Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலைய்யா "பற்பொடி"..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊ..ஊ..ஊ... டிங்..டாங்.. ஊ... சங்கு சத்தம், கிலு..கிலு னு உண்டியல் குலுக்குற சத்தம் வேறை வாசல் கதவிலை கனகம்மா வீட்டு நாய் வேறை வாள்..வாள் என்ற நித்திரை முறிச்ச அம்மா சனியனுகள் வந்திட்டிதுகள் விடியக்காலமையே என்ற அம்மான்ரை அர்ச்சனையோடை, ம்ம்ம்ம்... வரச்சொன்னதே நான் தானே அப்பத்தானே விடுவிங்கள் என்று மனசுக்குள்ளையே நினைச்சுக்கொண்டு அம்மா நான் கோயிலுக்கு போட்டுவாறேன் என்றதும் இந்த விடியக்காலமையே வேலை வெட்டி இல்லாம வாய்பார்த்ததுகள்... இதுக்குமேலை நின்றா தாங்க முடியாது ஜீவா எஸ்கேப்புடா என்று அம்மான்ர புறு புறுப்பிலை இருந்து தப்பி ஓடிவந்து பொடியளோடை சேர்ந்து திருவெம்பா பாட்டுக்குள்ளை செந்தமிழும் கலந்து ஜக்கியமாயிட்டம்.

ஏற்கனவே போட்ட பிளான் இண்டைக்கு மத்தியானம் கோழிப்புக்கை போடுறது எண்டது.. இதுக்கு காசு சேர்க்கத்தான் திருவெம்பா சாட்டு. முதல்லையே பேசினது போல இண்டைக்கு கனக்க இடத்துக்கு போக வேணும் காலமை காசு தராதுகள் கனக்க இடம் ஊதினால் தான் அரிசி,தூள்,உப்பு,கோலா வாங்க காணும் வெங்காயமும்,பச்சை மிளகாயும் எங்கண்டை தறையிலை பிடிங்கலாம். கோழியும் பிளான் பண்ணியாச்சு.. மனசுக்குள்ளை கோழிப்புக்கை நினைவுக்கு வர..

இவன் குட்டியும் , பீடியும்.. (பீடி என்றால் தப்பா நினைக்க கூடாது அவன்ரை பெயர் இராகவன் சின்ன பொடியனிலையே தேப்பன்ரை குறை பீடியை களவா அடிச்சதாலை அவன்ரை பட்டப்பெயர். ) பாஞ்சு..பாஞ்சு சங்கூதுறாங்கள், தர்சன் வேறை அந்த திருவோடோ என்னவோ பித்தளையிலை செய்தது வட்டமா இருக்கும் அதை வச்சு மான் கொம்பாலை தட்டிக்கொண்டிருந்தான், உண்டியல் மட்டும் கைமாறி என்னட்டை வந்திட்டுது தெரியும் அவங்களுக்கு பிள்ளை பூச்சி என்று நினைச்சு குடுக்குங்கள் என்று

சிறியும்,ராஜனும் கூட காவலுக்கு நாய்கலைக்க கல்லெறிய..

எங்கண்டை மாஸ்ரர் பிளான் இண்டைக்கு கோழிப்புக்கை என்டதாலை சின்ன சின்ன களவிலை மனம் போகேல்லை ஆத்தாவை சாட்டி இண்டைக்கு நமக்கு தான் வேட்டை நேரமும் போறதா தெரியேல்லை நாலரைக்கெல்லே வெளிக்கிட்டது கோழிவேறை பறந்திட்டால், வீடு வீடா எழுப்பினால் காசு தருகுதுகள் இல்லை,அங்கை ஒண்டு ரண்டு தான் தந்திச்சுதுகள் சிலதுகள் நாயை சூக்காட்டி விட்டுதுகள். ஒரு மாதிரி வந்தது வரட்டும் என்று பாலைய்யா வீடு தான் கடைசி வீடு முடிச்சுக்கொண்டி கோயிலுக்கு போகவேணும். பாலைய்யா வீட்டை முன்பக்கம்கடை. கடையோடை தான் மதில் பின்னாலை வேலி தான் அதுவும் கதியால் போட்டு 2 தடியை முறிச்சால் உள்ளை போயிடலாம். குட்டி தான் சரியான ஆள் ஈரச்சாக்கை கொண்டு அவன் உள்ளை போக கோழி சத்தம் போட்டாலும் என்று நாங்கள் வாசல்லை நின்று சங்கு ஊத சத்தம்,சரவை காணேல்லை.. இவன் பீடி பாலைய்யா பற்பொடி..பாலைய்யா பற்பொடி என்று 2,3 தரம் மெதுவா கூப்பிட்டான் சரிவரேல்லை பாலைய்யா பற்பொடி என்று கத்த வம்**** , ********,******** , ********** , ************ , மண்வெட்டிப்பிடியோடை ஓடி வர எடுத்தமே ஒரு ஓட்டம்.. அவன் என்ன கோலத்திலை இருந்திருப்பனோ ... கோயில்லை இருக்கிறம் குட்டி வந்து விட்டிட்டு ஓடினதுக்கு திட்டு .. இன்னைக்கு நல்ல முழுவியளம் தான்.

ஒரு மாதிரி எல்லாம் முடிச்சு பின்னேரம் பஜாருக்கு வர பாலைய்யான்னரை கோழியைக்காணேல்லையாமடா.. ஆரோ பாலைய்யா பற்பொடி என்டவங்களாம் அவங்கள் தான் அடிச்சிட்டாங்கள் போல என்றார் கடைக்கந்தசாமி அண்ணை. (கந்தசாமியருக்கு ஓரளவு விளங்கும் யார் பிடிச்சிருப்பங்கள் என்று ஏனென்றால் எங்களட்டை வாங்கின அடியை மறந்திருக்க மாட்டார். நாங்கள் ஒருக்கா தோட்டத்துக்குள்ளாலை வர நல்லா இருட்டிட்டுது .. பொயிலைக்கண்டுக்கு இடையிலை ஒராள் குந்தி இருந்து தம்மடிக்கிறார் இருந்த மண்வெட்டிப்பிடியாலை செமசாத்துப்படி வாழ்க்கையிலை அந்த தறைய மறக்க மாட்டார்.)

அதை விடண்ணே சிவகுரு இன்டைக்கு தப்பிட்டானாம் என்றான் மஞ்சு.. ஏன்ரா??

சிவகுரு அண்ணை பனம்பழம் எடுக்க போயிருக்கிறார் விழேல்லை என்று பனம்மட்டை எடுத்து தோள்ளை வச்சிட்டு வந்திருக்கிறார் கிளியனும்,கண்ணனும் மாதாங்கோயிலடியாலை ஏறி இருக்கிறாங்கள் இருட்டிலை ஆமி என்று துவக்கை லோட் பண்ணிட்டாங்கள் வெடிவைக்க வெளிக்கிட கண்ணன் பொறடா தெரிஞ்ச ஆள் போலை இருக்கு என்று பார்க்க இவர். நல்ல காலம் தப்பிட்டார். என்னண்ணை இந்த நேரம் சேட் ஒன்றும் இல்லாமா. பார்த்து போண்ணை பாலத்தடியிலை ஆமிநிக்க போறாங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டிருக்கிறாங்கள்.

என்ன இருந்தாலும் போய் சேரேல்லையே என்று எனக்கு சின்ன கவலை.

சிவகுரு அண்ணை போஸ்ற்மன்.. ஆள் கலியாணம் கட்டேல்லை சொந்தகாரன் தான் ஆனால் ஊர்ப்பொடியளுக்கு ஆரும் பொம்பிளைப்பிள்ளையளின்ரை பேரிலை வந்த கடிதத்தை எல்லாம் கிழிச்சு படிச்சிட்டு வீட்டை குடுத்து குடும்பத்தை குலைக்கிறது தான் வேறை. இவனாலை ஒரு பொடியன் இயக்கத்துக்கு போனவன்.

எனக்கும் கடுப்பு இவன் மேலை சின்னனிலை இருந்தே கொஞம் தள்ளி இருக்கிற பெட்டைய அவள் சாமத்தியப்பட்டதிலை இருந்தே கலைச்சு திரியுறனான். வளர்ந்தும் விட்டதில்லை .. காலமை ஏழு மணிக்கு சண்ணரட்டை கெமிஸ்ட்ரி இருக்கும். வீட்டை ஆறுமணிக்கு என்று பொய்சொல்லிப்போட்டு , அவள் ஆறு மணிக்கு பெரியம்மா வீட்டை தம்பசிட்டிக்கு போட்டு தான் ரியூசனுக்கு,மெதடிஸ்சுக்கு போவாள் ஒரு நாள் கூட திரும்பிப்பார்த்திராள் காலமை பத்திரமா கூட்டிக்கொண்டு போய் விடுறது தான் வேலை. அதுக்கும் வில்லனா இவன் பாவி பாலத்திலை நிப்பான். இவன்ரை முகத்திலை முழிச்சால் சொல்லிவேலையில்லை. பஞ்சாங்கம் பார்க்கத்தேவையில்லை இன்டைக்கு கரிநாள் தான். அப்படி ஒரு கிருமி.

போகாதது கொஞம் கவலை தான்.

ஆனால் பாலைய்யான்ரை பொடியனுக்கு ஒரளவுக்கு தெரியும் நாங்கள் தான் என்று,

இப்பவும் அவங்களோடை கதைச்சால் பாலைய்யா பற்பொடி என்றது தான் ஞாபகம் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]பகிர்விற்கு நன்றி ஜீவா [/size]

  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சுதா,தொடருமா?

அவள் ஆறு மணிக்கு பெரியம்மா வீட்டை தம்பசிட்டிக்கு போட்டு தான் ரியூசனுக்கு,மெதடிஸ்சுக்கு போவாள் ஒரு நாள் கூட திரும்பிப்பார்த்திராள் காலமை பத்திரமா கூட்டிக்கொண்டு போய் விடுறது தான் வேலை.

நாங்களும் உந்த எறிசொறி வேலையள் பாத்ததுதான் . ஆனால் சில கிரகங்கள் றியாக்சன் பண்ணாதுகள் . சிலதுகள் டபுள் ஓக்கே . என்ன உங்களுக்கு தம்பசிட்டி ரூ மெதடிஸ் ..... எங்களுக்கு , வேண்டாம் வெக்கமாய் இருக்கு :lol: :lol: :D :D .

கதை சொல்லும் பொழுது கோர்வையாக மேலதிக வர்ணனைகளைக் கொடுத்தால் கோழிப்புக்கை அந்தமாதிரி இருக்கும் ஜீவா . சொல்லவந்த செய்தி தொங்குபறியில் நிற்கின்றது . அடுத்தமுறை கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே

நல்ல கதை ஜீவா ஆனால் கொஞ்சம் அவசரமாக எழுதியிருக்கின்றீர்கள்.

சிறிது நேரம் எடுத்து எழுதுங்கள்.

அதோடை அந்த வட்டமான பித்தளையில் செய்ததை ""சேமக்கலம்"" என்று கூறுவார்கள்.

எல்லாக் கோவில்களிலும் பூசையின் போது அடிப்பர்கள்.

உங்களை கதை பகுதியிலும் இன்று தான் கண்டேன். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா இது தான் உங்கட முதல் கதை என்று நினைக்கிறேன் இன்னும் நன்றாக முயற்சி செய்யுங்கள் நன்றாக எழுதுவீர்கள்...பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவாவுக்கு என் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பழைய காலத்து நினைவுகளை, உங்கள் கதை கிளறிவிட்டு விட்டது!

தொடர்ந்து எழுதுங்கள், ஜீவா!

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழா காலத்து கதைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாது.பாராட்டுக்கள் ஜீவா.

கொஞ்சம் வசன அமைப்பில கவனமா இருங்க ஜீவா அண்ணன் :) . உங்க பெஸ்ட்டு கதைதானே :) . யாழ் இணயத்தில ஏதாவது உருப்படியா செய்யணும்னு பாக்கிறீங்களே உங்கள லைக் பண்றேங்க அண்ணன் :) .

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடர்ந்து எழுதுங்கள்.

நிகழ்வுகளைத் தனித் தனியாகப் பிரித்து அதற்கேற்ப பந்திகளையும் பிரித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]பகிர்விற்கு நன்றி ஜீவா [/size]

நன்றி அண்ணா,வருகைக்கும் கருத்துக்கும்.. :)

முடிஞ்சுதா,தொடருமா?

கடைசி 2வரியையும் எடுத்திட்டு தொடரும் என்று போடலாம் போலை இருக்கு என்ன அண்ணா சொல்லுறியள். இப்பத்தான் கத்துக்குட்டி.. நெக்ஸ் டைம் முடிச்சிடுறேன் ஓகே வா?

நன்றி அண்ணா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவள் ஆறு மணிக்கு பெரியம்மா வீட்டை தம்பசிட்டிக்கு போட்டு தான் ரியூசனுக்கு,மெதடிஸ்சுக்கு போவாள் ஒரு நாள் கூட திரும்பிப்பார்த்திராள் காலமை பத்திரமா கூட்டிக்கொண்டு போய் விடுறது தான் வேலை.

நாங்களும் உந்த எறிசொறி வேலையள் பாத்ததுதான் . ஆனால் சில கிரகங்கள் றியாக்சன் பண்ணாதுகள் . சிலதுகள் டபுள் ஓக்கே . என்ன உங்களுக்கு தம்பசிட்டி ரூ மெதடிஸ் ..... எங்களுக்கு , வேண்டாம் வெக்கமாய் இருக்கு :lol: :lol: :D :D .

கதை சொல்லும் பொழுது கோர்வையாக மேலதிக வர்ணனைகளைக் கொடுத்தால் கோழிப்புக்கை அந்தமாதிரி இருக்கும் ஜீவா . சொல்லவந்த செய்தி தொங்குபறியில் நிற்கின்றது . அடுத்தமுறை கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் .

நன்றி அண்ணா,

உங்களைப்போன்றோரின் கருத்துக்கள் தான் என்னை புடம்போடும் எப்போதும் தவறுகளைச்சுட்டிக்காட்டுங்கள். எனக்கும் தெரியுது ஒரு ஒழுங்கில்லாமல் தொங்கிட்டு இருப்பது. பேப்பரில் எழுதாமல் ரைப் பண்ணியதால் மீள வாசிக்க,சரி செய்ய முடியவில்லை அதை விட வேலையில் இருந்து எழுதியதாலும் சில கவனக்கலைவுகள். அதையும் விட உண்மைச்சம்பவம்.. இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிலர் யாழிலும் கருத்துக்கள உறவுகளாய் இருப்பதாலும் சம்பவத்தில் வந்த கண்ணன் அல்லது மாறன் என்ற பெயருடையவர் ஒரு காட்டிக்கொடுப்பில் கு ஒரு வீட்டில் வைத்து ராணுவச்சுற்றி வளைப்பில் கொல்லப்பட்டதால் எப்படி முடிக்க என்று தெரியவில்லை.

முதல் கதை என்பதால் பிழைகளைப்பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். :)

கொஞ்சம் வசன அமைப்பில கவனமா இருங்க ஜீவா அண்ணன் :) . உங்க பெஸ்ட்டு கதைதானே :) . யாழ் இணயத்தில ஏதாவது உருப்படியா செய்யணும்னு பாக்கிறீங்களே உங்கள லைக் பண்றேங்க அண்ணன் :) .

:D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே

நல்ல கதை ஜீவா ஆனால் கொஞ்சம் அவசரமாக எழுதியிருக்கின்றீர்கள்.

சிறிது நேரம் எடுத்து எழுதுங்கள்.

அதோடை அந்த வட்டமான பித்தளையில் செய்ததை ""சேமக்கலம்"" என்று கூறுவார்கள்.

எல்லாக் கோவில்களிலும் பூசையின் போது அடிப்பர்கள்.

"சேமக்கலம்" அதே தான். நன்றி வாத்தியார்/(அண்ணா) :)

நிச்சயமாக நீங்கள் சொல்வதை எல்லாம் கருத்தில் எடுத்து இன்னுமொரு கதையோடை வாறேன். நன்றி அண்ணா வருகைக்கும் , கருத்துக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ஜீவா தொடர்ந்தும் எழுதுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.