Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் ஒருதாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது சிறு வயது முதலே நண்பி மாலினி. அவளுக்கு ஒரு அக்கா அண்ணா தம்பி.  இவளின் பெற்றோர் ஆசிரியர்கள். எக்கச்சக்கமான காணிகள் சொத்துக்களாக. ஆனாலும் தாயும் தந்தையும் கஞ்சப் பிசினாரிகள். பிள்ளைகளை சுதந்திரமாகத் திரியவும் விடமாட்டார்கள். ஒழுங்கான உடைகளை வாங்கியும் கொடுக்க மாட்டார்கள். எனது பெற்றோரும் ஆசிரியர்களானதாலும் அவளது தாய் என்தாயாருடன் கற்பித்ததாலும் எனக்கு அவர்கள் வீட்டில் எந்நேரமும் போய் வர அவள் என்னுடனும் திரிய அனுமதி கிடைத்தது. நாகரிகாமான உடை எதையும் அவள் வாங்கிப் போட்டதாக எனக்கு நினைவில்லை. ஏன் பயப்பிடுகிறாய் உன் அம்மாவை எண்டாலும் கேள் வாங்கித் தரும்படி என்று கூறினாலும் சிரித்துச்  சமாளித்துவிடுவாள்.
 

யாராவது வெளிநாடு போபவர்களைப் பார்த்து தந்தை ஏசுவார் என என்னிடம் கூறியிருக்கிறாள். பின்னர் தமக்கைக்கு மாப்பிளை பார்த்து ஒன்றும் சரிவரவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் தமக்கைக்கு வெளிநாட்டு மாப்பிளை   பார்த்தார்கள். பொருத்தம் சரிவரவில்லை என்று அதே மாப்பிளையை இவளுக்கும் பார்த்தனர். இவளுக்கு நல்ல பொருத்தம். அதன்பின் இவள் கொலன்ட்  வந்துவிட்டாள். சிறிது காலத்தில் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். தமையனும் மாற்றியக்கத்தில் எதோ பிரச்சனை என அவரும் ஹொலண்ட் வந்துவிட்டார். பின் தம்பியாரையும் அங்கு இவள் கூப்பிட்டு விட்டால். தாயும் தமக்கையுமே அங்கு.

தமக்கை பாமசிஸ்ற்றுக்குப் படித்தவர் வேலை கிடைக்கவில்லை. வருமானம் இருவருக்கும் போதுமென்பதால் பெரிதாக வேலை தேடவும் முயலவில்லை என்றே கூறவேண்டும். மாலினி ஹொலண்ட் வந்து இரு பிள்ளைகளுக்கும் தாயாகி பிள்ளைகளுக்கும் 12 வயதாகிவிட்டது. மூத்த சகோதரனும் தந்தை இல்லாத துணிவில் தான் ஒரு பெண்ணை விரும்பி திருமணமும் செத்துவிட்டார். இரண்டு வருடம் கழிய தம்பியும் ஒரு பெண்ணைத் தன்பாட்டில் திருமணம் செய்ய  தமக்கை பற்றிக் கவனிப்பார் யாருமில்லை. நான் தொலைபேசியில் கதைக்கும் போதெல்லாம் என்னடி இன்னும் நீங்கள் அக்காவுக்கு ஒன்றும் பார்க்கவில்லையா என்று கேட்பேன். அம்மாவும் எத்தனையோ பார்த்துவிட்டார். ஒன்றும் பொருந்தவில்லையாம் என்று கூறுவாள்.

இரு மாதங்களின் முன் என்னிடம் குடும்பமாக வந்திருந்தனர். அப்போதுதான் தமக்கையின் விடயமாக கிண்டிக் கிளறிக் கேட்டேன். நான் என்னடி செய்வது அம்மாதான் பார்க்கிறாவே பிறகு நானென்ன செய்வது என்று அலுப்புடன் கூறினாள். நீங்கள் மூவரும் குழந்தை குட்டிகளுடன் வாழ்கிறீர்கள். அக்கா உன்னிடம் சொல்ல முடியுமா? நீ உன்னை அக்காவின் நிலையில் இருந்து பார் என்றேன்.  சில நேரம் உன் அம்மா  தான் தடையாக இருக்கிறாவோ என்றவுடன் அவளுக்கு வந்ததே கோபம். எந்தத் தாயாவது மகளுக்கு இப்பிடிச் செய்வார்களோ உனக்கு விசரடி என்றாள். எனது சிறிய தாயார் என்னுடன் கதைக்கும் பொது ஒருமுறை கூறினார். மாலினியின் தாய்தான் தான் தனித்துவிடுவேன் என எண்ணி தமக்கைக்கு வரும் மாப்பிளைகளை எல்லாம் தட்டிக் கழிப்பதாக. அதையும் அவளிடம் கூறியும் அவள் நம்பவில்லை.
இதற்குமேல் நான் கதைத்தும் பயனில்லை என எண்ணி விட்டுவிட்டேன்.

கடந்த வாரம் அவளின் தொலைபேசி வந்தது. எடுத்தவுடன் அக்காவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றாள். எனக்கு ஆச்சரியம் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று கேட்டேன். நீ சொன்னது சரிதான் என்றாள் . எனக்கே நான் சொன்னது எது என்று விளங்காததால் என்ன கூறினேன் என்று திரும்பக் கேட்டேன். அம்மாதான் இத்தனை நாட்கள் அக்காவின் திருமணத்துக்குத் தடையாக இருந்திருக்கிறா என்றாள். எப்படிக் கண்டுபிடித்தாய் என்றேன். ஹொலண்டில் இருக்கும் ஒருவர் தமக்கைக்காக ஒரு சாதகம் கொண்டுவந்தாராம். அதை தாயிடமும் அனுப்பிவிட்டு  இருந்துவிட்டாள். தாய் சாதகம் பொருந்தவில்லை என வழமைபோல் கூற நான் கூறியது நினைவில் வர இவள் தானும் ஹொலண்டில் ஒரு சாத்திரியிடம் கொடுத்து பொருத்தம் பார்த்திருக்கிறாள். பத்துக்கு ஒன்பது பொருத்தம் என்று சாத்திரி இவளுக்குக் கூற இவளுக்கு அதிர்ச்சி. அதன்பின் இன்னும் ஒருவரிடம் கொடுத்துப் பார்க்க அவரும் ஒன்பது பொருத்தம் என்றிருக்கிறார். அதன்பின் இவள் மாப்பிளை வீட்டுடன்  தொலைபேசியில் கதைத்து நாளும் குறித்துவிட்டு தாயிடமும் தமக்கையிடமும் திருமணம் முற்றாக்கியதையும் கூறிவிட்டாள். திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருந்ததால் பயணச்சீட்டும்  பதிவுசெய்து இருக்கையில் தமக்கைக்கு வேலையும் கிடைத்துவிட்டது. தமக்கைக்கு இனி நல்லகாலம் தான் என எண்ணி மகிழ்ந்திருக்கையில் ஒரு வாரம் கழித்து தமக்கையிடம் இருந்து போன். 

மாலினி எனக்கு கலியாணம் வேண்டாமடி என்ற தமக்கையை என்னக்கா மாப்பிளையைப் பிடிக்கவில்லையோ என்று இவள் கேட்க இல்லை உனக்கு வேலை கிடைத்துவிட்டது தானே. இந்த வயதில்  கலியாணம் கட்டி என்ன செய்யப் போகிறாய் என தாய் கேட்டதாகவும் அம்மாவுக்கு விருப்பமில்லாமல் தான் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறேன் என்று தமக்கை கூறி அழ, இவளுக்கு வந்த கோவத்தில் நீங்கள் அம்மாவுடன் ஒன்றுமே கதைக்க வேண்டாம் அக்கா. குறித்த நாளில் கட்டாயம் திருமணம் நடக்கும் எனக் கூறி தமக்கையைச் சமாதானப் படுத்திவிட்டு ஒருகிழமை முன்னுக்கே பயணச்சீட்டை  மாற்றிப் போட்டு இவள் ஊருக்குப் போய் இறங்கியவுடனே தாய்க்கு நல்ல திட்டும் கொடுத்ததாகக் கூறினாள். தமக்கையும் கணவரும் தாயுடனேயே இருப்பதாகவும் கூறி முடிக்க எனக்கு ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

தாயை தெய்வமாகக், கோயிலாக வேறு ஏதோவாகவெல்லாம் போற்றும் போது இப்படியானவர்கள் பலரும் இருக்கின்றனர்  என்பதறிய எப்படி இவர்களால் தான் பெற்ற பிள்ளையின் வாழ்வை நாசப்படுத்த முடிகிறது என எவ்வளவுதான் யோசித்தாலும் விளங்கவே இல்லை.  பருவத்தே பயிர்செய்  என மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை தன்வீட்டில் பருவம் கடந்தும் பயிர் செய்ய மறந்தது தான் சோகம்.


 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு தாய் இல்லை. ஈழத்தமிழர்கள் மத்தியில் நிறையத் தாய்மார் இருக்கினம். தங்களின் குடும்பப் பொருளாதாரம் கருதி.. ஆண்பிள்ளைகளின் இளமைக்காலத்தை வெளிநாடுகளுக்கு அகதி என்ற பெயரில் பொருளீட்ட அனுப்பி... வீணடித்த அம்மாக்கள் அப்பாக்கள் சகோதரிகள்..சகோதர்கள்  ஆயிரம் ஆயிரம்..! அவர்களின் கதைகளும் இதே தான்..!

 

எமது சமூகத்தின் இன்னொரு பக்கத்தை இனங்காட்டும்.. நல்ல பகிர்வு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் பலவிதம் இதில் அம்மாக்களும் அடக்கம் சுமேரியர். அனுபவத்தை கதையாகத் தந்திருக்கிறீங்கள். பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி  பல பேர் இருக்க கூடும். எல்லாம் அறியாமையும் சுய நலமும்.    கதைப் பகிர்வுக்கு நன்றி.

எனக்குத் தெரிய இதே மாதிரி நடந்தது.

 

இது ஓரளவு வருமானம் உள்ள சில குடும்பங்களில், தனிப் பிள்ளை அல்லது திருமணம் முடிக்காமல் இருக்கும் இறுதிப் பிள்ளைக்கு நடந்துள்ளது.

கலியாணம் கட்டிக் குடுத்தால், வாறவர் எப்படியிருப்பாரோ?  கடைசி காலத்தில் வைத்துப் பராமரிக்க ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்ற பயம்.  

  • கருத்துக்கள உறவுகள்

இத் தாயை மாதிரி பல பேரைக் கண்டு இருக்கிறேன்...தாங்கள் நல்ல இருக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது பல காரணங்களுக்காகவோ தங்கட பிள்ளைகள் வாழ்க்கையை நாசம் பண்ணுகிறார்கள்...இது பற்றி எழுதத் தொடங்கினால் கணக்க எழுதலாம்

 

 

பகிர்வுக்கு நன்றி, இப்படி நடக்கிறது தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'தாய்மையைப்போற்றும்/மதிக்கும் தாய்மார்களுக்கு மத்தியில் 'சிலர் இப்படியும் இருக்கினம்!.

,

மாமியார் கொடுமையெல்லாம் இதன் வெளிப்பாடுதான். இல்லையெண்டால் தன்ற பிள்ளையின்ற சந்தோஷத்துக்குத் தானே தடையாக இருப்பினமோ என்ன?!.

 

'வெளிநாட்டுக்கு பிள்ளையளை அனுப்பிப்போட்டு....அவையை காசுகேட்டு காசு கேட்டுத் தினமும் வறுத்தெடுக்கும் பெற்றோரை!!!....என்ன சொல்லிப்பேசுவது?!....:(

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தினை கதையாக வடித்தது அழகு.

திருமணங்கள் தாமதமாய் தள்ளிப்போவதும் இப்படிப்பட்ட காரணகளால்தான்.

 

வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம்

காரமான

தொண்டைக்குள் நிற்கும் விடயத்தை எழுதியதற்கு நன்றி.

 

ஆனாலும் அந்த தாயின் பயத்தையும் பிள்ளைகள் உணர்ந்து அவரை தனித்துவிடாது பராமரிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வை வித்தியாசமானது!

 

தனது திருமணம் முடிந்துவிட்டதுடன் தாயைப் பற்றிக் கவலைப்பட விரும்பாத, தங்கை!

 

தானும் தனது வாழ்வும் என்று ஒதுங்கிக்கொண்ட அண்ணாவும் தம்பியும்!

 

அந்தத் தாயைப் பிள்ளைகள் கவனித்திருந்தால், தாயும் எல்லாத் தாய்களையும் போல இருந்திருப்பார்.

 

அந்தத் தாய்க்கும் மகளை விட்டால், வேறு யார் துணையாக இருக்கப் போகின்றார்கள்?

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், சுமே!

 

நீங்கள் எப்பவும் ஒரு எதிர்மறையான ஆள் போலதான் இருக்கு, இருண்ட பக்கங்களை மட்டும் பார்க்கின்றீர்கள். நல்ல கதைகளை எழுதுகள், எத்தனையோ நல்லவர்கள் இருக்க, இவற்றை ஏன் கதையா எழுதுவான். பார்க்கும் உலகை நல்ல கண் கொண்டு பாருங்கள், நீங்கள் அதிகமாக மற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பீர்கள் போல. உங்கள் கதைகள் அப்படித்தான் இருக்கின்றது.

 

நானும் என் அக்காவிற்கு ஒரு சாத்திரியிடம் காட்ட 60% என்றான், மற்றவன் அதே சாதகங்களுக்கு 95% என்றான், அக்கா இப்ப சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றா, எனக்கு இந்த சாதகத்தில் நம்பிக்கையில்லை, அத்தானின் மாமியார்தான் என்னுடன் நல்ல பழக்கம் அவதான் என் அக்காவை கேட்டு சாதகம் பார்க்கனும் என்றா, 60% என்றவுடன் குழம்பிவிட்ட, வாங்கோ மாமி இன்னுமொருவரிடம் காட்டுவோம் என்று கூட்டிக்கொண்டுபோன 95%. இரண்டாவது தங்கைக்கும் 65%, மாப்பிளைவீட்டார்தான் கேட்டு வந்தார்கள், எங்கள் வீட்டில் சாதகம் பொருந்தவில்லை என பின்வாங்க நான்தான் அப்பா அம்மாவுக்கு விளக்கி செய்து வைத்தனான், இப்ப அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

 

ஏமாற்றும் சாத்திரிகள், இவர்களை பலர் நம்புகின்றார்கள் அதுதான் வேதனை.

 

ஒரு மிகவும் ஏமாற்றுகாரனின் கைகளில் அந்த தாயும் பல தடவை சாதகங்களை கொடுத்து பார்த்திருக்கலாம்

 

 

பல காரணங்கள் இருக்க இப்படி மெட்டையா அவாவில் குற்றம் காணலாமா, அவர்களின் நிலையில் யோசியுங்கள், இப்படி ஏதிர்மறைகதைகளைவிட ஊக்குவிப்பு கதைகள் சமூகத்தை இன்னும் முன்னேற்றும்.

 

நன்றி பகிர்வுக்கு

ஒருகாலத்தில் இறுக்கமான பாசப்பிணைப்புகளைக் கொண்டிருந்த இனக்குழுமம் , இன்று காசு என்ற அளவுகோலில் வீங்கிப்பெருத்து நிலைதடுமாறுகின்றது . இதற்கு இரத்த உறவுகளும் பலியாகிவிட்டன . இதில்அவர்களின் பதவிகளும் அமுங்கித்தான் போய்விடும் . நான் எழுதிய " வேள்விக்கிடாய் "  சிறுகதையும் இதே செய்தியைத்தான் சொல்லி நின்றது . சமூகத்தின் சீழ்களைப் படம்பிடிக்கும் உங்கள் எழுத்துக்கள் தொடரவேண்டும் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் சுமே :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய அனைவர்க்கும் நன்றி. ஆண்  பிள்ளைகளை தாய் திருமணம் செய்து கொடுக்காது பணத்துக்காக வதைப்பதைக் கேள்விப்பட்டுள்ளேன். மகளை தன்  பாதுகாப்பிற்கு வைத்திருப்பதை நான் இப்போதுதான் காண்கிறேன். புங்கை நீங்கள் எழுதியது ஓரளவிற்கே சரி ஏனெனில் மாலினி பலதடவை தாயை ஹொலண்ட் வரும்படி கேட்டும் தாய் போகவில்லை. தான் வெளிநாடு போகவே மாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டார். நீங்கள் கூறியதுபோல் சில நேரம் ஆண் பிள்ளைகள் கேட்டிருந்தால் போயிருப்பாரோ என்னவோ.

என்ன செய்வது வந்தி எனக்கு ஒருவரைப் பார்க்கும் போது அவர்களிடம் முதலில் உள்ள கெட்ட குணங்களே கண்ணுக்குத் தெரிகின்றன. அதனால் நான் பல இடங்களில் அவதானமாகவும் பல தீமைகளிலும் இருந்து தப்பித்தும் உள்ளேன். அது எனக்குக் கடவுள் கொடுத்த கொடை என்றே நான் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் வரும் தாய்க்குப் பின்னால் உள்ள உளவியல் பற்றி அதிகம் சொல்லமுடியாவிடினும், பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு வரப் பண்ணி, அவர்கள் திருமணம் புரிந்து குடும்பமாகுவதுதான் தங்கள் சந்தோஷம் என்று பெற்றோர் நம்பிக்கைகளை வைத்திருக்கின்றனர். என்றாலும் இப்படியான சுயநலம் பிடித்த தாய்மாரும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையை படித்த பின்னர் ஒரு யோசனை தோன்றியது, தலைப்பை இப்படி போட்டிருக்கலாம்,,இப்படியும் ஒரு நாய்,,,,,

522719_368886539843304_1192942330_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நீங்கள் உங்கள் அம்மா போல் எல்லோரையும் நினைத்து ஒரு மாயையில் உழல்கின்றீர்கள். யதார்த்தமாகப் பாருங்கள்.சினிமாவுக்குத்தான் உங்கள் விளம்பரம் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.