Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணிடம் தங்கச்சங்கிலி அபகரிப்பு. லண்டனில் சம்பவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

london-people_seithy9712.jpg

[size=4]கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும், வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகள், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. இத்தகைய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் லண்டனிலும் இடம் பெற்றுள்ளது.[/size]

[size=4]லண்டன் ரூட்டிங், மிச்சம் பகுதியில் இலங்கையிலிருந்து லண்டன் சென்றிருந்த குடும்பப் பெண்ணொருவர் தனது ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறிகொடுத்துள்ளார். தனது மகளின் பிரசவத்தைக் கவனிப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பெண் லண்டன் சென்றிருந்தார்.[/size]

[size=4]இவர் தனது மகளின் வீட்டிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி நடந்து வரும் பொழுதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மிச்சம் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்தப் பெண் நடந்து வந்து கொண்டிருந்த போது காரில் வந்த சிலர் வரைபடம் ஒன்றைக் காண்பித்து ஆஸ்பத்திரி ஒன்றின் பெயரைச்சொல்லி இந்த இடம் ௭ங்கே இருக்கின்றது ௭னக் கேட்டுள்ளனர்.[/size]

[size=4]குறித்த பெண்ணும் வரைப்படத்தைப் பார்த்த போது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு காரில் வந்தவர்கள் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இந்தக் காரை ஆணொருவர் செலுத்தி வந்துள்ளார். முன் ஆசனத்தில் பெண்ணொருவரும் பின் ஆசனத்தில் மற்றொரு பெண்ணும் பிள்ளையும் இருந்து உள்ளனர்.[/size]

[size=4]பிள்ளையுடன் இருந்த பெண்ணே குறித்த இலங்கைப் பெண்ணை அழைத்து வரைபடத்தைக் காண்பித்து முகவரி கேட்டுள்ளார். இதன் போதே காருக்கு அருகில் குனிந்து வரைபடத்தைப் பார்த்தபோதே கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அந்தப் பெண் அறுத்துள்ளார். இதனை சற்றும் ௭திர்பாராத இலங்கைப் பெண் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.[/size]

[size=4]லண்டனில் வசிக்கும் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்களே இத்தகைய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு முன்னரும் பல சம்பவங்கள் லண்டனில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.[/size]

[size=4]http://seithy.com/br...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியை... அறுத்தவர்கள் தமிழர்களா? அல்லது வேற்று நாட்டவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியை... அறுத்தவர்கள் தமிழர்களா? அல்லது வேற்று நாட்டவர்களா?

சில சம்பவங்களில் தமிழர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதேவேளை.. இவர்கள் மற்றவர்களோடு கூட்டுச் சேர்ந்து செய்வதும் நடக்கிறது.

பறிப்பது ஒரு நாட்டவர்.. விற்பது தமிழர்கள்.. கமிசன் ஆளுக்குப் பாதி. சில தமிழ்.. மற்றும் வெளிநாட்டவர்களின் கடைகளும் இவர்களுக்கு உடந்தை..!

மேலும்... அண்மையில்.. லண்டனில் உள்ள தமிழ் நகைக்கடை ஒன்றுக்குள் புகுத்தவர்கள்.. நகை வாங்கிறது போல பாவனை செய்துவிட்டு.. அங்கு வேலையில் இருந்த இரண்டு பெண்களின் முகத்தில் ஸ்பிரே மூலம்.. மயக்க மருந்தை தெளித்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்னொரு இடத்தில்.. ஒரு கிழக்கு ஐரோப்பிய பெண்.. தங்க நகைகள் இருக்கு வாங்கப் போறியா என்று கேட்டு வர.. தமிழ் பெண் ஒருவர் ஆசை மிகுதியால் அவளை நாட.. அவளோ.. உனக்கு இந்த நகைகள் அழகாக இருக்கும்.. இதோ அணிவித்துக் காட்டுகிறேன் என்று அருகில் வர.. தமிழ் பெண்ணும் ஆகா ஓகோ வெள்ளைக்காரி நகை போட்டு விடுறாள் என்று பெருமிதத்தில்.. மகிழ்ச்சியில் குதிக்க.. அவளோ.. கழுத்தில் கிடந்த தாலிக் கொடியை இழுத்துப் பறித்துக் கொண்டு கொண்டு ஓடிவிட்டாள்...!

இன்னொரு பெண்ணிடம் காரில் வந்தவர்கள் வழி கேட்க.. இந்தச் சம்பவம் போலவே தான் அந்தப் பெண்மணி குனிந்து பதில் சொல்ல அவர்கள் கழுத்தில் கிடந்ததை உருவிக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

இன்னொரு சம்பவத்தில் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த தமிழ் பெண்ணிடம்.. சைக்கிளில் வேகமாக வந்த கறுப்பினத்தவர் ஒருவர்.. சைக்கிலியை ஒற்றிப் பறித்துக் கொண்டு ஓடிட்டார்.

இப்படி பல நூதன வழிப்பறிகள் லண்டனில்.. எம்மவரிடம் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. எம்மவரும் திருந்திறதா இல்ல.. நகைகளை திறந்து காட்டிக் கொண்டு ஊரில் காட்டிறது போல இங்கையும்.. பெருமை காட்டிட்டு இருக்காங்க. இங்க அதற்கு நல்ல பலாபலனும் கிடைக்கிறது. நல்லாவே திருடர்களுக்கும் வாழ்வளிக்கின்றனர்.

இதில் இன்னொரு சம்பவத்தில்.. ஒருவர் நிறைய நகைகளோடு வந்து தமிழ் நகைக் கடையில் விற்கச் சென்றுள்ளார். சில நகைக்கடைக்காரர்கள்.. வந்த வரை இலாபம் என்று அரை விலைக்கு வாங்கிட்டு அனுப்பிவிடுவார்கள். ஆனால் இவர் காவல்துறைக்குச் சொல்லி.. கள்வர்களைப் பிடித்துக் கொடுத்துள்ளார். இப்படியான ஒரு சில கடமைவீரர்களும் நம் மத்தியில் வாழ்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் நிறைய இப்படியான கொள்ளைச் சம்வங்கள் நடை பெற்று வருவதாக தினமும் அறியக் கூடியதாக இருக்கிறது...கூடியவரைக்கு தனியாக வெளியில் செல்லும் போது நகை அணிவதை தவிர்த்துக் கொள்வது..யாரும் கதைக்க வந்தால் எவ்வளவு கெதியாக அவர்கள் நிற்கும் இடத்தை விட்டு நகர முடியுமோ அவ்வளவுக்கு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடல்.யாராச்சும் கக் பண்ண வந்தால் தவிர்த்து கொள்ளல் போன்றவற்றை ஓரளவுக்கு தன்னும் தவிர்த்தோமானால் இவ்வாறான சம்பவங்களில் இருந்து சற்று எம்மை காக்கலாம்.....கறுப்பு இனத்தவர்கள் எங்கள் நாட்டு பெண்களைப் பார்த்து சோ beautifulஆ... இருக்கிறீங்கள் என்று வந்து கக் பண்ணிட்டு இரண்டு,மூன்று பெண்களின் தாலிக் கொடிகளை அறுத்து கொண்டு போய் விட்டார்களாம் என்ற செய்தியும் நேற்று அறியக் கூடியதாக இருந்தது..ஆகவே முடிந்தவரைக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு இடத்தில்.. ஒரு கிழக்கு ஐரோப்பிய பெண்.. தங்க நகைகள் இருக்கு வாங்கப் போறியா என்று கேட்டு வர.. தமிழ் பெண் ஒருவர் ஆசை மிகுதியால் அவளை நாட.. அவளோ.. உனக்கு இந்த நகைகள் அழகாக இருக்கும்.. இதோ அணிவித்துக் காட்டுகிறேன் என்று அருகில் வர.. தமிழ் பெண்ணும் ஆகா ஓகோ வெள்ளைக்காரி நகை போட்டு விடுறாள் என்று பெருமிதத்தில்.. மகிழ்ச்சியில் குதிக்க.. அவளோ.. கழுத்தில் கிடந்த தாலிக் கொடியை இழுத்துப் பறித்துக் கொண்டு கொண்டு ஓடிவிட்டாள்...!

smiley_laughing.gifsmiley-laughing024.gifsmiley-laughing021.gif

யாரும் அதிக நகை வைத்திருந்தால் அவர்களுடன் பழகும் தமிழர்களே அவர்களை வேறு நாட்டவர்களிடம் காட்டிக்கொடுப்பது வழமை ஆகி விட்டது.

அத்துடன் ஏனைய நாட்டவர்கள் கோல்ட் கலரில் ஏதும் அணிந்திருந்தாலும் அதை கணக்கெடுப்பது குறைவு. ஆனால் தமிழர்கள் அணிந்திருந்தால் பறித்துக்கொண்டு போடுவார்கள். அவ்வளவுக்கு "தமிழர்கள் தங்க நகைகள் அணிபவர்கள்" என்று பிரபலமாகி விட்டார்கள்.

பெண்கள் நகை அணிவதே தேவையில்லாத ஒன்று என்று நான் நினைகிறேன். கழுத்து வெறும் கழுத்தாக இருந்தால் என்ன? அதிலும் ஒரு அழகு உண்டு. இல்லை பார்த்து பழகின கண்களுக்கு கழுத்து மொட்டையாக இருப்பது பிடிக்காவிட்டால் கலராக போடுங்கள். ஏன் நகை அணிய வேண்டும்? (ஒருவர் சுதந்திரத்திலும் தலையிடவில்லை. உண்மையை சொல்லுறன் :D)

இல்லை நகை அணியாமல் இருக்க மாட்டோம் என்று நினைத்தால் நகை பறிபோவதை கேட்டு நாங்களும் கவலைப்பட மாட்டோம். நான் கவலைப்படுவதில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நகை அணிய விருப்பமுள்ளவர்கள்,

அறுணாக்கொடி மாதிரி, இடுப்பில் கட்டினால்...

ஒரு பயலும்... அறுத்துக் கொண்டு ஓடமாட்டான். :D:icon_idea:

நகை அணிய விருப்பமுள்ளவர்கள்,

அறுணாக்கொடி மாதிரி, இடுப்பில் கட்டினால்...

ஒரு பயலும்... அறுத்துக் கொண்டு ஓடமாட்டான். :D:icon_idea:

ஓம் அண்ணா அறுத்துக்கொண்டு ஓட மாட்டார்கள். பக்கத்திலேயே நிற்பார்கள். :lol: :lol: இது தான் சாட்டென்று பெண்களின் இடுப்பில் கைவைக்கலாம் என்று பார்க்கிறியள். :lol: கவனம் அண்ணா. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D

ஓம் அண்ணா அறுத்துக்கொண்டு ஓட மாட்டார்கள். பக்கத்திலேயே நிற்பார்கள். :lol: :lol: இது தான் சாட்டென்று பெண்களின் இடுப்பில் கைவைக்கலாம் என்று பார்க்கிறியள். :lol: கவனம் அண்ணா. :icon_idea:

:lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அண்ணா அறுத்துக்கொண்டு ஓட மாட்டார்கள். பக்கத்திலேயே நிற்பார்கள். :lol: :lol: இது தான் சாட்டென்று பெண்களின் இடுப்பில் கைவைக்கலாம் என்று பார்க்கிறியள். :lol: கவனம் அண்ணா. :icon_idea:

ம்ம்ம்......நாட்டுல இருக்கிற பிரச்சனைகள் காணாது என்று இது வேறை பிரச்சனை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சங்கிலிக்காக உயிரையே பறிக்கும் கூட்டத்தில்

இவருடைய சங்கிலி மட்டும் போனது ஒருவகையில் இவருடைய அதிர்ஸ்டமே.

சங்கிலியை... அறுத்தவர்கள் தமிழர்களா? அல்லது வேற்று நாட்டவர்களா?

தமிழராகத்தான் இருக்க வேண்டும்.

அவர்களின் 'பாஸ்' நெடுக்ஸ் முழுத் தகவல்களையும் வழங்கியுள்ளார். :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்.... நல்ல, உசாராத்தான்... இருக்கிறாங்கப்பா... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு கோயிலில் திருவிழா நட‌க்கும் போது ஜயர் ஒவ்வொரு நாளும் சொல்லுவார் சாமி நகை போட்டால் போதும் நீங்கள் போடாதீங்கோ என்று ஆனால் ஒருத்தரும் கேட்கவில்லை :) ...இந்த பெண்களுக்கு நகை மீது அப்படி என்ன மோகமோ தெரியவில்லை :D பத்தாததற்கு இங்கு பிறந்தவர்களையும் தங்களை மாதிரி ஆக்கிறார்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வயதுபோனவர்கள் என்றால் கொஞ்சம் அதிகமாக நகைகள் போடுவது வளக்கம் ஆனால் அதையே நெடுகலும் தொடரனும் என்று இல்லை.இங்கு ஒரு ஆச்சியைப் பார்த்து நான் நெடுகலும் நினைப்பது இந்த ஆச்சிக்கு ஏன் இந்த எடுப்பு என்று தான்..காரணம் நான் எப்போ அந்த பல் பொருள் அங்காடிக்கு போனாலும் அங்கே கை முட்டக் காப்பும்,கழுத்து நிறைய நகையுமாகத் தான் நிப்பா..இத்தனைக்கும் ஒரு அவசரத்திற்கு விரைவாக நடக்க கூடிய நிலையில் இல்லை கையில் வாக்கர் அதன் உதவியோட தான் நடப்பா....இப்படியான நிலையில் மற்றவர்களின் துணையும் இல்லாமல் இருக்கும் போது நகை அடுக்கும் வேலை எல்லாம் வேணுமா....இப்படியே நகை அடுக்கும் வேலை தொடாந்தால் களவும் நின்றபாடு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கறுமத்துக்கு நகை போட்டுக்கொண்டு தனிய ரோட்டில போகிறார்களோ? எங்களது தாலிக்கொடி ஈறா வங்கி vault ல தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழராகத்தான் இருக்க வேண்டும்.

அவர்களின் 'பாஸ்' நெடுக்ஸ் முழுத் தகவல்களையும் வழங்கியுள்ளார். :D

நானும் இப்ப யோசிச்சிருக்கிறன்.. இந்தத் தொழில இறங்குவமோ என்று. இறங்கி ரொபின்கூட் போல.. உள்ளவையட்டப் பறிச்சு தாயகத்துக்கு அனுப்புவமோ என்று. இங்க உள்ளவைக்கு எல்லாமே மிஞ்சிப் போய் என்ன செய்யுறது என்று தெரியாமல் வாழினம்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இப்ப யோசிச்சிருக்கிறன்.. இந்தத் தொழில இறங்குவமோ என்று. இறங்கி ரொபின்கூட் போல.. உள்ளவையட்டப் பறிச்சு தாயகத்துக்கு அனுப்பமோ என்று. இங்க உள்ளவைக்கு எல்லாமே மிஞ்சிப் போய் என்ன செய்யுறது என்று தெரியாமல் வாழினம்..! :D:icon_idea:

வேணாம்ணே.. நமக்கு காமடி தான் ஒர்கவுட் ஆகும்.. :rolleyes::wub: களவெல்லாம் சரிவராதுண்ணே.. :D:lol::icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம்ணே.. நமக்கு காமடி தான் ஒர்கவுட் ஆகும்.. :rolleyes::wub: களவெல்லாம் சரிவராதுண்ணே.. :D:lol::icon_mrgreen::icon_idea:

ஆமால்ல... நாங்க எல்லாம் காமடி பீஸ் என்பதை அடிக்கடி மறந்து போயிடிறமில்ல..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகை அணிய விருப்பமுள்ளவர்கள்,

அறுணாக்கொடி மாதிரி, இடுப்பில் கட்டினால்...

ஒரு பயலும்... அறுத்துக் கொண்டு ஓடமாட்டான். :D:icon_idea:

வேண்டாமப்பா.....கடைசியிலை அறுக்கிற கஸ்ரத்துக்கு ஆளையே தூக்கியொண்டு போடுவாங்கள் :icon_mrgreen:

வேண்டாமப்பா.....கடைசியிலை அறுக்கிற கஸ்ரத்துக்கு ஆளையே தூக்கியொண்டு போடுவாங்கள் :icon_mrgreen:

:lol: :lol: :lol:

Marathi-bride-from-India.jpg

நம்ம ஊர் ஆன்டி

T2u4xxXndXXXXXXXXX_!!11276790-accessories-jewelry.jpg

வெளியுர் ஆன்டி

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாமப்பா.....கடைசியிலை அறுக்கிற கஸ்ரத்துக்கு ஆளையே தூக்கியொண்டு போடுவாங்கள் :icon_mrgreen:

ஊய்ய்... எண்டு, விசிலடிகோணும் போலை.. கிடக்குதண்ணை. :D:lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.