Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரிசிமாத் தோசை

Featured Replies

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%883.jp

அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை:

 

 
தேவையான பொருள்கள்:
 
புழுங்கல் அரிசி –  2 சுண்டு

 

பச்சரிசி – 2 சுண்டு

 

முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது)

 

வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி

 

மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்)
 
மஞ்சள் தூள் - கொஞ்சம்
 
உப்பு – தேவையான அளவு

 

 
தாளிதப் பொருட்கள்:
 
(கடுகு,
 
பெருஞ்சீரகம்,
 
கருவேப்பிலை,
 
நறுக்கிய வெண்காயம்,
 
2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை)

 

எண்ணை – தேவையான அளவு
 
(அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்)
 
 
செய்முறை:
 
தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால் அவற்றின் மேல் சேர்க்கப் பெறும் பொருட்களைப் பொறுத்து அவற்றிக்கு பெயர் சூட்டப்பெறுகின்றது.
பொதுவாக அரிசிமாத் தோசைக் கான செய்முறை: 
 
புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு இவை யாவற்றையும் ஒன்றாக  சேர்த்து 3 - 4 மணி நேரம் வரை  தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின்;

கிரைண்டரில்  அல்லது ஆட்டுக் கல்லில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக  பசை போல் அரைத்துக் கொள்ளவும். மிக மெதுமையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும். மாவை எவ்வளவு மெதுமையாக அரத்து எடுக்கின்றோமோ அவ்வளவுக்கு தோசையும் மெதுமையாக இருக்கும்.

அரைத்த மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் வழித்தெடுத்து 6, 7 மணித்தியாலங்களுக்கு பிறிம்பாக மூடிவைத்து (புளிக்க) பொங்க விடவும். சிலர் கணக்கான உப்பையும் போட்டு வைப்பார்கள. ஆனால் உப்புப் போட்டால் பொங்குவதற்கு நேரம் எடுக்கும் என்பதனால் பலர் தோசை சுடும்போது போடுகிறார்கள்.

மா பொங்கியதும் அதற்குள் மிளகு-சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் தாளிதம் செய்து அதனையும் அதற்குள் இட்டு நன்றாக கலக்கவும். இப்போது தோசை மா றெடி.

தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, அகப்பையால்  மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும். தோசையின் மேல் சுற்றிலும் ஒரு தேக்கறண்டி  நல்லெண்ணை விட்டு, சிவந்ததும் தட்டகப்பையால் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் விட்டதனால் சுலபமாகத் திருப்ப முடியும்.

அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு எண்ணெய் தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக இருக்கும்.  

மெதுமையான தோசை தேவையாயின் பச்சரிசியை கூட்டி புழுங்கல் அரிசியை குறைத்தும் அல்லது கொஞ்ச கோதுமை மாவையும் கலந்தும் செய்யலாம். அல்லது அரிசிக்குப் பதிலாக சாதத்தையும் (சோறு) சேர்த்து அரைக்கலாம். அல்லது உழுந்தை மாத்திரம் அரைத்தெடுத்து அத்துடன் கோதுமை மாவை கலந்தும் தோசை செய்யலாம். 

எண்ணெய்க்கு பதிலாக பட்டர், நெய் விட்டும் சுடலாம். இவை யாவும் வித்தியாசமான வாசனையுடன் ருசியாகவும் இருக்கும். இவற்றை பட்டர்தோசை, நெய்த்தோசை என அழைப்பர்.

தோசைமீது எண்ணெய் விடாது தோசைக் கல்லில் மாக்கலவையை வார்ப்பதற்கு முன் ஒரு சிறிய துணிப் பொட்டலத்தில் எண்ணெய் அதன் மூலம் மெல்லிதாக தோசைக் கல்லில் எண்ணெய் பூசியும் சுடலாம். இதை கல்லுத் தோசை என்பார்கள்.
 
கல்லுத் தோசையின் மீது ஒன்றோ அல்லது இரண்டோ முட்டைகளை அடித்து ஊற்றி செய்யப் பெறும் தோசை முட்டைத்தோசை எனப்பெறும்.
இத் தோசை மாக்கலவையை சிறிது இளக்கமாக கரைத்து நீள்வட்டமாகவும், பெரிதாகவும், கல்லில் ஒட்டியது போல் மெல்லியதாகவும் சுடும் தோசை பேப்பர் தோசைஎனப்பெறும்.  இவை இந்தியாவில் மிகவும் பிரபல்யம்.
கல்லுத் தோசை சுடும்போது உருளைக்கிழங்குப் பிரட்டலை அதன் மேல் பரவி தோசை வெந்ததும் அதனை சுறுட்டி, அல்லது மடித்தெடுத்தால் மசாலா தோசைஆகிவிடும். இதற்கு கறி தேவையில்லை றோல்ஸ், போல் பாடசாலைக்கு, அல்லது வேலைத் தலங்களுக்கு ஸ்ரைலாக எடுத்துச்செல்லலாம்.
அரைத்தெடுத்த மாக் கலவையில் அடுத்த அரைமணி நேரத்திலும் தோசை சுடலாம். ஆனால் அவை புளிப்படையாத காரணத்தினால் றொட்டி போன்று இருக்கும். சிறு சிறு ஓட்டை விழாது.றோட்டி போன்று விறைப்பாக இருக்கும். அவசரத்திற்கு சாப்பிடலாம்.

குளிர் காலங்களில் அல்லது குளிர் நாடுகளில் இந்த மாக்கலவை பொங்க அதிக நேரம் பிடிக்கும் அல்லது பொங்கவே மாட்டாது. அதனால் அக்கலவைக்குள் கொஞ்ச தயிர் அல்லது ஈஸ்ற் சேர்த்து சூடு உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

பொங்க வைத்த மாவை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 2 - 3 நாட்களுக்கும் வைத்தும் தோசை செய்யலாம்.

பொங்கிய மாவில் சுட்ட தோசை ருசியாகவும் மெருதுவாகவும் இருக்கும். இதனை பொரித்து இடித்த மிளகாய்ச் சம்பலுடன் அல்லது மீன், இறைச்சி கறியுடன் அல்லது உறுளைக்கிழங்கு பிரட்டலுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

 

நன்றி:- http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=767:2010-10-29-01-18-12&catid=90:games&Itemid=455

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் தோசை மாவை வெளியே வைத்தாலும் புளிக்காது. நன்றி அலை பகிர்வுக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்
தோசை எனக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாகும், அதுவும் கட்டி சட்னியும், காரச்சட்னியும், தோசைக் கறியும் என்றால்  ம் ...., ஒரு பிடி பிடிப்பேன்.  :D
 
பகிர்விற்க்கு நன்றி அலைமகள்.  
  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் தோசை மா புளிப்பதற்கு ,  அவனைச் சூடாக்கிவிட்டு  பின் அவனை அணைத்துவிட்டு  அவனுள் தோசை மாக் கரைசலை வைத்தால் கெதியில் புளித்துவிடும். :D

 

பி.கு: எவனைச் சூடாக்கி  பின் எவனை அணைக்கிறதென்டு எக்குத்தப்பாக எல்லாம் நிணைக்கக் கூடாது. :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிடித்தமான உணவு. தோசையும் மீன் குழம்பும் கொண்டெழுப்பும். :D

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் தோசை மா புளிப்பதற்கு ,  அவனைச் சூடாக்கிவிட்டு  பின் அவனை அணைத்துவிட்டு  அவனுள் தோசை மாக் கரைசலை வைத்தால் கெதியில் புளித்துவிடும். :D

 

பி.கு: எவனைச் சூடாக்கி  பின் எவனை அணைக்கிறதென்டு எக்குத்தப்பாக எல்லாம் நினைக்கக் கூடாது. :lol:

 

அவன் என்னிடம் இல்லை. அவல் தான் உள்ளது. :o

 

  • கருத்துக்கள உறவுகள்

அவன் என்னிடம் இல்லை. அவல் தான் உள்ளது. :o

 

உங்களிடம்  அவல் இருந்தால் நல்லது,  என்னிடம் உமி உள்ளது , அதைக் கலந்து இருவரும் ஊதி ஊதிச் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடருவோம்  வன்னியன்!! :D

 

  • தொடங்கியவர்

கருத்துக்களிட்ட அனைவருக்கும் நன்றி! :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த உணவுகளில், தோசை மிகவும் பிடித்தது. 
ஆனால் இதுவரை... உழுந்து தோசை, கோதம்ப மா தோசை மட்டுமே சாப்பிட்டுள்ளேன்.
அரிசி மா தோசை சாப்பிட்டதாக ஞாபகமில்லை.
விரைவில்.. இந்த முறையில், தோசை சுட ஐடியா இருக்கு.
தகவலுக்கு நன்றி அலை.

  • தொடங்கியவர்

எனக்குப் பிடித்த உணவுகளில், தோசை மிகவும் பிடித்தது. 

ஆனால் இதுவரை... உழுந்து தோசை, கோதம்ப மா தோசை மட்டுமே சாப்பிட்டுள்ளேன்.

அரிசி மா தோசை சாப்பிட்டதாக ஞாபகமில்லை.

விரைவில்.. இந்த முறையில், தோசை சுட ஐடியா இருக்கு.

தகவலுக்கு நன்றி அலை.

 

 

கருத்துக்கு நன்றி தமிழ்சிறி, சாப்பிட்டுட்டுக் கருத்தை எழுதுங்கோ  :)

நானும் தோசை என்றால் நல்லா வெட்டுவேன் (அடிக்கடி சரவணபவன் போவேன் ).

ஒரு சுண்டு உழுந்திற்கு நாலு சுண்டு அரிசி போட்டு ஒருக்காலும் தோசை தின்றதாக நினைவில்லை .அடுத்த முறை கேட்டுப்பார்ப்பம் .

 

இங்கு சுண்டு என்று குறிப்பிட்டுள்ளது எங்கள் சுண்டலையா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுண்டு என்று குறிப்பிட்டுள்ளது எங்கள் சுண்டலையா?

 

 

பாருங்க

இவருக்கு வேறு ஒரு பிரச்சினை......... :lol:  :D

(தோசைக்குள்ள  நிழலி  என்ன  எழுதப்போறார் என்று வந்தால்... :D )

  • தொடங்கியவர்

நானும் தோசை என்றால் நல்லா வெட்டுவேன் (அடிக்கடி சரவணபவன் போவேன் ).

ஒரு சுண்டு உழுந்திற்கு நாலு சுண்டு அரிசி போட்டு ஒருக்காலும் தோசை தின்றதாக நினைவில்லை .அடுத்த முறை கேட்டுப்பார்ப்பம் .

 

 

கருத்துக்கு  நன்றி அர்ஜுன் அண்ணா!

 

அரிசி  கூடப் போட்டால் தோசை மொறு, மொறுப்பாக வரும் என நினைக்கிறேன். நானும் ஒருக்கா இந்த முறைப்படி செய்து பார்க்க வேணும்,எதுக்கும் தமிழ்சிறி சொல்லட்டும் முதல்  :D 

இங்கு சுண்டு என்று குறிப்பிட்டுள்ளது எங்கள் சுண்டலையா?

 

 

அவரே தான்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதிலேயே சோத்து அன்ரிமார் என்று யாழில சப்புக் கொட்டுகினம்.... இதில வேற அரிசிமாத் தோசையா? தேவைதானே நமக்கு :icon_mrgreen:

எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் தோசை பிடித்த உணவு. ஆனால் அரிசிமா தோசை இன்னும் சுட்டுப்பார்க்கவில்லை.

  • தொடங்கியவர்

உள்ளதிலேயே சோத்து அன்ரிமார் என்று யாழில சப்புக் கொட்டுகினம்.... இதில வேற அரிசிமாத் தோசையா? தேவைதானே நமக்கு :icon_mrgreen:

 

 

பறுவாயிலை சகாரா ஒரு நாளைக்குத் தானே சுட்டுப் பாருங்கோ!

எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் தோசை பிடித்த உணவு. ஆனால் அரிசிமா தோசை இன்னும் சுட்டுப்பார்க்கவில்லை.

 

 

ஒரு நாளைக்குச் சுட்டுப் பாருங்கோ ராசம்மாக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

 சாமை தோசை

 
சில வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக, மகாராஷ்டிராவில், நவராத்திரி விரதத்தின் போது, சாமை அரிசியில் செய்த உணவை விரும்பி உண்கிறார்கள். அவர்களுக்கு, சாமை விரத கால உணவு. நல்லவை எவ்வளவு தொலைவிலிருந்து வந்தாலும், விரும்பி ஏற்கலாமே?
 
samaidosaifinal.JPG சாமை தோசை 
samaidosaititle.JPG

சாமை மாவு 

தக்காளி

பச்சை மிளகாய் 

மிளகு, சீரக பொடி 

உப்பு  

samaidosaieppadi.JPG

ஒரு டம்ளர் சாமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மிளகு, சீரகபொடி கலந்து நீர் விட்டு கரைக்கவும்.தோசை மாவு பதம் வருமளவில் தண்ணீர் சேர்க்கவும். தோசை கல்லை சூடாக்கி  வார்க்கவும். ஒரே சீராக ஊற்ற வேண்டும். கரண்டியால் தேய்க்கக் கூடாது.
 
samaidosaiingfinal.JPG சாமை மாவு +தக்காளி+பச்சை மிளகாய்+

மிளகு, சீரக பொடி+உப்பு

 

ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளில், சாமை மாவு கிடைக்கும்.மிளகு, சீரக பொடி தயார் செய்து வைத்துக் கொண்டால் நொடியில் ரெடி சாமை தோசை.

சாமை மாவை கரைத்த உடனே தோசை வார்க்கலாம்.காத்திருக்க தேவையில்லை.

சாமை தோசை சுவை மிக நன்றாக வந்திருந்தது.

வழக்கமாக தோசைக்கு தொட்டுக் கொள்ளும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி துவையல், தோசை மிளகாய் பொடி....இவற்றில் ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம். மிளகு, சீரக பொடியும், தக்காளியும் சேர்ப்பதால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே கூட சாமை தோசையை சாப்பிடலாம்.   

http://thalaivazhaivirundhu.blogspot.ca/2013/10/blog-post_8755.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.