Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபியை அழிக்க முடியாது; கூட்டமைப்பில் சேரும் எண்ணமும் இல்லை! - டக்ளஸ் தேவானந்தா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
douglas-241213-150.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் தமக்கில்லை என்று ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முகம்காட்ட ஈ.பி.டி.பி விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார். அவ்வாறு கூட்டமைப்புடன் சேரும் எண்ணம் எமக்கில்லை. எமது கட்சியை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு. ஆனால் அவர்களால் எமது கட்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை.

  

நான் பார்த்தவரையில் மூன்று கூட்டமைப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு கூட்டமைப்பு, பின்னர் இரண்டாவது வரதராஜப்பெருமாள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்த கூட்டமைப்பு, மூன்றாவது ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு. கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் செயற்பாடுகள் தொடர்பில் ஓர் ஊடகம் விமர்சித்து வருகின்றது. அந்த நிறுவனத்தினூடாக நிதி நிறுவனம் நடத்திய போது அதில் நிதிகளை முதலிட்ட பலர் தற்கொலை செய்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களின் விமர்சனங்கள் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99777&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. புற்றுநோயை முற்றவிட்டால் அழிக்க முடியாது.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தெளிவாகத்தான் சொல்கிறார்

நாங்களே  அழிப்போமம் அழிந்து போகின்றோம் என....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மைதான்..
குருவிச்சை மரத்தை பிடுங்கிப் போட்டால் அது என்னுமொரு இடத்தில் ஒட்டிக்கொள்ளும் 
தனியாக நிற்க திராணி அற்றது 

 

அழிக்கமுடியாது என்று கூறும்போதே அழிகிறது என்று தெரிகிறது.

பசில் வடக்கிலிருந்து தூக்குபட்டதோடு இவருக்கு பலம் குறைந்துவிட்டது.

மற்றும் இந்திய கொங்கிரஸ் - சிறி லங்கா ஊடல் , அங்கசன் குழு , சகோதரத்துவ கொலைகள் என்று அழிவு பாதையில் மிக வேகமாக செல்கிறார்.

மற்றும் இவரின் குழுவே கட்சியை கலைத்துவிட்டு கூட்டமைப்பில் சேர எத்தனிக்கிறார்கள்.

வேந்தரும் அடித்த காசுடன் ஒதுங்கி தொண்டரை முன்னேற விடலாம். ஆனால் ஆசை ஆரை விட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

தானேவே புலம்ப ஆரம்பிட்டாரா. நினைச்சம் இது நடக்கும் என்று. சில நாய்கள்..  வெளிச்சத்துக்குப் பயந்து மதிலுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்று குரைக்கும். அதைத்தான் இவர் புலிகள் இருந்த போது செய்தார். இப்போ.. வெளிச்சம் பட்டதும்.. சுருண்டு கிடந்து அநுங்குகிறார்.  :D

அழிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தவிசயம். கூட்டமைப்புடன் சேரும் போது கட்சி தனது தனித்துவத்தை இழந்துவிடும் அந்தவகையில் செயளாளர் நாயகம் நல்லமுடிவையே எடுத்திருக்கின்றார். செயலாளரின் காலத்துக்கு பின்னர் கட்சியை தலமை தாங்கும் வல்லமை உள்ள ஒருவர் கட்சியில் இல்லை என்பது வருத்தத்தக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே வெறுத்து ஓட ஓட விரட்டிய பின்னர் இவருக்கு என்ன வேலை மிஞ்சி உள்ளது? இவரின் தனித்துவம் யாரும் அறிந்ததே. குறிப்பாக வடக்கு மக்கள்.இவருக்கு பின் தலைமை தாங்க நல்ல அடிபொடி இப்போ தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
அத்தியடிக் குத்தியன் ஈபிடிபி அழியமுடியாததா? :icon_mrgreen:

வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?

அத்தியடிக் குத்தியன் ஈபிடிபி அழியமுடியாததா? :icon_mrgreen:

 

ஒடுக்கப்படும் வரை அதற்கெதிராக மக்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள். அதன் வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கலாம். அதுபோல் தமிழர்கள் இருக்கும் வரை ஆழ்பவர்களை அண்டி வாழ்பவர்களும் இருப்பார்கள். நேற்று ராமநாதன் இன்று ஈபி டிபி நாளை கேபிடிபி அல்லது ரிஎன்ஏ. ஈபிடிபி என்பது தமிழர்களின் நடமுறைக்குள் வராத ஒரு புறம்புபட்ட அமைப்புக் கிடையாது. அது தமிழர்களின் பாரம்பரிய அம்சம். மகிந்தன் செத்தால் பேரினவாதம் செத்துவிடும் விமோசனம் கிடைக்கும் என்று கனவு காண்பதுபோல் வெண்தாடி வேந்தன் செத்தால் ஈபிடிபி அழிந்துவிடும் என்று பகல் கனவு காண்கின்றார்கள். ஒருபோதும் அது நடவாது.

ஒடுக்கப்படும் வரை அதற்கெதிராக மக்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள். அதன் வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கலாம். அதுபோல் தமிழர்கள் இருக்கும் வரை ஆழ்பவர்களை அண்டி வாழ்பவர்களும் இருப்பார்கள். நேற்று ராமநாதன் இன்று ஈபி டிபி நாளை கேபிடிபி அல்லது ரிஎன்ஏ. ஈபிடிபி என்பது தமிழர்களின் நடமுறைக்குள் வராத ஒரு புறம்புபட்ட அமைப்புக் கிடையாது. அது தமிழர்களின் பாரம்பரிய அம்சம். மகிந்தன் செத்தால் பேரினவாதம் செத்துவிடும் விமோசனம் கிடைக்கும் என்று கனவு காண்பதுபோல் வெண்தாடி வேந்தன் செத்தால் ஈபிடிபி அழிந்துவிடும் என்று பகல் கனவு காண்கின்றார்கள். ஒருபோதும் அது நடவாது.

வெண்தாடி வேந்தர் செத்தால் யார் ஒட்டு குழுவை வழி நடத்துவது?

யார் இரண்டாம் தர பதவி மட்டத்தில் இருப்பது? யாரால் திரும்பவும் குழுவை ஒருங்கமைக்க முடியும்?

இந்திய கொங்கிரஸ் கை கூலிகளாக இருப்பதை ராஜபக்சே குடும்பம் விரும்புமா?

 சிலர் கனவால் விழிக்கவில்லை.  EPDP தீவகங்களாலும் செத்துவிட்டது.மகிந்தா கையில் பட்டது திரும்பாது.

 

செயலாளர் நாயகம் உயிர் தப்ப கூட்டமைப்பில் சேர வேண்டும். 

 

போர்குற்ற விசாரணை வந்தவுடன்9வந்தேதான் தீரும்) மகிந்தா போட்டுக்கொடுக்க போவது செயலாளர் நாயகம், கருணா......

 

கமலை மகிந்தா மாட்டிவிட்டது போல் செயலாளர் நாயகம் மாட்டுப்படாது போக வெண்டுமாயின் கூட்டமைப்புத்தான் ஒரே வழி. இவரின் முடிவு சென்னையிலும் முடியும் சந்தர்ப்பம் இருக்கு. காங்கிரஸ் போனவுடன் சென்னையில் இவரை காப்பாற்ற யாரும் இல்லை. 

 

இதில் செய்லாளர் நாயகம் விடும் பிழையை விளங்குவது கஸ்டமில்லை.  பள்ளியில் படிக்காதாமாணவன் செய்ய போகத்தக்க வேலைகளில் ஒன்று பகல் கொள்ளை. படிக்கத்தெரிந்தவன் பொருளியல், சட்டம், விஞ்ஞானம் படித்து நல்ல நிலையில் இருப்பான். குத்தி தெரிந்து எடுத்த தொழில் துறையை வைத்து அவருக்கு என்ன் மட்டும் விள்ங்குகிறது என்பதை புரிந்து கொள்வது சிரமமல்ல.

 

 

சிலர் கனவால் விழிக்கவில்லை. EPDP தீவகங்களாலும் செத்துவிட்டது.மகிந்தா கையில் பட்டது திரும்பாது.

செயலாளர் நாயகம் உயிர் தப்ப கூட்டமைப்பில் சேர வேண்டும்.

போர்குற்ற விசாரணை வந்தவுடன்9வந்தேதான் தீரும்) மகிந்தா போட்டுக்கொடுக்க போவது செயலாளர் நாயகம், கருணா......

கமலை மகிந்தா மாட்டிவிட்டது போல் செயலாளர் நாயகம் மாட்டுப்படாது போக வெண்டுமாயின் கூட்டமைப்புத்தான் ஒரே வழி. இவரின் முடிவு சென்னையிலும் முடியும் சந்தர்ப்பம் இருக்கு. காங்கிரஸ் போனவுடன் சென்னையில் இவரை காப்பாற்ற யாரும் இல்லை.

இதில் செய்லாளர் நாயகம் விடும் பிழையை விளங்குவது கஸ்டமில்லை. பள்ளியில் படிக்காதாமாணவன் செய்ய போகத்தக்க வேலைகளில் ஒன்று பகல் கொள்ளை. படிக்கத்தெரிந்தவன் பொருளியல், சட்டம், விஞ்ஞானம் படித்து நல்ல நிலையில் இருப்பான். குத்தி தெரிந்து எடுத்த தொழில் துறையை வைத்து அவருக்கு என்ன் மட்டும் விள்ங்குகிறது என்பதை புரிந்து கொள்வது சிரமமல்ல.

கூட்டமைப்புடன் சேர இவரின் குழுவே எத்தனிக்கிறது. முன்பு ரேக்சியன் இணைய முயற்சிக்கும் போது போட்டு தள்ளபட்டார்.

வேந்தர் அடித்த காசுடன் மாலை தீவு சென்றால் சீடர்கள் மீசையில் மண்படாமல் கூட்டமைப்புடன் சேரலாம்.

கொள்ளையில் பங்கில்லை; யாழ்.மாநகர முதல்வருடன் டக்ளஸ் மோதல்! Top News
[Wednesday, 2013-12-25 20:32:41]
News Service
யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.மாநகர சபையின் ஒளிவிழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாநகர சபையின் தற்போதைய ஆட்சியில் தனக்கு திருப்தியில்லை என்று நிகழ்வில் உரையாற்றினார். மேலும் அடுத்த முறையும் தாமே ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

 
ஆனால் மாநகர மேயர் உரையாற்றுகையில்,

மாநகரம் சிறப்பான சேவையை செய்து வந்துள்ளதாக மாநகர சபையின் பணிகளை உயர்த்தி பேசினார். இதனால் நிகழ்விற்கு வந்திருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக யாழ்.மாநகர சபையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியாமல் மேயரும் அவரது கணவரும் பல கோடி ரூபாய்க்களை கொள்ளையடித்துள்ளதாக அமைச்சருக்கு தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஈ.பி.டி.பி க்கு இதில் எந்த பங்கும் கிடைக்காமையினால் அமைச்சர் கடுப்பாகியுள்ளார். இதன் காரணமாக மேயருக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=99932&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
வெண்தாடி வேந்தன் செத்தால் ஈபிடிபி அழிந்துவிடும் என்று பகல் கனவு காண்கின்றார்கள். ஒருபோதும் அது நடவாது.

 

 
 
அமெரிக்காவில் சிறைச்சாலைகளை அதிகரித்து சிறைக்கைதிகளும் அதிகரித்த வண்ணமே உள்ளார்கள் என்பது ஈ.பி.டி.பிக்கும் பொருந்தும்.

அந்த ஆள் இப்பவும் மந்திரிதான் .பங்கருக்குள் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து களவெடுக்க பங்கருக்குள் இருக்க தேவையில்லை. லெபனானில் பயிற்சி எடுத்ததும் களவெடுக்க தானே. :icon_mrgreen:

அந்த ஆள் இப்பவும் மந்திரிதான் .பங்கருக்குள் இல்லை .

இப்பவும் அதி உயர் பாதுகாப்பு வளையம் அமைத்து தான் உயிர் தப்புகிறார்.

இப்ப வேந்தருக்கு அங்கசன் என்றால் கலக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கப்படும் வரை அதற்கெதிராக மக்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள். அதன் வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கலாம். அதுபோல் தமிழர்கள் இருக்கும் வரை ஆழ்பவர்களை அண்டி வாழ்பவர்களும் இருப்பார்கள். நேற்று ராமநாதன் இன்று ஈபி டிபி நாளை கேபிடிபி அல்லது ரிஎன்ஏ. ஈபிடிபி என்பது தமிழர்களின் நடமுறைக்குள் வராத ஒரு புறம்புபட்ட அமைப்புக் கிடையாது. அது தமிழர்களின் பாரம்பரிய அம்சம். மகிந்தன் செத்தால் பேரினவாதம் செத்துவிடும் விமோசனம் கிடைக்கும் என்று கனவு காண்பதுபோல் வெண்தாடி வேந்தன் செத்தால் ஈபிடிபி அழிந்துவிடும் என்று பகல் கனவு காண்கின்றார்கள். ஒருபோதும் அது நடவாது.

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். பிரபாகரனை அழித்துவிட்டால் ஈழத்தமிழருக்கு விமோசனம் கிடைத்துவிடும் என்று கனவு கண்டவர்கள் கனவும் அழியாது நிலைத்திருப்பதும் யதார்த்தம். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.