Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    88786
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19638
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3632
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3034
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/22/25 in all areas

  1. அட கருமமே🤣… இது ஒரு கோப்பி கடை. பல்தேசியம் எல்லாம் இல்லை இந்தியா, இப்போ இலங்கையில் உள்ளது. இலங்கையில் நெஸ்கபே, நெஸ்டி என சீனிபாணியை தரும் கடைகளுக்கு மத்தியில் ஓரளவு தரமான மேற்கத்திய பாணியில் காப்பி பருக உகந்த இடம். உண்மையில் நல்லூர் போன்ற ஒரு செல்வ செழிப்பான இடத்தில் இது அமைவதுதான் பொருத்தம். இதில் மொக்கன் கடை போல் மிச்ச எலும்பை நாய் தூக்கி போக எல்லாம் வாய்பில்லை. Beef panini, sandwich, மிஞ்சி போனால் ரோல்ஸ்… ஐரோப்பாவில் Cafe Nero, Costa, Starbucks போல ஒரு கடை அவ்வளவுதான். கோவிலில் இருந்து 300,400 மீட்டருக்கு அப்பால் கூட இப்படி ஒரு கடை வருவதை எதிர்ப்பது உண்மையிலே தமிழர்கள், குறிப்பாக யாழ்பாண தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என கூவவே வழி செய்யும். இப்படி தமிழ் (சைவ) தலிபான்களாக மாறி எல்லா தொழில் முயற்சியையும் அடித்து நூத்தால் - ஆப்கானிஸ்தான் மாதிரி இருக்க வேண்டியதுதான். பிகு படத்துக்கும் தகவலுக்கும் நன்றி.
  2. பையன், யாரோ ஜக்கம்மாவாம், அவரையும் அடுத்த யாழ்கள கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளசொல்லுங்கள், பார்ப்போம் கிளிஜோசியமா அல்லது ஜக்கம்மாவா வெல்கிறார்கள் என.
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 64வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் சூறாவளி போன்று பந்துகளை மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி தொடர்ச்சியாக அடித்தாடியதாலும், மிச்சல் மார்ஷின் 64 பந்துகளில் எடுத்த 117 ஓட்டங்களுடனும், நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காது 27 பந்துகளின் எடுத்த 56 ஓட்டங்களுடனும் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை எட்டும் நோக்கில் வேகமாக அடித்தாட முயன்றபோது நட்சத்திர ஆரம்பத் துடுப்ப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்து டக்அவுட்டுக்குத் திரும்பினர். ஷாருக்கான் 29 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் வெற்றி இலக்கை அடையக் கூடிய ஓட்ட விகிதத்தில் தொடர்ச்சியாக ஆடாததால் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் அயலில், பொன்னம்பலவாணேச்சர் கோயில் அயலில், மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள பிரசித்த பெற்ற இந்துக் கோவில் அருகில் எல்லாம் இப்படி எத்தனை கோப்பிக் கடைகளும், அசைவ உணவகங்களும் உள்ளன! யாழில் எனக்கு தெரிந்த பல சின்ன மற்றும் நடுத்தர இந்துக் கோவில்களின் அருகில் எத்தனை பேக்கரிகள் உள்ளன. அதில் எப்பவும் 'மாலு பாண்' விற்பார்கள். சாமியை கும்பிட்டுப் போட்டு பசிக்கு மாலுபாணும் ரோல்ஸும் வாங்கி சாப்பிடுகின்ற எண்ணற்றவர்கள் உள்ளனர். இதை எதிர்க்கும் கூட்டத்திடம் போய் கவுணாவத்தையில் செய்யப்படும், ஆடு மாடு சேவல்களை அறுத்து செய்யப்படும் வேள்வி தவறாகாதா என கேட்டுப் பாருங்கள். அதை நியாயப்படுத்த இன்னொரு லொஜிக் சொல்வார்கள். வர வர யாழ்பாணம் சங்கிகளின் கூடாரமாக மாறிக் கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இப்படியான மதவாத செயல்கள் ஈற்றில் தமிழ் /யாழ்ப்பாண சமூகத்தை மேலும் மேலும் ஒதுக்கப்படும் சமூகமாகவும் நலிவுற்ற சமூகமாகவும் மாறவே உதவி செய்யும்
  5. இன்றொரு பாகிஸ்தானியர் எப்படி அடி இந்தியாவுக்கு என்று மிகுந்த ஆர்ப்பாட்டத்தோட கேட்டார். இந்தியாவுக்கு எவன் அடித்தாலும் மகிழ்ச்சியே என்றேன்.
  6. அவிங்க தான் சொல்லீட்டாங்களே? இதில் "மத வாதம்" இல்லை! தீவகத்தில் அரச பாடசாலையில் நடந்தது போலவே, பொதுச் சுகாதாரத்தை காக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமே😎! NB: நல்லூர் சுற்றாடலில் திரியும் கட்டாக்காலி நாய்கள் மரக்கறி மட்டும் தான் உண்ணும் என அறிந்திருக்கிறேன். அணில், ஓணான் ஓடினால் கூட, அவை கோவிலில் இருந்து 500 மீற்றர்களுக்கு வெளியே ஓடிய பின்னர் தான் அவை துரத்தவே ஆரம்பிக்குமாம்😂!
  7. சுமந்திரனும், சிவஞானமும் நடத்தும் வில்லுப்பாட்டு. 😂 🤣 இந்த வருடத்தின்... மிகச் சிறந்த கருத்தோவியம். 👍
  8. ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்! அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!
  9. இதேதான் புலவர் அய்யா எனக்கும் ...நம்பின என்னை கழுத்தறுத்து விட்டினம்
  10. இந்தியா என்றதும் காந்தி தேசம் என்ற மாயை நீங்கி இப்போது வாந்தி வருகிறது.🤮😩
  11. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
  12. நான் என்ன செய்வது என்றால்…இப்படி சொல்லி…ஒரு அறை நிமிட கேப் விட்டு… ஆனாலும் சீனா இல்லை எண்டால் இந்தியா உங்களை ஊதி தள்ளி இருக்கும் எண்டும் சொல்லி விடுவன். கோல் அடிப்பது எண்டு முடிவாகிவிட்டால் இரெண்டு பக்கமும் அடிக்கவேண்டும் 🤣 ஆள் வர பிந்துகிறது… பாரிஸ்டாவில் கோப்பி குடித்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
  13. முருகப் பெருமானே............ நீ தானே தமிழுக்கு கடவுள்............ இறங்கி வந்து வேலால் குத்தமாட்டியா....................🤣.
  14. என்னுடைய இரண்டு அண்ணா, அக்கா மற்றும் பிற சொந்தங்கள் என 5 குடும்பங்கள் நல்லூர் கோயில் சுற்றாடலில் தான் வசிக்கிறார்கள். அதிகமாக சைவம் தான் சமைப்பார்கள், மாமிசம் சமைப்பது மிகவும் குறைவு. காரணம் சுற்றி உள்ள கோயில்களில் தொடர்ந்தும் ஏதாவது உட்சவங்கள் நடக்கும் ( மூத்த விநாயகர், நாச்சி அம்மன் இப்படி பல) ஆகையினால் பெரும்பாலும் மாமிசம் தவிர்க்கப்படுகிறது. ஆனால் சமைக்கவே மாட்டார்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
  15. நின்று கொண்டு இருப்பவர் உசைன் போல்ட். வணங்குபவர் Gatlin. இது நடந்த இதே stadium த்தில் Gatlin போதை பொருள் உபயோகித்து ஓடியத்திற்காக 2012 ல் தடை செய்யப்பட்டு cheat பட்டம் வாங்கினார். உலக தடகள வீரர்கள் மத்தியில் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று ஏசினார்கள். ஆனால் அதே போட்டியில் தங்கம் வென்ற போல்ட் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பல பேட்டிகளில் அவரை நோண்டி நோண்டி கேட்ட போது அவர் சொன்னது. Galtin ஒரு திறமையானவர். அவர் போதை பொருளை உபயோகித்தால் தடை செய்யப் பட்டு இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் போதை பொருளை உபயோகிக்காமல் இன்னும் முயற்சி எடுத்து இருந்தால் கண்டிப்பாக என்னை கூட ஜெயிக்கலாம் என்றார். உலகம் அவர் செய்த தவறை மட்டும் பார்க்கிறது. நான் அவரின் திறமையை மட்டும் பார்க்கிறேன் என்றார். அப்போது எல்லோரு சிரித்தார்கள். ஒரு கருப்பருக்கு இன்னொரு கருப்பர் வக்காலத்து வாங்குகிறார் என்று. ஆனால் அந்த பேட்டி Galtin க்குள் ஒரு பெறும் மாறுதலை உண்டாக்கியது. 6 வருடம் உழைத்து போதைகளை விட்டு விட்டு மீண்டும் களத்துக்கு வந்தார். அதே களத்தில் அவர் உசைன் போல்ட்டையே வென்றார். அவர் தரையில் அமர்ந்து போல்ட்டை வணங்கிய காட்சி... 🎉" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t8c/1/16/1f389.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🎉" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t8c/1/16/1f389.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">
  16. அறுபது நாட்களாக எம்மை அடக்கி வைத்திருந்த அந்த அடிமைச் சங்கிலி இன்று உடைத்தெறியப்பட்டு::::: விடுதலை::: விடுதலை::::🤣 என்ற கோசம் மட்டுமே என் காதில் கேட்கின்றது:😂 அந்த இரண்டு வெள்ளைத் துரைமார்களும் இப்போது என்பின்னால் :::😇 இப்போதும் நான் அழைக்கிறேன் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம் 😅
  17. GMT நேரப்படி நாளை வெள்ளி 23 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 65) வெள்ளி 23 மே 2:00 pm GMT லக்னோ - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  18. சீமான் முதலமைச்சராக வந்தால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றுவர். எனக்கு விருப்பமான தொழில் ஆனால் பசு மாடுகள் தான் இல்லை 😀
  19. இது இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கான வியூகமோ என்னமோ?
  20. பிஞ்சுப்பாதங்களின் அழகில் பிழைகள் தெரிவதில்லை.
  21. இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள். குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது. பாஜக குடியுரிமை கொடுக்கவேமாட்டாது. அவர்களின் தமிழ் இன விரோதம் வெளிப்படையானது கூட. என்றாவது காங்கிரஸ் அல்லது ஒரு கூட்டாட்சி வந்தால், இது நடக்கக்கூடும். தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.
  22. உங்களுக்கு விளங்கினால் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எழுதவும்! நானும் எல்லாப்பக்கத்தாலையும் கோர்த்து வாசித்துப்பார்த்தாலும் ஒன்றுமே புரியுதில்லையே!
  23. நானும் அதைத்தானே நேற்றே சொன்னேன். இரண்டு பேராக இருந்தது இப்பொழுது மூன்று பேரும் சேர்ந்து..... கொஞ்ச நாளாக நமக்கு புள்ளிகள் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே, அணிகள் எல்லாம் போட்டு தாக்குறாங்கள்.
  24. அங்கெல்லாம் எமக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தை வாங்கி தாங்கோ, அப்புறம் நாங்கள. யார் என்று காட்டுகிறோம். 😂 போதுவாக இப்படியான விடயங்களுக்கு ஓவரா பொங்குறவர்கள. யாரெண்டா 25 நாள் திருவிழா எப்ப முடியும் என்று காத்திருந்து 26 ம் நாள் பூங்காவனம் முடிய மீன்சந்தைக்கும் இறைச்சிகடைக்கும் படையெடுப்பவர்களாக தான் இருக்கும். அதுக்குள்ள சதி அது இது என்று வேலன் சாமி என்ற **** பொங்கு***
  25. அதுதான் தோனியின் பலமும் பலவீனமும். வெல்லும் போது எல்லாம் நல்லாயிருக்கும். மும்பை இந்த வருடம் முழுக்க அப்பிடித்தான். சொல்லி வைச்சு ஆக்கள் ஆட்டமிழக்கச் செய்வினம். பந்து வீச்சாளர்களும் துல்லியமா வீசினம். போல்ட், பும்ரா, சான்ட்னர் எல்லாம் பயங்கர ஒழுங்கு. சொன்ன இடத்தில பந்து விழும். அப்பாடியான வீரர்களுடன் என்னமாதிரியான மாற்றங்களையும் செய்யலாம். மும்பை சரியான நேரத்தில பயங்கர formக்கு வந்திருக்கினம்.
  26. ராயூடு சொல்வ‌து என‌க்கும் ச‌ரி என்று ப‌டுது ராயுடு சென்னைக்காக‌ இர‌ண்டு அல்ல‌து மூன்று வ‌ருட‌ம் விளையாடி இருக்கிறார் டோனி த‌ல‌மையில்.........................ராயூடு ந‌ல்ல‌ போமில் இருந்த‌ கால‌த்தில் ஓய்வை அறிவித்த‌வ‌ர்..................... ராயுடு தினேஸ் கார்த்திக் சுரேஸ் ரையினா இவ‌ர்க‌ள் மூன்று பேரும் 2004ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌வை ராயூடு தான் க‌ப்ட‌ன்..................அந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் தோல்வி சுரேஸ் ரையினா அந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்லா விளையாடி இருந்தார்..................த‌மிழ‌க‌ வீர‌ர் தினேஸ் கார்த்திக்கும் ந‌ல்ல‌ விளையாடினார்..............அதே ஆண்டு தான் தினேஸ் கார்த்திக் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அறிமுக‌ம் ஆன‌வ‌ர்..............சுரேஸ் ரையினா 2005ம் ஆண்டு ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறிமுக‌ம் ஆனார்...............சுரேஸ் ரையினாவின் முத‌லாவ‌து போட்டியில் , முத்தையா முர‌ளி த‌ர‌ன் போட்ட‌ முத‌ல் ப‌ந்திலே அவுட் ஆனார்.................பிற‌க்கு சுரேஸ் ரையினா ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ஜ‌பிஎல் போட்டிக‌ளில் சிற‌ப்பாக‌ விளையாடினார்...................ராயூடு ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து தான் விளையாடின‌வ‌ர் ...........................................
  27. யாழ்ப்பாண‌ம் த‌மீழீழ‌ம் அல்ல‌வாம் ஒரு கோதாரியும் என‌க்கு விள‌ங்க‌ வில்லை அத‌னால் இவ‌ர் கூட‌ விவாதிப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ந‌ண்பா😁👍...........................
  28. அந்த அமைவிடம் எனக்கு சரியாக தெரியவில்லை கோசான். ஆனால் அந்த இடம்... நல்லூர் திருவிழாவின் போது, வாகனங்கள் செல்லாமல் வீதித் தடை ஏற்படுத்தும் எல்லைக்குள் வருகின்றதாம். அப்படி என்றால்... நிச்சயம் நல்லூர் கோவிலில் இருந்து 300 - 400 மீற்றர் அளவான இடத்தில் அமைந்திருக்கலாம்.
  29. பிச்சகாரன் சத்தி எடுத்தால் முதல் வீட்டு இட்லி, இரெண்டாம் வீட்டு ஆட்டு பாயா, ஐந்தாம் வீட்டு பிரியாணி, 9ம் வீட்டு தயிர்சாதம், கோவில் பிரசாதம் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து வருமாம். கண்ட, கண்ட இடங்களில் நுனிப்புல் மேய்ந்து விட்டு சத்தி எடுத்தால் அப்படித்தான் வரும்🤣. ஆனால் இலங்கையில் மொரட்டுவ E1 உங்களுக்கு இதை விளங்கி கொள்ளும் ஆற்றல் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து🤣🤣🤣.
  30. நேற்றைய போட்டியின் பின்னர் அணிகளின் நிலைகள்:
  31. நான் அரையிறுதிக்கு தெரிவுசெய்த எல்லா அணியும் வெளியாலை. உங்களைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன். செய்த மாற்றம் எல்லாமே பிழைச்சுப்போச்சு.நான் கடைசி இடத்துக்கு வரநிறையச் சந்தர்ப்பம் இருக்கு
  32. இரண்டு மாதம் ஒன்றாக இருந்து... தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர்களை கடத்துவதால் என்ன லாபம். திருமணம் செய்ய முதல் தடுத்திருக்க வேண்டிய வேலை இது. அமெரிக்கன் கட்டைதுரை @ஈழப்பிரியன் ஊரில்தான் நிற்கிறார். இது... அவரின் ஏரியா. இதுக்கு அவர் ஒரு பஞ்சாயத்து செய்து நல்ல தீர்ப்பை சொல்வது நல்லது.
  33. காலையில் நல்ல செய்தியை தந்த ஏராளனுக்கும், யாழ்.மாநகர சபைக்கும் நன்றிகள். 🙂 நல்லூரில்... அசைவ கடை திறந்த, அந்தக் கடை முதலாளியை... ஆனையிறவில் ஆறுமாதம் உப்பு அள்ள விடுங்க சார். 😂 🤣
  34. பையன் ஆரம்பத்திலேயே சொன்னார் போட்டியின் முடிவில் பாருங்கள் என, கிட்டதட்ட அதுதான் நடக்கும் போலுள்ளது.🤣 லக்னோ அணியின் சுழல் பன்ட்கு வீச்சாளர் போட்டித்தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, இண்ரைய போட்டியில் விளையாட முடியாது. டிக்வேஸ் ராட்டி.
  35. மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன். 'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன். வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள். தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு. ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே. இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள். வேறு சில தகவல்கள்: தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல. தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.
  36. இஸ்லாமிய பயங்கர, பிரிவினைவாதத்தை தூண்டும் பேச்சு. ஹன்சார்ட்டில் இருந்து நீக்கி, பாராளுமன்றத்துக்கு வெளியே இப்படி பேசினால் தூக்கி பத்து வருடம் உள்ளே வைக்க வேண்டும்? அது சரி ரிசாத் வீட்டில் கொல்லப்பட்ட வீட்டு வேலைக்கார சிறுமிக்கு நியாயம் கிடைத்துவிட்டதா?
  37. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 63வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமாரின் ஆட்டமிழக்காது எடுத்த 73 ஓட்டங்களுடனும், நமன் டீரின் 8 பந்துகளில் புயல்வேகத்தில் எடுத்த 24 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விரைவிலேயே ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பியதால் 18.2 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜஸ்பிரிற் பும்ராவும், மிச்சல் சன்ரெனரும் தலா 3 விக்கெட்டுகளை மிகக் குறைந்த ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தியிருந்தனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அடுத்த கட்ட play-off ஆட்டங்களுக்குத் தெரிவாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: போட்டியின் ஆரம்ப நாட்களில் பல நாட்கள் முதல்வராக இருந்த @suvy ஐயா 20வது இடத்திற்கு வீழ்ந்துள்ளார்!
  38. சின்ன பிரச்சினைக்கும் மூக்கை நுழைத்து ஊதிபெரிதாக்குவதே இவர் வேலையாய்ப் போச்சு, நா டுகளுக்கிடையேயும், வீட்டுக்குள்ளேயுமா ? குடடையை குழப்பி மீன் இல்லை பெரிய திமிங்கிலத்தையே பிடிப்பார் .
  39. இப்படி ஒட்டு மொத்த கிரிகெட்டையும் இந்தியா புறக்கணித்தால் விளையாட்டு தப்பும்🤣. அவர்கள் தங்கள் தரக்குறைவா ஐ பி எல் லில் மாறி மாறி விளாசி இன்பம் அடையட்டும்🤣.
  40. ட்ரெவர் ஹெட்டுக்கு கோவிட் நோயினால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சிலவேளை விளையாட மாட்டார்
  41. முழு ச‌ம்ப‌ள‌ம் முக்கிய‌ம் எல்லோ அது தான் நாடு திரும்பாம‌ இன்றையான் போட்டியிலும் விளையாடுகிறார்................. சென்னையும் இவையும் தான் ந‌ம்ம‌ புள்ளிக்கு அதிக‌ம் ஆப்பு வைச்ச‌வை.........................
  42. நானும் உத‌ க‌வ‌னிச்சேன் ஜெய்ஹிந் இந்த‌ வீர‌ வ‌ச‌ன‌த்துக்கு குறையே இல்லை😁😛..................புள்வாம‌ தாக்குத‌லின் போதும் கூட‌ பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌னும் என்று குரைத்த‌ கூட்ட‌ங்க‌ள் , அந்த‌ தாக்குத‌ல் அவ‌ள‌வு பாதுகாப்பையும் தாண்டி எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்று ஒரு க‌ன‌ம் சிந்திக்க‌ மாட்டார்க‌ள் ம‌த்திய‌ அர‌சு சொல்லும் பொய்க‌ளை ந‌ம்புங்க‌ள்.................. இன்றும் ப‌ல‌ருக்கு ம‌த்திய‌ அர‌சின் மேல் அந்த‌ தாகுத‌ல் ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் இருந்து கொண்டே இருக்கு................அதுவும் தேர்த‌ல் நேர‌ம் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்..................... அமெரிக்கா த‌லையிடாம‌ இருந்து இருக்க‌னும் பாக்கிஸ்தான் இந்தியாவை வைச்சு செய்து இருக்கும் , அடி வேண்டினாலும் வ‌லிக்காது போல் ஊட‌க‌ங்க‌ளில் சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றி இருப்பின‌ம்😁.............................
  43. தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நடைபெற்ற 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் (சின்னம்மா), கலந்து கொண்டு இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
  44. Reverse osmosis (RO) is a water purification process that uses a semi-permeable membrane and pressure to separate water molecules from contaminants. It's essentially the reverse of natural osmosis, where water moves across a membrane from an area of lower solute concentration to an area of higher concentration. இங்கே பெருமளவு வடிகட்டிகள் இந்த தொழில்நுட்பத்தில் இயங்குபவை. RO WITH UV FILTER எமது கிராமத்தில் உள்ளது. இந்த வடிகட்டும் முறையில் உட்செலுத்தப்படும் நீரில் 1/3 நன்னீராகவும் 2/3 கழிவு நீராக வெளியேற்றப்படும் என தம்பி சொன்னவன்.
  45. கனிமா!!!! கனிமா!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.