Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்ல மெல்ல புலிக்கொடி இனி..??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

  • Replies 53
  • Views 7.1k
  • Created
  • Last Reply

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

ஆம் இது கூட எமக்கு பாரிய ஓர் வெற்றியென்றே நாம் கருதலாம், புலிக்கொடியை தவிருங்கள் ,திரும்பிப்பார்க்கமாட்டார்கள் ,\

என்றெல்லாம் யார் யார் எல்லாம் கூறினாலும், அல்லது,எழுதினாலும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ ,என்ன செய்கிறார்களோ

அதுதான் நிஜம் ,இது நமக்கு நல்ல ஒரு ஆரம்பமே என்று கருதலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்ல மெல்ல புலிக்கொடி மேலே பறக்கிறது.  விசுகு அந்த தமிழீழ ஆதரவாளர்களுக்கு எனது நன்றியை தெரிவியுங்கள். 

Situation Song? Why not?

இந்த பழக்கம், வழக்கம் வளரட்டும், பரவட்டும்.

அத்துடன் மக்களுக்கும், மாவீரர்களுக்கும் அகவணக்கமும் செலுத்தலாம்.

இதை யாரும் பயங்கரவாதம் என்றோ இல்லை அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாகும் என்றோ தடை போட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

ஒன்றும் செய்ய முடியாது.  மரபணுவில் ஊறிவிட்டது. 

தனிப்பட்ட நிகழ்ச்சியின் போது மாவீரருக்கு அஞ்சலி செலுத்தி புலிகொடியேற்றி நிகழ்ச்சியை நடாத்தினால் இளம் தலைமுறை மனதில் அது பதிவதுடன் அவர்கள் அதனைப் பின்பற்றவும் வாய்ப்பேற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எம் மண்ணுக்காகவும் எமக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு உங்கள் நிகழ்வுகளைத் தொடருங்கள்.

அதுவே எமக்குள் ஒரு ஆழமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

விசுகர்!மன்னிக்கோணும் எனக்கென்னமோ உதுலை பெரிய டவுட்? :(

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

இதுதான் இனி உலகில் தமிழினம் இருக்கும் வரை

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

இதை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

சாமத்தியவீடு என்பது பெண்ணை அலங்கரித்து அழகுபதுமையாக ஊர் உலகத்தின் முன்னால் உட்கார வைத்து எங்களுடைய பிள்ளை திருமண உறவுக்கு ஆயத்தமாகி விட்டாள் என்று அறிவிக்கும் ஒரு நிகழ்வு...நீங்கள் எல்லோரும் என்னதான் சடைந்து கதைத்தாலும் இந்த சடங்கை பெண்விடுதலையை ஊக்குவிக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி இருக்கும்போது முழுமையாக பெண்களுக்கு விடுதலையை ஊக்குவித்த, பெண்களின் திறமைகளை பிரகாசிக்கவைத்த ஒரு விடுதலை இயக்கத்தின் கொடி ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக வெளிக்காட்டும் இடத்தில் ஏற்றப்பட்டதை பெண்ணாக அதே நேரம் இந்த தேசியத்தை நேசிக்கும் விடுதலை விரும்பியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பெண்களின் திறமைகளை பிரகாசிக்கவைத்த ஒரு விடுதலை இயக்கத்தின் கொடி ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக வெளிக்காட்டும் இடத்தில் ஏற்றப்பட்டதை பெண்ணாக அதே நேரம் இந்த தேசியத்தை நேசிக்கும் விடுதலை விரும்பியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழர் அல்லாதோர்தான் புலிக்கொடியை எமது தேசியக் கொடியாகப் பார்க்காது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்களிற்கே இன்னும் சரியான தெளிவு வரவில்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அல்லாதோர்தான் புலிக்கொடியை எமது தேசியக் கொடியாகப் பார்க்காது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்களிற்கே இன்னும் சரியான தெளிவு வரவில்லைப் போலுள்ளது.

புலிக்கொடி தமிழர் கொடி அதில் எந்த மாற்றமும் இல்லை ஒவ்வொரு இடத்திலும் அதன் வடிவம் என்பது சின்னச் சின்ன மாறுபாடுடன் இருப்பது நீங்கள் அறியாத ஒன்றா? அங்கு ஏற்றப்பட்டது புலிக்கொடிதான் ஆனால் அங்கு ஏற்றப்பட்ட அந்தக் கொடிக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது. அந்தக் கொடியில் உள்ள புலியின் உருவம் எது,?காலங்காலமாக சோழர் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த புலியா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினில் பொறிக்கப்பட்டிருந்த புலியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்று தமிழர் வரலாற்றில் ஒரு தனித்துவம் இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் சோழமன்னனின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலியை ஏற்றிவிட்டு சாமத்தியச்சபையைச் செய்திருந்தால் அதற்கு நான் ஒரு வார்த்தை பேசியிருக்கமாட்டேன்.... ஆனால் ஏற்றப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியாக இருந்தால் அதனை என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்.

பெண்விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய ஒரு கொடி மீண்டும் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இடத்தில் ஏற்றப்பட்டதை ஒருகாலமும் மன்னிக்கமுடியாது...

மதியுங்கள், தயவு செய்து மலினப்படுத்தாதீர்கள்

Edited by வல்வை சகாறா

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

மின்னல்,

நான் இங்கு யாரோ சாமத்தியச்சபை நடாத்துகிறார்கள் அது பிழை என்று சொல்வதற்காக கருத்துப்பதிவிடவில்லை. எங்களுடைய உன்னதமான கொடி இத்தகைய இடத்தில் பயன்படுத்தப்பட்டதனால்தான்....

ஏனோ மற்றவர்களால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் என்னால் எந்தவித காரணங்கள் கற்பித்தும் இதனை ஏற்க முடியாது.

என்னவென்று நினைத்துவிட்டார்கள்?

எத்தனை விடுதலை வேணாவாக்களின் சத்தியச் சாட்சி

ஒரு பிள்ளை மிகப்பெரும் சாதனை படைத்து அதற்கு ஒரு பாராட்டுவிழா நடாத்தும் இடத்தில் இதனை பறக்கவிடுதலே இந்தக் கொடிக்கான மதிப்பு.

ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சியான உதிரப்போக்கைக் கொண்டு நடாத்தப்படும் சடங்கிற்கு....

சீ....தூ...வெட்கங்கெட்ட மனிதர்களே

இனி பச்சையாக எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை

பெண்விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய ஒரு கொடி மீண்டும் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இடத்தில் ஏற்றப்பட்டதை ஒருகாலமும் மன்னிக்கமுடியாது...

பெண் விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய அந்தக் கொடி கம்பீரமாக பறந்த அதன் தேசத்தில் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வு அவரவர் வசதிக்கேற்ப சிறப்பாகவே நடைபெற்றது.

கோவில்களில் வேள்வி செய்வது போன்ற சில நிகழ்வுகள் அங்கு தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனா இந்த நிகழ்வு தடைசெய்யப்படவில்லை.

வீட்டு விழாக்களில் தேசியக் கொடியேற்றும் பழக்கம் இருக்காமையால்தான் எமது தேசியக் கொடி அங்கே நடைபெற்ற நிகழ்வுகளில் ஏற்றப்படவில்லை. அப்படிப் பழக்கம் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் அது நடந்திருக்கும்.

எமது வீட்டு நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் எமது தேசியக் கொடியை வணங்கி தொடங்க வேண்டும் என்ற முறை ஏற்பட வேண்டும். இதன் தொடக்கமாக அந்த நிகழ்வில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்களென நினைக்கிறேன். அவர்களிற்கு சாமத்திய வீடு என்பது திருமண நிகழ்வு போன்ற ஒரு சடங்காகவே தெரியும். தமது வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்விலேயெ தாம் புலிக்கொடியை ஏற்றுகிறோம் என எண்ணியே அதனைச் செய்திருப்பார்கள்.

அவர்களின் நோக்கு தேசியக் கொடியை இழிவு படுத்துவதோ அல்லது தமது மகளை போகப் பொருளாகக் காட்டுவதோ இல்லை.

சோழர் :cholan-copy-200x300.jpg

சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.

சோழர்களின் கொடி புலிக்கொடி.

www.Swisstamilsangam.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் ஊரில் அதிகம் கலர் உள்ளவர்கள் இல்லை.. :D சில மாதங்களுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதியைச் சந்தித்தேன்.. :unsure:

கணவர் இந்திய வம்சாவழி.. கொழும்பில் பிறந்து சிங்களப் பள்ளியில் படித்தவர். மனைவி யாழில் ஏதோ ஒரு ஊர்.. அவருக்கே தெரியவில்லை.. நான்கு வயதில் இங்கே வந்துவிட்டாராம்.

சிங்களப் பள்ளியில் படித்தவருடன் பேசியபோது அரசியலும் வந்துவிட்டது.. கொழும்பில் தற்கொலைக் குண்டுகள் வெடித்ததால் பேஜாராகி விட்டது என்றார்.. சிங்களவரும், தமிழரும் இணைந்துவாழ சிங்கள இளைய தலைமுறையினர் முயற்சிப்பதாக புகழ்ந்து தள்ளினார்.. :D புலிகளையும் சாடையாக ஒரு பிடி பிடித்தார்.. நான் அமத்தி வாசித்ததால் அவருக்கு என்னில் குழப்பம்.. :D

வீட்டைப் பார்க்க வேண்டும் என்று அறைக்குள் எல்லாம் சென்று பார்த்தார்கள்.. அறைக்குள் ஒரு தமிழீழக்கொடி இருக்கு.. :rolleyes: அதற்குப்பிறகு அரசியல் பேசவில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்களில், சாமத்திய சடங்கு நடத்த வேண்டிய தேவை ஒன்று இருந்தது! பெண்கள் வீட்டிற்குள், வளர்ந்ததால், தங்கள் வீட்டில் ஒரு பெண் திருமண வயதிற்கு வந்துவிட்டாள் என்று விளம்பரப் படுத்துவதற்காக அது நடத்தப் பட்டது! இப்போது பெண்கள் வெளியில் போவதால்,இதற்கான தேவை அற்றுப் போய் விட்டது எனினும், சிலர் தங்கள் அந்தஸ்தைக் காட்டுவதற்காக, இப்படியான சடங்குகளைச் செய்கின்றார்கள்! இது இவர்களது தனிப்பட்ட விருப்பம் எனினும், வசதியில்லாதவர்களும் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குவது கவலைக்குரியதே!

தேசியக் கொடிக்கு, ஒரு தனி மரியாதையுண்டு. அதன் பின் பல தியாகங்களும், இலட்சியங்களும் மறைந்துள்ளன!

சாமத்திய வீட்டிலோ, அல்லது தனிப்பட்ட சடங்குகளிலோ, இதை ஏற்றுவது இதனை அவமதிக்கும் செயல் என்றே கருதுகின்றேன்!

இதையும் சிலர், என்ன காரணங்களுக்காகச்,சாமத்தியச் சடங்கைச் செய்கின்றார்களோ, அதே காரணங்களுக்காகவே, கொடியையும் காட்டுகின்றார்கள்!

ஒரு சிங்களவன், தனது கலியாண வீட்டில் சிங்கக் கொடியை, வாசலில் கட்டியதை நான் கண்டதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சாமத்தியவீடு எல்லாம் தேவையில்லை.. :unsure: பையன்களே டேட்டா பேஸ் வச்சு பிள்ளை சாமத்தியப்பட்ட உடனே லவட்டிக்கொண்டு போறாங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண் விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய அந்தக் கொடி கம்பீரமாக பறந்த அதன் தேசத்தில் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வு அவரவர் வசதிக்கேற்ப சிறப்பாகவே நடைபெற்றது.

கோவில்களில் வேள்வி செய்வது போன்ற சில நிகழ்வுகள் அங்கு தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனா இந்த நிகழ்வு தடைசெய்யப்படவில்லை.

வீட்டு விழாக்களில் தேசியக் கொடியேற்றும் பழக்கம் இருக்காமையால்தான் எமது தேசியக் கொடி அங்கே நடைபெற்ற நிகழ்வுகளில் ஏற்றப்படவில்லை. அப்படிப் பழக்கம் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் அது நடந்திருக்கும்.

எமது வீட்டு நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் எமது தேசியக் கொடியை வணங்கி தொடங்க வேண்டும் என்ற முறை ஏற்பட வேண்டும். இதன் தொடக்கமாக அந்த நிகழ்வில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்களென நினைக்கிறேன். அவர்களிற்கு சாமத்திய வீடு என்பது திருமண நிகழ்வு போன்ற ஒரு சடங்காகவே தெரியும். தமது வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்விலேயெ தாம் புலிக்கொடியை ஏற்றுகிறோம் என எண்ணியே அதனைச் செய்திருப்பார்கள்.

அவர்களின் நோக்கு தேசியக் கொடியை இழிவு படுத்துவதோ அல்லது தமது மகளை போகப் பொருளாகக் காட்டுவதோ இல்லை.

எல்லோர் வீட்டிலும் அவர்கள் வீட்டு அலமாரியின் மேல் இந்தத் தேசியக் கொடி இருக்கிறது. அவரவர் வீட்டு விழாவில் அக்கொடியும் பங்குபற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு நான் மற்றவர்களை இழிவுபடுத்த வரவில்லை தேசியக் கொடியை அதன் மதிப்புடன் பாவனைப்படுத்துங்கள் என்றுதான் கூற முனைகின்றேன்.

பெண்விடுதலையை செயல்படுத்திய அந்த நாட்டில் இந்த நிகழ்வு காலகாலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு அதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதாக சரித்திரம் இல்லை அதற்கு நல்ல உதாரணமாக ஒரு பாடல் 'நிலவில் புதிய கவிதை எழுத" என்ற பாடல் இடம்பெற்ற அதே இறுவட்டில் "நிறைகுடத்தை ஏந்திக் கொண்டு" என்ற பாடலும் கலைபண்பாட்டுக்கழகத்தால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தற்சமயம் என்னால் அப்பாடலை இங்கு இணைக்க முடியவில்லை யாராவது அப்பாடலை இணைத்து விடுங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

உண்மை.  தமிழ் நாடு சினிமாவை கொப்பி அடித்து திருமண சடங்கு, பிள்ளைதாச்சி சடங்கெல்லாம் செய்து காப்பெல்லாம் நொறுக்கி தள்ளுகிறார்கள்.  வரனின் தட்சிணை கூட பெண்ணின் அப்பனின் தலையில் கட்டபட்டது. 

நானும் சாமத்திய வீட்டுக்கு எதிர் தான் ஆனால் இந்த கொடி டிரென்ட் வளரவேண்டும் என்று தான் ஆதரிக்கிறேன் இங்கு.

அறுபது வயது ஹீரோ பதினாறில் சமைந்த பிஞ்சை பற்றி காமத்துடன் பாடுவதற்கு ஏன் சென்சார் குழு அனுமதிக்கிறது?

குழுவில் பெண்களும் இருப்பார்களே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்தக் கொடி டிரென்ட் வளரவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் , நம் இப்போதைய தேவை சமூக சீர்திருத்தம் அல்ல, ஒற்றுமையும், நாட்டுப்பற்றும், முதலில் புலிக்கொடி எல்லா இடங்களிலும் பறக்கட்டும், கொடியை பறக்கவிட்டால் பிரச்சினை வரும் என்ற பயம் போய்விட்டால் மக்களுக்கு அதன் மீது மதிப்பு தானாகவே வந்து விடும், புலிக்கொடி பறக்க விடுவதை ஊக்குவித்து நம்முடைய நிகழ்சிகள் அனைத்திலும் பயன்படுத்த வேண்டும், அதை விடுத்து இப்படி ஆரம்பத்திலேயே குறை சொன்னால் மக்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்,

இப்படி சொல்வதால் நான் அந்த சடங்கை நம்புகிறேன் என்று பொருளல்ல, நானும் இது போன்ற நிகழ்வுகளை கடுமையாக எதிர்ப்பவன் தான் , என்ன செய்வது ஒன்றை இழந்தால்தானே மற்றொன்றை பெற முடியும், பரவலாக அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்த பின் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், கொடி பறக்க ஆரம்பித்தால் நம் மீது உள்ள பிம்பம் மற்ற இனத்தவர் மத்தியில் மாறும், நமக்குள்ளும் ஒற்றுமையும் வளரும்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, இதில் இணைக்கப் பட்டிருக்கும் பாட்டை ஒரு முறை கேட்ட பின்பு, கொடி பற்றிய உங்கள் கருத்தைப் மீள் பரிசீலனை செய்யுங்கள்!

ஒரு மாவீரர் விழாவில், இந்தக் கொடி ஏற்றப் பட்ட போது, எமக்குப் பாதுகாப்புக்காக நின்றிருந்த, அவுஸ் போலீஸ்காரர்கள், 'அட்டேன்ஷன்' நிலைக்கு உடனே மாறியதை அவதானித்தேன்! ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என, எனக்குத் தெரியாது! ஆனால் அதை அவதானித்த எம்மவரும், உடனே அந்த நிலைக்கு மாறினார்கள்! மிகவும் பெருமையாக இருந்தது!

குறிப்பு: சகோதரி சகாறாவும் இதை இணைத்துள்ளார்! பின்பு தான் அவதானித்தேன்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடி பற்றிய சர்ச்சைக்காக இதை இங்கு பதியவில்லை. கொடி மறக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்கத்தில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தத்தையே இங்கு எழுதினேன். இந்த சாமத்திய வீட்டுக்கு நான் போகவில்லை. இருப்பினும் என்ன நிகழ்வாயினும் நாம் யார் எமது அடையாளம் எது ? என்பன சம்பந்தமான இந்த முயற்சிகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்பதே எனது கேள்வி?

கொடியையே மறந்துவிட்டு கொடி பற்றிய கோட்டைகளை வைத்திருப்பதனால் என்ன பலன்???

எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் இது போன்ற நிகழ்வுகளை தாயகத்தில் இராணுவ அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் இன்றி அனுமதிப்பின் அங்கும் இதையே செய்வர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.