Jump to content

எங்கட கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

 

உங்களை யாரும் தூற்றும்  நிலையில் நீங்கள் இல்லை. 

 

 

மனிதர்கள் எல்லோரும்  உயிருக்கு ஆபத்து வரும்  சந்தர்பத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது யதார்த்தமே .
அதைக் கூட பிழை என்று நினைத்து மனம் வருந்துவது, உங்கள் நல்ல மனதையே காட்டுகிறது .
 
நீங்கள் எட்டப்பன் வேலை பார்க்கவில்லையே. பின்னர் என்ன குற்ற  உணர்வு ? 
Link to comment
Share on other sites

போராட்டத்தில சில குடும்பங்கள் சரியாய் பாதிக்கப்பட்டுப் போக,சில குடும்பங்கள் ஆதாயமும் அடைஞ்சிட்டினம்.ஊரில எங்கட வீட்டிற்கு கிட்ட ஒரு குடும்பம் இருக்குது.அந்த குடும்பத்தில மூன்று பிள்ளைகள் .ஒருவன் மாவீரன் ஒருவன் இறுதி யுத்தத்திற்கு பிறகு எங்கைஎன்றே தெரியாது ஒருவன் சில காலம் போராளியாய் இருந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அந்த வீட்டு ஐயாவிட்ட மட்டும் நான் வெளி நாட்டுக்குப் போறதை சொன்னனான்.மற்றப்படி என்ற அம்மாவிற்கு மட்டும்தான் தெரியும் நான் நாட்டைவிட்டு வெளிக்கிடுவது.அதே நேரம் எங்கட ஊர் கிராம சேவையாளர் அவருக்கும் மூன்று பிள்ளைகள் அவை மூன்று பேரும் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள்.அவை கொழும்பில்தான் வேலை செய்வினம்.  கிராம சேவையாளர் முந்தி புலிகளின்ர கை ஆள் இப்ப அரசுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளுக்கு சேவகம் செய்யிறார்.அவங்கள் வாழ்ந்திடுவாங்கள்.

இயக்கம் இல்லாததால பல குடும்பங்கள் சரியாய் கஷ்டப்படுகுதுகள் .இயக்கம் எவ்வளவு ஆட்களை பராமரிச்சது. எல்லாரும் நினைப்பினம் இயக்கம் தனிய போராடினது மட்டும்தான் என்று.ஆனால் அவையின்ர நிருவனங்களில எத்தனை ஆயிரம் பேர் வேலைசெயதவை.அந்தந்த நாட்களில சம்பளம் வரும்.

 

தொடரும் 

Link to comment
Share on other sites

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

 

 

நீங்கள் இறுதி வரை தாய் மண்ணில் இருந்ததை இட்டுப் பெருமையடைகின்றேன். 

தொடருங்கள் வாசிக்க ஆவல்!

Link to comment
Share on other sites

ஆசாமி,

 

உங்கள் கதையை இன்று வாசித்தேன். நீங்கள் கூறும்கதையை கேட்கும்போது வாழ்க்கையில் பல முடிவுகளை சுயமாகவே தீர்மானித்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகின்றது. எனவே, அனுதாபங்களோ அறிவுரைகளோ கூறமுடியவில்லை. ஆனால், உங்கள் பயணத்தில் சுகத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற எனது பிரார்த்தனைகள். 

Link to comment
Share on other sites

உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். பல அறியாத விடயங்களை , உங்கள் வலிகளை  அறிய முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை ஆயிரம் மக்கள் வலியோடும் வேதனைகளோடும் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது .. என்னை போல பல பேர் சௌகர்யத்தோடு வாழ்வதை நினைத்து வெட்கி தலை குனிகிறேன் ....  

விரைவில் நல்ல  விடியல் உங்கள் வாழ்வில் வர பிரதிகிறேன் ....

Link to comment
Share on other sites

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

 

 

உண்மையைச் சொல்லுவதால் தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளது.

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  

 

 

நீங்கள் உண்மையையை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள் ஆசாமி. 

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில நானும் அண்ணையும் தான். அண்ணா ஓயாத அலைகள் இரண்டில வீரச்சாவு அடைஞ்சிட்டான்.நான் தான் ஐயாவையும் அம்மாவையும் பார்க்கோணும்.ஐயாவும் மீள் குடியேறி கொஞ்ச நாளில இறந்திட்டார்.அதாலதான் புலிகள் கஷ்டப்படுற நேரத்தில உதவேலாமல் போயிற்று.அண்ணா சொல்லுறவன் கொஞ்ச ஆட்கள் இயக்கத்திற்கு சேர்ந்தால் இரவிலாவது கொஞ்சம் கூட நித்திரை கொள்ளலாம் என்று.போராட்டம் என்று வெளிக்கிடையிக்க அநேக சனங்கள் ஆதரவு தந்ததுகள்.அதுகளாலையும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்யமுடியும்?.   யாரிலையும் பிழை கண்டு பிடிக்க ஏலாது.நாங்கள் சிறிய இனம்.மற்ற நாடுகளின்ர நலனுக்கு எங்களை விட்டுக்கொடுக்க தன் மானம் விடயில்லை.  

 

போர் என்றால் கரடு முரடான பாதைதான். புலிகள் வெற்றி பெறயிக்க  சாமரம் வீசின என்னைப்போன்ற பலர்.ஆபத்தான நேரத்தில கைகொடுக்காமல் கைவிட்டிட்டம். அண்ணா சொல்லுவான் உதவி செய்யிறதெண்டால் தேவையான நேரத்தில செய்யோணும்.அந்த நேரத்தில ஒன்றும் செய்யேலாமல் போயிற்று.இப்ப இருக்கிற மனநிலை அப்ப இருக்கயில்லை. புலிகள் யுத்த நிறுத்தம் கேட்டவை ஆனால் அது சாத்தியப்படயில்லை. சரியான சாப்பாடு இல்லாமல் ஆராலதான் என்ன செய்யமுடியும்?
 
தொடரும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆசாமி தேவையான நேரத்தில வேண்டியது கிடைச்சிருந்தா எங்கட நிலைமை இப்பிடி இருந்திருக்காதுதான்.

Link to comment
Share on other sites

புலிகள் தோற்றதற்க்கு பல காரணகளைச் சொல்லலாம்.இதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்கு முக்கியமானது. புலிகளின் கடல் வழி வழங்கலைத் தடுத்ததில் அமெரிக்காவும், இந்தியாவும் முக்கிய பங்கை ஆற்றின.சி|றிலங்காவிற்கு ஆயுதங்களை சீனா பாக்கிஸ்தான் வழங்கின. உங்கள் பதிவு முக்கியமானது.ஆனால் இதில் அங்கு இனி இல்லையென்ற துயரை அனுபவித்த மக்களையோ போராளிகளையோ நாம் தவறு சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தினூடாக புலிகளின் தோல்விக்கான அனைத்து நிலமைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

 

உங்களிடம் எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, இயக்கத் தலமை ஏன் இது நிகழ்வதை அவதானிக்கவில்லை? எதிரி மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் போது, குறிப்பாக சந்திரிகா ரணிலின் ஆட்சியைக் கலைத்த போது, புலிகள் திருகோணமலையக் குறி வைத்து தாக்குதல்களை ஆரம்பித்து இருந்தால் , இத் தகைய பாரிய பின் அடைவையும் அழிவையும் சந்தித்திருக்க முடியாது அல்லவா? இது சர்வதேச சக்திகளிடம் புலிகளின் பேரம் பேசும் வலுவை இன்னும் அதீகரித்திருக்கும். சிறிலங்கா அரசிற்கான சர்வதேச அனுசரணைகளை இது இடை நிறுத்தி இருக்கும்.

 

அவர்களை பிழையாக வழி நடாத்தியவர்கள் யார் என்னும் கேள்விக்கு ,உங்களுக்கு பதில் தெரிந்து இருந்தால் விளக்கவும்.இந்தக் கேள்விக்கு இது வரை எவரும் சரியான விளக்கம் தந்ததில்லை.

பதில் தரவல்ல திரு,நிலாந்தன்  போன்றோர் இதுவரை எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே ஒரு தனிக்கதையா போய்க்கிட்டு இருக்குது ஆசாமி.

 

எங்கள் மத்தியில் (யாழ் களம் உட்பட) உள்ள பல்வேறு மனிதர்களை இனங்காட்டும் ஒரு கதை உங்களின் கதைக்கு சமாந்திரமா இங்க ஓடிக்கிட்டு இருக்குது..!

 

வாழ்த்தோ.. தொடருங்கவோ சொல்ல முடியவில்லை. உங்கள் கஸ்டத்தில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்து கொண்டு.. ஓசில அட்வைசும்.. கதையும் படிக்கும்..  சராசரி மனிதனாக இருந்து கொண்டு.. embarrassing.. என்னை நினைக்க எனக்கே அவமானமா இருக்குது..! :(:rolleyes:

Link to comment
Share on other sites

இலங்கையைப் பொருத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம். நாங்கள் போராட வெளிக்கிட்டதே ஒரு வெற்றிதான்.எங்கட போராட்டம் எந்த நாட்டிலையும் தங்கியிருக்கவில்லை.புலம் பெயர் உறவுகளின் உழைப்பில்தான் மிளிர்ந்தது.ஆய்வாளர்களுக்கு எம் போராட்டம் ராஜதந்திரம் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் றால் போட்டு சுறா பிடிக்கும் உதவி நாடுகளால் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்காது.கிணறு வெட்ட பூதம் தான் வரும்.எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இத்தனை நாடுகளுக்கும் நடுவில் தமிழன் அரசாண்ட வரலாறு  என்றும் நிலைத்திருக்கும்.எதையும் யாரும் கதைக்கலாம் செய்துகாட்ட முடியாது.
தாயகமானால் என்ன புலமானால் என்ன எமது மக்களில் மூன்றில் ஒன்றுதான் ஏதோ ஒரு விதத்தில் போராட்ட பங்காளிகளாய் இருந்தனர்.இது மிகவும் கவலையானது.எமது பலத்தையே ஒன்றாக்க முடியவில்லை.இதுவும் இனத்தின் துயர்தான்.
போராட்ட வளர்ச்சி துரோகங்களால் சாண் ஏற முலம் சறுக்கிற்று.
 
தொடரும் 
Link to comment
Share on other sites

எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
தொடரும்      
Link to comment
Share on other sites

எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
தொடரும்      

 

அந்த மொழி பழகிறது சாதாரணம்...நிங்..சொங்..சாம்..சிப் எண்டு தொடங்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ஆசாமி. நல்லதே நடக்கும் உங்களுக்கு என்று நம்பிக்கையோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

உங்கட கதையை தொடர்ந்து வாசிச்சுக்கொண்டு வாறன்.

உங்கட நிலையை என்னால் மிக நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

 ஏனென்றால்...நானும் இவற்றையெல்லாம் கடந்து வந்தவன்தான். இலக்கை அடையும்வரை என்ன நடக்கும் என்று சொல்ல இயலாது.

துணிந்தவனுக்கு எல்லாமே துரும்புதான்.

தங்களின் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கடந்த புதன் கிழமை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நானும் மோகனும் போயிருந்தோம்.அது ஒரு கிறிஸ்தவ நிறுவனம் . அந்நிறுவனம் ஐ நா பதிவுள்ள அகதிகளுக்கு மாதாமாதம் சிறு தொகை பணமும் சில பொருட்களும் தருவார்கள்.நாங்கள் அதை பெற போயிருந்தோம்.   அங்கு எமது நாட்டு அம்மா ஒருவரையும் தற்செயலாய் சந்தித்தோம்.அந்த அம்மாவின் கணவர்,இருபிள்ளைகள் உள்ளீடாய் ஏழு பேர் சிறிலங்கா இராணுவத்தின் செல் வீச்சில் தேவிபுரத்தில் படு கொலை செய்யப்பட்டனர்.அவரும் மிகுதி குடும்பத்தினருடன் இங்கு வந்திருக்கிறார்.அந்த அம்மா புலிகளின் சமையல் கூடம் ஒன்றில் பதினோரு வருடம் வேலை செய்திருக்கிறார்.அதை அந்த அம்மா இப்படிச் சொன்னார் தன்ர போன பிறப்புப் நல் பயனால அந்தப்பிள்ளைகளுக்கு ( புலிகளுக்கு)சமைச்சுப்போடுற பாக்கியம் கிடைச்சது என்றா.அவ அதை எப்படி உணர்ந்தா என்பதை அவவின் முகத்தில் இருந்து நான் அறிந்தேன்.ஆனால் என் எழுத்து எவ்வளவு விளங்கப்படுத்தியிருக்குமோ தெரியவில்லை.அந்த அம்மாவின் ஒரு பிள்ளை இத்தாலியில் வாழ்வதையும் அவன்தான் தங்களை பார்ப்பதையும் சொன்னா . இரண்டு பேரப்பிள்ளைகள் இத்தாலியில் இருப்பதாயும் ஆனால் அந்தப்பிள்ளைகள் தமிழ் கதைக்காது என்றும் கவலைப்பட்டா.  
 
தொடரும் 
Link to comment
Share on other sites

நாளைக்கு வருஷம் பிறக்கப்போகுது.இன்றைக்கு எங்கட மண்ணில வித்தியாசமான குதுகலம் இருக்கும் . இங்க எல்லாம் ஒரே மாதிரித்தான்.இணையத்தில எங்கட மண்ணில என்ன நடக்குது என்று பார்ப்பமென்றால் உதயன் காரியாலம் தாக்கப்பட்ட செய்திதான் கிடக்கு.நானும் ஊடகத்தில வேலை செய்ததால எனக்கு இன்னும் ஒருதடவை நெஞ்சில குத்திச்சு.முழு இராணுவ ஆட்சி நடக்கிற மண்ணில வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இதுக்குள்ள கொஞ்சப்பேர் (அடிவருடிகள்) அபிவிருத்தி என்று பேப்பே காட்டினம்.அரசாங்கத்தின்ர அராஜகத்தை மறைக்க நாடகம் ஆடினம்.சர்வதேசம் வழமை மாதிரி பார்வையாளராய் மட்டும் இருக்கு.  

 

 

இந்த நாட்டில இலங்கையை மாதிரி இரண்டு மடங்கு சனம் இருக்கு ஆனால் இலங்கையை விட அமைதி இருக்கு. நாங்கள் தங்கி இருக்கிற இடம் நாட்டுப்புரமும் இல்லை டவுனும் இல்லை. இங்கையும் கன ஆம்பிளைகள் மோட்டச்சையிக்கில்லில கூட ஆக்களை காசுக்கு ஏத்தி இறக்குவினம்.பொம்பிளைகள் இரவில எல்லாம் தனிய திரியுங்கள்.போலீஸ் காரங்கள் சரியான இறுக்கம். இந்தியா ஆட்கள் கடை வைச்சிருக்கினம்.எங்களுக்குரிய சாமான்கள் அங்க வாங்கலாம் .பருப்பு ,பப்படம், மிளகாய்த்தூள் அப்பிடியான சாமான்கள்.இன்றைக்கு அங்க போற பிளான் இருக்கு.டாவினும் வாற என்டவன் அதால அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறம்.நேற்று மழை பெய்தது.மீனும் விழுந்தது.சின்ன மீன் எங்கட ஊரில பார்த்த மீனுகள் மாதிரி இல்லை.ஆனால் சந்தையில எல்லா மீனும் வாங்கலாம்.இன்றைக்கு ஒடியல் மா வாங்கிற நோக்கம் இருக்கு.
 
தொடரும்      

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.