Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாருங்கள் பொங்கலிடுவோம்............

Featured Replies

நீர் தேங்கி நீண்டு

கிடக்கிறது வயல்வெளி,

தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில் 

தூக்கணாங்குருவிக்கூடுகள்

நிறைந்துபோய் கிடக்கின்றன 

சிதைந்த வயல்வரம்புகளில்

வெண்கொக்குகளும் காகங்களும் 

இறகுகோதி உலாத்துகின்றன,

 

கலப்பைகீறாத எங்கள் நிலமதில்

அல்லியும் நீர்முள்ளியும்.

மண்டிக்கிடக்கிறது,

உடலங்களை உண்ட மதமதப்பில்.

 

நெல்லுத்தூத்தல்களும்

அறுவடைக்கால கூச்சல்களும் 

இல்லாத வெளிபார்த்து 

சலித்துக்கடக்கிறது  பருவக்காற்று, 

 

நார்கடகங்களும் சாக்குகளும்

மக்கி மண்னேறிப்போகிறது 

வண்டில் சில்லுகளில் வலைபின்னி 

சிலந்தி கிடக்கிறது.

 

அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்

கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், 

விலைகென்று வளர்த்த கிடாயும் 

விழியுயர்த்தி மிரள்கிறது.  

 

காலநிலைப்படி

இது தைமாதம் தான்.

கதிர் அறுத்துப் புதுப்பொங்கலிடும்

புண்ணிய காலம் தான்.

 

முற்றம் முதல் 

உழுது விதைக்கும் நிலம்வரை 

 

சிலுவைகுறிகளாய் எச்சரிக்கை பலகைகள்

எப்படி விதைப்பது?

 

உற்ற சொந்தங்களும்  

பெற்ற மகன்களும் தடுப்புக்களில் 

யார் விதைப்பது?

 

விதைக்காத போது

எதைக்கொண்டு பொங்கலிடுவது ?

 

வாருங்கள், 

வித்துக்கள் சுமந்த மண்ணெடுத்து 

தீ மூட்டுவோம் 

பற்றியெழும் பெரும் தீயில் 

இருப்பதைக்கொண்டு 

படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.

 

நாளைய விடியலில், 

சூரிய தேவனின் வருகையோடு 

கருக்கொள்ளும் 

வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம். 

 

வயலில் இறங்கி வேலை செய்யாத ஒருவர் இப்படி கவி படைத்திருக்க முடியாது. அவ்வளவு தத்ரூபமாக கண் முன்னே காட்சிகள் விரிகின்றன உங்கள் கவிதையை வாசிக்கும்போது. அருமை. என் ஊரை நினைத்தேன் வரம்புகள், தூங்கணங்குருவி, கருங்குருவி...ஓ..கடவுளே..இப்படி நிம்மதியின்றி அலைவிட்டுவிட்டீரே. கற்பனையில்தான் எஞ்சிய வாழ்க்கையா?

  • கருத்துக்கள உறவுகள்
நெல்லுத்தூத்தல்களும்

அறுவடைக்கால கூச்சல்களும் 

இல்லாத வெளிபார்த்து 

சலித்துக்கடக்கிறது  பருவக்காற்று, 

 

 

நார்க் கடகங்களும் சாக்குகளும்

மக்கி மண்னேறிப்போகிறது 

வண்டில் சில்லுகளில் வலைபின்னி 

சிலந்தி கிடக்கிறது.

 

உங்கள் கவிதைகள், உணர்வுகளின் கண்ணாடிகள்!

 

இருளை விளக்கும் கவிஞனின் பார்வை, கவிதையின் இறுதியில், வெளிச்சத்தை நோக்கித் திரும்புவது, கவிதையை மேலும் மெருகு படுத்துகின்றது!

  • தொடங்கியவர்

வயலில் இறங்கி வேலை செய்யாத ஒருவர் இப்படி கவி படைத்திருக்க முடியாது. அவ்வளவு தத்ரூபமாக கண் முன்னே காட்சிகள் விரிகின்றன உங்கள் கவிதையை வாசிக்கும்போது. அருமை. என் ஊரை நினைத்தேன் வரம்புகள், தூங்கணங்குருவி, கருங்குருவி...ஓ..கடவுளே..இப்படி நிம்மதியின்றி அலைவிட்டுவிட்டீரே. கற்பனையில்தான் எஞ்சிய வாழ்க்கையா?

 

நன்றி பாஸ், எனது பெயரே ஊரை சொல்லும்.வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதம் தான் என் தாய் நிலம்.என்ன செய்வது ஊரை, உறவுகளை பிரிந்த வலிகள் இவ்வாறான விசேட தினங்களில் அதிகமாக வருகிறேதே ....என்னை மன்னித்துவிடுங்கள் சகோ .....உங்கள் மனதை அலையவைத்தமைக்கு 

உங்கள் கவிதைகள், உணர்வுகளின் கண்ணாடிகள்!

 

இருளை விளக்கும் கவிஞனின் பார்வை, கவிதையின் இறுதியில், வெளிச்சத்தை நோக்கித் திரும்புவது, கவிதையை மேலும் மெருகு படுத்துகின்றது!

 

நன்றி புங்கையூரான்,

உங்களின் விமர்சனங்கள் அந்த கண்ணாடிகளை துடைத்து இன்னும் அழகாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

வண்டிச் சில்லுகளில் சிலந்தி

வலை பின்னிக் கிடக்கிறது .........

......சாகும் வரை தீராத மீண்டும் வராத வாழ்க்கை .சோகம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் என்றதும் மனதில் விரிந்த குதூகலம் உங்கள் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு கல்லாய் உதிர்ந்துவிட்டது. இப்படி எல்லாம் எம்மால் யோசிக்கவே முடியாது உங்களைத் தவிர. மிக அருமை நேற்கொழுதாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

வெந்து கிடக்கும் சொந்த மண்ணின் சோகம் தாங்கி நிற்கும் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் உங்கள் மனதின் வலிகளைத் தாங்கி நிற்கிறது. பொங்கல் தினத்திற்காக எழுதப்பட்ட கவிதை மிக அருமை. பாராட்டுக்கள் நேற்தொழுதாசன்.

  • தொடங்கியவர்

வண்டிச் சில்லுகளில் சிலந்தி

வலை பின்னிக் கிடக்கிறது .........

......சாகும் வரை தீராத மீண்டும் வராத வாழ்க்கை .சோகம் தான்

 

ம்ம்ம்ம் சோகங்களை விலக்கிவிட்டு இருக்கும் இடத்தில் சுகமாக வாழப்பழகவும் தெரியவில்லை எமக்கு. என்ன செய்வது. நன்றி அக்கா கருத்துப்பதிவுக்கு

பொங்கல் என்றதும் மனதில் விரிந்த குதூகலம் உங்கள் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு கல்லாய் உதிர்ந்துவிட்டது. இப்படி எல்லாம் எம்மால் யோசிக்கவே முடியாது உங்களைத் தவிர. மிக அருமை நேற்கொழுதாசன்.

 

நன்றி அம்மா. எல்லோராலும் எழுத  முடியும் அம்மா. நான் எதுவும் புதிதாக சொல்லவில்லை. நான் வேறு உங்களின் குதூகலங்களை சிதைத்துவிட்டேனே ................

  • தொடங்கியவர்
வெந்து கிடக்கும் சொந்த மண்ணின் சோகம் தாங்கி நிற்கும் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் உங்கள் மனதின் வலிகளைத் தாங்கி நிற்கிறது. பொங்கல் தினத்திற்காக எழுதப்பட்ட கவிதை மிக அருமை. பாராட்டுக்கள் நேற்தொழுதாசன்.

 

நன்றி கண்மணி,

 உங்களின் மனதையும் என் எழுத்துக்கள் தொட்டிருப்பதையிட்டு சந்தோசமடைகிறேன். சொந்த மண்ணை இழந்த ஒவ்வொருவருக்குள்ளும்  இந்தவலி  இருந்துகொண்டே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வரிகளும் அருமை  ஏக்கங்களை அள்ளி என்மீது எறிந்து விட்டு போகின்றது. கவிக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
நாளைய விடியலில், 

சூரிய தேவனின் வருகையோடு 

கருக்கொள்ளும் 

வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம். 

 

 

 

தை  பிறந்தால் வழி  பிறக்கும்.

தைரியம் தரும் வரிகள்

 

நம்பிக்கைதான் வாழ்க்கை - அது

நடக்கணும் இருக்கணும் என்பது அவசியமில்லை

 

வழி  காட்டியாக  இருந்தாலே  போதும்

வரும் பகையை  வெல்லலாமே..........

 

 

நன்றி  ஐயா

நம்பிக்கை  தந்தீர்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நிமிரவைக்கும் கவிதை

மீண்டும் மீண்டும் உங்கள் எழுதுகோலின் பிரசவிப்பில் வீரமான குழந்தை :rolleyes:

 

பாராட்டுகள்

 

நார்கடகங்களும் சாக்குகளும்

மக்கி மண்னேறிப்போகிறது 

வண்டில் சில்லுகளில் வலைபின்னி 

சிலந்தி கிடக்கிறது.

 

அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்

கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், 

விலைகென்று வளர்த்த கிடாயும் 

விழியுயர்த்தி மிரள்கிறது.  

 

 

 

 

உங்கள் கவிதைகளின் சிறப்பு visualize பண்ணக்கூடிய பல வரிகள் நிறைந்து கிடப்பது. உணர்வுத் தொற்றல்களைத் தரும் கவிதை வரிகள்.

 

 

பற்றியெழும் பெரும் தீயில்

இருப்பதைக்கொண்டு

படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.

 

இதில் சில முரண்பாடுகள் இருக்கின்றதாக உணர்கின்றேன்.  அறுவடை இல்லாத நிலங்கள் பற்றிச் சொல்லி விட்டு எப்படி இருப்பதைக் கொண்டு படையலிடுவது? எதுவுமில்லை என்ற பிறகு எதைக் கொண்டு பொங்கலிடுவது? எம் முதல் தேவை பொங்கலிடுவது அல்ல, விதை நெற்களை வாங்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தானே?

 

 

நாளைய விடியலில்,

சூரிய தேவனின் வருகையோடு

கருக்கொள்ளும்

வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம்.

 

சூரிய தேவனின் வருகைக்காக எவரும் காத்துக் கிடக்க தேவையில்லை என நினைக்கின்றேன். ஒவ்வொருவரும் தம் கடமையை நேர்மையாக செய்யும் போது காலம் சூரிய தேவனை பிரசவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
சூரிய தேவனின் வருகைக்காக எவரும் காத்துக் கிடக்க தேவையில்லை என நினைக்கின்றேன். ஒவ்வொருவரும் தம் கடமையை நேர்மையாக செய்யும் போது காலம் சூரிய தேவனை பிரசவிக்கும்.

 

 

 

உண்மை

நன்றி  நிழலி

  • தொடங்கியவர்
ஒவ்வொரு வரிகளும் அருமை  ஏக்கங்களை அள்ளி என்மீது எறிந்து விட்டு போகின்றது. கவிக்கு பாராட்டுக்கள்

 

நன்றி சாத்திரி அண்ணர்,

  உங்களின் பதிவுகள் நிறைய படிப்பதுண்டு. ஒரு மூத்த பதிவரான 

உங்களையும் எனது எழுத்துக்கள் தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன் என்றும் அன்புடன் 

  • தொடங்கியவர்

தை  பிறந்தால் வழி  பிறக்கும்.

தைரியம் தரும் வரிகள்

 

நம்பிக்கைதான் வாழ்க்கை - அது

நடக்கணும் இருக்கணும் என்பது அவசியமில்லை

 

வழி  காட்டியாக  இருந்தாலே  போதும்

வரும் பகையை  வெல்லலாமே..........

 

 

நன்றி  ஐயா

நம்பிக்கை  தந்தீர்.

 

நன்றி விசுகு, 

வழிகாட்டும் நம்பிக்கையை தரும் வரிகள். நன்றிகள் ஐயா 

நிமிரவைக்கும் கவிதை

மீண்டும் மீண்டும் உங்கள் எழுதுகோலின் பிரசவிப்பில் வீரமான குழந்தை :rolleyes:

 

பாராட்டுகள்

 

நன்றி அக்கா, உங்களின் வாழ்த்துக்கள் என் இருத்தலை இன்னும் இன்னும் பூரனமாக்கும். 

  • தொடங்கியவர்

உங்கள் கவிதைகளின் சிறப்பு visualize பண்ணக்கூடிய பல வரிகள் நிறைந்து கிடப்பது. உணர்வுத் தொற்றல்களைத் தரும் கவிதை வரிகள்.

 

 

 

இதில் சில முரண்பாடுகள் இருக்கின்றதாக உணர்கின்றேன்.  அறுவடை இல்லாத நிலங்கள் பற்றிச் சொல்லி விட்டு எப்படி இருப்பதைக் கொண்டு படையலிடுவது? எதுவுமில்லை என்ற பிறகு எதைக் கொண்டு பொங்கலிடுவது? எம் முதல் தேவை பொங்கலிடுவது அல்ல, விதை நெற்களை வாங்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தானே?

 

 

 

சூரிய தேவனின் வருகைக்காக எவரும் காத்துக் கிடக்க தேவையில்லை என நினைக்கின்றேன். ஒவ்வொருவரும் தம் கடமையை நேர்மையாக செய்யும் போது காலம் சூரிய தேவனை பிரசவிக்கும்.

 

நன்றி நிழலி. இப்படியான கருத்தாடல்கள் எனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். உண்மையில் மிகவும் சந்தோசப்படுகிறேன்.

 

///பற்றியெழும் பெரும் தீயில்

இருப்பதைக்கொண்டு

படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.///

 

கால்நடைகளை வளர்க்கும் உழவனிடம் ஒரு பால் கறக்கும் பசு கூடவா இருக்காது?,அதன் பாலை படையல் இடலாமே .............அந்த நாளின் பாரம்பரியத்தை தொடரவேண்டும் என்பதற்காவே படையல் என்ற வார்த்தையை எடுத்தேன். தவறுகள் என்மீதும் இருக்கலாம் நிழலி, விமர்சியுங்கள் கருத்தாடுங்கள்.

 

பொங்கலிட முடியாதவன் படையல் ஒன்றை செய்யும் நிலையில் இருப்பதே அவனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் எடுத்துக்காட்டு அல்லவா. உங்களின் அந்த  கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்.

உண்மை

நன்றி  நிழலி

 

நன்றிகள் இருவருக்கும் 

கலப்பைகீறாத எங்கள் நிலமதில்

அல்லியும் நீர்முள்ளியும்.

மண்டிக்கிடக்கிறது,

உடலங்களை உண்ட மதமதப்பில்.

 

உள்ளத்தைக் கீறிக் கிழித்த வலிமிகு சொல்லாடல் நேற்கொழு . படையுங்கள் படையலை .

  • தொடங்கியவர்
கலப்பைகீறாத எங்கள் நிலமதில்

அல்லியும் நீர்முள்ளியும்.

மண்டிக்கிடக்கிறது,

உடலங்களை உண்ட மதமதப்பில்.

 

உள்ளத்தைக் கீறிக் கிழித்த வலிமிகு சொல்லாடல் நேற்கொழு . படையுங்கள் படையலை .

 

நன்றி கோமகன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.