Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூலை 83 உன்னை மறப்பேனோ ??

Featured Replies

யூலை 83 உன்னை மறப்பேனோ ??

 

 

1983.A.jpg

 

 

காலம் என்ற காலச்சுவட்டில்

என் நினைவுத்தடங்கள் பல

ஆழப்புதையுண்டு அழிந்தாலும் ,

இந்தமாதமும் இந்த நாளும்

என்மனதின் ஓரத்தில்

ஆழமாய்க்கீறி 

ஆறாவடுவாய் போனது…..


மாம்பழத்தீவை இனவாத

வண்டுகள் அரித்து ,

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

கருக்கட்டிய இனத்துவேச மேகங்கள் ,

உக்கிர இரத்தமழை பொழிந்ததும்

இந்த மாதமே………. 


சிங்கத்தின் வம்சங்கள்

தமிழ் பெண்டுகளை வகைதொகையாயாய்

வேட்டையாடி கொக்கரித்ததும்

இந்த மாதேமே !!!!!!!!

அட பனங்கொட்டைத்தமிழா

நீ எங்கள் அடிமையடா

என்று சொ
ன்னதும் இந்த மாதமே !!!!



அடிமைப்பட்ட தமிழன் (ர்கள் )

ஊரிலே பொங்காது ,

உயிரை மட்டு காப்பாற்ற

உலகெங்கும் பொங்கச் சென்றதும் ,

புலிபிடிக்குது சிங்கம் பிடிக்குது

என்று பொய் சொல்லி

வெளிநாட்டில்

ஒருபகுதி போய்ச்சேர்ந்ததும்

இந்தவருடமே !!!!!!!!!!!!!!!



வல்லிபுரத்தான் கண்ட கனவில்

வசந்தமாய் வந்தவனே

உன்னை நான் எப்படி மறப்பேன் ????????

எல்லோரும் ஒருதிசையில் ஓட

நீ மட்டும் எதிர்திசையில் ஓடினாயடா…..

ஊனை உருக்கி

தமிழன் மானம் காத்தவனே

கந்தகநெடியில் கடுகியே கரைந்தாயே !!!!!!!

ன்னையும் இந்தவருடத்தையும்

நான் எப்படி மறப்பேன் ???????


கோமகன்

5 யூலை 2013

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் யாரும் மறக்கமுடியாத மாதமும் வருடமும்....நன்றிகள் கவி வரிகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் வாழ்வில் மறக்கமுடியாத மாதம்.. அதுசரி.. யார் அந்த வல்லிபுரத்தான் கண்ட வசந்தன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிர்வு 

  • தொடங்கியவர்

தமிழர்கள் யாரும் மறக்கமுடியாத மாதமும் வருடமும்....நன்றிகள் கவி வரிகளுக்கு

 

நன்றி நன்றி புத்தா வருகைக்கும் கருத்திற்கும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

 
கறுப்பு யூலை சிங்களவர்களுடன் என்றுமே சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான செய்தியை சிங்களவர் தமிழருக்கு தெரிவித்து இருந்தார்கள்.அன்றிலிருந்து என்றும் சிங்களவர்கள் மாறப்போவதில்லை.தமிழர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அகிம்சையில் எல்லை கண்ட தந்தை செல்வாவும் ஆயுதத்தில் எல்லை கண்ட பிரபாகரனும் எடுத்த முடிவை விட்டு வேறொரு முடிவை தமிழர்கள் எடுத்து சுதந்திரமாக வாழ முடியுமா என தமிழர்கள் தங்களை தாமே கேள்வி கேட்க வேண்டும்.
 
கவிதைக்கு நன்றி கோமகன்.

 

 

கப்டன் மில்லரின் இயற்பெயர் வல்லிபுரம் வசந்தன்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

சிலர் வாழ்வில் மறக்கமுடியாத மாதம்.. அதுசரி.. யார் அந்த வல்லிபுரத்தான் கண்ட வசந்தன்?

 

உங்களிடம் இருந்து இப்படியான கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை மச்சான் :D :D .

 

 

%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%

 

 

கப்டன் மில்லர் (ஜனவரி 1, 1966 - ஜூலை 5, 1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார்.

 

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

 பல லட்சம் மக்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட காலம். :)

  • கருத்துக்கள உறவுகள்

பலநாட்களின் பின் உங்களிடமிருந்து உணர்ச்சிக் கவிதை. வாழ்த்துக்கள் கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இருந்து இப்படியான கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை மச்சான் :D :D .

தவறு என்னுடையதுதான்.. கப்டன் மில்லர் என்று அறியப்பட்டதால் அந்தப்பெயர் மட்டுமே நினைவில் இருந்தது.. இனிமேல் இயற்பெயரும் நினைவில் இருக்கும்..

தகவலுக்கு நன்றி நுணா..

  • தொடங்கியவர்

 

 
கறுப்பு யூலை சிங்களவர்களுடன் என்றுமே சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான செய்தியை சிங்களவர் தமிழருக்கு தெரிவித்து இருந்தார்கள்.அன்றிலிருந்து என்றும் சிங்களவர்கள் மாறப்போவதில்லை.தமிழர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அகிம்சையில் எல்லை கண்ட தந்தை செல்வாவும் ஆயுதத்தில் எல்லை கண்ட பிரபாகரனும் எடுத்த முடிவை விட்டு வேறொரு முடிவை தமிழர்கள் எடுத்து சுதந்திரமாக வாழ முடியுமா என தமிழர்கள் தங்களை தாமே கேள்வி கேட்க வேண்டும்.
 
கவிதைக்கு நன்றி கோமகன்.

 

 

கப்டன் மில்லரின் இயற்பெயர் வல்லிபுரம் வசந்தன்.

 

 

உங்கள் வரவிற்கும் கருத்துகளுக்கும் மிக்கநன்றிகள் நுணா .

கோ....யாழைப் பொறுத்தவரையிலும் உங்களைப் பொறுத்த வரையிலும்......

அறிந்துகொள்ள புரிந்துகொள்ள,    இன்னும் நிறைய இருக்கு.

இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கின்றேன்...................................................! :)

  • கருத்துக்கள உறவுகள்

யூலை 83 உன்னை மறப்பேனோ ??

 

காலம் என்ற காலச்சுவட்டில்

என் நினைவுத்தடங்கள் பல

ஆழப்புதையுண்டு அழிந்தாலும் ,

இந்தமாதமும் இந்த நாளும்

என்மனதின் ஓரத்தில்

ஆழமாய்க்கீறி 

ஆறாவடுவாய் போனது…..

மாம்பழத்தீவை இனவாத

வண்டுகள் அரித்து ,

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

கருக்கட்டிய இனத்துவேச மேகங்கள் ,

உக்கிர இரத்தமழை பொழிந்ததும்

இந்த மாதமே………. 

சிங்கத்தின் வம்சங்கள்

தமிழ் பெண்டுகளை வகைதொகையாயாய்

வேட்டையாடி கொக்கரித்ததும்

இந்த மாதேமே !!!!!!!!

அட பனங்கொட்டைத்தமிழா

நீ எங்கள் அடிமையடா

என்று சொன்னதும் இந்த மாதமே !!!!

அடிமைப்பட்ட தமிழன் (ர்கள் )

ஊரிலே பொங்காது ,

உயிரை மட்டு காப்பாற்ற

உலகெங்கும் பொங்கச் சென்றதும் ,

புலிபிடிக்குது சிங்கம் பிடிக்குது

என்று பொய் சொல்லி

வெளிநாட்டில்

ஒருபகுதி போய்ச்சேர்ந்ததும்

இந்தவருடமே !!!!!!!!!!!!!!!

வல்லிபுரத்தான் கண்ட கனவில்

வசந்தமாய் வந்தவனே

உன்னை நான் எப்படி மறப்பேன் ????????

எல்லோரும் ஒருதிசையில் ஓட

நீ மட்டும் எதிர்திசையில் ஓடினாயடா…..

ஊனை உருக்கி

தமிழன் மானம் காத்தவனே

கந்தகநெடியில் கடுகியே கரைந்தாயே !!!!!!!

ன்னையும் இந்தவருடத்தையும்

நான் எப்படி மறப்பேன் ???????

 

கவிதைக்கும் நேரத்திற்கும் நன்றிகள்

 

ஒரு நெருடல்

தலைவர்

புலிகள்

கரும்புலிகள்

ஏன் மில்லர் கூட தவிர்க்கப்பட்டது போல்.....................

இவர்கள் இல்லாது வசந்தன் எப்படி???? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு நினைவுக் கவிதை வாழ்த்துக்கள் அண்ணா. :)

  • தொடங்கியவர்

பலநாட்களின் பின் உங்களிடமிருந்து உணர்ச்சிக் கவிதை. வாழ்த்துக்கள் கோமகன்.

 

உங்கள் வரவுக்கும்  கருத்துக்கும் மிக்க நன்றி சுமே .

  • கருத்துக்கள உறவுகள்

மில்லரை  மட்டுமல்ல யூலையையும் நினைவு படுத்திய வரிகள். கரவெட்டி தாமரைக் குளத்தடி  மில்லரின் வீட்டிற்கு போகும் போது  அவரின் அம்மா எங்களை வரவேற்று உபசரித்த நாட்கள் இனிமையானவை.அன்றைய மில்லரின் தாக்குதல் எவ்வளவு முக்கியமாதோ அதேயளவு முக்கியமானது  பிரதான வாசல் காவலரணை  கமலின்  ஆர்.பி்ஜு  தாக்குதலால் தகர்த்தது. மில்லரின்  சக்கை லொறி பிரதான காவலணை  நோக்கி  முன்னேறிக்கொண்டிருக்கும் போதே கமல் ஆர்.பி.ஜு யால் காவலரணை தாக்கியழித்து  லொறி  உள்ளே  செல்ல வழியமைத்துக்கொடுத்திருந்தான். பின்னர்  இன்னொரு சமரில் கமலும்  வீரச்சாவடைந்து விட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

கவிதைக்கும் நேரத்திற்கும் நன்றிகள்

 

ஒரு நெருடல்

தலைவர்

புலிகள்

கரும்புலிகள்

ஏன் மில்லர் கூட தவிர்க்கப்பட்டது போல்.....................

இவர்கள் இல்லாது வசந்தன் எப்படி???? :(

 

உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

 

 

படைத்தவனிடம்

பதில் வராது

தெரியும்

கருத்துக்களத்தில்

தாளம் மட்டுமா கேட்கும்

கேள்விகளும் வரும்

அனுதாபம் வந்ததே

நன்றி

  • தொடங்கியவர்

படைத்தவனிடம்

பதில் வராது

தெரியும்

கருத்துக்களத்தில்

தாளம் மட்டுமா கேட்கும்

கேள்விகளும் வரும்

அனுதாபம் வந்ததே

நன்றி

 

வணக்கம் விசுகு ஐயா ,

 

இந்தக் கவிதையில் வசந்தன் யார் என்ற கேள்விக்கு ஏற்கனவே நுணாவிலானாலும் , என்னாலும் பதில் சொல்லியாகிவிட்டது . இந்தக்கவிதையின் பாடுபொருள் இதில் கருத்து எழுதிய எல்லோருக்கும் புரிந்திருக்க , உங்களின் அவசரகோலத்தில் வந்து விழுந்த கருத்துக்கு என்னால் எனது அனுதாபத்தை மட்டுமே உங்களுக்கு தரவேண்டியதாயிற்று  . எனது ஆக்கங்களுக்கு வருகின்ற சகலதரப்பு விமர்சனங்களுக்கும் நான் இந்தக் கருத்துக்களத்தில் பதில் தந்திருக்கின்றேன் . ஆனால் எகடியங்களுக்கும் விமர்சனம் என்ற போர்வையில் குதர்க்கங்களுக்கும் எனது பதில் அனுதாபங்களே ......... ஏனெனில் நான் நிறையவே இந்த கருத்துக்களத்தில் கற்றுக்கொண்டுள்ளேன் . மேலும் மிக முக்கியமானது எனக்கு தாளங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை .  நன்றி .

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நல்ல பகிர்வு 

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி லியோ .

  • தொடங்கியவர்

 பல லட்சம் மக்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட காலம். :)

 

உண்மைதான் , தமிழர்களின் இருப்பை அறுதியிட்டு சிங்களம் கூறியது இந்த வருடத்திலே . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாத்தியார் :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.