Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.இவர் [இவன் ] என்ன செய்கிறான்

Featured Replies

வணக்கம் உறவுகளே ..............
 
உண்மையில் இந்தப்பதிவை இங்கே இணைத்து சில விடயங்கள தேடி அதனூடு பயணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வளர்ந்து வரும் கலைஞ்சன் என்ற சிந்தனையில் இங்கே இணைக்கிறேன் .
 
ஜெர்மனியில் வாழும் கலை சம்பந்தமான ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த லிங்கை எனக்கு அனுப்பி .........தமிழனின் மானத்தை இந்த இளஞ்சன் வித்து விட்டான் என்றார் .......
 
பார்த்தேன் ,,,,,,,,மொழி விளங்கவில்லை .ஆனால் எதோ படம் காட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது .....ஒரு கீபோட்டை வைத்து குரங்கு விளையாட்டு காட்டுகிறான் என்பதை மட்டும் இவனது இசை சம்பந்தமான செயல்பாட்டில் அறிந்து கொண்டேன் .பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படி  இவன் கலையையும் ,எம் மானத்தையும் விற்று விட்டான் என்றே எனக்கு தோன்றுகிறது ............
 
கலையை ,அதன் சிறப்பை ,ஒரு வட்டத்திற்குள் ,தங்களை காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் எம்முடைய முந்தய கலை படைப்புக்கள் ,கலைஞ்சர்கள் நடந்து கொண்டனர் ...........உன்னை நீயே அறிவாய்  என்ற வாசகத்திர்கிணங்க நாம் திறமைக்கும் ,உண்மைக்கும் முக்கியம் கொடுத்து .....திறமையான ,கலைஞ்சன்ர்களை ,படைப்புக்களை ,முன்னே கொண்டு வர முயற்சிப்போம் ................பொறாமை என்னும் பதத்தை கலை உலகம் மறக்கணும் .போட்டி என்னும் பதத்துடன் எம் கலையை நாமே ஆழுவோம் ,பூரணமாக ,ஆரோக்கியமாக .
 
இந்த இளஞ்சன் ஒரு வளர்ந்து வரும் கலைஞ்சன் .அனால் அவன் வழி நடாத்தப்பட்ட விதம் பிழையாக உள்ளது என எண்ணத்தான் தோன்றுகிறது .................இதற்கு இவனது பெற்றோர்களே முழுப்பொறுப்பு ................நன்றி ./
 
  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக அந்த ஒளிப்பதிவை பார்த்தேன்.
அதனை... இங்கு இணைக்கும் முயற்சியில்... பல தடவை முயன்று, தோற்று விட்டதால்...
முயன்றால்.. யாராவது இணையுங்கள். எனக்கு... அது நகைச்சுவையாக இருந்தது.
ஆனால்... மனைவியிடம்...
"இந்தப் பெடியனை, தாய்.. தகப்பன் எப்படி கட்டி ஆள்கிறார்கள்" என்று கேட்டேன்.
ந‌ல்ல‌ த‌மாஸ்... ஜேர்ம‌ன் தமிழ் சூப்ப‌ர் சிங்க‌ர். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி வருடம் தோறும் யேர்மனிய தொலைக்காட்சியயில் நடைபெறும் நிகழ்ச்சி. SUPER STAR சிறந்த பாடகர்களுக்கான தேர்வுப்போட்டி வருடாவருடம் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வில் RECALL கிடைத்தால் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்பட்டு அதில் தெரிவு செய்யப்படுவோர் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்சுற்றுப்போட்டியாக நடைபெற்று இறுதியில் நாடு திரும்பும் போது 15பேர்

தெரிவு செய்யப்பட்டு வருவார்கள். இவர்களை தெரிவு செய்வது நடுவர்கள் மட்டுமே.

 

தெரிவு செய்யப்பட்டவர்கள் 15பேரும் நேரடி மேடை நிகழ்வில் முதல்  பாடுவார்கள். அன்றைய நாளிலிருந்து பார்வையாளர்கள் வாக்களிப்பு தொடங்கும்.  முதல் நேரடி மேடையில் வாக்குகளின் அடிப்படையில் 5பேர் தவிர்க்கப்பட்டு அடுத்துவரும் 10பேரும் வாராவாரம் ஒவ்வொருவராக வாக்களிப்பின் படி விலக்கப்பட்டு இறுதியாக 2பேர் இறுதிச்சுற்றுக்கு வருவார்கள். இறுதிச்சுற்றில் வெல்கிறவருக்கு 5லட்சம் யூரோ பணமும் வழங்கப்பட்டு கௌரவம் பெறுவார்.

 

இம்முறை இந்த இளைஞன் தொலைக்காட்சியில் வந்ததும் ஒரு தமிழ் இளைஞன் வந்திருக்கிறான் என்ற எதிர்பார்ப்போடு தொலைக்காட்சி முன் குடும்பமாக எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். வந்த பையனோ தன்னை தமிழன் என்று சொன்னான். ஆனால் தன்னடக்கம் இல்லாத ஒருவராகி இறுதியில் நடுவர்கள் உனக்கு இசையென்பது வராது. வேண்டுமானால் வீட்டில் உனது மகிழ்ச்சியை நீ இசையாக அனுபவிக்கலாம் என்றார்கள்.

 

அடிக்கடி தற்போது இந்த நிகழ்ச்சி விளம்பரம் வருகிற போதெல்லாம் இந்த ஒளிப்பதிவு வந்து போகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சூரியன், தமிழ் சிறி, சாந்தி!

 

இந்தப் பெடியின்ர பிரச்சனையை ஒரு பக்கம் விட்டுப்போட்டுப் பார்த்தால், எங்களிடம் எவ்வளவு பலம் இருக்கின்றது என்பது எம்மில் பலருக்குப் புரிவதில்லை!

 

ஒரு ஜேர்மன் மொழியிலுள்ள பதிவை, 7.40 மணிக்குத் தமிழ் சூரியன் இணைக்கிறார்! 

 

7.58 மணிக்குத் தமிழ் சிறியின் முதல் கருத்து வருகின்றது!

 

8.01 மணிக்குச் சாந்தியின் விளக்கம் கிடைக்கின்றது!

 

இப்படியான விடயம் ஒன்று யாழ் களத்தை விடவும், வேறு எங்குமே சாத்தியப்படாது என நினைக்கிறேன்!

 

ஜேர்மன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த மொழியிலும், பேச, எழுத, வாசிக்கத் தெரிந்த தமிழ் உறவுகள் இருப்பது எமது உண்மையான பலமாகும்! :lol:

 

எமது தலைவிதியை நாமே எழுதும் நிலை வருமானால், எமது பொருளாதாரத்தை நாமே கட்டியாளும் நிலை வருமானால், ஈழத் தமிழனுக்கு வானமே எல்லையாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

பரமசுதன் ஆடிய தமிழ் டான்சை பார்த்தீர்களா... சாந்தி.
வாழ்க்கையே... வெறுத்துப் போச்சு எனக்கு.
"டீட்டர் போலன்", தனது ஆசனத்திலிருந்து... எழும்பி வந்து,
அந்தப் பெடியனுக்கு.. மைக் செற் பண்ணி வைத்தது... இன்னும் சூப்பர்.
கடைசியில்... நாலு, நடுவரும்... காதைப் பொத்திக் கொண்டு இருந்து விட்டார்கள்.
தமிழ் இளைஞன், ஜேர்மன் இளையோரை... ஒரு க‌லக்கு கலக்கி விட்டான்.
இந்தக் கிழமை பள்ளிக் கூடம் எல்லாம்... இது தான்.. ரொப்பிக் ரோக்.
அதிலும்... "டீட்டர் போலன்" நீங்க பாடியது... தமிழ்ப் பாடலா, ஆங்கிலப் பாடலா? என்று கேட்டது.. மறக்க முடியாது. :lol:

  • தொடங்கியவர்
உண்மையில் இந்த இளைஞ்சனிடம் எதோ ஒன்று இருக்குது .........எம் புலம்பெயர்வாழ் வாழ்வில் இந்த கலைத்தாகமுள்ள  இளைஞ்சனை இந்த நிலைக்கு இட்டு சென்ற நிலையில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆகிறோம் .....................
 
.இங்கே இதை நான் இணைத்தது ,இந்த இளைஞ்சனை கேவலப்படுத்தி ,நளினம் செய்யும் எந்த நோக்கமும் இல்லை ..............இந்த சம்பவம் தமிழீழ கலைஞ்சன் ஒவ்வொருவரையும் உறுத்தணும்........எம் கலை வளர்ச்சிக்கு தடையாக உள்ள ..மேடை மோகம் ,போலி புகழ் , பொறாமை ,ஆணவம் அனைத்தையும் களைந்து உலகத்தின் முன் எம் கலை சிறப்பை உயர்த்தணும் ................இணைந்து வாருங்கள் உங்களில் ஒருவனாக உயிர் உள்ளவரை சேர்ந்து பயணிக்க காத்திருக்கிறேன் ............. :)
  • கருத்துக்கள உறவுகள்

பரமசுதன் ஆடிய தமிழ் டான்சை பார்த்தீர்களா... சாந்தி.

வாழ்க்கையே... வெறுத்துப் போச்சு எனக்கு.

"டீட்டர் போலன்", தனது ஆசனத்திலிருந்து... எழும்பி வந்து,

அந்தப் பெடியனுக்கு.. மைக் செற் பண்ணி வைத்தது... இன்னும் சூப்பர்.

கடைசியில்... நாலு, நடுவரும்... காதைப் பொத்திக் கொண்டு இருந்து விட்டார்கள்.

தமிழ் இளைஞன், ஜேர்மன் இளையோரை... ஒரு க‌லக்கு கலக்கி விட்டான்.

இந்தக் கிழமை பள்ளிக் கூடம் எல்லாம்... இது தான்.. ரொப்பிக் ரோக்.

அதிலும்... "டீட்டர் போலன்" நீங்க பாடியது... தமிழ்ப் பாடலா, ஆங்கிலப் பாடலா? என்று கேட்டது.. மறக்க முடியாது. :lol:

உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சுது பிள்ளையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தில பிள்ளையள் அடிச்ச நக்கலை வீட்டில சொல்லிச் சொல்லி ஒரே பேச்சு. தொலைக்காட்சிக்கும் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக் காட்சி ஆனால் பாடசாலைகளில் சக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி பிள்ளைகள் பலருக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

 

டீற்றாபோலன் இயல்பிலேயே தலைக்கனம் பிடித்த ஒரு கலைஞன். திறமையாளர்களைக் கூட தனது தலைக்கனத்தால் மேடையில் தளர வைத்து துரத்துகிற ஒருவர். அத்தகைய ஒரு மேடைக்கு அனுப்புகிற பெற்றோர் நண்பர்கள் தங்களது உண்மையான விமர்சனத்தை கட்டாயம் சொல்லி அவரை வழிப்படுத்தியிருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் இந்த இளைஞ்சனிடம் எதோ ஒன்று இருக்குது .........எம் புலம்பெயர்வாழ் வாழ்வில் இந்த கலைத்தாகமுள்ள  இளைஞ்சனை இந்த நிலைக்கு இட்டு சென்ற நிலையில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆகிறோம் .....................
 
.இங்கே இதை நான் இணைத்தது ,இந்த இளைஞ்சனை கேவலப்படுத்தி ,நளினம் செய்யும் எந்த நோக்கமும் இல்லை ..............இந்த சம்பவம் தமிழீழ கலைஞ்சன் ஒவ்வொருவரையும் உறுத்தணும்........எம் கலை வளர்ச்சிக்கு தடையாக உள்ள ..மேடை மோகம் ,போலி புகழ் , பொறாமை ,ஆணவம் அனைத்தையும் களைந்து உலகத்தின் முன் எம் கலை சிறப்பை உயர்த்தணும் ................இணைந்து வாருங்கள் உங்களில் ஒருவனாக உயிர் உள்ளவரை சேர்ந்து பயணிக்க காத்திருக்கிறேன் ............. :)

 

 

ஆம்... தமிழ்ச்சூரியன்,

அவன் மேடைக்கு... வரும் போது, தான் வெல்வேன்... என்ற நம்பிக்கையுடன், வருகின்றான்.

வந்தவுடன்... மேடையில், உள்ள நடுவர்களிடம் துணிந்து போய்.. கை கொடுத்து, தனது அலப்பரையை... ஆரம்பிக்கின்றான்.

உண்மையில்.... நடுவர்களை, சரியாய்... கஸ்ரப் படுத்திப் போட்டான். :lol:

 

ஆனால்.. இதே.. நடுவர்களுக்கு, போட்டியில்.... தோல்வியுற்ற மற்றைய இளைஞர்கள், அவர்கள் மேசை மீதிருக்கும் கிளாஸ் தண்ணீரால் மூஞ்சையில் எத்தியிம், தாம் கொண்டு வந்த கிற்றாரை அவர்கள்... மேசை மேல் அடித்தும், உள்ளார்கள். :D

  • தொடங்கியவர்

ஆம்... தமிழ்ச்சூரியன்,

அவன் மேடைக்கு... வரும் போது, தான் வெல்வேன்... என்ற நம்பிக்கையுடன், வருகின்றான்.

வந்தவுடன்... மேடையில், உள்ள நடுவர்களிடம் துணிந்து போய்.. கை கொடுத்து, தனது அலப்பரையை... ஆரம்பிக்கின்றான்.

உண்மையில்.... நடுவர்களை, சரியாய்... கஸ்ரப் படுத்திப் போட்டான். :lol:

 

ஆனால்.. இதே.. நடுவர்களுக்கு, போட்டியில்.... தோல்வியுற்ற மற்றைய இளைஞர்கள், அவர்கள் மேசை மீதிருக்கும் கிளாஸ் தண்ணீரால் மூஞ்சையில் எத்தியிம், தாம் கொண்டு வந்த கிற்றாரை அவர்கள்... மேசை மேல் அடித்தும், உள்ளார்கள். :D

அண்ணா ...............முடியல  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சுது பிள்ளையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தில பிள்ளையள் அடிச்ச நக்கலை வீட்டில சொல்லிச் சொல்லி ஒரே பேச்சு. தொலைக்காட்சிக்கும் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக் காட்சி ஆனால் பாடசாலைகளில் சக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி பிள்ளைகள் பலருக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

 

டீற்றாபோலன் இயல்பிலேயே தலைக்கனம் பிடித்த ஒரு கலைஞன். திறமையாளர்களைக் கூட தனது தலைக்கனத்தால் மேடையில் தளர வைத்து துரத்துகிற ஒருவர். அத்தகைய ஒரு மேடைக்கு அனுப்புகிற பெற்றோர் நண்பர்கள் தங்களது உண்மையான விமர்சனத்தை கட்டாயம் சொல்லி அவரை வழிப்படுத்தியிருக்க வேணும்.

 

அந்த நிகழ்ச்சியை... நடத்துவதே, RTL மூலமாக, டீட்டர் போலன் தான்.

அவரின் தலைக்கனமும், சுய விளம்பரமும் யாவரும் அறிவர்.

ஒரு முறை, தனது ஆட்களை செற் பண்ணி, தனது வீட்டில் துப்பாக்கியால் சுட வைத்து பரபரப்பு ஏற்படுத்தியவர்.

"டீற்றர் போலனை" அந்தப் பையன் ஆரம்பதிலேயே... அவமானப் படுத்தி விட்டான் சாந்தி.

 

கை கொடுக்கும் போது... வலது பக்கம் இருந்த, டீற்றர் போலனுக்கு கை கொடுக்காமல், நடுவில் இருந்த ஒருத்தனுக்கு கை கொடுத்து... மற்ற நடுவப் பெண்களிடம் உரையாடிய பிறகு.. நீயும்.. இங்கை தான் இருக்கிறியா... என்ற மாதிரி, "டீற்றர் போலனுக்கு" கை கொடுக்கின்றான்.

 

சரியான... வழிநடத்தல் இல்லாத பிள்ளை அவன்.

Edited by தமிழ் சிறி

https://www.facebook.com/suden.paramasuthan

 

இதுதான் அவருடைய முக நூல்பக்கம்.. விரும்பியவர்கள் அவருக்கு தனி தகவலில் ஆவது அறிவுரைகளைப் பக்குவமாகத் தெரிவிக்கலாம்.  :D

 

அந்த நடுவர்களாக கடமையாற்றிய 2 பெண்கள் இறுதியில் சுதனின் ஆட்டத்தைப் பற்றிக் கூறிய கருத்தில் ஜேர்மனியருக்கே உரிய காழ்ப்புணர்வும் கலந்திருந்ததை அவதானிக்க முடியும்.

 

(  http://www.clipfish.de/special/dsds/video/4037592/paramasuthan-mit-keyboard-beim-dsds-casting-2014 )

 

அதற்கு ஒருவர் எழுதிய கருத்து என்னைக் கவர்ந்தது. அதை இங்கு பகிர்ந்துகொள்ளுகிறேன்.

 

Iswaryaa Selliah · Abonnieren · University of Zurich · 237 Abonnenten

Bei allem Respekt verehrte Jurys, Ihr habt das Recht die Bewerber zu kommentieren und zu urteilen. Aber ihr könnt doch nicht ernsthaft die Kultur und Tradition anderer Ethnien beleidigen. Von wegen "Medizinmann-Tanz". HALLO?!?!?! Ein bisschen Respekt vor den anderen Kulturen, bitte!!!
(மரியாதைக்குரிய நடுவர்களே! உங்களுக்கு போட்டியாளரைப்பற்றி கருத்துக் கூறவும் முடிவு செய்யவும் உரிமை இருக்கிறது. ஆனால் உங்களால் மற்ற இனங்களின் கலாச்சாரத்தையோ பாரம்பரியத்தையோ அவமதிக்க முடியாது. ஏனென்றால் 'நோயாளி மனிதனின் நடனம்' என்பது. ஹலோ! தயவு செய்து கொஞ்சம் மரியாதை ஏனைய கலாச்சாரங்களுக்கும். ) :o  :D  

 

மொழி புரியாத எமக்கு அந்த இளைஞன் மிக உற்சாகமான ஒரு நல்ல கலைஞனாக தெரிகிறான். நடுவர்களில் நடுவில் உள்ள ஒருவனைத் தவிர மற்றவர்கள் அசிங்கமாக மிக அருவருப்பான முக பாவங்களை காட்டுகின்றனர். இது அவர்களின் இயல்பான உடல் மொழியானால் இவர்களுடன் வாழும் எம்மவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

மொழி புரியாத எமக்கு அந்த இளைஞன் மிக உற்சாகமான ஒரு நல்ல கலைஞனாக தெரிகிறான். நடுவர்களில் நடுவில் உள்ள ஒருவனைத் தவிர மற்றவர்கள் அசிங்கமாக மிக அருவருப்பான முக பாவங்களை காட்டுகின்றனர். இது அவர்களின் இயல்பான உடல் மொழியானால் இவர்களுடன் வாழும் எம்மவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

 

ஹசான், புங்கையூரான் போன்றவர்கள் போன்று...

மற்றைய யாழ் உறவுகளும் தங்கள் கருத்தை தெரிவிப்பதை நான் மிக, ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

ஏனெனில்... இது, சமூகம் சார்ந்த பார்வை, என்பதை... நாம் தட்டிக் கழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சுது பிள்ளையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தில பிள்ளையள் அடிச்ச நக்கலை வீட்டில சொல்லிச் சொல்லி ஒரே பேச்சு. தொலைக்காட்சிக்கும் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக் காட்சி ஆனால் பாடசாலைகளில் சக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி பிள்ளைகள் பலருக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

------

 

உண்மை... சாந்தி,

பல மாநிலங்களில்..

இந்தச் செயலால்..பிள்ளைகள் மன உழைச்சலுக்கு, உள்ளாக்கப் பட்டிருக்கின்றார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ தமிழரையே கேவலப்படுத்திப் போட்டான். நேர போய் விளக்குமாத்தால சுழரச் சுழர அடிக்கவேணும் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  நிகழ்வுகள்

உலகம் பூராகவும் நடக்கின்றன

 

 

இவ்வாறான நிகழ்ச்சிகளை பிரபலமாக்கவும்

நகைச்சுவையாக கொண்டு செல்லவும்

பலவற்றை பகிடியாகவே  எடுத்துக்கொள்கின்றனர்.

அவ்வாறு செய்பவர்களே ரசிகர்களிடமும்

பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களிடமும் வாக்குகளைப்பெறுகின்றனர்.

 

டென்மார்க்கில் நடந்து இது பொன்ற  இசைத்தெரிவில்

எனக்கு தெரிந்த  கல்வியங்காட்டை  பிறப்பிடமாகக்கொண்ட

இரு இளைஞர்கள் இறுதித்தேர்வு வரை வந்தார்கள்

ஆனால் பரிசை  தட்ட முடியவில்லை

சொல்லப்பட்ட  காரணம்

டென்மார்க்  மொழி  மற்றும் ஆங்கிலத்தில் உச்சரிப்பில்  குறைபாடு.. :(  :(

(இறுதித்தேர்வுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துனிச்சலான பொடியன்.. மென்மேலும் அவரது திறமையை வளர்த்துக் கொண்டு மீன்டும் வரவேண்டும்.

எம்மிடையே எவ்வளவொ  திறமையானவர்கள் இருந்தும் துனிவு இல்லாததால்  சும்மா வெறும் பாத்ரூம் பாடகர்களாகவே  இருக்கின்றார்கள். அவர்களை விட இவர் எவ்வளவோ மேல்.

 

ஏங்க! பாடசாலை வாசல்களிலேயே ஸ்கூட்டர்களிலும் , குந்துகளிலும்  இருந்துகொண்டு  கோட்டால் மூடிக்கொண்டு குலவிக்கொண்டிருக்கின்ற இளைஞ்ர்களைவிட இவர் பறவாயில்லைத்தானே. என்ன கொஞ்சம் ஆர்வக்கோளாறு...! சரியாகிடும்  உச்சத்துக்கு வருவார்.

 

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள் , அவன் கிடக்கட்டும், நீ ஏதாவது ஒரு துறையில் உன் திறமையை வளர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு மேடையில் இவந்தான்டா தமிழன் என்டு நிரூபி பார்ப்போம்.

 

இவராவது ஆறேழு  நிமிடம் தாக்குப் பிடித்தார், வந்தவுடனேயே மூடிக்கொண்டு போகிற பலரை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம்தானே...!!  :D

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரைகடல் ஓடி திரவியம் தேடு

ஆழ்வாப்பிள்ளை

தமிழன் திரைகடல் ஓடித் திரவியம் தேடினான். அன்றே அவனை உலகம் வியந்து பார்த்தது. ஆனாலும் அன்றைய காலங்களை விட தமிழரை அதிகளவு உலகம் அறிந்ததும், உலகத்தை தமிழர் அறிந்ததும் 1980களின் பிற்பாடே என்பது எனது கருத்து.

தமிழர்களின் எண்பது காலகட்டத்தின் பாரிய இடப்பெயர்வு அவர்களை உலகநாடுகளில் பெருமளவு பரவச் செய்தது. அப்படி இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் தங்களது கலை, கலாச்சார விழுமியங்களையும் எடுத்துக்கொண்டே இடம் பெயர்ந்தார்களா? அல்லது இடம்பெயர்ந்த பலருக்கு தங்களது கலைகளில், கலாச்சாரங்களில் போதிய தெளிவுகள் இல்லையா? மேற்கத்தைய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா? அன்றாடம் தொல்லைப்படும் இயந்திரமான வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு 'பணம்...பணம்..' என அலைகிறார்களா தெரியவில்லை.

யேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் பலர் பார்வையாளர்களாக இருக்கும் 'சுப்பர் ஸ்ரார்' நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் பார்த்தபொழுது எங்களது பாரம்பரிய கலைகளும் கலாச்சாரங்களும் நினைவுக்கு வந்தன. அந்த நிகழ்ச்சியின் போட்டியாளனாக பதினேழு, பதினெட்டு வயதுக்கு இடைப்பட்டவனான தமிழ் இளைஞன் வந்திருந்தான்.

நிகழ்ச்சிக்கு வந்த அந்த இளைஞனிடம் அமெரிக்க இளைஞர்களின் பாதிப்பு நிறைந்து இருந்தது. நிகழ்ச்சி நடுவர் ஒருவர் அவனது பெயரைப் பார்த்து விட்டு 'நீ தமிழனா?' என்று கேட்டுவைக்க இளைஞனும் மகிழ்ச்சி தளும்ப மீண்டும் அந்த நடுவருக்குக் கை கொடுத்தான். அந்த இளைஞன் தமிழ்ப்பாடலை அல்லது தமிழ் நடனத்தை அங்கு தரப் போகிறான் என நடுவர்கள் நினைத்து அவனிடம் கேட்க, அந்த இளைஞனும் அதை ஆமோதித்தான். தான் தன் முயற்சியில் இசை ஒன்று கோர்த்து வந்திருக்கிறேன். அதை 'கீ போர்ட்' இல் தவழவிட்டு தமிழ் நடனம் ஒன்று ஆடப் போகிறேன் என்றான். எனது மனதுக்குள் ஒரு குதூகலம். எங்கள் தமிழ் இளைஞர்களைப் பார்த்துப் பெருமிதம். அடுத்த தலைமுறை வெளிநாட்டில் தொலைந்து விடவில்லை. இதோ இங்கே அதிசயப்பட வைக்கப் போகிறார்கள். மனது நிம்மதியாக இருந்தது. கதிரையில் சுகமாகச் சாய்ந்து இருந்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்த இளைஞன் தனது இசைக் கருவியில் வாசித்த இசை, 'டண்டணக்கு.. டண்டணக்கு..' இசைதான். இதுதான் தமிழிசையா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த இசையை.. இல்லை இம்சையை நடுவர்கள் இரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்து பின்னணியில் இசையை ஒலிக்க விட்டு தமிழ் நடனம் ஆடப் போகிறேன் என்றான். நடுவர்கள் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டார்கள். இளைஞன் ஆட ஆரம்பித்தான். எனக்கு மேசையின் கீழே போய் ஒழிந்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றியது. என்ன பிரயோசனம்? தீக்கோழி போல தலையை மறைத்துக் கொண்டாலும் பல மில்லியன் யேர்மனியர்கள் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள். மனது அப்பொழுதுதான் குறுகத் தொடங்கியது.

அந்த இளைஞனுக்கு தமிழ்க் கலையைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை என்பது எனக்குப் புரிந்து போனது. தமிழ் சினிமாக்களில் வரும் பாடல்களையும், ஆடல்களையுமே அவன் தமிழ்க்கலை என்று கருதுகிறான் என்று நினைக்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் 'றெக்கோர்ட் டான்ஸ்' என்று ஒழிவு மறைவுகளில் ஆடப்பட்ட நடனம், மெதுவாக சினிமாவுக்குள் புகுந்தது. அந்த நடனத்தையும் பம்பாய் நடன மாதுக்களைக் கொண்டு ஆடவிட, அதற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து, அவர்களின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. படிப்படியாக அந்த நடனம் மெருகேற நாயகர்களும் சேர்ந்து ஆடத் தொடங்க, 'டாடி மம்மி வீட்டில் இல்லை.. தடைபோட யாரும் இல்லை விளையாடு நேரில் வந்து வில்லாளா..' வையும் கடந்து வந்து விட்டோம். இந்தப் பாடல்களும், அதற்கான அபிநயங்களுமே அந்த இளைஞனுக்கு தமிழிசையாகவும் தமிழ் நடனமுமாகிப் போனதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இதைத் தனது ஒரு படைப்பாக அந்த இளைஞன் தரும் பட்சத்தில் யாருக்குமே பாதிப்பும் இல்லை, பழுதும் இல்லை. மாறாக தமிழிசை, தமிழ் நடனம் என்று அவன் தமிழை அங்கு முத்திரையிட்டதுதான் பிரச்சினையாகிப் போனது.

தொடர்ந்து அவனது நிகழ்ச்சியைப் பார்ப்போம். இளைஞனின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். நிலமையை அவதானித்த இளைஞன் தனது சந்தர்ப்பம் பறி போய்விடுமோ என்று பயந்து அவசரமாக தனக்குப் பாடவும் வரும் என்றான். 'சரி பாடு' என்று அவர்கள் சந்தர்ப்பத்தை வழங்கினார்கள். பாட ஆரம்பித்தான். அவனது பாடலைப் பார்த்து, 'என்ன மொழியில் பாடுகிறாய்? தமிழ் மொழிதானே..?' என பிரதான நடுவர் கேட்க, 'இல்லை இது ஆங்கிலம்..' என இளைஞன் பதில் தந்தான்.

'புதுமையான ஆங்கிலமாக இருக்கிறதே' என அடுத்த நடுவர் ஏளனத்துடன் இடைமறிக்க, எல்லாமே குழப்பமாகிப் போனது.

'நீ வேண்டுமானால் உனது வீட்டில் தனிமையில் இருந்து பாடு. உனக்கு இசை வசப்படாது. உனக்குப் பாடவே வராது என்பது எங்களது கருத்து..' என்று தனது கருத்தை வைத்த பிரதான நடுவர் எழுந்து வந்து அவனது இசைக் கருவியின் மின் இணைப்பைத் துண்டிக்கும் நிலை வரை அங்கு மோசமாகிப் போனது.

இளைஞனுக்கு அவனது எதிர்பார்ப்பு கிட்டாமல் போனதில் ஏமாற்றம் இருந்திருக்கலாம். தனிமனிதனாக இல்லாமல் தமிழனாகத் தன்னையும், தன் கலையையும் இனம்காட்டி கேவலப்பட்டு அவன் நடுவர் கூடத்தில் இருந்து வெளியேறியது எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது.

அவன் கூடத்தை விட்டு வெளியேறிய பின்னர் இரண்டு பெண் நடுவர்கள் பேசிக் கொண்டார்கள்

'அவன் ஆடிய நடனம் அவர்களது பாரம்பரிய நடனமா? கேளிக்கை விடுதிகளில் ஆடும் நடனம் போல் இருக்கிறதே'

'எனக்குப் பார்த்தால் மருத்துவ மனிதன் (ஆபிரிக்க பழங் குடியில் அவர்களது மருத்துவர் நோய் தீர்க்க ஆடும் ஒருவித நடனம்) நடனம் போல் இருந்தது'

நடுவர்கள் பேசிக் கொண்டதும், நடந்துபோன சம்பவங்களும் எனக்கு ஒன்றைத் தெளிவாக்கியது. நமது அடுத்த தலைமுறைக்கு எங்கள் கலை, கலாச்சார பாரம்பரியங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. அதை அவர்களுக்கு தெளிவுபடுத்த, தெரியவைக்க எங்களுக்குத்தான் நேரம் இல்லை.

கோயில் கட்டி விட்டோம், தேர் செய்து, அதில் சாமியை வைத்து தெரு உலா வருகிறோம், அர்ச்சனைகள், அபிசேகங்கள் செய்கிறோம். இதற்கு மேல் என்ன? மற்ற எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்.

இப்பொழுது எங்கள் தேவை எல்லாம் பணம். நாங்கள் திரை கடல் ஓடி வராமல் விமானம் ஏறி பறந்து வந்திருக்கின்றோம். உலக நாடுகளுக்கு எங்களைத் தெரிகிறது. எங்கள் முன்னோர்கள் சொன்னது போல் திரவியம் தேடுகின்றோம். அதற்காகத்தான் நாங்கள் இன்று ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

பின் இணைப்பு, அந்த இளைஞன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்

http://www.clipfish.de/special/dsds/video/4037592/paramasuthan-mit-keyboard-beim-dsds-casting-2014

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=3012bdf8-57d7-43d4-8e1c-c80970c48858

  • கருத்துக்கள உறவுகள்

திறமை உள்ள (ஏதோ வகையில்) கலைஞன் என தெரிகிறது.துணிவு அவரின் பிளஸ் பொயின்ற். நடுவர்களும் , ஜேர்மன் மக்களும் இன்னும் இனவாதிகள் என்பதை இக்காணொளி காட்டி நிற்கிறது.18 வயது இளைஞன் தானே. சில பயிற்சிகளுடன் மீண்டும் பங்கு பற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திறமை உள்ள (ஏதோ வகையில்) கலைஞன் என தெரிகிறது.துணிவு அவரின் பிளஸ் பொயின்ற். நடுவர்களும் , ஜேர்மன் மக்களும் இன்னும் இனவாதிகள் என்பதை இக்காணொளி காட்டி நிற்கிறது.18 வயது இளைஞன் தானே. சில பயிற்சிகளுடன் மீண்டும் பங்கு பற்றலாம்.

 

 

ஒரு சூட்டை இது அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும்...........

காலம் பதில் சொல்லட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா இணைத்த பதிவுடன் ஒத்துப்போக வேண்டி இருக்கிறது. தமிழரின் இசை, நடனம் என்றுவிட்டு டப்பாங் கூத்து ஆடியதை மன்னிக்கவே முடியவில்லை. ஜெர்மன் விளங்காவிட்டாலும் ஏதோ பெரிதாக வெட்டிப் பிடுங்கப் போவதாக சுதன் பீலா விட்டுவிட்டு  அவர் தனது சொந்தத் தயாரிப்பு என்றால் என்னத்தயாவது செய்து துலையலாம் ஆனால் தமிழர்களின் என்று சொல்லி செய்யும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கீபோட்டும் வாங்கி தலையையும் ஒரு கோணலா வெட்டி பெயிண்ட் அடிச்சு ஒரு தோட்டையும் குத்தினால் பெரிய மியூசிக் மன்னர்கள் என்ற எண்ணம் எமது இளையவர்கள் பலருக்கு. பிள்ளையல் பாவம் என்று எமது பெரியவர்களும் கண்டும் காணாமல் விடுகிறார்கள் அல்லது பொய்யாக அந்த மாதிரி இருக்கு என்று ஊக்கப் படுத்தி விடுகிறார்கள். விளைவு இப்படியான ஒரு பொது நிகழ்வில் எமது மானம் கப்பலேறி விடுகிறது. ஐரோப்பாவில், கனடாவிலில் இருக்கும் எமது இளையவர்கள் சிலரின் மியூசிக் விடியோக்களைப் பார்த்த்தால் ஒரு கிழமைக்கு நித்திரை வராது. நல்லகாலம் இங்கு அவுஸில்  இந்தமாதிரியான கூத்துக்கள் இல்லை. நன்றாக ஆயத்தம் செய்யாமல் மேடை ஏறக் கூடாது. உண்மையைச் சொன்னால் நடுவர்கள் அளவுக்குக் கூட எனக்குப் பொறுமை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதில் பிரதான நடுவராக வருபவர் சகலரையுமே மட்டந்தட்டுபவர்.ஒருசில ஜேர்மனியர்களுக்கும் இவரை பிடிப்பதில்லை.காரணம் இவரின் ஒருவித நான் என்ற அகங்கார பேச்சுக்கள் தான் காரணம். குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தற்போதைக்கு இவரை விட்டால் ஆளில்லை.அதைவிட எல்லாமே விளம்பரவியாபாரங்கள். மில்லியன் கணக்கில் பிரளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு இதெல்லாம் சிறு தூசு.
 
ஆனால் இவரை விட எத்தனையோ திறமையான ஈழ இளைஞர்கள் நம்மிடையே உலாவுகின்றனர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.அந்த ஒரு நிகழ்வை வைத்து ஒட்டுமொத்த ஈழக்கலைஞர்களையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதும் தவறு.
எனினும் பரமதாசிற்கு என் வாழ்த்துக்கள். :D
  • கருத்துக்கள உறவுகள்

தன் நம்பிக்கயுள்ள இளைஞன் ........ நடுவர்களாக தெரிவுசெயயப்படுபவர்கள், இவ்வாறு மட்டம்தட்டி,கேனத்தனமாக கதைபவர்களாகவே இருப்பார், அப்பதான் ப்ரோக்ராம் சுவாரசியமாக போகும். இதிலும் பாக்க மொக்கையான கனபேர் வந்திரிக்கினம்.

அந்தப் பையன் வந்து சும்மா பாடி, ஆடிப் போட்டு போயிருந்தால் யார் தான் அவனைப் பற்றிக் கதைபார்கள். கொலிவூட்டைப் பாருங்கள் மடோனா, பிறிட்னி ஸ்பியேர்ஸ், லின்சி லோகன்...... தங்களை பிரபலமாக வைத்திருக்க ஏதாவது குறுக்கு வழிகளைத் தானே கையாளுகினம். இவன் செய்ததில் தப்பே இல்லை.இது அவனின் தனிப்பட்ட விடயம். நீங்கள் ஏன் தமிழன் செய்திட்டான் எண்டு கத்துறியள்.??


:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.