Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சிலர்கள் மட்டும் இந்த குறுங்கதையை வாசிக்கவும்,, மற்றவர்களுக்கு நோ யூஸ்,,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்'.

 

மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,, 'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன,,, 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டன்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்,

 

இருந்தாலும்,, இந்த காபி ஒன்றே போதும்,, அவளுடன் ஆவலுடன் வாழ,,, கலக்கிட்டடி காப்பி,, என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்,, கல்யாணமும் முடிந்து விட்டது,, முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு,, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்" ,,

 

(சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்,,) "நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்,, அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு,,, மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற,, "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??" மனைவியும் பயங்கர கோபத்துடன்.. "அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்,,எனக்கு பொய் சொல்ல தெரியாது,, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"

 

 

நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

 

# படித்ததில் எடுத்தது#

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் சொந்தக்காரர்களால் நிட்சயிக்கப்படுகிறது அதுவும் ஆயிரம் பொய் சொல்லி நிட்சயிக்கப்படுகிறது

 

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக ஒரு துணையைத் தேடிப்பிடிக்க முடியாவிட்டால் சொந்தக்காரர்கள் தேடித் தருவது நொள்ளையோ நொட்டையோ, சொத்தையோ ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே! சுபேஸ் போகின்ற போக்கைப் பார்த்தால் தன்னால் ஒருத்தியைத் தேடிப் பிடிக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார் போலிருக்கே! இனிக் குண்டு கத்தரிக்காயோ அல்லது நெட்டைப் புடலங்காயோ வந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று லபக்கென்று பிடிக்கவேண்டியதுதான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேறை வழியில்லை சுபேஸ். எல்லாம் பாத்தால் கன்னிப் பையனாகவே இருக்கவேண்டியதுதான். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு வரப்போற பெண் பத்தினியா, அடக்கமா, உலக அழகியா, சிவப்பா இருக்கணும்ன்னு நினைக்கும் பொடியன்கள், அதற்கு தான் எல்லாவிதத்திலும் தகுதியானவனா என என்றும் நினைப்பதில்லை.

 

தான் குரங்கு மாதிரி இருந்தாலும், பெண் கிளி மாதிரி இருக்கணும்னு நினைச்சி தரகரோட வருவானுக பாருங்கோ, அப்படியே செகிளை திருப்பி, ஓங்கி அப்பு அப்புன்னு அப்பணும்ன்னு போல இருக்கும். :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னங்கா ராஜா அண்ணா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு..... செகிள திருப்பனும் அது இதுன்னிட்டு.... இப்பவே ஒரு பக்க கன்னம் வலிக்கிது...:(:D

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு வரப்போற பெண் பத்தினியா, அடக்கமா, உலக அழகியா, சிவப்பா இருக்கணும்ன்னு நினைக்கும் பொடியன்கள், அதற்கு தான் எல்லாவிதத்திலும் தகுதியானவனா என என்றும் நினைப்பதில்லை.

 

தான் குரங்கு மாதிரி இருந்தாலும், பெண் கிளி மாதிரி இருக்கணும்னு நினைச்சி தரகரோட வருவானுக பாருங்கோ, அப்படியே செகிளை திருப்பி, ஓங்கி அப்பு அப்புன்னு அப்பணும்ன்னு போல இருக்கும். :lol:

 

அப்பிடிச் சொல்லுங்கோ! என‌க்கு இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஒரு த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர் இருந்தார். தொந்தியும் க‌ருமை நிற‌மாக‌வும் இருந்த‌ ந‌ண்ப‌ர் மூன்று பெண்க‌ளை ஒரு இந்திய‌ விசிட்டின் போது பார்த்து விட்டு வெறுங்கையோடு வ‌ந்தார். ஏனெண்டு கேட்க‌ ஒரு பெண்ணுக்கு மூக்குக் கோண‌ல் என்றார், இன்னொண்டுக்கு ப‌ல் கொஞ்ச‌ம் பெரிசென்றார். நான் குளிர் பிய‌ரை உறுஞ்சிக் கொண்டே கூலாக‌ திருப்பிக் கேட்டேன்: "உங்க‌ அபார்ட்மென்டில‌ முக‌ம் பார்க்கிற‌ க‌ண்ணாடியே கிடையாதோ?"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னங்கா ராஜா அண்ணா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு..... செகிள திருப்பனும் அது இதுன்னிட்டு.... இப்பவே ஒரு பக்க கன்னம் வலிக்கிது... :(:D

 

 

தனக்கு வரப்போற பெண் பத்தினியா, அடக்கமா, உலக அழகியா, சிவப்பா இருக்கணும்ன்னு நினைக்கும் பொடியன்கள், அதற்கு தான் எல்லாவிதத்திலும் தகுதியானவனா என என்றும் நினைப்பதில்லை.

 

தான் குரங்கு மாதிரி இருந்தாலும், பெண் கிளி மாதிரி இருக்கணும்னு நினைச்சி தரகரோட வருவானுக பாருங்கோ, அப்படியே செகிளை திருப்பி, ஓங்கி அப்பு அப்புன்னு அப்பணும்ன்னு போல இருக்கும். :lol:

 

அது ஒண்டும் இல்ல சுண்டல்..ராஜா வன்னியன் அண்ணா அஞ்சாறு பொம்பிளை சகோதரத்தோட பிறந்திட்டார் போலக்கிடக்கு..அதுகளை கரை சேர்த்த கடுப்பில இங்க பொரிஞ்சு தள்ளுறார்..  :D

 

 

 

 

ஹையோ ஹையோ....

என்ன குய்யோ முறைய்யோ எண்டு ஒருத்தர் இங்க குத்தி முறியிறார்..  :lol:

 

 

 

திருமணம் சொந்தக்காரர்களால் நிட்சயிக்கப்படுகிறது அதுவும் ஆயிரம் பொய் சொல்லி நிட்சயிக்கப்படுகிறது

கல்யாணம் கட்டினவங்க இதைக் கேட்கறதுக்குப் பதிலா தும்பைப் பூவில் தூக்குமாட்டிட்டு சாகலாம்... :D

Edited by சுபேஸ்

காதலிக்கும் பொழுதும் பொய் சொல்லித்தான் காதலிக்கிறார்கள். காதல் கலியாணமோ பேசி முடித்த கலியாணமோ பொய்கள் கலந்திருக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக ஒரு துணையைத் தேடிப்பிடிக்க முடியாவிட்டால் சொந்தக்காரர்கள் தேடித் தருவது நொள்ளையோ நொட்டையோ, சொத்தையோ ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே! சுபேஸ் போகின்ற போக்கைப் பார்த்தால் தன்னால் ஒருத்தியைத் தேடிப் பிடிக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார் போலிருக்கே! இனிக் குண்டு கத்தரிக்காயோ அல்லது நெட்டைப் புடலங்காயோ வந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று லபக்கென்று பிடிக்கவேண்டியதுதான் :lol:

அந்தக் கஸ்டம் எனக்கில்லை அண்ணா... என்ட கார்  சிங்கிள் சீட் கார் அண்ண..பயணத்தில டபிள்சுக்கு இடமில்லை.. :D

வேறை வழியில்லை சுபேஸ். எல்லாம் பாத்தால் கன்னிப் பையனாகவே இருக்கவேண்டியதுதான். :D

கன்னிப்பையனாக இருந்தால்தான் மனம் "கன்னி"ப்போகாமல் இருக்க முடியும் அக்கா... :D

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒண்டும் இல்ல சுண்டல்..ராஜா வன்னியன் அண்ணா அஞ்சாறு பொம்பிளை சகோதரத்தோட பிறந்திட்டார் போலக்கிடக்கு..அதுகளை கரை சேர்த்த கடுப்பில இங்க பொரிஞ்சு தள்ளுறார்..  :D

 

அப்படியொன்றும் கொடுப்பினை இல்லை.  இவை சாதாரணமாக கல்யாண சந்தையில் நடப்பவையே.

 

பொடியன்களின் அல்ட்ரா அலட்டல்களை எழுத ஆரம்பித்தால் நாள் போதாது. கல்யாண தரகர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது பல விடயங்கள் அறிந்து கொண்டதை எழுதினேன். :rolleyes:

 

'கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்' என பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் பொழுதும் பொய் சொல்லித்தான் காதலிக்கிறார்கள். காதல் கலியாணமோ பேசி முடித்த கலியாணமோ பொய்கள் கலந்திருக்கும்.

இதுக்குதான் கால்கட்டு கைக்கட்டுக்கு அலையாமல் நம்மளை மாதிரி ப்றியா இருக்கணும் எண்டுறது.. :D

அப்படியொன்றும் கொடுப்பினை இல்லை.  இவை சாதாரணமாக கல்யாண சந்தையில் நடப்பவையே.

 

பொடியன்களின் அல்ட்ரா அலட்டல்களை எழுத ஆரம்பித்தால் நாள் போதாது. கல்யாண தரகர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது பல விடயங்கள் அறிந்து கொண்டதை எழுதினேன். :rolleyes:

 

'கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்' என பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

பச்சை முடிஞ்சுபோச்சு ராஜவன்னியன் அண்ணா..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணப் பொடியன்களின் அலட்டல்கள் ஒருபுறமென்றால், அவரின் பெற்றோர்கள் மற்றும் லொட்டு லொசுக்குகள் செய்யும் அலப்பறை & கூத்துக்களை சகித்து, பொறுமையாக் இருக்கும்  பெண்ணின் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

 

அதற்காகவே நான் இன்றும் திருமணமான சில பெண்களிடம் சொல்வதுண்டு, புத்திசாலித்தனமாக நடந்து கொல், பிடி இனி உன் கையில் என்று. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ நாம் பெற்ற *ன்பம் வையகம் பெறட்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவுண்ட மணி பொண்ணு பாக்க போக அங்க ஒராள் mixture சாபிட்டிடு இருப்பாரே.... அந்த யாபகம் தான் வந்திச்சு.....

அந்த காமடி தெரிஞ்சவங்க ஒருக்கா போட்டு விடுங்கப்பா..... :D

கல்யாணப் பொடியன்களின் அலட்டல்கள் ஒருபுறமென்றால், அவரின் பெற்றோர்கள் மற்றும் லொட்டு லொசுக்குகள் செய்யும் அலப்பறை & கூத்துக்களை சகித்து, பொறுமையாக் இருக்கும் பெண்ணின் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

அதற்காகவே நான் இன்றும் திருமணமான சில பெண்களிடம் சொல்வதுண்டு, புத்திசாலித்தனமாக நடந்து கொல், பிடி இனி உன் கையில் என்று. :rolleyes:

Edited by SUNDHAL

:D  :D  :D இதுவா விஷயம் hahaha 

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கஸ்டம் எனக்கில்லை அண்ணா... என்ட கார்  சிங்கிள் சீட் கார் அண்ண..பயணத்தில டபிள்சுக்கு இடமில்லை.. :D

சிங்கிள் சீற் காரை விட்டுவிட்டு நம்ம லண்டன்காரர் மாதிரி ஒரு தடல்புடல் கலியாணம் நடாத்தினால் நாங்களும் வந்து குட்டிகளை மேய்வோமில்ல..

<_<

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்களும் வந்து குட்டிகளை மேய்வோமில்ல..

<_<

 

க‌வ‌ன‌ம் கிருப‌ன்! மேக்க‌ப் அயிட்ட‌ங்க‌ளில‌ எல்லா "பார‌ உலோக‌ங்க‌ளும்" (heavy metals) இருக்குதாம்! மேயும் போது நாக்குக்கு கொண்ட‌ம் போட்டால் புற்று நோயிலிருந்து த‌ப்ப‌லாம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

தடல் புடலாக கலியாணம் செய்வாங்கள் பிறகு இரண்டு வருசத்தில் தடல்புடலாக விவாகரத்தும் செய்கிறார்கள் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.