Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள் [ படங்கள் ]

Featured Replies

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் நேற்று    23 ஆம் தேதி  அன்று பொன் சிவகுமாரன் அவர்களின் 39 அவது நினைவு நாளையொட்டி  10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.

ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணை பற்றிய பதாதைகளும் மற்றும் தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் மாணவர்கள் கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய இளவரசர் அவர்களும் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார் . பிரித்தானியாவிலுள்ள 10 க்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னதாக பிரசித்தி பெற்ற சுற்றுலா பயணிகள் கூடுதலாக காணப்படும் இடமான Piccadly Circus இல் மாணவர்கள் பலர் சேர்ந்து மேற்கத்தைய நடனத்துடன் சார்ந்த பாணியில் திடிரென்று வேற்றின மக்கள் முன்னால் தோன்றி நடனமொன்றை இடம்பெற செய்து அதன் மூலமாக ஈழப்பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை பரப்பினர். அவர்களின் நடன நிகழ்வை ஒட்டி மற்றும் சில மாணவர்கள் சுற்றியுள்ள சுற்றுலா பயணிகளிற்கும் மற்றும் வேற்று இன மக்களிற்க்கும் ஈழப் பிரச்சனையைப் பற்றிய துண்டு பிரசுரங்களை அளித்தனர்.

ஆர்பாட்டத்தின் போது தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப்பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் மற்றும் சிறுவர்களின் கைப்பட உருவாகிய மனுக்களும் பிரதமர் மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நன்றியுரையுடனும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வீர வசனத்துடன் நிறைவேறியது.

படங்கள் கிழே

http://dinaithal.com/tamilnadu/srilanka/16303-tamil-student-uprising-that-took-place-in-london-with-perelucci-day.html

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் சிவகுமாரன் கற்பனை கூட பண்ணி பார்திருக்க மாட்டான்.  நல்லாயிருக்கு

 

Edited by sathiri

இதையெல்லாம் சிவகுமாரன் கற்பனை கூட பண்ணி பார்திருக்க மாட்டான்.  நல்லாயிருக்கு

 

சகோதரா! தெருக்கூத்து சிவகுமாரன் காலத்திலும் இருந்தது.  இது இன்னொரு வடிவம். இவர்கள் இலங்கையில் பிறந்திருக்க மாட்டார்கள். அங்கே வாழும் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக செய்வதை எங்களை போல ஒன்றும் செய்யாமல் இருந்து விமர்சனம் செய்ய அருகதை இல்லை. தவிர இந்த இளையோர்கள் பிழை என்றால் அதில் பெரும் பங்கு எங்களையே சாரும் . நாங்கள் தானே வழி காட்டியாக இருந்தோம். :) 

வரவேற்கப்படவேண்டிய நல்லதொரு முயற்சி. தமிழீழ போராட்டம் இந்த தலைமுறையுடன் அழிந்துவிடும் என்ற‌ சிங்கள ஆட்சியாளர்களது எதிர்பார்ப்பில் மண்ணை தூவும் இளையோருக்கு எனது மனந்திறந்த பாராட்டுக்கள்.
வன்முறை போராட்டமோ, அமைதிவழிப்பட்ட போராட்டமோ பிரச்சாரம் மிகவும் முக்கியம்.

நான் எப்பவோ எழுதிவிட்டேன் குத்தாட்டம் போடத்தான் இவர்கள் போகின்றார்கள் என்று விளங்கினால் சரி .

அதுவும் கொலைவெறி ஸ்டைலை கொப்பி பண்ணி ,இவர்கள் ஒன்றல்ல மூன்று ,நாலு தமிழிழம் எடுத்துவிடுவார்கள் .

பொதுவாக ஆசியாவில் காய்ந்தோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்..

எங்கட நாசமறுந்த தமிழீழத்தில் குருத்தோலை எழ காய்ந்தோலைகள் வயிறெரிந்த்து கரிச்சு கரிச்சு கொட்டுதுகள்.

நான் எப்பவோ எழுதிவிட்டேன் குத்தாட்டம் போடத்தான் இவர்கள் போகின்றார்கள் என்று விளங்கினால் சரி .

அதுவும் கொலைவெறி ஸ்டைலை கொப்பி பண்ணி ,இவர்கள் ஒன்றல்ல மூன்று ,நாலு தமிழிழம் எடுத்துவிடுவார்கள் .

 

போராடுறன் எண்டு போய் எதையுமே செய்யாமல் இந்தியாவில் நிண்டவை எதையாவது செய்வம் எண்டு வெளிக்கிட்டவையை பார்த்து விமர்சிக்க மட்டும் தானே முடியும்..  கையிலை சிறீலங்கன் "303" வைச்சிருந்த காலத்திலை செய்யாமல் விட்டு போட்டு இப்ப புலம்பி என்ன பயன்..?? 

 

முடிஞ்சா முன்னுக்கு வந்து வளிகாட்டுங்கோ... இல்லையா இளைப்பாறுங்கோ...  முட்டையிலை மயிர் புடுங்காதேங்கோ... 

எங்கட போராட்டம் போலதானே எரித்திரியன்களும் போராடுகிறார்கள்...??

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவோ எழுதிவிட்டேன் குத்தாட்டம் போடத்தான் இவர்கள் போகின்றார்கள் என்று விளங்கினால் சரி .

அதுவும் கொலைவெறி ஸ்டைலை கொப்பி பண்ணி ,இவர்கள் ஒன்றல்ல மூன்று ,நாலு தமிழிழம் எடுத்துவிடுவார்கள் .

 

 

வேணுமென்றால் அடுத்த முறை சுந்தராம்பாளின் பாட்டுக்கு ஒரு ஆட்டம் போடச்சொல்லி கேட்கலாம். :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்கட போராட்டம் போலதானே எரித்திரியன்களும் போராடுகிறார்கள்...??

 

 

 

அவர்களுக்குள்

இவர்கள் பிறக்கலையே.......... :(

மட்சிற்குள் ஓடியது ,எரித்திரியா,தென்னாபிரிக்கா  போராட்டங்களில் போய் கொடியுடன் நின்றது நாங்கள் எண்பதுகளிலேயே செய்துவிட்டோம் .மொரிசியஸ் தீவிற்கு அரச மரியாதையுடன் இன்னொரு நாட்டு அதிபருக்குரிய மரியாதையுடன் உமா பொய் வந்தார் .அப்பவே டெல்கியில் அலுவலம் திறந்து தமிழிழதிற்கான லோபியிங் அனைத்து நாட்டு தூதரங்களில் தொடங்கிவிட்டோம் .

ஆயுதம் ,வன்முறை ,கொலை ,கொள்ளை என்று போராட்டம் நடத்தி அத்தனையும் தொலைத்து முப்பது வருடங்களுக்கு முதல் நாங்கள் தொடங்கியதை இன்று தொடங்குகின்றீர்கள் .அதை வேறு பெருமையாக பேசிக்கொண்டு :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளையோர்களே சேதி ஒன்று கேளுங்கள்..

 

உங்கள் மூதாதையோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புலிக்கொடி பிடித்து விட்டார்கள். இமயம் முதல் இந்தோனிசியா வரை ஆட்சி செய்துவிட்டார்கள். உங்கள் மொழி ஏழ்கடல் தாண்டிப் பரவியுள்ளது. உங்கள் மதம் பஞ்ச கண்டங்கள் தாண்டிப் பரவி உள்ளது. இத்தனை சிறப்பும் இருக்க.. உங்களுக்கு எதுக்கு அந்தக் குட்டித்தீவில் ஒரு குட்டித் தமிழீழம்.

 

எனவே உங்கள் போராட்டங்களை.. சாரி பப் ஆட்டங்களை.. உடனடியாக நிறுத்திவிட்டு யுனில போய் ஏதாவது செய்ய இருக்கோண்டு பாருங்க. அதுக்கு மேல.. எங்கட உமா இந்து சமுத்திரத்தை மீன்பிடிக்கப்பலை வைச்சு கட்டி ஆண்டவர். எங்கட உமா.. சங்குமார்க் ஜட்டியோட கிரிக்கெட் மைதானத்தில ஓடினவர். எங்கட உமா.. மாலைதீவையே பிடிச்சவர். அப்படியான வீர தீரர்களின் வழியில் எல்லாம் போய் நாம் தமிழீழம் கண்டு அதை பெருந்தன்மையோடு சிங்களவர்கள் கேட்க கொழும்பில் ஒரு வதிவிட உரிமைக்காகவும்.. வெளிநாடுகளில் வதிவிட உரிமைக்காகவும் விட்டுக்கொடுத்திருக்கிறோம்.

 

இப்பேற்பட்ட வல்லல்கள் நாம் சொல்வதைக் கேளுங்கள். உந்தப் போராட்டம் எமக்கு அவசியமில்லை. ஏனெனில் இந்தப் பூமிப் பந்தே இப்பொழுது எங்களின் சொந்தம். இப்பூமியில் எங்கே தமிழரில்லை. எங்கே தமிழ் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற இனம் சொன்னது போல உலகத்தையே சொந்த ஊராக்கி உள்ளது. இது புரியாமல்.. புலிக் கொடியாம் புலிக்கொடி தூக்கிக்கிட்டு திரியுறீங்க. உங்கள் இளமைக் காலத்தில் செய்ய எவ்வளவோ இருக்குது. அதுகளை விட்டிட்டு உதுகள் எதுக்கு உங்களிற்கு..! இதைத்தான் பிரபாகரனிடம் 80களிலேயே அறிவுபூர்வமாக சிந்திச்சு.. எடுத்துச் சொன்னனாங்கள். அவர் அதுகளைக் கேட்காமல் இப்போ இலட்சக்கணக்கான மக்களையும்.. பலியிட்டு தானும் ஜட்டியோட பலியாகிப் போயிட்டார்.

 

இது தேவையா..??! உலகத்தை விட்டு நிலாவிலும் தமிழீழம் கேட்பது அபந்தம். எனவே உடனே இதனை நிறுத்திவிட்டு கிளப்புகளில் போய் இந்தக் குத்தாட்டத்தை போட்டால் 12 மணிக்குப் பிறகு பல பிகருகள் மடியுங்கள்..! அப்படியே அதை என்ஜோய் பண்ணிட்டுப் போங்க. அதுதான் புத்திசீவிகளாகிய எமது அறிவுரை உங்களுக்கு..!

 

இதனை அருமை பெருமை மிக்க யாழ் களத்தினூடு பிரகடனப்படுத்துகிறோம். கேட்பதும் கேட்காமல் விடுவதும் உங்க அப்பா அம்மா விருப்பம்.

 

இப்படியான காமடி ரேஜ்சுக்கு போய்ட்டுது எங்கள் போராட்டம்...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது போராட்டங்களை உலகுக்கு வெளிப்படுத்த பல முறைகள் இருக்கிறது. நான் பெரிது, நீ பெரிது என்று போட்டியிடாமல், செய்பவர்களையும் தூற்றாமல் ஒவ்வொரு தமிழனும் தங்கள் தங்களது கடமைகளை ஒழுங்காகச் செய்தாலே நன்றாக இருக்கும். பலன் கிடைக்குதோ இல்லையோ எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைகள் இருக்கிறது. சிங்களவர்கள் தங்களுக்குள் கருத்துக்களில் அடிபட்டாலும் தமிழனை அழிக்கும் போது ஒருமித்து செயல்படுகிறார்கள். சிங்களவர்களிடம் எனக்குப் பிடித்தது அவர்களுக்கு இடையே உள்ள இன உணர்வு. ஆனால் தமிழர்களிடம் இருப்பது ?

மட்சிற்குள் ஓடியது ,எரித்திரியா,தென்னாபிரிக்கா  போராட்டங்களில் போய் கொடியுடன் நின்றது நாங்கள் எண்பதுகளிலேயே செய்துவிட்டோம் .மொரிசியஸ் தீவிற்கு அரச மரியாதையுடன் இன்னொரு நாட்டு அதிபருக்குரிய மரியாதையுடன் உமா பொய் வந்தார் .அப்பவே டெல்கியில் அலுவலம் திறந்து தமிழிழதிற்கான லோபியிங் அனைத்து நாட்டு தூதரங்களில் தொடங்கிவிட்டோம் .

ஆயுதம் ,வன்முறை ,கொலை ,கொள்ளை என்று போராட்டம் நடத்தி அத்தனையும் தொலைத்து முப்பது வருடங்களுக்கு முதல் நாங்கள் தொடங்கியதை இன்று தொடங்குகின்றீர்கள் .அதை வேறு பெருமையாக பேசிக்கொண்டு :lol:

உவ்வளவும் செய்ததாலைதான் இந்தியா கப்பலிலை வந்த ஆயுதங்களை பிடிச்சு புலிகளிட்டை குடுத்தது...??? :unsure: 

 

நட்டுகடந்த அரசின் ஆரம்ப கூட்டங்களில் இது உலகில் இதுவரையில் காணப்படாத புதிய தத்துவம் என்றார்கள். 

 

இந்த சிறுசுகளின் யுத்திக்கு முன்னால் அது தூசு போலப்படுகிறது.  இரண்டு கூட்டங்களில் இதை செய்தார்களானால், வெளிநாட்டவரின் கவனங்களை எடுப்பது மட்டும்மல்ல,  இது வரையில் காணாத பெரிய ஆர்பாட்டகூடங்களையும் கூடப் போட முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.