Jump to content

தன் பிள்ளை என்றால்..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன்.

திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது...........

வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது......

துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள்.

லா சப்பலுக்கு ஓடினேன்.

சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து

(வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை)

சிறிய கத்தரிக்காய்

திறமான நல்லெண்ணெய்

வயிற்றில் பூச மஞ்சல்

தடவிவிட வேப்பிலை

குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி...........

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.

ஆனால் கண்ணில் கலக்கம்.

என்ப்பா எனக்கேட்டேன்.

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

பதில் சொல்ல ஏதுமில்லை.

உண்மை எப்போதும் சுணைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

Link to comment
Share on other sites

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

எம்மை நாம் தீட்டவேண்டும்

அதுவே இப்பதிவின் நோக்கம்

அதைப்புரிந்து எழுதியுள்ளீர்

நன்றி ஐயா

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

நன்றி துளசி

பெண்கள் இதற்குள் வரமாட்டார்கள் என்று நினைத்தேன்.

முதலிலேயே வந்து ஆறுதலும் தந்துள்ளீர்.

இது ஆண்களைத்தொடவேண்டும் என்பதால் திறந்த திரி.

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயுமானவன்

உண்மைதான் நந்தன்.

அதுவும் அடக்கம்.

நன்றிகள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...பெண்கள் என்றால் மெசின் போன்று வேலை செய்பவர்கள் என்ற உணர்வுகளே அனேகரின் மனங்களில் உண்டு...ஆனால் அவற்றையும் கடந்து பெண் என்பளுக்குள்ளும் பல வித சொல்லிக் கொள்ள முடியாது ஏக்கங்கள் இருக்கிறது என்பதை இனிமேல் காலத்திலவாது ஆண்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிறன்..இந்த கருத்தை எனக்காக மட்டும் சொல்ல இல்லை...நான் பெற்றோருடன் இருக்கும் பிள்ளை..என் உணர்வுகள் வேறு பட்டதாக இருக்கும்..சில பிள்ளைகள் வளர்ந்து தன் அறிவு என்று வந்த பின் வெளியில் எல்லா விடையங்களையும் சொல்ல விரும்ப மாட்டார்கள்...ஆனால் ஒரு திருமணம் செய்த பெண்ணின் உணர்வுகள் விச்சு அண்ணா பகிர்ந்து கொண்டது போல் வேறு பட்டதாக இருக்கும்....நான் நிறைய,நிறைய எழுதிக் கொள்ள விரும்ப இல்லை...அனைத்து ஆண்களும் உங்கள் வீடுகளில் உள்ள பெண்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்பிறன்..

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

யாழ்போதனா வைத்தியசாலையில் இதற்கு மருத்துவ உதவியை நாடினால் பனடோல் தான் கொடுப்பார்கள். தனியார் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் வழங்குவது சாதாரணமாக அனைத்து வலிகளுக்கும் வலி நிவாரணியாக இருக்கும் ponstan. (இது ஒரு antibiotic). இதனை பயன்படுத்துவதால் வலி குறைவடையாது.

இஞ்சி தேநீர் குடித்தோ அல்லது சுட்ட உள்ளி சாப்பிட்டோ எதுவும் ஆகாது.

வெளிநாடுகளில் பல மருந்துகள் உள்ளன. இல்லை என்று கூறவில்லை. ponstan ஐ விட சிறந்தவை. ஆனால் அவை கூட போட்டவுடன் வலியை குறைக்காது. சிறிது நேரத்தில் வலி குறைவது போல் இருக்கும். பின்னர் குறிப்பிட்ட மணித்தியாலத்தின் பின் மீண்டும் வலிக்கும். மருந்தை பயன்படுத்தாமல் விட்டால் ஒரு நாளில் வலி போய்விடுமாக இருப்பவர்களுக்கு மருந்தை பயன்படுத்தினால் விட்டு விட்டு 3 நாளுக்கு கூட தொடரலாம். அது கூட பல மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். (சிலருக்கு இப்படி நடப்பதில்லை...)

மருந்து எடுப்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் உருவாகும். எடுப்பவர்களுக்கு குறைவாக பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு பக்க விளைவுகள் அதிகளவில் உருவாகும்.

உடற்பயிற்சி தொடர்ச்சியாக எடுத்து வருபவர்களுக்கு வலிக்காது என்பது பற்றி தெரியாது.

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

இதை எழுதும் போது நான் என்ன நினைத்தேனோ அது தங்கள் கருத்தில் இருக்கு இசை.

இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.

உங்களுக்கு விழுந்து கொண்டிருக்கும் விருப்பு வாக்குகளும் அதைத்தான் சொல்கின்றன.

கண்ணுக்குத்தெரியாத உறவுகளுக்காகவே பரிதவிப்போர் நாம்.

எம்மில் பாதியாகிய துணையை விட்டுவிடுவோமா?

ஆனாலும் எம்மை அறியாது விட்டுள்ளது உறைத்தது.

அதை என் தம்பிகளும் உறவுகளும் கவனிக்கணும் என்பதற்காகவே இந்தப்பதிவு.

உங்கள் கருத்து இனி இந்தக்கேள்வி எம்மை நோக்கி வராது என்ற உறுதி தருகிறது.

அதுவே இந்தத்திரியின் நோக்கம்.

நன்றி சகோதரா.

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்.

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

உங்களுக்குமா?

நன்றி

நேரத்திற்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

உண்மைதான் தம்பி தமிழ் சூரியன்

உப்பை எவரும் கணக்கெடுப்பதில்லை.

அது இல்லாதபோது...............???

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும்..........

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

இது தான் வேண்டும்.

நன்றி தம்பி

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்....

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும்.

எவருக்காவது பிரயோசனப்பட்டால் மிக மிகச்சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...

சாதாரணமாக எழுதினாலும்

இந்த திரியில் நான் எதிர் பார்த்ததை பதிந்துள்ளீர்கள்.

அதற்காகத்தான் நான்(ஆண்) இதை இங்கு கொண்டு வந்தேன்.

வெளியில் சொல்லும் செய்தியா இது என நீங்கள் பகிடியாக எழுதினாலும்..........

அதை என் போன்றவர்களால்தான் சொல்ல முடியும் என்பதும்

யாழ் கள உறவுகளுடன் கன நாட்களாக பழகுபவன் என்ற முறையில் அவர்கள் எதில் விளையாடுவார்கள் எதில் விளையாட மாடட்டார்கள் என்பதை அறிவேன். இந்த திரி அதற்கு சான்றாக அமையும். அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

இல்லை. வலி ஏற்படுவோரை பற்றி தான் கருத்து எழுதியிருக்கிறேன். :D

அத்துடன் வைன் குடிக்கும் வெள்ளைக்காரிகளை பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன். எம்மவர்களை எழுதவில்லை. :D

இப்பவும் குழந்தைப்பிள்ளை மாதிரி இருக்கா.... :D:):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

கிட்டத்தட்ட

உங்கள் நிலையே எனதும்.

ஆனால் அவர் சொன்னது உண்மை. அதுவே சுட்டது.

அது எனக்கு என் மாமனாரை ஞாபகப்படுத்தியது. இன்னொருவரின் பிள்ளையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற பரிதவிப்பு எனக்கு. என் பிள்ளை என் பிள்ளை என்பது இன்னொருவரை காயப்படுத்துவது புரிந்தது.

நீங்கள் அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு இனிப்புக்கொடுத்தநிலைதான் இதுவும்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

உங்களைப்போன்றோர் இருக்கும் பொதுத்தளத்தில் எழுத எனக்கென்ன அச்சம்?

தங்களது நன்றியும் பாராட்டும் பெரும் வெகுமதி எனக்கும் இந்த திரிக்கும்.

நன்றி சகோதரி.

எதைச்செய்தாலும் நாலு பேர் நன்மையடையக்கடவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

நன்றி தம்பி பகலவன்

இதை எழுதியதன் வெற்றி இந்த வரிகள்.

நாங்கள் எவரும் கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்.

சந்தோசமாக

அன்பாக

பண்பாக

ஆசையாக

குடும்பம் நடாத்தும் ......

எம்மைப்போன்று கணவன்மார் கூட அறியாமல் செய்யும் பிழையையே இங்கு கொண்டு வந்தேன்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் உறுதிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.