Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    38770
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19134
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/06/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!
  2. நந்தனுக்கு வாழ்த்து சொல்பவ்கள் எனக்கும் வாழ்த்து சொல்ல வேணும்.அது தானே மரபு.😂
  3. மகிழ்ச்சி ராமலிங்கம் சந்திரசேகரும் இளங்குமரனும் கஷ்டபட்டு பாட்டு எழுதி மியூசிக் போட்டு முகநூலில் பதிவேற்றிய முயற்ச்சிகள் எல்லாம் வீணாகிவிட்டதே 😂
  4. இது தனிப்பட்ட ஒருவரின் கருத்து. 2009 இற்குப் பின்னர் புலிகள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் உமிழப்படுவது. ஆகவே இதனை சரியா தவறா என்று அமிலப் பரிசோதனை செய்து உங்களின் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. தமிழர் நலனில் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அக்கறை கொண்டவர்கள் எமதினதில் முன்னரும் இருக்கவில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.
  5. தவறான முடிவினால் எடுக்கப்பட்ட உயிர். இதனைச் செய்திருக்கத் தேவையில்லை. அமெரிக்கச் சார்பு நீலன் அமெரிக்க நலன்களை முன்னிறுத்தியே தீர்வினை வரைய உதவியிருக்கலாம், இதுகூட அனுமானம் தான். இவரைக் கொன்றதால் எமக்கு சர்வதேசத்தில் ஏற்பட்ட அவப்பெயரும், பாதிப்பும் மிகக் கடுமையானது. கதிர்காமர் கொல்லப்பட்டதைக் காட்டிலும் நீலனின் கொலை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சிலவேளைகளில் கதிர்காமை சந்திரிக்காவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் நீலன் என்பதாலேயே இவரை புலிகள் குறிவைத்தார்களோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாகவிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய கொலை. ஒரு விவாதத்திற்கு இவரைக் கொன்றதாலேயே அமெரிக்கா புலிகளை அழித்தது அல்லது அழிக்கத் துணை நின்றது என்று எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதுமே தர்மத்தின்பால் நின்றிருக்கிறதா என்கிற கேள்வியும் வருகிறதே? 1980 களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணையாகவே நின்றிருக்கிறது. புலிகளை அழிப்பதே இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை என்றளவிற்குச் செயற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா, நீலனின் இறப்பின் பின்னர்தான் புலிகளை அழிக்க எண்ணியது என்று நான் நினைக்கவில்லை. தமிழர் போராட்டத்தை எவர் முன்னெடுத்திருப்பினும் அதனை அமெரிக்கா எதிர்த்தே இருக்கும். நீலனின் கொலை இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்று நான் கருதவில்லை.
  6. பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை.. இலங்கையிலிருந்து 1990களிலிருந்து தான் தமிழர்கள் அதிகளவாக புலம்பெயர ஆரம்பித்தார்கள் ஐரோப்பா,கனடாவை நோக்கி.. நான் ஐரோப்பா வந்தது 2002ல், வெற்றிகரமாக 23 ஆண்டுகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் காலம் தள்ளியாச்சு.. சரி நான் சொல்ல வந்த விசயம்.. புலம் பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையில் 50-60% வீதமானவர்கள் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதில் இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்கள்.. 🔗புதிதாக வந்த நாட்டில் மொழி தெரியாமல், கல்வி தகமை அதிகம் தேவையில்லாத தொழில்கள் (துப்பரவு,உணவகம்) மூலம் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள். முதலாவது தலமுறையில் இங்கு முதல் வந்தவர்கள் 90% ஆண்கள் தான். (ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட சிலரே மொழி படித்து, மேற்கொண்டு படித்து வேறு வேலைகளுக்குள் சென்றவர்கள்) மேலும் சிலர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்றும் பலர் ஆரம்பத்தில் என்ன வேலையில் இருந்தார்களோ இன்று வரை அதே தொழிலில் தான் இருக்கிறார்கள். 🔗பல பேர் வந்து அகதி அந்தஸ்து கிடைத்தபின் மனைவிமாரை இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பல பேர் சகோதரர்களை, ஒரு சிலர் மனைவிமாரை பல லட்சங்கள் கட்டி இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பின் மனைவிமாரின் சகோதரங்களையும் கூப்பிட உதவி செய்தார்கள். 🔗வெளிநாடு வராத நாட்டிலிருக்கும் பெற்றோர்,சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் என எல்லோருக்கும் உதவி செய்தார்கள். இப்படி தனது இளமைக்காலம் முழுவதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் தான் இந்த பெரும்பாலான முதலாம் தலைமுறையினர்.. இவர்களில் பெரும்பாலானோரை இன்றுவரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களின் உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரி இலங்கையிலிருக்கும் உறவுகள் தான் இவர்களை பயன் படுத்துகிறார்கள் என்றால், இங்கு பிறந்து, நன்றாக கல்வி கற்று, பெற்றோரை விட நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும் சொந்த பிள்ளைகளும் இதை தான் செய்கிறார்கள்.. 🔗 இங்கு பிறந்தவர்கள் தங்களது முதல் வீடு வாங்குவதற்க்கு வங்கிக்கு கட்ட வேண்டிய 10-15% வீத முன் பணத்தை பெற்றோரிடம் தான் எதிர் பார்க்கிறார்கள்.(பெற்றோர் எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் தான் வீடு வாங்கியிருப்பார்கள்) 🔗தங்களின் ஆடம்பர கல்யாணத்திற்க்கும் பெற்றோர்களை தான் எதிர்பார்க்கிறார்கள்.. 🔗அவர்களை வளர்துவிட்டது காணது என்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள்.. இப்படி சொல்வதற்க்கு ஏராளம் இருக்கின்றது.. ஒரு சில பிள்ளைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.. இப்ப சொல்லுங்கள் இந்த முதலாம் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள் தானே??😔 https://www.facebook.com/share/p/18ohX1u8m1/?mibextid=wwXIfr
  7. நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் முழுமையடையாத வரைவுச் சட்டம் 1996 ஜனவரி 16 அன்று சிங்கள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது, மார்ச் 1997ம் ஆண்டு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களின் இறுதி அறிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சிறிலங்கா அதன் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவை வெளியிட்டது. பின்னர் ஒக்டோபர் 1997 அன்று முழுமையடைந்த வரைபு வெளியானது. 7 ஓகஸ்ட் 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும். அதையும் கூட சிங்களம் நிறைவேற்றவில்லை. மட்டுமின்றி சந்திரிக்காவின் முதன்மை அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் மகாநாயக்க தேரர்களின் கருத்திற்குட்படுத்தியே செய்வோம் என்றார், 13 ஓகஸ்ட் 2000ம் ஆண்டு அன்று. இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" என்ற நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் மறுதலித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதனை "படைய வடிவமைப்புகளை மறைக்க ஒரு அரசியல் முகமூடி" என்று 14 ஓகஸ்ட் 1995இல் அழைத்தனர். (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) முன்மொழிவை புலிகளின் மதியுரைஞரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்க கட்டத்தில், 1995 ஓகஸ்ட் 11, மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். பின்னாளில் ,மார்ச் 13, 2003 ஆம் ஆண்டு,வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்குகையில் இவ்வரைபின் "தொடக்க வடிவம்" ஏற்கக்கூடியது என்றார் (உதயன் 13/03/2003 பக் - I). அப்போது கூறியதாவது: உந்த மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் தனியான வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர் கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான" 😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும். அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்! புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர். இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது. வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே, 1996, யாழில் 812 தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்ற சிங்களவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! பாவிக்கப்பட்ட முதன்மை உசாத்துணை: https://tamilnation.org/conflictresolution/tamileelam/cbkproposals/ ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  8. உவர் நாய் பூனைகளுக்கெண்டு விக்கிற நெத்தலி கருவாட்டை கத்தரிக்காயோட சேர்த்து சமைச்ச கதைய சொல்ல வாறார்....... உந்த கதைய வளர விடக்கூடாது.
  9. இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி. விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள். ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம். பிகு இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣
  10. Valvetithurai Urban Council ACTC Members 7 41.85% 1558 ITAK Members 5 34.89% 1299 NPP Members 3 18.16% 676 EPDP Members 1 2.42% 90
  11. ஐ ஜாலி…. அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.
  12. iPl என்றால் என்ன கொக்கா என்று நினைக்கக் கூடாது அவர்கள் நினைப்பது மட்டுமே இங்கே செல்லுபடி ஆகும்: அதற்கேற்றவாறே விதிகளை அமைத்துள்ளார்கள் எல்லாம் ரசிகர்களின் தலைவிதி முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் அவரைப் பின்தொடரும் அடியார்க்கும் வாழ்த்துக்கள்
  13. என்னது உங்களுக்கு இரண்டு புள்ளியா. அப்பிடிச் சொன்னாப்போல கிருபன் புள்ளி குடுப்பார் என்று நினைச்சீங்களோ. வாங்க நாளைக்கு சென்னையை வெல்ல வைப்பம். அப்பவாவது புள்ளி கிடைக்குதா பார்ப்போம்.
  14. GMT நேரப்படி நாளை புதன் 07 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 13 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  15. இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார். இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது. தகவல்களை தொகுத்தது: நிழலி
  16. தலைப்பில் ஐரோப்பிய யூனியன், கனடா கொடிகள் இருக்கின்றன. பிரித்தானியாவின் கொடி இல்லை! பிரித்தானியாவில் முன்னேற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் பலர் தும்படியில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் இதே நிலை எல்லா நாடுகளிலும் இங்குள்ள வீதத்தில் இல்லை!
  17. நல்லா சொல்லுறியல். நல்லா உருண்டு பிரலலாம் வாங்க. என்ன அங்கின இங்கின அடி விழும் சரியா. ஒரு புள்ளி வரேலை என்டு, நாம படுற பாடு நாய் பாடாக் கிடக்கு. இப்பிடி ஏதேன் மழை கிழை வந்தாத்தான் நிம்மதி. ஒன்டில நாம மேல போகணும் இல்லாட்டி ஒருத்தனுக்கும் இல்லை.
  18. இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலாவது பந்தில் கருண் நாயரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மிக மோசமாக ஆட்டத்தைத் தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. எனினும் ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் அஷுதோஷ் ஷர்மாவும் தலா 41 ஓட்டங்களுடன் இணைப்பாட்டத்தைக் கொடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலகுவாக வெல்லலாம் என்று நினைத்திருக்க வருணபகவான் எதிர்நிலை எடுத்ததால் மழை பொழிந்து தள்ளி ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!
  19. பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣. நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை. படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள். அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள். இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி.
  20. இந்தக் கட்டுரையானது தொடர்ந்தும் நீலன் திருச்செல்வம் என்ற உடனுழைப்பாளரால் கொணரப்பட்டதாகக் கூறப்படும் கொணரப்படாத தீர்வுப் பொதி பற்றி என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் புலி எதிர்ப்புவாத தமிழர்களிற்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டது. இவரை புலிகள் "துரோகி/ வஞ்சகன்" என்று அவர்களின் அலுவல்சார் ஊடக வெளியீடுகளிலும் அவர்களின் நேரடி கண்காணிப்பிலிருந்த இதழ்களிலும் அழைத்ததாக எங்கும் தெரியவுமில்லை. என்னால் காணவும் இயலவில்லை! (வெளிநாடுகளிலிருந்து வெளியான தமிழர் ஆதரவு இதழ்களில் இச்சொல் தாராளமாக காணக்கிடைக்கிறது) எங்கினும் இருந்தால் எனக்கும் வாசகர்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  21. இந்தியா முழுக்க பாக்கிஸ்தான் செல்வாக்கு இருக்கு எண்டதை மோடி அரசு அறியாமல் இருக்குமா என்ன? 😎
  22. பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் இந்தியா ,இஸ்ரேல் அமெரிக்கா,ரஸ்யா கூட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்
  23. இன்று எல்லாமே ஒரே திரில்லரா தான் இருக்கு. IPL முடிய சாம்பியன் லீக் உதைபந்தாட்டத்திற்கு போனால் அங்கே இன்டெர் மிலான் 4 - பாசிலோனா 3 . ( Aggregate 7 - 6). இந்த வருடத்தில் மிகச்சிறந்த போட்டி!
  24. என்ன சொல்லுகிறீர்கள். ?? உலகத்தை பகைக்கவில்லை என்றால் ..தமிழ் ஈழம் கிடைத்திருக்குமென்றா.??? உங்களால் தடைகளை இல்லை என்று நிறுவ முடியவில்லை நீலன் எழுதினார். நீலன் எழுதினார். உங்கள் கருத்துகள் சந்தர்பவாதம். ஆனாது புலிகள் வென்றிருந்தால். புலி பாட்டு பாடுவதும் தோற்றால். இகழுவதும். .........கருத்துகள் ஆகாது பிரபாகரன் பற்றி நீங்கள் எப்படி கதைக்க முடியும் ?? சர்வதேசம் சர்வதேசம். என்கிறீர்கள் .....இலங்கையில் தமிழருக்கு அவர்களிடம் என்ன தீர்வு உண்டு” ??? அவர்களிடம் ஏதுமில்லை .....ஏதுமில்லாத. சர்வதேசம். பற்றி கவலைப்பட முடியாது நீங்கள் கண்ணீர் வடிப்பது உங்கள் பலவீனம்.
  25. Thunukkai Pradeshiya Sabha Polling District - Mullaitivu Local Authority Final Result ITAK 1,594 29.31% Members 4 ACTC 1,082 19.9% Members 3 DTNA 804 14.78% Members 2 SJB 605 11.13% Members 1 NPP 492 9.05% Members 1 IND1 388 7.13% Members 1 SLLP 254 4.67% Members 1 IND2 219 4.03% Members 0 TOTAL MEMBERS 13 VALID 5,438 98.09 % REJECTED 106 1.91 % POLLED 5,544 64.02 % ELECTORS 8,660 Local Authorities Election 2025 Results - Sri Lanka | Adaderana
  26. உலகிலேயே சொந்த பந்தங்ளிடம் கையேந்தி வாழும் பழக்கம் உள்ளவர்கள் தென்னிந்திர்களும் எரித்திரிய எதியோப்பிய மக்களும் தான் . இதன் விளைவு - உடனடிப் பயன் கிடைகின்றது ஆனால் நீண்ட காலநோக்கில் சமூகத்துக்கான தீமை அதிகம். இது புத்தாக்கங்களை நீர்த்துப்போக செய்கிறது. தங்கி வாழ்வதை ஊக்கிவித்து சமுகம் தேங்கிப் போக வழி செய்கிறது. உண்மை
  27. முல்லைத்தீவு மாவட்டம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, முல்லைத் தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி -1364 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 990 வாக்குகள் - 03 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 607 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 808 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 500 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : முல்லைத்தீவு மாவட்டம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை | Virakesari.lk
  28. உண்மைதான். கண்ணதாசன் சபையினிலே இரவும் இல்லை பகலும் இல்லை ஒரே கொண்டாட்டம்தான்.
  29. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிஞர் அம்பிகைபாகர்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில்லை. ரெட்டிப்பு சந்தோசம். ❤️
  30. நல்லாச் சொன்னீங்க போங்க. கை ராசி என்டுறியல். அட அது வேறையா. இப்பிடியே நந்தனையும்...... 😁
  31. ஆம். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து, மேலே இருப்பதும் உங்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பது போல😎! மிக அண்மைய உதாரணமாக, தமிழர் நலனில் நீண்டகால அடிப்படையிலான அக்கறை 2002 சமாதான முயற்சியில் தமிழர் தரப்பில் இருந்து வெளிப்படவில்லை என்பதைப் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களே உறுதி செய்திருக்கின்றன. ஜப்பானுக்குப் போகாமல் விட்டது முதல், மாவிலாற்றை மறித்தது வரையில் இவை எல்லாவற்றையும் பல இடங்களில் எழுதியாகி விட்டது. தலையை மண்ணுக்குள் புதைத்த படி "சே, இவையள் புலி வெறுப்பில் சொல்லுகீனம்" என்பதையும் பல இடங்களில் வாசித்த படி தான் இருக்கிறோம்.
  32. Alice Capsey · Kavya Maran appear after long time Hello everyone....... ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ...... ! 😂
  33. போகவில்லை.நோர்வேயின் ந(டி)டுநிலைமையை நம்பி தான் புலிகள் பேச்சுவாத்தைக்கு போனார்கள்.
  34. நீங்கள் உங்களுக்கு ஏற்ற வரலாற்றை உரோமம் அளவுக்கு ஆக்குகிறீர்கள். அது உங்கள் தனி உடமை. ஆனால் சத்தியாக்கிரகம் செய்தவர்களும் கொல்லப்பட்டார்கள் நீதிமன்றத்தை நம்பி சிறை சென்றோரும் கொல்லப்பட்டார்கள் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்..... ..... ..... என்ற வரலாறு தான் நிமிர்ந்து நின்று சாவோமானது.
  35. அமிருக்கும் நீலனுக்கும் இடையான உங்கள் வித்தியாசப்படுத்தலை நான் ஏற்கிறேன். அமிர் போல் பொய் வாக்குறுதிகளை தந்து, உசுப்பேத்தி, இளைஞர்களை போருக்கு அனுப்பி விட்டு பின் அவர்களையே எதிர்த்து நீலன் அரசியல் செய்யவில்லை. அதே போல் அமிர் இந்திய படைகளின் அராஜகத்தை காபாந்து பண்ணியது போல், அல்லது புலிகளை கடுமையாக உலக அரங்கில் சாடியது போல் நீலன் செய்யவில்லை என்பதே என் நினைவு. ஆகவே நீலன் ஒரு பதவி மோகம் கொண்ட அரசியல்வாதி என நான் ஆமோதித்தது பிழைதான். ஆனால் அவர் 1996-99 தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் பலதை கண்டிக்காமல் - அதை செய்தவர்களோடு தனிப்பட்டும், அரசியலிலும் நட்பு பாராட்டினார். குறிப்பாக, கிரிசாந்தி, செம்மணி படுகொலைகள், என அப்போ அரங்கேறிய பலதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதியே என நான் கருதுகிறேன். புலிகள் அளவுக்கு அல்லது அதை விட மேலாக எமக்கான ஒரு கெளரவமான தீர்வை நீலன் விரும்பினாரா? என்றால் உண்மையில் என் பதில் எனக்கு தெரியாது என்பதே. இந்த விடயத்தில் நான் ஆம் என அறுதியிட்டு கூற கூடியது புலிகளை மட்டுமே. நீலன் ஒரு அமைதியான backroom operator போலவே எனக்கு அப்போ தென்பட்டார். கொல்லும் போது அவரின் திட்டங்கள் கூட நமுத்து போய் அதை சீண்டுவாரில்லாத நிலை வந்து விட்டது. அப்படி இருக்க ஏன் கொன்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை. இதற்கான ஒரு பதில் இருந்தாலும் - அதை இங்கே கொலையை நியாயப்படுத்தி எழுதும் எவரும் தெரிந்திருப்பார்கள் என நான் நம்பவில்லை.
  36. 👉 https://www.facebook.com/reel/1142556031222435 👈 தந்தை... பிள்ளைக்கு ஐஸ் கிறீம் கொடுக்கப் படாது என்று எவ்வளவு முன் ஏற்பாட்டுடன் செல்கிறார் என பாருங்கள். அப்படி இருந்தும் ஐஸ்கிரீம் காரன் ஒலி எழுப்புகின்றான். அதற்கும் தயாராகவே... குழந்தையின் காதை, சத்தம் கேட்காத வண்ணம் மூடி உள்ளார்.
  37. இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா. இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன். ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா. 😂🤣
  38. இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்... சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி... பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂
  39. உடான்ஸ் சாமியாரிடம் வாட்சாப்பில் கேட்டதில் - யாக குண்டத்தில் அமித்ஷா குடும்ப தலைபிள்ளையை இறக்கி அளப்பெரும் சோதியில் கலக்கவிட்டால் - பாகிஸ்தான் பலநூறாக சிதறும், சர்வதேச கிரிகெட்டும் தப்பிக்கும் என்கிறார்🤣.
  40. மயிலே... மயிலே... என்றால், இறகு போடாது. 😂 உடான்ஸ் சாமியார்தான்... ஏதாவது யாகம் நடத்தி, இவங்களை சண்டை பிடிக்க வைக்க வேண்டும். 🤣
  41. ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்; ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக வரவேற்பு Published By: VISHNU 04 MAY, 2025 | 09:16 PM வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். இலங்கை மற்றும் வியட்நாம் தேசியக் கொடிகளை ஏந்திய வியட்நாம் மக்களால் ஜனாதிபதிக்கு அதன் நுழைவாயிலில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. விகாரை வளாகத்தை சுற்றிப் பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை காண வீதியின் இருபுறமும் ஏராளமானோர் கூடியிருந்தனர், மேலும் அவர்கள் இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் அசைத்து தமது மரியாதையை செலுத்தினர். ஜனாதிபதி, விகாரையில் வழிபாடு நடத்திய பிறகு, தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். பின்னர், ஜனாதிபதி விகாரை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதியை வழிபட்டதுடன், இந்த போதி, 2023 ஆம் ஆண்டு பாய் டின் (Bai Dinh) விகாரை வளாகத்தில் நடுவதற்காக இலங்கையிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையாகும். இலங்கை மத்திய கலாசார நிதியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போதியை சுற்றி நிர்மாணிக்கப்பட்ட மதிலையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறந்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விகாரை வளாகத்தில் சால் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையையும் பார்வையிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விகாராதிபதி தேரருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213674
  42. @Sasi_varnam எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம்.
  43. உலகம் உக்ரேனுக்கு ஒரு முடிவை கொடுத்தது போலவாக இருக்குமோ?? அல்லது அன்றாடும் இறக்கும் பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கும் முடிவாக இருக்குமோ?
  44. சந்திரிக்கா செம்மணி கொலைகள், பொருளாதார தடைகள் என தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர். இவர் ஒரு தீர்வு பொதியை தருவார் என தமிழ் மக்கள் எப்படி நம்புவது??
  45. ஒரு பிரச்சினை கொதி நிலையில் இருந்தால்... அதனை ஆறப் போட, விசாரணைக் கமிஷன் ஒன்றை போடுவது அரசாங்கத்தின் வழமை. இதுவரை... ஏதாவது ஒரு கமிஷன் விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டதாக வரலாறே இல்லை. மக்களை ஏமாற்றுவதற்கென்றே இந்த கமிஷன் விசாரணைகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.