Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முகப்புத்தகத்தில் கிறுக்கும் வரிகளை இங்கும் பதிவிடலாம் என்று...
 
------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
நாசித்துவாரங்களை நனைத்த 
மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை...
 
காவுகொடுத்த குட்டித்தீவு 
காய்ந்து கிடக்கிறது 
குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு...
 
வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு 
நட்பின் வாசத்தை தம் வேரிலும்
துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் 
சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்..
 
நண்பர்கள்
 
கேள்விகள் அற்று 
பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்...
 
31/10/2013

Edited by சுபேஸ்

  • Replies 55
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உன் காதலோடு இருந்த கணமொன்றில் உதிர்ந்த 
கண்ணீர்த் துளியின் ஸ்பரிசங்கள் உறைந்த கன்னங்கள்....
 
உன் நினைவுகளால் நிறைந்த இதயம்... 
 
உதடுகளை அழுத்தும் என்றோ ஒருநாள் நீ கொடுத்த முத்தங்களின் 
ஈரம் ....
 
என்று 
 
வாழ்தல் முழுதும் நிறைந்து கிடக்கின்றன உதிர்ந்து போன நம் காதல் கணங்கள்...
 
காயங்கள் தாங்கிய பிறை நிலாவுடன் 
கடந்து செல்கிறது உன் அருகற்ற இன்னுமொரு நீள இரவு....
 
31/10/2013
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
 
இரவில் தொடங்கி இரவில் முடிந்த நாட்களைப்பற்றிப்பேச...
 
இழப்பையும் துயரத்தையும் எங்கு குவிப்பது என்று தெரியாமல்
விக்கித்திருக்கும் சனங்களைப்பற்றிப்பேச...
 
முகத்திலும் மார்பிலும் வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு 
வெட்டரிவாளுடன் சூழ்ந்த மானுடத்தின் சிறுமைபற்றிப்பேச...
 
ஆட்காட்டிகள் தொலைந்த வயலோரங்களைப்பற்றிப்பேச..
 
தலைமுறைகள் தொலைந்த வீடுகளைப்பற்றிப்பேச...
 
கடவுளர்களும் பிசாசுகளும் இணைந்து செய்த 
இனப்படுகொலையைப்பற்றிப்பேச...
 
கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
 
கவிதைகளாய்...
 
02/11/2013
 
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுபேஸ் நினைவுகள்  நன்றாயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுபேஸ் நினைவுகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி அக்கா யாயினி அக்கா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1452280_10151797772029891_714711805_n.jp

 

மாலைப்பொழுதும்..

வண்ணாத்திப்பூச்சிகளும்..

கவிதைகள் நிறைந்த தேனீரும்...

சில நினைவுகளும்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

 

02/11/2013

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1453421_10151805001519891_1551760862_n.j

 

நள்ளிரவு தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கின்றன
நாலைந்து பேருந்துகளும் நம் காதல் நினைவுகளும்...

வெளியே...
மெல்லிய இந்த இரவை அணைத்தபடி 
புல்லின் நுனியில் பூத்த பனிமலர்கள் சிலிர்க்கின்றன...

தாகத்துடன்
குளிர்காலத்தின் கடைசி இலையையும் உதிர்ப்பதற்க்காய் 

காத்திருக்கின்றன ஓர்க் மரங்கள்...

கோடை இன்னும் துலங்கவில்லை...

ஆயினும்..

உள்ளே..
பின்னிரவில் சாளரங்களை ஈரமாக்கும் பனிக்காற்றை 
ஆவியாக்குகிறது நம் மூச்சின் வெம்மை...

நள்ளிரவிலும்
நமைக்கண்டு நாணிப்போலும்
மேகங்களைப் போர்க்கத்தொடங்குகின்றன 
வெட்கத்துடன நட்ச்சத்திரங்கள்.....

இனியென்ன..
தூங்கிக்கிடக்கும் என் வாலிபங்கள் மீது 
துப்பட்டாவாய் உன் வதனங்கள் படரட்டும்...

உன்னையும் என்னையும் சேர்த்த
காதல் வெளியில் பூக்களாய் நம் முத்தங்கள் சொரியட்டும்...

வா..

இந்த இரவின் ஒவ்வொரு நாழிகையிலும் 
உன் பெயரையும் என் பெயரையும் எழுதிவைப்போம்...

 

05/11/2013

Edited by சுபேஸ்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1460129_10151817838499891_1596988061_n.j

 

முன்பெல்லாம் அவர்களுக்கு ஓவியங்களாய் வனையப்பட்டிருந்தது காலம்....

பின் ஒரு பெருங்கோடையில் எல்லாமே வற்றிப்போனபோது 
மரங்களற்ற வெயில்க்காட்டில் தனித்தார்கள் அவர்கள்.. 

பறக்கத் துடிக்கும் சிறகற்ற பறவை ஒன்றின் இயலாமையுடன் முடங்கிப்போனது வாழ்வு... 

நிறைவின் வசீகரமும் குதூகலமுமாய் துலங்கிய நாட்கள் தொலைந்தன.. 

வாழ்வு வெளியை மூடிக்கவிழ்ந்த இலையுதிர்காலம் முழுவதையும்
நிறைத்தன வலிகள்..

இலைகள் உதிர்த்த சூனியத்தின் தனிமையுடன் 
பொழுது புலர்வதும் சாய்வதுமாயானது நாட்களுக்கு..

கனவுகளற்ற நெடுந்தூக்கத்தில் உறைந்துபோனது வாழ்வு...

பின்...

சுய நலம் மிகுந்த கோடை ஒன்றில்
அட்டூழியம் செய்த பெரும் இடியில் 
எஞ்சிய வாழ்வும் சிலுவையில் அறையப்பட்டது..

யாரும் கண்டுணராதபடிக்கு
புன்னகையால் வலிந்து இழைக்கப்பட்ட திரைகளின் பின்
புதைக்கப்பட்டது நீதி....

காலமோ விரட்டும்...

எனினும் நீதிக்காய்..

அச்சிறு இதயங்களின் கண்ணீரை உறிஞ்சி..
அவர்களின் இருள்விலகாத விழிகள் வாங்கி..
பெருமரங்களின் ஆழ ஓடிய வேர்கள் ஊடாக
மலைமுகடுகளின் பொறுமையுடன் காத்திருக்கிறது.... 

ஒரு இன அழிப்பின் துயர்க்கதை...

 

09/09/2013

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாக் கவிதைகளுமே அருமை. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா :)

அருமை சுபேஸ் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் அருமையாக உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு ஒவ்வொரு கவிதையாக பச்சை போட வசதி கிடையாது அதனால போடல.... ஆமா இன்னாம்மா கண்ணு இப்பிடி அசத்துறே....பாராட்டுகள்... அடேய் தம்பி எழுதிட்டே இரு நான் வாசிச்சிட்டே இருக்கேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

1453421_10151805001519891_1551760862_n.j

கவிதைகள் எல்லாம் அருமை!

இந்தப்படமும் ரொம்பவும் நன்னாத்தான் இருக்கு! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்கள், குமுறல்கள், அங்கலாய்ப்புகள் என்ற வரிசையில் கவிதை வரிகள் நகர்கின்றன!

 

பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள், என்பதற்கிணங்கவே  நிகழ்வுகள் அரங்கேறுகின்றன!

 

பேய்கள் உறங்குகின்ற பொழுதொன்றில்,

பொய்கள் மரணிக்கின்ற பொழுதொன்றில்,

நீதியும் ஒரு நாள் விழித்தெழும்!

 

தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், தம்பி!

உணர்வுகளை அழகாக தொகுப்பதில் நன்கு வளர்ந்துவிட்டீர்கள். என்னும் வளர வாழ்த்துக்கள். இவ்வாறான படைப்புக்கள் மின்நூலாகவேனும் தொகுத்திருப்பது நல்லது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கவிதைகளுமே அருமை. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா :)

நன்றி ஜீவா..

அருமை சுபேஸ் அண்ணா 

 

நன்றி கரன் அண்ணா..

கவிதைகள் அருமையாக உள்ளன.

 

நன்றி சுமே அக்கா..

சுபேசு ஒவ்வொரு கவிதையாக பச்சை போட வசதி கிடையாது அதனால போடல.... ஆமா இன்னாம்மா கண்ணு இப்பிடி அசத்துறே....பாராட்டுகள்... அடேய் தம்பி எழுதிட்டே இரு நான் வாசிச்சிட்டே இருக்கேன். :rolleyes:

சரி அக்கா :D .. நன்றி அக்கா...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

உங்கள் கவிதை வாசிக்கும் கணங்களில்.....

 

வார்த்தைகளின் ஆளுமை மனதை லயிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1452280_10151797772029891_714711805_n.jp

 

மாலைப்பொழுதும்..

வண்ணாத்திப்பூச்சிகளும்..

கவிதைகள் நிறைந்த தேனீரும்...

சில நினைவுகளும்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

 

02/11/2013

 

 

 

முதல் மூன்று வரிகளிலேயே ‘வாழ்தலை புலப்படுத்தி விட்டீர்கள்.!! கவிதைகள் நிறைந்த தேனீர் இருந்தால்!! வேறெதுவும் தேவையே இல்லை... உங்கள் நினைவுகள் இனிப்பூற்றிப்போகின்றன....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் எல்லாம் அருமை!

 

 

 

நன்றி அண்ணா...

 

இந்தப்படமும் ரொம்பவும் நன்னாத்தான் இருக்கு!  :wub:

 

 

லொள்ளு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்கள், குமுறல்கள், அங்கலாய்ப்புகள் என்ற வரிசையில் கவிதை வரிகள் நகர்கின்றன!

 

பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள், என்பதற்கிணங்கவே  நிகழ்வுகள் அரங்கேறுகின்றன!

 

பேய்கள் உறங்குகின்ற பொழுதொன்றில்,

பொய்கள் மரணிக்கின்ற பொழுதொன்றில்,

நீதியும் ஒரு நாள் விழித்தெழும்!

 

தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், தம்பி!

 

நிச்சயமாக.. நன்றி அண்ணா..

உணர்வுகளை அழகாக தொகுப்பதில் நன்கு வளர்ந்துவிட்டீர்கள். என்னும் வளர வாழ்த்துக்கள். இவ்வாறான படைப்புக்கள் மின்நூலாகவேனும் தொகுத்திருப்பது நல்லது. 

 

நன்றி அண்ணா.. எல்லாப்பதிவுகளையும் எனது புளொக்கில் பதிந்திருக்கிறேன் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் எல்லாம் அருமை!

இந்தப்படமும் ரொம்பவும் நன்னாத்தான் இருக்கு! :wub:

எனக்கும் கண்ணைக் குத்திவிட்டது.. :rolleyes: அதாவது படத்தின் அந்த டல் கலர் கண்ணைக் குத்திவிட்டது எண்டு சொல்ல வந்தன்.. :D

உங்க எழுத்துக்கள்தான் என்னையும் எழுத தூண்டியது அண்ணே அருமை கவிதை அனைத்தும் தொடர்த்து எழுதுங்கோ இடையில காணமல் போறியள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

உங்கள் கவிதை வாசிக்கும் கணங்களில்.....

 

வார்த்தைகளின் ஆளுமை மனதை லயிக்க வைக்கிறது.

நன்றி அண்ணா.. 

முதல் மூன்று வரிகளிலேயே ‘வாழ்தலை புலப்படுத்தி விட்டீர்கள்.!! கவிதைகள் நிறைந்த தேனீர் இருந்தால்!! வேறெதுவும் தேவையே இல்லை... உங்கள் நினைவுகள் இனிப்பூற்றிப்போகின்றன....

 

நன்றி அக்காள்.. 

உங்க எழுத்துக்கள்தான் என்னையும் எழுத தூண்டியது அண்ணே அருமை கவிதை அனைத்தும் தொடர்த்து எழுதுங்கோ இடையில காணமல் போறியள் :)

 

சரிங்கண்ணா..  :D

எனக்கும் கண்ணைக் குத்திவிட்டது.. :rolleyes: அதாவது படத்தின் அந்த டல் கலர் கண்ணைக் குத்திவிட்டது எண்டு சொல்ல வந்தன்.. :D

 

நம்பீட்டம்..  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1424461_10151823820824891_1120948777_n.j

 

விழித்துக்கிடக்கும் இரவுப்பொழுதுகளில் நினைவுகளின் சாளரங்களூடு புகுந்துவிடுகின்றன நம்காதல் ஞாபகங்கள்...

உயிர் உயிர் உயிர்க்க எத்தனை தடவைகள் காதல் செய்திருப்போம்....

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள் சுமந்திருக்கின்றன நீயும் நானும் பேசிய நூறாயிரம் கதைகளை....

ஏந்த யாருமற்று கன்னங்களை தாண்டி உதிர்ந்து விழும் கண்ணீரை எடுத்துசெல்கிறது காற்று....

மழைபொழியாமலே நீர்கசியும் இரவுகளில் கன்னங்களில் பிசுபிசுக்கின்றன முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் ஈரங்கள்...

அறைமுழுவதும் பெருமூச்சையும் விசும்பல்களையும் உண்டு பசியாறிக்கிடக்கிறது தனிமை....

கண்ணீரும் கவிதைகளும் அடிக்கடி ஒன்று கலக்கும் மை கரைந்த காகிதத்தாள்களில் சிந்தி இருக்கின்றன உன் பிரிவின் வலிகள்...

எல்லாமே கடந்து சென்ற பின்னாலும் மனதை நிறைக்கின்றது எனக்காய் நீ தந்த இறுதிப்புன்னகையின் ஓலம்...

மழைவிட்டும் காற்றுடன் எஞ்சியிருக்கும் ஈரலிப்பாய் வாழ்க்கை முழுதும் ஓட்டிக்கிடக்கின்றன கடந்துபோன காதலின் வாசனைகள்...

வெளியெங்கும் பரவிக்கிடங்கும் நீ சிந்திய முத்தங்களுடன் 
கலைய மறுத்துத் தொடர்கின்றன எப்போதும் உன் நினைவுகள்...

 

12/11/2013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.