Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் மகன் நல்லவன்

Featured Replies

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,

தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்

தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட

என் கண்ணங்கள்

இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை

பிச்சை கேட்டு

பல நாட்கள் உன்னிடம்

மண்டியிட்டிருக்கிறேன் ,

என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்

என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய

என் கன்னத்து தழும்பை

இன்னமும் முத்தமிடுகிறாள்

உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை

மறைத்து,மடித்து கட்டி

வேட்டி வாங்கும்

பணத்தில் வாங்கியதுதான்

உன் வெள்ளி பாலாடை...!

என் அன்பு மகனே..!

முதல் முறை

நீ பள்ளி செல்லும்போது

உன்னை மருத்துவனாகதான்

பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது

கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை

பார்த்தபோதுதான்,

உயிருடன் மோட்சமான

முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது

என் அன்பு மகனே...!

ஓர் இரவு,

வீட்டில் படுத்துவிட்டு

விழித்து பார்த்தால்,

நானும் உன் தாயும்

கிடந்தது

"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்

உதைக்க காத்திருந்த

மார்பில்,

நீ உதைத்ததெப்படி..?

என் செல்ல மகனே..!

என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்

கொடுத்த பால்

விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய

உன் எச்சில்

அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்

கொலைகாரன் அல்ல...

உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை

என் உடல் தாங்கும்...

என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்

உன் தாய்

தாங்கமாட்டாள்...!

பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!

வாரம் ஒருமுறை

என் பேரப்பிள்ளைகளை

கூட்டி வா..,

இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று

அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",

என்று கூறி எங்களை

உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து

உன் பிள்ளைகள்

வளர்ந்தால்தான்,

நீ எங்கள் நிலைக்கு

வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்

என் செல்ல மகனே..!!!

அனாதையாக எங்களை

விட்டுவிடாமல்,

முதியோர் இல்லத்தில்...

சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!

- இளையபாரதி

via face book

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

கூம்.........என்னத்தை சொல்வது.. :(:(

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதற்கு முதற் கட்டத்திலுள்ளவன்.

எனவே நம்பிக்கையே வாழ்க்கை.

கடமையைச்செய்வோம். பதில் காலம் தான் சொல்லணும்.

ஆனால் இந்தக்கவிதையை நான் படிக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட... பிள்ளைகளை வளர்ப்பதை விட...

10 தென்ன மரத்துக்கு, தண்ணீர் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட... பிள்ளைகளை வளர்ப்பதை விட...

10 தென்ன மரத்துக்கு, தண்ணீர் விட்டிருக்கலாம்.

அதை எப்படி கண்டு கொள்வது சிறி?

எல்லோரும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் ஆசையுடனுமே ஊட்டி வளர்க்கின்றனர்.

அதில் ஒன்று இரண்டு இப்படி வருவதற்காக அந்த சந்ததியையே வெறுத்து ஒதுக்கமுடியுமா?

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதேபோல் தமது பெற்றோரை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை.

பல பெற்றோர்கள் பிளைகள் தமது கடமையைச் சரியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படியாக ஏமாற்றப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை எப்படி கண்டு கொள்வது சிறி?

எல்லோரும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் ஆசையுடனுமே ஊட்டி வளர்க்கின்றனர்.

அதில் ஒன்று இரண்டு இப்படி வருவதற்காக அந்த சந்ததியையே வெறுத்து ஒதுக்கமுடியுமா?

பெற்றோரில் தான் குறை சொல்ல, அந்தக் கருத்து எழதப் பட்டது விசுகு.

எனது, முதல் மகன் பிறந்த போது...

அப்பா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்...

நீ... இவ்வளவு நாளும், எனக்காகவும்.. உனக்காகவும் வாழ்ந்தாய்.

இனி... நீ.. உனது, இன்பத்தை... துறந்து பேரனுக்காக வாழ்.

அந்த சொல், எனக்கு... மருந்தாக அமைந்தது. :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

பெற்றோரை உன் தலையில் வைத்து சுமக்க வேண்டாம்

அவர்கள் தங்குவதற்கு உன் வீட்டில் ஒரு குறு அறை கொடு

அவர்கள் பாதம் தழுவி சேவைகள் செய்ய வேண்டாம்

உன் பாதத்தால் அவர்களை எட்டி உதைக்காமல் இரு

பூஜை அறையில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டாம்

அவர்கள் கல்லறை செல்லும் வரையேனும் அடுத்தவர்--

கால்களில் விழ விடாமல் பார்த்துக்கொள் அது போதும்

கிழிந்த துணிகளில் ஒன்றுகூடவா உன் வீட்டில் இல்லை

உன்னை பெற்ற கடனுக்காய் அவர்கள் மானம் காக்க

அவர்களுக்காய் தனியே ஒரு பானை சோறு வேண்டாம்

உன் வீட்டில் தினமும் கொதிக்கும் உலையில் ஒரு குவளை

அரிசி அதிகம் சேர்.. அதுகூடவா இடக்கூடாது?

படித்ததில் பிடித்தது

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெற்றோர் கூட மகனைக் குறை சொல்லேல்ல மருமகளைத் தான் குறை சொல்கிறார்கள்...மகனை ஒழுங்காய் வளர்த்தால் அவர் ஏன் மனைவி சொல் கேட்டு பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புகிறார்...ஆண்பிள்ளைகளை தாய் கண்ட‌ கட்டுப்பாட்டுக்குள் வைத்து வளர்க்கிறது.எப்பவும் யாரையும் சார்ந்து வளர்ந்த ஆண் திருமணம் முடித்ததும் மனைவியின்ட‌ சொல் கேட்கிறது...ஆண்கள் சுயமாய் முடிவெடுத்தால் ஏன் இந்த பிர‌ச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

ம்.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதேபோல் தமது பெற்றோரை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை.

பல பெற்றோர்கள் பிளைகள் தமது கடமையைச் சரியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படியாக ஏமாற்றப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ! என்பது போல அவரவர் கடமையை செய்யவேண்டும்.

இணையவன் அண்ணா சொன்னது போல எதிர்காலத்துக்கு தேவையானவற்றை சேமித்து வைத்தால் யாரிலும் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதை விட ஒரு வேளை அப்ப பிள்ளைகள் உறவுகள் வந்தாலும் வருவார்கள்.

tears.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இணைப்புக்கு நன்றி அபராஜிதன். உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வலிகள் மனதினை ரணமாக்குகின்றன. பெற்றவர்களை உதறித்தள்ளி எறிந்துவிட்டு அவன் சந்தோசமாய் வாழலாம் என நினைப்பது, கேவலமான வாழ்க்கையை மட்டுந்தான்... அவனுக்கு விட்டுச்செல்லும்.

எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மறப்போமாயின்... எம் வாழ்க்கையே அர்த்தமில்லாத அந்தத்தில்தான் முடியும்! :(

ந்தக் கவிதையை எழுதிய உறவின் பெயரையும் (தெரிந்திருந்தால்) கீழே இணையுங்கள் அபராஜிதன். நன்றி! :)

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இதுவும் உண்மை தான்..

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி அபராஜிதன். உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வலிகள் மனதினை ரணமாக்குகின்றன. பெற்றவர்களை உதறித்தள்ளி எறிந்துவிட்டு அவன் சந்தோசமாய் வாழலாம் என நினைப்பது, கேவலமான வாழ்க்கையை மட்டுந்தான்... அவனுக்கு விட்டுச்செல்லும்.

எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மறப்போமாயின்... எம் வாழ்க்கையே அர்த்தமில்லாத அந்தத்தில்தான் முடியும்! :(

இன்தக் கவிதையை எழுதிய உறவின் பெயரையும் (தெரிந்திருந்தால்) கீழே இணையுங்கள் அபராஜிதன். நன்றி! :)

மன்னிக்கணும் கவிதை மறந்திட்டன் இணைக்க- இளையபாரதி

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இது தான்... என்னால், செய்ய முடியும்.

முன்பு, நான் உங்களுடன் வாழ்ந்த போது, பார்க்காத... சாப்பிடாத வாழ்வு இனி.. வாழப் போகின்றீர்கள்? என்று கேளுங்கள் ஜீவா.

எனது வாழ்வுக்கு, அத்திவாரம் போடவும் பணம் தேவை... என்று, சொல்லுங்கள் ஜீவா.

அவர்கள், புரிந்து கொள்வார்கள்.

Edited by தமிழ் சிறி

பாவம் இந்தத் தந்தை. :(

தனிப்பட்ட முறையில்

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.

எனது பெற்றோருக்கு கடமையைச் செய்திருக்கிறேன்.எனது வித்துக்களுக்கான கடமையை ஆசையுடன் செய்கிறேன். யாரிடமும் இருந்து ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. சொந்தக் காலிலே நிற்கப் பார்க்கிறேன்.

ஏதும் கிடைத்தால் அது போனஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான்... என்னால், செய்ய முடியும்.

முன்பு, நான் உங்களுடன் வாழ்ந்த போது, பார்க்காத... சாப்பிடாத வாழ்வு இனி.. வாழப் போகின்றீர்கள்? என்று கேளுங்கள் ஜீவா.

எனது வாழ்வுக்கு, அத்திவாரம் போடவும் பணம் தேவை... என்று, சொல்லுங்கள் ஜீவா.

அவர்கள், புரிந்து கொள்வார்கள்.

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

வழமையாக நான் இணைப்புக்களுக்கு பச்சை குத்துவதில்லை. ஆனால் இளையபாரதியின் இந்த வரிகளுக்காகவும், கனமான கவிவரிகளை காவி வந்த உங்களுக்காகவும் ஒரு பச்சை! :)

கவிவரிகளை படைத்தவரின் பெயரை இணைத்தமைக்கு மிக்க நன்றி அபராஜிதன்! :)

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

ஏன் இல்லை? வீட்டுக்கு வீடு வாசல்படி!

பெற்றோர் பிள்ளைகளை பெத்து வளர்த்துவிட்டோம், பிள்ளைகள் எமக்குத் தமது கடமைகளைச் செய்கிறார்கள்/ செய்யவேண்டும் என நினைகிறார்கள் அதே நேரம், ஒரு பிரச்சனைக்கு இந்த எடுங்கோ அல்லது இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று நாம் எமது ஆலோசனைகளை முன்வைத்தால் அது தமது தனிப்பட்ட சுதந்திரந்தில் தலையிடுவதாக நினைகிறார்கள் அதனால் அவற்றை கலந்தாலோசிக்கக் கூட முயற்சிப்பதில்லை. அவர்களது பார்வையில் அவர்களுக்கு அது நியாயமாகப்படலாம்... பிள்ளைகளின் பார்வையில் அது அவர்களை தனிமைப்படுத்துவதாகவே நினைக்கத் தோன்றுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

சகோதரர்களின் அழுத்தம் ஒன்று இல்லாமல்....

பெற்றோர் தனிப்பட, ஒரு சார்பாக முடிவு எடுக்க மாட்டார்கள்.

அவர்களுக்கு, எங்கோ... ஒரு அழுத்தம், மறைமுகமாக பிரயோகிக்கப் பட்டுள்ளது.

அந்த, நிலையில்... பெற்றோர், மெல்லவும் முடியாமால்... விழுங்கவும் முடியாமல்.. தவிப்பார்கள்.

அது, அவர்களை விரைவில் மரணத்தில்.... தள்ளிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன், நான் ஒரு சிங்களக் கவிதையை ஆங்கிலத்தில் இணைக்கிறேன்! தவறெனில் மன்னிக்கவும்!

Badagini wela mama giya kala puthuge geta

Manala vii dekak dunnay mallakata

Gando nogando kiyala situni mata

Manalada puthe kiri dunne mama numbata?

ஒரு தாய் தனக்குப் பசியெடுத்த போது, உரிமையுடன் தனது மகன் வீட்டுக்குப் போகின்றாள்.

அப்போது மகன், இரண்டு சுண்டு நெல்லை அளந்து ஒரு உமலில் போட்டுத் தாயிடம் கொடுக்கின்றான்.

அது தாயின் தேவைக்குப் போதாமல் இருந்தது!

அப்போது அவள் ஆதங்கத்தில், தனது மகனிடம் கேட்கிறாள் ' மகனே, நீ சிறு குழந்தையாய் பசியில் அழுத போது, உனக்கு அளந்தா பால் புகட்டினேன்!'

இந்த விதத்தில் தான் இப்போது, பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்கின்றார்கள்! இணைப்புக்கு நன்றிகள்!

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.