போட்டுட்டு, படுத்து இருக்கின்றார். 😂
  9. @குமாரசாமி அண்ணே.... உங்கடை ஆளுக்கு சுகமில்லையாம் என்னது அண்ணை வைத்தியசாலையில் என்று கேள்விப்பட்டு அம்மணியும் வைத்தியசாலையிலா? அண்ணன் சுகமாக வீடு வந்து சேர்ந்து விட்டார் என்று தகவல் அனுப்புங்கப்பா. இதுகளை இப்போதைக்கு அண்ணனுக்கு சொல்லி பிபியை ஏத்த வேண்டாம் பிளீஸ்.
  10. ஆபிரஹாம் சுமந்திரனின் சொந்த இடம் கொழும்பு தானே... தனது இடத்திலேயே.... போட்டியிடாமல், பயந்தாங் கொள்ளி மாதிரி... பம்மிக் கொண்டு பின்வாங்கும் அரசியல்வாதி சுமந்திரனாகத்தான் இருக்கும். கொழும்பில் போட்டி போட்டு... தனது பலத்தை காட்டினால் தானே, மக்கள் இவரின் செல்வாக்கை அறிய முடியும். @பெருமாள், @alvayan, @satan
  11. தொடருங்கள், விசுகர்…! மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற காலத்தின் நினைவுகள், அரும்ப முதலே கருகிப் போகும் முகிழ்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் மிகவும் வலி மிகுந்தவை..! ஆனால் அந்த வலிக்குள்ளும் ஒரு சுகம் மறைந்திருக்கும் பாருங்கள்..! அது தான் வாழ்க்கையின் புதிர்…!
  12. மோசடி, கொலை, கொள்ளை செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. அரகலய போராட்டம் யாருக்கு எதிராக நடந்தது? தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் யார்? என்பது ஒன்றும் இவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், மக்களுக்கு நன்றாகத் தெரிந்துதான் உரியவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கத்தான் ஓடி ஒளிகிறார்கள் ஊழல் மோசடி செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களின் ஏவலர்கள். நாட்டுக்கு யாராவது ஒருவர் சேவையாற்றி இருந்தால்; நாடு பாதாளத்திற்கு போயிருக்காது, இவ்வளவு ஊழல்வாதிகள் பெருகியுமிருக்க வாய்ப்பில்லை. உதயன் கம்மன்பில கூறினார் "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்த தேசம்." மைத்திரி சொன்னார் "நிரந்தர பகிர்வு பொறி முறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." அப்படி யாராவது நாட்டுக்கு சிறந்த சேவையாற்றியிருந்தால்; அவரை நீங்கள் வெளிப்படுத்துங்கள் மக்களுக்கு.
  13. விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே. கடல்வள கொள்ளையர்கள் தம் செயல்களை நிறுத்துவதைத் தவிர இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் இல்லை. ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.
  14. கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்கும் காசை ம‌க்க‌ளிட‌த்தில் சென்று கொடுத்தார் ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல மாதிரி செய்து விட்டு இடையில் த‌ன‌து இன்னொரு முக‌த்தை காட்ட‌ அதோட‌ இவ‌ரை பல‌ர் வெறுக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்...............இப்ப‌ த‌ன‌து பாதுகாப்புக்காக‌ மூன்று பேருட‌ன் போய் தான் உத‌வி வீடியோ போடுறார் முந்தி த‌னி ஆளாய் சென்று கூட‌ உத‌வி வீடியோ போட்ட‌வ‌ர்....................வெளி நாட்டு ம‌க்க‌ளின் ப‌ண‌ங்க‌ளை இவ‌ர் சுருட்டி விட்டார் என்று ப‌ல‌ர் குற்ற‌ச் சாட்டு வைக்கின‌ம்................. 1000ரூபாய்க்கு வ‌ழி இல்லாம‌ இருந்த‌ இன்னொரு யூடுப்ப‌ர் இப்ப‌ 1கோடி 30 ல‌ச்ச‌த்துக்கு கானி வேண்ட‌ வெளிக்கிட்டு பிடி ப‌ட்டு போனார் , ஆட்க‌ளை வீடியோ பிடிச்சு போடுவ‌து பிற‌க்கு அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு அந்த‌ உத‌வி போய் சேருவ‌தில்லை ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்து ப‌ல‌ரை ஏமாற்றி விட்டார் அவ‌ர் வ‌சிப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் சிறி அண்ணா விழிப்புன‌ர்வு தேவை புல‌ம் பெய‌ர் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு இன்னொரு சின்ன‌ யூடுப்ப‌ர் வ‌ய‌தான‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ மூதாட்டிய‌ வீடியோ பிடிச்சு போட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் அந்த‌ யூடுப்ப‌ரை தொட‌ர்வு கொண்டு காசை கொடுத்த‌வை அந்த‌ மூதாட்டிக்கும் அவான்ட‌ ஊன‌முற்ற‌ பேர‌ப்பிள்ளைக‌ளுக்கும் கொடுக்க‌ சொல்லி , வீடியோவில் காசை கொடுப்ப‌தை காட்டி விட்டு கொடுத்த‌ காசை திருப்ப வேண்டி விட்டு அந்த‌ இடத்தை விட்டு ஓடி விட்டார் ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் என்ற‌து போல் க‌ட‌சியில் பிடி ப‌ட்டு விட்டார் அதே யூடுப்ப‌ர் மூல‌ம் க‌ன‌டாவில் வ‌சிக்கும் அண்ணா க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பெண் பிள்ளைக்கு 3ல‌ச்ச‌ம் அனுப்ப‌ , 3ல‌ச்ச‌த்தை அந்த‌ பிள்ளையிட‌ம் கொடுக்கிற‌ மாதிரி கொடுத்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌ம் காசை வேண்டி விட்டார் காசு அனுப்பின‌ க‌ன‌டா அண்ணா ம‌ட்ட‌க்க‌ள‌ப்புக்கு வ‌ந்த‌ பிற‌க்கு அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் பண்ணி இருக்கிறார் வா த‌ம்பி வெளியில் போயிட்டு வ‌ருவோம் என்று , இந்த‌ யூடுப்ப‌ர் உட‌ன‌ போக‌ அந்த‌ அண்ணா கேட்டு இருக்கிறார் அந்த‌ 3ல‌ச்ச‌ம் காசு கொடுத்த‌ பிள்ளையின் வீட்டை த‌ன்னை கூட்டிட்டு போக‌ சொல்லி , இந்த‌ யூடுப்ப‌வ‌ரும் கூட்டிட்டு போக‌ , க‌ன‌டா அண்ணா அந்த‌ பிள்ளையிட‌ம் கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் த‌ந்த‌வ‌ரா என்று அந்த‌ பிள்ளை உண்மைய‌ சொல்லிச்சு மூன்று ல‌ச்ச‌ம் த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை திருப்பி வேண்டி விட்டார் என்று...................கன‌டா அண்ணா அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலையே ந‌ல்ல‌ அடி கொடுத்தார்💪...................... இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌க்குது த‌மிழ் சிறி அண்ணா இப்ப‌ ச‌ம்முக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் காசு பார்க்க‌ ப‌ல‌ர் கில‌ம்பிட்டின‌ம் , புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் வ‌லு க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும் என்றால் யூடுப்ப‌ர் மார் மூல‌ம் உத‌வாம‌ல் அந்த‌ க‌ஸ்ர‌ம் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ங்கிய‌ வேண்டி விட்டு நேர‌டியா அவையின் வ‌ங்கிக்கு காசு அனுப்ப‌லாம் , அல்ல‌து தெரிந்த‌ ஊர் அல்ல‌து சொந்த‌ ஊர் என்றால் சொந்த‌ங்க‌ள் மூல‌ம் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்..........................
  15. இவ‌ர் பெரிய‌ ர‌வுடி அண்ணா ரிக்ரொக்கில் இவ‌ரை க‌ழுவி ஊத்தாத‌ ஆட்க‌ளே இல்லை எங்க‌ட‌ புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ளுக்கு இப்ப‌ த‌ன்னும் ந‌ல்ல‌ புத்தி வ‌ந்து இருக்கே என்று பெருமை ப‌ட‌னும் இவ‌ர் ப‌ய‌ங்க‌ர‌ மோச‌டி வேலைக‌ள் செய்யும் ந‌ப‌ர் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கைய‌ நாச‌ம் ஆக்கின‌ த‌றுத‌லை , இத‌ற்கான‌ ஆதார‌ம் என்னிட‌ம் இருக்கு👍 ஆர‌ம்ப‌த்தில் இவ‌ரின் காணொளிக‌ள் பார்ப்பேன் , இப்ப‌ பார்க்காம‌ விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது இவ‌ன்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் ஆளுக்கு ஒரு யூடுப் வைச்சு புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ளின் ப‌ண‌த்தில் சொகுசு வாழ்க்கை வாழுகின‌ம் , இவேன்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்குள் பிடிக்கும் ச‌ண்டைக‌ளை பொது வெளியில் கொண்டு வ‌ந்து போடுங்க‌ள்......................... கிருஷ்னா ச‌ம்முக‌ சேவை செய்யும் நோக்கில் தொட‌ங்க‌ வில்லை த‌ன‌து ந‌ண்ப‌னை பார்த்து தானும் காசு உழைக்க‌லாம் என்று தொட‌ங்கின‌வ‌ன் , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் 1ல‌ச்ச‌ம் ரூபாய் கூட‌ இல்லாம‌ இருந்த‌வ‌னுக்கு , 2அர‌ வ‌ருட‌த்தில் இல‌ங்கை காசுக்கு 6 கோடி எப்ப‌டி வ‌ந்த‌து , ப‌ருத்திதுறையில் இவ‌ன் வேண்டின‌ கானி க‌ட்டின‌ வீட்டின் பொரும‌தி 6 கோடிக்கு மேலாம்...............இதை என‌க்கு சொன்ன‌து இவ‌னின் ஒன்ட‌ விட்ட‌ த‌ம்பி................இந்த‌ 6 , 7 கோடி வீட்டு க‌தை ரிக்ரோக்கிலும் ப‌ல‌ர் க‌தைச்சும் இருக்கின‌ம் இவ‌னின் குள‌று ப‌டிக‌ளை சொன்னால் யாழ்ப்பாண‌த்தில் ர‌வுடிக‌ளை வைச்சு ஆட்க‌ளை மிர‌ட்டுவாராம் இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு பெண் பிள்ளைக‌ளுட‌ன் க‌தைக்கும் வித‌ம் ச‌ரியே இல்லை அதுக‌ள் வ‌ள‌ந்து ந‌ல்ல‌ குடும்ப‌த்தில் வாழ‌ப் போர‌ பிள்ளைக‌ளை உத‌வி என்ர‌ பெய‌ரில் அதுக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து தான் இந்த‌ பொம்பிளை பொருக்கியின் வேலை பிடிச்ச‌ ம‌க்க‌ள் ஊமை குத்து குத்தி விட்டு காவ‌ல்துறையிட‌ம் பிடித்து கொடுத்து இருக்க‌னும்................. ஒரு வ‌ரியில் சொல்ல‌ப் போனால் இவ‌ன் ஒரு பிராடு😁................................
  16. SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்தம் ஆகக்குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த வகை ‘வக்கிரக’ வீடியோக்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் சராசரியாக ஆயிரம் பேர் இதெல்லாம் பிரமாதம் என்று லைக் இடுகிறார்கள். ஆதலால், இங்கு மனப்பிறழ்வு ஒருவருக்கல்ல! நம்முடைய பாதிச் சமூகம் இப்படித்தானிருக்கிறது. இவருடைய அத்தனை வீடியோக்களின் கென்டன்ட், வறியவர்களுக்கு உதவி செய்தல். இப்படி உதவி செய்வதன் மூலம் இலகுவாக பரபல்யம் அடைதல். அந்த பிரபல்யத்தால் தலைக்குள் ஏறும் கனத்தில் இப்படி அயோக்கிய அதிகாரம் பண்ணுதல். இதுதான் இவர்களுடைய பிழைப்பு. இந்த உதவிகளுக்குரிய மொத்த பணத்தையும் லட்சக் கணக்கில் வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களே தாரைவார்க்கிறார்கள். அப்படி அனுப்பும் பெருந்தகைகள் கணக்குக் கேட்பதுமில்லை, அது எப்படி வறியவர்களின் தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் அழித்தொழிக்கிறது என்பது மட்டில் அக்கறைகொள்வதுமில்லை. ஆக இந்த அயோக்கிய யூடியூப்பர் போன்றவர்களின் பிரபல்யம் என்பதும், அதனால் வெளிப்படும் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் என்பதும் ஆயிரக்கணக்கான தமிழர்களால் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சமூகப் பொறுப்பற்ற, accountability to affected victims என்கிற ஒன்று கிஞ்சித்தும் இல்லாத புலம்பெயர் தமிழ் தனவந்தர்களால் கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு அறிவு மயிர் வரும்வரை, இந்த நச்சுப் புழுக்களை இங்கிருந்து ஒருபோதும் நசுக்கித்தள்ள முடியாது. நன்றி - https://www.facebook.com/share/p/1ZifUXekXu/?mibextid=wwXIfr டிப்பர்ல பாவம் அப்பாவிகள் எவன் எவனோல்லாம் அடிபட்டு சாகிறான்... இவனும் அதே ரோட்ல தான் போய் வாறான்... ஒரு கேடு வருதில்லையே..👇 https://www.facebook.com/share/v/168fX8nFdu/?mibextid=wwXIfr
  17. மறக்குமா நெஞ்சம். அது ஒரு கனாக்காலம் 🥰 ஆனால் வெள்ளவத்தையில் தமிழ் சைவமும் கொள்ளுப்பிட்டியில் கொன்வென்ட் லேடீசும் இருக்க மாலினி பொன்சேகாவை பார்த்ததும் ஓடியது சரி தானே?😜
  18. சாத்ஸ் பாவம், ஒரு மதமாற்ற திரியில் கருத்து சொல்லப்போய் அடி எண்டா அடி, இம்மை மறுமை இல்லாத அடி. உதவிக்கு யாரும் இல்லாதபடியால் நாந்தான் இறங்கி, box ஐ உடைத்து ஆளை மீட்டு கொண்டு வந்தது. அன்று முதல் சாத்ஸ் நிஜ மதவாதிகள் வந்தால் - மெல்ல நழுவி விடுவார். சில சமயம் முட்டும் கொடுத்துள்ளார். ஆனால் என்னை போல மருந்துக்கும் மதவாதம் இல்லாத யாரும் “யேசுநாதர்” எண்டு எழுதினாலே சிலுவையுத்தத்துக்கு கிளம்பிய ரிச்சர்ட் மன்னன் போல் கிளம்பி விடுவார்🤣. இளகிய இரும்பை கண்டால் கொல்லன் பவுண்டரி சிக்சர் எண்டு அடிப்பானாம் 🤣. தீர்ப்பு நாளில், உன் கண் முன்னே நடந்த எனது மதத்தின் நிந்தனையை எதிர்த்து எதுவும் நீ செய்யவில்லையே என ஆண்டவர் கேட்டால்… உங்களை யேசுநாதர் என எழுதிய கோஷானை போட்டு பிளந்தேன் ஆண்டவரே என சொல்லி தப்பிக்கும் எண்ணம் போல் உள்ளது.
  19. கொழும்பிலை இருந்தாக்களுக்குத்தான் இந்த சுவை தெரியும்...நானு இந்த நேரம் கொழும்புதான்..சிவாசியை பார்க்க கொள்ளுப்பிட்டியிலையும்..வெள்ளவத்தையிலையும்தவம் செய்துகிடந்த நேரம் இரண்டு பேரையும் பார்த்தனான்.. அப்பவே வெளிச்சுப் போச்சு..
  20. இதில் காசு கொடுத்தவர்களே தவறு. உண்மையில், அவர்கள் பொறுப்பாக்க நேரே சென்று 1 முறையாவது நேரடியாக சோதியாமல், செய்தது. எந்த வித பகிரங்க கணக்கு காட்டாத ஒருவர் சொல்வதை நம்பி காசு கொடுத்தது. இதில், வேறு சிலர், YOUTUBE, vologing ஐ குறை சொல்லி youtube, vlogging தேவையான, பயனுள்ள தகவலை, விடயங்களை , திறமைகளை ... வெளியில் கொண்டு வருகிறது. அனால், இப்படியான முயற்சியை, ரெஜிஸ்ட்ர் செய்து, நேர்மையாக செய்தால், செய்பவருக்கான சம்பள ஒதுக்க வீதத்தையும் (சேரும் பணத்தில்) பிரசுரித்து, பகிரங்கம கணக்கு காட்டினால், அனால் , நான் முதலில் உணர்வது, எம்மவர்கலின் எதிர்பார்ப்பு , செய்பவர் இலவசமாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, அதுஉம செய்பவர் தான் சொந்த காசையும் உள் விட்டு.
  21. இது வேற பிரச்சினை. "சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்" பிரச்சினையென்றால் இங்கே சிறுபான்மை மதங்களை நேரடியாகவே தாக்கிய திரிகளில் அல்லவா அவர் முன்னின்று எழுதியிருக்க வேண்டும்😂?
  22. குமாரசாமி கவலையில் இந்த பக்கம் வரவில்லை போல
  23. ஆபிரஹாம் சுமந்திரனின் சொந்த ஊர் கொழும்பு. ஆகவே அவர் தாராளமாக, பயப்பிடாமல் போட்டியிடலாம். 😂 Kunalan Karunagaran
  24. கண்ணிரண்டும் மின்ன மின்ன ஆண்டவன் கட்டளையிலிருந்து PB சிறினிவாஸ் &LR ஈஸ்வரி
  25. வுடு ராசா.... எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும். பாவம் மனிசன்.🤣
  26. விசுகர்! என்ன இது? லவ் ஸ்டோரியா? 🙂 எழுதுங்கோ 👍
  27. நமக்கு எக்கச்சக்கமாய் சோலிகள் இருக்கெண்டு தெரிஞ்சும்..... 😎
  28. இந்த திரிக்கு பொருந்துமென்பதால்.. ஒரு அறிக்கை அல்லது போராட்டம் என்ன செய்துவிடும்....? நான வெளிநாட்டுக்கு விமானம் ஏறியபோது எங்க அம்மாவின் அஞ்சி பவுன் தாலி அடகில் இருந்தது. அந்த தாலியை மூன்று மாதத்தில் மீட்டெடுத்து அம்மாவிற்கு மூன்றரை பவுனுக்கு ஒரு நகையும் வாங்கி கொடுத்திருந்தேன். அதன் பிறகு எங்கள் வளர்ச்சி என்பது நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அத்தனை வளர்ச்சியிலும் வங்கி நகைக்கடன் அடகு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது....... எனது சிறு பிராயத்தில் அம்மாவின் நகையை மாமா அவரது தொழிலுக்காக அடகு வைக்க வாங்கிப்போவதை பார்த்திருக்கிறேன். நான் வளர்ந்தபோது எனது வீட்டு வேலைக்கு தாய்மாமா மனைவியிடம் நானே போய் நகை இருந்தா தாருங்க மாமினு கேட்டு வாங்கி வருவேன். இன்று எனது தம்பிக்கு தேவையென்றால் அவன் என மனைவியிடம் நகை வாங்கிட்டு போவான்...... அம்மா அந்த காலத்தில் இருபத்தைந்து பவுனோடு வந்ததாக சொல்லுவார்கள் அவரிடம் ஒரு அட்டியல் நெக்லஸ் இருந்தது அம்மா அதை மாமன்களின் திருமணத்தின்போது மட்டுமே அணிந்து பார்த்திருக்கிறேன் மற்ற நேரத்தில் அது வேப்பமூடு ஐஓபியில் இருக்கும் அல்லது கண்டன்விளை அலங்காரில் இருக்கும். விவசாயத்திற்கு அப்பா வெளிநாட்டு பயணம் பாட்டிக்கு மருந்துனு நகை மறிச்சி மறிச்சி வைப்பார்கள்....... நான் இதற்கு முன்பாக வேலை செய்த தேசத்தில் வேலை இழந்த காலம் முதல் கொரனா வரை எனது கைசெயினும் கழுத்து செயினும் அடகுகடையில் தான் இருந்தது. வட்டி கட்டி வட்டி கட்டி திருப்பி திருப்பி வைப்போம்.இன்றும் எனது நகைகளில் சிலவற்று நான் அடகு வைத்திருக்கிறேன். அவசர காலங்களுக்கு நகை அடகே நமக்கு துணை என்பது போய் நமது குடும்பத்தினரின் முதலீடுகளுக்கு நகை அடகு வைக்கும் நிலைக்கு வந்ததையே நான் எனது வளர்ச்சியாக கணெக்கெடுக்கிறேன்......... இந்த வங்கி கடன் மட்டும் இல்லையென்றால் நான் உட்பட்ட. பெரும்பானமையான எளிய மக்கள் வட்டி கடனில் வாழ்க்கையை தொலைத்திருப்பார்கள்............... விவசாய நகைக்கடன் என்ற பெயரில் ஒரு வருடத்தில் திருப்பினால் குறைந்த வட்டியும் சில மாதங்களில் திருப்பினால் கூடுதல் வட்டியும் என்று இருந்ததை மாற்றி விவசாய நகைக்கடனுக்கும் வட்டியை ஏத்தி விட்டார்கள். வருடம் முடியும்போது சில ஆயிரங்களை புரட்டி நகைக்கான வட்டியை மட்டும் கட்டி அடுத்த ஒரு வருடத்திற்கான அவகாசத்தை நீட்டி மக்கள் தப்பினார்கள். தினமும் தங்க நகையின் மதிப்பு கூடுவதால் இந்த வட்டி கட்டும் பணத்தயும் மறு அடகில் பெற்று பணச்சுமையில்லாமல் தற்காலிகமா தப்பி விடுவார்கள்........ இப்படி போய்கொண்டிருந்த நகை அடகில் முழுப்பணத்தயும் கட்டி திருப்பி வைக்க வேண்டும் என்ற சூழல் வர அதயும் கைமாத்தாக பணம் வாங்கி ஒரே நாளில் மறு அடகு வைத்து சமாளித்து வந்ததிற்கு ஆப்பு வந்து விட்டது. முழுப்பணத்தயும் கட்டி நகையை எடுத்து அதே நாளில் அடகு வைக்கமுடியாத சூழல் வந்திருக்கிறது........... இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று பலருக்கு தோன்றலாம் ஆனால் நகை கடனை திருப்பி மறு அடகு வைக்கு அவசரத்திற்கு அடகு வைத்த நகை ஏலத்தில் போகாமல் இருக்க பணம் புரட்ட மக்கள் படும் பாட்டை பார்த்தவர்களுக்கோ உணர்ந்தவர்களுக்கோத்தான் அந்த வலி தெரியும்...... அண்ணன் சீமானிடமிருந்து இதற்கான குரல் ஒலித்திருக்கிறது அவரிடம் யார் இந்த அறிக்கை விட அலோசனை சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்........ நன்றிகள் அண்ணே.... ஒரு அறிக்கை என்ன செய்துவிடும்....? முதல் குரல் பல குரல்களை உருவாக்கும். சமீபகாலங்களில் அவர் அப்படியான சூழலைத்தான் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறார்.... நன்றி- முகநூல்
  29. ஆறு மாதங்கள் ஓடிவிட பாடசாலை விடுமுறையில் ஊர் திரும்புகிறேன். பண்ணைப் பாலத்தில் மீன் வாசம் நாசியில் படும் எல்லோருக்கும் ருசி கண்ட பூனை எனக்கோ அவள் வாசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தீயாய் சுடுகிறது. ஊர் வந்து சேரும் வரை அதே நினைவு அதே கனவு. ஆனால் ஊரும் நண்பர்களும் நகைச்சுவை நடிகராக சென்று கொழும்பால் திரும்பும் என்னை சுப்பர்ஸ்டாராக வரவேற்கிறார்கள். அப்பொழுது தான் நானும் பார்த்தேன் சென்றபோதிருந்ததை விட நான் முழுவதுமாக மாறியிருப்பதை. இந்த வட்டம் மற்றும் பிரபலத்தால் அவளை பார்ப்பது தடங்கல் பட சிறிது சிறிதாக சில செய்திகள் என்னை வந்தடைகின்றன. தொட்டது நான் மட்டுமல்ல ருசி கண்டது நான் மட்டுமல்ல என்பதை அந்த வயதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது அது ஒரு வித ஈர்ப்பு, நட்பு என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் காதல் பற்றியோ கல்யாணம் பற்றியோ ஏன் எங்கள் எதிர் காலம் பற்றியோ கூட பேசிக்கொண்டதில்லை. என்னை கட்டிக் கொள்வாயா என்று அவளோ கட்டிக் கொள்வேன் என்று நானோ எந்த உறுதியும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் மனதின் ஒரு மூலையில் அவள் என்னை படுத்திக் கொண்டே இருந்தாள். சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பம் தள்ளி தள்ளி போக கடைசியாக அவள் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மீண்டும் காலம் என்னை பிரான்ஸ் கொண்டு வந்து போட்டது. தொடர்பு முற்றாக அழிந்து போனது. தொடரும்....
  30. தொடருங்கள் விசுகு ஐயா. உரைநடைக் கவிதை போல இருக்கின்றது உங்களின் எழுத்து நடை......👍.
  31. நீந்தி கரை சேர்ந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்கின்றார்..காஞ்சனா நிச்சயமாக இது ஒத்து வராது ...குறைந்த பச்சம் பழகியாவது(பேசி) பார்க்க வேணும்
  32. 'நீங்கள் எல்லோரும் பெரிய பணக்காரர்கள் ஆகப் போகின்றீர்கள்............ இவ்வளவு பணத்தையும் எப்படி செலவு செய்வது என்றே நீங்கள் முழிக்கப் போகின்றீர்கள்...................' இப்படித்தான் ட்ரம்ப் ஆரம்பத்தில் சொன்னார்.................... ஆனால் இப்ப இந்த இருவரும் போடும் கூத்தால், அழிந்து மிஞ்சி இருக்கப் போகும் பணத்திற்கு நாங்கள் முட்டை கூட வாங்க இயலாமல் போகும் போல.....................🤣. வீதிகளில் டெஸ்லா வாகனங்களைக் கண்டாலே ஐம்புலன்களையும் அடக்க வேண்டி இருக்கின்றது.......... அவ்வளவு ஒரு ஒவ்வாமையை உண்டாக்கி விட்டனர் இவர்கள்...........
  33. படலந்த வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ கருணாரத்ரன ஒரு நேர்காணலில் வழங்கிய திரள் வாக்குமூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ♦️ ஊடகவியலாளர் : இந்த வாக்குமூலத்தை நீங்கள் வழங்குவதால் உங்களுக்கு ஏதாவது உயிராபத்து ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ♦️ஏ. பீ கருணாரத்ரன : இந்த நேர்காணலிற்கு போக வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள். நான் யாருக்கும் கடனுமில்லை. பயமும் இல்லை. எனக்கு இப்போது 88 வயது . என்னை இன்று கொலை செய்தாலும் பராவாயில்லை. நாளை கொலை செய்தாலும் பராவாயில்லை. நாங்கள் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. ♦️ ஊடகவியலாளர் : நீங்கள் யார் ? உங்கள் பதவி என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஏ. பீ கருணாரத்ரன , ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் , இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன் விஜேரத்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைய படலந்தவில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்றேன். ♦️ ஊடகவியலாளர் : படலந்த என்றால் என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்த என்பது காடு அல்ல. கொழும்பிலிருந்து கிரிபத்கொடவிற்கு செல்லும் போது, கிரிபத்கொடயில் இருந்து மாத்தறை வீதிக்கு செல்லும் போது கொஞ்சம் தூரம் சென்ற பின் வலது பக்கம் சுமார் 20 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு ஒன்று இருக்கும். அதில் வேலை செய்யும் வேலையாட்களுக்கான களஞ்சிய அறைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே 20 ஏக்கரில் பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களில் தான் வதை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. ♦️ ஊடகவியலாளர்: படலந்தவில் என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு ஒருவரை கொண்டுவந்தால் முதலில் அவர்களை தலைகீழாக தொங்கவிடுவார்கள். அதன்பிறகு அவர்களின் இரு காதுகளிற்கு பெரிய இரும்பு ஆணி அடிக்கப்படும். கண்களிற்கு தையல் ஊசியால் குத்துவார்கள். கண்ணாடித் துண்டுகளை சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிடாவிட்டால் பலமாக அடித்து சாப்பிட வைப்பார்கள். சாப்பிடும் போதே அந்த கண்ணாடி துண்டுகள் உடல் பாகங்களை கிழித்துக் கொண்டு கீழே வரும். சூடாக்கப்பட்ட இரும்புக் கோளினால் முதுகில் சூடு வைப்பார்கள். இவற்றை செய்யும் போதே அந்த மனிதர் அரைவாசி இறந்த விடுவார். பின்னர் கீழே இறக்கி பொலித்தீன் உறைகளில் போடுவார்கள். பின்னர் விசாலமாக வெட்டப்பட்டுள்ள குழிகளில் அவர்களை போட்டு அவர்களுக்கு மேல் டயர்களை போட்டு கொளுத்துவார்கள் . இங்கே இடம் போதாத சந்தர்ப்பங்களில் சிலரை மட்டக்குளியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று , அங்கே ரொட்டி போடும் தட்டு போல் ஒரு பெரிய தட்டு இருந்தது. அதில் போட்டு கொளுத்து வார்கள். ♦️ ஊடகவியலாளர் : அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுள் யாராவது விஷேடமானவர்கள் இருந்தனரா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : விஜயதாஸ லியனாரச்சி . திறமைமிக்க ஒரு சட்டத்தரணி. பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றியே வாதிட்டார். ♦️ ஊடகவியலாளர் : அவருக்கு என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இவர் ஒருநாள் ஒரு வழக்கிற்காக வாதிட்டுவிட்டு வெளியே வரும் போது சிவில் ஆடை அணிந்த 04 பொலிஸ் அதிகாரிகள் வந்து வழக்கொன்றிற்காக வாதிட உள்ளதாக கூறி வெள்ளை வேன் ஒன்றில் ஏற்றி தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே கரவிட்ட என்ற ஏ. எஸ். பீ ஒருவர் இருந்தார். அவர் பல கேள்விகளை இவரிடம் கேட்டார். இவர் எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்தார். பின் அவரை பலமுறை அடித்து கேள்விகளை கேட்டார். எதற்கும் இவர் பதில் அளிக்காததால் படலந்தவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொண்டு வரும் போதே அவர் அரைவாசி இறந்த நிலையிலேயே இருந்தார். கொண்டுவரப்பட்ட உடன் டக்ளஸ் பீரிஸ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கு செய்தி அனுப்பினார். உடனே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் , ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்களும் முடியுமான அளவு கேள்விகளை கேட்டனர். ஆனால் அந்த சட்டத்தரணி எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு கூட உயிர் இருக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் டக்ளஸ் பீரிஸிடம் இந்த சட்டத்தரணியை முடியுமான அளவு சித்திரவதை செய்து கொலை செய்யுமாறு பணித்தனர். அதன் பின்னர் அந்த சட்டத்தரணியின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு மிளாகாய் தூளை முகத்தில் போட்டனர். நான் ஆயுத களஞ்சியசாலை இருந்து மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் முடியுமான அளவு சித்திரவதை செய்தனர். மாலை 5 அல்லது 6 மணியளவில் அவர் உயிர் அவரின் உடலை விட்டு சென்றது. அன்று இரவே பெரிய வைத்தியசாலைக்கு அருகில் அவரின் உடலை போட்டுவிட்டு வந்தனர். காலையில் சடலத்தை கண்ட மக்கள் வைத்தியசாலையின் பிணவறையில் கொண்டு சென்று வைத்தனர். பிணவறையில் அவர் உடல் வெட்டப்பட்டு மரண பரிசோதனை செய்யப்பட்டு உட்காயங்கள் 46 இனால் இரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக கூறினர். பின்னர் அவரின் அண்ணாவை அழைத்து அவரது சடலம் கையளிக்கப்பட்டது. அவரது கண்கள் இருந்த இடத்தில் ஏதோ ஒன்றை நிரப்பியிருந்தனர். ♦️ஊடகவியலாளர் : கண்களால் கண்ட மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது உள்ளதா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஆம். களுத்துறை பிரதேசத்தில் நடந்த சம்பவம். தென் மாகாணத்திற்கு பொறுப்பான விஜய சூரிய என்ற ஒரு இராணுவ கேப்டன் இருந்தார். அவரின் அம்மாவின் வீடு வேயங்கொட பாடசாலைக்கு அடுத்த காணியில் இருந்தது. JVP இன் சிலர் வந்து அவரின் அம்மாவின் தேசிய அடையாள அட்டையையும் , பணத்தை எடுத்துச் சென்றனர். மகனிற்கு உடனடியாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் கூறிவிட்டு சென்றனர். மகன் வந்தவுடன் அம்மா நடந்ததை கூறியதும் கோபமடைந்த கேப்டன் விஜய சூரிய லொறி ஒன்றை எடுத்துச் சென்று களுத்துறை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த உயர் தர வகுப்பிற்கு சென்று அங்கு கற்றுக் கொண்டிருந்த பெண் மாணவிகள் உட்பட 20 பேரை படலந்தவிற்கு அழைத்துக் கொண்டு வந்து பெண் மாணவிகள் அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து ஆண் மாணவர்களை படுக்க வைத்து இரும்பு சுத்தியலால் தலையில் பலமுறை அடித்து பின்னர் பொலித்தீன் உறைகளில் அவர்களை போட்டுக் கொண்டு அந்த கேப்டனின் அம்மாவின் வீட்டுக்கு அருகில் பாடசாலைக்கு முன்பாக அவர்கள் மீது டயர்களை இட்டு கொளுத்தினர். அவர்களை கொண்டு வரும் பயத்தினால் அனைவரும் கதறி அழுதனர். சிலர் எங்கள் அம்மாவை ஒரு முறை காண்பித்து விட்டு எங்களை கொலை செய்யுமாறு கெஞ்சினர். ♦️ ஊடகவியலாளர் : இது போன்ற சித்திரவதைகள் படலந்தவில் மாத்திரமா மேற்கொள்ளப்பட்டன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு பெரும்பாலும் கொண்டுவரப்பட்டவர்கள் பிற இடங்களில் வசித்தவர்கள் . ஹபராதுவை வரை , அம்பலங்கொட , பலப்பிட்டிய , வேயங்கொட , மீரிகம , திஹாரிய மற்றும் அத்தனகல்ல பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் தான் படலந்தையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். படலந்த போன்ற வதைக்கூடங்கள் நாடு பூராவும் 46 காணப்பட்டன. அவைகள் அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட தொழிற் கிராமங்கள் ஆகும். சூரியகந்த , வவுல்பெலே, மினுவங்கொட பலங்கொட உடவலை மற்றும் மல்மீகன்த என்பன சில உதாரணங்களாகும். ♦️ ஊடகவியலாளர் : படலந்தவிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் ? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : தினமும் ரணில் விக்கிரமசிங்க வந்து செல்வார். அதேபோன்று கோணவில சுனில். கோணவில சுனில் வைத்தியர் ஒருவரின் மகளை கற்பழித்து கொலை செய்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவினால் விடுதலை செய்யப்பட்டு சமாதான நீதிவானாக மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ♦️ ஊடகவியலாளர் : பிரபல்யமான தேசிய அடையாள அட்டை கொண்டு செல்லுதல் தொடர்பான உங்கள் கருத்து என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : உண்மை. "கோணிபில்லா" என்ற ஒரு குழுதான் செய்தது. அதில் பெரும்பாலானோர் JVP இல் இருந்தவர்கள் தான். தேசிய அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். கட்சிக்கு உதவுவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்தனர். JVP இனர் 03 கோணிப் பைகளில் தேசிய அடையாள அட்டைகளை எடுத்து வைத்திருந்தனர். நாங்கள் விசாரணைக்காக எல்லா வதைக்கூடங்களிற்கும் சென்றோம். அனைத்தினதும் தகவல்களை சேகரித்து இருந்தோம். ஆனால் படலந்தவிற்கு மாத்திரமே வழக்கு தொடுக்கப்பட்டது. மற்றைய வதைக்கூடங்களிற்கு வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று JVP இனரால் வாக்களிக்க சென்ற 5 பேரை கொலை செய்து வாக்களிக்கும் இடத்திலேயே போட்டனர். இதுபோன்று 225 பேர் கொலை செய்யப்பட்டனர். ♦️ ஊடகவியலாளர் : இவ்வளவு நடந்த பின்பும் ஏன் இவர்களுக்கு எதிராக சட்டம் எதையும் செய்யவில்லை? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நான் நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க செல்ல இருந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போக வேண்டாம் என பயமுறுத்தினார். இருந்தாலும் நான் போனேன். போகும்போதே டக்ளஸ் பீரிஸ் பெயரை மாற்றி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இரண்டாவது பிரதிவாதியான நிஷ்ஷங்க என்பவர் வீட்டிலேயே துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ♦️ ஊடகவியலாளர் : ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை போன்றே செயற்படுகிறார்? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இன்று ரணில் விக்கிரமசிங்க அதைத் தருகிறேன். இதை செய்வேன் என்று கதை சொல்லித்திரிகிறார். அவரின் பழைய வரலாறு கொலையை யும் , வதையையும் ஊக்குவித்த ஒருவராக காணப்படுகிறார். புதிதாக அவர் ஒரு கூட்டத்தில் இதை கூறினார். அப்போது எனக்கு பண்டைய வதைக்கூடங்கள் ஞாபகம் வந்தது. ♦️ ஊடகவியலாளர் : பண்டைய வரலாற்றை தெரியாத ஒருவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நீங்கள் வாக்களிக்க 88/89 நடைபெற்றது என்ன என்பதை தேடிப் படியுங்கள். பின்னர் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். 🛑 பிற்குறிப்பு இவர் இந்த நேர்காணலில் கூறியது போல் JVP இனரால் தேசிய அடையாள அட்டைகள் திருடப்பட்டது உண்மை தான். தற்பாதுகாப்பிற்காக சில கொலைகள் செய்யப்பட்டன. நானும் 2000 ஆண்டுக்கு பிற்பாடு பிறந்தவன். நானும் இவர் சொன்னது போல் வாக்களிக்க முன் பண்டைய அரசியலில் 88/89 உண்மைத் தன்மைகளை ஓரளவு தேடிப் படித்தேன். நான் தெரிந்த மட்டில் JVP இன் பெயரை வைத்து அவர்களின் கொள்கைக்கும் அரசியல் கோட்பாடுகளிற்கும் அப்பால் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற ஒரு குழு JVP பெயரை வைத்து பல அப்பாவிகளை கொலை செய்ததையும், இந்த குழுவில் இந்திய ரோ அமைப்பின் சிலரும் அரசினால் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு அராஜகம் செய்தாக பல நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியாளர்களின் அறிக்கைகளில் எழுதப்பட்டிருத்ததை வாசித்தேன். அன்று ஊடகங்களும் அரசாங்கம் எதைச் சொன்னதோ அதே மக்களிற்கும் காட்டியது. அடாவடித்தனத்திற்கும், ஊழலிற்கும் எதிராக குரல் கொடுத்ததால் தீவிரவாதிகள் JVP இனரை முத்திரை குத்த அரசாங்கம் செய்த செயலாகவே பெரும்பாலான ஊடகவியலாளர் எழுதியிருந்தனர். இது தொடர்பாக இன்னும் ஆராய்ந்து எழுதவுள்ளேன். எது எப்படியோ இந்த வதை முகாம்களில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தற்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிலர் நினைக்கலாம் நான் JVP சுத்தப்படுத்த முனைவதாக. எழுதுவது என் விருப்பம். வாக்களிப்பதும் எனது உரிமை. விமர்சிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது. ✍🏻Usaidh Muaaz யாழ்ப்பாணம்.com
  34. நன்றி கிருபன். புலவர் கோவிக்கவேண்டாம். நான் நேரலையில் பார்த்ததைத்தான் சொன்னேனேயொழிய உங்கள்மீது எந்த வெறுப்பும் இல்லை!! அதை வைத்துதான் கிருபன் கணிக்க முன்பே முதலிரு இடங்களையும் சொன்னேன்!! மற்றும்படி முதல் ஆறுபேரும் வெற்றியாளர்களே! 👍
  35. பெரிய‌ப்பு இந்த‌ முறை யாரின் கையால் எனக்கு ஜ‌ந்து ப‌வுஸ் ப‌ரிசு த‌ர‌ போறீங்க‌ள் லொள்.............ஜ‌பிஎல் போட்டியில் மீரா அண்ணா கையால் த‌ந்தீங்க‌ள்.....................இந்த‌ முறை நிலாம‌தி அக்காவின் கையால் வாங்க‌ ஆசைப் ப‌டுகிறேன் லொள்😁.................. நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் இந்த‌ தொட‌ர் முழுவ‌தும் விளையாடாம‌ விட்டும் 42 புள்ளி எடுத்த‌து ம‌கிழ்ச்சி அளிக்குது🙏👍..........................
  36. ஏன் உங்களின் தீர்மானத்தை அணைத்து மாவட்டங்களுக்குமாய் விஸ்தரிக்கக் கூடாது ........ ! 😁
  37. யாழ்பாணத்திலில் வாங்கின அடியை எப்படி இந்த சுத்துமாத்து மறக்கமுடியும் . உருப்படாத ஜென்மம்
  38. ந‌ன்றி ந‌ண்பா நான் நேர‌லைய‌ பார்க்க‌ வில்லை இது சும்மா பொழுது போக்குக்கு நட‌த்த‌ப் ப‌டும் போட்டி தானே , நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஒரு போட்டியில் கூட‌ விளையாட‌ வில்லை சில‌து சிங் விளையாடி அதிக‌ விக்கேட் எடுத்து இருந்தால் நான் தான் முத‌லாம் இட‌ம் ந‌ண்பா🙏👍...............................
  39. வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கு வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள். பையா கவலைப்படவேண்டாம். உண்மையில் நீங்கள்தான் வெற்றியாளர்!! கிருபன் முடியும்வரை நேரலையை பார்க்கவில்லை!!
  40. கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ.... குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣 நலம் பெற்று களம் வந்ததில் மகிழ்ச்சி போட்டியை வழமை போல் தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்தி ப்போம்
  41. போட்டியில்முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். போட்டியை வழமை போல் இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. பல போட்டிகளை தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்திக்கலாம்.
  42. @புலவர் @நீர்வேலியான் இருவரும் துல்லியமான கணிப்புகளை கணித்து வெற்றியின் முதல் இரண்டாவது இடங்களையும் மூன்றாம் இடத்துக்கு சத்தமே இல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து(வேவுப்புலிகளை நினைவுக்கு கொண்டுவந்துள்ளீர்கள்)முன்னேறிய @நியாயம் க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கணனிப்புலி @கிருபன் க்கு எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. சுலபமான வழிமுறைகளை உள்வாங்கி போட்டியை திறம்பட நடாத்தி போட்டிகள் முடிந்தவுடன் புள்ளிகளையும் சரியாக வழங்கி இத்தனை பேரையும் சுமைதாங்கியாக தாங்கி அடுத்த போட்டிக்கும் தயாராக நிற்பது சந்தோசமாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். வயது போன காலத்திலும் தாத்தா @குமாரசாமி 6ம் இடத்துக்கு வந்தது கஸ்டமாக இருந்தாலும் சபைக்காக பாராட்டுகிறேன்.
  43. காலங்களில் அவள் வசந்தம் . ............! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.