Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவின் சிதறல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nneduntheevu_02.jpg

கோலம் கலைந்து கிடந்தது,

குறி காட்டுவான் துறைமுகம்!

கடற்கரை வாசம் தொலைந்து போய்,

கடற்படையும், தரைப்படையும்,

காவல் காத்தன!

காவியுடன் இன்னொரு புதிய படை!

புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது,

அந்தப் புனித பூமியின் மகிமை!

வரிசைப் பனை மரங்கள் தான்,

வழக்கம் போல வழியனுப்பின!

ஏழாத்துப் பிரிவு எறியும் அலைகள்,

இன்னும் வீரியம் இழந்து விடவில்லை!

ஆயிரம் பயணங்களில் அனுபவங்களோடு,

ஆடி அசைந்து நகர்ந்தது படகு!

அந்தக் 'குமுதினியின்' நினைவு,

மீண்டுமொரு முறை வந்து போனது!

தூரத்தில் கருமைக் கோடாகித்,

தெரிந்தது வருங்காலச் சிங்கப்பூர்!

குறுக்கும் நெடுக்கும் பறந்து,

முத்துக் குளித்தன, கடற் புறாக்கள்!

காகம் கரைவது கேட்டுக்,

காத்திருந்து விருந்தோம்பிய காலம்,

கனவாகிப் போனது போலும்!

வரிசை பிசகாத வேலிப் பயிர்கள்,

வனாந்தர வெளியில் சிதறிப் போயின!

வடமராட்சி மீனவர் தேடி வருகின்ற,

வாடையில் விளைந்த சூடைகளும்,

படையோடு கரையிறங்கும் பாரைகளும்,

பழைய நினைவுகளாய் வந்து போக,

பால் சுறாக்களின் துள்ளல் மட்டும்,

பசுமையாய் நினைவிருந்தது!

தரவை நிலங்களில் வளரும்,

கருக்குவாச்சி மரங்களில் நிழலாறிப்,

பொறுக்கிய எருக்கும்பல்கள் கூடக்,

கனவாகிப் போய் விட்டது!

கறவை மாடுகள் மேயும் தரவைகளில்,

நெருஞ்சி மரங்கள் படர்ந்து,

நெஞ்சில் கோடு கீறின!

கழிகளில் நிறைந்த மீன்கள் தேடி,

புலம் பெயரும் பறவைகள் நாடி வரும்!

கூழக்கடாக்களின் பாரத்தில்,

கங்குமட்டைகள் மெதுவாக முனகும்!

எருக்கிழறிப் பறவைகளின்

ஒருமித்த அசைவில்,

ஏரிக்கரைகளும் கருநிறம் கொள்ளும்!

வளம் தவழும் உன் ஏரிக்கரைகளை,

வெறும் வேலிகள் காவல் காக்கின்றன!

தலையில் சுமந்த தண்ணீர்க் குடமே!

நிலத்தில் உருளும் வெறும் குடமானதேன்?

  • கருத்துக்கள உறவுகள்

கோலம் கலைந்து கிடந்தது,

குறி காட்டுவான் துறைமுகம்!

கடற்கரை வாசம் தொலைந்து போய்,

கடற்படையும், தரைப்படையும்,

காவல் காத்தன!

காவியுடன் இன்னொரு புதிய படை!

புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது,

அந்தப் புனித பூமியின் மகிமை!

வரிசைப் பனை மரங்கள் தான்,

வழக்கம் போல வழியனுப்பின!

ஏழாத்துப் பிரிவு எறியும் அலைகள்,

இன்னும் வீரியம் இழந்து விடவில்லை!

ஆயிரம் பயணங்களில் அனுபவங்களோடு,

ஆடி அசைந்து நகர்ந்தது படகு!

அந்தக் 'குமுதினியின்' நினைவு,

மீண்டுமொரு முறை வந்து போனது!

எதையும் மறக்கவில்லை

மறைக்கவும் இல்லை

மன்னிக்கவுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

காகம் கரைவது கேட்டுக்,

காத்திருந்து விருந்தோம்பிய காலம்,

கனவாகிப் போனது போலும்!

வளம் தவழும் உன் ஏரிக்கரைகளை,

வெறும் வேலிகள் காவல் காக்கின்றன! .......

..நெஞ்சில் நிறைந்திருக்கும் தாயக நினைவுகள். பகிர்வுக்கு நன்றி

.

உங்கள் வழமையான கவிதை நடையை விட வித்தியாசமானதாக இருக்கிறது பூங்கையூரன்.

எளிமையோடு விசயங்களையும் சொல்லும் பாங்கு நன்றாக இருக்கிறது.

அருமையான கவிதை புங்கை... ஊரில் முன்னர் நீங்கள் பார்த்த காட்சிகளை அப்படியே படிமங்களாக கொண்டு வந்து இருக்கின்றீர்கள். நெடுந்தீவை ஒரு முறைதானும் பார்க்காத எனக்கு நி்ழலுருவில் அதனைக் காட்டுகின்றது உங்கள் கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் மறக்கவில்லை

மறைக்கவும் இல்லை

மன்னிக்கவுமில்லை

பாதிக்கப் பட்டவன், எதையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது!

பரம்பரை, பரம்பரையாக, அந்த நினைவுகள் சுமந்து செல்லப் படும்!

இதில் கொல்லப்பட்டவர்கள், பலர் இரத்த உறவுகள்!

கருத்துக்கு நன்றிகள், விசுகர்!

காகம் கரைவது கேட்டுக்,

காத்திருந்து விருந்தோம்பிய காலம்,

கனவாகிப் போனது போலும்!

வளம் தவழும் உன் ஏரிக்கரைகளை,

வெறும் வேலிகள் காவல் காக்கின்றன! .......

..நெஞ்சில் நிறைந்திருக்கும் தாயக நினைவுகள். பகிர்வுக்கு நன்றி

இப்போதெல்லாம் காகங்கள் கூடக் கரைவதில்லை, நிலாக்கா!

தங்கள் கருத்துக்களுக்கு, நன்றிகள்!

உங்கள் எழுத்தின் அளவு, என்னை விரைவில் மூக்குக்கண்ணாடி அணிய வைத்துவிடும் போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

-----

காகம் கரைவது கேட்டுக்,

காத்திருந்து விருந்தோம்பிய காலம்,

கனவாகிப் போனது போலும்!

வரிசை பிசகாத வேலிப் பயிர்கள்,

வனாந்தர வெளியில் சிதறிப் போயின!

-----

இந்தக் கவிதை வரியை.... வாசித்தவுடன்,

வீட்டில் நடந்த, பழைய ஞாபகமெல்லாம்... வந்துவிட்டது, புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது,

அந்தப் புனித பூமியின் மகிமை!

இந்த புத்தனால்தான் எங்களுக்கு இவ்வளவு துன்பம்...நல்லதொரு கவிதை நன்றிகள் புங்கை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தனால்தான் எங்களுக்கு இவ்வளவு துன்பம்...நல்லதொரு கவிதை நன்றிகள் புங்கை....

புத்தன்,

குறிகாட்டுவான் துறையில்,மும் மொழிகளிலும் எழுதப் பட்ட ஒரு அறிவிப்புப் பலகையில், புத்தபிரான், இரண்டாவது தடவை இலங்கைக்கு வந்த போது, நயினாதீவில் தான் காலடி வைத்தாராம்! எனவே குறிகாட்டுவானும் புனிதப் பிரதேசமாக உள்ளடக்கப் பட்டுள்ளது! குறிகாட்டுவான் அந்த நாளையிலே பிரபலமானதாக இருந்ததாக வரலாறு உள்ளது! எட்டிப் பார்க்காமலா புத்தர் போயிருப்பார்?

அத்துடன் புத்தருக்குச் சிங்களமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஒன்றும் வேண்டாம் என ஓடியவனுக்காக நமது பூமி அபகரிக்கப் படுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

.......... கணக்கிட முடியாதவற்றை தொலைத்து விட்டோம் தேடுகின்றோம் கிடைக்கவில்லை இருந்தும் தினமும் தேடுகின்றோம் இதயம் கனக்கின்றது .........

உங்கள் வரிகளின் ஊடாக எம்மையும் உங்களின் கவிதையின் வரியுடன் இணைத்ததற்கு .........

நன்றி புங்கையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

உங்கள் வழமையான கவிதை நடையை விட வித்தியாசமானதாக இருக்கிறது பூங்கையூரன்.

எளிமையோடு விசயங்களையும் சொல்லும் பாங்கு நன்றாக இருக்கிறது.

தங்கள் கருத்துக்கு நன்றிகள், ஈசன்!

ஒரு வித்தியாசமான முறையில் முயற்சித்துப், பார்ப்போம் என எண்ணியதன் விளைவு!

மாற்றங்கள் தானே, எம்மை முன்னோக்கி (?) நகர்த்துகின்றன!

அருமையான கவிதை புங்கை... ஊரில் முன்னர் நீங்கள் பார்த்த காட்சிகளை அப்படியே படிமங்களாக கொண்டு வந்து இருக்கின்றீர்கள். நெடுந்தீவை ஒரு முறைதானும் பார்க்காத எனக்கு நி்ழலுருவில் அதனைக் காட்டுகின்றது உங்கள் கவிதை

நெடுந்தீவின் பேச்சுவழக்குக் கூட, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இருந்து வித்தியாசமானது!

சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தவறாமல் போய் வாருங்கள்!

வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக அது அமையும்!

கருத்துக்கு நன்றிகள், நிழலி!

அழகான கவிதை ஊரைப்பற்றி... பாராட்டுக்கள் புங்கையூரன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி மீனவர் தேடி வருகின்ற,

வாடையில் விளைந்த சூடைகளும்,

படையோடு கரையிறங்கும் பாரைகளும்,

பழைய நினைவுகளாய் வந்து போக,

பால் சுறாக்களின் துள்ளல் மட்டும்,

பசுமையாய் நினைவிருந்தது!

தரவை நிலங்களில் வளரும்,

கருக்குவாச்சி மரங்களில் நிழலாறிப்,

பொறுக்கிய எருக்கும்பல்கள் கூடக்,

கனவாகிப் போய் விட்டது!

கறவை மாடுகள் மேயும் தரவைகளில்,

நெருஞ்சி மரங்கள் படர்ந்து,

நெஞ்சில் கோடு கீறின!

கழிகளில் நிறைந்த மீன்கள் தேடி,

புலம் பெயரும் பறவைகள் நாடி வரும்!

கூழக்கடாக்களின் பாரத்தில்,

கங்குமட்டைகள் மெதுவாக முனகும்!

எருக்கிழறிப் பறவைகளின்

ஒருமித்த அசைவில்,

ஏரிக்கரைகளும் கருநிறம் கொள்ளும்!

இயற்கை அழகை அணு அணுவாக ரசித்து அதனை அழகு கவிதையாக கோர்த்த புங்கைக்கு நன்றிகள்.தொடர்ந்து கவிதைகளை வடியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை வரியை.... வாசித்தவுடன்,

வீட்டில் நடந்த, பழைய ஞாபகமெல்லாம்... வந்துவிட்டது, புங்கையூரான்.

எவ்வளவு விரைவாக, எமது தனித்துவங்களை நாம் தொலைத்துக் கொண்டு வருகின்றோம் என்பதை நினைக்க மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது, தமிழ் சிறி!

கருத்துக்கு நன்றிகள், தமிழ் சிறி!

.......... கணக்கிட முடியாதவற்றை தொலைத்து விட்டோம் தேடுகின்றோம் கிடைக்கவில்லை இருந்தும் தினமும் தேடுகின்றோம் இதயம் கனக்கின்றது .........

உங்கள் வரிகளின் ஊடாக எம்மையும் உங்களின் கவிதையின் வரியுடன் இணைத்ததற்கு .........

நன்றி புங்கையூரான்

தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள், சகோதரா!

அழகான கவிதை ஊரைப்பற்றி... பாராட்டுக்கள் புங்கையூரன்! :)

நன்றிகள், கவிதை!!!

இயற்கை அழகை அணு அணுவாக ரசித்து அதனை அழகு கவிதையாக கோர்த்த புங்கைக்கு நன்றிகள்.தொடர்ந்து கவிதைகளை வடியுங்கள்.

கருத்துக்கு நன்றிகள், நுணா!

உலகமெங்கும் நாங்கள் பரந்து வாழ்ந்தாலும், ஊரை நினைக்கும் போது மட்டுமே உணர்வுகள் கொந்தழிக்கின்றன!

அந்த உணர்வுகள் மட்டுமே தனித்துவமானவை! உணர்வுகளோடு இறுக்கமாகப் பின்னிப் பிணைந்தவை!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகளில் கவிதை வடிவில் நெடுத்தீவைப்பற்றி சொல்லிவிட்டீர்கள், நான் போகவிரும்பிய தீவுகளில் இதுவும் ஒன்று, நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகளில் கவிதை வடிவில் நெடுத்தீவைப்பற்றி சொல்லிவிட்டீர்கள், நான் போகவிரும்பிய தீவுகளில் இதுவும் ஒன்று, நன்றி பகிர்வுக்கு

கருத்துக்கு நன்றிகள், உடையார்!

குழந்தைப் பையன் தானே!

காலம் இருக்கின்றது! ஒரு முறை போய் வாருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.