Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின் முகமாக விளங்கியவர் தான் மாவீரர் பரிதி .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான் மாவீரர் பரிதி .சிங்கள அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர் பரிதி அவர்கள் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம் .

மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

http://thaaitamil.com/?p=37881

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply

வீரவணக்கம் அண்ணா

இவரது பிரிவால் துயருறும் இவர் உறவுகளுக்கு இறைவன் மனத்திடத்தை அளித்து அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தளபதி பரிதிக்கு வீரணக்கம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சாவடைந்த தளபதி பரிது அவர்கட்கு எமது வீர வணக்கங்கள்.

மற்றும், இங்கு ஒரு சிலரது கருத்துக்களை வாசிக்கும்போது என்ன தோன்றுகின்றது எனில், எண்பதுகளிலேயே நாட்டை விட்டு ஓடிவந்த தேசத்தின் வலியறியாதோரெல்லாம் செத்தவீட்டிலும் தங்களது புலமையைக் காட்டினம் என்பதுவே. இதை நான் சொல்வதே தவறு காரணம் கடைசியில நானும் ஓடிவந்திட்டன்.

தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார். பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,

கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார்.

இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார்.

எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.

மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.

*********

நிலத்திலும் புலத்திலும் போராடிய புலிவீரன் மாவீரர் பரிதி அவர்களுக்கு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் வீரவணக்கம் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின் முகமாக விளங்கியவர் தான் மாவீரர் பரிதி .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான் மாவீரர் பரிதி .சிங்கள அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர் பரிதி அவர்கள் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம் .

மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

****

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளருமான தளபதி பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் 08.11.2012 பிரான்ஸ் தலைநகரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தளபதி பரிதி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் செயற்பட்ட ஒரு மூத்த தளபதி ஆவார். தமிழீழம் நோக்கியதான போhராட்ட வடிவம் மாறிய போதிலும் தன்னை அதற்கமைய மாற்றி புலம்பெயர் தமிழருடன் இணைந்து பல இடர்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வந்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க தமிழீழம் நோக்கிய பாதையில் இளையோரின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பதை நன்கு அறிந்து பணியாற்றியவர்.

thaaitamil.jpgகடந்த சில வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்த் தேசிய பணிச்செயற்பாட்டாளர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தளபதி பரிதி அவர்கள் மேல் நடாத்திய கொலைமுயற்சி இங்கு குறிப்பிடதக்கது. அதன் பின்னரும் அஞ்சாது தனது தாயகப்பணியைத் தொடர்ந்து வந்த தளபதி பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள இனவாதக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழரின் இறுதியும் அறுதியுமான முடிவாம் தமிழீழம் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் வழிமாறாது ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் தேவையாகும். எமது போராட்டமானது புலம்பெயர் தேசத்தில் தமிழின உணர்வாளர்களால் அமைதியான மற்றும் சனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் இக்காலத்தில் இலங்கை அரசின் இவ் எல்லை மீறிய படுகொலையை தமிழ் இளையோர் அமைப்பாகிய நாங்கள் கண்டிப்பதுடன் இக்கொலைக்கான நீதியை சர்வதேசத்தின் முன்

http://www.eelamview.com/2012/11/09/france-col-parithi-reekan/

  • கருத்துக்கள உறவுகள்

530751_404965589577401_1032314965_n.jpgdeepam74.gif

மிகவும்... கீழ்தரமான செயல்.

இதனை, யார் செய்திருந்தாலும்... தமிழ்ச்சமூகம் மன்னிக்காது..

இதன் மூலம், பிரான்சில் வாழும்.. முழுத்தமிழரையுமே.. அந்நாட்டவர்கள் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் நிலைமையே... ஏற்படும்.

தமிழுக்கு பாடுபட்டதற்காக... தன்னுயிரையே... விலையாகக் கொடுத்த கேணல் பரிதி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]றீகனுக்கு வீரவணக்கங்கள் [/size]

[size=4]தளபதி பரிதிக்கு வீரவணக்கம்[/size]

சிங்களத்தின் இந்த நாடு கடந்த பயங்கரவாத செயற்பாட்டிற்கு காரனமாணவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து தமிழர் அமைப்புக்களும முன் வர வேண்டும்.

Edited by கிளியவன்

கேணல் பரிதி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்....

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

உன்னையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை.

மன்னித்துக்கொள் அண்ணா..........................

ஆனால் எதற்கும் அடிபணியாது

துணிந்து நின்ற உனது உறுதியே உன்னை அழித்தே தீரவேண்டுமென்ற முடிவுக்கு காரணம்.

நேற்றிரவு உன் ரத்தத்தின் முன் மீண்டும் உறுதி எடுத்துக்கொண்டோம்.

நீ

காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

தளபதிக்கு வீரவணக்கம்.சிறிலங்கா அரசின் பயங்கரவாதம் சிறிலங்காவைத் தாண்டி வெளிநாடுகளிலும் தமிழர்கள் மேல் நடத்தப்படுகின்றது.இதனை அந்த அந்த நாட்டு அரசாங்கங்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று சிறிலங்காவின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.இதற்குத் துணை போன தமிழின விரோதிகளை பிரான்ஜ் காவல்துறை கைது செய்து கொலைசெய்யத் தூண்டியவர்கள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டக் காட்டவேண்டும்.

பரிதியின் கொலைக்கு நாங்களே பொறுப்பு

பரிதியை எங்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக நாங்களே கொன்றோம்

அல்லது

எதிரி இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பை எங்களின் பிளவுகளின் ஊடாக நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம்

ஆகவே நாங்களே இதற்குப் பொறுப்பாளிகள்

இனியும் ஒன்றுபடவில்லையென்றால் தொடரக் கூடிய கொலைகளுக்கும் நாங்களே பொறுப்பு

[size=5]வீரவணக்கம் !

சம்பந்தபட்ட கும்பல் கடும் விலைகளைக் கொடுக்கும்![/size]

[size=5]வீரவணக்கம் !

சம்பந்தபட்ட கும்பல் கடும் விலைகளைக் கொடுக்கும்![/size]

இந்த கடும் என்பதற்க்கு விளக்கம் சொல்லுவிங்களோ?

பரிதியின் கொலைக்கு நாங்களே பொறுப்பு

பரிதியை எங்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக நாங்களே கொன்றோம்

அல்லது

எதிரி இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பை எங்களின் பிளவுகளின் ஊடாக நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம்

ஆகவே நாங்களே இதற்குப் பொறுப்பாளிகள்

இனியும் ஒன்றுபடவில்லையென்றால் தொடரக் கூடிய கொலைகளுக்கும் நாங்களே பொறுப்பு

நீங்கள் தான்

பொறுப்பு

என்று உரிமை கோருகிறீர்களா ...........

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

பரிதியின் கொலைக்கு நாங்களே பொறுப்பு

பரிதியை எங்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக நாங்களே கொன்றோம்

அல்லது

எதிரி இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பை எங்களின் பிளவுகளின் ஊடாக நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம்

ஆகவே நாங்களே இதற்குப் பொறுப்பாளிகள்

இனியும் ஒன்றுபடவில்லையென்றால் தொடரக் கூடிய கொலைகளுக்கும் நாங்களே பொறுப்பு

அப்படி என்றால் கஜன் நாதன் கொலை நடந்த பொழதும் பிளவுபட்ட இருந்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் நடந்த கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. கொலைகள் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையமாட்டாது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளும்வரை முன்னேற்றம் எதுவும் கிட்டாது.

[size=5]“The slaying of Parithi seems to be the work of a professional killer, who has fired at him at the bus stop located near the TCC office. Mr Parithi, in his attempt to flee from the killer seems to have crossed the road with injuries and fell dead. [/size]

[size=5]The killer chose to chase him to the opposite side of the road and fled the scene only after verifying his death,” a source which was in touch with the investigators said. The bullets have also hit a vehicle and a shop at the site.[/size]

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35734

[size=4]மேற்படி செய்தியின் படி கொலைகாரன் இவரின் கொலையை இறங்கி, வீதியை கடந்து உறுதிப்படுத்தி செய்துள்ளான். [/size][size=1]

[size=4]அத்துடன் ஒரு "உழைப்பிற்காக கொல்லும் கொலைகாரன்" என விபரிகப்பட்டுள்ளான்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இனவிடுதலைச் செயற்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்பது இங்கே புதைந்துள்ள உண்மை. ஒரே நேரத்தில் வருவது, போவது, தனியாக நடமாடுவது போன்ற செய்கைகளை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"] [/size]நேற்றிரவு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து உடனேயே சம்பவ இடத்துக்கு சென்று காலை 21/2மணிவரை அங்கிருந்தேன்.

கொலை மிகவும் திட்டமிடப்பட்டு அவரது எதிர்ப்பு வரும் என கணிக்கப்பட்டு மிகவும் பயிற்சி பெற்றவர்களால் செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு நேர் எதிரே உள்ள 26 [size="4"]bus stop இல்[/size]அவர் [size="4"]bus க்காக காத்திருந்தபோது அவருக்கு பின்னால் வந்து கண்ணாடிக்குப்பின்னாலிருந்து முதலாவது சூடு விழுந்துள்ளது. அதனால் கண்ணாடி சிதறியுள்ளது. ஆனால் அவருக்கு படவில்லை. அடுத்த சூடு உடைந்த கண்ணாக்குள்ளால் விழுந்துள்ளது. அது அவரது வயிற்றில் விழுந்துள்ளது. [/size]

[size="4"]முன் பக்கம் முழுவதும் வெளி. ஒரு வாகன தரிப்பிடம் கூட இல்லாத இடம். இதை எதிரி கணிப்பிட்டேட பின்னால் வந்துள்ளான். அவருக்கு இருந்த ஒரே தெரிவு. வீதியைக்கடப்பதாகும். வீதியை அவர் கடக்க தொடங்கியதும் bus stop இலிருந்து சற்று பின்னால் நிலையெடுத்து அடுத்த அடுத்த சூடுகள் தோழிலும் முதுகிலும் விழுந்துள்ளன. உயிர் பிரிந்து விட்டது என்று உறுதிப்படுத்திவிட்டே அந்த இடத்திலிருந்து பின்பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளனர். bus stop இல் அவருடன் வேறு இனத்தவர் சிலர் நின்றுள்ளனர். கண்ணாடி உடைந்ததால் தாங்கள் முகத்தை கீழே வைத்து விட்டதாலும் கொலையாளிகள் முகத்தை மூடி துணியால் கட்டியிருந்ததால் அடையாளம் தெரியவில்லை என்றும் காவல் துறையினரரிடம் சொல்லியுள்ளனர்.[/size]

[size="4"]நாங்கள் ஒரு நூறு பேரளவில் அங்கு நின்றிருந்தோம். எம்மைவிட அதிகமாக காவல்துறையும் அதிலும் இரகசிய பொலிசாரும் நின்றிருந்தனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கஜன், நாதன் படுகொலையின் சூத்திரதாரிகள் விடுதலைப் புலிகளால் இனங்காணப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் உண்டு. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வலிமையும் புலிகளிடம் இருந்தது.

ஆனால் இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று யாருக்கும் தெரியாது. சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நாம் பிளவுபட்டுப் போய் இருப்பதனால், மாறி மாறி எதிரியால் கொலைகளை செய்ய முடியும். இனி யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை எதிரி உருவாக்குவான். போட்டிக் குழுவா அல்லது எதிரியா இதை செய்கிறான் என்று ஆராய்ச்சிகளை மட்டும்தான் அப்பொழுது செய்ய முடியும். ஆனால் புலம்பெயர் மண்ணிலும் போராட்டம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விடும்.

எமக்குள் உள்ள பதவி, ஈகோ போன்ற மண்ணாங்கட்டிப் பிரச்சனைகளை விட்டு, உடனடியாக விட்டுக் கொடுப்புக்களை செய்து ஒன்றுபடுவதன் ஊடாகவே இதில் இருந்து எம்மை ஓரளவு பாதுகாக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.