Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபை தேர்தல்: நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பு ஆலோசனை!

Featured Replies

 

மாகாணசபை தேர்தல்: நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பு ஆலோசனை!

854af9f6-19bd-4214-b549-9a0469de3f3f1.jp

 

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை நிறுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு உறுதியளித்துள்ளது. திட்டமிட்டபடி தேர்தல் இடம்பெறுமென்று அமைச்சர்களான தினேஷ்  குணவர்தன, டலஸ் அழகப்பெரும போன்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் முக்கிய சில தலைவர்கள் நீதியரசரை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின்போது ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் போட்டியிட தான் விரும்பவில்லை என்றும், பொது வேட்பாளராக அனைவரும் ஏற்றுக்கொண்டால் அது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பொது முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையேயும் இணக்கப்பாடு ஏற்படும் சூழலும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா போட்டியிடலாமென எதிர்வு கூறப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பொது முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் முதலமைச்சராக வருபவர் அரசியல், பொருளாதார துறையில் வல்லமை உள்ளவராகவும் அமையவேண்டியது இன்றியமையாததாகும். அந்த வகையில் பொது முதலைச்சர் வேட்பாளார் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை எடுக்கமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் மற்றொரு முக்கியஸ்தர், பொது வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=854af9f6-19bd-4214-b549-9a0469de3f3f

 

இவர் ஒரு நல்ல தேர்வாக இருப்பார். கூட்டமைப்பின் மிகச் சிறந்த நகர்வு இது (செய்தி உண்மையாக இருக்குமாயின்)

மிக சரியான தெரிவாக இருக்கும் .

இது உண்மையான தகவல் எனில். மிகவும் சிறந்த ஒரு தெரிவு.

நேர்மையான துணிச்சலான மனிதர். இந்த செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது.ஆனால் கூட்டமைப்பு இந்தச் செய்தியை உண்மையாக்க வேண்டும்

 

இவர் தமிழர் தரப்பால் முன்னிலைப்படுத்தப்பட்டால் அது தற்போதைய நிலையில் மிகச் சிறந்த தெரிவாக இது இருக்கும். குறிப்பாக மாவையுடன் ஒப்பிடும் பட்சத்தில் இருவருக்குமிடையில் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் இருக்கிறது

 

அத்துடன் கட்சி சாராத ஒருவரை நியமிப்பதன் மூலம் உள்கட்சி குத்து வெட்டுக்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான தகவல் எனில். மிகவும் சிறந்த ஒரு தெரிவு.

 

சரியான தெரிவு, நிறையான முடிவு.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதியரசர் விக்னேஸ்வரன் என்ன ஒரு பொம்மையை கொண்டுபோய் வச்சு வீட்டு சின்னத்தில TNA எண்டு நிறுத்தினாலும் அது தான் வட மாகானத்தில வெல்லும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெற இருக்கும் வடமாகாண சபைத்தேர்தலில் ஒய்வு பெற்ற நீதியரசர் 

விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செயப்படும் பட்சத்தில் 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது ஆதரவை அவருக்கு வழங்கி 

அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும் என்பது 

எனது தாழ்மையான வேண்டுகோள் .

 

முதலமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் டக்ளஸ் போன்றவர்களுக்கு 

ஒரு ஆசனம் கூடக் கிடைக்க அனுமதிக்கக் கூடாது

 

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் விக்னேஸ்வரன் சரியான தேர்வுதான். எனவே தமிழ்க் கட்சிகள் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு ஒன்றாக வேலை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்ல தெரிவு என்று சொல்லுறீங்களே தவிர.. எந்த வகையில்  என்று யாரும் சொல்லமாட்டேங்கிறீங்க..???!

 

விக்னேஸ்வரனைப் பற்றி மக்களுக்குப் பெரிதும் தெரியாது..! இந்த நிலையில் கூட்டமைப்பு இவரை முன்னிறுத்தி வாக்குக் கேட்டு மக்களிடம் வந்தால் மக்கள் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதிலும்.. கூட்டமைப்புக்கு விழும் வாங்கே அவருக்கு வரும்..!

 

அதேவேளை.... மக்களுக்கு இவரின் தெரிவினால் உள்ள நன்மை.. தீமைகளை பட்டியல்படுத்திச் சொல்வது நல்லம்..! அப்போது தான்.. கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்ட மக்களும்.. ஒரு தெளிவோடு இவரை மக்களின் பிரதிநிதியாக்க வகை செய்யும். அதுதானே தேர்தல் ஜனநாயகம்..! எமக்கு வடக்கு முஸ்லீம்களின் வாக்குகளையும்.. ஈபிடிபி ஒட்டுக்குழு.. மற்றும்.. அரசாங்கக் கட்சி.. ஐதேக கட்சி வாக்குகளையும் கவர வேண்டிய தேவை உள்ளது. கூட்டமைப்புத் தொடர்ந்து அதன் ஆதரவு வாக்களர்களை நோக்கி மட்டும் அரசியல் செய்யாமல்.. மற்றைய மக்களையும் அதற்கு ஆதரவாகத் திருப்பும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதுவே பலம். அப்படிச் செய்திருந்தால் தென் தமிழீழ மாகாண சபை இன்று தமிழ் மக்களின் கையில் இருந்திருக்கும்..! :icon_idea:

இதற்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை.

சிறிலங்கா அரசு ஒரு நீதியரசர் விவகாரத்தில் ஏற்கனவே உலகின் முன் அவமானப்பட்டு நிற்கிறது. தமிழ் மக்கள் சார்பிலும் ஒரு நீதியரசரைக் கொண்டு மாகாணசபையின் உரிமைச் சட்டங்கள் பற்றி மோதவிடுவது சிறிலங்காவை மேலும் சங்கடத்திற்குள் தள்ளும்.

  • தொடங்கியவர்

கடந்தகால செய்திகளின் படி கூட்டமைப்பின் பல தலைகளை விட சட்டம், விடயம் தெரிந்தவர். சமூகங்களுக்கிடையில் இண்க்கத்தை கொண்டுவரக்கூடியவர்.சில கூட்டமைப்பரை விட தமிழரின் உரிமை விடையத்தில் தெளிவான கொள்கைகளை கொண்டவர்.  பலரைவிட நேர்மையாக பேசுபவர்.  பல கூட்டமைப்பாரைவிட பதவி அங்கலாய்ப்பு குறைந்தவர்.எல்லாவற்றையும் விட வெளியில் இருந்து வருவதால் போட்டிகளை ஆரம்பித்து வைப்பார் பதில் கூற வெண்டிய நிலையில் இருப்பார்கள். கூட்டமைப்பு இப்போது மக்களுக்கு சேவைக்கு தம்மை அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும், கட்சி அங்கத்தவர்களுக்கு பதவிக்கு அடிபட முடியாது. 

முன்னாள் நீதியரசர் பொது வேட்பாளராக தான் நிற்பேன் என்று நிபந்தனை போடுவதைப் போல, ********** **** நிறைந்த கம்பன் கழகம் போன்ற அமைப்புக்களின் கௌரவ பதவிகளிலிருந்தும் விலக வேண்டும். 

 

நியானி: காட்டமான சொற்கள் தணிக்கை

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அவர்வெளியிடும் கருத்துக்கள் எப்போதும் துணிச்சலானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருக்கிறது.தற்போதும் பொதுவேட்பாளாராக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதன்படி கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் ஏகபோக ஆளுமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.செய்தி உண்மையெனில் மிகச் சிறந்த தேர்வு.அது மட்டுமல்ல வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு நமது பிரச்சினைகளைத் தெளிவான முறையில் விளக்கமளிக்கக் கூடியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.