Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார் கிருஷ்ணா': சம்பந்தர் - TNA - இந்தியத் தலைவர்கள் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tna_india_CI.jpg

[size=3][size=4]இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.[/size]

[size=4]தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.[/size]

[size=4]அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தர், அந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார்.[/size]

[size=4]இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கிருஷ்ணா விளக்கியதாகவும், தங்களது முயற்சிகள் தாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இன்றுவரை பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்ததாகவும் சம்பந்தர் கூறினார்.[/size]

[size=4]தாங்கள் பொறுமை காத்து வருவதாகவும், 'அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என்று கிருஷ்ணா கூறியதாகவும் சம்பந்தர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.[/size]

[size=4]இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான, தங்கள் தரப்பு முயற்சிகளையும், கருத்துக்களையும் கிருஷ்ணாவிடம் எடுத்துரைத்ததாக சம்பந்தர் கூறினார்.[/size]

[size=4]தங்களது மக்கள் ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும் நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு எல்லோரும் ஒத்துழைத்து, அந்தத் தீர்வைக் காணலாம் என்றால், அந்தப் பாதையில் செல்வதற்குத் தயார் என்றும் சம்பந்தர் கூறினார்.[/size]

[size=4]இனப்பிரச்சனை தொடர்பில் இலங்கை அரசு பிரேரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பொறுத்தவரை, அதில் தமிழ்க் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவித்த சம்பந்தர், அதே நேரத்தில் அதில் சேர மாட்டோம் என்று தாங்களும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.[/size]

[size=4]அரசுத் தரப்பில் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டத்துடன் அதை ஆராயத் தயார் என்றும், ஆனால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் செல்ல தாங்கள் தயாராக இல்லை என்றும் சம்பந்தர் தெளிவுபடுத்தினார்.[/size]

[size=4]'தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அரசுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்த போதிலும் அரசு இதுவரை அதற்கு பதில் தரவில்லை. இருதரப்பு பேச்சில் ஏற்படும் உடன்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசு நடந்துகொள்ளவில்லை. அதனால், நாடாளுமன்றக் குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஏமாற்றத்தில் முடியலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும், நியாயமான தீர்வை ஏற்படக்கூடிய நிலைமை இருந்தால் அதைப் பரிசீலிக்கத் தயார்' என்றும் சம்பந்தர் கூறினார்.[/size]

[size=4]அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தைப் பொருத்தவரை, நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி மக்களிடம் ஆலோசித்து பரிசீலிக்கத் தயார் என்றும் சம்பந்தர் தெரிவித்தார்.[/size]

[size=4]BBC Tamil[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

முதலில் தமிழ் நாட்டு தமிழருக்கு கவேரி தண்ணீரை திறந்துவிட்டு விடடும் கிருஸ்ணா. அவருக்கே விளங்குது எந்த பொறுமைக்கும் எல்லை உண்டு என்று.

நியாயம் கெட்ட கிருஸ்ணா!

[size=4]சீன - சிங்கள உறவு அமைதியாக ஆனால் பலமாக, மேலும் மேலும் வளரட்டும்.[/size]

அந்த பொறுமையின் எல்லை, இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழ் மக்கள் + அனைத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படும் வரை என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வார்த்தை போதும்

கொஞ்ச நாட்களுக்கு இலங்கை அமைதியாக இருக்க.......... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாள்தான் வலிக்காதமாதிரி நடிக்கிறது? - கிருஷ்ணா :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் (கிருஸ்ணா ) சொல்லிட்டார் பட் நீங்க ஏன் சொல்லலே

ஏன் சம்பந்தர் ஐயா

இந்தக் கிரிஷ்ணனுகளையும் மேனனுகளையும் எத்தனை நாள்தான் போய்ச் சந்தித்து கை குலுக்கப் போறியள். வட்டத்தை விட்டு வெளிய வாங்க. நாலு பேரோட பழகினாத்தான் உலகம் தெரியும். வேற்று நாட்டு இராஜதந்திரிகளையும் சந்தியுங்கள். இப்போ உலகம் சிறுத்துவிட்டது.

சீன நாட்டுக்கு நல்லுறவுப் பயணத்தை மேற்கொள்ளுங்கள், அமேரிக்கா, அண்டாட்டிக்கா, அரேபிய ஆபிரிக்க நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தைப் பேணுங்கள்.

அப்ப இந்தியாவும் கொஞ்சம் நிதானமாக நடக்கும். அல்லது கறிவேப்பிலை மாதிரி, தேவைக்கு பாவித்து விட்டு தூக்கி எறிந்து போட்டுப் போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த இந்தியாக்காரனின்ர பொறுமை விளங்கிறது, இல்லை!

முந்தி வி.பி. சிங், என்று ஒரு பிரதமர் இருந்தார். இவருக்கு ஒரு காதல் ஒண்டு, வந்தததாம். அப்பாவிடம் கேட்டாராம், நான் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்யப் போகின்றேன் என்று!

அப்பா சொன்னாராம், கொஞ்சம் பொறு தம்பி, சரியான நேரம் வரேக்க, நான் செய்து வைக்கிறன் எண்டு. மகனும் பொறுத்துப் பொறுத்துப், பார்த்துக், கடைசியாக் கலியாணம் செய்யாமலே கடைசி வரை இருந்து, மண்டையைப் போட்டாராம்!

இந்தியாக் காரன்ர 'பொறுமை' என்பதன் அர்த்தம், இது தான்! :wub:

சிங்களத் தலைமைகளும் றாஜபக்சாக்களும் அடிக்கடி இந்தியாக்குப் போய்க் கதைக்கினம். அவை எத்தனையோ இரகசியமான விசயங்களைப் பற்றிக் கதைச்சுப் போட்டு கடைசிலை பேச்சுவார்த்தை சுமுகமா முடிஞ்சுது எண்டு சொல்லிப் போட்டுப் போய் விடுவினம்.

ஆனால் எங்கடை தலைவர்கள்இந்தியாக் காறன் ஏதாவது ஒரு சொல்லுத் தங்களுக்குச் சாதகமாச் சொல்லிப் போட்டால் (அவன் என்னத்துக்காகச் சொன்னான் எண்டது வேறை கதை) உடனை மேடை போட்டு தம்பட்டம் அடிப்பினம். வாழ்க தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் சாணக்கியம்.

'பழுத்த அறுபத்தைஞ்சு வருச அரசியல் பாரம்பரியம் கொண்ட' ஆக்களின்ரை அறிவே இப்படியிருந்தால் மற்றாக்களைப் பற்றி என்ன சொல்லுறது.

ஆரோ சொன்ன மாதிரி தமிழன் தன்ரை சாணக்கிய அரசியலையும் றாஜதந்திர நகர்வுகளையும் கதைகளிலையும் இதிகாசங்களிலையும் எழுதித் தள்ளீட்டதாலை இப்ப சாணக்கிய அரசியலிலை வங்குறோத்து நிலையிலை நிக்கிறான்....

அந்த பொறுமையின் எல்லை, இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழ் மக்கள் + அனைத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படும் வரை என்பது.

இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பும் விளங்கவேண்டும்!

ஆனால் சம்பந்தர் போன்றவர்கள் கிருஷ்ணா போன்ற கையாலாகாதவர்களின் கூற்றுக்களை வைத்து இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டி சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்புக்கு துணை போகவே செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு கன தெரிவுகள் இல்லை. அவர்கள் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் எவ்வளவு தூரம் உறுதியாக இருப்பதே பெரியவிடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

S-M-Krishna-Mahinda-Rajapaksa.jpg

இலங்கைத் தமிழரைப் பற்றி மட்டுமல்ல, தமிழகத் தமிழரைப் பற்றிக் கூட... கதைக்க, அருகதை அற்றவர் கிருஷ்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிற்கு தமிழர்களின் பிரச்சனை தீர்ப்பதை விடவும் இந்தியாவை என்ன செய்வார்கள் என்ன நினைப்பார்கள் என்பதிலேயே கர்சனை அதிகமாக உள்ளது,

இந்தியாவும் இவர்களின் குணத்தை நன்கு அறிந்து இவர்கள் நம்புமாப்போல் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றது,

கூட்டமைப்பு அதனை உடனேயே தமிழ்மக்களிற்கு அறிக்கைகளாக விட்டு தங்கள் பதவிகளை தக்கவைத்து கொண்டுள்ளது .......

கிருஷ்ணாஜீ- [size=4]பொறுமைக்கும் எல்லை உண்டு[/size]

மன்மோகன்சிங்ஜீ - பொறுமைக்கு எல்லையே இல்லை... :D

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூடு சொரணை உள்ளவர்களிக்குத்தான் பொருந்தும் அது எங்கே இவர்களிற்கு உள்ளது ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஷ்ணாவின் பொறுமை எல்லை சாவடைந்து கொண்டிருக்கும் மீனவர் பட்டியலின் எதுவரைக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தால் ஆவது மீனவரின் தொழிலுக்காவது நிம்பதி கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா கிருஸ்ணா சொன்னது உங்களுக்குத்தான்.அதை எங்களுக்கு(தமிழ்மக்களுக்கு)சொல்ல வேண்டாம்.இதை தொலைபேசியிலேயே சொல்லியிருக்கலாம்.எங்களுக்குத்தேவை செயல் வார்த்தைகள்.அல்ல.தமிழகத்தின் காவிரிப் பிரச்சினையிலே தமிழகத்துக்கு எதிராக மன்மோகனுக்கு கிருஸ்ணா எழுதிய மை இன்னும் காயவில்லை.

பட்ட மரத்த்pல பால் வடியுதாம் அவங்கள் சொல்லிறாங்கள் நாங்கள் நம்ப வேணும்.

தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இது தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு சொல்வது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.