Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதப் பாதையில் பயணிக்கும் 'தெலுங்கானா' - உதயமானது 'தெலுங்கானா செம்புலிகள் இயக்கம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதரபாத்: ஆந்திராவில் வரலாறு திரும்புகிறது... 1940களின் இறுதியில் இந்தியாவையே அதிர வைத்தது தெலுங்கானா விவசாயிகளின் ஆயுத முனையிலான வர்க்கப் போராட்டம்.. இப்போது அதே தெலுங்கானா பிரதேசம் "தனி மாநில" கோரிக்கைக்காக ஆயுதமேந்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறது.

 

தெலுங்கானா யுவசேனா மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தெலுங்கானாவை எதிர்ப்போர் அழித்தொழிக்கப்படுவர்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "ஆந்திர அரசே விலகிக் கொள்.. தெலுங்கானாவே எங்களது இலக்கு" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தின் செயலாளர் சத்ரபதியின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் தெலுங்கானாவை வென்றெடுக்க முடியாது. தெலுங்கானா தனி மாநிலத்தை ஏ-கே.47 ரக துப்பாக்கிகள் மூலமே வென்றெடுக்க முடியும்.

 

தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் முதுகில் குத்தும் துரோக மனோபாவம் கொண்டவர்களை செம்புலிகள் இயக்கம் தண்டிக்கும். மக்களே! ஆயுதமேந்திய போராளிகளுடன் இணையுங்கள்! நாமே தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம்! என்று கூறப்பட்டுள்ளது.

 

இருப்பினும் இந்த இயக்கம் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்காது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/2013/01/26/india-t-militants-begin-poster-campaign-168634.html

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிரியே தீர்மானிக்கின்றான் எந்த வகையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று !

நியாயமான அரசியல் தீர்வுகளை மத்தியஅரசு தராத நிலையில்
ஐ.நா. சாசனத்திற்கு அமைய தமது சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராட முனைபவர்களுக்கு எனது ஆதரவு உண்டு :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தெலுங்கானா செம்புலிகள் இயக்கம்' தனது இலக்கை அடைய  வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் !

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உயிரை வாங்குகிற ஒட்டுக்குழுக்கள் உருவாகாத வரை வெற்றிப்பாதையில் செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, இந்தியா துண்டு துண்டாக உடையனும்

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில்

முதுகில் குத்தும் துரோக மனோபாவம் கொண்டவர்களை செம்புலிகள் இயக்கம் தண்டிக்கும்.

மக்களின் உயிரை வாங்குகிற ஒட்டுக்குழுக்கள் உருவாகாத வரை வெற்றிப்பாதையில் செல்லலாம்.

 

 

எமது அனுபவங்கள் பலருக்கும் பாடமாக அமர்ந்துள்ளது அவர்களது அறிக்கையிலேயே  தெரிகிறது.

ராஜவன்னியன் நல்லதொரு பதிவு இட்டுள்ளார் முடித்தால் வாசிக்கவும் .

இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு பல மொழி ,சமயங்களை கொண்டது .அதை மத்தியில் இருந்து ஆளுவதேன்பது இலகுவான காரியமல்ல .பிரச்சனைகள்,பிரிவினை கோசங்கள் இருந்தாலும் காஸ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை அவன் இந்தியன் என பெருமை கொள்ளவே நினைக்கின்றான் .

ஒரு தமிழிழ போராட்டம் தொடக்கி முப்பது இயக்கங்கள் ,இயக்கங்களுக்கிடையில் சண்டை ,இயக்கங்களுக்குள் சண்டை .அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை ,அவனவன் மாறி மாறி குழி பறிப்பு ,சிங்களவனுடன் கூட்டு  இதற்கிடையில் இந்தியனை பார்த்து நக்கல் நையாண்டி.

பார்ப்பது அவனின் சினிமா ,கேட்பது அவனின் பாட்டு ,வாசிப்பது அவனின் இலக்கியம் , இதற்குள் ஏதோ நாங்கள் ஒரு வல்லரசு போல கதை .

போய் குப்பிற படுத்து கனவு காணுங்கையா?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் நல்லதொரு பதிவு இட்டுள்ளார் முடித்தால் வாசிக்கவும் .

இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு பல மொழி ,சமயங்களை கொண்டது .அதை மத்தியில் இருந்து ஆளுவதேன்பது இலகுவான காரியமல்ல .பிரச்சனைகள்,பிரிவினை கோசங்கள் இருந்தாலும் காஸ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை அவன் இந்தியன் என பெருமை கொள்ளவே நினைக்கின்றான் .

ஒரு தமிழிழ போராட்டம் தொடக்கி முப்பது இயக்கங்கள் ,இயக்கங்களுக்கிடையில் சண்டை ,இயக்கங்களுக்குள் சண்டை .அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை ,அவனவன் மாறி மாறி குழி பறிப்பு ,சிங்களவனுடன் கூட்டு  இதற்கிடையில் இந்தியனை பார்த்து நக்கல் நையாண்டி.

பார்ப்பது அவனின் சினிமா ,கேட்பது அவனின் பாட்டு ,வாசிப்பது அவனின் இலக்கியம் , இதற்குள் ஏதோ நாங்கள் ஒரு வல்லரசு போல கதை .

போய் குப்பிற படுத்து கனவு காணுங்கையா?

ஏதோ மேற்கூறிய குழுவுக்குள் நீங்கள் அடங்காத மாதிரி எல்லோ உங்கடை கதை போகுது. உதை தான் சொல்லுறது முகட்டை பாத்து துப்புவது என்று...

கனடாவில் உள்ள க்யூபெக் மாநிலம் உட்பட சகல மாநிலங்களும் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை கொண்டுள்ளன.

அவ்வாறு இந்தியாவும் கொண்டுவந்தால் தெரியும் யார் யார் 'இந்தியாவுடன்' இருக்க விரும்புகிறார்கள் என  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மேற்கூறிய குழுவுக்குள் நீங்கள் அடங்காத மாதிரி எல்லோ உங்கடை கதை போகுது.

உதை தான் சொல்லுறது முகட்டை பாத்து துப்புவது என்று...

 

பாவம் அவர்

ஒரு பொழுதிலும் களத்தில் நின்றதில்லை

களத்தில் நின்றவனுடனும் நின்றதில்லை. :(

காஸ்மீர், அசாம், நக்சலைட்  இவர்களுடன் தெலுங்கானா..

 

 

சீனாவும் பாகிஸ்தானும் சந்தர்ப்பங்களை நழுவவிட மாட்டா.

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீர், அசாம், நக்சலைட்  இவர்களுடன் தெலுங்கானா..

 

 

சீனாவும் பாகிஸ்தானும் சந்தர்ப்பங்களை நழுவவிட மாட்டா.

 

 

இவர்களுடன் சிறிலங்காவும்............

இந்தியனை பார்த்து நக்கல் நையாண்டி.

பார்ப்பது அவனின் சினிமா ,கேட்பது அவனின் பாட்டு ,வாசிப்பது அவனின் இலக்கியம் , 

தாங்கள் பார்க்க படம் இல்லாமல் செம்புலிகளின், தெலுங்கு காங்கிரசின் படங்களை பார்க்கத்தொடங்கியிருப்பது மன வருத்தம் அளிக்கிறது.

 

தமிழகம், காங்கிரசை அந்த மாநிலத்தில் ஒதுக்கியிருப்பது, மத்தியை விரும்பாததால்தான். இதனால் தமிழ்நாடு பலதடவைகள் மத்திய அரசால் அரசியல் போருளாதாரங்களில் பலதடவை பழி வாங்கப்பட்டிருக்கு. குறைந்த பட்சம் தண்ணீர், மின்சாரம் கூட மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைப்பதில்லை. தமிழ் நாட்டில் ஆரவாரக் குட்டிகள் மத்தியுடன்தான். சாதாரண மகன் கிந்தி படித்து கிந்தியனாக விரும்பவில்லை.

 

அண்ணத்துரை தனிநாட்டுகொள்கையிலிருந்து வெளியேறியது இழப்பை கணக்குப் பார்த்து மட்டுமே. நமக்கு வேறு வழி இல்லாதால் நாம் இன்னமும் தனிநாடுக்கொள்கையில் இருக்கிறோம். 

 

தமிழ் நாடு தனி நாடுகேட்க முதல் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் மத்தியின் பாரத்தை உணரவேண்டும். முன்னேறாத மாநிலங்களை தக்க வைக்க மத்தி தமிழ்நாடு, வங்காளம், அசாம் போன்ற தான் விரும்பாத மாநிலங்களை வரிவசூலித்து தனது மாநிலங்களை காப்பாற்றி வருகிறது. இந்த சுமையை விரைவில் மற்றைய தென் மாநிலங்களும் உணரத்தொடங்கும். அப்போது தமிழ் நாடு தனி நாட்டு போராட்டம் ஆரம்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Country_Chicken_Curry.JPG

 

காரசாரமான குண்டூர் சிக்கன் கறி வேலை செய்ய ஆரம்பித்து போட்டுது .. இனி எத்தனை தலை உருள போகுதோ.. நம்ம வடிவேலு .. கருநா போல வாய்சவடால் உதார் எல்லாம் கிடையாது அங்கிட்டு..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தெலுங்கான செம்புலிகளின் குண்டு சிலவேளை கனடா வரை பாயும் சந்தர்ப்பம் உள்ளது போலத் தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி பீமநகரில் பாகிஸ்தான் வெற்றிக்கு வெடி கொழுத்துவார்கள் முன்பு.. :D அதுதான் உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போராடும் வரை.. வீண் முயற்சி என்பார்கள். வெற்றி பெற்றவுடன்.. ”விடாமுயற்சி” என்பார்கள்.

- ஃபிடல் காஸ்ட்ரோ

வாழ்த்துகள். இவர்கள் தொடக்கி வைக்க இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் யோசிக்க தொடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவிசயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.