Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூவில் தேன்குடித்த வண்டு வாடுவதில்லை பாடிக்கொண்டே பறக்கிறது.

வண்டுக்குத் தேன்கொடுத்த பூ வாடிக் கருகியும் விடுகிறது.

இயற்கையின் இந்தப் பாரபட்சத்தை விசுகு அவர்கள் சாடமுயல்வது கதையில் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்!!

 

முதலில் மதுரனை எனது சிறுவயது நினைவாக எடுத்துக்கொண்டு

கொஞ்சம் நீலம் தூவுவோம் என்று தான் சுமேயிடம் அனுமதி  கேட்டேன்

 

ஆனால்

பலரும் எழுதுவதால்

அவரைப்பற்றி  தொடர்ந்து எல்லோரும் எழுதுவதும்

தற்பொழுது கூட  எவராவது எழுதிக்கொண்டிருக்க முடியும்

அப்படியிருந்தால் கதையின் ஓட்டத்தில் பாதிப்பு வரும் என்பதற்காகவே

இடையில் புகுந்து குழப்பம் விளைவிக்காது

தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம் என  நினைத்தேன்

அதன்படி

ஆண்களின் மனநிலையைத்தான் எழுதமுடியுமா?

ஒரு பெண்ணின் மனநிலையை  ஆண் எழுதினால் என்ன?

அதையும் சவாலாக எடுக்கலாமே என்றே  முயன்றேன்

 

உங்கள் வாழ்த்து

வெற்றியை  பறைசாற்றி  நிற்கிறது

நன்றி  ஐயா.

  • Replies 256
  • Views 22.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கதையைத் தொடரும் உறவுகளுக்குத் தாழ்மையான வேண்டுகோள் கதையை மேலே நகர்த்தப் பாருங்கள். சுற்றிச் சுற்றி சிறிய வட்டத்துள் சுழல்வதுபோல் உள்ளது.

 

விசுகு அண்ணா இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதி இருக்கலாம்.

 

மேலே பஞ்சுக்கு எழுதியிருப்பதை வாசியுங்கள்  சுமே

 

நான் தனிக்கிளை  அமைத்து அதை  பின்னர் கதையுடன்  கொண்டுவந்து இணைத்து எழுதுவதற்கு காரணம்

உங்கள் கதையின் கருவில் துண்டுகள் விழக்கூடாது  என்பதற்காகத்தான்.

நாலு பேர் ஒரே நேரத்தில் எழுதினாலும்

எனது கதையால் கருவில் பாதிப்பு வராது.

 

கொஞ்சம் அதிகம் எழுதியிருக்கலாம் தான்

கிடைத்த 10 நிமிடத்தைத்தானே  பயன்படுத்தமுடியும்

 

ஆனாலும் கதை இன்றும் செல்லட்டும்

அவசரப்படவேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....

 

முள்ளில் சேலை  விழுந்தாலும்

சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்

அதாவது நமக்குத்தான்.......

 

நல்ல ஒரு உதாரணம்...... 

 

முள்ளில் சேலை விழுந்தாலும், சேலையில் முள்ளு விழுந்தாலும்.......!

 

திரும்பத் திரும்ப யோசிச்சுப் பார்க்க, இதற்குள் 'மிகப்பெரிய தத்துவங்கள்' புதைந்து கிடப்பது புலனாகின்றது!

 

சில சேலைகளால், முள்ளுகளும் நொந்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு, விசுகர்! :o

கதை நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்! :D

நல்ல விசயங்க...

 

பெரிதா இருங்குங்களா வாசிக்கவே தயக்கமா இருக்குங்க... வாசிச்சிடுவேங்க அதுக்கப்புறமா இங்கிட்டு வந்து நானும் எழுதுறேங்க.

மெகாசீரியல் என்பது தினமும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக  வருடகணக்கில் இழுபடுவது,

ஆடிக்கு ஒருக்கா ஆவணிக்கு ஒருக்கா வருவதற்கு பெயர் "வரும் ஆனால் வராது" :icon_mrgreen: .

சும்மா சொல்ல கூடாது இப்ப நல்லாத்தான் போகுது தொடர் . :lol: .

சசியின் ஆசையை பூர்த்தி செய்ய இன்றிரவு கொழும்பிற்கு ரெயினில் போன அழகியின் கதைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . :icon_idea:

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ..காதல் (10)

 

மிக மிக அருமை. பாராட்டுக்கள் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை. நல்ல கை தேர்ந்த  எழுத்தாளன் போல் இருக்கிறீர்கள்.

 

நிறைய  புத்தகங்கள் வாசிப்பீர்கள் போல...கற்பனை உருவகம்  அருமை. .பாராட்டுக்கள் பாஞ்ச்...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ..காதல் (10)

பஞ்ச்

பெயருக்கு ஏற்றாப்போல் பஞ்ச் தான்

 

பலமுனைத்தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்கள்

கதாநாயகனையே வில்லனாக்க முயன்று

மனம் வராது 

வில்லனைத்திருந்தவிட்டிருக்கும் பாணி அருமை..

மிக மிக அருமை. பாராட்டுக்கள் 

அடுத்து வருபவருக்க சவால்  காத்திருக்கிறது

பார்க்கலாம்

பஞ்சின் எழுத்து அந்தமாதிரி இருக்கு. வர்ணனை கொஞ்சம் கூடிப்போச்சு. 


என்னெண்டு உப்பிடிக் கற்பனை பண்ணி எழுதுறீர்கள்?? இந்த அலைக்கு கற்பனை 0%


:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் எங்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் போல் இருக்கே. மிக நன்று எழுத்தும் கதை ஓட்டமும். ஆனாலும் கொஞ்சம் கூடிப்போச்சு :D:lol:


இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேன்  பத்து , அத்தேன்  பாஞ்சின் சொத்து ! :D

 

மிகவும் பொறுமையாய் பாத்திரங்களைக் கவனித்து  சீராக்கி மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இந்தப் பகுதியில் நல்ல ஆளுமை தென்படுகிறது...! :D

நல்லாய் கதை எழுதி இருக்கிறீங்க. ரொம்ப பிடிச்சிருக்கு.

 

இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை :lol:

 

எங்கட ஊர் காதல்கள் எல்லாம் ஒரே மாதிரித்தான்பா

மற்றவையையும் கேட்டுப் பாருங்கோ சுமே உங்களை மாதிரித் தான் சொல்லுவினம்

இதுவரை வெளிவந்த அங்கங்களிலேயே பஞ்ச் எழுதிய 10வது அங்கமே சிகரமாக இருக்கிறது. பாராட்டுகள்!!

 

இன்னும் எத்தனை சிகரங்கள் வரப் போகிறதோ.. காத்திருக்கிறேன்.


இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை :lol:

 

தணிக்கையா.. அப்படி ஒரு கை இருக்கிறதா தெரியேலையே...  :lol:  :o

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன்!.. உங்கள் உள்ளக் கொதிப்பு ஒன்று கதைமூலம் பொங்கி வழிந்துள்ளது. "அடுத்து வருபவருக்கு சவால் காத்திருக்கிறது பார்க்கலாம்" என்ற விசுகு அவர்களின் சந்தேகமும் உடைக்கப்பட்டுள்ளது. ஒருவன் தனக்கு முறையற்ற பெண்ணைத்தவிர வேறு எந்த பெண்களைப் பார்த்தாலும் அவர்களது அழகினாலும், இளமையினாலும் கவர்ந்திழுக்கப்படுவதை மறைக்க முடியாது..!! இந்த இயற்கையின் செயல்பாடுகளை மிக நுட்பமாக இக்கதையில் புகுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சின், பத்தாவது அத்தியாயத்தை உடனேயே வாசித்து விட்டேன் எனினும், கருத்தெழுதுவதைப்  'பச்சைக் கோட்டா' கிடைக்கும் வரை, தள்ளிப் போடலாம் என எண்ணியிருந்தேன்.

 

ஆனால், தொடர் வெகு வேகமாகத் தொடர்ந்து 'கட்டுப்படுத்தவியலாத' வேகத்தில் சம்பவங்கள் தொடர்கின்றன. மகிழ்ச்சி.

 

இதற்கான, 'பாராட்டு' முழுவதும் 'பாஞ்சுக்கே' சேர வேண்டும் என நினைக்கிறேன்....!

 

அப்பப்பா... அந்த மாதிரி ஒரு கதையோட்டம்...! :D 

 

அத்துடன், எமது கலாச்சாரத்தின் மீது, பாஞ்சுக்கு இருக்கும் ' கருங்கல்லில் எழுத்துப்' போன்ற அசைக்க முடியாத நம்பிக்கை!

 

சிறு வயதிலேயே, சக்கை உறிஞ்சப்பட்டு, வெறும் விதைகளாக, வெளியில் துப்பப்பட்ட 'எம்மை விடவும்' நீண்ட காலங்கள், எமது கலாச்சாரப் பண்பாடுகளுக்குள் 'பஞ்சர்'  ஆழமாக ஊறிப்போனதால்,  அதிக காலங்கள் 'பதப்படுத்தப் பட்ட' திராட்சை ரசம் போல, அவரது அத்தியாயம் அமைந்துள்ளது!

 

வாழ்த்துக்கள், பாஞ்ச்! :D

  • கருத்துக்கள உறவுகள்

கதை  சவாலாக  உருவெடுத்து வருகிறது

 

அர்யூனும்

புங்கையண்ணாவும்

அக்குவேறாக  ஆணிவேறாக  மயூரனின் மனசையும் வரும் காலத்தையும் குடைந்து படைத்துள்ளனர் 

அடுத்தது  என்ன?

எழுதுவது யார்??

என்பனவற்றை ஆவல் .....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் கதையை நெஞ்சிடிச்சுக்கொண்டே வாசித்து முடித்தது. ஆனாலும் முதல் பகுதி எழுதும் போது இருந்த மன நிலை இதில் இல்லை என்று தெரிகிறது.

 

புங்கை பொறுத்த இடத்தில் கொண்டுவந்து விட்டுள்ளார். தொடருவமோ என்ற எண்ணம் தோன்றினாலும் ஏன் சோலி என்று விட்டுட்டன். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ! அர்யுன் ,குயின்சியுடன் மதுரனைவிட மயங்கியது அர்யுன்தான், பொல்காவலை புகையிரத நிலையம்  புகையிலை நிலையாமாய்த் தெரியுது. நன்றாகப் போகுது தொடர்...!

வாவ்!! அர்ஜுன் அண்ணா, நீங்கள்  கதையை நகர்த்திய விதம் அருமையிலும் அருமை!!!

நல்லதோ கெட்டதோ பிடிக்குதோ இல்லையோ இடையில் எழுத பஞ்சியில் இருந்த என்னை மேசொவின் காதல் தொடர் எழுதவைத்துவிட்டது .

இதில் பங்கு பற்றுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில்  தங்கள் பாணியில் கதையை நகர்த்துவதால் வாசிக்க உண்மையில் சுவாரஷ்யமாக இருக்கு ,இன்னமும் பலர் இதில் பங்கு பற்றினால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன் .

ஊக்கம் தந்தவர்களுக்கும் பச்சை குத்தியவர்களுக்கும் நன்றிகள் .

(உந்த ரெயின் கதை எல்லாம் கற்பனை அல்ல  :icon_mrgreen:  )

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு காதலின் பகுதிகள்  இவ்வளவு அழகாக போவதை  கண்டு மிக்க  மகிழ்ச்சி ..அர்ஜூன்  புகையிரத்த்தில் தொடர்வது ...   புங்கையின்  நூல்களாக விபரிப்பது ..மிக மிக நன்று.   அழகாக போகிறது தொடர் ...விசு அண்ணா சேர்த்து அனுப்பி ...கதைக்கு முடிவு கட்ட போகிறார் போல .... :D  பகுதி 14 இல் சந்திப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் அவர்கள், மஞ்சாவோ! மாஞ்சாவோ! நூல் அறாது இருக்க அதனைத் தடவிப் பட்டம் ஒன்றை ஏற்றியுள்ளார். கதை விண்கூவிக்கொண்டு பறக்கிறது. :D

எண்ணிக்கை தெரியாத அணுக்களில் ஒரு அணு மட்டுமே உட்புகுந்து கருக்கட்டுவது போல. எத்தனை அழகிய பெண்களைக் கண்கள் கண்டு கவர்ந்தாலும், ஒரே ஒரு பெண் மட்டுமே கண்களை ஊடுருவிச் சென்று இதயத்தில் அமர்ந்துவிடுவதை உங்கள் அனுபவம் இனிக்கூறட்டும். தொடருங்கள். வாழ்த்துக்கள்!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து எழுத வருபவர்க்கு ஒரு சவாலை விட்டுச் சென்றிருக்கின்றார் விசுகு...! பார்ப்போம்...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.  கதை சுற்றிச் சுற்றி வருவது போல் ஒரு எண்ணம் எழுகிறது. தயவு செய்து இனி எழுதுபவர்கள் திரியில் நான் இன்று எழுதுகிறேன் என்னும் செய்தியைப் போட்டுவிட்டு எழுதுங்கள். ஏனெனில் ஒருவர் ஒன்றை எழுத இன்னொருவர் வேறோருவிதமாக நகர்த்தும் போது, முதல் எழுதியவர் மீண்டும் எழுத வேண்டி ஏற்பட்டதாக முறைப்பாடு ஒன்று வந்துள்ளது.

 

எல்லோரும் ஆர்வமாக எழுதுவது மகிழ்ச்சியைத் தந்தாலும், எழுதாமல் தட்டிக்கழிக்கும் உறவுகளை நினைக்க மனவருத்தம் தான் விஞ்சுகிறது.

 

பச்சை போடாமைக்கு மன்னியுங்கள் உறவுகளே. :D  பச்சை எனக்கு ஒன்று போட்ட உடனேயே முடிந்துவிட்டது என்று வருகிறது.

 

 

புங்கை கதையை நகர்த்திய விதம் மிக அருமை. தொடருங்கள் உறவுகளே வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.